கவலை வேண்டாம் ….நாம சங்கீர்த்தனம் இருக்கே !!!!

வாழ்க்கைல எந்தக் கஷ்டத்தையும் பகவானோட நாமசங்கீர்த்தனம் போக்கிடும். கவலைப்படாதே!

 Kanchi Periva Avatar

1964ல் சோழவரத்தில் இருந்த ஒரு பள்ளி ஆசிரியர், வேலைப்பளு காரணமாக பெரியவாளை தர்சனம் பண்ண போகமுடியவில்லையே என்று ரொம்ப ஏங்கிக் கொண்டிருந்தார். அன்று காரடையார் நோன்பு. பங்குனி மாசம் ராத்ரி பிறந்ததால், நோன்பையும் ராத்ரி பண்ணிவிட்டு ரொம்ப நேரம் கழித்து அவர் மனைவி தூங்கப் போனாள். அவளுக்கு அற்புதமான ஒரு கனவு!

எந்த ஒரு அவதாரத்தால் காஷாயத்துக்குப் பெருமையோ, அந்த மஹா பெரியவா அந்த அம்மா முன்னால் நிற்கிறார். அவருடைய பாதங்களில் நமஸ்கரிக்கிறாள். பெரியவாளின் தெய்வீக குரல் ஒலிக்கிறது…..
வாழ்க்கைல எந்தக் கஷ்டத்தையும் பகவானோட நாமசங்கீர்த்தனம் போக்கிடும். கவலைப்படாதே! நா……ஒன்னோட ஆத்துல பூஜை பண்ணுவேன்”…
சந்தோஷத்தில் திடுக்கென்று எழுந்தால், கனவு என்று உணர்ந்தாலும், மனஸ் ரொம்ப நிறைந்து இருந்தது. அடிக்கடி அந்தக் கனவை எண்ணி எண்ணி தம்பதிகள் மகிழ்வார்கள். “ஆனாலும், எனக்கு ரொம்ப பேராசைதான்… மஹா பெரியவா நம்மாத்துல பூஜை பண்றார்…ன்னு எப்பிடி ஆசைப்பட்டிருக்கேன்!..” மனைவி சொன்னாள்.
1965ல் நவம்பர் மாசம் ஏதோ ஒரு ஞாயிற்றுக்கிழமை. மத்யான்னம் அவர்கள் வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து பூணூல், சிகை வைத்துக்கொண்டு பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு ஒரு பெரியவர் இறங்கினார்.
“மீனாக்ஷி சுந்தரமையர்…..” பெயரைச்சொல்லி விஜாரித்தார்.
“நாந்தான்…..மீனாட்சிசுந்தரம். வாங்கோ! நீங்க யாருன்னு தெரியலியே!.”
“நா….ஸ்ரீமடம் முகாம்லேர்ந்து வரேன்..பெரியவா திருப்பதிலேர்ந்து மெட்ராஸ் வந்துண்டு இருக்கார்…ஒரொரு 15 மைலுக்கு ஒரு எடத்துல தங்கி பூஜை பண்ணிண்டு, மாஸக் கடைசீல மெட்ராஸ் போகணும்ன்னு உத்தேஸம்!….”
[அவர் அடுத்து சொன்ன செய்தியைக் கேட்டு தம்பதிகள் இருவரும் மயக்கம் போடாத குறைதான் !]
“….நவம்பர் 15 இங்க சோழவரத்துல தங்கப் போறா….அதான்….ஒங்களோட க்ருஹத்தை ரெண்டு நாளைக்கு கொஞ்சம் குடுத்தா…..பெரியவா இங்கேயே தங்கி பூஜை, அனுஷ்டானங்கள் பண்ணிப்பார்…..எப்டி, ஒங்களுக்கு சௌகர்யப்படுமா?.”
“சௌகர்ய…படு…மாவா? எங்களோட பரம பாக்யம்…ன்னா !! எத்தனை நாள் வேணாலும் பெரியவா தங்கிக்கலாம். என்ன ஏற்பாடு பண்ணணுமோ சொல்லுங்கோ!..” உணர்ச்சி வேகத்தில் அவர்கள் கண்களில் கண்ணீர் வழிந்தது.
“நாங்க மடத்துலேர்ந்தே எல்லா ஏற்பாடும் பண்ணிடுவோம். எடம் மட்டும் குடுத்தா போறும்..”
அன்று சாயங்காலமே ஊர் முக்யஸ்தர்களை கூப்பிட்டு பெரியவா தன் பரிவாரங்களோடு தங்க, தக்க ஏற்பாடுகளை வகுத்தார்கள். ஒரு தெருவையே மடத்துக்கென்று காலி பண்ணிக் குடுத்தார்கள். யானை, ஒட்டகம் கட்ட, ஆபீஸ், பாரிஷதர்கள் ஓய்வெடுக்க, சமையல் செய்ய, சாப்பாடு போட என்று ஒவ்வொருவரும் ஆசை ஆசையாய் ஏற்பாடு பண்ணினார்கள். சுற்று வட்டார க்ராம மக்கள், தான்யம், காய்கறி கொடுத்தனர். செட்டிநாடு ராஜா அரிசி மூட்டைகளை அனுப்பினார்.
நவம்பர் 14 அன்று பூர்ண கும்பத்தோடு பெரியவாளை ஊர் எல்லையிலிருந்தே தக்க மரியாதையோடு அழைத்து வந்தனர். மூன்று நாட்கள் தங்குவது என்று முடிவானது கடைசியில் ஐந்து நாட்கள் தங்கி அத்தனை பேர் மனங்களையும் குளிரப் பண்ணினார்.
——————————————————————
இப்படி ஊர் ஊராக, க்ராமம் க்ராமமாக பாதங்கள் தேய நடந்து, மூன்று கால பூஜை [அதுவும் க்ரமம் தப்பாத பூஜை], அனுஷ்டானம், சமையல் சாப்பாடு, நேரங்காலம் தெரியாமல் கோடிக்கணக்கான பக்தர்கள் குறைகளை கேட்பது, தீர்வு சொல்வது, பரிவாரங்களோடு, மடிசஞ்சி வைத்துக்கொள்ள கூண்டு வண்டி, வெய்யிலோ, மழையோ, அத்வானக்காடோ, ஆகாசம் பார்க்கும் குடிசையோ, கல்லோ, முள்ளோ எல்லாவற்றையும் “ஒன்றே” எனக்கொண்டு, பெரியவா எதற்காக, யாருக்காக தன்னை இப்படி வருத்திக் கொண்டார்?  “எல்லாம் நமக்காகத்தான்” என்பதை நாம் துளி உணர்ந்தால் கூட, அதுவே நாம் பெரியவாளுக்கு செய்யும் நமஸ்காரம், பூஜை.
 source::::periva.proboards.com
Natarajan

Boeing 747…The “Jumbo Jet” Plane Which Redefined Airtravel….A Flash back!!!

Boeing 747: a history in pictures

The first 747 rolled out of the Everett assembly building in Washington State on September 30, 1968. A special hangar was built for its construction. By volume, it remains the biggest building ever made.

The plane was set to re-define air travel, with its ability to carry more people than previous aircraft, and played a major part in making long-haul journeys more affordable….

Boeing 747: a history in pictures

Pan Am was the first airline to receive a 747, and Pat Nixon, the First Lady of the United States, christened the aircraft Clipper Vector. The 747 entered service on January 22, 1970, on Pan Am’s scheduled flight from New York to London.

Boeing 747: a history in pictures

It also shared some historic highs. The 747 was often used to transport space shuttles, and here it is seen in 1978 giving the Enterprise a piggyback.

Boeing 747: a history in pictures

In 1984 a youthful Richard Branson launched his airline with a 747 flight from Gatwick to Newark.

Boeing 747: a history in pictures

The aircraft has been redesigned several times. Variants were launched in 1979 (747-100B), 1982 (747SP), 1983 (747-300), 1989 (747-400), 2006 (747 LCF), and 2011 (747-8, pictured).

Boeing 747: a history in pictures

The Boeing 747, launched more than 40 years ago, is one of the most influential and admired passenger aircraft ever to be built.

However the original “jumbo jet”, which has flown many millions of people in its decades of service, may finally be falling from favour. British Airways will take delivery of its first Airbus A380 “superjumbo” in July, and this week announced plans to buy 18 Boeing 787 Dreamliners. Both aircraft are quieter and more fuel efficient than the 747, which BA is now looking to phase out over the next few years.

source::::The Telegraph UK…

Natarajan

“நான் இருக்கேன் …எப்போதும் உன்னுடன் “….மகாபெரியவர் சொல்கிறார் !!!

“… பூர்ணசந்த்ர முகத்துடனும், அபய கரத்துடனும் சாக்ஷாத் பெரியவா தெரிந்தார்!”

April 2, 2013 –Sage of Kanchi site
பெரியவாளை செகந்தராபாத் அருகே உள்ளே ஒரு மலைக்குன்று மேல் உள்ள மஹா கணபதி கோவிலில் தர்சனம் பண்ணினார் ஒரு பக்தர். அப்போது பெரியவா அவருக்கு தன் படமும், திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாள் படமும் குடுத்தார். பக்தருக்கோ பரம ஆனந்தம்! மெட்ராஸில் ஒரு ஸ்டூடியோவில் குடுத்து அப்படங்களைப் என்லார்ஜ் பண்ணி, அழகாக frame பண்ணித்தரச் சொன்னார். இரண்டு நாட்களுக்குப் பிறகு இடிபோல் செய்தி வந்தது….அந்த ஸ்டூடியோவில் தீப்பிடித்து ஏறக்குறைய எல்லாமே எரிந்துவிட்டது! என்று. அடித்துப்பிடித்துக் கொண்டு ஓடினார்…….ஸ்டூடியோ நிர்வாகி இவரைப் பார்த்ததும், “ஸார்…நீங்க கவலைப்படாதீங்க….நீங்க குடுத்த பெரியவா படமும், வெங்கடாசலபதி படமும் பத்ரமா இருக்கு. நெருப்பு அதை கொஞ்சங்கூட தீண்டலைங்க ஸார்…” என்றார். இது ஒரு ஆச்சர்யம்!
சந்தோஷமாக அந்த படங்களை எடுத்துக் கொண்டு அவரும் ஒரு நண்பரும் காரில் பெரியவா முகாமிட்டிருந்த கார்டேர் நகருக்கு சென்றனர். போகும் வழியில் ஒரு பிள்ளையார் கோவிலுக்கு சென்று வழிபட்டுக் கொண்டிருந்தபோது அடுத்த ஆச்சர்யம்……..மடத்து பாரிஷதர் ஒர்த்தர் இவர்களை அங்கே தேடிக் கொண்டு வந்து, “மெட்ராஸ்லேர்ந்து கார்ல படம் கொண்டு வந்தவாளை பெரியவா ஒடனே அழைச்சிண்டு வரச்சொல்லி சொன்னார்……..” இது என்ன! எதிர்கொண்டழைப்பது என்பது இதுதானா? அல்ப ஜீவன்களான நம்மை அந்த மஹாப் ப்ரபு எதிர்பார்த்துக் கொண்டிருந்திருக்கிறாரா! ஆடித்தான் போனார் பக்தர். இரண்டு கரங்களாலும் புஷ்பங்களை அள்ளித் தூவினார் அப்படங்கள் மேல், சாக்ஷாத் பெரியவா!

அதே பக்தர் ஒருமுறை திருக்கடையூர் சென்றார் தன் நண்பருடன். அப்போது அமிர்தகடேசனுக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. ஆனந்தமாக கண்டு களித்துக் கொண்டிருக்கும்போது, இவருக்கு ஒரு அரிய ஆனந்தமான ஒரு காக்ஷி !………கருவறை லிங்கத்தின் மேல் பூர்ணசந்த்ர முகத்துடனும், அபய கரத்துடனும் சாக்ஷாத் பெரியவா தெரிந்தார்! இவரோ, தனக்கு பெரியவா மேல் உள்ள பக்தியால் ஏற்பட்ட மனப்ரமை என்று எண்ணினார். அதே சமயம் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த நண்பர் இவர் தோளைத் தட்டினார்……..”ஸ்வாமி….உள்ள பாரும் ஒய்!….பெரியவா தெரியறாளா? என்ன பாக்யம் ! என்ன பாக்யம்! சங்கரா.சங்கரா..” கண்கள் பனிக்க கன்னத்தில் போட்டுக் கொண்டார். பக்தர் ஸ்தம்பித்துவிட்டார்! சாக்ஷாத் பரமேஸ்வரனே தான்தான்! என்பதை ப்ரத்யக்ஷமாக ஒரே சமயத்தில், கற்பனையோ என்று சந்தேகப் படமுடியாமல், இரண்டு பேருக்குமே உணர்த்திவிட்டாரே பெரியவா!!!!!

source::::periva.proboards.com
Natarajan

Read more: http://periva.proboards.com/thread/3981/maha-periva-appeared-bright-moon#ixzz2Pf107xwA

Resume of Bill Gates When He Was 18 years old !!!!!

Before Microsoft co-founder Bill Gates became a billionaire, he had to apply for jobs just like the rest of us.

Bill Gates

Seattle’s Living Computer Museum held an event last night at which they displayed Bill Gates’ resume from when he was just 18 years old.

At the time, Gates was a freshman at Harvard University, weighed just 130 pounds, and sought a salary of $15,000 a year.

Check out his resume below.

Bill gates' resume from 1974

source::::business insider.com

Natarajan

Read more: http://www.businessinsider.com/this-is-bill-gates-resume-from-1974-2013-4#ixzz2PblSD1Tq

கவியரசு கண்ணதாசனின் கவிதை வண்ணம் !!!

திரையிசையில் இலக்கியமணம் தந்த கண்ணதாசன்

    தாடகை வதத்தில் இராமன் தடக்கையின் உரங்கண்டு மேடைக் கல் மாதவளாய் மாறியதில் அவன் காலின் திறங்கண்டு; விசுவாமித்திரன் பாடுகின்றான்  வியப்பின் எல்லையில் நின்று

மைவண்ணத் தரக்கி போரில் மழைவண்ணத் தண்ணலே
கைவண்ணம் அங்குக் கண்டேன் கால் வண்ணம் இங்குக் கண்டேன் என்று!

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் கம்பன் எழுதிய அவ்வண்ணம் கண்டு ருசித்து ரசித்த கண்ணதாசன் பாடல் ஒன்றில் முழுக்க முழுக்க வண்ணங்களாக வாரி இறைத்துவிடுகிறார் .. பி.பி ஸ்ரீனிவாஸ், பி. சுசிலா குரல்களில் கொடிகட்டிப் பறந்த பாடல் அது.

படம் : பாசம். இதோ, கவியரசரின் கன்னித் தமிழ் வரிகள் :
ஆண் :
பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
பெண் :
கண் வண்ணம் அங்கே கண்டேன்
கைவண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
கார் வண்ண கூந்தல் தொட்டு
தேர் வண்ண மேனி தொட்டு
பூவண்ண பாடம் சொல்ல எண்ணம் இல்லையா?

எப்படி, கண்ணதாசனின் கைவண்ணம் ? இல்லை, இல்லை கவிதை வண்ணம்? !!!!!!!!!!

இதைப் போல, வேறு வண்ணங்களிலும் பாடல்கள் அமைத்துள்ளார் கவிஞர். ஆனால் அவை கம்பன் அடியொற்றிப் பிறந்தவை அல்ல. அதனால் அவை இங்கே இடம் பெறவில்லை. இனி, கவிஞர் எழுதிய திரைப் பாட.ல் ஒன்றை மட்டும் குறிப்பிடுகிறேன். அந்தப் பாடலுக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்ததே கம்பன்தான்! வியட்நாம் வீடு என்ற படத்தில் வருகிறது.

‘பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா…’
என்ற பாடல்தான் அது. அதில் இடம் பெறும்
பரமசிவன் சக்தியை ஓர் பாதியில் வைத்தான் அந்த
பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தான்
பால் கடலில் மாதவனே பக்கத்தில் வைத்தான் – ராஜா
பத்மநாபன் ராணியைத் தன் நெஞ்சில் வைத்தான்.

என்ற இந்த வரிகளின் மூலம் கம்பனில்தான் உள்ளது! !!!!   எங்கே?     எந்த இடத்தில்? ….    யார் கூற்றாகக் கம்பன் இதனைக் கூறுகிறான்?…

சாகும் போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் – என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேகவேண்டும்
எனப் பாடிய கண்ணதாசன் சங்க இலக்கியங்கள் முதல் சிற்றிலக்கியங்கள் ஈறாகத்
தமிழ் இலக்கியங்களை ஊன்றிப் படித்திருக்கவேண்டும்.
எனவே, திரைப் பாடல்களில் தமிழ்த் தென்றலைத் தவழவிட்டவர் கண்ணதாசனே. எள்ளளவும் ஐயம் இதில் கொள்ளலாகாது! அதிலும் கம்பன் மேல் தனிக்காதல் கண்ணதாசனுக்கு உண்டு.

கம்பக் கொல்லையை மேம் போக்காக மேய்ந்த மாடு இல்லை அவர். கம்பனில் கருத்தூன்றிப் படித்திருக்கவேண்டும். இல்லை என்றால் மற்றவர் பார்வையில் படாத பாடல் ஒன்றை அவர் பார்த்திருப்பாரா? பார்த்து ரசித்திருப்பாரா? இல்லை அதனைத் தன் பாடலில் தனக்கே உள்ள முறையில் பதிவுதான் செய்திருப்பாரா? அந்தப் பாடலைக் காணுமுன் மறுபடி கண்ணதாசன் வரிகளை வைக்கிறேன்

உங்கள் பார்வைக்கு :
பரமசிவன் சக்தியை ஓர் பாதியில் வைத்தான் அந்த
பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தான்
பால் கடலில் மாதவனே பக்கத்தில் வைத்தான் – ராஜா
பத்மநாபன் ராணியைத் தன் நெஞ்சில் வைத்தான்.

கம்பனின் காவிய வரிகள் இதோ :

பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத்து இருந்த பெண்ணை
ஆகத்தில் ஒருவன் வைத்தான் அந்தணன் நாவில் வைத்தான்
மேகத்தில் பிறந்த மின்னை வென்ற நுண்இடையாளை
மாகத்தோள் வீர பெற்றால் எங்கனம் வைத்து வாழ்தி!

சூர்ப்பணகை – மூக்கறுபட்டவள் ஆர்ப்பரித்து அழுத வண்ணம் அண்ணன் இராவணனிடம் ஓடோடி வருகிறாள். தன் அவல நிலைக்குக் காரணத்தைத் தருகிறாள். அதே சமயம், சீதையின் அழகை எல்லாம் சொல்லிச் சொல்லிக் காட்டுகிறாள் அவனுக்குக் காமத்தீயை மூட்டுகிறாள். அப்போதே அவன் சீதையை அடைந்துவிட்டதாகக் கற்பனை ஊட்டுகிறாள். அவரவரை அவரவர் இடத்தில் வைக்க வேண்டும் என்றொரு சொலவடை தமிழில் உண்டு. அதனைக் கம்பன் இங்கே கையாள்கிறான்.

‘பரமசிவன் பார்வதியைத் தன் இடப்பக்கத்தில் வைத்திருக்கிறான். தாமரை மலரில் இருந்த திருமகளைத் தன் மார்பிலே வைத்திருக்கிறான் பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன். தன் தேவியாகிய கலைமகளைப் பிரமன் தன் நாவிலேயே வைத்திருக்கிறான். மும்மூர்த்திகளும் தத்தம் தேவியரை இப்படித் தங்களிடமே தங்களுக்கு உள்ளேயே வைத்து வாழ்கிறார்கள். மும்மூர்த்திகளுக்கும் மேலாய்க் கீர்த்தி பெற்ற அண்ணனே மின்னலை விட நுண்ணிய இடை கொண்ட செம்பொன் சிலையாம் சீதையை அடையும் போது அவளை எங்கே வைத்து வாழ்வாய் நீ!’ எனச் சூர்ப்பணகை கேட்பதாய் இப்பாடல் வருகிறது.

ஆரண்ய காண்டம் சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலத்தில் இடம்பெறுகிறது. கம்பன் இங்கே தனக்கே உரிய குறும்போடு ‘எங்ஙனம் வைத்து வாழ்தி!’ என்ற வரியில் கீழறைப்பொருளை (உட்பொருள்) வைக்கிறான் : மும்மூர்த்திகளும் தத்தமக்குரிய தேவிகளைத் தம் உடல்களில் வைத்து வாழ்ந்தார்கள் ! இராவணனோ தனக்கு உரிமை இல்லாத சீதையை எங்கனம் எங்கே வைத்து வாழ்வான்? வாழமாட்டான்! இறுதியில் வீழ்வான் என்ற பொருள் இவ்வரியில் பொதிந்துள்ளது. கம்பனை மேலோட்டமாக மேய்ந்தவர்கள் கண்களில் மட்டுமல்ல கம்பனில் ஆய்ந்து தோய்ந்தவர்கள் பார்வையிலும் படாத பாடல் இது!

எப்படித்தான் கண்ணதாசன் கண்ணில் இது பட்டதோ! எப்படித்தான் அவர் கருத்தையும் கவர்ந்துவிட்டதோ! அகலமான கம்பனை ஆழமாகவும் படித்திருக்கிறார் கண்ணதாசன் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு. கம்பனின் கருத்தை எடுத்துத் திரைக் காட்சிக்கு ஏற்பச் சொற்களை அமைத்து ராஜா பத்மநாபன் ராணியைத் தன் நெஞ்சில் வைத்தான். என்று முத்தாய்ப்பாய் முத்திரை பதிக்கிறார் கவியரசர்!

source::::: input from a friend of mine ..

Natarajan

எம்மதமும் எம் மதமே !!!….

மூலம் : மஹாபெரியவாள் தரிசன அனுபவங்கள் – ஐந்தாம் பகுதி
நினைவு கூர்ந்தவர்: ஸ்ரீமடம் பாலு
பக்கம் : 93,94,95

மௌனம் நா அசைத்தது

வட பாரதத்தின் வடமேற்கு மாநிலங்களைச் சேர்ந்த எட்டு முஸ்லிம்கள், பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார்கள். அவர்கள் எல்லோரும் செல்வந்தர்கள் என்ற நினைப்பை ஏற்படுத்தினாலும், எளிய உடை (வேஷ்டி, குல்லாய்) அணிந்திருந்தார்கள்.

“பெரிய பெரிய தேசியத் தலைவர்கள் எல்லாம் இந்த மஹந்திடம் ஆசிபெற்றுச் சென்றிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டோம். அத்தகைய மஹந்தை (மகானை) தரிசனம் செய்ய வந்திருக்கிறோம்.”

பெரியவாள் அன்றைய தினம் காஷ்டமௌனம்! ஒரு ஜாடை, கண் அசைப்பு கூடக் கிடையாது, ஏதேனும் சொன்னால் கேட்டுக் கொண்டிருப்பார்களே தவிர, முகத்தில் எவ்விதச் சலனமும் இருக்காது.

முஸ்லிம்கள், வெகு தூரத்திலிருந்து, மிகவும் பக்தியோடு வந்திருக்கிறார்கள்.

“இன்று பெரியவாள் பேசமாட்டார்கள்” என்று சொல்லி, ஏமாற்றத்துடன் அவர்களை அனுப்பி வைப்பது, மகா அநியாயம். ஆனால், பெரியவாளிடம் யார் போய்ச் சொல்வது?

பாணாம்பட்டு கண்ணன் என்று ஒரு தொண்டர். நியாயமான துணிச்சல்காரர். ‘வடக்கேயிருந்து எட்டு முஸ்லிம்கள் வந்திருக்கிறார்கள். சமயப் பற்றுடையவர்கள் மாதிரி இருக்கு. ரொம்பவும் சாந்தமா இருக்கா… பெரியவாளிடம் ஆசீர்வாதம் வாங்கணும்னு ரொம்ப எதிர்பார்ப்போடு வந்திருக்கா…”

இரண்டு நிமிஷம் கழித்துப் பெரியவாள் வெளியே வந்தார்கள். “ஆயியே… ஆயியே..” என்று அவர்களை அழைத்து உட்காரச் சொல்லிவிட்டு, ஹிந்தியில் ஒவ்வொருவரிடமும் உரையாடினார்கள்.

வந்தவர்கள், “நாங்கள் ஒரு பெரிய பிரச்சினையில் சிக்கியிருக்கிறோம். பெரியவா அனுக்ரஹம் வேணும்” என்று பிரார்த்தித்துக் கொண்டார்கள்.

பெரியவாள் சொன்னார்கள்:

“நீங்கள் எல்லோரும் நல்ல பக்தர்கள். தினமும் ஐந்து வேளை தொழுகை செய்யுங்கள். இது ரம்லான் மாதம். உபவாசம் இருந்து என்னைப் பார்க்க வந்திருக்கிறீர்கள். அதனாலேதான், உங்களிடம் மட்டும் பேசுவதற்காக மௌனத்தை சிறிதுநேரம் விட்டுவிட்டேன்! உங்கள் கஷ்டங்கள் நீங்கும். ஆண்டவர் காப்பாற்றுவார்…”

அந்த எண்மரில், முதியவரான ஒருவருக்கு ஒரு பச்சை நிறச் சால்வையும், மற்றவர்களுக்குப் பழமும் கொடுத்தார்கள்.
அவர்கள் ஆனந்தம் பொங்கத் திரும்பிச் சென்றார்கள்.

source::::periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/3972#ixzz2PZGoBQN5

கனியாக வந்த குழந்தை !!!

கனியாக வந்த குழந்தை

திருமணமாகிப் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.
தசரதன் என்ற மாமன்னன் எதற்காக ஏங்கினானோ, அதே ஏக்கம் எங்களுக்கு. என்ன பாவம் செய்தோம்?

பக்தி சிரத்தையான குடும்பம். பிறந்தது – புகுந்தது என்ற இரண்டுமே வீடுபேறு பெற்ற பரம்பரை. என் மாமனார், புதுக்கோட்டை டாக்டர் ந.தியாகராஜன், புதுக்கோட்டை சங்கர மடத்தில் அப்போதைய முத்ராதிகாரி. மஹாபெரியவாள் இளையாத்தங்குடியில் தங்கியிருந்தபோது (1965) சிறிது உடல்நலம் குன்றியிருந்தார். கோயில் குளத்தில் நீராடிவிட்டு, என் மாமனார்தான் (பெரியவாளைத் தொட்டு) சிகிச்சை அளிக்கும் பாக்கியம் பெற்றவர்.

மஹாபெரியவாளின் பூர்வாசிரம சகோதரர் பிரும்மஸ்ரீ சாம்பமூர்த்தி சாஸ்திரிகள், கடைசிக் காலங்களில் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, சில மாதங்கள் எங்கள் மருத்துவமலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

தசரதனுக்கு வசிஷ்டர் இருந்தார். எங்களுக்கு?

“பெரியவாளைத் தரிசிக்க வேண்டும்” என்ற நோக்கத்துடன், விவாகமான நாள் முதல் (2-2-1977) நானும் என் கணவரும் சேர்ந்து புறப்படவிருக்கும் நேரத்தில் ஏதாவது ஒரு தடங்கல் வந்துவிடும்! யாராவது ஒருவர் மட்டும் சென்று தரிசித்துவிட்டு வருவோம்.

எங்களுக்கும் கொஞ்சம் கொடுப்பினை இருந்தது போலும்! 1-9-1988 அன்று கலவையில் நாங்கள் (இருவருமாக) மஹாபெரியவாளைத் தரிசித்தோம்.

ஒரு மாமாங்க ஏக்கம் தீரப்போகிறது.

நாங்கள் சென்ற சமயம், பெரியவாள் மேனாவுக்குள், கதவை மூடிக்கொண்டு ஜபம் செய்து கொண்டிருந்தார்கள்.

”எப்போது தரிசனம் கொடுப்பார்கள்?”

“சித்தம் போக்கு, சிவம் போக்கு… சாட்சாத் பரமேஸ்வரனாலேயே பதில் சொல்லமுடியாத கேள்வி! இரண்டு மணி நேரம் கழித்துக் கதவைத் திறக்கலாம்; அல்லது இதோ இப்போதே…”அந்த விநாடி வந்துவிட்டது!

ஓர் அணுக்கத் தொண்டர், “புதுக்கோட்டை டாக்டர் தியாகராஜனின் இரண்டாவது பிள்ளை, தம்பதியா வந்திருக்கா தரிசனத்துக்கு” என்று சற்று உரத்த குரலில் விண்ணப்பித்துக் கொள்ள…
பெரியவாளே, கதவைத் திறந்தார்கள். தெய்விகப் புன்முறுவல்! அந்த க்ஷணகாலம் அப்படியே நிரந்தரமாகவே நின்று விடக்கூடாதா – என்றொரு வேட்கை.

“சாம்பமூர்த்தியை ரொம்ப நன்னா கவனிச்சிண்டார், உன் தகப்பனார்…” மெய் சிலிர்த்தது, எங்களுக்கு.

என் கணவர் குமார் (என்ற கிருஷ்ணமூர்த்தி) எங்கள் ஏக்கத்தை, நெஞ்சங் குழையக் கூறினார்.

“நாங்கள் தனித்தனியா தரிசனத்துக்கு வந்திருக்கோம். இப்போதான், முதல் தடவையா, ரெண்டு பேரும் சேர்ந்து வந்திருக்கோம்…”

பெரியவா கைகளைத் தூக்கி ஆசீர்வதித்தார்கள். மேனாவிலிருந்த ஓர் ஆரஞ்சுப்பழத்தை, என் கணவர் கையில் கொடுத்தார்கள். ஒரு குழந்தையையே எடுத்துக் கொடுப்பதுபோல் எங்களுக்குத் தோன்றியது.

21-5-1989 அன்று எனக்கு ஓர் ஆண்மகவு பிறந்தது. “இதிலென்ன ஆச்சரியம்? ஆச்சார்யாள் அனுக்ரஹத்தால் எல்லாம் நடக்கும்” என்று சொல்லிவிடலாம்தான்.

ஆச்சரியம் இருக்கிறது. அன்றைய தினம், வைகாசி அனுஷம் – பெரியவர் ஜன்ம நக்ஷத்ரம்!

முன்னர், ராமேஸ்வரத்தில் சில பரிகாரங்களைச் செய்து முடித்திருந்தோம். அதனால், குழந்தைக்கு இராமநாத் சந்திரசேகர் என்று பெயர் சூட்டினோம்.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர…

source::::periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/3949#ixzz2PZ8YjZ9h

பழம் எல்லாம் பரம ஏழைக்கு !!!!!

கமால் ஜூம்லெட் என்ற லெபனான் நாட்டு அமைச்சர், மஹாபெரியவாளிடம் அத்யந்த பக்தி கொண்டவர். அத்வைத தத்துவக் கோட்பாடுகளை சென்னை, மும்பை மற்றும் கேரளாவிலிருந்த பல மகாபண்டிதர்களிடம் பாடம் கேட்டுத் தெரிந்து கொண்டவர்.

அவர், பெரியவாளைத் தரிசிக்க வரும்போது, இஸ்லாமிய சம்பிரதாயப்படி, “சலாமாலேகும்” என்று சொல்லி வணக்கம் தெரிவிப்பார்.

ஒரு தடவை, பல கூடைகளில் மாதுளை, ஆப்பிள் என்று வகைவகையான பழங்களைக் கொண்டுவந்து சமர்ப்பித்தார்.

பெரியவாள் ஒரு மாதுளையைக் கையில் எடுத்துப் புரட்டிப் புரட்டிப் பார்த்து மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்தார்கள். அதாவது கமால் ஜூம்லெட் சமர்ப்பித்தவைகளை தான் ஏற்றுக் கொண்டுவிட்டதை அவருக்கு உணர்த்தி, அவரை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கச் செய்து கொண்டிருந்தார்கள்!

கமாலின் ஆனந்தத்துக்கு அளவேயில்லை. பெரியவாளும், ஸ்ரீமடத்துத் தொண்டர்களும் மிக உயர்ந்த ரக மாதுளை – ஆப்பிள்களை சாப்பிடப் போகிறார்கள் என்ற நினைப்பே அவருக்கு அமுதமாய் இனித்தது.

பெரியவாள், “இதுகளெல்லாம் ரொம்ப ஒசத்தியோன்னு அவரைக் கேளு” என்றார்கள்.

“ஆமாம், ஆமாம்! இவைகளை விட உயர்ந்த ரகம் எங்கேயும் இல்லை…”

பெரியவா, ஒரு தொண்டரை அருகில் அழைத்தார்கள்.

“பக்கத்திலே ஹரிஜன் காலனி ஏதாவது இருக்கோ”

“இருக்கு… பத்து நிமிஷ நடை தூரம்…”

“எல்லாக் கூடையையும் எடுத்துண்டு போய், அங்கே உள்ள எல்லோருக்கும் கொடுத்துட்டு வா. காலி கூடையையும் அவாகிட்டேயே கொடுத்துடு…”

தொண்டர் தயங்கினார். கமால் எதிரிலேயே அவர் கொண்டுவந்த பழங்களை இப்படித் (துர்)விநியோகம் பண்ணினால், அவர் மனம் நொந்து போகமாட்டாரா என்று எண்ணியிருக்கலாம்.

பெரியவாள் : “அவாளெல்லாம் பரம ஏழைகள். இந்த மாதிரிப் பழங்களையெல்லாம் பார்த்துக்கூட இருக்கமாட்டா…. அவா சாப்பிடட்டும்.”

இந்த சம்பாஷணை, சமிக்ஞைகளைக் கேட்டுக் கொண்டிருந்த கமால், சிஷ்யரிடம், “வாட்?” என்று கேட்டார். சிஷ்யர் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில், “இந்தப் பழங்கள் எல்லாவற்றையும் பரம ஏழைகளுக்கு விநியோகம் செய்யும்படி பெரியவாள் ஆக்ஞை” என்றார்.

கமாலின் உள்ளம் கொதித்தது. (மன்னிக்கவும். கமாலின் உள்ளம் குதித்தது; களித்தது).

“ஓ! அல்லாஹ்… அல்லாஹ்…. அல்லாஹ்…” என்று இரு கைகளையும் உயரே தூக்கிக் கொண்டு, பரவசமாகக் கத்தினார்.

பெரியவாள், அல்லா மட்டுமல்ல; எல்லாமாக இருப்பவர்கள் என்பது நமக்குத் தெரிந்ததுதானே!

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source::::www.periva.proboards.com

Read more:http://periva.proboards.com/index.cgi?board=exptamil&action=display&thread=3964#ixzz2PD8mkDgV

Steve Jobs On His First Day at Apple !!!!

Steve Jobs

Source: news.com.au

STEVE Jobs didn’t always wear his signature black skivvy. In fact, newly found photos showed he wore purple on his first day at work. Well… kind of.

A former Apple employee recently discovered a set of photos of Steve Jobs taken on the first day of his return to the company.

Jobs had been fired from Apple in 1985 after allegedly organising a “Coup d’état” of the Apple board. He was invited back to the company more than a decade later in 1996.

Former Mac OS Evangelist Tim Holmes had been working late that night, and was invited by his boss to attend a “Town Hall” meeting which was usually for things like company announcements.

However, “it was clearly not a company meeting,” Holmes wrote on his Flickr account.

 

STEVE JOBS

Steve Jobs

Source: news.com.au

 

Holmes said he called his wife and told her to meet him there. “We had no idea what was about to happen.”

You can guess what happened next. Apple was about to introduce Jobs as the de-facto chief. (Then CEO, Gil Amelio would be ousted within a year).

The photos were taken with one of Apple’s first cameras, the Apple QuickTake. It was a camera Jobs himself would kill within the year, and probably for good reason. The colours were all wrong.

Holmes emphasized that Jobs was wearing a black jacket “in real life”, as opposed to the bright purple it appears to be in the photo.

“The colours are way off due to the poor quality of digital cameras in 1996,” Holmes explained.

 

STEVE JOBS

Steve Jobs

source::::news.com.au

Natarajan
Read more: http://www.news.com.au/technology/photos-of-steve-jobs-first-day-at-work-discovered-by-former-colleague/story-e6frfro0-1226608541867#ixzz2Ook958Sr

” For You I will Be The Guru “…Mahaperiavar….

Of the many occasions I had visited this great Mahan, I used to stand alone by the side and watch for a few hours many mortals come and go. On one occasion, He noticed me standing in a corner and wondering why I am just standing allowing all others to come and go, He asked His sincere devotee, Balu mama:

“Why is he standing there? Does he want anything? Ask him.”

Balu mama came and asked me,

“Periyavaa wants to know is there anything you want. Why are you just looking at Him and not coming to have the Prasadams?”

I told Balu mama (most of the time tears of joy used to roll down my eyes), “Every time I come here I have witnessed a rare incident between Periyavaa and His staunchest devotee. So today also I am just waiting in the side lines for one.”

Periyavaa overheard this and He said smilingly, “Let him wait for a few more minutes and one such incident is about to happen!”

Many men and women passed by.

Sooner a lady, Saroja, came to see Periyavaa.

She hesitated a bit to go near Him.

Periyavaa asked Balu mama to ask her ‘what she wants’.

She replied to Balu Mama :”I am coming here for the first time. I have heard from my neighbours in Hyderabad talking so much about this Mahan. So I came to have His darshan”

Periyavaa smiled and asked her,

“There is something more than the Darshan you are trying to seek from me!”

She started weeping like a small child. She must be around 55 Yrs Old!

“Yes Swamiji. I am really unable to bear the agony.”

“You must be a Dwaithin..”Swamiji said, meaning she is an Iyengar lady.

She was startled to know that: “Yes Swamiji..Indeed Yes.”and her weeping power overtook her much more to the dismay of all around!

Swamiji asked her:”What is that which is worrying you inside?”

She started narrating in-between her weeps:

“I have been sincerely following one Saint for more than 25 yrs now. I never found anything wrong with him and I have gone to Sanmarga only through this Guru. But of late I have found my Guru is not a real Guru. He has some behavioural problems and I stopped going to him altogether. But I am unable to stand this happening as I trusted this Guru so much and suddenly I find a vacuum in my life, in my spiritual life. That’s why when my friends recommended me I came all the way to have Darshan from you and be a devotee of you for ever in my life!”

Periyava started smiling..

“So you think by just switching over to another Guru like me your problems get solved?”

“That is what I feel”

Periyavaa said:”You are wrong.Krishna says “Yathatho kapikauntheya, Purushasya Vipas chithaha…”

The moment you are born as a human, you are bound to make mistakes. There is no escape for anyone in this world. Just because you switch over to another Guru like me, what is the surety that I am more purer? The very thought itself is wrong, as every human being has his own limitations.

No doubt I can understand your agony. What you should do is to start praying silently within yourself to a God of your choice.Try to get that inner “Anandha” instead of searching for another Guru who according to Krishna “May be much worse than the one you have experienced.”

There was spellbound silence everywhere…

I went to get His Blessings.

He said smilingly, “For you I will ever be the Guru, Don’t worry.”

Silence was broken with laughter everywhere…

I came out wiping my tears of joy…

Jaya Jaya Shankara, Hara Hara Shankara!

source:::: periva.proboards .com…..story as narrated by a devotee…
Natarajan

Read more: http://periva.proboards.com/index.cgi?board=expenglish&action=display&thread=3881#ixzz2OdZhd35m