Message For The Day…. ” I am With You ” !!!


Do not walk in front of Me,

I may not follow you.
Do not walk behind Me,
I may not lead you.
Walk beside Me and be my friend.
If you attempt to walk
in front of Me,
you may be taking a wrong path.
If you walk behind Me,
you may possibly desert Me.
Walk abreast of Me.
Then there is no chance
of going astray or away from Me,
because I am with you.

 

Message For The Day….There is More Joy in the Actual Doing Than in The Result thereof ….

The master of the house makes all the elaborate arrangements for a marriage in the family. He plans meticulously for the wedding ceremony, the reception, the menu, the illumination, the music, the decoration, etc.. These are very exciting when they are being planned and even while they are executed. But in the end when the bills arrive, will the master still be happy? In quite a few places, after the event is done, there may even be angst, disgust and grief. Isn’t it known from such experience that there is more joy in the actual doing than in the result that accrues. So it must be easy to discard the fruits of action, provided you spend some thought on the process ofkarma (performing action), and the worth of its fruit.   

Sathya Sai Baba

 

 

பழமையின் பெருமை !!!…. பழைய சாதம் அருமை !!!

Something  which most of us have grown up with but have now forgotten!

   பழைய சாதம்
              Previous day’s cooked rice soaked in plain water overnight is excellent foodDuring the good old days, there was no special practice of preparing hot morning break-fast, as we do now, among
most South Indian families, except that, previous day’s cooked rice that was soaked in plain water the previous
night was consumed the next day morning with some nutritious supplements such as fresh buttermilk, slightly-salted
onions or other non-spicy pickles such as  goose berry or lemon. This is an excellent, rich and the most nutritious
food. This is known as ” Pazhaya Saadham” (meaning old rice) in Tamil and “Saddhi Annamu” or “Saddhennamu” (meaning
cold rice) in Telugu.

An American Nutritionist, dietitian and scientist had researched on the food practices among  various regions in the
world and concluded that the South Indian tradition of consuming the previous day’s cooked rice soaked in plain
water overnight, in the morning next day, as break-fast, is the best.

For centuries, this has been the staple food of many South Indian families, particularly of the low income groups.
It is, of course, now replaced with fashionable hot break-fast.

It is found out that previous day’s cooked rice soaked in plain water is very compact and complete break-fast. It
has the rare B6 B12 vitamins which are not otherwise easily available in other food supplements. This rice generates
and harbours trillions of beneficial bacteria that help digestion and has many disease fighting and immunity
developing agents. The bacteria that grow in the intestines due to this rice safeguard the internal organs and keep
all organs battle fit and ready. Consuming this rice helps quicker digestion and wards off ageing, bone related
ailments and muscular pains.

It is worth giving a try. The cooked rice can be soaked in an earthen vessel or vessels made of natural clay or
rock. (In Tamil families, vessels made of natural rock, called as “Kalchatti” was used. Many South Indian families
also use this even now though it is called by different names in other languages. Some families use this
“Kalchatti”  that is handed down to them since generations even. It is found to be free from harmful bacteria and
other normal disease causing harmful elements.

Brown rice is the best for this as its nutrients are retained intact.

You will be happy to know that the American Nutritionist had listed the following benefits that accrue to the body
if you stick to the practice of consuming such soaked rice.
1.  Consuming this rice as break-fast keeps the body light and
also energetic.
2. Beneficial bacteria gets produced in abundance for the
body.
3.  Stomach ailments disappear when this is consumed in the
morning, as, excessive and harmful heat retained in the
body is neutralized.
4. As this food is very fibrous, it removes constipation and also dullness in the body.
5. Blood pressure is normalised and hypertension subsides appreciably.
6.  Body feels less tired due to this food as a result of which
one feels fresh through out the day.
7.  This removes allergy induced problems and also skin
related ailments.
8.  It removes all types of ulcers in the body.
9.  Fresh infections are kept at bay due to consuming this rice.
10. It helps in maintaining youthful and radiant look.
Once you consume this, the body does not crave for tea or coffee. In the olden days, people who worked in the fields
used to leave their houses in the early morning after consuming this soaked rice and worked hard for over 8 to 10
hours non-stop.
Dear Friends and wellwishers,
In fact one கனபாடிகள் said that it is the staple food students have before they begin the  வேத பாராயணம் for the
day to provide the required nourishment and also offset the body heat generated during full throated chanting.

பழைய சாதம் சாப்பிட்டு வாழ்க வளமுடன் !   We need Americans and others to tell us how good our stuffs are!source::::input from a friend of mine …

natarajan
 

Message For The Day…Contribute Self Effort First Before Seeking Help From God !!!

A devotee of Hanuman was once driving a cartload of grain to the market. On the way, one wheel got stuck and the cart could not be drawn forward. The cart slanted too, and a few bags fell on the ground. The devotee sat on the cart and started praying to Hanuman. He completed chanting the 108 names and even the 1008 names. When nothing happened, he started blaming the Lord and reviling Him for not rescuing him. Hanuman then appeared and took him to task! “Young man, instead of doing your duty by applying your strength on the job, you sat there, prayed and started reviling Me!” Come on, put your shoulder to the wheel and lift it up chanting My name! First contribute self-effort,” said the Lord. You must use all the talents awarded to you in a prayerful and humble mood. Until then, you have no right to seek the help and intervention of the Lord.

Sathya Sai Baba

 

” எது சுதந்திரம் ” ?

தமிழகத்தைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர் சிங்கப்பூர் சென்றிருக்கிறார். அழகான சாலைகள், அம்யூஸ்மெண்ட் பார்க்குகள், விண்ணை முட்டும் கட்டிடங்கள் என்று பல விஷயங்கள் அங்கே இருந்தாலும், சிங்கப்பூர் அவருக்கு பிடிக்கவில்லை. எப்போதடா இந்தியா திரும்புவோம் என்று காத்திருந்தார். அந்த வெறுப்புக்கு காரணம் எச்சில். சிங்கப்பூருக்கு சென்ற நாளில் நம்ம ஊர் வழக்கப்படி எதேச்சையாக இவர் சாலையில் எச்சிலைத் துப்ப, இதைப் பார்த்த போலீஸார் அவருக்கு எக்கச்சக்கமாக அபராதம் விதித்திருந்தனர். அதிலிருந்து மனிதருக்கு சிங்கப்பூர் கசந்தது. “ஒரு மனுஷன் நிம்மதியா துப்பக்கூட கூடாதுன்னா, இந்த ஊரு இருந்தா என்ன? அழிஞ்சாதான் என்ன?” என்று மனசுக்குள் கருவிக்கொண்டு எச்சிலை கட்டுப்படுத்தி நாட்களைத் தள்ளினார். எச்சில் துப்பாத ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாய் நகர்ந்தது அவருக்கு. கடைசியில் இந்தியாவுக்கு வரும் நாள் வர, விட்டால் போதும் என்று பறந்துவந்தார். நம் விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் முதல் வேலையாய் சாலைக்கு ஓடி வந்தவர் தன் ஒட்டுமொத்த ஆதங்கத்தையும் சேர்த்து வைத்துக்கொண்டு கா…றித்துப்பி தன் சுதந்திர வேட்கையைத் தீர்த்துக்கொண்டார்.

நம்மில் பலருக்கும் சுதந்திரத்தின் அர்த்தம் இதுவாகத்தான் உள்ளது. என் இஷ்டப்படி நான் வாழ்ந்துகொள்ள நம் பெரியவர்கள் போராடி வாங்கிக் கொடுத்ததுதான் சுதந்திரம் என்ற எண்ணத்துடன், அதைத் தவறான வழிகளில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அதில் முக்கியமான ஒரு விஷயம்தான் இந்த எச்சில். நடுரோட்டில் நின்றுகொண்டு இந்த உலகத்தைப் பற்றி கவலையே படாமல் வெற்றிலை அல்லது பான்பராக்கை நன்றாக மென்று, அதன் சுவையை ரசித்து சாலையிலோ அல்லது சுவரிலோ வண்ணக்கோலம் தீட்டாவிட்டால் பலருக்கு தூக்கமே வராது. இதை யாராவது கேட்கப்போனால் அவ்வளவுதான். தங்கள் சுதந்திரத்துக்கு ஊறுவந்துவிட்டதைப் போல் சண்டைக்கு வந்துவிடுவார்கள். “என்னயா, இது என்ன உங்க அப்பன் வீட்டு ரோடா” என்று கேட்டு நாம்தான் குற்றவாளியோ என்ற எண்ணம் வருகிறார்போல் ஒரு வாங்கு வாங்கிவிடுவார்கள்.

எச்சிலுக்கு அடுத்ததாக நம் மக்கள் அதிக சுதந்திரத்தை உணர்வது, குப்பை கொட்டுவதில்தான். தன் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு மனிதன் கருதுவது இயற்கை. ஆனால், அந்த வீட்டை சுத்தப்படுத்தியபின் குப்பைகளைப் ப்ப்டுவதிதான் வில்லங்கமே வருகிறது. பொதுவாக ஒவ்வொரு தெருவின் முனைகளிலும் குப்பைகளை போடுவதற்கென்று குப்பைத் தொட்டிகள் இருக்கும். ஆனால், அதன் பக்கத்தில் சென்று குப்பையைப் போட பலரையும் அவர்களின் ஈகோ தடுக்கும். அதனாலோ என்னமோ தங்களை கூடைப்பந்து வீரர்களை போல் பாவித்து தூரத்தில் இருந்துகொண்டே குப்பைத்தொட்டியைப் பார்த்து குப்பைகளை எறிவார்கள். குப்பையும் மிகச் சரியாக தொட்டியில் விழாமல், பக்கத்தில் இருக்கும் சுவரில் பட்டுத் தெறிக்கும். இதற்கென்றே காத்திருக்கும் நாய்கள் அதன் மீது பாய, கொஞ்ச நேரத்தில் ஏரியாவே நாறிவிடும். ஒரு சிலர் தங்கள் வீட்டில் அன்று பிரியாணியென்றோ, கறிக்குழம்பு என்றோ சமூகத்துக்கு பெருமையுடன் உணர்த்திக்கொள்வதற்காகவே குப்பைகளை வாரி இறப்பதும் உண்டு.

இந்தக் குப்பை வீச்சை தடுக்கப் போகிறேன் பேர்வழி என்று சிலர் குப்பைகள் சகஜமாக விழும் இடத்துக்கு பக்கத்தில் கடவுளின் படங்களை வரைந்து வைப்பார்கள். ஆனால், இதைப் பார்த்த பிறகாவது குப்பை கொட்டும் சமாசாரம் நிற்குமா என்றால், ஊஹூம்… உடனே கண்ணப்ப நாயனார்களாக மாறி தங்களிடம் உள்ள குப்பைகளால் சாமிக்கு அபிஷேகம் செய்யாமல் நகர மாட்டார்கள். “என்னப்பா இது, சாமி மீது குப்பை கொட்டுகிறாயே?” என்று கேட்டால், “நான் காலம் காலமா குப்பை கொட்டற இடத்துல நீ ஏன் சாமி படத்தை வரைஞ்சே?” என்று நம் மீது வம்புக்கு வருவார்கள்.

எச்சில், குப்பை ஆகியவற்றுக்கு அடுத்ததாக பலரும் சுதந்திரம் எடுத்துக்கொள்ளும் மற்றொரு விஷயம் ‘சாலை’. எத்தனை கூட்டமாக இருந்தாலும், என்னதான் டிராபிக் இருந்தாலும் நாம் மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் வீடு போய் சேரவேண்டும் என்பது பலரின் விருப்பம். அதற்கு ஊறு வந்துவிட்டால் தாங்கவே மாட்டார்கள். சாலையின் இரு புறமும் வாகனங்கள் நெருக்கி நின்றாலும் தாங்கள் சென்றாக வேண்டும் என்ற பிடிவாதத்துடன் எங்கெல்லாம் கேப் கிடைக்கிறதோ, அங்கெல்லாம் நுழைந்துவிடுவார்கள். மகாபாரதத்தில் சக்கிரவியூகத்திற்குள் அபிமன்யு எப்படி நுழைந்தான் என்பதை தெரிந்துகொள்ளாதவர்கள் இவர்களைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். சரசரவென்று சந்துகளில் நுழைந்து முன்னேறும் இவர்கள், மிகச் சரியாக அபிமன்யு சக்கரவியூகத்தில் சிக்கியதைப் போலவே மிக நெருக்கடியான ஓர் இடத்தில் நடுவில் சிக்கிக் கொள்வார்கள். அதிலிருந்து மீள முடியாமல் போவோர் வருவோரிடமிருந்தெல்லாம் அர்ச்சனை வாங்கிக்கொண்டு நிற்பதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். அனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், “இந்த ஏரியால ஒரு போலீஸ்காரனைக் கூட போடாம டிராபிக் போலீஸ் என்னய்யா பண்ணுது?” என்று தொண்டை கிழியக் கத்துவார்கள். சாலையில் போவதுதான் இப்படியென்றால் வண்டியை பார்க்கிங் செய்வதில் இன்னும் அதிக சுதந்திரம் எடுத்துக் கொள்வது சிலரது வழக்கம். “தோ… 5 நிமிஷத்துல வந்துடறேன்” என்று சொல்லி வண்டியை நெரிசலான இடத்தில் நிறுத்தி, ஒட்டு மொத்த மக்களையும் டென்ஷனாக்கி தங்கள் சுதந்திரத்தை நிலைநிறுத்திக் கொள்வதில் பலருக்கும் அலாதி சுகம்.

இந்துவோ, முஸ்லிமோ, கிறிஸ்தவமோ, எந்த மதத்தின் கடவுளும் தங்களை சத்தமாக வழிபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதில்லை. ஆனால், இப்போது இருக்கும் பக்தர்களுக்கோ சத்தமில்லாமல் கும்பிட்டால் கும்பிட்ட மாதிரியும் இல்லை. நாலு தெருவுக்கு மைக் கட்டி, அதில் உபயம் என்று தங்கள் பெயரைப் போட்டுக் கொண்டால், கடவுள் அருள் புரிவார் என்பது அவர்களது நம்பிக்கை. தேர்வு நேரமாச்சே, பசங்க படிக்கணுமே, நோயாளிகள் இருக்கிறார்களே என்று யாராவது கேட்டால் அவ்வளவுதான். “என் ஊருல என் சாமியைக் கும்பிடக்கூட உரிமை கிடையாதா?” என்று கடித்துக் குதறிவிடுவார்கள். அதைக் கேட்டபின் நமக்கே நாம் கடவுளின் எதிரியோ என்ற சந்தேகம் வந்துவிடும். சாமி விஷயமாவது ஏதோ பரவாயில்லை என்று விட்டுவிடலாம். ஆனால், தங்களுக்குப் பிடித்த பிரபலங்களின் பிறந்தநாளில் சிலர் செய்யும் சாகசங்களை சகிக்கவே முடியாது. அவர்களைக் கொண்டாடுகிறேன் என்ற பெயரில் ஊரையே ரெண்டுபடுத்தி விடுவார்கள்.

வசதியில்லாதவர்கள் சொகுசாகச் சென்றுவருவதற்காகத்தான் அரசாங்கம் பஸ் மற்றும் ரயில் போக்குவரத்தை நடத்தி வருகிறது. ஆனால், அதிலும் சிலர் எடுத்துக்கொள்ளும் சுதந்திரங்கள் இருக்கிறதே… சொல்லி மாளாது. ஜல்லிக்கட்டில் காளையை அடக்கப் பாய்வதுபோல் ஸ்டாண்டுக்குள் பஸ் வரும்போதே ஒரு பெரும் கூட்டம் சீட் பிடிக்கச் சூழ்ந்துகொள்ளும். துண்டோ, செருப்போ, பையோ ஏதவது ஒரு பொருளை சீட்டை நோக்கி வீசி தங்கள் இடத்தை ஸ்தாபிதம் செய்துகொள்வார்கள். ஒரு சிலர் இந்த விபரீத விளையாட்டுக்கு தங்கள் குழந்தைகளைக்கூட ஜன்னல் வழியாய் பஸ்ஸுக்குள் நுழைப்பதுண்டு. இந்த வீரப் போரில் நீங்கள் தேறவில்லையென்றால், எத்தனை தூர பயணமாக இருந்தாலும் நின்றுகொண்டே போக வேண்டியதுதான். ஆனால், இத்தனை ஆக்ரோஷமாக சீட் பிடிக்கும் பஸ்களை கண்ணும் கருத்துமாக பாதுகாப்பார்களா என்றால் அதுதான் இல்லை. தங்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றாலோ, யாராவது தங்கள் உரிமையில் கைவைத்தாலோ முதலில் உடைப்பதும் பஸ்களைத்தான்.

ஒரு மனிதன் வாழ்வதற்கு தண்ணீர் மிகவும் முக்கியம் என்பதும், அதைக் கொடுக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமை என்பதும் மிகவும் உண்மை. ஆனால், அதைவிட முக்கியமான விஷயம் அதை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பது. ஆனால், நம்மில் பலரும் அதிகம் வீணாக்குவது தண்ணீரைத்தான். பல் தேய்க்க பிரஷ்ஷை எடுப்பதற்கு முன்பே பலரும் குழாயை திறந்துவிடுகிறார்கள். தங்கள் தேவை முடிந்து முகத்தை துண்டால் துடைத்த பிறகே அதை மூ வேண்டும் என்ற நினைப்பே பலருக்கும் வருகிறது. மின்சாரத்தின் நிலையும் இதுதான். நாளொன்றுக்கு 18 மணி நேரம் மின்வெட்டால் அவதிப்பட்ட நிலையிலும் இன்னும் மின்சாரத்தை இஷ்டப்படி செலவு செய்யும் சமூகம் நம் ஊரில் இருக்கிறது.

டாஸ்மாக்கில் சரக்கடித்து சவுண்ட் விடுவது, சாவு ஊர்வலத்தில் மொத்த டிராஃபிக்கையும் நிறுத்துவது, பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது, புகைப் பிடிப்பது போன்ற விஷயங்களில்தான் சுதந்திரத்தை அனுபவிப்பது என்ற மனநிலை பலருக்கும் இருப்பது வேதனைக்குரியது.

 
source:::: Sudhir in tamil.thehindu.com
natarajan

Message For The Day….Do Your Duty Regardless of Fruits Thereof …

Your duty (Karma) has to be done righteously (in dharma). Those dominated by ignorance (Thamas) do their duty solely for the sake of the fruits thereof and they resort to all sorts of subterfuges in order to gain the results they desire. For this category of people, the end justifies the means. Those dominated by passion (Rajas) are proud and pompous, and boast that they are the doers, the benefactors and the experiencers. Those dominated by qualities of calm serenity (Sathwa) do their duties regardless of the fruits thereof and leave the result to the Lord. They will not worry whether it leads to success or failure, ever conscious of their duties and never of their rights. As a matter of fact, there is more joy in the actual doing, than in the result that accrues. This attitude must be the experience of every true seeker.

 

Sathya Sai Baba

இவ்வளவு செய்திகள் எதற்கு? …சிந்திக்க வேண்டியது நாம் !!!

 

சில மாதங்களுக்கு முன்னால் நான் ஒரு விடுதியில் ஒரு வாரம் தங்கியிருந்தேன். காலையில் சிறிது உடற்பயிற்சி. சிறிது நேரம் எழுதுவேன். அதன் பின் குளியல், சந்திப்புகள். மாலை முழுக்க சும்மா இருப்பேன். அப்போது தொலைக்காட்சியைப் பார்க்க ஆரம்பித்தேன். சென்ற பதினைந்து ஆண்டுகளாக நான் வீட்டில் தொலைக்காட்சி வைத்துக்கொள்ளவில்லை. ஆகவே விடுதிகளில்தான் தொலைக்காட்சியில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

அந்த ஒரு வாரமும் இளவரசன் – திவ்யா காதலைப் பற்றி மட்டும்தான் கேரளத்தின் ஒட்டுமொத்தத் தொலைக்காட்சிச் செய்திகளும் பேசிக்கொண்டிருந்தன. சம்பந்தப்பட்டவர்கள் ஒவ்வொரு பத்து நிமிடத்துக்கும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று செய்தியாளர்கள் பின்னால் சென்று அறிவித்துக்கொண்டிருந்தனர். அந்தச் செய்திகளின் அரசியல் விளைவுகள் என்ன, குடும்ப ஒழுக்கம் சார்ந்து அதன் பிரச்சினைகள் என்ன என்று அறிவுஜீவிகள் விவாதங்களில் அமர்ந்து பேசித் தள்ளினார்கள். எதுவரை போகிறது என்று பார்ப்போமே என்று எண்ணி அதைப் பின்தொடர்ந்த நான் ஒருகட்டத்தில் சலித்து விட்டுவிட்டேன்.

சரியாக ஒரு மாதம் கழித்து அந்த விஷயத்தைப் பற்றி ஒரு ரயிலிலும் ஒரு விடுதியிலும் பலதரப்பட்டவர்களிடம் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்தேன். அவர்கள் அனைவருக்கும் அந்தச் செய்தியைப் பற்றிய எளிய தகவல்களில்கூட குழப்பம் இருந்தது. எவருக்குமே தெளிவான எந்த நிலைப்பாடும் இல்லை. அத்தனை பேரும் அச்செய்திகளை நாட்கணக்கில் தொலைக்காட்சிகளில் பார்த்துக்கொண்டிருந்தவர்கள்.

உண்மையில் நமக்குச் செய்திகள் வந்துசேர்கின்றனவா? நான் சிறுவனாக இருந்தபோது கண்ணனின் சவரக் கடையில்தான் பத்திரிகை படிப்பேன். எப்படியும் முந்நூறு பேர் அந்த ஒரே ஒரு நாளிதழ் பிரதியைத்தான் செய்திகளுக்காக நம்பியிருந்தனர். ஒருவர் சத்தம்போட்டு வாசிக்க மற்றவர்கள் அதைக் கூர்ந்து கேட்டுக்கொண்டிருப்பார்கள். செய்திகளைப் பற்றிய ஐயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வார்கள். அப்போது இஸ்ரேலுக்கும் அரபுநாடுகளுக்குமிடையே போர் நடந்துகொண்டிருந்தது. ‘அவன் ஒரு துண்டு மண்ணுக்காகல்லா சண்டைபோடுகான்.. அவனுக்க பக்கம் நியாயம் உண்டு’ என்று சொன்ன அப்புபெருவட்டர் ஒன்றாம் வகுப்பைக்கூடத் தாண்டியதில்லை.

குறைவான செய்தி, செய்தியின் முக்கியத்துவத்தை அதிகரிக்கிறது. செய்தியைப் பற்றி நாம் யோசிப்பது அதிகமாகிறது. அதைப் பற்றிய நம் கருத்து ஒரு சரடுபோல மாறி, பிற செய்திகளைக் கோத்து ஒரு பெரிய வாழ்க்கை நோக்காகத் தொகுக்கப்படுகிறது. ஆனால், இன்று நாம் செய்திப் பிரளயத்தின் நடுவில் சிக்கிக்கொண்டிருக்கிறோம். இருபத்துநான்கு மணி நேர செய்தி ஓடைகள். அவற்றின் முடிவேயில்லாத விவாதங்கள். எதையும் எவரும் சொல்லிவிட்டுச் செல்லக்கூடிய இணையதள விவாதங்கள். ஒட்டுமொத்தமாக, செய்தி என்பது நம் வாழ்க்கையை வைரஸ்போலச் சூழ்ந்துகொண்டிருக்கிறது. நாம் விரும்பினாலும் இல்லை என்றாலும் அது நம்மில் புகுந்து நம் மூச்சில், ரத்தத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

ஆம், செய்தி பிரமாண்டமானதாக ஆகிவிட்டிருக்கிறது. ஆனால், தனிச்செய்திக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாமலாகிவிட்டது. செய்திகளுக்கு மேல் செய்திகள் விழுகின்றன, செய்திகள் செய்திகளை மறைக்கின்றன. கருத்துகள் செய்திகளை அழிக்கின்றன. கருத்துகளைப் பிற கருத்துகள் அழிக்கின்றன. எதையும் நாம் கவனிப்பதில்லை. எதுவும் நம்மில் நீடிப்பதில்லை.

ஒருமுறை பிஜப்பூரின் ஜும்மா மசூதியின் பிரமாண்டமான கும்மட்டத்தின் உட்குடைவுக்குள் ஏறி நின்றுகொண்டிருந்தேன். கீழே நூற்றுக்கணக்கானோர் பேசிக்கொண்டிருந்தனர். கும்மட்டத்தின் உச்சிக்குழிவில் அந்தப் பேச்சொலிகள் அனைத்தும் கலந்து ஓர் ஓங்காரம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. சமகாலச் செய்திகளில் இருந்து நான் பெற்றுக்கொள்வது வெறும் ஓர் ஓலத்தை மட்டுமே.

இத்தனை செய்திகள் நமக்கு எதற்கு? நம்முடைய செரிமான உறுப்பின் எல்லை ஐந்து கிலோ உணவு என்றால் ஐந்தாயிரம் கிலோ உணவை நம்முள் திணிக்கின்றன இவை. எது நமக்குத் தேவை, எதை நாம் கையாள முடியும் என்ற தெளிவு நமக்கு இல்லாத நிலையில் நாம் சமகாலத்தின் பொதுப்போக்கினால் அடித்துச் செல்லப்படுகிறோம். நான் என்னை வைத்தே பேசுகிறேன். என் இளமையில் நான் எனக்குப் பிடித்த நூல்களுக்குப் பின்னால் சென்றேன். ஆன்மிகமும் இலக்கியமும் என்னுடைய இடங்கள் என அறிந்துகொண்டேன். ஆன்மிகப் பிரச்சினைகளை இலக்கியத்தில் பேசிய மேதைகளை நான் விரும்பி வாசித்தேன். என் முதல் தேர்வு ருஷ்ய எழுத்தாளர் லேவ் தல்ஸ்தோயும் ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியும்தான். மலையாள எழுத்தாளர்கள் வைக்கம் முஹம்மது பஷீர், ஓ.வி.விஜயன். தமிழில் ஜெயகாந்தன். அதன் பின் இலக்கிய மொழியில் ஆன்மிகத்தைப் பேசியவர்களை நெருங்கிச் சென்றேன். அரவிந்தரை நான் அறிந்தது அவ்வாறுதான்.

அந்தத் தனித்துவம் கொண்ட தேடலே என்னை உருவாக்கியது என நான் நினைக்கிறேன். சமகாலத்து அரசியலும் கேளிக்கைகளும் அருகே ஒரு பெரிய பிரவாகமாகச் சென்றுகொண்டுதான் இருந்தன. அவசரநிலை அறிவிக்கப்பட்டு அதற்கு எதிரான அரசியல் கொந்தளிப்பு மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த காலகட்டம் அது. அந்த எல்லா அரசியலிலும் நானும் சம்பந்தப்பட்டிருந்தேன். ஆனால் அதற்கு அப்பால் என்னுடைய சொந்தத் தேடல் தனித்த ஓட்டமாகச் சென்றுகொண்டும் இருந்தது. ஏனென்றால் எனக்கென நேரம் இருந்தது. நூலகங்களில் மணிக் கணக்காக அமர்ந்திருந்தேன். ஆற்றங்கரை மண்டபங்களில் ஆலமரக் கிளைகளில் அமர்ந்து வாசித்தேன். கனவுகள் கண்டேன். அக்கனவுகளை நான் இன்றும்கூட எழுதி முடிக்கவில்லை.

இன்று நம் தனிமையை முழுக்க ஊடகங்கள் நிறைத்துக்கொள்கின்றன. தொலைக்காட்சி புக முடியாத இடைவெளியே நம் மனதுக்குள் இல்லை. அப்படிக் கொஞ்சம் எங்காவது தனித்த நேரம் இருந்தால் அங்கே இணையம் வந்துவிடுகிறது.

திரும்பத்திரும்ப விளம்பரங்கள் அதைத்தான் காட்டுகின்றன. இமயமலை உச்சியில், அரேபியப் பாலை நிலத்தில் எங்கள் தொடர்பு உங்களிடமிருக்கும். நீங்கள் ஃபேஸ்புக்கில் அரட்டை அடிக்கலாம். புகைப்படங்கள் பகிர்ந்துகொள்ளலாம். ஏன் அங்கே சென்றும் அதைச் செய்ய வேண்டும்? உலகின் மூலையிலாவது நமக்கான தனிமையில் சில துளிகளை நாம் சேமித்துக்கொள்ளக் கூடாதா என்ன?

அகத்தனிமையற்ற வாழ்க்கை. நாம் அகத்தனிமைக்குப் பழகவே இல்லை. ஐந்து நிமிடம் தனியாக இருந்தால் ‘போர்’ அடிக்கிறது என்கிறார்கள். ஐந்து வயதுக் குழந்தை போர் அடிக்கிறது என்று பெற்றோரை வந்து குத்தி, சிணுங்குவதைக் கண்டிருக்கிறேன். என் ஐந்து வயதில் எனக்கு இந்த உலகை வேடிக்கை பார்த்து முடிக்க நேரமிருக்கவில்லை. என் நோக்கில் ஓர் இளைஞன் போர் அடிக்கிறது என்று சொல்வானென்றால் அவன் கற்பனை சார்ந்த, படைப்பூக்கம் சார்ந்த எதற்கும் லாயக்கற்றவன்.

நம் அகத்தனிமையில் நாம் நமக்குரிய வழிகளைத் தேர்ந்தெடுப்போம். அதைப் பின்தொடர்ந்து செல்வோம். அதற்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு மட்டும் நமக்கு வெளியே இருந்து செய்திகள் வந்தால்போதும்.

செய்திகளை வாசிப்பதற்கு என்று நான் ஐந்து விதிகளை வைத்திருக்கிறேன்.

1. ஒரு நாளில் நான் அறிபவற்றில் செய்தி என்பது அதிகபட்சம் ஐந்து சதவீதத்தைத் தாண்டக் கூடாது. எனக்குச் சம்பந்தமில்லாத, எனக்குப் பயன் தராத செய்திகள் எந்த அளவுக்குச் சூழலில் உரத்து ஒலித்தாலும் சரி எனக்கு அவை முக்கியமல்ல.

2. என்னால் மேற்கொண்டு யோசித்து ஒரு கருத்தாகத் தொகுத்துக்கொள்ள முடியாத செய்தி என்பது எனக்கான செய்தி அல்ல.

3. என் நினைவில் இருக்கும் செய்திகளல்ல; என்னிடம் அச்செய்திகளின் விளைவாக உருவாகியிருக்கும் என் தரப்புதான் எனக்கு முக்கியமானது. அதைத்தான் நான் எங்கும் முன்வைப்பேன். செய்திகள் என்பவை எனக்கு என் தரப்பை உருவாக்கிக்கொள்ள உதவ வேண்டும்.

4. ஒருபோதும் செய்திகளை வைத்து அரட்டை அடிப்பதில்லை. செய்திகளை அரட்டையில் பயன்படுத்தும்போது அந்த உரையாடலின் வேகத்தை ஒட்டி நாம் நம்மையறியாமலேயே செய்திகளைத் திரிக்க ஆரம்பித்துவிடுவோம்.

5. எது முக்கியமான செய்தி எது முக்கியமற்றது என்பதை நான் முடிவுசெய்வேன், எனக்குச் செய்தியை அளிக்கும் ஊடகம் அதை முடிவுசெய்ய விட மாட்டேன்.

முப்பது ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் எந்த டீக்கடையிலும் தண்ணீர் வாங்கிக் குடிக்கலாம். தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கலாமா என்பார்கள். இன்று நாம் தண்ணீர் விஷயத்தில் மிகமிகக் கவனமாக இருக்கிறோம். லேபிள் பார்த்துப் புட்டித்தண்ணீர் வாங்கிக் குடிக்கிறோம்.

குடிநீரைவிட மாசுபட்டிருக்கிறது செய்தி.

source::::: http://tamil.the hindu.com   Jayamohan in   Tamil Edition of The Hindu

natarajan

Message For The Day….Want of Faith is a Source Of True Weakness…

Look at Arjuna! When the choice was placed before him to decide which he should receive – the entire army of redoubtable Yadhava war heroes or Lord Krishna alone, unarmed and refusing to fight – without any hesitation, he chose Krishna alone! He knew; he believed; and so, he was saved. What profit will an individual or country make if it accumulates money, gold and grain? The bliss derived from the worship of the Lord which arouses spiritual joy is, any day, far more desirable than the above. Want of faith is a source of true weakness. Love (Prema) is the seed, the overpowering experience of merging with the Divine is the tree (thanmayathwam), and inexhaustible bliss (Anandam) is the fruit. Achieve this consummation with firm faith in the Divine.

 

Sathya Sai Baba