“When HE Stands Up For You…No one Can Stand against You ” !!!

Heaven and Hell
One day A violent samurai warrior with a reputation for provoking fights for no reason arrived at the gates of a Zen monastery and asked to speak to the master.
Without hesitating, the Master went to meet him.
‘They say that intelligence is more powerful than brute force,’ said the samurai. ‘Can you explain to me what heaven and hell are?’
Master said nothing.
‘You see?’ bellowed the samurai. ‘I could explain quite easily: to show someone what hell is, you just have to punch them. To show them what heaven is, you just have threaten them with terrible violence and then let them go.’
‘I don’t talk to stupid people like you,’ said the Zen master.
The blood rushed to the samurai’s head. His brain became thick with hatred.
‘That is hell,’ said the Master, smiling. ‘Allowing yourself to be upset by silly remarks.’
Taken aback by the monk’s courage, the samurai warrior softened.
‘And that is heaven,’ said the Master, inviting him in. ‘Not reacting to foolish
provocations.’
When you Kneel down in front of  Sai, He stands up for you and
when He stands up for you, No one can stand against you…     
May Sai bless us all with Patience so that we can feel the bliss of Heaven ,right here on this earth. 
source::H.Deepa in  http://debu7370.blogspot.com/
natarajan

தீபாவளி பயணம் ….”அண்ணாச்சி நம்ம ஊரா ” ?!!!

பிறக்க ஒரு ஊர்; பிழைக்க ஒரு ஊர். இதுதான் நம் மக்களின் தலைவிதி’னு சிவாஜி பேசி நான் கேட்டப்ப, எனக்கு ரொம்ப சின்ன வயசு. அப்போ, ‘இதுல என்ன இருக்கு’னு தான் தோணுச்சு. ஆனா எங்க ஊரை விட்டுட்டு, சென்னைல வந்து வேலை பாக்குறப்போ தான், அது எவ்வளவு கஷ்டமான விஷயம்னு புரியுது.

மானேஜர் கால்ல கைல விழுந்து, ஒரு மாசத்துக்கு முன்னாடி இருந்து ஐஸ் வெச்சு, ஊரைப்பத்தி பதிவெல்லாம் போட்டு, அதை அப்படியே அகஸ்மாத்தா அவருக்கு அனுப்பி, படிக்க வைச்சு, தீபாவளிக்கு ‘லீவ்’ வாங்குறத பத்தி மட்டுமே தனியா ஒரு மெகா சீரியல் எடுக்கலாம்.இப்படி லீவ் எல்லாம் வாங்கிட்டு, எத்தனை ‘பேன்’ வைச்சாலும் காத்தே வராத, மூலையில இருக்குற கோயம்பேடு ‘முன்பதிவு’ மையத்துல, எப்படியோ டிக்கெட் ‘புக்’ பண்ணிட்டேன்.தீபாவளிக்கு முந்தின நாள், அரக்கப் பரக்க தி.நகர்ல சுத்தி, சொந்தக்காரன் பங்காளிக்கெல்லாம் துணி எடுத்து; அடையார் ஆனந்தபவன்ல சண்டை போட்டு ஒரு கிலோ காரம், ஒரு கிலோ இனிப்பு வாங்கிட்டு; எட்டு மணி பஸ்சுக்கு ஏழரை மணிக்கே பெருங்களத்தூர்ல வந்து நின்னாச்சு.நம்ம ஆட்களுக்குன்னு இது அமையுதா, இல்லை……
”அண்ணாச்சி! நம்ம ஊரா?”
“நீங்க எந்த ஊரு?”
“மேலச்செவலு. நீங்க?”
“நமக்கு பாளையங்கோட்டை.”
“சரி அண்ணாச்சி, ஊருக்கு இனிப்பு ஒண்ணும் வாங்கல கேட்டியளா. ஒரு நிமிசம் நம்ம பொட்டிய பாத்துக்கிட்டீங்கன்னா, ஓடிப்போயிட்டு ஓடியாந்துருவேன்”
சொந்த ஊர்ல இருக்கும்போது ஒருத்தன ஒருத்தன் கண்கொண்டு பாக்கோமோ இல்லையோ, இந்த மாதிரி சமயத்துல பாசம் பொங்கிரும் நமக்கும்.
”அதுக்கென்னா… போயிட்டு வாங்க”னு, அனுப்பி வைச்சேன். போனவன் ரொம்ப நேரமா வரவேயில்ல. அவன் பொட்டியெல்லாம் பாத்தா, சென்னைய காலி பண்ணிட்டு போற மாதிரி இருந்தது.
ஒருவேளை பஸ் வந்துட்டா என்ன பண்ணுற துங்கற யோசனைல இருக்கும்போதே, ஓடியாறென்னு சொன்னவன், கால்ல எட்டு போட்டுக்கிட்டு வுந்தான்.
“இனிப்பு எங்கவே?”
“அந்த கடைக்கு முன்னால நம்ம கடை இருந்ததுல்லா”னு கேவலமா சிரிச்சான்.
பயங்கர குடி. என்ன கருமத்த குடிச்சுத் தொலைச்சானோ தெரியலை, ஆனா அது, என் கொடல தான் பொரட்டி எடுத்துச்சு.
“இந்தாரும் உம்ம பொட்டி. இனிமே எங்கேயும் போவாதேயும். என்னால பாக்க முடியாது”
“அண்ணாச்சி சாப்பிடுவியளா?” கைப் பெருவிரலை வாய்க்கு காமிச்சு கேட்டான்.
“இல்லை அண்ணாச்சி”
“ஐயோ உங்களுக்கும் சேத்துல்லா வாங்கிட்டேன். தீவாளிக்கு கூட இருக்குறவங்களுக்கு இது கூட செய்யலைனா எப்படி?”
“அய்யோ. எனக்கு பழக்கமில்லை. உங்க அன்புக்கு…நன்றி.” இவங்கிட்ட இருந்து எப்படி தப்பிக்க?
மணி எட்டாச்சு, எட்டரையாச்சு. வண்டி வந்தபாடில்ல.
‘சரி, தீவாளி நேரம், சென்னைக்குள்ள கூட்டமா இருக்கும் அதான் லேட்டாகுது’னு நின்னுகிட்டிருந்த எனக்கு, ரொம்ப கோவமாயிருச்சு.
மணி 10! ஆனா பஸ் வர்றதுக்கு எந்த அறியையும் காணோம், குறியையும் காணோம்.
ஒன்பது மணி பஸ்சுக்கு போறவங்க, பத்து மணி பஸ்சுக்கு வந்தவுங்கனு நிக்க எடமில்லை. நிக்க எடமில்லாதவன் எல்லாம் ‘டாஸ்மாக்’ல போய் உட்காந்துட்டானுவ.
நானாவது ‘நான் – ஏசி’ பஸ். ‘ஏசி’ பஸ்ல போறவன் எல்லாம் செத்தான். காலைல மப்புலதான் போய் எறங்கணும்.
அரசு பஸ் தான் லேட்டுனு பாத்தா, ஆம்னி பஸ்சுக்கும் இதே நிலைமைதான்.சில ஆம்னி பஸ்ல எல்லாம் டிக்கெட் குடுக்கும்போது, டிரைவர் ‘போன் நம்பரோ’, கண்டக்டர் ‘நம்பரோ’ சேத்தே குடுக்கறாவ. அது மட்டுமில்லாம நம்ம ‘பாயிண்டுக்கு’ வண்டி வாறதுக்கு முன்னால ஒரு ‘மெசேஜ்’ கூட வரும்.ஆனா, அரசு பஸ் எங்க நிக்குதுன்னு யாருக்குமே தெரியாது. நம்ம மேலச்செவல்காரரு, எனக்குனு வாங்கினதையும் குடிச்சிட்டு, பயங்கர கொசுக்கடிலயும் சிரிச்சுட்டே நின்னாப்புல.மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, நாஞ்சில் நாடுன்னு நம்ம பக்க தமிழெல்லாம் எதிரொலிக்கிறப்பத் தான், “எல்லா தீவாளி வண்டியும் பை-பாஸ்லயே நிறுத்திட்டானாம்யா. கோயம்பேட்டுல இருக்குறவனுக்கே வண்டி வல்லயாம்”னு, ஒருத்தன் சொன்னான்.
நாசமா போச்சு. பெருங்களத்தூர் பஸ் ஸ்டாப் கட்டணக் கழிப்பிடத்துல தான் தீவாளிக் குளியலைப் போடணும்னு தலையில எழுதி இருந்தா என்ன பண்ண முடியும்?
அடப்போங்க… குளியல் என்ன, கூடி நின்ன கூட்டத்தால, ஒண்ணுக்குக் கூட இருக்க முடியாத நெலம! ‘டாஸ்மாக்குல’ பத்து மணிக்கு முன்னாடி போய், ரெண்டு பீர் குடிச்சவன் எல்லாம் என்ன பண்ணனும்னு தெரியாம தவிச்சுட்டானுவ. கண்ணுல மரண பீதி.கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸ் கூட இல்ல. பொம்பளையாள் இருக்குற எடத்துல முக்கால்வாசி பயலுவ குடிச்சிருந்தானுவோ, எதுனா எக்குத் தப்பு நடந்தா பாக்கக் கூட யாருமில்ல. ஒரு வேளை தப்பைத் தட்டிக் கேக்க நம்ம இங்க இருக்கோம்னு அவிங்களுக்கு தெரிஞ்சிருக்கோ என்னமோ!
ஒருவழியா, 12 மணி வாக்குல பஸ் வந்து, நின்னப்போ மேலச்சேவல் நல்ல தூக்கம். ‘சரி ஊர்க்காரனாச்சே’னு ஏத்தி விட்டா, ‘கண்டக்டர்’கிட்ட அப்பத்தான் டிக்கெட் வாங்க துட்டை நீட்டுறான்! கண்டக்டரு, என்னல்லாம் வைய்ய முடியுமோ வைஞ்சிட்டு, டிரைவருக்கு பின்னாடி இருந்த ஒரு எடத்துல உட்கார வெச்சுட்டார்.

‘நல்ல வேளை, இவன் எனக்குப் பக்கத்துல இருக்குற சீட்டுக்கு வரலை’னு சந்தோஷமா போய் பார்த்தா, எனக்குப் பக்கத்துல அவனையும்விட மொரட்டுக் குடிகாரன் ஒருத்தன்! தலையெழுத்து.’12 மணிக்கு வந்தாலும், நாலு மணிக்குள்ள ஊரு போய்ச் சேர்ந்துருவேன்’ங்கற வெறியில நம்ம டிரைவர் ஓட்டினாரு பாருங்க…பஸ்ல குடிச்சிருந்த அத்தனை பேரும், ரெண்டு வாரத்துக்கு முன்னாடி சாப்பிட்டது வரைக்கும் வாந்தி எடுத்துட்டாங்க.அதுலயும் நம்ம முன்சீட்காரர், டிரைவர் முதுகுலயே வாந்தி எடுத்து, அதனால வண்டி ஒரு அஞ்சு நிமிஷம் நின்னு கெளம்பிச்சு.இதெல்லாம் தாண்டி, காலைல 11 மணிக்கு வீட்டுக்கு வந்தப்போ, சொந்தக்காரன், பங்காளினு எல்லா பயலும் படத்துக்கு போயிட்டானுவோ. ச்ேச… இவ்வளவு கஷ்டப்பட்டு வந்து, என்னத்தக் கண்டோம்?காலைல எண்ணெய் தேச்சுக் குளிக்க, பட்டாசு வெடிக்க எல்லாம் பாக்கியமே இல்லாம, பட்டணத்து வாழ்க்கைக்கு திரும்புறதுக்கு, தீவாளி முடிஞ்ச அடுத்த நாளே பஸ்சுக்கு வந்து நின்னேன்.
“பாஸ்! சென்னைல எங்க?”
“அம்பத்தூர்.”
“ஒரு அஞ்சு நிமிசம் நம்ம பைய பாத்துகிடுதியளா? இந்தா வந்திருதேன்…”
“நான் ஊருக்கே போகலைடா!!”

source::: Dinamalar…Tamil Daily

natarajan

Message For the Day…Make ” Namasmarana ” a Daily Habit….

Singing the glory of the Lord is highly sacred. When you sing the Names of the Lord (Namasmarana), the snakes of bad qualities will come out. Namasmarana is like the piped musical instrument (Nadhaswaram), that attracts the snakes of evil qualities and draws them out and away from you. You must repeat the Lord’s Name in order to get rid of your negativities. Sing unto Him from the depth of your hearts, without any inhibition, with total dedication. Only then you can experience divine bliss. Today the Universe is facing a lot of problems due to lack of this habit. Young or old, rich or poor, educated or otherwise, everyone must do Namasmarana. Make this habit the very breath of your life. Let each and every cell of your body be filled with the Divine Name. Nothing else can give you the bliss, courage and strength you derive from singing the Lord’s Glory. 

Sathya Sai Baba

 

Laughter ….The Best Medicine !!!…” One For The Tin Cup “!!!

 

A guy was in New York on a business trip and decided to head to a local bar for a drink. Standing outside the bar was a nun holding a tin cup.
As the man threw a few bucks into her cup the nun launched into a long tirade about the evils of alcohol. She went on and on about how alcohol was tearing apart the fabric of society and how it was the root of all the city’s problems.
Slightly pissed off at having to listen to this the guy said, “Listen sister, I work hard for my money and sometimes at the end of a long day I like a drink or two. That doesn’t make me a bad person. I have a wife I idolize and two wonderful kids at home. I provide for my family, I volunteer my time to several local service clubs and I contribute regularly to various charities. Yet you stand here and condemn me just because I drink the occasional glass of scotch!”
The nun was slightly taken aback and replied, “I see your point my son and I apologize if I offended you, but the alcohol is such a powerful demon that all who consume it are doomed…”
“Look there you go again,” said the man, “How can you make such a sweeping statement. Have you ever even TRIED alcohol?”
“Of course not!” gasped the nun, “The evil alcohol has never touched my lips.”
“Do you really think that one glass of booze can change you from a devout nun to some kind of evil degenerate?”
“Well, I really don’t know …”
“I’ll tell you what, come into the bar with me and I’ll buy you a drink. One drink. I’ll prove to you that “evil” is not inside the glass, it’s inside the person.”
“Oh I could never be seen going into such a den of inequity, it’s out of the question. However, your comment about evil residing in the person rather than the glass is quite intriguing. I must admit you’ve aroused a curiosity in me.”
“Well let’s go inside and settle this”
“No my son, I could never enter such a place… but how about this. Take my tin cup with you and fill it with this “scotch” you mentioned. Bring it out to me and I’ll try it.”
“You’re on!” said the guy.
The nun removed all the change and handed him the tin cup. He went into the bar and said to the bartender, “Two scotch on the rocks, and could you put one of them in this tin cup please”
The bartender sighed and said, “Is that darn nun out there again!”
source:::::babamail.com,
natarajan

படித்ததில் பிடித்தது !!!…. ” கொளுத்திப் போடு ” !!!….

டார்கெட்….அரைப் பக்க  கதை !!!

அந்த பிரமாண்ட மண்டபத்தில் ஜாதி மத பேதமில்லாமல் அனைத்து மதத்தினரும் கூடியிருந்தனர். அங்கு நடக்க விருப்பது அனைத்து மதத்தினர் பங்கு பெறும் மழை வேண்டி பிரார்த்தனை. வெவ்வேறு மதத்தினருக்கு வெவ்வேறு இடம் ஒதுக்கப்பட்டடிருந்தது. அங்கு அவரவர் முறைப்படி பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. அந்த விசேஷ ஏற்பாட்டின் ஐடியாவுக்கு சொந்தக்காரர் தொழிலதிபர் ஜே.கே.விற்கு பாராட்டு மழை.
பிரமாதம் சார், வித்தியாசமான யோசனை. எல்லா மதத்தினரையும் ஒன்று சேர்த்து புரட்சி பண்ணிட்டீங்க. மத நல்லிணக்கத்திற்கு வித்திட்டிருக்கீங்க. எல்லாவற்றிற்கும் சிரித்து மழுப்பி நகர்ந்த ஜே.கே. ஒரு பிரபல தொழில் வித்தகர். அவர் புதிதாய் துவங்கி இருக்கும் குடை, ரெயின்கோர்ட், ஜெர்கின் போன்றவற்றை தயாரித்து தமிழ்நாட்டில் மார்கெட்டிங் செய்யும் தொழில் இலக்கை எட்ட முடியாமல் தத்தளிப்பதால் தான் இந்த ஏற்பாடு. அந்த விஷயம் பாவம் அவரை விழுந்து விழுந்து பாராட்டும் நபர்களுக்கு தெரியாதே.
-அரியாஸ்.

source::::Kumudam Tamil Weekly

 

கொளுத்திப்  போடு !!!….ஒரு பக்க கதை !!!!
சுஷ்மா, ஜீன்ஸ் – உடல் ஒட்டின பனியனுடன், உலர்த்த நேரமில்லாத ஈர முடியுமாய் கிளம்ப, “சுஷ்! ஒரு வாய் சாப்பிட்டு போடி…!’
“நேரமாச்சும்மா வரேன்!’ என்ற செருப்பில் நுழைந்தாள். அதற்குள் அம்மா பின்னாடியே ஓடிவந்து லாப்டாப் பையில் டிபன் பாக்ஸை செருகி, “போன உடனே மறக்காம சாப்பிட்டிரு’
“சரிம்மா, பை!’ என்று ஓடி தனக்காக காத்திருந்த டி.வி. சேனல் வண்டியில ஏறி…. செல் ஒலிக்க “இதோ கிளம்பிட்டேன் சார்!’
“அக்கா.. போலாமா?’ என்று டிரைவர் பின்னால் திரும்பிப் பார்த்த பகுதி அவளுக்கு கூசிற்று. என்ன செய்ய முடியும்!
அழகில்லை – நிறமில்லை – களையில்லை – முடியில்லை – வேண்டிய ளவுக்கு வேண்டியது வேண்டியபடி இல்லை என்று வருத்தப்படுபவர்கள் இருக்கிறார்கள் எல்லாம் இருந்தாலோ – இப்படி!
விஷûவல் கம்யூனிகேஷன் முடிந்து உடனே இந்த பிரபல சேனலில் சேர்ந்து சுஷ்மா எதிர்பாராமல் திடீர் பிரபலம்! பிரபலத்திற்கேற்ப கவர்ச்சியாக வேண்டிய கட்டாயம்!
அரசியல் – சினிமா – மீடியா – தொழிலதிபர்கள் என பெரும்புள்ளியுடன் பழகும் வாய்ப்பு. கை நிறைய சம்பளம்!
புதுப்புது யோசனைகள், யுக்திகள்! சேனலின் ரேட்டிங்கை கூட்ட வேண்டிய எப்போதும் ஓட்டம்! ஓய்விற்கும், தூங்கவும் பசி போக்கவும் நேரமில்லை. வசதியில்லாதவர்கள் காசில்லாமல் பட்டினி. காசிருப்பவர்களுக்கு சாப்பிட நேரமில்லை அல்லது டயட்!
இவர்கள் பம்பரமாய் சுழன்றால்தான் ஜனங்களுக்கு பரபரப்பு தர முடியும். இருப்பதை மறக்கணும். இல்லாததை பெரிசு பண்ணணும். போட்டி சேனல்களுக்கு முன்பு – முந்தணும்! அவன் ஏதாவது செய்து நல்ல பெயர் வாங்கினால் உல்டா பண்ணி காலி பண்ணணும்!
சுஷ்மா உள்ளே நுழைந்தபோது, ரிசப்ஷனிஸ்ட் “டைரக்டர் விக்னேஷ் பார்க்கச் சொன்னார்!’ என்று அன்பாய் விரட்டினாள்.
விக்னேஷ், “யெஸ், சார். நோ சார்! இந்த வாரம் செஞ்சிரலாம் சார்!’ என்று செல்லில் அடிபணிந்தபடி அவளை அமரச் சொன்னான். பாவம், இளம் வயதிலேயே வழுக்கை! அவளும் கேட்கட்டும் என்று ஸ்பீக்கரை அமர்த்தி அமர்ந்தான்.
எதிர்முனையில் சேர்மன். சேனலின் ஓனர். அப்போது எந்த நாட்டிலிருந்து என்று தெரியவில்லை எங்கிருந்தாலும் விரட்டி கழுத்தைப் பிடிப்பார்.
அள்ளி அள்ளி சம்பளத்தைக் கொடுத்துவிட்டு அனுபவிக்க நேரம் தராத குரூரம்; சேனலில் ஆரம்பித்த அவரது வாழ்வு இன்று உலகம் முழுக்க பல்தொழில்களில் பறக்கிறது! சிறக்கிறது. ஆக்கவும் அதைவிட அதிகமாய் அழிக்கவும் அவர் தெம்பு பெற்றவர்! குடும்பம் அமெரிக்க கிரீன் கார்டில்!
“விக்னேஷ்! நேத்து ஆரம்பிச்ச சேனல்காரன் புகுந்துவிளையாடறான். நீங்கள்லாம் என்ன பண்றீங்க? உலகத் தமிழர்களை உசுப்பற மாதிரி ஏதாவது…’
“யோசிக்கணும் சார்..’
“செய்றீங்க – அதுவும் அதிரடியாய் – நிலநடுக்கமாய்.. இன்னும் ரெண்டு நாளில்! அவனவன் தீபாவளி பட்டாசு வெடிப்பான். நாம அதுக்கு நாலு நாள் முன்னாடியே வெச்சிரணும்! அது சரவெடியா இருக்கணும்!’
“டன் சார்!’
“என்ன செய்யப்போறீங்கன்னு இன்னும் நாலு மணி நேரத்துல எனக்கு தெரிஞ்சாகணும்! கீப் கான்ஃபிடன்ஸியல்!’
“ஓகே சார்.’
“நம்மாளுங்களுக்கு முடிலேன்னா – சொல்லு! ஏஜென்ஸிகாரனை அனுப்பறேன் – காதும் காதும் – கண்ணும் கண்ணும் வச்சமாதிரி அவன் செய்வான்! சுஷ்மா எதிரேதானே இருக்கா… சுஷ்..’
அவள் வியர்த்து “ஹாய் சார்!’ என்று படபடக்க, “உன் பனியன் சூப்பர்! அதை வேலையிலும் காட்டு. பை!’
விக்னேஷ் குறுந்தாடியை வருடி; தலையை சிலிர்த்து, “சுஷ்… என் பண்ணலாம் சொல்லு! ஏதாச்சும் யோசிச்சியா…?’
“இல்லே சார்… பசிக்குது. அம்மா டிபன் கொடுத்தாங்க. ஷேர் பண்ணுங்க முதல்ல!’
இரண்டு இட்லி உள்ளே போய் மெஷினில் காபி பிடித்து ரூசித்ததும் மூளை வேலை செய்ய ஆரம்பித்தது.
“சார்… ஏதாவது சாமியாரை களவாடுவோமா…?’
“யார் இருக்கா. பாக்கி…?’
“இல்லாட்டி என்ன போலி சாமியாரை உருவாக்குவோம். பொண்ணுங்களை அனுப்பி படம் பிடிச்சு.. அவங்களுக்கு பணம் கொடுத்து இலவச பப்ளிசிட்டி!’
“அதெல்லாம் தான் ஜனங்களுக்கு பழகிப்போச்சே! இதிலே பரபரப்புக்கு என்ன இருக்கு? புதுசா யோசி…!’
“பேசாம சினிமா – ஹீரோ – ஹீரோயினிடம் விலை பேசி… செட் அப் படம் எடுத்து… ரெண்டு நாளைக்கு மாத்தி மாத்தி அவங்களைப் பத்தி காரசார அறிக்கை விட வச்சா ஜனங்க ரசிப்பாங்க. பேசுவாங்க. அப்புறம் வேறு நியூஸ் வந்ததும் இதை மறந்துடப் போறாங்க!’
விக்னேஷ் பொறுமையிழந்து சேனங்களை இங்குமங்கும் திருப்பிக் கொண்டிருந்தான். திருவிழா! பஜாரில் வெடிகுண்டு! கப்பல் எரிந்து நாசம்! விமானம் கடத்தல்..! சிரியாவில் ஆயிரம் பேர் சுட்டுக்கொலை! எகிப்தில் போராட்டக்காரர்கள் மேல் திராவக வீச்சு! ஈராக்கில் கார் வெடி குண்டு! ஜப்பானில் நிலநடுக்கம்! அமெரிக்க எரிமலை! வெற்றிகரமாய் ராக்கெட் ஏவப்பட்டது!
உள்ளூர் சேனலை திருப்பினால் ரஜினி! விஜய்! அஜித்! அமீர்கான்! ஏழுலட்சம் கோடி ஊழல்! எங்களுக்கும் தனி மாநிலம் வேணும்! அஸ்ஸாமில் வெள்ளம்! தீபாவளி ரிலீஸ் படங்கள்!
காலை ஆறு முதல் மறுநாள் காலை ஆறுரை தீபாவளியை முன்னிட்டு சினிமா…! சினிமா நிகழ்ச்சிகளை வழங்குவோம்! ஒவ்வொரு சேனலிலும் ஆஸ்தான பட்டிமன்றங்கள்! சினிமா நட்சத்திரங்களின் அலப்பரைகள்!
என்ன செய்யலாம்?
ஃபோன் வந்தது.
எதிர்பார்த்தது போலவே சேர்மன்! பயபக்தியோடும் நடுக்கத்தோடும் எடுக்க, “விக்னேஷ்! இடைத்தரகன் ஒருத்தன் மாட்டினான். இன்னும் ஒரு மணி நேரத்துல உன்னை வந்து பார்ப்பான். அவன் கேட்கிற பணத்தை செட்டில் பண்ணி.. நாளை மாலையிலிருந்தே ஃப்ளாஷ் நியூஸ் ஓட விட்டிரு!’
“என்னன்னு சார்..?’
“அதான்ப்பா.. நம்மகிட்டே வாலாட்டினானே… மானநஷ்டவழக்குப் போட்டு ஜெயிச்சானே அந்த மந்திரியோட மகனாம் – வெளிநாட்டுல கொட்டமாம்! அவன் கையில ஆதாரம் இருக்காம். நாளை மாலை காசட் வரும். அது உண்மையான்னு மட்டும் செக் பண்ணிகிட்டு செட்டில் பண்ணிரு!’
“ஓகே சார், எல்லாம் நான் பார்த்துக்கிறேன்.’
அந்த வெளிநாட்டுக்காரனுடன் மீட்டிங்! கேசட் பரிமாற்றம்! கேசட்டை பரிசோதிக்க அனுப்பி – அது ஒரிஜினல் என உறுதியானதும் –
“அமர்க்களம்! ஒரு பிரபலத்தின் வாரிசு வெளிநாட்டில் அட்டகாசம்! உல்லாசம்… இன்று இரவு பத்து மணிக்கு…’ என பத்து நிமிடத்திற்கு ஒரு முறை அவர்களது அனைத்த சேனல்களிலும் ரசிகர்களை உசுப்பேற்றி.. ஒளிபரப்பாயிற்று..
– பரபரப்புக்காக, பணத்திற்காக பேராசைக்காக, பழிவாங்குவதற்காக, பாடம் புகட்டுவதற்காக, பேரத்திற்காக, பிளாக்மெயிலுக்காக, ஓட்டுக்காக, ஓட்டுவதற்காக, வெட்டுவதற்காக, மிரட்டி -உருட்டி பொய்யை மெய்யாகக் காட்டி காட்டி சம்பந்தப்பட்டவர்களை காலி பண்ணி – சின்னச் சின்ன சாதி மத சண்டைகளை கலவரமாக உருவாக்கி, பிசினஸ், அரசியல் சாம்ராஜ்யங்களைத் தகர்த்து, பலரின் வயிற்றெரிச்சலையும் கொட்டிக் கொண்டிருந்த அந்த சேனலில் –
அப்போது மிக பிரம்மாண்டமாக வெளியான அந்த உல்லாசக் காட்சியில் குறிப்பிட்ட மந்திரியின் மகனுடன் சேர்ந்து கொட்டமடித்திருந்தது – வெளிநாட்டில் படித்துவந்த அந்த சேனல் சேர்மனின் மகள் என்பது படம் பிடித்தவர்களுக்கோ ஒளிபரப்பினவர்களுக்கோ அப்போது தெரியாது!

 என்.சி. மோகன்தாஸ் 

source:::::Kumudam Tamil Weekly

நடராஜன்

 

” You are the Light of My Life ” ….

May Sai  show us the light in the darkness that we have chosen to live in…- The darkness led by our own ego, our anger ,our hatred, our jealousy, our greed and above all our tendency to throw  Love , Peace , Faith , Patience and Hope out of our life. 

 

 

source::::H.Deepa in http://debu7370.blogspot.com/ 

natarajan

Message For The Day….When You Deserve To Become a Leader …

 Sathya Sai Baba

Be eager and earnest to learn more and more about the art of joyful living, the art of being happy always. People are happy when they dress well, wear rich clothes and strut about the streets. At times, this may cause envy among the little children who cannot afford these, and one may even feel elated with that response! But you can afford to be legitimately proud, only when you are able to control the vagaries of your mind and direct your emotions along honourable and healthy channels, braving even the ridicule of your so-called friends. That is true freedom; that is true success. If you reach that stage, then you become a seasoned driver and you can be trusted with the wheel on any road, and with any cargo, however precious. Now you are trained to not cause harm, either to yourself or to others. This stage is when you truly deserve to become a leader.