Message for the Day…Whole World is a Mansion of God…

The body is said to be the tabernacle of God. In fact the world itself is the body of God. A pinprick on the toe is immediately recognised as an injury to the self, because the toe is part of the self-same body. So too, suffering in one corner of the world is as much the concern of the Lord, as suffering in any other. The whole world is a mansion of the Lord. All countries and states are mere rooms in His mansion. Never forget that the whole world is a temple of the Lord; it is His body and He resides in it!

 Sathya Sai Baba

நூறு வயது ‘ தபால் தாத்தா ‘ …!!!

ஆர்.பாலசுப்பிரமணியம்

ஆர்.பாலசுப்பிரமணியம்

தனது 100-வது வயதிலும், பார்வைக் குறைபாடு இல்லாமல் நாளிதழை, முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை படிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் கோவையைச் சேர்ந்த தபால் தாத்தா. இந்த வயதிலும், அசாதாரண விஷயங்களையும் சாதாரணமாகச் செய்து வருகிறார்.

கோவை கவுண்டம்பாளையம் பேங்கோதெருவைச் சேர்ந்தவர் ஆர்.பாலசுப்ரமணியம். தபால் அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றதால், தபால் தாத்தா என்றுதான் செல்லமாக அழைக்கப்படுகிறார்.

துருதுரு பார்வை

கடந்த 1914-ஆம் ஆண்டு, நவம்பர் 29-ஆம் தேதி பிறந்த இவர் இன்று 100-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். 100-வயது என்றால், படுத்தப் படுக்கை, வீட்டில் உள்ளவர்களை எடுத்ததெற்கெல்லாம் உதவிக்கு அழைத்து அன்பு தொல்லை கொடுப்பார் என நினைக்க வேண்டாம். வீட்டில் உள்ளவர்களைச் சிரமப்படுத்தாமல், உற்சாகத்தோடு இளைஞரைப் போல வீட்டில் வலம் வருகிறார்.

இந்து நாளிதழ் மோகம்

சென்னை அண்ணா சாலையில் உள்ள தபால் நிலையத்தில், தபால்காரராகச் சேர்ந்து கோவை ஆர்.எஸ்.புரம் தபால் நிலையத்தில் தபால் அலுவலராக, கடந்த 1973-ம் ஆண்டு 38 ஆண்டு தபால் பணி வாழ்க்கைக்கு விடைகொடுத்தவர். 10-ஆம் வயது முடிவதற்குள் கண்ணாடியுடன் வலம் வரும் சிறுவர்கள் மத்தியில், 100 வயதிலும் தபால் தாத்தா, கண்ணாடி அணியவில்லை. ஆனால், தினமும் வீட்டிற்கு வரும், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழை முதல் பக்கத்தில் இருந்து, கடைசி பக்கம் வரை உள்ள செய்திகளை முழுவதுமாகப் படிப்பதுதான் இவரது தினசரிப் பொழுதுபோக்கு..

கவலை இல்லாத மனிதர்

100 வயதில் இளமை ததும்பும் ரகசியத்தை, அவரது மூத்த மகன் ஜனார்த்தனனிடம் கேட்டபோது, ’’எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார். சாப்பாட்டு விஷயத்தில் அனைத்தையும் விரும்பி சாப்பிடுவார். தற்போதுகூட, வாரம் இருமுறை சிக்கன் சாப்பிடுகிறார். முட்டை, இனிப்பு என்றால் இப்போது கூடக் கொள்ளை பிரியம். நேரத்துக்குச் சாப்பிட்டு, நேரத்துக்குத் தூங்குவார். பிரத்தியேகமாக உடற்பயிற்சி எதுவும் செய்வதில்லை. 85 வயது வரையிலும் எங்குச் சென்றாலும் சைக்கிளில்தான் செல்வார்’’ என்றார்.

தபால் தாத்தாவிற்கு 3 மகன்கள். கொள்ளுப் பேரன் பேத்தி என்று சுற்றிலும் பலர் இருந்தாலும் அவர் விரும்புவது தனிமையைத்தான். முதுமையின் நண்பன் தனிமை என்பதை உணர்த்தும் விதமாக, நாம் கிளம்புவதற்கு விடை கொடுத்துவிட்டு, எதையோ சிந்திக்கத் தொடங்கிவிட்டார். அவருக்கு நூறாவது பிறந்த நாள் வாழ்த்து கூறிவிட்டுப் புறப்பட்டோம்.

source:::::The Hindu…Tamil

natarajan

Message For the Day…” Have Tolerance and Patience with Mutual Helping Attitude “..

Spiritual Practice (Sadhana) must be done in a disciplined and systematic manner, in an atmosphere filled with virtues. Just as fans in a large hall cool the atmosphere and provide soothing breeze to the people gathered there, so too, the fans of Truth, Right Conduct, Peace and Love (Sathya, Dharma, Shanthi,and Prema) are necessary to reduce the sweltering heat of ignorance, falsehood, injustice and indiscipline (Ajnaana, Asathya, Anyaaya and Akrama). In a world where noble conduct is being insulted and denied at every turn, peace and tolerance are the only means through which you can save yourself. This is the most important aspect that I ask you to cultivate. In every act, have tolerance and patience with a mutual helping attitude. In the family, cultivate patience and mutual respect; in the community, have righteousness and justice. 

Sathya Sai Baba

படித்ததில் பிடித்தது …. “பெருமாளை துணைக்கு அழைப்பது ஏன் ?”

புரிந்தது  …..தெளிந்தது !!!

 

 
ஒரு துறவி தன் சீடனுடன் குடிலில் அமர்ந்திருந்தார்.
ஒரு குடும்பஸ்தர் வந்தார்.
“”சுவாமி! எனக்கு ஆயிரம் கடன்கள். பெண்ணுக்கு கல்யாணம் செய்ய வழியில்லை. உடல்நிலையும் சரியில்லை. இந்த பிரச்னை தீர யோசனை கூறுங்கள்…” என்று கேட்டார்.
“”அப்பனே! இதுவிதிப்பயன். மாற்றலாகாது. பெருமாள் நாமத்தை மனதார உச்சரி; கஷ்டங்களைக் குறைக்கலாம்,” என்றார் துறவி.
வந்தவர் விரக்தியாய் கேட்டார்.
“”உங்கள் கூற்றுப்படி, விதிப்படி தான் எல்லாம் நடக்குமென்றால், பெருமாளை துணைக்கு அழைப்பானேன்! அவன் நாமத்தை
சொல்லுவானேன்!”.
குரு சிரித்தார்.
“”மகனே! பெருமாள் கிருஷ்ணாவதாரம், ராமாவதாரம் எடுத்தார். மனிதரூபத்தில் இருந்தார். அவர் நினைத்தால் எல்லாவற்றையும் மாற்றியிருக்க முடியும். ஆனால், அதர்மத்தை நடக்க விட்டதும், பெரும் துன்பப் போராட்டத்திற்குப் பின், தர்மத்தை வெல்லச் செய்ததும். விதியின் வலிமையை உணர்த்துவதற்காகத் தான்! காய்ச்சல் வந்தால், மருந்து சாப்பிட்டு அதைக் குறைப்பது போலத்தான் விதியின் பாதை. அந்தப் பாதையை மாற்ற முடியாது. ஆனால், அதன் கடுமையை குறைக்கவே கடவுளிடம் வேண்டுகிறோம், புரிகிறதா!” என்றார்.
வந்தவருக்கு நன்றாய் புரிந்தது, மனம் தெளிந்தது

 

ஒரு பணக்காரரும், பரம ஏழையும் திருப்பதி சென்றனர். வேங்கடவன் அருள்வேண்டி தரிசனம் செய்தனர்.
அது திருவிழா காலம். எனவே, வழக்கமான கூட்டத்தை விட இரண்டரை மடங்கு கூட்டம்.
தரிசனம் முடித்த அவர்கள், லட்டுக்காக வரிசையில் காத்து நின்றனர். பணக்காரருக்கு நான்கு லட்டுகள் கிடைத்தது. ஏழையால் ஒன்றே ஒன்று தான் வாங்க முடிந்தது.
அவனுக்கு மிகவும் வருத்தம். மலைப்பாதையில் திரும்பி வரும் போது, ஒரு துறவியைச் சந்தித்தான்.
“”சுவாமி! செல்வந்தர்களால் எல்லாமே வாங்க முடிகிறது. ஏழையாய் பிறந்த பாவத்தால் என்னால், ஒரு லட்டு கூட அதிகமாக வாங்க முடியவில்லை,”. அவன் பரிதாபமாக சொன்னது கேட்டு, குரு சிரித்தார். அமைதியாய் பேசினார், “”மகனே! அந்த பணக்காரனுக்கு நாலு லட்டு கிடைத்திருக்கலாம். ஆனால், அவரால் துளிக்கூட உண்ண இயலாது. அவர் சர்க்கரை வியாதிக்காரர். ஆனாலும், அவர் அவற்றை வாங்கியது ஏன் தெரியுமா! தன் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்தளிக்க..! பக்தியின் நோக்கம் என்ன தெரியுமா?
பிறருக்கு பகிர்ந்தளித்தல் தான்! அவரவருக்கு கிடைப்பதில், எவ்வளவு முடியுமோ அவ்வளவை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். அது மட்டுமல்ல! இதிலே இன்னொரு தத்துவமும் புதைந்து கிடக்கிறது.
திருப்பதி லட்டு அமிர்தம் போல் சுவையானது. இதை யாருக்காவது சிறு துண்டு கொடுத்தால் கூட, இன்னொரு துண்டு கிடைக்காதா என ஏங்க வைக்கும். இறைவனின் கருணையும் அப்படித்தான்.
அவனது கருணை மழையில் சிறுதுளியாவது கிடைக்காதா என்றுதான், ஒவ்வொரு பக்தனும் ஏங்குகிறான்.
உனக்கு கிடைத்த இந்த ஒரு லட்டில் சிறு துண்டை, நீ எடுத்துக்கொள். மீதியை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடு. ஏழுமலையான் உன் வீட்டிற்கே வந்து விடுவான்,” என்றார்.
ஏழையின் மனம் தெளிந்தது.

source ::::Dinamalar …Tamil Daily

natarajan

Message for the Day…”You are part and parcel of Universe Manifestation “…

Often you are aware that there is something behind and beyond all the fleeting fantasy; something that persists through all the successes and defeats, the tears and smiles, the mirth and moan – but you are unable to grasp it and realize that it is the same Entity that underlies the entire Universe. You are indeed one with the most distant star and the least little blade of grass – you shine as dew on the petal of the rose, you are part and parcel of all this manifestation! The scriptures teach you this truth through many a parable, and even directly through the experience of saints and mystics. Through meditation and practice of spiritual discipline, you can be aware of yourselves as all this. Hanuman may have the form of a monkey, but do not get carried away by the outer casement (Upadhi). The Lord was His very breath; every hair-end of Hanuman echoed with Lord Rama’s Name

Sathya Sai Baba

Message For The Day….”Who am I ? Where Have I come from ?…”

There are four questions that every person must interest oneself with : “Who am I?”, ”Where have I come from?”, “Where am I going?” and “How long will I remain here?”. These questions have been answered clearly in the Vedas. All spiritual inquiry begins with these questions and attempts to find answers to them. If you drop a letter in the post box without writing the ‘From’ or ‘To’ address, it will go nowhere but to the ‘dead letter office’. In fact it is a waste of time writing that letter, is it not? So too, if you do not know the purpose of your life in this world, you will get caught in the cycle of birth and death, and will never reach your destination. To find answers to these key questions, you must begin enquiry about the Self. To get the answers, you must practice spiritual discipline. Then, you will find that the answers become part of your daily living experiences!  

Sathya Sai Baba