அமெரிக்காவில் அனாதையாக இருக்கும் விநாயகர்…

‘உங்களுக்கு மிகவும் பிடித்த கடவுள் யார்?’ என, ஒரு போட்டி நடத்தினால், கண்டிப்பாக பெரும்பான்மை ஓட்டு வித்தியாசத்தில் விநாயகர் தான் வெற்றி பெறுவார்.முட்டு சந்து முதல் அரச மரத்தடி வரை, ஆரம்ப பள்ளி முதல் ஐ.ஐ.டி., வரை, சண்முகன் வள்ளியை மணக்க உதவியது முதல் நவீன காதல் கதைகள் வரை, எந்த வேலை என்றாலும், அனைவரும் முதலில் வணங்கி, விண்ணப்பம் செய்வது, பிள்ளையாரிடம் தான்.இன்று ஒவ்வொரு வீட்டிலும் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, வணங்கப்படும் இவர், ஓரிடத்தில் மட்டும் அனாதையாக நிற்கிறார்.
-எங்கே தெரியுமா?அமெரிக்காவில்…
ஓகியோ மாகாணத்தில் உள்ள டாலிடோ நகரில் உள்ள அருங்காட்சியகத்தில்.தமிழகத்தின் அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த, ஸ்ரீபுரந்தான் ஊரில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான, பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது.
அந்த கோவிலில் இருந்து, 2005ம் ஆண்டு, சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் கும்பலால் திருடப்பட்ட அந்த விநாயகர் சிலை, 1.5 கோடி ரூபாய்க்கு வேறொருவருக்கு விற்கப்பட்டது.அதிர்ஷ்டவசமாக, புதுச்சேரி பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் நிறுவனம், 1994 நவம்பர் மாதத்தில், பிரகதீஸ்வரர் கோவிலில் இருந்த செப்புத் திருமேனிகளை, புகைப்படங்களாக ஆவணப்படுத்தி வைத்திருந்தது.
அயல்நாடுகளில் அருங்காட்சியகங்களில் உள்ள தமிழர் கலைச்செல்வங்கள் பற்றிய தகவல்கள், வரலாறுகளை திரட்டி வரும் இணைய ஆர்வலர்களான நாங்கள், உடனே, புதுச்சேரி, பிரெஞ்சு இன்ஸ்டிடியூட்டிற்கு சென்று, இதுதொடர்பான புகைப்படங்களை முறையாகப் பெற்றுக் கொண்டோம்.பொதுவாக, அந்த கலை பொருட்கள், எந்த ஆண்டு வாங்கப்பட்டன என்ற விவரம் மட்டுமே, சம்பந்தப்பட்ட அருங்காட்சியகங்களில் இருந்து கிடைக்கும்.
ஸ்ரீபுரந்தான் விநாயகர் கதையிலும் அதுதான் நடந்தது.எனினும் பல தேடல்களுக்கு பின், டாலிடோ அருங்காட்சியகத்தில் உள்ள விநாயகர் சிலை, பார்ப்பதற்கு திருடு போன சிலை போலவே இருப்பது தெரிந்தது.அமெரிக்காவில் வசிக்கும், முகநூல் நண்பர் ஒருவரிடம், ”ஒருமுறை அங்கே நேரில் சென்று படம் எடுத்து தர இயலுமா?” என்று கேட்டேன். அவரும் மெனக்கெட்டு அங்கு சென்று, நல்ல படங்களை எடுத்து அனுப்பினார்.
இரண்டு படங்களையும் ஒப்பிட்டபோது, ஒரு முக்கிய துப்பு கிடைத்தது. பிள்ளையாரின் தும்பிக்கையில், ஒரு சிறிய மரு, இருப்பது, இரண்டு படங்கள் மூலம் உறுதியானது. இந்த சான்று, சிலை திருட்டை உறுதிசெய்தது. கடந்த ஆண்டு, ஜூலை 17ம் தேதி, ‘சிலை திருட்டு பொருளாக இருக்கலாம்; மேலும் விவரங்கள் அனுப்பி உதவ வேண்டுகிறோம்’ என, அஞ்சல் அனுப்பினோம்.
அஞ்சலில், சென்னை காவல் துறையின், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இணையதளத்தில், 2009ம் ஆண்டில் வெளியிடப்பட்ட படங்கள், பிரெஞ்சு இன்ஸ்டிடியூட்டின் படங்கள், சிலைகளின் ஒப்பீடு என்று அனைத்து ஆதாரங்களையும் இணைத்து இருந்தோம். அதன் நகலை, காவல்துறைக்கும் அனுப்பி வைத்தோம். ‘இனிமேல், விநாயகர், வீடு திரும்பி விடுவார்’ என, நம்பிக்கையுடன் இருந்தோம்.
ஆனால், அதன்பின்,அருங்காட்சியகத்திடம் இருந்த எந்த பதிலும் இல்லை.காவல்துறையும் ஒன்றும் செய்ய வில்லை. தொடர்ந்து ஏழு மாதங்கள் அவர்களை விடாமல் ‘தொந்தரவு’ செய்தவுடன்,- அருங்காட்சியகம், அதன் இணையதளத்தில், இந்த ஆண்டு பிப்., மாதத்தில், இரு கடிதங்களை வெளியிட்டது.
நாங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தவுடனே, அருங்காட்சியகம், இதுகுறித்து இந்திய துாதரகத்திற்கு கடிதம் அனுப்பியது. ஆனால் அங்கிருந்து பதில் எதுவும் வரவில்லை.அதனால், அருங்காட்சியகம் தான் அனுப்பிய கடித பிரதி, இந்திய துாதருக்கு அனுப்பிய கடித பிரதி இரண்டையும், பகிரங்கமாக இணையதளத்தில் வெளியிட்டு விட்டது.
அதாவது, ‘நாங்கள் முயற்சி செய்தோம். உங்கள் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் இல்லை’ என்பதுதான் அதற்கு அர்த்தம்.இந்த சிலை கடத்தில் வழக்கில், போதுமான ஆவணங்கள் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். ஆனாலும், இந்திய அரசு இதில், தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றே நினைக்கிறோம்.
இது மட்டும் ஒரு சம்பவம் இல்லை. இதுபோன்று, இந்திய கலைப்பொருட்கள், இந்திய மண்ணில் இருந்து திருடப்பட்டு, உலகெங்கிலும், பல கோடி ரூபாய்களுக்கு ஏலம் விடப்படுகின்றன.
சிலை கடத்தல் சம்பவங்களும், கடத்தப்பட்டவற்றை மீட்காமல் இருப்பதும், நமது கலைக்கும், ஆன்மிக உணர்வுகளுக்கும், நாமும் நமது அரசும் அளிக்கும் அலட்சிய பார்வையை, புறக்கணிப்பைத் தான், சர்வதேச அளவில், எடுத்துக்காட்டுகிறது.
எங்களை போன்ற ஒரு சில ஆர்வலர்களின் பணியை, அயல்நாட்டவர் எள்ளிநகையாடுகின்றனர். நாங்கள் அதற்காக வருத்தப்படவில்லை.கலைப்பொருட்கள் அவை சிலையாகவோ, மர சிற்பமாகவோ, ஓவியமாகவே, வேலைப்பாடு மிக்க பொருளாகவோ இருக்கலாம் நம் குலதனம்.
டாலிடோ அருங்காட்சியகத்தில் உள்ள, ஸ்ரீபுரந்தான் விநாயகர், அடுத்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்குள், நாடு திரும்ப வேண்டும் என்றால், தமிழக மக்கள் ஒருங்கிணைந்து, இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.இனியவாது அவரவர் பகுதிகளில் உள்ள கோவில்களை, பாதுகாக்க முன்வர வேண்டும். அதைப் பார்த்து அரசு, தானாகவே தனது பணியை செய்ய முன்வரும்.இதற்கிடையில்…எங்கள் பணியும் தொடரும்!
– எஸ்.விஜய்குமார் -(கட்டுரையாளர், தொல்லியல் ஆர்வலர்; சிங்கப்பூரில், தனியார் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.)

Source::::dinamalar.com

Natarajan

A Potter’s Prayer to Pillaiyar….

From Clay to Idol: Giving finishing touches. Photo: S. James
From Clay to Idol: Giving finishing touches. Photo: S. James

Clay-idol makers and the tradition of the eco-friendly pacha-mann pillayar are on the wane

Kasturi amma’s Ganeshas are simple, earthy, eco-friendly and hand-made with love and bhakti. A month before Ganesh Chaturthi, 80-year-old Kasturi observesviratham and starts collecting mud and sand for making the Ganesha idols. “The clay is a mixture of half-a-dozen ingredients such as elephant poop, sieved river sand, karambai mann and sometimes hay. It takes a fortnight to get ready,” says Kasturi. Once the clay gets mixed into a homogenous paste, she sits day and night making the murtis. With her deft hands, Kasturi moulds, rolls and shapes the clay into two-feet-tall little Ganeshas. They all look plump, cute and perfect. “It’s difficult to get the trunk,” says Kasturi while swirling her fingers over a lump of clay to make the trunk. She quietly murmurs a prayer and closes her eyes in VENERATION and the trunk comes out just right. For over 40 years after the death of her potter husband, Kasturi and her son eldest son Srinivasan have kept tradition alive. Tucked inside a narrow lane off the Arapalayam road is their small house stacked with mud pots.

“Earlier we used to sell hundreds of idols. There were over 300 potter families in Arapalayam. The demand used to be so high that most times, we fell short of hands to cater to orders,” recalls Srinivasan. “This year, we have got orders for just 10 idols.” Once, it was the tradition to worship a pacha-mann pillayar which was later immersed into ponds or lakes. As the water bodies have dried up, the takers for the eco-friendly pure-clay idols have come down in the past few years. Potters also feel that the invasion of plaster-of-paris has taken away the charm of clay idols.

Idols made of clay are of two kinds – one in which the idol is baked and the other which is left to dry in the sun. While the baked idols are painted and used as a showcase item, the kaccha murtis are traditionally kept in pujas. In certain techniques, potters also mix hay dust instead of elephant dung and the idols made like that are called Sandu pillayar. “Only if the customer wants, we paint it with watercolours. Else, our idols are mostly in the colour of the earth,” says Kasturi. “The authorities call for eco-friendly idols every year, but sadly people only buy those big chemical-paint ones.”

The making of a two-feet-tall pacha-mann pillayar can take a week. It’s hand-built from the bottom without any mould. Kasturi finishes making the feet and legs first and leaves it for drying for a day or two. Then, she starts making the tummy and the body of the idol and proceeds step-wise. “Idol making is sacred. It involves a number of rituals and strict adherence to purity,” explains Mahalingam, another potter. “Only on the early morning before Chaturthi, the eyes of the idol are made.”

Most of Kasturi’s orders come from the kids in the area, who fondly call her paati. Groups of kids get together, pool in their pocket MONEY to buy a small idol. “They usually ask for discounts and I give idols to them even at half the price,” says Kasturi, who sells the two-feet idols for Rs.200 and bigger ones for Rs.300 or Rs.400. Srinivasan has also made a six-feet idol for this year, which he has priced at Rs.5,000.

Clay-idol makers also rue the lack of mud and sand. Earlier, they used to collect sand from the Vaigai and the karambai mann was easily available in the kanmois surrounding Arapalayam. Half of those kanmois have vanished under encroachments and the others don’t have any mud left in their beds. “Now we buy clay from Thurvariman and Kochadai. The costs have gone up. It’s not a lucrative business. Yet I do it to keep up the tradition. I consider myself gifted to be able to make such beautiful murtis of the Lord,” says Kasturi. “I only pray to Ganesha that we get more rains and our natural resources remain plentiful.”

Keywords: Clay-idol makersGanesha idolsGanesh Chaturthieco-friendly idols,

Source:::The Hindu

Natarajan

Message For the Day…” Ganapathy means Lord of Intellect and of Wisdom “

What does the term Ganapathi signify? Ga means intellect (Buddhi). Na means Wisdom (Vijnaana). Ganapathi means the Lord of the intellect and of wisdom. He is also the Lord of all Ganas (spiritual entities). Ganas also symbolise the senses. Ganapathi is thus the Lord of the senses. Hence on this Ganapathi festival, you must purify your mind and OFFER it to Him. It is only when one is pure that intelligence blossoms. It is only with the blossoming of intelligence that Siddhi (the spiritual goal) is attained. Vinayaka presides over Buddhi and Siddhi (the intellect and spiritual realisation). Siddhi signifies the realisation of Wisdom. That is why the scriptures say that Siddhi and Buddhi are the consorts of Vinayaka, and Kshema (well being) and Ananda (bliss) are His two sons.

Sathya Sai Baba

“வினை தீர்ப்பான் விநாயகப் பெருமான் …”

உயிர் நண்பனைப் போல வினைகளைக் களைபவன் விநாயகன் என்பதால்தான், இல்லம், சாலை, நடைபாதை என்று எங்கெங்கு காணினும் விநாயகர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

மனதில் எக்கணம் வேண்டுதல் தோன்றுகிறதோ அக்கணம் பார்வையைச் சுழற்றித் தேடினால் சுற்றுப்புறத்தில் படமாகவோ, சிலையாகவோ கண்ணில் பட்டுவிடுவார் விநாயகர்.

விநாயகர் எப்படித் தோன்றினார்?

பார்வதி தேவி சுனையொன்றில் தனிமையில் நீராட விரும்பினார். அப்போது அச்சுனைப் பகுதியில் யாரும் உள்ளே நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக தனக்குக் காவலாக ஒருவரை நியமிக்க எண்ணினார்.

தனது உடலில் பூசிய மஞ்சளைத் திரட்டி, ஓர் உருவத்தை உண்டாக்கினார். ஆயிரம் கோடி சூரியப் பிரகாசத்துடன் தேவ உருவம் பெற்றிருந்த அந்தக் குழந்தை, அன்னையின் சக்தியைப் பெற்று மிகுந்த பலவானாக இருந்தது.

பார்வதியைக் காண சிவன் வந்தபோது, குழந்தை வழி விட மறுத்தது. இதர தேவர்கள் போரிடவே தொடங்கிவிட்டனர். ஆனாலும் சிவ பார்வதி அம்சமான அக்குழந்தையை அவர்களால் வெல்ல முடியவில்லை. புதிய பலத்துடன் இருக்கும் இக்குழந்தை அசுரனோ என்று எண்ணிய சிவனும், அதன் தலையைத் துண்டித்தார்.

இதனைக் கண்ட பார்வதி கதற, வடக்கே தலை வைத்துப் படுத்திருந்த யானையின் தலையைக் கொண்டுவந்து பொருத்தினார் சிவன். அக்குழந்தை பலவானாக இருந்ததால், தன் கணங்களுக்குத் தலைமை ஏற்கச் செய்தார். கணங்களின் அதிபதியே கணபதி.

சக்கரத்தைப் பறித்த விநாயகர்

கைலாயத்தில் இக்குழந்தையைக் காண வந்தார் பார்வதி தேவியின் சகோதரர் மகாவிஷ்ணு. அப்போது கைலாயத்தின் வெளி வாயிலின் அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தைக்குத் தானும் விளையாட்டுக் காட்ட எண்ணித் தனது சக்கரத்தை அக்குழந்தையிடம் கொண்டு காட்டினார் தாய் மாமனான விஷ்ணு.

விநாயகரோ குழந்தைகளுக்கே உரிய வேகத்துடன் அதைப் பறித்துக் கொண்டுவிட்டார். குழந்தை கையில், சக்கரம் காயத்தை ஏற்படுத்திவிடப் போகிறதே என்று விளையாட்டுக் காட்டி அதைத் திரும்பப் பெற முயன்றாராம் விஷ்ணு. அதற்காகத் தனது தலையின் நெற்றிப் பகுதியில் கைகளால் குட்டிக் கொண்டாராம்.

கல கலவென்று சிரித்த குழந்தை சக்கரத்தை வாயில் போட்டுக்கொண்டுவிட்டது. பதறிய தாய் மாமன் மேலும் குழந்தையைச் சிரிக்க வைத்து, சக்கரத்தை உமிழச் செய்யும் முயற்சியாக, இரு காதுகளையும் இரு கைகளால் பிடித்துக்கொண்டு, உட்கார்ந்து எழுந்தாராம்.

இதனைக் கண்டு குழந்தை சிரிக்க, வாயில் இருந்த சக்கரம் துள்ளிக் கீழே விழுந்தது. அச்சக்கரத்தைக் கைப்பற்றிக் கொண்ட விஷ்ணுவும் யானை முகம் கொண்ட குழந்தையின் கன்னத்தை வலி நீக்கும் விதமாகத் தடவிக் கொடுத்தார். தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டால் விநாயகர் மகிழ்ந்து வேண்டு வனவெல்லாம் அருளுவார் என்பதைச் சொல்லும் கதை இது.

விநாயகரின் திருநாமங்கள்

பல பெயர்களைக் கொண்ட விநாயகருக்கு, அந்த ஒவ்வொரு பெயருக்கும் கதைகள் உண்டு. இப்பெயர்களை உச்சரித்தலே மகா மந்திரமாகச் செயல்படும்.

உச்சிட்ட கணபதி, உத்தண்ட கணபதி, ஊர்த்துவ கணபதி, ஏகதந்த கணபதி, ஏகாட்சர கணபதி, ஏரம்ப கணபதி, சக்தி கணபதி, சங்கடஹர கணபதி, சிங்க கணபதி, சித்தி கணபதி, சிருஷ்டி கணபதி, தருண கணபதி, திரயாக்ஷர கணபதி, துண்டி கணபதி, துர்க்கா கணபதி, துவிமுக கணபதி, துவிஜ கணபதி, நிருத்த கணபதி, பக்தி கணபதி, பால கணபதி, மஹா கணபதி, மும்முக கணபதி, யோக கணபதி, ரணமோசன கணபதி, லட்சுமி கணபதி, வர கணபதி, விக்ன கணபதி, விஜய கணபதி, வீர கணபதி, ஹரித்திரா கணபதி, க்ஷிப்ர கணபதி, க்ஷிப்ரபிரசாத கணபதி.

Keywords: விநாயக சதுர்த்தி, விநாயகர் எப்படித் தோன்றினார், கதை, ஆன்மிகம், விநாயகரின் திருநாமங்கள்,

Source::::The Hindu….Tamil

Natarajan

விநாயகப் பெருமானின் 108 போற்றி ….

விநாயகப் பெருமானின் 108 போற்றி

விநாயக சதுர்த்தியன்று சொல்ல வேண்டிய விநாயகப் பெருமானின் 108 போற்றி.

விநாயகர் தியான ஸ்லோகம்
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் |
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே ||

ஓம் விநாயகனே போற்றி
ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி

ஓம் அரச மரத்தடி அமர்ந்தவனே போற்றி
ஓம் அகந்தை அளிப்பவனே போற்றி
ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி
ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி
ஓம் ஆனை முகத்தானே போற்றி
ஓம் ஆதி மூலமே போற்றி
ஓம் ஆனந்த உருவே போற்றி
ஓம் இமவான் சந்ததியே போற்றி
ஓம் இடரைக் களைவோனே போற்றி
ஓம் ஈசன் மகனே போற்றி
ஓம் ஈகை உருவே போற்றி
ஓம் உண்மை வடிவே போற்றி
ஓம் உலக நாயகனே போற்றி
ஓம் ஊறும் களிப்பே போற்றி
ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி
ஓம் எளியவனே போற்றி
ஓம் எந்தையே போற்றி
ஓம் எங்கும் இருப்பவனே போற்றி
ஓம் எருக்கு அணிந்தவனே போற்றி
ஓம் ஏழைப் பங்காளனே போற்றி
ஓம் ஏற்றம் அளிப்பவனே போற்றி
ஓம் ஐயனே போற்றி
ஓம் ஐங்கரனே போற்றி
ஓம் ஒப்பில்லாதவனே போற்றி
ஓம் ஒதுக்க முடியாதவனே போற்றி
ஓம் ஒளிமய உருவே போற்றி
ஓம் ஔவைக் கருளியவனே போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கரணத்தில் மகிழ்பவனே போற்றி
ஓம் கணேசனே போற்றி
ஓம் கணநாயகனே போற்றி
ஓம் கண்ணிற்படுபவனே போற்றி
ஓம் கலியுக நாதனே போற்றி
ஓம் கற்பகத் தருவே போற்றி
ஓம் கந்தனுக் குதவியவனே போற்றி
ஓம் கிருபாநிதியே போற்றி
ஓம் கீர்த்தி அளிப்பவனே போற்றி
ஓம் குட்டில் மகிழ்பவனே போற்றி
ஓம் குறைகள் தீர்ப்பவனே போற்றி
ஓம் குணநிதியே போற்றி
ஓம் குற்றம் பொறுப்போனே போற்றி
ஓம் கூவிட வருவோனே போற்றி
ஓம் கூத்தன் மகனே போற்றி
ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி
ஓம் கொழுக்கட்டைப் பிரியனே போற்றி
ஓம் கோனே போற்றி
ஓம் கோவிந்தன் மருகனே போற்றி
ஓம் சடுதியில் வருபவனே போற்றி
ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
ஓம் சங்கடகரனே போற்றி
ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி
ஓம் சிறிய கண்ணோனே போற்றி
ஓம் சித்தம் கவர்ந்தோனே போற்றி
ஓம் சுருதிப் பொருளே போற்றி
ஓம் சுந்தரவடிவே போற்றி
ஓம் ஞானம் காப்பவனே போற்றி
ஓம் ஞான முதல்வனே போற்றி
ஓம் தந்தம் உடைந்தோனே போற்றி
ஓம் தந்தத்தாற் எழுதியவனே போற்றி
ஓம் தும்பிக்கை உடையாய் போற்றி
ஓம் துயர் துடைப்பவனே போற்றி
ஓம் தெருவெல்லாம் காப்பவனே போற்றி
ஓம் தேவாதி தேவனே போற்றி
ஓம் தொந்தி விநாயகனே போற்றி
ஓம் தோணியே போற்றி
ஓம் தோன்றலே போற்றி
ஓம் நம்பியே போற்றி
ஓம் நாதனே போற்றி
ஓம் நீறணிந்தவனே போற்றி
ஓம் நீர்க் கரை அமர்ந்தவனே போற்றி
ஓம் பழத்தை வென்றவனே போற்றி
ஓம் பாரதம் எழுதியவனே போற்றி
ஓம் பரம்பொருளே போற்றி
ஓம் பரிபூரணனே போற்றி
ஓம் பிரணவமே போற்றி
ஓம் பிரம்மச்சாரியே போற்றி
ஓம் பிள்ளையாரே போற்றி
ஓம் பிள்ளையார் பட்டியானே போற்றி
ஓம் பிறவிப் பிணி தீர்ப்பவனே போற்றி
ஓம் பிள்ளைகளை ஈர்ப்பவனே போற்றி
ஓம் புதுவை வடிவே போற்றி
ஓம் புண்ணியனே போற்றி
ஓம் பெரியவனே போற்றி
ஓம் பெரிய உடலோனே போற்றி
ஓம் பேரருளாளனே போற்றி
ஓம் பேதம் அறுப்பவனே போற்றி
ஓம் மஞ்சளில் இருப்பவனே போற்றி
ஓம் மகிமையளிப்பவனே போற்றி
ஓம் மகா கணபதியே போற்றி
ஓம் மகேசுவரனே போற்றி
ஓம் முக்குறுணி விநாயகனே போற்றி
ஓம் முதலில் வணங்கப்படுவோனே போற்றி
ஓம் முறக்காதோனே போற்றி
ஓம் முழுமுதற் கடவுளே போற்றி
ஓம் முக்கண் மகனே போற்றி
ஓம் முக்காலம் அறிந்தோனே போற்றி
ஓம் மூத்தோனே போற்றி
ஓம் மூஞ்சுறு வாகனனே போற்றி
ஓம் வல்லப கணபதியே போற்றி
ஓம் வரம் தரும் நாயகனே போற்றி
ஓம் விக்னேஸ்வரனே போற்றி
ஓம் வியாசன் சேவகனே போற்றி
ஓம் விடலைக்காய் ஏற்பவனே போற்றி
ஓம் வெற்றியளிப்பவனே போற்றி

Source::::Dinamani.com

Natarajan

” பிள்ளையார் சுழி…” !!!

periyava_pillayar_pillar

 

தை எழுத ஆரம்பித்தாலும் முதலிலே பிள்ளையார் சுழி போட்டுவிட்டுத்தான் ஆரம்பிக்கிறோம். பெரிய காவியமாகத்தான் இருக்கவேணும் என்றில்லை; ஒரு போஸ்ட் கார்டானாலும் ஸரி, கடை ஸாமான் லிஸ்டானாலும் ஸரி, முதலில் பிள்ளையார் சுழி போட்டு விட்டுத்தான் எழுத ஆரம்பிக்கிறோம். எழுதுவது மட்டுமில்லாமல் எந்தக் காரியமானாலும் ஆரம்பிக்கிற போது அது விக்நமில்லாமல் பூர்த்தியாவதற்கு மஹாகணபதியைக் கொண்டு வந்துதான் ஆகணும். அவரைக் ஸ்மரிக்காமல் எந்தக் காரியமுமே இல்லையானாலும், இந்த எழுத்துக் காரியத்தில் அவரை ஸ்மரிக்கிறோம் என்பது Written proof -ஆகவே (எழுத்து மூல நிரூபணமாகவே) பிள்ளையார் சுழியில் தெரிகிறது.

பின்னாடி நாம் எழுதுகிற விஷயம் ‘சுழித்து’ப் போகாமலிருப்பதற்காக முன்னாடி பிள்ளையார் சுழி போட்டு விடுகிறோம்.

பிள்ளையார் சுழி போடாமல் ‘ஓம்’போடுகிறவர்களும் கிரந்தம், தமிழ் இரண்டிலுமே அந்த ஓமுக்கும் சுழித்தே ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. அதுமட்டுமில்லை, இந்த ப்ரணவ ஸ்வரூபமும் பிள்ளையார்தானே?

சுழி என்பது வளைசல்; ‘வக்ரம்’ என்பார்கள். பிள்ளையாரின் தும்பிக்கை நுனி வளைந்து சுருட்டிக் கொண்டிருக்கிறது. அதனால் ‘வக்ரதுண்டர்’என்றே அவருக்கு ஒரு பேர். பிள்ளையார் சுழி போடுவதில் பாதியாக இருக்கிற வளைசல் பூர்ணமாகிவிட்டால் முழு வட்டம். பூலோகமும், பல லோகங்களும், நக்ஷத்ர மண்டலங்கள் அடங்கியுள்ள பிரம்மாண்டமும் எல்லாமே வட்டமானவைதான். ‘அண்டம்’என்றாலே முட்டை என்றுதான் அர்த்தம். முட்டை வட்ட வடிவந்தானே?

இந்தப் பூர்ணரூபத்தையே ஸைஃபருக்கும் சொல்வதுதான் ஆச்சரியம்! ‘பரீ¬க்ஷயில் கோழி முட்டை’என்கிறோம். ‘பூர்ணமும் பிள்ளையார்தான், சூன்யமும் பிள்ளையார்தான். உள்ளது அல்லது எல்லாம் பரமாத்மாதான்’என்கிற மஹா தத்துவத்தையே சுழி காட்டுகிறது. காரியத்தை ஸஃபைர் பண்ணிக்கொண்டு வருகிறவனை, ”என்னடா சுழி!”என்று ப்ரக்ருதத்திலும் (நடைமுறையிலும்) சொல்கிறோம். கையிலிருக்கிற மோதகத்தில் தித்திப்புப் பூர்ணத்தை வைத்துக்கொண்டு தன்னுடைய பூர்ணத்வத்தை ‘டெமான்ஸ்ட்ரேட்’பண்ணும் பிள்ளையாருக்கே சுழி போடுகிறோம். இந்தச் சுழி மற்றச் சுழியையெல்லாம் முழுசாகப் பண்ணிவிடுவது.

வளைசலான கொம்போடு ஆரம்பிக்கிற பிள்ளையார் சுழி, கொஞ்சம்கூட வளையாத நேர்கோட்டோடு முடிகிறது. பிள்ளையார் பூர்ணம், சூன்யம் இரண்மாக ஆனாற்போலவே வக்ரமானதும் அவர்தான், ஆர்ஜவமானதும் (நேரானதும்) அவர்தான் என்பது தாத்பரியம். வக்ர குணத்துக்கு நேரெதிரானதை ஆர்ஜவம் என்பார்கள். தமிழில் இதைத்தான் நேர்மை என்பது. இங்கிலீஷிலும் straightness, straight- forward என்கிறார்கள். குணம் குணஹீனம் எல்லாம் ஒரே நிர்குண பரமாத்மாவின் வேஷங்கள்தான்.

‘உ’என்பது ப்ரணவத்தின் இரண்டாவதான நடு அக்ஷரம். அ-உ-ம என்ற மூன்றும் சேர்ந்தே ‘ஓம்’காரமான ப்ரணவம். விஷயம் தெரிந்தவர்கள் இதை இங்கிலீஷில் Om என்று எழுதாமல் Aum என்றே எழுதுவார்கள். ‘அ’என்பது ஸ்ருஷ்டி;பிரம்மா. உ என்பது பரிபாலனம்; விஷ்ணு. ம ஸம்ஹாரம்;ஈஸ்வரன். த்ரிமூர்த்திகளும் தோன்றியது ஏக பராசக்தியால்தான். அதனால் அவள் ப்ரணவ ஸ்வரூபிணி. ஆனாலும் ஓமை தேவீ ப்ரணவம் என்று சொல்வதில்லை. ‘உமா’ என்பதே தேவீ ப்ரணவம் என்பார்கள். அ-உ-ம என்ற சப்தங்களே மாறி ‘உமா’ வில் உ-ம-அ எனற இருக்கின்றன அல்லவா?ஓமில் ஸ்ருஷ்டி பீஜமான ‘அ’ முதல் எழத்தாயிருக்க, ‘உமா’ விலோ ஸ்திதி (பரிபாலன) பீஜமான ‘உ’என்பது முதல் எழுத்தாயிருப்பதால்தான், அன்போடு ரக்ஷித்து, காத்து, பரிபாலனம் பண்ணும் அம்பாளின் ப்ரணவம் ‘உ’ வில்தான் ஆரம்பிக்க வேண்டுமென்று காரணம் சொல்லி, இதனாலேயே ‘உமா’என்பதை அம்பாளுடைய ப்ரணவமாகக் கூறுகிறார்கள்.

அ-உ-மவில் ஹ்ருதயம் மாதிரி நடுவேயிருப்பது ‘உ’அதுவே கருணாமயமாகக் காப்பாற்றுகிற தேவீ ப்ரணவத்தில் ப்ரதம ஸ்தானத்திலிருக்கிறது. ப்ரணவ ஸ்வரூபப் பிள்ளையார் ‘அ’வும் ‘ம’வும் சேராமல் இந்த ‘உ’காரமாக மட்டுமே பிள்ளையார் சுழியில் இருப்பதைப் பார்க்கும்போது ஒன்று தோன்றுகிறது. அதாவது அவர் ”தாயைப் போலப் பிள்ளை”மட்டுமில்லை;தாயாருக்கும் ஒரு படி மேலே என்று தோன்றுகிறது. எப்படி?அவளும் ரக்ஷிக்கிற ‘உ’வுக்குப் பின்னாடியாவது ஸம்ஹார ‘ம’ஸ்ருஷ்டி ‘அ’ இவற்றையும் வைத்தக் கொண்டிருக்கிறாள். ஆனால் பிள்ளையோ எப்போது பார்த்தாலும் எல்லாரையும் ரக்ஷிப்பது தவிர வேறு ஜோலியே வைத்துக்கொள்ளாத பூர்ண கருணாமூர்த்தியாக இருந்துகொண்டு ‘உ’ ஒன்றோடேயே நின்றுவிடுகிறார்.

ப்ரணவத்தில் ‘உ’ விஷ்ணுவின் ரூபம். உமாவும் விஷ்ணு ரூபிணியாக, நாராயண ஸஹோதரியாக, ‘விஷ்ணு மாயா விலாஸினி’யாக, ‘நாராயணி’ என்றே பெயர் படைத்தவளாயிருக்கிறாள். பிள்ளையாரைப்பற்றி ஸகலரும், ஸகல கார்ய ஆரம்பத்திலும் சொல்லும் ஸ்லோகத்திலும் ”சுக்லாம்பரதரம் விஷ்ணும்” என்றே வருகிறது. (இங்கே விஷ்ணு என்றால் ஸர்வ வியாபகமானவர் என்று அர்த்தம்) ‘உ’ என்பது சிவ-சக்தி புத்ரனை விஷ்ணுவோடும் ஸம்பந்தப்படுத்தி, சைவ வைஷ்ணவத்தை ஸமரஸம் பண்ணி விடுகிறது!

வளைசலும் நேர்கோடுமாக இருக்கிற பிள்ளையார் சுழியில் நிறையத் தத்வார்த்தம் இருக்கிறது. சக்ராகாரமாக எந்த ஒன்று சுற்றினாலும் அதற்கு மத்தியில் அதற்கு ஆதாரமாக, அச்சாக ( axis- ஆக) நேரான ( straight- ஆன) ஒன்று இருந்தாக வேண்டும். விஷ்ணு தன் விரலையே நேராக நிமிர்த்திக்கொண்டு அதிலேதான் சக்ராயுதத்தைக் கோத்துக் கொண்டு சுற்றுகிறதாகவே விக்ரஹங்களில் காட்டியிருக்கும். சுற்றச் சுற்றப் பொறிப் பொறியாகக் கொட்டுகிற கார்த்திகை வாணமானாலும் ஸரி (இது ஒளி) – விரலிலே மாட்டிக்கொண்டு சுற்றிச் சுற்றி டபடபவென்று அடிக்கிற கிரிச்சட்டியானாலும் ஸரி (இது ஒலி) – இதுகளின் வட்டமான சுழற்சிகளுக்கு ஆதாரமாகக் கையோ, குச்சியோ எதுவோ ஒன்று நேர்கோடாக இருக்க வேண்டியிருக்கிறது. யுனிவர்ஸில் லோகங்களெல்லாம் ஸர்குலராகத்தான் சுற்றிக்கொண்டிருக்கின்றன என்கிறபோது இவற்றுக்கும்கூட straight line-ஆக ஒரு ஆதார axis நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் energy (சக்தி) ரூபத்தில் இருக்கத்தான் வேண்டும். வட்டமாகச் சுற்றுகிற ஸகலப் பிரபஞ்சத்தையும் அதற்கு ஆதார சக்தியான கோட்டையும் சேர்த்துத்தான் பிள்ளையார் சுழியில் வட்டமாகவும் நேர்கோட்டு பாகமாகவும் போடுகிறோம்.

எங்கேயோ படித்த, அல்லது கேட்ட, ஞாபகம், எனர்ஜி உண்டாகிறதே பிள்ளையார் சுழி ரூபத்தில்தான் என்று. தாரை கொட்டி அதிலிருந்து எலெக்ட்ரிஸிடி எடுக்கிறபோது ரொடேஷனிலிருந்து (வட்டத்திலிருந்து) நேர்கோடாகத்தான் மின்ஸாரம் புறப்படுகிறதென்று எடுத்துக்காட்டியிருந்தது. பிள்ளையார் சுழியில் கொம்பு தான் ரொடேஷன்;கோடு அதிலிருந்து சக்தி உத்பவம். இந்த இரண்டையும் சிவ-சக்தி ஸ்வரூபமான நாத-பிந்துக்களாகக்கூடச் சொல்லிக்கொண்டு போகலாம். அதெல்லாம் ஸ¨க்ஷ்மமான விஷயம்.

ஆரம்பித்த இடத்துக்கே வந்து முடிந்துவிடுகிற வட்டம் ஏகமான பிரம்மத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம். வட்டத்தில் ஆரம்பித்து அரை வட்டத்துக்கு அப்புறம் நேர்கோடாகிற பிள்ளையார் சுழி, ஏகமான பிரம்மத்தை ஸங்கேதமாகக் காட்டிவிட்டு அதிலிருந்து அநேகமான ஸ்ருஷ்டி தோன்றினதையும் சேர்த்துத் தெரிவிக்கிறது என்று சொல்லலாம். பிரம்மமும் பூர்ணம். பிரபஞ்சமும் பூர்ணம். பிரம்ம பூர்ணத்திலிருந்து பிரபஞ்ச பூர்ணம் உண்டாயிற்று என்று உபநிஷத்தில் சாந்தி மந்திரம் சொல்கிறோம். ஆரம்ப ஸ்வாமியின் அடையாளமாக எதன் ஆரம்பத்திலும் போடும் பிள்ளையார் சுழி, பிரம்ம பூர்ணத்தை வளைசல் கொம்பாலும், பிரபஞ்ச பூர்ணத்தை நேர் கோட்டாலும் காட்டி, முதலில் கொம்பு அப்புறம் கோடு என்பதால் பிரம்மத்திலிருந்துதான் பிரபஞ்சம் உண்டாச்சு என்றும் தெரிவிக்கிறது.

கொம்பு, கோடு என்று இரண்டு வார்த்தைகள் சொன்னேன். வேடிக்கையாக இரண்டுமே பிள்ளையாரின் தந்தத்துக்குப் பேராயிருக்கின்றன. ‘ஏக தந்தர்’ என்பதை ‘ஒற்றைக் கொம்பன்’ என்பார்கள். ”பெரும்பாரக்கோடும்”, ”கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே” என்றெல்லாம் அவ்வைப் பாட்டி சொல்லும்போது ‘கோடு’ என்றாலும் தந்தந்தான். எப்பொழுதும் குழந்தையாயிருக்கிற ஸ்வாமியை வேண்டிக்கொண்டதாலேயே குழந்தைப் பிராயத்தில் கிழவியாகிவிட்ட அவ்வை சொன்ன ‘கொடுவினை’என்பதுதான் ஜன்மாந்தர பாபங்களான பிராரப்த கர்மா. அந்தக் கர்மா எப்படியெப்படி நம்மைப் பழிவாங்க வேண்டும் என்று பிரம்மா நம் தலையில் எழுதியிருக்கிறாரென்று, சொல்லி, இதை பிரம்மலிபி என்பார்கள். ‘தலைச்சுழி’ என்பதும் இதைத்தான். இந்த தலைச் சுழியையும் கழித்து விடுவது பிள்ளையார் சுழி. ”கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே!”

” தபால்தலை, ரூபாய் நோட்டில் விநாயகர்…!!!”

  • விநாயகர் உருவம் இடம்பெற்றுள்ள பல்வேறு நாட்டு தபால்தலைகள், ரூபாய் நோட்டு
    விநாயகர் உருவம் இடம்பெற்றுள்ள பல்வேறு நாட்டு தபால்தலைகள், ரூபாய் நோட்டு
  • விநாயகர் உருவம் இடம்பெற்றுள்ள நாணயம்.
    விநாயகர் உருவம் இடம்பெற்றுள்ள நாணயம்.

ஆகஸ்ட் 29-ம் தேதி விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட ஒவ்வொருவரும் தயாராகிக் கொண்டிருப்பீர்கள்.

ஆனால், இந்து மதம் பெரிதும் பரவியிருக்காத வெளிநாடுகளில் விநாயகரின் உருவம் பொறித்த தபால்தலை, ரூபாய் நோட்டுகள், நாணயங்களை வெளியிட்டுள்ளது ஆச்சரியமான செய்தி. இதுகுறித்து, மதுரை தபால் தலை சேகரிப்போர் சங்க உதவி தலைவர் ஜி. சக்திவடிவேல் கூறும்போது, விநாயகர் வழிபாடு தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இருந்துள்ளது. இப்போதும் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் இந்துமத கடவுள்களை வழிபட்டு வருகின்றனர். நேபாளம், தாய்லாந்து மற்றும் லாவோஸ் நாடுகள் வெளியிட்ட தபால் தலையில் விநாயகர் உருவம் உள்ளது. இதில் லாவோஸ் என்பது, பர்மா, வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள சிறிய தீவு நாடாகும். சில நாடுகளின் ரூபாய் நோட்டுக்களிலும் விநாயகர் இடம்பிடித்துள்ளார்.

தாய்லாந்து நாட்டின் 10 பாட் நாணயத்தில் விநாயகர் உருவம் உள்ளது. அதேபோல, இந்தோனேசியாவில் 20,000 ரூபாய் தாளிலும் விநாயகர் படம் உள்ளது. சுமார் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீவுகளால் ஆன இந்தோனேசியா முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடாகும்.

அங்கு 2 சதவிகிதத்திற்கும் குறைவான மக்களே இந்து மதத்தை பின்பற்றுகிறார்கள். இருப்பினும், அந்நாட்டில் இந்துக்கள் அதிகம் வாழ்கிற பாலி தீவில், செல்வத்தின் அதிபதியாக விநாயகர் கருதப்படுகிறார். எனவே, இந்தோனேசிய அரசு விநாயகர் உருவம் பதித்த ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது.

சோழ மன்னர்களின் படையெடுப்பே காரணம்

லாவோஸ் நாட்டில் விநாயகருக்கு மட்டுமின்றி சரஸ்வதி, பிரம்மா, நாககன்னிக்கும் தபால்தலை வெளியிடப் பட்டுள்ளது. ராஜராஜசோழன், ராஜேந்திர சோழ மன்னர்களின் படையெடுப்புகளும், பிற்காலத்தில் வணிகத் தொடர்புகளுமே தெற்காசிய நாடுகளில் இந்து கலாச்சாரம் பரவக் காரணம்” என்றார். கே.கே.நகரில் வசிக்கும் ஜி.சக்திவடிவேல், ரோஜா மலர், காந்திஜி போன்ற படங்கள் இடம்பெற்ற நூற்றுக் கணக்கான தபால் தலைகளை சேகரித்து வைத்துள்ளார். இதுதவிர வெவ்வேறு நீள அகலங்களைக் கொண்ட தபால்தலைகள், வட்டம், நீள்வட்டம், அறுங்கோணம் வடிவ தபால்தலைகளை சேகரித்து வைத்துள்ளார். விதவிதமான அலங்கார கள்ளிச்செடிகளை வளர்ப்பது, வித்தியாசமான மது பாட்டில்களை சேகரிப்பது போன்றவற்றிலும் இவருக்கு ஆர்வம் அதிகம். அவரது தொடர்பு எண்: 98421 24515

வாபஸ் பெறப்பட்ட விநாயகர்!

இந்தோனேசியா உருவ வழிபாட்டை கடுமையாக எதிர்க்கும் மக்கள் அதிகம் கொண்டநாடு என்பதால், அங்கு விநாயகர் உருவத்துடன் ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பின்னாட்களில் அரசே அவற்றை திரும்பப் பெற்றுவிட்டது. எனவே, விநாயகர் படம் பொறித்த இந்தோனேசிய ரூபாய் நோட்டு அரிய பொக்கிஷமாகி விட்டது.

Source:::: The Hindu….Tamil
Natarajan

Message For The Day…”The Intent with which You use Money Should be for Good …”

The pride of wealth, manpower and youth seems to be predominant presently. Money is inert, it is lifeless. How can it be strong? Its strength or weakness is the reflection of the mindset of the individual. Wealth and education are like pure water. When water is poured in a bottle of a particular colour, the water appears to be of that colour. In the same way, when wealth is in the hands of a wicked person, it will be used only for evil deeds. Money, if it is in the hands of pure hearted people, will be used for noble deeds. Hence the usage of wealth or knowledge is dependent on the character of the person in whose hands it is. Money is not bad. The intent with which you use money should be for good. Use spirituality to streamline the focus of your mind towards good.

Sathya Sai Baba