“இதைப் படி முதலில் …. “

தந்தது உன் தன்னை

தன் மனம், மார்க்கம் அனைத்துமே ஸ்ரீமஹா பெரியவாளே என்னும் ஆனந்தக் களிப்போடு தன் பிறவிப்பேற்றை அனுபவித்த ‘பிரதோஷம் மாமா’வின் அதி தீவிர பக்தி, அவரை ’64-ஆம் நாயன்மார்’ என்று மஹா பெரியவாளே அங்கீகரித்தருளும்படி செய்தது.

இவரின் பக்திநெறி ஒவ்வொன்றையும் மஹா பெரியவாளே வகுத்துக் கொடுத்ததாக பல அபூர்வ சம்பவங்கள் சாட்சியாக விளங்குகின்றன.

நடு இரவில் தன் இல்லத்திலிருந்து புறப்பட்டு வழி நெடுக ஈஸ்வர நாமாக்களை விடாது பாடிக்கொண்டு சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரத்திலிருந்த ஸ்ரீமடத்திற்கு பாதயாத்திரை செய்து தரிசிப்பதை ‘பிரதோஷம் மாமா’ தனது ஆனந்த அனுபவமாகவே கொண்டிருந்தார்.

பிரதோஷம் மாமா நடுநிசியில் பயணம் செய்யும்போது சில பக்தர்களும் அவருடன் வருவது வழக்கம். அதுபோல அன்றொரு நாள் இரவு தரிசன யாத்திரையில் திருவரத ஓதுவாரும் கலந்து கொண்டார். இதனால் வழியெங்கும் தேவாரமும், திருவாசகமும் ஒலிக்கத் தொடங்கியது. ஓதுவார் உரக்கப் பாட உடன் சென்றவர்களும் இதே போல் குரலெடுத்துப் பாடினார்கள்.

எப்போதும் ஓங்கி ஒலிக்கும் ’அருணாசல சிவ’ அப்போது தடைபட்டது போல் பிரதோஷம் மாமா உணர்ந்தார். ரமண மஹரிஷியின் மீது இவருக்கு இருந்த அபரிமித பக்தியினால், திருவாசகத்திற்குப் பதிலாக ‘அருணாசல சிவ’ என்று சொல்லலாமே என்று உடன் வந்தவர்களிடம் சொல்லிப் பார்த்தார். நமச்சிவாயமும், அருணாசல சிவமும் வேறல்ல என்று ஏன் இவருக்குப் புரியவில்லை? இதனால் மடத்தில் வீற்றிருந்த சர்வேஸ்வரருக்கு இவருக்கு பதில் சொல்லவேண்டும் என்ற தீர்மானம் ஏற்பட்டு விட்டது. தரிசன யாத்திரை முடிந்து, அவருடன் வந்தவர்கள் மஹா பெரியவாளை தரிசித்து மகிழ்ந்தார்கள். ஓதுவார் ஸ்ரீமடத்திலிருந்து புறப்பட்டு போய்விட்டார்.
அப்போது மஹான் தமது திருவிளையாடல் நாடகத்தை ஆரம்பித்தார்.

“ஓதுவார் எங்கே?” என்று மஹான் கேட்டார். அவர் புறப்பட்டுப் போய்விட்டார் என்று மஹானுக்குத் தெரியாதா என்ன? பிரதோஷ மாமாவுக்கு விளங்கவில்லை – ஏன் மஹான் ஓதுவாரை அழைக்கிறார் என்று…

மஹான் பிரதோஷ மாமாவை அழைத்துக் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். அது தன் கைக்கு வந்தவுடன் மெய் சிலிர்த்ததை உணர்ந்தார் பிரதோஷ மாமா. அருணாசலமா, நமச்சிவாயமா என்ற இவரது மன சஞ்சலத்தை அனைத்தும் நானே என்று சொல்லாமல் சொல்லித் தீர்த்து வைத்து விட்டது போலிருந்தது.

அவரது சிந்தனை வேறு பக்கம் திரும்பக் கூடாது என்று நினைத்த மஹான், “இந்தப் புத்தகம் எந்த வருடம் வெளியானதுன்னு ஓதுவாரைக் கேட்டுத் தெரிஞ்சுண்டு வா” என்றார்.

இது போன்ற வேலையை மஹான் தன்னிடம் சொன்னதே இல்லையே, இந்த விஷயம் இவருக்குத் தெரியாதா? இந்த வேலைக்கு மடத்து ஊழியர் போதாதா? இதற்கு ஏதாவது காரணம் இருக்கும் என்று நினைத்த பிரதோஷம் மாமா இதற்காக சென்னைக்குச் செல்ல வேண்டிய நிலை. காஞ்சியை விட்டு எப்போதும் அகலாதவருக்கு இப்படி ஒரு சோதனையா?

மஹானின் மனதை யார் அறிவார்? சென்னை சென்று ஓதுவாரை பார்த்துத் தகவல் அறியச் சென்றவருக்கு அங்கே ஓதுவாரைத் தேடவும் ஒரு துணை தேவைப்பட்டது.
இதற்காக மஹானிடம் பரமபக்தி கொண்டிருந்த ஒரு வைணவ அன்பரைத் தொடர்பு கொண்டு ஒத்தாசை செய்ய அழைக்கலாம் என்று நினைத்தார். போன் வசதி இல்லாத காலம் அது. இதனால் பணி ஓய்வு பெற்றபின், பிரதோஷ மாமா தனது அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயம்.

அலுவலகத்தின் உள்ளே நுழைந்ததும் இவரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஒரு அன்பர் இவரை வரவேற்று மூச்சு விடாமல் பேசத் தொடங்கினார்.
“ரொம்ப ஆச்சர்யம். நீங்க எப்படி இங்கே வந்தீங்க? உங்களுக்கு நாங்களே கடிதம் எழுதி வரவழைக்கலாமுன்னு நினைச்சோம்… ஏன்னா, உங்களுக்கு அரியர்ஸ் பணம் ஆயிரத்துக்கு மேலே வந்திருக்கு… ஆபீஸிலே இன்னிக்கு நீங்க வரலேன்னா பணத்தைத் திருப்பி அனுப்பச் சொல்லி உத்தரவு. என்ன செய்யறதுன்னே தெரியாம தவிச்சுண்டு இருந்தேன்…. பின்னாலே பணத்தை வாங்கறது மிகவும் சிரமமா இருக்கும்”.

பிரதோஷம் மாமா உண்மையில் திணறித்தான் போனார். அந்தக் கால கட்டத்தில் இந்தப் பணம் எவ்வளவு பெரியது? இதைத் தன்னிடம் சேர்க்க திருவாசக புத்தகத்தின் மூலம் மஹான் திருவிளையாடல் நடத்தியிருக்கிறார் என்றே தோன்றியது.

பிரதோஷம் மாமா, புத்தகம் எப்போது வெளியிடப்பட்டது என்பதைப் பலரிடம் விசாரித்துக் கொண்டு காஞ்சி வந்து, மஹானிடம் விவரங்களைச் சொன்னார். அதை மஹான் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை. தன்னை எதற்காக சென்னைக்கு அனுப்பினார் என்று மஹானுக்குத் தெரியாதா என்ன?

திருவாசகம் புத்தகத்தை அவரிடம் கொடுத்து “இதைப் படி” என்றார் மஹான்.

முதலில் எதைப் படிப்பது என்று இவர் தடுமாற “முதல்லேயிருந்து சில பக்கங்களையாவது படி” என்றார்.

அவர் புத்தகத்தைப் பிரித்தபோதே பிரமிப்பு….

“நமச்சிவாய வாழ்க” என்று தொடங்கும் சிவபுராணம் தான் முதலில் தென்பட்டது.

இப்படி பிரதோஷ மாமாவை நாயன்மாராக அங்கீகரித்தருளி “தந்தது உன் தன்னை கொண்டது என் தன்னை” என்று பக்தருக்குள்ளே ஐக்கியமாகி ஒவ்வொரு பக்தி நெறிக்கும் வழிகாட்டுபவராக ஸ்ரீமஹா பெரியவா பிரதோஷம் மாமாவுக்கு அருள் புரிந்தார்.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

Read more: http://periva.proboards.com/thread/6543/pradosham-maamaa-venkatasaamys-book#ixzz2uPz4MF6U

natarajan

“Hanuman Chalisa” Tells You the Distance Between Earth and Sun !!!

Any one knows the Hanuman chalisa?In Hanuman Chalisa, it is said :
“Yug sahastra yojan per Bhanu!
Leelyo taahi madhur phal janu!!

1 Yug = 12000 years
1 Sahastra = 1000
1 Yojan = 8 Miles

Yug x Sahastra x Yojan = par Bhanu
12000 x 1000 x 8 miles = 96000000 miles

1 mile = 1.6kms

96000000 miles = 96000000 x 1.6kms =
1536000000 kms to Sun

NASA has said that, it is the exact distance between Earth and Sun (Bhanu).
Which proves Hanuman ji did jump to Planet Sun, thinking it as a sweet fruit (Madhu phal)..

It is really interesting how accurate and meaningful our ancient scriptures are..Unfortunately barely it is recognized, interpreted accurately or realized by any in today’s time…

……………………………..

GAYATRI MANTRA”  the most powerful hymn in the world
Dr.Howard Steingeril,
an american scientist, collected Mantras, Hymns and invocations from all over the world and tested their strength in his Physiology Laboratory…

Hindus’ Gayatri Mantra produced 110,000 sound waves /second…

This was the highest and was found to be the most powerful hymn in the world.
Through the combination of sound or sound waves of a particular frequency, this Mantra is claimed to be capable of developing specific spritual potentialities.
The Hamburg university initiated research into the efficacy of the Gayatri Mantra both on the mental and physical plane of CREATION…

The GAYATRI MANTRA is broadcasted daily for 15 minutes from 7 P.M. onwards over Radio Paramaribo, Surinam, South America for the past two years, and in Amsterdam, Holland for the last six months.

“Om Bhoor Bhuwah Swah, Tat Savitur Varenyam, Bhargo Devasya Dheemahi, Dhiyo Yo Nah Pra-chodayaat !”

“It’s meaning:
God is dear to me like my own breath, He is the dispeller of my pains, and giver of happiness.
I meditate on the supremely adorable Light of the Divine Creator, that it may inspire my thought and understanding.”

source::::input from a friend of mine

natarajan

Message For the Day…” You Must avoid bad company and Cultivate the company of Good…”

Bear in mind the company you keep. The great saint-poet Kabir once said, “I salute the bad and also the good”. Kabir was asked, “We understand you offering salutations to the good, but why do you salute the bad?” He responded, “When I salute the bad, I am doing this with a prayer to remove themselves from my presence; I am saluting the good, requesting their presence before me.” This is a profound statement. You must avoid bad company and cultivate the company of good. When you join with good people, you will be happy and you will confer happiness upon others. Strive to get rid of all your bad thoughts. Give up all your negative traits. Discharge your obligations to your parents. Render selfless service to the community. Redeem your lives by earning the Grace of the Lord. This is My blessing to all of you.   

Sathya Sai Baba

Message For the Day…” Whatever HE gives Accept It…”

The path to God is difficult, but you can win. Let God do whatever He wants. Surrender to Him and say, “I brought nothing with me! Whatever You have given me, I offer it back to You.” You may think your parents gave you the body. Who put life into your body? Who makes your heart tick incessantly? You may feed the body with tasty food but who digests all the food you eat? Who is the driving force behind the circulation of blood? God Himself regulates every single act within every living being. The eye that is not even an inch long can clearly perceive the stars, far away in the sky. Who gave this little eye, this big strength and power? God alone has conferred and is conferring everything upon you. With your little ego, you are confused that you are the doer. This is the greatest ignorance. Whatever He gives, accept it, it is for your highest good

Sathya Sai Baba

” மருத்துவருக்கே மருத்துவம் சொன்ன மஹா மருத்துவர் ….”

மஹாபெரியவா அவர் காலத்தில் ஒரு சிறந்த வைத்தியராகத் திகழ்ந்தார் என்பதை பல நிகழ்ச்சிகள் நமக்குச் சொல்கின்றன.

”வெள்ளைத் தாமரையில் கஷாயம் வைத்து சாப்பிடு” என்றும் ”வில்வ இலையைத் தினமும் காலையில் சாப்பிடு” என்றும் “துளசி தீர்த்தத்தை தொடர்ந்து சாப்பிடு” என்றும் பலருக்குச் சொல்லி அவர்களது தீராத நோய்களைத் தீர்க்க உதவியிருக்கிறார். ஏறக்குறைய இது வைத்தியர் வேலைதானே?

இவற்றிற்கு மேலாக அவர் தம்மிடம் நேரில் வரமுடியாத பக்தர்களுக்கு அவர்களது கனவில் தோன்றி ஆலோசனைகளையும் வழங்கியிருக்கிறார்.

அப்படிப்பட்ட சம்பவம் ஒன்று – வைத்தியர் ஒருவருக்கே ஏற்பட்டது.

பெங்களூர் நகரில் அவர் மிகவும் பிரபலமான டாக்டர். ‘கைராசி’யான டாக்டர் என்றும் அவர் புகழப்பட்டார். நோயாளிகளிடம் அதிகப் பணம் கேட்பது கிடையாது. வந்தவர்கள் எல்லாரும் நோய் குணமாகி திரும்பினார்கள் என்னும் சிறப்பு இருந்தும் அவருக்குத் தேர்வு வைத்ததைப் போல் அவரிடம் ஒரு நோயாளி தன் நோயைத் தீர்க்க அணுகினார்.

வயிற்றுவலிதானே என்று முறைப்படி டாக்டரும் அந்த நோயாளிக்கு மருந்து கொடுத்தார். ஓரிரு நாளில் குணமாகிவிடும் என்று டாக்டரும், இவரிடம் வந்தால் தனது உபாதை தீர்ந்துவிடும் என்று அந்த நோயாளியும் நினைத்தனர். இருவரது நம்பிக்கையையும் நோய் தகர்த்தெறிந்தது. வயிற்றுவலி குணமாகவே இல்லை. டாக்டர் தொடர்ச்சியாக தனக்குத் தெரிந்த எல்லா மருந்துகளையும் அவருக்குக் கொடுத்துப் பார்த்தார். நோயாளியும் பிடிவாதமாக இந்த டாக்டரைத் தவிர வேறு டாக்டரிடம் போகக் கூடாது என்று சபதம் எடுத்துக் கொண்டது போல் இவரிடமே வந்தார். இவர் கொடுத்த மருந்தை மட்டும் விடாமல் சாப்பிட்டார். பலன் தான் இல்லை.

மனம் வெறுத்துப் போன டாக்டர், தமது தெய்வம் என்று உபாசித்த காஞ்சி மஹானை வேண்டினார். இந்த டாக்டர், மஹானின் நெருங்கிய பக்தர்களில் மிகவும் முக்கியமானவர். சமயம் கிடைக்கும் போதெல்லாம் டாக்டர் மஹானை நேரில் வந்து தரிசிக்கத் தவறுவதே இல்லை.

“சர்வேஸ்வரா என்ன சோதனை இது? என்னிடம் வந்தவர்களில் உங்கள் அருளால் குணமாகிப் போனவர்கள் தான் அதிகம். இந்த ஒரு நோயாளி மட்டும் என் வைத்தியத்திற்கே சோதனை வைத்துக்கொண்டு இருக்கிறாரே? இதிலிருந்து மீள்வதற்கு எனக்குத் தாங்கள் தான் வழிகாட்ட வேண்டும்” என்று மனமுருகி மஹானை வேண்டினார். டாக்டரும் மஹானிடம் நேரில் வரவில்லை. அதனால் என்ன? தனது பக்தனுக்கு அருள் பாலிக்க அன்று இரவே மஹான் டாக்டரின் கனவில் வந்தார்.

“நீ அந்த நோயாளியின் சாப்பாட்டு நேரத்தைப் பற்றிக் கேள். பிறகு அதை மாற்றி அமைத்தால் எல்லாமே சரியாகிவிடும்” என்று சொல்லிவிட்டு மறைந்தார். டாக்டர் தமக்கு மஹான் உத்தரவிட்ட விஷயமாக யோசித்தார். ‘சாப்பாட்டை மாற்றி அமை’ என்றால் எப்படி?

அந்தத் தொழிலாளி ஒரு மில்லில் வேலை செய்பவர். மறுநாள் அவர் வந்தபோது அவரிடம் சாப்பாட்டு நேரத்தைக் கேட்டார்.

“மில்லில் வேலை எல்லாம் முடிந்த பிறகு மாலை ஐந்து மணியிலிருந்து ஆறுமணிக்குள் எனது ஆகாரத்தை முடித்துக் கொள்வேன்” என்று தொழிலாளி சொன்னார். சரியான பிரதோஷ காலமல்லவா அது?

டாக்டர் அவரிடம் “நீ சாப்பிடும் நேரம் சரியாக இல்லை. காலை, மதியம், இரவு என்று மூன்று வேளை ஒழுங்காகச் சாப்பிட்ட பின் என்னிடம் வா” என்றார்.

“டாக்டர் சொல்லிவிட்டாரே” என்று தொழிலாளியும் தனது ஆகார நேரத்தை மாற்றி அமைத்தார். மஹானின் உத்தரவல்லவா அது?

தொடர்ந்து ஒரு வாரம் ஆகாரத்தைக் குறித்த நேரத்தில் சாப்பிட்ட தொழிலாளி டாக்டரிடம் வந்தார்.

“இப்போதெல்லாம் எனக்கு வயிற்றுவலி வருவதே இல்லை டாக்டர். நான் மருந்து கூட சாப்பிடுவதில்லை” என்றார். தெய்வ வைத்தியர் கொடுத்த யோசனை அல்லவா இது! டாக்டர், மஹானின் திக்கு நோக்கி வழிபட்டார்.

டாக்டருக்கு மேல் டாக்டராக விளங்கும் அந்த மஹானின் பாதார விந்தங்களை நாம் பற்றிக் கொண்டால் நமக்கு நோய் எங்கேயிருந்து வரும்? வைத்தியர் நேரில் சொன்ன அனுபவம் இது.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர

Read more: http://www.periva.proboards.com/thread/6536/doctors-advisor-mahaperiyavaa-venkatasaamys-book#ixzz2uJRgdWsH

natarajan

Message For the Day…” You are who you are…”

Undertake any work and perform it such that there is no untruth, unfairness or evil motive in the way you execute it. See to it that the work you do, not only enables you to earn a living, but also benefits the nation and the community you live in. Everyone must observe this purity in their lives. If you thus engage yourselves in right action, you will not be bound by the consequences of action (Karma). You are who you are, based on the past Karmas. Through your present actions you can ensure freedom from birth. Through love, develop faith and earnestness. Through faith and earnestness, you acquire knowledge, and from knowledge you develop Sadhana (spiritual practices) through which you achieve your goal. Hence to strengthen your Sadhana, all these – wisdom, earnestness, faith and love – are quintessential. Love is the most powerful means to acquire control over your senses.

Sathya Sai Baba

Message For the Day…” Lord Krishna is Everything to us … “

Lord Krishna’s friend Uddhava, was adept in the Path of Knowledge. He approached Krishna so that he can teach it to the cowherds. Krishna smiled and said, “Devotion and purity are fundamental to Gopikas – they are in Me, I am always enshrined in their hearts, you may not understand it!” Uddhava wasn’t convinced, so Lord Krishna sent him to Gokul. Uddhava said to them, “Let me teach you the path of wisdom to realize the Divine”. The Gopikas admonished Uddhava, “We don’t want to waste time on Yogas and Scriptures. Krishna is everything to us, give us one simple means.” Confused, Uddhava, now asked the Gopikas, “How would you become one with Krishna?” The innocent Gopikas responded, “If Krishna were a flower, I would be a bee whirling around Him. If Krishna were the mountain, I will become a river. If He is the deep ocean, I will be a small stream, joining Him”. Uddhava then understood that Gopikas always tuned themselves to adore the Lord, anywhere and everywhere.

 Sathya Sai Baba

” ராம நாமம் கேட்கும் இடம் எல்லாம் ஹனுமான் நான் இருப்பேன் …”

  

   
பொதுவாக ஸ்ரீ ராமாயண சொற்பொழிவு நடைபெறும் இடங்களில் எல்லாம் அனுமன் நேரில் வந்துஅடியார்களுள் அடியாராய் பக்தருள் பக்தராய் அமர்ந்து உபந்நியாசத்தை பேரானந்தத்துடன் ரசித்து கேட்பதாக ஒரு ஐதீகம்.
இதனால்தான் துளசிதாசர் ஸ்ரீ ராமாயண பிரவசனம்(சொற்பொழிவு) தொடங்கும் முன்னர் பக்தர்களை பிரதட்சனமாக சுற்றி வருவாராம் .அங்கு பக்தர்களுடன் பக்தராக மாருதியும் எழுந்தருளிருப்பார் என்பதாலேயே அனுமனை வணங்கும் விதமாக துளசிதாசர் பக்தர்களை வலம் வந்து வணங்கியபிறகேதனது சொற்பொழிவை துவக்குவாராம்.
அதனாலேயேராமநாமத்தை சொல்லும் முன்பாக அந்த இடத்தில் ஒரு சிறிய மனையைப்போட்டு அதன்மீது ஒரு சுத்தமான துணியை போர்த்தி ஒரு இருக்கை தயார்செய்துவைத்துவிட்டுத்தான் ராமாயண உபன்யாசம் துவக்கப்படுவது வழக்கம்.
நிச்சயம் அங்கு அனுமன் வந்து அந்த மனையில் அமர்ந்து ராமகாதையை மனம்குளிர்ந்து கேட்பார் என்பது இதுநாள் வரை பலரும் சொல்லக்கேட்டிருப்போம்.
ஆனால்நிஜத்தில் அப்படி ஒருக்காட்சியே அரங்கேறி பார்ப்பவர்களை சிலிர்க்கவைத்திருக்கிறது.
 
இந்தியாவில் மத்தியபிரதேசத்தில் இருக்கும் ஒரு முக்கியமான நகரம்தான் ரட்லம்(Ratlam).    இங்கு காளிகாமாதா எனும் மிகவும் பிரபலமானதொரு கோவில் நகரின்மையப்பகுதியில் அமைந்துள்ளது 

இங்கு சமீபத்தில் ஸ்ரீராமாயண சரித்தித்தை உபன்யாசம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
ராமா..ராமா..என உபன்யாசகர் பாட ஆரம்பித்ததும்…அங்கே அழகான ஒரு வெண்குரங்கு வந்து அதை ரசிக்கத்தொடங்கிய அழகை நீங்களே பாருங்கள் 

 
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்ம மும் மரணமும் இன்றித்தீருமே
இம்மையே இராம என்றிரண் டெழுத்தினால்…..!
 
ஓராயிரம் மகப்புரி பயனை உய்க்குமே
சுராதிபர் செல்வமும் புகழும் நல்குமே
வீராய் எனும் பாவங்களை வேரறுக்குமே
இராம என் றொரு மொழி இயம்பும் காலையே…!
 
மும்மை சால் உலகுக்கு எல்லாம் 
மூல மந்திரத்தைமுற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
தனிப்பெரும் பதத்தைதானே
இம்மையே எழுமை நோய்க்கும்
மருந்தினை, ‘இராமன்‘ என்னும்
செம்மைசேர் நாமம் தன்னைக்
கண்களின் தெரியக் கண்டான்…!

இப்படி ராமநாமத்தின் சிறப்புகளை கம்பர் பாடியதன் சுவையை இந்த வானரமும் அனுமனாகவே வந்து
 ரசிக்கிறதோ ….

 

source::::input from a friend of mine

natarajan

 

 

” இவர் சிவப் பழம் …இவருக்கு நெறைய பழம் கொடு …”

 

ஒரு வைதிகர், எளிய வாழ்க்கை, போதுமென்ற
மனமே பொன் செய்யும் மருந்து.

கோயில் திருப்பணிகளில் மிகவும் ஆர்வம்.
தன் கிராமத்திலுள்ள பிள்ளையார் கோயில்,
மாரியம்மன் கோயில்,சிவன் கோயில்
எல்லாவற்றுக்கும் அரும்பாடுபட்டுத்
திருப்பணிகள் செய்தார்.

பெரிய தொகை நன்கொடை கொடுப்பவர்கள் கூட
அவரிடமிருந்து ரசீது எதிர்பார்க்கமாட்டார்கள்.
அவ்வளவு சுத்தம். அவருடைய சேவையை அண்டை
கிராமத்தார்களும் பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஒரு வயற்காட்டில் ஒரு பெரிய சிவலிங்கம்
தன்னந்தனியாக வெயிலில் காய்ந்து, குளிரில்
நடுங்கிக் கொண்டிருந்தார். இந்த வைதிகர்
முயற்சியால் இப்போது அவர் (சிவலிங்கம்)
மழை-காற்றுக்கு அஞ்சாமல்,கருவறையில்
கோயில் கொண்டுள்ளார்.

இப்படி எத்தனையோ கோயில்கள்.

ஆனால்,வைதிகர் எந்தக் கும்பாபிஷேகத்திலும்
தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதில்லை.
கூட்டத்தில் ஒரு மூலையில் ஒண்டிக்கொண்டு நிற்பார்!

தம்பட்டமே இல்லாத இவரைப் பற்றிப்
பெரியவாளுக்கு தெரிந்திருந்தது.

‘எப்படி?’ என்றெல்லாம் கேட்கக்கூடாது.
அது சிவரகசியம்!

அந்த வைதிகர் அடிக்கடி ஸ்ரீமடத்துக்கு வருபவர் அல்லர்.
அவருக்கு ஓய்வு கிடைத்தால்தானே வெளியே போவதற்கு!

அவர் வழி அப்பர் வழி, ஆமாம். Upper வழி.

உழவாரப் பணி, கோபுரங்களில் வேலை,நாலைந்து
பையன்களை உடன் வைத்துக்கொண்டு
சந்தடி இல்லாமல் சிவத்தொண்டு செய்வார்.

ஒருதடவை பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார்.
பெரியவாளை வந்தனம் செய்துவிட்டு ஓரமாக
நின்றார். வழக்கமான ஊர்-பேர் விசாரணைகூடச்
செய்யவில்லை பெரியவாள்.

அந்தச் சமயத்தில் பரம பக்தர்களான பணக்காரத்
தம்பதிகள் வந்து வந்தனம் செய்துவிட்டு எழுந்தார்கள்.

பெரியவாள், தொண்டருக்கு என்ன குறிப்பு
கொடுத்தாரோ, தெரியாது.விலையுயர்ந்த
ஒரு சால்வையைக் கொண்டுவந்து தட்டில்
வைத்தார் ஓர் அணுக்கத் தொண்டர்.பெரியவாள்,
அந்தப் பணக்காரப் பக்தரை அழைத்து, அந்தச்
சால்வையை, வைதிக பக்தருக்குப் போர்த்தச்
சொன்னார்கள்.

எல்லோருக்குமே வியப்பாக இருந்தது.

இந்த வைதிகர் என்ன, அவ்வளவு பெரிய
பண்டிதரா? யாகம் செய்தவரா..?

பெரியவா பணக்காரரிடம் சொன்னார்கள்.

“இவரைப் பார்த்திருக்கிறாயோ?”

“இல்லை”

“இவர் அட்ரஸ் தெரியுமோ?”

“தெரியாது”

“எனக்குத் தெரியும்! சொல்லட்டுமா?”
(என்ன குறும்பு!)

“சாஸ்திரிகள் கேர் ஆஃப் சிவன் கோயில்!
இவர் பெரிய Builder.என்ன? பல சிவன்களுக்கு
வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்…!”

பக்தர்கள் கூட்டம் நெகிழ்ந்து உருகியது.
ஒரு பத்திரிகையில்கூட இவர் புகைப்படத்தைப்
பார்த்ததில்லையே…

“இவர் சிவப்பழம்…பிரசாதத்தோட நெறய்ய
பழங்கள் கொடு…”

அறிமுகமே இல்லாத இவர், தூய சிவப்பணியாளர்
என்பது பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?.

அது எந்தவகை ஸித்தி?
ஆயிரம் கன்றுக்குட்டிகள் நடுவில் ஒரு தாய்ப்பசு
தன் கன்றை அடையாளம் கண்டுகொள்ளாதா, என்ன?

 

            
source::::input from a friend of mine
natarajanIvarukku

 

How to Achieve 101% Success !!!

 

Beauty of Mathematics !!!!!!!

1 x 8 + 1 = 9
12 x 8 + 2 = 98
123 x 8 + 3 = 987
1234 x 8 + 4 = 9876
12345 x 8 + 5 = 98765
123456 x 8 + 6 = 987654
1234567 x 8 + 7 = 9876543
12345678 x 8 + 8 = 98765432
123456789 x 8 + 9 = 987654321

1 x 9 + 2 = 11
12 x 9 + 3 = 111
123 x 9 + 4 = 1111
1234 x 9 + 5 = 11111
12345 x 9 + 6 = 111111
123456 x 9 + 7 = 1111111
1234567 x 9 + 8 = 11111111
12345678 x 9 + 9 = 111111111
123456789 x 9 +10=  1111111111  1111111111

9 x 9 + 7 = 88
98 x 9 + 6 = 888
987 x 9 + 5 = 8888
9876 x 9 + 4 = 88888
98765 x 9 + 3 = 888888
987654 x 9 + 2 = 8888888
9876543 x 9 + 1 = 88888888
98765432 x 9 + 0 = 888888888

Brilliant, isn’t it?

And look at this symmetry:

1 x 1 = 1
11 x 11 = 121
111 x 111 = 12321
1111 x 1111 = 1234321
11111 x 11111 = 123454321
111111 x 111111 = 12345654321
1111111 x 1111111 = 1234567654321
11111111 x 11111111 = 123456787654321
111111111 x 111111111 = 12345678987654321

 

Now, take a look at this…


101%

 

From a strictly mathematical viewpoint:

 

What Equals 100%?
What does it mean to give MORE than 100%?

Ever wonder about those people who say they are giving more than 100%?

We have all been in situations where someone wants you to
GIVE OVER 100%.

How about ACHIEVING 101%?


What equals 100% in life?


Here’s a little mathematical formula that might help
answer these questions:


If:

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Is represented as:

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26.


If:


H-A-R-D-W-O- R- K

8+1+18+4+23+ 15+18+11 = 98%


And:

K-N-O-W-L-E- D-G-E

11+14+15+23+ 12+5+4+7+ 5 = 96%


But:

A-T-T-I-T-U- D-E

1+20+20+9+20+ 21+4+5 = 100%

 

THEN, look how far the love of God will take you:

 

L-O-V-E- O-F- G-O-D

12+15+22+5+15+ 6+7+15+4 = 101%


Therefore, one can conclude with mathematical certainty that:

While Hard Work and Knowledge will get you close, and Attitude will
get you there, It’s the Love of God that will put you over the top!

 

 

source::::input from a friend of mine

natarajan