” இது சரி இல்லை “…சொல்கிறார் மகாபெரியவர் ….

இது சரியில்லை!

மும்பை வேதரக்ஷண அறக்கட்டளைக் குழுவினர் மஹாபெரியவா ஜயந்தியையும் சிறப்பாகக் கொண்டாடினார்கள்.
சுப்ரமண்யம் என்ற பொறுப்பாளர் ஜயந்திக்குப் பின் பெரியவா தரிசனத்துக்குச் சென்றார்.

”இதோ பார் – இந்த நோட்டீஸை – இது நீங்கள் போட்டது இல்லை. வேறொரு சபையினர் போட்டது. இந்தமாதிரி நோட்டீஸ்களில் ஆதிசங்கரர் – வ்யாஸர் – ஆசார்யாள் படம் போடக்கூடாது. நோட்டீஸைப் பெற்றுக்கொண்டு போகிறவர்கள், பின்னர் தெருவில் எறிவார்கள். காலால் மிதிப்பார்கள்; குப்பைத் தொட்டியில் போடுவார்கள்! இது சரியில்லைதானே?”

இந்த அறிவுரை ஒரு சுப்ரமண்யத்துக்கு மட்டுமில்லை – எல்லா சுப்ரமண்யன்களுக்கும்தான்! கல்யாணப் பத்திரிகையில் மிக அழகாக ஸ்வாமி படங்களைப் போடுகிறார்கள். கல்யாணத்துக்கு மறுநாள் இந்த ஸ்வாமிகள் எல்லாம் எந்த இடத்தில் பூஜிக்கப்படுவார்கள்?

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source::::periva.proboards.com
Natarajan
Read more: http://periva.proboards.com/thread/4104/advice#ixzz2QpS94JPq

” பணத்துக்கு நீ சொந்தக்காரன் இல்லை”…மகாபெரியவர் சொல்கிறார் !!!

ஆடிட்டர் ஒருவர் தர்மகாரியங்களில் ஆர்வமாக ஈடுபடுவார். ராமநவமி, கிருஷ்ணஜெயந்தி, சங்கர ஜெயந்தி என்று எந்த விழாவாக இருந்தாலும் அவர் முதல் ஆளாக முன்னிற்பார். ஏழை எளியவர்கள் மீது இரக்கம் கொண்டு உதவி செய்வார். அவரை ஊர்மக்கள் “பெரியவர்’ என்று தான் அழைப்பர். காஞ்சிப்பெரியவரிடத்தில் ஆடிட்டருக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு.
ஆடிட்டரின் மூத்த மனைவி காலமானபின், பெரியவரின் ஆசியுடன் இரண்டாம் கல்யாணமும் செய்து கொண்டார். நான்கு பையன்களும் ஒரு பெண்ணுமாக ஐந்து பிள்ளைகள் இருந்தனர். பெரியவரைத் தரிசிக்க வரும்போதெல்லாம் , ஆடிட்டரைப் பார்த்து,””கர்ணன் மாதிரி எல்லாருக்கும் தானதர்மம் செய்றே!” என்று அன்போடு சொல்வார். காலம் ஓடியது. ஆடிட்டரின் பிள்ளைகளும் ஆடிட்டர்களாகவே பணியாற்றினர். பெண்ணும் ஒரு ஆடிட்டரையே திருமணம் செய்து கொண்டு செல்வச்செழிப்போடு வாழ்ந்து வந்தார். அவருக்குப் பிறந்த பையனும் ஆடிட்டர் தான்.
பெற்றோர் மறைவுக்குப்பின், பிள்ளைகள் எல்லாம் தானதர்மம் செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனாலும், அப்பா வகித்து வந்த தர்ம ஸ்தாபனப் பதவிகளில் மூத்தமகன் இருந்து வந்தார். தான தர்மம் என்று யாரும் கேட்டால், “”அது என்ன விலை? எந்த கடையில் கிடைக்கும்?” என்று கேட்கும் அளவுக்கு அவருடைய நிலை மோசமாக இருந்தது.

ஒருசமயம், அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. பரிசோதித்ததில், “கேன்சர்’ என்று சொல்லிவிட்டார்கள். அவருக்கு பேர் சொல்ல ஒரு பிள்ளையும் இல்லை. அவரது மனதை கவலை வாட்டியது. குடும்பத்தின் மதிப்பிற்குரிய மகானான காஞ்சிப்பெரியவரைத் தரிசித்து வருவதென்று முடிவெடுத்து காஞ்சி மடத்திற்குப் புறப்பட்டார்.

“”சுவாமி! அடியேனின் பணிவான நமஸ்காரம்! எனக்கு ரத்தஅழுத்தம், சர்க்கரைநோய் ரொம்ப காலமாக இருக்கு! இப்போ கேன்சரும் வாட்டி வதைக்குது! மனசாலும், உடம்பாலும் நான் படும் அவஸ்தைகளை சொல்லி முடியாது. பெரியவா நீங்க தான் எனக்கு நல்வழிகாட்டி அனுகிரஹம் பண்ணணும்!” என்று சொல்லி அழுதார்.

“”உன்னை ரொம்ப நன்னாவே எனக்குத் தெரியும்! உங்கப்பா தானதர்மங்களை கர்ணன் மாதிரி செய்து வந்தார். அதனால் ஜனங்களெல்லாம் “பெரியவர்’ என்று அவரை மதிப்போடு கூப்பிடுவாங்க. விதியை யாராலும் மாத்தி எழுத முடியாது.
கிணத்திலே தண்ணீர் இருக்கு! ஆனால், அது தண்ணீரை தன்னுடையது என்று சொல்லி சொந்தம் கொண்டாடுவதில்லை! மரத்திலே பூக்கள் அடுக்கடுக்கா பூத்துக் குலுங்குது! ஆனால், பூவெல்லாம் எனக்குத்தான் என்று மரம் ஆர்ப்பரிப்பதில்லை! பசு பால் தருகிறது. பால் முழுவதும் தனக்கு தான் என்று பசு உரிமை பாராட்டுவதில்லை! உனக்கும் பட்டம் பதவிகள் இருக்கிறது. ஆனால், அந்த பதவியின் பயனாக நாலுபேருக்கு நீ நல்லது செய்யவில்லை. அதனால் தான் இந்த வேண்டாத கஷ்டமெல்லாம் உனக்கு வந்துவிட்டது. பணத்தோடு மனுஷனுக்கு குணமும் மிக அவசியம். உங்கிட்ட இருக்கும் பணத்துக்கு நீ டிரஸ்டி மட்டும் தான். சொந்தக்காரன் இல்லை என்பதை புரிந்து கொள்,” என்று அவரது மனதில் பதியும்படி எடுத்துச் சொன்னார்.

அந்த ஆடிட்டர், தான் நடத்தி வந்த வாழ்க்கை முறையை எண்ணி வருந்தியதோடு இனிமேல் தந்தையைப் போல தானதர்மங்களை செய்து வாழ்வது என்ற முடிவுடன் அங்கிருந்து கிளம்பினார்.

SRI KANCHI MAHA PERIVA SARANAM

source:::periva.proboards.com
Natarajan

Read more: http://periva.proboards.com/thread/4049/sri-paramacharya-on-dhanam#ixzz2QbChwEzs

Message For The Day…. What is In Store For Us in VIJAYA Varusham ….

தமிழ் புத்தாண்டு பிறக்கும் வேளை!!!!!!

ஏப்.14ல் “விஜய’ தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. ஆனாலும், ஏப்.13 சனிக்கிழமை வளர்பிறை சதுர்த்தி, கார்த்திகை நட்சத்திரம் அமிர்தயோக வேளையில் இரவு 11.52 தனுசு லக்னத்திலேயே பிறந்து விடுகிறது. புத்தாண்டு பிறக்கும் நேரத்தின் அடிப்படையில், ஆண்டு முழுதும் நல்லமழை பொழியும் என்றும், விவசாயிகள் நல்ல மகசூல் காண்பர் என்றும் பஞ்சாங்கங்களில் கூறப்பட்டுள்ளது. தமிழ் ஆண்டு அறுபதில் விஜய 27வது ஆண்டாகும். சுபகிரகமான குரு, இந்த ஆண்டின் ராஜாவாக இருக்கிறார். குருவும், சந்திரனும் பலமாக இருப்பதால் இவ்வாண்டில் ராஜயோகம் பெறுபவர்கள் எண்ணிக்கை உயரும்.

தமிழ் புத்தாண்டு துவக்கத்தில் அதிக உஷ்ணம் ஏன்?

“”உலகின் இருளைப் போக்கி ஆத்மபலத்தை அளிக்கும் ஒளி மயமான சக்தி எதுவோ அதனை வணங்குவோம்” என்று சூரியனை ரிக்வேதம் போற்றுகிறது. வான மண்டலத்தில் இருக்கும் மற்ற கிரகங்களுக்கு சூரியனே ஆற்றல் வழங்குவதாக “சூரிய சித்தாந்தம்’ நூல் கூறுகிறது. சூரியன் சித்திரை மாதத்தில், மேஷ ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில், அளவற்ற ஆற்றலைப் பெறுகிறார். அதன் காரணமாகத்தான் அந்த மாதத்தில் உஷ்ணம் மிக அதிகமாக இருக்கிறது. அவர் முதல் ராசியான மேஷத்தில் பிரவேசிக்கும் நாளையே “தமிழ்ப்புத்தாண்டாக’ கொண்டாடுகிறோம். முதல்மாதமான சித்திரையில் சூரியன் உச்சநிலை பெறும் நேரத்தை “அக்னி நட்சத்திர காலம்’ என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

விஜய ஆண்டு வெண்பா

மண்ணில் விஜய வரு மழை மிகுதி
எண்ணுசிறு தானியங்கள் எங்குமே நன்னும்
பயம் பெருகி நொந்து பரிவாரம் எல்லாம்
நயக்கலின்றி வாடும் என நாட்டு.
பொருள்: விஜய ஆண்டில் மழை அதிகமாகப் பெய்யும். புன்செய் தானியங்களான கம்பு,கேழ்வரகு போன்றவை அதிகமாக விளையும். அதிகாரிகள் பயத்துடன் கடமைகளைச் செய்து வருவர்.

சிறப்பான பலன் பெறும் ராசியினர்
ரிஷபம், சிம்மம், தனுசு
சுமாரான பலன் பெறும் ராசியினர்
மிதுனம், துலாம், கும்பம்
பரிகாரத்திற்குரிய ராசியினர்
மேஷம், கடகம், கன்னி,விருச்சிகம், மகரம், மீனம்.

புத்தாண்டில் என்ன நடக்கும்?

* பெண் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர்.
* குருவும் சந்திரனும் சம்மந்தப்படுவதால் தட்பவெப்பநிலை சீராக இருக்கும்.
* ஆடி முதல் மார்கழி வரையில் நல்ல மழையும், தைமுதல் ஆனிவரையில் சுமாரான மழையும் பெய்யும்.
* மக்களிடம் தெய்வபக்தி மேலோங்கும்.
* பழைய கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தேறும்.
* ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் சிறப்பாக நடக்கும். ரியல் எஸ்டேட் வியாபாரம் வளர்ச்சி பெறும். நிலமதிப்பு அதிகரிக்கும்.
* தங்கம், வெள்ளி விலை ஏறுவதும் இறங்குவதுமாக நிலையில்லாமல் இருக்கும்.
* மளிகை, தானியம், அரிசி, இயந்திரம், வாகனங்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விலை உயரும். வாசனை திரவியங்களின் விலை குறையும்.
* மணல் பற்றாக்குறை நீங்கும்.
* வங்கி கடனுதவியால் மக்கள் நல்வாழ்வு காண்பர்.
* தொழிலாளர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். மின்சார தடை அதிகரிக்கும்.
* அதிகாரிகள் கருப்பு பணத்தை அதிகளவில் கண்டுபிடிப்பர்.
* மத்திய,மாநிலஅரசுகளுக்கிடையே கருத்துவேறுபாடு அதிகரிக்கும்.
* ஏழை மக்களுக்கு அரசு சலுகைகளை வாரி வழங்கும்.
* வனவளம் அதிகரிப்பதால் விலங்குகள் நிம்மதியாக வாழும்.
* அயல்நாட்டு மோகம் குறையும். மீனவர்களின் பிரச்னை தீர அரசு நடவடிக்கை எடுக்கும்.

WISH ALL OUR FRIENDS IN THIS FORUM A VERY HAPPY AND PROSPEROUS TAMIL NEW YEAR SRI VIJAYA.

Natarajan
MAY THE ALMIGHTY AND OUR REVERED SRI KANCHI MAHA PERIVA BLESS US ALL !
SRI KANCHI MAHA PERIVA SARANAM

Read more: http://periva.proboards.com/thread/4063/tamil-new-year-aspects#ixzz2QOuFSMuv

Russia Now…..In Ancient Times It Was Rishivarsham !!!!!

Many years ago, some Russian scholars had come to Chennai for a research on Hindu culture. Maha Swami was then camping at Mylapore and so they had darshan of Him and took many photographs of Him. They gave the photographs to the Russian Ancient Culture Academy in Russia also.

In 1987, Russia held a festival of Indian Culture in the Soviet Cultural Academy in Chennai. Dr.Padma Subramanyam (PS) gave a lecture on Bharatham, Kutchipidi, etc. Then, she was invited to Russia, where she met Prof.Ribakov, who was the chief of Russian Scientific Academy and Russian Ancient Culture Institute.

She was surprised to see a portrait of Maha Periava in his room. When asked, he said it was given by a friend who had visited Him in Chennai and he also wanted to meet Him and clarify a few doubts. Subsequently, he came to Chennai and Dr.PS accompanied him to Kanchipuram. But, Maha Swami was down with fever and the sishyas said they cannot meet Him. They were disappointed and didn’t know what to do.

Just then another sishya came to them and said that Periava asked them to come in. They went in, and Prof.Ribakov and Periava kept looking at each other for a while. Then, Dr.PS asked the Prof to clarify his doubts. But the Prof said that all his doubts have already been clarified.

Now comes the best part. Periava asked ‘Russians speak their language mixed with Sanskrit, but in Northern Russia do they speak the language without any mix of Sanskrit?’ Ribakov was surprised and said ‘yes’.

Then Periava said, ‘ you say Russia now. In the ancient times it was known as Rishivarsham. You know why? That is where Rishis like Yagnavalkiyar were running a Vedic Research Center. Then he spoke about the history of Russia at length. Then the Prof said that he wanted to become a Hindu.

Periava said ‘you already are’. But the Prof insisted on a Hindu name for him. Periava laughed and said ‘ he has grey beard like Rishis. So, from now on his name is Rishi’.

Well, that Rishi, runs a branch of Ramakrishna mutt in Moscow now!!!!!

source:::: input from a Periava devotee…

Natarajan

கவலை வேண்டாம் ….நாம சங்கீர்த்தனம் இருக்கே !!!!

வாழ்க்கைல எந்தக் கஷ்டத்தையும் பகவானோட நாமசங்கீர்த்தனம் போக்கிடும். கவலைப்படாதே!

 Kanchi Periva Avatar

1964ல் சோழவரத்தில் இருந்த ஒரு பள்ளி ஆசிரியர், வேலைப்பளு காரணமாக பெரியவாளை தர்சனம் பண்ண போகமுடியவில்லையே என்று ரொம்ப ஏங்கிக் கொண்டிருந்தார். அன்று காரடையார் நோன்பு. பங்குனி மாசம் ராத்ரி பிறந்ததால், நோன்பையும் ராத்ரி பண்ணிவிட்டு ரொம்ப நேரம் கழித்து அவர் மனைவி தூங்கப் போனாள். அவளுக்கு அற்புதமான ஒரு கனவு!

எந்த ஒரு அவதாரத்தால் காஷாயத்துக்குப் பெருமையோ, அந்த மஹா பெரியவா அந்த அம்மா முன்னால் நிற்கிறார். அவருடைய பாதங்களில் நமஸ்கரிக்கிறாள். பெரியவாளின் தெய்வீக குரல் ஒலிக்கிறது…..
வாழ்க்கைல எந்தக் கஷ்டத்தையும் பகவானோட நாமசங்கீர்த்தனம் போக்கிடும். கவலைப்படாதே! நா……ஒன்னோட ஆத்துல பூஜை பண்ணுவேன்”…
சந்தோஷத்தில் திடுக்கென்று எழுந்தால், கனவு என்று உணர்ந்தாலும், மனஸ் ரொம்ப நிறைந்து இருந்தது. அடிக்கடி அந்தக் கனவை எண்ணி எண்ணி தம்பதிகள் மகிழ்வார்கள். “ஆனாலும், எனக்கு ரொம்ப பேராசைதான்… மஹா பெரியவா நம்மாத்துல பூஜை பண்றார்…ன்னு எப்பிடி ஆசைப்பட்டிருக்கேன்!..” மனைவி சொன்னாள்.
1965ல் நவம்பர் மாசம் ஏதோ ஒரு ஞாயிற்றுக்கிழமை. மத்யான்னம் அவர்கள் வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து பூணூல், சிகை வைத்துக்கொண்டு பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு ஒரு பெரியவர் இறங்கினார்.
“மீனாக்ஷி சுந்தரமையர்…..” பெயரைச்சொல்லி விஜாரித்தார்.
“நாந்தான்…..மீனாட்சிசுந்தரம். வாங்கோ! நீங்க யாருன்னு தெரியலியே!.”
“நா….ஸ்ரீமடம் முகாம்லேர்ந்து வரேன்..பெரியவா திருப்பதிலேர்ந்து மெட்ராஸ் வந்துண்டு இருக்கார்…ஒரொரு 15 மைலுக்கு ஒரு எடத்துல தங்கி பூஜை பண்ணிண்டு, மாஸக் கடைசீல மெட்ராஸ் போகணும்ன்னு உத்தேஸம்!….”
[அவர் அடுத்து சொன்ன செய்தியைக் கேட்டு தம்பதிகள் இருவரும் மயக்கம் போடாத குறைதான் !]
“….நவம்பர் 15 இங்க சோழவரத்துல தங்கப் போறா….அதான்….ஒங்களோட க்ருஹத்தை ரெண்டு நாளைக்கு கொஞ்சம் குடுத்தா…..பெரியவா இங்கேயே தங்கி பூஜை, அனுஷ்டானங்கள் பண்ணிப்பார்…..எப்டி, ஒங்களுக்கு சௌகர்யப்படுமா?.”
“சௌகர்ய…படு…மாவா? எங்களோட பரம பாக்யம்…ன்னா !! எத்தனை நாள் வேணாலும் பெரியவா தங்கிக்கலாம். என்ன ஏற்பாடு பண்ணணுமோ சொல்லுங்கோ!..” உணர்ச்சி வேகத்தில் அவர்கள் கண்களில் கண்ணீர் வழிந்தது.
“நாங்க மடத்துலேர்ந்தே எல்லா ஏற்பாடும் பண்ணிடுவோம். எடம் மட்டும் குடுத்தா போறும்..”
அன்று சாயங்காலமே ஊர் முக்யஸ்தர்களை கூப்பிட்டு பெரியவா தன் பரிவாரங்களோடு தங்க, தக்க ஏற்பாடுகளை வகுத்தார்கள். ஒரு தெருவையே மடத்துக்கென்று காலி பண்ணிக் குடுத்தார்கள். யானை, ஒட்டகம் கட்ட, ஆபீஸ், பாரிஷதர்கள் ஓய்வெடுக்க, சமையல் செய்ய, சாப்பாடு போட என்று ஒவ்வொருவரும் ஆசை ஆசையாய் ஏற்பாடு பண்ணினார்கள். சுற்று வட்டார க்ராம மக்கள், தான்யம், காய்கறி கொடுத்தனர். செட்டிநாடு ராஜா அரிசி மூட்டைகளை அனுப்பினார்.
நவம்பர் 14 அன்று பூர்ண கும்பத்தோடு பெரியவாளை ஊர் எல்லையிலிருந்தே தக்க மரியாதையோடு அழைத்து வந்தனர். மூன்று நாட்கள் தங்குவது என்று முடிவானது கடைசியில் ஐந்து நாட்கள் தங்கி அத்தனை பேர் மனங்களையும் குளிரப் பண்ணினார்.
——————————————————————
இப்படி ஊர் ஊராக, க்ராமம் க்ராமமாக பாதங்கள் தேய நடந்து, மூன்று கால பூஜை [அதுவும் க்ரமம் தப்பாத பூஜை], அனுஷ்டானம், சமையல் சாப்பாடு, நேரங்காலம் தெரியாமல் கோடிக்கணக்கான பக்தர்கள் குறைகளை கேட்பது, தீர்வு சொல்வது, பரிவாரங்களோடு, மடிசஞ்சி வைத்துக்கொள்ள கூண்டு வண்டி, வெய்யிலோ, மழையோ, அத்வானக்காடோ, ஆகாசம் பார்க்கும் குடிசையோ, கல்லோ, முள்ளோ எல்லாவற்றையும் “ஒன்றே” எனக்கொண்டு, பெரியவா எதற்காக, யாருக்காக தன்னை இப்படி வருத்திக் கொண்டார்?  “எல்லாம் நமக்காகத்தான்” என்பதை நாம் துளி உணர்ந்தால் கூட, அதுவே நாம் பெரியவாளுக்கு செய்யும் நமஸ்காரம், பூஜை.
 source::::periva.proboards.com
Natarajan