வாரம் ஒரு கவிதை…” எல்லைக் கோடு ” ….!

 

எல்லைக்   கோடு
………………..
எல்லைக் கோடு இல்லாத இடம் எது இந்த  மண்ணில் ?  வீட்டுக்கு
வீடு ஒரு எல்லை சுவர்  … ஊருக்கு ஊர் ஒரு எல்லை !
நாட்டுக்கு நாடு ஒரு எல்லைக் கோடு ! எல்லைக்கோட்டுக்குள்
அவரவர் அதிகாரம் …ஆதிக்கம் !  மண்ணில்  மட்டுமா ?
நதியிலும்  கடலிலும்  உண்டு இந்த ஆதிக்கம் ! விண் வெளியில்
இது எங்கள் வான் பகுதி  , அது உங்கள்  வான் பகுதி  என்று
பாகுபாடு வேறு !  இத்தனை  கோடும் , பாகுபாடும்  இந்த
மண்ணில் உள்ள மனிதனுக்கு மட்டுமே ! விண்ணில் பறக்கும்
பறவைக்கும் , கடல்  மீனுக்கும் இல்லையே  எந்த கோடும் எல்லையும் !
இந்த மண்ணில் எத்தனை நாடு …எத்தனை மனிதர் …மொழி
எத்தனை …மதம்  , இனம்  எத்தனை  எத்தனை ! அத்தனை
பேரையும்  மொத்தமாக  தாங்குவது ஒரே ஒரு  பூமித் தாய்தானே !
அந்த தாயின் மக்கள்தானே  இந்த மண்ணின்  மனித குலம் !
ஒரு நிமிடம் யோசிக்க வேண்டும் மனிதா நீ …இந்த மண்ணை
விட்டு  விண்ணுலகம்  நீ செல்லும்போது  இனம்,  மொழி,
மதம்,  நாடு பார்த்து இட  ஒதுக்கீடு கிடைக்குமா  உனக்கு அங்கும் ?
உன் எல்லை அங்கு எது வரை என்று தெரியுமா உனக்கு ? போட முடியுமா
ஒரு கோடு அங்கே  உன்னால் ?
விடை தெரியா கேள்வி அல்லவா இது  ?  பின்  ஏன் இன்று நீ  இருக்கும்
மண்ணில் மட்டும்  இந்த ஆட்டம் …ஒருவர்  மேல் ஒருவர் காட்டம் ?
உன் மனது   தொட்டு நீ சொல்லு ,மனிதா … நீ கிழித்த   எல்லைக் கோடு ,
உன்  தொல்லை தீர்க்கும் கோடா …இல்லை  தொல்லை பல
உன்னை  தொடர்ந்து வர இந்த மண்ணில் நீ போட்ட ” ரோடா ” ?
Natarajan

வாரம் ஒரு கவிதை …” வயல் வெளிகளில் ” !

 

”  வயல்  வெளிகளில் “
……………………..
வயல் வெளியில் முத்து முத்தாக அவன் சிந்தும் வியர்வை
நெல் மணியாக மலரும் நாள்  உழவன் அவனுக்கு  திருநாள் !
ஒரு நாள் திருநாளுக்கு   அவன் படும் பாடு வெளியில்
தெரிவது எத்தனை பேருக்கு ?
உழைப்புக்கு ஏற்ற ஊதியம்   கேட்டு உள்ளிருப்பு
போராட்டம் ,அலுவலக புல்வெளியில் அமர்ந்து !
விண்ணைத்  தொடும் விலைவாசிக்கு இணையாக ஊதியப்
படி கேட்டு “கேட்” மீட்டிங் மற்றும் சாலை வழி மறியல் ! ஆனால்
சேற்றில் கால் வைத்து நாற்று நாடும் உழவனின்
உழைப்பின்  மதிப்பு ….அவனுக்கே தெரியாத  ஒரு கணக்கு !
மண்ணையும் ,தன்னையும்  நம்பும்  விவசாயிக்கு மட்டும்
ஏன் தனி  கணக்கு  அவன் நமக்கு அளிக்கும் நெல் மணிக்கு ?
இரவும் பகலும் உழைக்கும் அவனுக்கும்  வேண்டாமா  அவன்
உழைப்புக்கு சரியான ஒரு ஊதியம் ?  யோசிக்க வேண்டும்
நாம் … வயல் வெளி விவசாயம் அவன் மறந்தால் ,  யாசிக்க
வேண்டும் நாம் நம் உணவை வேறு நாட்டிடம் !
விண்வெளியில் சோதனை பல செய்து சாதனை படைக்கும்
  நாம் ,நம் வயல் வெளியிலும்  சாதித்து காட்ட வேண்டாமா ?
விண்ணைத் தொட்டு  மாற்று கோளிலும் கால் வைக்க
முந்தும்  நாம் நம் மண்ணை பொன்னாக்கும் நுண்ணியல்
விஞ்ஞான அறிவியலை நம்  வயல் வெளியெங்கும்
விதைத்து வளர்க்க முடியாதா என்ன ?
காட்டுவோம் ஒரு நல்ல வழி  நம் வயல் வெளிக்கும் ! செய்து
காட்டுவோம் ஒரு பசுமை தொழில் புரட்சி !  உழவும்  ஒரு  தொழில்
ஆகி நம் உழவனும் பல உழவுத்  தொழிலாளிகளை உருவாக்கட்டும் !
Natarajan
My Kavithai appeared  in http://www.dinamani.com on 8th august 2016

படித்து ரசித்த கவிதை…” புறங்கூற்று ” !

புறங்கூற்று…

………………….
* குற்றம் சொல்லவும்
குறைகள் பேசவும்
முற்றம் தேவையில்லை
இவர்களுக்கு!

* வென்றவனைக் கண்டால்
அதிர்ஷ்டம் என்று
அலட்டிக் கொள்வர்!

* தோற்றவனை கண்டால்
தேவை தானா என்று
எகத்தாளம் பேசுவர்!

* உள்ளவனைக் கண்டால்
கொள்ளை அடித்த பணமென்று
குற்றம் சொல்வர்!

* இல்லாதவனைக் கண்டால்
பிழைக்க தெரியாதவனென்று
இகழ்ந்து பேசுவர்!
* தப்பு செய்தவன்
தண்டனை பெற்றால்
சட்டம் சரியில்லை என்பர்!

* தப்பு செய்யாதவன்
தண்டனை பெற்றால்
சரியான நீதி என்பர்!

* பிழைப்பு தேடி
பிற நாடு சென்றால்
பேராசை பிடித்தவன்
என்று பிதற்றுவர்!

* உழைப்பு தேடி
உள்நாட்டில் உலவினால்
ஊர் சுற்றியென்று
உதாசினம் செய்வர்!

* ஊருக்கு உதவினால்
ஊர்கழுதை என்று
பட்டம் சூட்டுவர்!

* சும்மா சுற்றினால்
சோம்பேறி என்று
முத்திரை குத்துவர்!

* மற்றவர் குறைகளை
மணிக்கணக்கில் பேசும்
இவர்களுக்கு
ஒரு நிமிஷம் கூட
கிடைப்பதில்லை
தம் குறைகளை
நினைத்துப் பார்க்க!
க.அழகர்சாமி,
கொச்சி. in http://www.dinamalar.com

Natarajan

 

வாரம் ஒரு கவிதை…” காகிதங்கள் ” !!!

 

காகிதங்கள்
………..
Natarajan….My Kavithai in http://www.dinamani.com ….published on 1st August 2016

வாரம் ஒரு கவிதை …” திருமண நாள் ” …!!!

 

திருமண நாள்
………….
முதல் திருமண நாள் …என்ன  பரிசு வாங்கலாம்?
எப்படி கொண்டாடலாம் அந்த நன்னாளை ?
கணவனுக்கும்  மனைவிக்கும் விடை தெரியா  கேள்வி !
முடிவே  இல்லாத விவாதம் விடிய விடிய !
விடிந்தது காலை .. தொடர்ந்தது  மீண்டும் விவாதம் !
பக்கத்து வீட்டு தம்பதியிடம் யோசனை கேட்டால் என்ன !
ஒரு சிறு பொறி தட்டியது மனதில் ! “எங்களுக்கும் இன்று திருமண
நாள்! … பொன்விழா ஆண்டு  நிறைவு !  … ஐம்பது ஆண்டு இனிய
இல்லற  வாழ்வே  இறைவன் தந்த  அரிய பரிசு எங்களுக்கு !
குறை ஒன்றுமில்லா ஒரு நிறைவான போதுமென்ற மனம்…
இதுவும் அந்த இறைவன் அருளிய வரமே  எங்களுக்கு !
உங்கள் இல்லற வாழ்வும் நல்லறமாக இனிதே செழித்து வளர
எங்கள் நல்லாசிகள் உண்டு உங்களுக்கு !
வாழ்க  வளமுடன்.. வளர்க நலமுடன் …வாழ்க பல்லாண்டு “
வாழ்த்தினார்   பெரியவர் !
வாழ்வின் அர்த்தம் புரிந்தது …வாழ்க்கையை  ஆரம்பித்தவருக்கு !
Natarajan
My Tamil Kavithai in http://www.dinamani.com dated 25th July 2016

வாரம் ஒரு கவிதை….” வாழ்க்கையின் தூரங்கள் ” !!!

 

வாழ்க்கையின்  தூரங்கள் …
……………………
வாழ்க்கை பயணத்தில் நீ   தாண்டும் ஒவ்வொரு படியும்  ஒரு
ஒரு மைல்  கல்லே !
பாரம் சுமையாகாத நேரம் உன்  பயணம்  சுவைக்கும் !… பயணிக்கும்
தூரமும் இனிக்கும் ! இது வரை
கடந்து வந்த தூரம் கணக்கிடும் உனக்கு   இனிமேல் கடக்க இருக்கும்
தூரம் என்ன என்று  தெரியுமா ?
வானத்தின் எல்லை என்ன என்று கணக்கிட்டு சொல்லும் நீ   உன்
வாழ்வின் தூரம்  எது வரை என்று சொல்ல முடியுமா ?
புரிந்து கொள் தம்பி நீ … காலமும்  நேரமும் கடந்து விட்டால் அது
திரும்பி  வராத  ஒரு பொக்கிஷம் என்று !
காலம் என்பது இறைவன்  உனக்கு கொடுத்த எழுதுகோல் …இந்த
எழுதுகோலில்  நீ எழுதியது எதையும் மாற்றி எழுத  ஒரு அழிப்பான்
இல்லை உன்னிடம் ! மறக்க வேண்டாம் நீ இதை !
காலத்தின் எழுதுகோலில் நீ எழுதும் ஒரு ஒரு எழுத்தும் காலத்தால்
அழியாத பொன்னெழுத்தாகட்டும் …நீ கடந்து வந்த வழித்தடம்
சொல்லட்டும் உன் புகழ் என்றென்றும் !
எத்தனை தூரம் நீ  கடந்து  வந்தாய் என்பது செய்தி அல்ல !
நீ நடந்து வந்த பாதை சொல்லும் செய்தி என்ன என்பதே செய்தி !
தூரத்தை கணக்கிட வேண்டாம் நீ …நேரத்தைக் கணக்கிடு  தம்பி !
இன்றே  செய் …அதுவும்  நன்றே செய் !
நடராஜன்
Tamil kavithai  of mine appeared in http://www.dinamani.com on 18 july 2016

” ஹைகூ: தமிழ்க் கவிதையின் கம்பீரம்…” !!!

 

“ஹைகூ ஒவ்வொன்றும் ஒரு தனிவார்ப்பு, பிசிறில்லாத சிறுசிற்பம், அலாதியான அழகு, கம்பீரம்” என ஹைகூ கவிதையின் திறத்தினைப் பறைசாற்றுவார் கவிஞர் தமிழ்நாடன். தமிழ்க் கவிதை உலகில் புதுக்
கவிதை அமைத்துத் தந்த தோரண வாயில் வழியாக 1984ல் தொடங்கிய ஹைகூ பயணம், இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. வாழையடி வாழையெனப் புதுப்புதுக் கவிஞர்கள் தோன்றி, ஹைகூவின் வளர்ச்சிக்குத் தங்களின் பங்களிப்பினை நல்கி வருகின்றனர்.
நெல்லை சு.முத்துவின் பார்வையில்,
“மூன்றடிச் சொற்செட்டுநேரடி அனுபவ வெளிப்பாடு
மூன்றாவது அடி மின்தாக்கு”
– என்னும் மூன்று பண்புகளும் பொருந்தியதே சிறந்த ஹைகூ கவிதை. பாடுபொருளாலும் பாடும்முறையாலும் சிறந்து விளங்கும் ஒரு சில ஹைகூ
கவிதைகள் குறித்து காண்போம்.

விலகி இருக்கும் மனித உறவுகள்

‘வெறுங்கை என்பது மூடத்தனம் – விரல்கள் பத்தும் மூலதனம்’
என்னும் எழுச்சி மிகு வைர வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் தாராபாரதி. அவரது உடன்பிறப்பு மலர்மகன். அவரும் ஒரு சிறந்த மரபுக் கவிஞர் ஆவார். ‘தொடர்பு எல்லைகளுக்கு அப்பால்…’ என்பது அவர் வெளியிட்டுள்ள ஹைகூ
கவிதை தொகுப்பு. அதில் இடம் பெற்றுள்ள ஹைகூ இது: “ தொடர்பு எல்லைக்கு அப்பால் -உறவுகள்”
இன்று உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உடனுக்குடன் மனிதனால் தொடர்பு கொள்ள முடிகின்றது. தொடர்பியல் அந்த அளவிற்கு இமாலய வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், தொடர்பு எல்லைக்குள் வாழும் மனித உறவுகளோ விலகி இருக்கின்றன.
குடும்ப உறுப்பினர்கள் இடையே இடைவெளியும் விரிசலும் மிகுந்து காணப்படுகின்றன என்பதை நயமாகப் பதிவு செய்துள்ளார் மலர்மகன். இல்லற வாழ்வின் பதிவு
இல்லற வாழ்வில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவ வேண்டுமானால், கணவன்–மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, ஒருவருக்காக மற்றவர் விட்டுக் கொடுத்துப் போவது தான் முக்கியம். ‘ஒருவர் பொறை இருவர் நட்பு’ என்னும் ஆன்றோர் அமுத மொழி. தங்கம் மூர்த்தி நகைச்சுவை உணர்வுடன் இல்லற வாழ்வின் இன்றியமையாத பக்கம் குறித்து இங்ஙனம் பாடியுள்ளார்:
“பட்டிமன்றம் முடிந்துதாமதமாய் வீடு திரும்பினேன்
வழக்காடு மன்றம்”
கள்ளங்கரவு கொஞ்சமும் இல்லாத – சூதுவாது சிறிதும் அறியாத – வஞ்சமோ சூழ்ச்சியோ துளியும் தெரியாத – குழந்தைகள் உலகினைப் பற்றிய அற்புதமான ஹைகூ கவிதைகளின் தொகுப்பு வசீகரனின் ‘குட்டியூண்டு.’ கவிதைத் தொகுப்பின் தலைப்பிலேயே கவித்துவம் கொலுவிருக்கக் காண்கிறோம். குழந்தைகள் உலகினை நடப்பியல் பாங்கில் வசீகரன் உள்ளது உள்ளபடி படைத்துக் காட்டியுள்ள ஹைகூ:
“ தனித்து நின்ற குழந்தையிடம்யார்நீ என்றதும் சொன்னது:
‘எங்க அப்பாவுக்கு நான் பொண்ணு!’”

ஹைகூவின் உயிர்ப் பண்பு

ஹைகூவுக்கு வலிமையையும் வனப்பையும் சேர்ப்பது அதன் ஈற்றடியே. இதனை, ‘படுத்துக் கொண்டே படித்தேன், துாக்கி நிறுத்தியது, ஹைகூவின் கடைசி வரி’ என ஹைகூ வடிவிலேயே படம்பிடித்துக் காட்டுவார் தெ.வெற்றிச்செல்வன்.
“ சுதந்திர தினம்மனதிற்குள் துக்கம்வந்தது ஞாயிற்றுக்கிழமை”
சுந்திர தினம் ஞாயிற்றுக்கிழமை வந்தால், ஒரு நாள் விடுமுறை அல்லவா இல்லாமல் போகும்? மனத்திற்குள் துக்கம் பொங்கி வராதா என்ன? என்கிறார் கவிஞர் நவதிலக். இல்லாவிட்டால் கவிஞர் மீராவும் காதலியைக் குறித்து, ‘கிழமைகளில் அவள் ஞாயிறு’ என்று பாடி இருப்பாரா? தமிழனின் விடுமுறை மோகத்தினை மென்மையாகச் சாடும் கவிதை இது!

வாசகரும் கூட்டுப் படைப்பாளி

‘கவிஞன் இறங்கிக் கொள்ள, வாசகன் அதன் மீது பயணம் தொடர்வான். அதுதான் ஹைகூ’ என்பர் அறிஞர். வேறு சொற்களில் குறிப்பிடுவது என்றால்,
‘ஹைகூ ஓர் உணர்வு நிலை, வாசகனைக் கவிஞனின் நிலைக்கு உந்தி உயரத் தள்ளும் மிகச் சிறந்த வடிவம் அது.’ இவ்விலக்கணத்திற்குக் கட்டியம் கூறும் பா.உதயகண்ணனின் ஹைகூ…
“காரைத் துடைத்துக்காசு கேட்டான்
எட்டிப் பார்த்தது நாய்”
இங்கே காரைத் துடைத்து விட்டுக் காசு கேட்பது ஒரு குழந்தைத் தொழிலாளி என்று தெளிவாகத் தெரிகிறது. ஆயின், ‘எட்டிப் பார்த்தது நாய்’ என்னும் ஈற்றடியில் இடம் பெறும் ‘நாய்’ என்பது யார்? புதியவர் எவரையேனும் கண்டால் குரைப்பது நாயின் இயல்பு. அது போல், சிறுவனிடம் தனது வெறுப்பை உமிழும் – விரட்டி அடிக்கும் – காரின் உரிமையாளரும் ஒரு வகையில் பார்த்தால் ‘நாய்’ தான்! கூர்மையாகச் சிந்தித்துப் பார்த்தால் கவிதையில் ஆழ்ந்திருக்கும் கவிஞரின் உள்ளம் புலனாகின்றது.
“எவன் கண்பட்டதுவிற்கவே இல்லை
திருஷ்டி பொம்மைகள்”
என்பது வித்தியாசமான பாடுபொருளைத் தன்னகத்தே கொண்ட செ.ஆடலரசனின் ஹைகூ.
‘திருநெல்வேலிக்கே அல்வா’ என்பது போல், ‘திருஷ்டி பொம்மைகளுக்கே’ திருஷ்டியாம்!

காலத்திற்கு ஏற்ற பாடுபொருள்

ஹைகூ கவிதையின் தனித்தன்மை காலத்திற்கு ஏற்ற, குறிப்பாக, இந்த நுாற்றாண்டிற்கே உரிய பாடுபொருட்களைக் கையாளுவதாகும். அவற்றுள் ஒன்று விளைநிலங்கள் இன்று விலைநிலங்கள் ஆகி வரும் கொடுமை ஆகும். பச்சைப் பசேல் எனத் திகழ்ந்த நெல் வயல்கள் எல்லாம், இன்று வானளாவ உயர்ந்து நிற்கும் அடுக்கு மாடிக் கட்டிடங்களாக உருமாறிவிட்டன. இதனை ரத்தினச் சுருக்கமான
மொழியில் பதிவு செய்துள்ளது செந்தமிழினியனின் ஹைக்கூ:
“ விளை நிலங்கள்விலை நிலங்களாயினவீடுகள்”
‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்பது பல்லாண்டு காலமாக அரசியல்வாதிகள் முதலாக தமிழ் ஆர்வலர்கள் வரை அயராது பறைசாற்றி வரும் கொள்கை முழக்கம். ஆயினும், நடைமுறையில் இன்னும் அந்தக் கனவு நனவாகவில்லை. இந்த கசப்பான உண்மையை – அய்யாறு ச.புகழேந்தி ஹைகூ கவிதை ஒன்றில் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்றாற் போல், காரசாரமாகப் பதிவு செய்துள்ளார்:
“ எங்கும் தமிழ்எதிலும் தமிழ்இல்லை”

வாழ்வியல் பதிவு

எட்டு மணி நேரம் துாங்கும் மனிதன் – எட்டு மணி நேரம் உழைக்கும் மனிதன் – ஒரு நாளில் எத்தனை மணி நேரம் வாழ்கிறான் என்று கேட்டால், அவனால் பதில் சொல்ல முடியாது. இந்த வாழ்வியல் உண்மையைப் பொட்டில் அடித்தாற் போல் எடுத்துரைக்கிறது இ.பரிமளாவின் ஹைகூ ஒன்று:
“ வாழ்நாளில்வாழ்ந்த நாள்?
விரல்களுக்குள்”
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடும் மென்மையான கருணை மனத்துக்குச் சொந்தக்காரர்கள் ஹைகூ கவிஞர்கள். பஞ்சு நெஞ்சு படைத்த அவர்கள், இலையுதிர் காலத்தில் உதிரும் இலைகளுக்காகக் கூட அழுகின்ற இயல்பினர். இவ் வகையில் நினைவுகூரத் தக்க ரமா ராமநாதனின் ஹைகூ இதோ:
“அடித்துத் துவைக்கமனமில்லை
சட்டையில் பூக்கள்!”
நிறைவாக ஈழத்து அறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி குறிப்பிடுவது போல்,
“தமிழ்க் கவிதை என்ற நதி வற்றாது ஓடுகிறது. தமிழை வளப்படுத்துகிறது, தமிழால் வளம் பெறுகிறது.”
அவரது இக் கூற்று இன்றைய ஹைகூ கவிதைக்கும் பொருந்தி வரும்

உண்மையே.-   பேராசிரியர் இரா.மோகன்எழுத்தாளர், மதுரைeramohan@gmail.com

Source….www.dinamalar.com

Natarajan

வாரம் ஒரு கவிதை….” காதல் கொலை ” !

 

காதல்  கொலை ….
…………….
அந்த சிறு பூவின் இதயத்தில் இல்லை  நீ என தெரிந்தும்  ஒரு
வாள் எடுத்து அந்த மலரின் இதயத்தை நீ பிளந்தது  ஏன் ?
காதல்  என்ன , கடையில் கிடைக்கும் கத்தரிக்காய் என
நினைத்தாயோ ….இல்லை ” நான் ஒரு ஆண் ” என்னும்
இறுமாப்பா  உனக்கு ?
உன் ஆணவ கொலை வெறியால் நசுங்கி பொசுங்கி விட்டதே ஒரு
சின்னஞ்சிறு  மலர்  இன்று …
காதலுக்காக “நான் செய்த ஒரு கொலை” என்று நீ சொல்வாய்!
ஆனால் நீ     வெட்டி சாய்த்தது ஒரு உயிரை மட்டுமல்ல …பலர் கண்
முன்னால் சரிந்து  வீழ்ந்த அந்த இளம் தளிரின் புன்னகை தவழும்
குழந்தை முகம் நினைத்து நினைத்து  தினம்  தினம் மனம் துடிக்கும்
என் போன்ற பலர்   உயிரையும்  சேர்த்துதான் …….
Natarajan

வாரம் ஒரு கவிதை… ” குடைக்குள் பெய்யும் மகிழ்ச்சி ….” !!!

 

குடைக்குள் பெய்யும் மகிழ்ச்சி !
……………………..
rain
அடை மழை வெளியில் ! …குடைக்குள் பெய்வது
குழந்தைகளின் மகிழ்ச்சி மழை !  தடை ஏதும் இல்லை
பிஞ்சுக் குழந்தைகளுக்கு குடைக்குள் கிடைக்கும்
இடம் பகிர்ந்துகொள்ள … மொழியும்  மதமும்  ஒரு
பொருட்டல்ல அவர் பேச , விளையாட ! பொறாமையும்
தீண்டாமையும் அவருக்கு தெரியாத “ஆமைகள் “!
சிறு  குடைக்குள் , கிடைத்த  இடத்தில் சிரித்து விளையாடும்
 இளம் தளிர்கள் இவை  வளர்ந்து தரையில்
வேரூன்றும் நேரம் ” ஆமைகள்” பல   குடைக்குள்
காலூன்றி அவர் நட்பின்  இறையாண்மைக்கு  உலை
வைக்கத் துடிப்பது ஏன் ? குடைக்குள் பெய்யும் மகிழ்ச்சி
மழையைத் தடுக்க நினைப்பது ஏன் ?
வளரும் இளம் தளிர்களே …போடுங்க தடை எல்லா “ஆமை”க்கும்
உங்க வாழ்வில் ! நுழைய முடியாது எந்த ஆமையும் உங்க குடைக்குள்
உங்களை  மீறி ! அடங்கும்  ஆமைகளும் வேறு வழியின்றி !
பொங்கிடும்   மனித நேயம் உங்க குடைக்குள் இன்று போல்
என்றும் !
Natarajan
My Tamil Kavithai in www .dinamani.com….published on 4th july 2016
natarajan

வாரம் ஒரு கவிதை….” எப்படி மறப்பேன் …” ?

Brother-Anslem

எப்படி மறப்பேன் ?
………………
அன்பும்  அறிவும் பண்புடன் பாசமும்
 ஒன்றுக்கு  ஒன்று குறையாமல்
 என்றும் உன் மாணவன்   வாழ்வில் இருக்க
 அன்றே வழி காட்டிய ஆசான்  அய்யா  நீ !
 எப்படி மறப்பேன் நீ காட்டிய வழியை நான் ?
 பள்ளி கணக்கில் கூட்டலும் கழித்தலும் உண்டு
 ஆனால் நன்னெறி வாழ்க்கைக்   கணக்கில் கூட்டலும்
  பெருக்கலும்  மட்டுமே என்று   சொன்னவன் அய்யா நீ !
 உன் மாணவன் நான் …இன்றும் உன் மாணவன்தான் !
 எப்படி  மறப்பேன்  உன் பாடத்தை  நான் ?
 தமிழ் செய்யுள் பாடம் படிக்கும் நேரம்  …செய்ய முடியும்
 செய்யுள் ஒன்று உன்னாலும்  என்று சொல்லி நாலடி
 கவிதை பல என்னை எழுத வைத்து நீயும் நல்ல கவிஞன் ஆவாய்
 ஒருநாள் என்று நீ சொன்ன சமயம் விண்ணில் பறந்தேனே  நான் !
 எப்படி  மறப்பேன் உன்னை  நான் இன்று ?
 தினம் ஒரு திருக்குறள் கரும்பலகையில் எழுதி வாழ்க்கையின்
 நியதி என்னவென்று  உன் மாணவர்கள் மனதில் பதிய வைத்த
 ஒரு நல்ல ஆசிரியர்  நீ …இன்றும்  அதுவே என் வாழ்வின் மந்திரம் !
 எப்படி மறப்பேன் நான் என் வாழ்வை சிறக்க வைத்த உன்னை ?
Natarajan
My Kavithai published in http://www.dinamani.com  on 27th June 2016