Message For the Day…” As Senses are Unreliable ,Reactions Produced are also Equally Unreliable…”

You hear some good news and a little later, you hear some sad news. Sometime after that you hear harsh and abusive words. Your ears heard all words of praise and blame alike. But when happy news was told, your heart felt elated, and it shrunk when sad news was heard. The same heart got enraged when the ears heard harsh words and was filled with joy when it heard words of praise! The ears by themselves are incapable of any reaction; they merely transmit the message. Thus the senses by themselves are not conscious, they are inconscient (Jada). Then how can the operations of these senses and the experiences resulting from them be deemed as Truth or Reality (Sathya)? Understand clearly that as the senses are unreliable, the reactions produced by them are also equally unreliable. If you enquire along these lines, you will develop discrimination and can easily overcome sorrow.

 

Sathya Sai Baba

 

 

 

” இன்று தத்தாத்ரேயா ஜெயந்தி … ”

 

 

 

Temple images

மனிதன் இயற்கையை மதிக்கத் தவறியதால் தான், இன்று, மழை பெய்வது அரிதாகி விட்டது. ஆனால், அந்தக் காலத்தில் அப்படி இல்லை. புழு, பூச்சியைக் கூட தன் குருவாக நினைத்தான் மனிதன். கடவுளே மானிடப் பிறப்பெடுத்து, இயற்கையை குருவாக ஏற்று, அதனிடமிருந்து பாடம் கற்றுக்கொண்ட கதை தெரியுமா உங்களுக்கு?

அத்திரி முனிவரின் மனைவி அனுசூயா, கணவனின் மனம் அறிந்து நடக்கும் பதிவிரதை, கணவனிடம் மிகுந்த பக்தி கொண்டவள். இவள், மும்மூர்த்திகளின் தரிசனம் வேண்டி, தவமிருந்தாள். இதையறிந்த மும்மூர்த்திகளும் அவள் முன், துறவிகள் வடிவில் வந்தனர். அவளது பெருமையை உலகறியச் செய்வதற்காக, தங்களுக்கு நிர்வாணக் கோலத்தில் பிச்சையிடும்படி வேண்டினர். கற்புத்தெய்வமான அனுசூயா, தன் கணவர் அத்திரி மகரிஷியை மனதில் நினைத்து, அவர்கள் மீது, அவர் பாதத்தைக் கழுவிய தீர்த்தத்தை தெளித்தாள். உடனே, மும்மூர்த்திகளும், மூன்று குழந்தைகளாயினர். அந்தக் குழந்தைகளை அத்திரி மகரிஷி ஒன்று சேர்த்து, தத்தாத்ரேயன் என்று, பெயரிட்டு வளர்த்து வந்தார்.

ஒரு நாள், காட்டிற்கு வேட்டையாட வந்த, யது என்ற மன்னன், காட்டில் தத்தாத்ரேயர் ஆனந்தமாக இருந்ததைக் கண்டு, ஐயனே… உலகில் உள்ள ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கவலையுடன் வாழுந்து வரும் நிலையில், நீங்களோ வெகு ஆனந்தமாக இருக்கிறீர்களே… உங்களுக்கு இத்தகைய ஆனந்த மார்க்கத்தை கற்றுக் கொடுத்த குரு யார், எனக்கும் கூறுங்கள்… என்று, கேட்டான். எனக்கு ஒன்றல்ல பல குருமார்கள் இருக்கின்றனர். அதில், இந்த பூமிதான் முதல் குரு; இதனிடமிருந்து பொறுமையையும், பிறருக்கு நன்மை செய்வதையும் கற்றேன். தண்ணீரிடமிருந்து, சுத்தத்தைக் கற்றேன். எல்லாரிடமும் பழகினாலும், யாரிடமும் பற்று வைக்காத குணத்தை, காற்றிடம் படித்தேன்.  பரந்து விரிந்திருந்தாலும், எதனிடமும் தொடர்பு இல்லாதது வானம். அந்த தொடர்பற்ற நிலையை ஆகாயமே எனக்கு தெரிவித்தது. ஒரே சூரியன் என்றாலும், எல்லா குடங்களின் நீரிலும் பிரதிபலிப்பது போல, பல சரீரங்களை ஒரே ஆத்மா எடுப்பதைப் பார்த்தேன். வேடனின் வலையில் சிக்கிய புறாக்களைப் பார்த்து, தானும் சிக்கிய தாய் புறாவைப் பார்த்து, பாசபந்தமே துன்பத்திற்கு காரணம் என, உணர்ந்தேன்.

உணவுக்காக தூண்டிலில் சிக்கிய மீனைப் பார்த்து, ஆசையே சுதந்திரத்தை இழப்பதற்கு காரணம் என்பதை, அறிந்தேன். தேனீக்கள் சேர்த்த தேனை, யாரோ ஒருவன் கொண்டு போனதைப் பார்த்து, பொருளை தானம் செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தேன். உணவுக்காக அங்கும் இங்கும் அலையாமல் இருந்த இடத்திலிருந்த படியே கிடைக்கும் உணவைக் கொண்டு திருப்தியடையும் மலைப்பாம்பைப் போல், நானும் திருப்திப்பட வேண்டும் என, உணர்ந்தேன்… என்று, அடுக்கிக் கொண்டே போனார். பார்த்தீர்களா… இயற்கை நமக்கு நன்மைகளை மட்டுமல்ல, உலகவியல் வாழ்வுக்கும் ஆசானாக இருக்கிறது. இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் கருத்தூன்றி பார்ப்பதுடன், பாதுகாக்கவும் செய்யுங்கள். தத்தாத்ரேயர் ஜெயந்தி, வைகாசி தசமியன்று நடக்கும். கோவை மாவட்டம் குமாரலிங்கம் கிராமத்தில், தத்தாத்ரேயருக்கு கோவில் உள்ளது. பழநியிலிருந்து, 21 கி.மீ., உடுமலையிலிருந்து, 18 கி.மீ., தூரத்தில் இவ்வூர் உள்ளது.

source::::DINAMALAR…TAMIL DAILY.

Natarajan

 

Message For the Day…” It is Essential to Listen to Spiritual Discourses again and again…”

A true devotee would never get disgusted at any point of time, nor get bored, tired or vexed listening to the same teachings. You may perhaps be hearing the same message over and over again from Bhagawan! How do you rationalize this? Don’t you take food repeatedly for the same stomach, several times during your lifetime? Don’t you wash the same face many times in a week? That music, which you consider as pleasurable, don’t you listen to it, many times frequently? Consider an even simpler example: you drink coffee or tea – have you ever got bored of it, despite consuming it for 15 or 20 years? You perhaps wait for that cup with excitement and enthusiasm, and will even get a headache if it is delayed by a couple of minutes! Similarly, it is essential to listen to such spiritual instructions, ruminate and experience the joy of devotion without the slightest feeling of disinterestedness.

 

Sathya Sai Baba

” மேலும் பல மாரி ஸ்தலங்கள் உருவாக வேண்டும் …”

’’தண்ணீருக்காக மூன்றாம் உலகப் போர் அல்ல.. உள்நாட்டுக்குள்ளேயே யுத்தம் தொடங்கிவிட்டது. ஆனாலும், நாம் நீர் ஆதாரங்களை பாதுகாக்க தவறிக் கொண்டிருக்கிறோம்’’ என்கிறார் பியூஷ் மானுஷ்.

ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்டது பியூஷ் மானுஷின் குடும்பம். பியூஷ் பிறந்தது சேலம் என்பதால் அவர் தமிழராகவே மாறிவிட்டார். முற்போக்கு சிந்தனை கொண்ட பியூஷ் கல்லூரியில் படிக்கும்போதே கல்வி தனியார் மயமாவதை எதிர்த்து போராட்டம் நடத்தினார்.

விளைவு, இரண்டாம் ஆண்டிலேயே வீட்டுக்கு வழியனுப்பப்பட்டார். படித்தது போதும் என முடிவுக்கு வந்தவர், மக்களைப் படிக்க ஆரம்பித்தார். அப்புறம் நடந்தவைகளை அவரே நம்மிடம் விவரிக்கிறார்.

’’குடிக்க தண்ணீர் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் மக்களிடம் குடிநீர் ஆதாரங்களை பாதுகாப்பது குறித்து அக்கறை இல்லை. இதனால் தனியார் நிறுவனங்கள் தண்ணீர் தேசங்களை பாலைவனமாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. சேலத்தைச் சுற்றி கிரானைட், பாக்சைட் கம்பெனிகள் சுரங்கம் அமைத்து 28 சதுர கிலோ மீட்டர் ஏரியாவை செயற்கை பாலைவனமாக ஆக்கிவிட்டார்கள். இங்கு ஓடிய 5 ஆறுகளை காணவே இல்லை. ஒன்றிலிருந்து ஒன்று நிரம்பும் வகையில் வடிவமைக்கப்பட்ட 30 சங்கிலித் தொடர் ஏரி கட்டமைப்பை நாசம் பண்ணிவிட்டார்கள்.

இயற்கைக்கு எதிரான இந்த அழிப்பு நடவடிக்கைகளை கண்டித்து கடந்த 10 வருடங்களாக போராடுகிறோம். போராட்டம் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வாகாது என்பதால் ஏரிகளை தூர்வாரும் பணிகளையும் தொடங்கினோம். எங்களது ’சேலம் மக்கள் குழு’வில் சமூக ஆர்வலர்கள் 70 பேர் இருக்கிறோம். முதலில், 58 ஏக்கர் பரப்பளவுள்ள சேலம் மூக்கனேரியை தூர்வாரி ஏரிக்குள் 48 திட்டுக்களை அமைத்தோம். ஒவ்வொரு திட்டிலும் 300 மரக்கன்றுகளை நட்டோம். ஒரே வருடத்தில் மரங்கள் வளர்ந்து இப்போது அங்கே பறவைகள் சரணாலயமே உருவாகிவிட்டது. இப்போது அந்த ஏரிக்கரையில் பூங்கா அமைக்கும் பணி நடக்கிறது.

முன்னதாக அம்மாபேட்டை ஏரியில் நடந்த தூர்வாரும் பணிகள்.

முன்னதாக அம்மாபேட்டை ஏரியில் நடந்த தூர்வாரும் பணிகள்

 

ஏரி தூர்வாரப்பட்ட பிறகு, தற்போது அங்கு நீர் நிரம்பி இயற்கை எழிலுடன் கண்கொள்ளாக் காட்சியாகத் திகழும் அம்மாபேட்டை ஏரி | உள்படம்: பியூஷ் மானுஷ்.

ஏரி தூர்வாரப்பட்ட பிறகு, தற்போது அங்கு நீர் நிரம்பி இயற்கை எழிலுடன் கண்கொள்ளாக் காட்சியாகத் திகழும் அம்மாபேட்டை ஏரி | உள்படம்: பியூஷ் மானுஷ்.   

 

 

இதேபோல், சுகாதாரச் சீர்கேட்டின் மொத்த உருவமாய் இருந்த சேலம் அம்மாபேட்டை ஏரியையும் சவாலாக எடுத்து தூர்வாரினோம். 39 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த ஏரியில் 37 திட்டுக்களை அமைத்து சிறுவர்கள் பூங்கா, தியான மண்டபம் உள்ளிட்டவைகளை உருவாக்கினோம். அடுத்ததாக இஸ்மாயில்கான் ஏரியின் வரத்துக்காலை நாலரை கிலோ மீட்டருக்கு தூர் வாரி தண்ணீரை கொண்டு வந்து சேர்த்தோம்.

இந்தப் பணிகள் அனைத்துமே சேலம் மக்களிடமிருந்து சிறுகச் சிறுகச் சேர்த்த நிதியிலிருந்துதான் செய்து முடித்திருக்கிறோம். தண்ணீர் பிடிப்பு பகுதிகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் மலைகள் மீது முருகனை உட்கார வைத்தோம். ஆனால், பணத்தாசை பிடித்தவர்கள் அந்த மலைகளையே உடைத்து விற்று காசாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதைத் தடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அனைவருக்கும் இருக்கிறது.

மாரியாத்தா கோயிலுக்கு ஒரு கோடி ரூபாய் செலவு செய்து கும்பாபிஷேகம் நடத்துகிறார்கள். நீர்நிலைகள்தான் உண்மையான மாரி. அவைகளை சீரமைக்க எத்தனை கோடிகளை வேண்டுமானாலும் செலவழிக்கலாம். அதனால்தான் நாங்கள் தூர்வாரி செப்பனிட்ட ஏரிகளுக்கு ’மாரி ஸ்தலம்’ என்று பெயர் வைத்திருக்கிறோம். இதைப்போல் ’மாரி ஸ்தலங்கள்’ எல்லா ஊர்களிலும் உருவாக வேண்டும்’’ என்று கூறி பிரமிக்க வைத்தார் பியூஷ் மானுஷ்.

Keywords: நீர் ஆதாரங்கள், பியூஷ் மானுஷ், தூர் வாரும் பணி, நீர் நிலைகள், நீர் பாதுகாப்பு, குடிநீர் பாதுகாப்பு, ஏரிகள்
Topics: சமூகம்| பதிவுகள்| பார்வைகள்| பொது|

source:::: THE HINDU…TAMIL

NATARAJAN

Message For The Day…” When the Mind is Brought Under Control All Sorrows Cease…”

Desires are a source of pleasure for man, but they are also the cause of grief. The mind has to be brought under control. Even thousands of men cannot hold back a fast-moving train. But the train comes to a stop the moment brake is applied. The same applies to the vagaries of the mind. When the mind is controlled, all sorrows cease. The Divine Atma, which dwells in the heart of every human being, is not recognized because it is covered by the clouds of desire. The splendour of the sun is revealed when a wind drives away the clouds that hide the sun. Likewise, when the wind of love blows away the clouds of desire in the heart, the ego (‘I’ ness) and possessiveness (sense of ‘mine’) are driven out and the effulgence of the Atma within is revealed in all its glory.

Sathya Sai Baba

” விளையும் பயிர் …தெரியும் முளையிலே … ” வாருங்கள் வாழ்த்துவோம் !!!

 

21மேA
2014
18:43  

 

கோவையில் சமீபத்தில் கானுயிர் (வைல்டு லைப் போட்டோகிராபி) புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
புகைப்படக்கலைக்காகவும்,புகைப்படக்கலைஞர்களுக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள பெஸ்ட் போட்டோகிராபி தமிழ் இதழின் ஆசிரியர் பழனிக்குமார் இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
மாநில அளவில் சிறந்து விளங்கும் வைல்டு லைப் போட்டோகிராபர்களின் படங்கள் நுாற்றுக் கணக்கில் இடம் பெற்றிருந்தது.இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்த புகைப்படங்கள் தரவரிசைப்படுத்தி அதற்கு மெகா பரிசுகள் வழங்கப்பட்டது.
பரிசு வழங்குவதற்காக கண்காட்சியில் இடம் பெற்றிருந்த படங்கள் அனைத்தையும் நடுவர்கள் அலசி ஆராய்ந்து பின் பரிசுக்குரிய படங்களை தேர்வு செய்து அறிவித்தனர்.
ஐந்து ஆந்தைகள் கொண்ட ஒரு ஆந்தை குடும்பம் பட்டுப்போன ஒரு பனைமரத்தில் இருந்து எட்டிப்பார்ப்பது போன்ற படத்திற்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டது.
பொதுவாக ஆந்தைகள் பகலில் தென்படுவது என்பதே அபூர்வம், இந்த நிலையில் ஐந்து ஆந்தைகள் ஒரு சேர ஒரே இடத்தில் இருப்பது என்பதும் அதை படம் எடுப்பது என்பதும் ஆபூர்வத்திலும் அபூர்வம்.
வைல்டு லைப் போட்டோகிராபியில் காத்திருத்தலும்,பொறுமையையுமே மிக முக்கியம்,அந்த வகையில் இந்த படத்தை எடுக்க சம்பந்தப்பட்ட போட்டோகிராபரின் காத்திருத்தல் தன்மைக்காக சேர்த்து இந்த முதல் பரிசு வழங்கப்படுகிறது என்றனர்.

11 வயது சிறுமி

: இந்த படத்தை எடுத்து முதல் பரிசு பெறப்போகும் அந்த போட்டோகிராபர் யார் என்பதை அறிய அனைவருக்கும் ஆவல் எழுந்தது.
மேடையில் பெயர் அறிவிக்கப்பட்டதும் பார்வையாளர் பகுதியில் இருந்து எழுந்து மேடைக்கு வந்த அந்த 11 வயது சிறுமியைப் பார்த்த பரிசு வழங்குபவர்கள் அப்பா,அல்லது அண்ணன் எடுத்த படத்திற்காக அவர்களது சார்பில் பரிசை வாங்க வந்திருப்பார் போலும் என்று எண்ணினர். ஆனால் அந்த படத்தை எடுத்தததே சாட்சாத் அந்த சிறுமிதான் என்றதும் அரங்கமே ஆடிப்போனது.பலத்த கரவொலியுடன் பரிசும் வழங்கப்பட்டது.
யார் அந்த சிறுமி
பெயர் சிதாரா
பொள்ளாச்சி பக்கம் உள்ள சித்தமடை என்ற மலையடிவார கிராமத்தை சேர்ந்தவர்.சின்மயா பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கவிருக்கிறார்.படிப்பிலும்,விளையாட்டிலும் படு கெட்டி.விவசாய குடும்பம்.
அப்பா அருள் கார்த்திகேயன் மற்றும் மாமா பிரகாஷ் ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு காட்டில் சென்று புகைப்படங்கள் எடுப்பது என்பது மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு.அப்படி காட்டிற்கு போகும்போதெல்லாம் சிதாரவையும்,சிதாராவின் அண்ணன் அகஸ்தியாவையும் உடன் அழைத்து செல்வர்.எட்டு வயதிருக்கும் போதே கேமிராவை துாக்கிய சிதாராவை செதுக்கியதில் பெரும் பங்கு அகஸ்தியாவிற்கு உண்டு.
அபரிமிதமான ஆர்வத்தோடு இவர் எடுத்த பறவைகள் மற்றும் விலங்குகளை பார்த்த பள்ளி நிர்வாகம் சித்தாராவிற்கு புகழ் மாலை சூடியுள்ளது.இதே போல பல்வேறு பார்வையாளர்களும் சித்தாரவின் புகைப்படங்களை பார்த்து பாராட்டி வருகின்றனர்.கோவை பக்கம் உள்ள பேரூர் பகுதிக்கு போயிருந்த போது எடுத்ததுதான் அந்த ஆந்தை குடும்ப படம்.

 

சர்வதேச போட்டியில்:

முதல் முறையாக கோவை புகைப்பட கண்காட்சியில் இவர் வைத்திருந்த படத்திற்கு முதல் பரிசு கிடைத்தது.இதை அடுத்து சர்வதே அளவில் லண்டனில் நடக்கும் வைல்டுலைப் போட்டோகிராபி போட்டிக்கு சித்தாரவின் படங்கள் அனுப்பிவைக்கப்பட்டது.
தற்போது பல்வேறு கட்டங்களைதாண்டி தேர்வுக்குழுவின் இறுதிக்கட்ட பார்வைக்கு படம் போயுள்ளது,நிச்சயம் பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
சித்தாரவின் புகைப்பட திறமையை ஊக்கப்படுத்தி அவரை பெரியளவில் கொண்டு வருவதற்கான உழைப்பு அவரது தாயார் காயத்ரிக்கு உண்டு.இதற்கான உழைப்பில் அவர் களைப்படைவது கிடையாது.
சிதார இப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேமிராவை துாக்கிக்கொண்டு காட்டிற்கு கிளம்பிவிடுகிறார்.பெரும்பாலும் துணைக்கு அண்ணன் அகஸ்தியா வருவது உண்டு.காட்டை நேசிக்க ஆரம்பித்ததால் சிதாரா பிளாஸ்டிக்கை எந்த ரூபத்திலும் உபயோகிப்பது இல்லை என்று சபதமே எடுத்துள்ளார் ,மேலும் படித்து வனத்துறை அதிகாரியாகத்தான் வருவேன் என்றும் இப்போதே முடிவெடுத்துள்ளார்,விவசாயத்தையும்,இயற்கையையும் பெரிதும் நேசிக்கிறார். இதெல்லாம் வைல்டு லைப் போட்டோகிராபி தந்த நல்ல குணங்கள் என்றும் சொல்லி புன்னகைக்கிறார்.

எல்.முருகராஜ்   in DINAMALAR…TAMIL DAILY

Natarajan

“இது நட்பு இல்லை என்றால் வேறு எது நட்பு …” ?

 

வெங்கட்பிரபு

வெங்கட்பிரபு

திரைப் பிரபலங்களின் சமூக வலைதள செயல்பாடுகள் அவ்வபோது பரபரப்பை ஏற்படுத்தி வருவது இப்போது வழக்கமாகிவிட்டது. சர்ச்சைக்காக மட்டுமின்றி, சில நல்ல விஷயங்களும் பிரபலமாகி வருகின்றன.

திரைப்பட இயக்குனர் வெங்கட்பிரபு, சமூக வலைதளங்களான ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் தொடர்ந்து தமது கருத்துகளைப் பகிர்ந்து வரும் சினிமா பிரபலங்களில் ஒருவர்.

இந்த நிலையில், அவர் இன்று பதிவேற்றிய ட்வீட் மற்றும் ஸ்டேட்டஸ் ஒன்று, தமிழ் இணையவாசிகள் பலரால் பாரட்டப்பட்டும் பகிரப்பட்டும் வருகிறது. அதன் விவரம்:

“ஒரு வருடத்திற்கு முன்னால், டெல்லியில் ஓடும் பேருந்தில், தன் கண் முன்னால் தன்னுடைய தோழி 6 கயவர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாவதைக் கண்டார். இரும்புக் கம்பியால் அடி வாங்கியும் தன்னால் இயன்ற அளவு போராடினார். அந்த இளைஞரின் காலை குற்றவாளிகள் உடைத்தனர். அவரது உடைமைகளைத் திருடினர், ஆடைகளை கிழித்து நிர்வாணமாக்கினர், அவரது தோழியை இரும்பு கம்பியைக் கொண்டு மேலும் சிதைத்தனர். அந்தப் பனி மிகுதியான இரவில் ஓடும் பேருந்திலிருந்து, தனது தோழியுடன் அவரும் வெளியே தூக்கி எறியப்பட்டார்.

உடலில் ஆடைகளின்றி, போராடத் தெம்பின்றி, ரத்தம் கசிய இருவரும் ரோட்டோரத்தில் கிடந்தனர். அப்போதும் அந்த இளைஞர் அவ்வழியே சென்ற கார்களை தடுத்து நிறுத்தி உதவி கோர முயன்றார். தனது தோழியின் உடலை மூட ஒரு சால்வை வேண்டி வழியில் வந்தவர்களிடம் கெஞ்சினார். அவர் கோரியது 40 நிமிட போரட்டத்திற்கு பின்னர்தான் கிடைத்தது.

தொடர்ந்து தன் தோழியை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சேர்த்து, போலீஸுக்கு தகவல் தந்து, தோழியின் பெற்றோர்களை அழைத்து, அந்த நேரத்திற்கு தேவையான எல்லா உதவியையும் ஓர் உண்மையான நண்பராகச் செய்தார். அந்த இளைஞரால் எளிதாக அந்தப் பேருந்திலிருந்து தப்பித்திருக்க முடியும். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. தோழியை அப்படியே ரோட்டில் தவிக்க விட்டுச் சென்றிருக்க முடியும். செல்லவில்லை. (நிர்பயாவின் தந்தை வெட்கமின்றி உத்தரப் பிரதேச முதல்வரிடமிருந்து 25 லட்ச ரூபாய் நிதியும், தனது மகனுக்கு வேலையும், இன்னும் தன் மகளின் பெயரில் வந்த எத்தனையோ சலுகைகளையும் பெற்றுக் கொண்டார்.)

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஊடகங்கள் இதற்குத் தந்த வெளிச்சத்தில் புகழும் பணமும் சம்பாதித்திருக்க முடியும். அதையும் அந்த இளைஞர் செய்யவில்லை. தனது சிகிச்சைக்கு அரசாங்கத்திடமிருந்து நிதி பெறவில்லை. செய்தி ஊடகங்களில் அடிக்கடி பணத்திற்காக தோன்றி பேசியிருக்கலாம். அதையும் தவிர்த்தார். இது நட்பு இல்லையென்றால் வேறு எதை நட்பு என்று சொல்லுவது?

ஒரு தேசமே ஒரு பெண்ணுக்காக வெகுண்டபோது, அந்தப் பெண்ணின் நண்பர் அந்த இரவில் செய்த எதைப் பற்றியும் யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அந்த இளைஞர் திரை நட்சத்திரமோ, கிரிக்கெட் வீரரோ அல்ல, அவரது பெயர் அவிந்த்ர பிரதாப் பாண்டே. உத்திரப் பிரதேசம் கோர்க்‌ஷாபூரைச் சேர்ந்த இவர் தன் தோழியை உண்மையாக நேசித்தார். இப்படி ஒரு நண்பர் இருக்கும்போது ஏன் அமெரிக்கர்களை காப்பியடித்து ஆகஸ்ட் 3-ஆம் தேதி நண்பர்கள் தினத்தை நாம் கொண்டாட வேண்டும்?

அவிந்த்ராவை பெருமைப்படுத்தும் வகையில், உண்மையான நட்பு எது என்று காட்டிய அவரது மன உறுதியை கௌரவப்படுத்தும் வகையில் இந்தியாவில், நண்பர்கள் தினத்தை டிசம்பர் 16-ஆம் தேதி கொண்டாட வேண்டும். இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். நான் சொல்வது சரியா? ஆம் என்றால் இதைப் பகிருங்கள், உங்களது கருத்துக்களையும் இங்கே தெரிவியுங்கள்” என்று வெங்கட்பிரபு எழுதியுள்ளார்.

வெங்கட்பிரபுவின் பதிவு http://fb.me/1uQ74prdB

source::::::THE HINDU…TAMIL Daily
natarajan

Antarctica is losing 159 billion tons of land ice every year …

 


This is Antarctic land ice, not sea ice, which in recent years has expanded. The land ice loss is now thought to drive 0.43 millimeters of global sea level rise per year.

Antarctica

Antarctica is losing land ice much faster than previously measured. Overall, Antarctica is losing 159 billion (“yes, billion, with a b”) tons of ice every year. That’s enough land ice from Antarctica to push global sea levels up by 0.43 millimeters (0.017 inch) per year. We are talking about land ice here, not sea ice, which has been spreading out around Antarctica in recent winters. Previous measurements (made from 2005 to 2010) were lower, closer to 100 billion tons per year. The new information comes from CryoSat, a European Space Agency Earth-observing satellite. Cryosat has been using a radar instrument specifically designed to measure the shape of the ice sheet. The new information is published online in the journal Geophysical Research Letters. It comes out only about a week after scientists at the University of California and NASA announced that the loss of six major Antarctic glacier to the sea appears inevitable and in the same week that the Union of Concerned Scientists released a report showing 30 U.S. landmarks at risk from climate change.

Phil Plait has a good article about ice loss from Antarctica in his blog on Slate

 

source:::: Earth sky news site

natarajan

Message For the Day…” True Knowledge is to Gain Control Over Senses… “

All human activities must be undertaken with the sole aim of pleasing God. To attain such exalted heights, you must acquire true spiritual knowledge. Spiritual wisdom aids in subduing the senses. Ravana learnt 64 disciplines of education and was an expert in many fields. However he has been labeled foolish and ignorant. Why? He was a slave to the senses. Rama, though learnt only 32 disciplines, subdued His senses and hence is exalted even today. Learning from this, all educated people must realize that a truly knowledgeable person is one who gained control over their senses. People who accomplished this significant inner victory are excellent examples portraying clearly the element of devotion.

Sathya Sai Baba

 

Message For the Day…” Always Keep Ready Stock of Truth, Right Conduct…”

When fire rages and gets destructive, you immediately try to put it out by throwing sand and water, is it not? In most buildings, people keep a stock of these in readiness. Are you aware that you have six flames burning inside you? They are lust, anger, greed, attachment, pride and hatred. They can emerge any time. What do you have in store to put them out? Always keep a ready stock of Truth, Right Conduct, Peace, Love and Non-Violence in plenty. These five will help you scotch the flames of your six enemies, whenever they are lit; these values are very effective extinguishers.

 

sathya sai baba