Message For The Day…” Happiness Begins to Dawn When Desire is Totally Eradicated “….

Your life is a long journey. You should have fewer luggage (desires) in this long journey of life. There­fore it is said, “Less luggage, more comfort, makes travel a pleasure.” So ceiling on desires is what you have to adopt today. You have to cut short your de­sires day by day. You are under the mistaken notion that happiness lies in the fulfillment of desires. But in fact, happiness begins to dawn when desires are totally eradicated. When you reduce your desires, you advance towards the state of renunciation. You have many desires; what do you get out of them? You are bound to face the consequences when you claim something as yours. You will be blissful the moment you give up ego and attachment.

Sathya Sai Baba

 

“பணத்துக்காக எதையும் விடாதே …”

கும்பகோணம் ரங்கராஜ ஐயங்கார் (இன்றைய அஹோபில மட ஜீயங்கார் ஸ்வாமிகள்) 1971ம் வருடம் ரிக்வேதம் பயின்றதும் அதன் பின் வைதீகத் தொழிலில் தன் ஜீவனத்தை மேற்கொள்ளலாமென்று நினைத்ததும் சரிதான் என்றாலும் மஹாபெரியவா அதற்கான உத்தரவைத் தரவில்லை.

அந்த வைணவ அன்பர் 1968ம் ஆண்டிலிருந்தே மஹாபெரியவாளின் பக்தர்களில் ஒருவர். வைதீகத் தொழில் வேண்டாம் என்ற அவரிடம் மஹான் என்ன சொன்னார் தெரியுமா?

“நீ மேற்கொண்டு எல்லா வேதங்களையும் படிக்கணும். அதற்கு உபகாரம் செய்ய நான் ஏற்பாடு பண்றேன். நீ மேலே படி” என்று அன்புக் கட்டளை இட்ட மஹான், அவர் குடும்பம் நடத்த மாதம் ரூ.200/- கொடுக்க ஏற்பாடு செய்ததோடு நில்லாமல், சுயமாக அவரே தனது ஆகாரத்தை சமைத்து சாப்பிடும் உயர்ந்த வழக்கத்திற்கும் வழி செய்து அருளினார்.

ரங்கராஜ ஐயங்காரின் குடும்பமோ பெரியது. இவருடைய சகோதரிகளின் திருமணத்தையும் தமது கருணை உள்ளத்தால் பெரியவா நடத்தி வைத்தார்.

மஹான் பண்டரிபுரத்தில் இருந்தபோது ஐயங்கார் ஸ்வாமிகள் அங்கே சென்று அவரை நமஸ்கரித்தார். அப்போது மஹான் அவரிடம் கேட்டார்:

“நீ எனக்கு நமஸ்காரம் செய்யலாமா?”

அதற்கு ஐயங்கார் ஸ்வாமிகள் சொன்ன பதில்:
“எங்கள் சம்பிரதாயம் பிரகாரம் யக்ஞோபவீதம், சிகை இல்லாத சன்னியாசிகளை தரிசித்தாலே ஸ்நானம் செய்யணும்னு இருக்கு” என்றார்.

“அப்போ நீ ஏன் எனக்கு நமஸ்காரம் செய்யறே?”

“சாட்சாத் விஷ்ணு அம்சம்தான் இந்த ஜோதி ஸ்வரூபம் என்று எனக்குத் தோன்றுகிறது” என்று தன் வைணவப் பார்வைக்கு ஈஸ்வரரான மஹா பெரியவா அருளிய தரிசனத்தை மெய்சிலிர்ப்போடு கூறி மகிழ்ந்தார்.

இந்த பரம பக்தரான வைணவப் பெரியவருக்கு மஹானின் அருள், ஒரு அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியது.

இவரது குடும்பம் பெரியதென்றாலும் அதை நன்றாக நடத்திச் செல்லக்கூடிய அளவுக்கு வருமானமே இல்லை. சகோதரிகளின் திருமணம், தினசரி நடைமுறைகளுக்குத் தேவையான பொருட்கள் வாங்க, இதர காரியங்கள் எல்லாவற்றிற்கும் பணம் தேவை. தொடர்ந்து வேதங்களைக் கற்றுக் கொள்ள இவர் முயற்சி செய்து கொண்டு இருந்தபோதுதான் 1978ம் வருடம் இவரை ஜெர்மனிக்கு வரச்சொல்லி ஒரு அன்பர் கேட்டுக் கொண்டார்.

“ஜெர்மனிக்குச் சென்றால் கை நிறையப் பணம். அதனால் குடும்பத்தின் வறுமை நீங்கும்” என்றெல்லாம் ஐயங்கார் ஸ்வாமிகளின் உள்ளத்தில் ஆசை தோன்ற ஆரம்பித்தது. மாத சம்பளம் மூவாயிரம். அத்துடன் திரும்பி வரும்போது கையில் மூன்று இலட்சம் பணம் தரப்படும் என வாக்குறுதி. இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் இருந்தால் தன் குடும்பம் ஒரு நல்ல நிலைமைக்கு வரும்” என்று நினைத்த ஐயங்கார் ஸ்வாமிகள் அழைப்பு விடுத்தவரிடம் வருவதாக ஒப்புக் கொண்டு ‘மேற்கொண்டு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்’ என்று சொல்லிவிட்டார்.

எல்லா ஏற்பாடுகளும் துரிதமாக நடந்து, அக்டோபர் 31ம் தேதி புறப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இவ்வளவு நடந்திருந்தும், இதுபற்றி இவரது கிராமத்தில் இருந்த தந்தையிடம் கூட சொல்லாமல் மிகவும் இரகசியமாக வைத்திருந்தார். அவரிடம் சொல்லாமல் அயல் நாட்டிற்குப் போக முடியுமா? அக்டோபர் 27ம் தேதி கிராமத்திற்குப் போனார்.

தகவலைக் கேட்டவுடன், தந்தை ஒரே ஒரு கேள்வியைத் தான் கேட்டார்.

“மஹாபெரியவா கிட்டே உத்தரவு வாங்கிட்டியோ?”

“இல்லேப்பா, மஹானிடம் சொன்னா அவர் உத்தரவு தருவாரோ மாட்டாரோங்கிற சந்தேகம் எனக்கிருக்கு. அப்படி அவர் உத்தரவு தரலைன்னா, இவ்வளவு வருமானத்தை விட்டுட மனசு கேட்காதே. அதனாலே தான் நானே முடிவு எடுத்துண்டு கிளம்பறேன். நமக்கோ பணத்தேவை அதிகம். எனக்கும் இதைத் தவிர வேறு வழி தெரியல்லேப்பா” என்றார்.

அன்றிரவு அவர் கிராமத்தில் தங்கி விட்டார். மன உளைச்சலில் அவர் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்த போது, திடீரென அவர் முன் மஹான் தோன்றினார்.

மஹான், ஐயங்கார் ஸ்வாமிகளின் தலையை மெதுவாகத் தடவிக் கொடுத்துவிட்டு,
“நீ போகத்தான் போறாயா?” என்று ஏக்கத்தோடு கேட்பதாக ஐயங்கார் ஸ்வாமிகளுக்குத் தோன்றியது.

அது முழுமையான கனவுமல்லாமல், முழுமையான நினைவுமல்லாமல் தெரிந்ததில் இவருக்கு மஹா பெரியவா ஏதோ உத்தரவிடுவது போலத் தெரிந்தது. அதனால் மறுதினம் தாமதிக்காமல் மஹானைத் தரிசித்து அவரது அனுமதியைப் பெறக் கிளம்பிவிட்டார்.

அப்போது மஹான், கர்நாடகாவில் பதாமி என்னும் நகருக்கு அருகில் இருந்த வனசங்கரி என்னும் சிறுகிராமத்தில் முகாமிட்டிருந்தார்.

மஹானின் தரிசனத்திற்கு முன், ஐயங்கார் ஸ்நானம் செய்து கொண்டு இருந்தபோது, மடத்து சிப்பந்தி ஒருவர் வந்து இவரிடம், “உன்னை பெரியவா வரச்சொல்லி உத்தரவாகியிருக்கிறது” என்றார்.

தான் வந்திருப்பதையோ, வந்திருக்கும் நோக்கமோ யாருக்குமே தெரியாத நிலையில், மஹான் வரச் சொல்லியிருப்பது இவருக்கு அளவுகடந்த வியப்பைத் தர நேராக மஹானின் முன் நின்று தரிசித்தார்.

“எப்போ கிளம்பப் போறே?” என்று பெரியவா கேட்டதும், தரிசனம் முடிந்ததும் தன் ஊருக்கு எப்போது போகிறோம் என்பதைத்தான் மஹான் கேட்கிறார் என்று ஐயங்கார் ஸ்வாமிகள் நினைத்துத் “தரிசனம் முடிந்ததும் கிளம்புவதாக உத்தேசம்” என்றார்.

மஹான் லேசாகப் புன்முறுவலித்தவாறே,

“நீ ஊருக்குப் போறதே பத்தி நான் கேட்கலே, அசல் தேசம் போகணும்னு ஏற்பாடு செஞ்சுண்டிருக்கியே, அதைத் தான் கேட்டேன்” என்று மஹான் சொல்ல, ஐயங்கார் ஸ்வாமிகளுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

அந்த அதிர்ச்சியிலிருந்து அவர் மீள்வதற்குள், மஹான் தொடர்ந்து அதிர்ச்சிகளை அளித்தவாறு பேசலானார்:

“நீ இங்கு வந்த காரணத்தை நான் சொல்லவா? முந்தா நாள் நான் உன்னைத் தடவிக்கொடுத்து, ‘என்னை விட்டுப் போறயா?’ன்னு கேட்டேன்…. இல்லையா? அதனாலேதான் போகும்போது பார்த்துட்டுப் போகலாமுன்னு இங்கே வந்திருக்கே” என்றார். எப்பேற்பட்ட அதிசயத்தை மஹான் சர்வ சாதாரணமாகச் சொல்கிறார் என்று திகைத்துப் போய் நின்றார் ஐயங்கார் ஸ்வாமிகள்.

தன்னை கிராமத்துக்கு வந்து ஆட்கொண்டது பிரமை அல்ல என்பதை அறிந்த அவர் கண்களில் நீர் மல்க, மஹானின் பொற்பாதங்களில் வீழ்ந்தார். மஹான் அவரை ஆசீர்வதித்தவாறே சொன்னார்.

“உன் ஆசாரத்தை விடாமல் இரு. பணத்துக்காக எதையும் விடாதே. ஆசாரம் தான் முக்கியம். எங்கே போனாலும் அவரவர் ஆசாரத்தை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்” என்பது மஹானின் அருள்வாக்கு. ஐயங்கார் ஸ்வாமிகள் என்ன செய்திருப்பார் என்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்……..

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source:::: http://www.periva.proboards.com

natarajan

Read more: http://www.periva.proboards.com/thread/6155/extract-sri-venkatasamys-book-mahaperiyavaa?page=1&scrollTo=10832#ixzz2p9KEUzn9

2013 is coming to an end…

 

Reblogged from  The Growing Stone of Hope blog site ….

natarajan

 

 

thegrowingstoneofhope's avatarThe Growing Stone of Hope! Each Click makes a difference!

The journey and growth of “The Growing Stone of Hope” started in the year 2013.

You all showed us with your comments and clicks that you like the idea to support people in need in India by just clicking on the original video on Youtube. Therefore we are thinking big. In 2014  “The Growing Stone of Hope” should obtain the attention  it deserves. 2014 should be the time to convince the media to mention us on their shows.

Today is the 12.31.2013 and the “TGSH” has 389 Hope Stones & a new wood escutcheon.

I believe that 2014 will be a hit for “TGSH” ! My wife and I are very excited about it and we hope you are too.

We really wish you all the best for the next year and that all your wishes will come true.

We thank you so much for your support! Never forget that…

View original post 26 more words

இனியாவது நிறுத்துங்கப்பா…!!!

புத்தாண்டு பிறக்கப்போகிறது. நம் தலைக்கு மேல் ஆயிரத்தெட்டு அயல்வேலைகள். பிறகு, என்றைக்கு நாம் நம் வேலையைப் பார்த்திருக்கிறோம். சரி, இந்த ஆண்டிலாவது நாம், தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று பார்ப்போமா?

#நாளை முதல் குடிக்க மாட்டேன்; சிகரெட் பிடிக்க மாட்டேன்; தினமும் உண்டியலில் காசு போடுவேன் என்றெல்லாம் தினுசு தினுசாய் சபதம் எடுப்பது நல்லதுதான். அதற்கு முன்பாக 2000-ம் ஆண்டு எடுத்த சபதம் என்ன ஆனது என்று ஒருமுறை திரும்பி பார்த்தீர்களானால் நல்லது. இதனால் ஒருவேளை உங்கள் வாழ்வில் பெரும் திருப்பம் ஏற்படலாம்.

#முப்பதாயிரம் ரூபாய் கொடுத்து ஆப்பிள் மொபைல் வாங்கியது எல்லாம் சரி. ஆனால் போன் பில்லுக்கு பயந்து மற்றவர்களுக்கு மிஸ்ட் கால் கொடுத்து கடுப்பேற்றாதீர்கள். இந்த வருடமாவது எதிர்முனையில் ஃபுல் ரிங்டோனை ஒலிக்க விடுங்கள்.

#கல்யாணத்துக்கு உங்களுக்கு பிடித்த ஹீரோவின் தோளோடு தோள் உரச ப்ளக்ஸ் பேனரில் வைப்பதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அதற்காக அஞ்சாறு வருடங்களுக்கு முன்னால் இறந்த ஆயாவின் நினைவு நாள் ப்ளெக்ஸ் பேனரிலும் உங்கள் அபிமான ஹீரோக்களின் படத்தை கோர்த்து விடாதீர்கள்.

#குண்டு உடம்பை தூக்கிக் கொண்டு அதிகாலை வாக்கிங் போவ தெல்லாம் நல்லதுதான். ஆனால் அந்த வாக்கிங் கேப்பில் இரண்டு இளநீர், இரண்டு அருகம்புல் ஜூஸ் குடித்து விட்டு, தெருமுனையில் இரண்டே இரண்டு இட்லியும் மெதுவடையும் சாப்பிட்டு வீடு வந்து சேர்ந்தால் உடம்பு எப்படி இளைக்கும் பிரதர்?

#ரேஷன் கடையோ பெட்ரோல் பங்க்கோ… கியூவை பார்த்தாலே அப்படி ஒரு அலர்ஜி நமக்கு! அந்த நீண்ட கியூவுக்கு நடுவில் புகுந்துகொண்டு செல்ல மூளையில் உள்ள ஹார் மோன்கள் உத்தரவிடும். இதனால் தகராறு ஏற்பட்டால் மூளைக்கு ஆபத்தில்லை. ஆனால் கைகால்கள் பாவம் சார். இதையெல்லாம் இனியா வது விட்டுடுங்க.

#எல்லை பஞ்சாயத்தை காட்டிலும் பெரும் தொல்லையாய் இருக்கிறது சீனாவின் சீப்பஸ்ட் மொபைல்கள். பஸ்ஸில், ரயிலில் என நடுநிசியில் எல்லோரும் தூங்கும்போது அதில் குத்துப்பாட்டை அலறவிட்டு அலப்பரை கூட்டுவதில் நமக்கு இணை நாமேதான். உங்களுக்கு இசையில் ஆர்வம் இருக்கலாம். ஆனால் அதை பாழாய்ப் போன சைனா போனில் இனியாவது காட்டாதீர்கள்.

#தியேட்டருக்குள் லேட்டாக நுழைந்து, ‘படம் போட்டு எவ்ளோ நேரமாச்சு?’ என்பதில் தொடங்கி முதல் நாள் படம் பார்த்துவிட்டு, மறுநாள் படம் ஓடுகையில் அடுத்தடுத்த சீன்களை சொல்லி இறுமாப்படைவதில் என்னவொரு சரித்திர பெருமை நமக்கு. பாவமய்யா பக்கத்து சீட் ஆட்கள்.

#பாக்கெட்டில் லட்சம் ரூபாய் இருந்தாலும் பைக்குக்கு மட்டும் 50 ரூபாய்க்கு பெட்ரோல் போடுவதை இந்த வருஷமாச்சும் நிறுத்துவோமே!

#அதென்ன தண்ணி போட்டால் மட்டும் தப்புத்தப்பாய் இங்கிலீஷ் பேசுவது? பேசி பழகுவது என்றால் எப்போதுமே பேசலாமே! தண்ணிக்கும் இங்கிலீஷுக்கும் என்னப்பா சம்மந்தம்? ஒண்ணுமே புரியலையே நண்பா!

#பஸ் ஓட்டுவோர் கார் ஓட்டுவோரையும் கார் ஓட்டுவோர் டூ வீலர் ஓட்டுவோரையும் டூ வீலர் ஓட்டுவோர் சைக்கிள் ஓட்டுவோரையும் காலம் காலமாய் திட்டிக்கொண்டே இருந்தால் நடப்பவர் எல்லாம் யாரைத் திட்டுவது? இந்த வருஷமேனும் அனுசரிச்சுப் போங்கப்பா.

#ஹெல்மெட் போட்டால் முடி கொட்டிடும். சீட் பெல்ட் போட்டால் ஃப்ரியா வண்டி ஓட்ட முடியாது இதெல்லாம் கூட மூட நம்பிக்கைதான். உயிருக்கு உத்தரவாதமில்லை ஜாக்கிரதை.

#தயவு செய்து வீட்டில் இருந்து கிளம்பும்போதே சாமி படத்துக்கு முன்னால் நின்று திவ்வியமாக கும்பிட்டுக் கிளம்புங்கள். ரோடெல்லாம் சாமிக்கு முத்தம் கொடுத்து பக்கத்து பைக்காரரை பதறி, சிதற வைக்காதீர்.

#ரயில் பயணங்களில் காலுக்கு அடியில் கடலை தோலை குவித்து வைப்பது, டாய்லெட் போனால் திறந்துப்போட்டே வருவது… இன்னி யோட நிறுத்துவோமே!

source:::: டி.எல்.சஞ்சீவிகுமார் in   The Hindu….Tamil
natarajan

Message For The Day…”Sanctify Your Senses by Serving All …”

Human life is highly sacred, most precious and Divine. Do not fritter it away by indulging in unsacred activities. All that you find outside is nothing but the reflection, reaction, and resound of your inner feelings. Life must be lived in the proper way by exercising control over the ten senses. Speak sweetly and softly. You cannot always oblige, but you can always speak obligingly. Pray for the well-being of all. Sanctify your senses by serving all. By exercising control over your senses, you can achieve anything in life. You may think that you have given away ten bags of rice in charity and distributed clothes to 500 people. Such accounts are to be submitted to the income tax department and not to God. God is not interested in quantity; He sees the feeling behind your acts. So, whatever acts of charity you undertake, do it with the spirit of love and sacri­fice.  

Sathya Sai Baba

“நேற்று ஆப்பிள் நிர்வாகி…இன்று ஆம் ஆத்மி ” !!!

: இது ‘ஆப்பிள்’ ஒன்று ‘ஆம்’ ஆன கதை.ஆதர்ஷ் சாஸ்திரி என்பது அவர் பெயர்.

மிகப் பிரபலமான ‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மேற்கிந்திய தீவுகள் பகுதியின் விற்பனை பிரிவு தலைவர் அவர். கோடிக்கணக்கில் சம்பளம். அவர் பெயரை அறிமுகமாக்கிக் கொள்ள இப்படியும் சொல்லலாம்: ‘இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவருமான லால்பகதூர் சாஸ்திரியின் பேரன்’.

இந்தியாவில், டெல்லியில், ஊழலுக்கு எதிராகக் குரல்கொடுத்து கட்சி ஆரம்பித்து முதல் தேர்தலிலேயே குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டிய ஆம் ஆத்மி அவரைக் கவர்ந்தது. இந்தியாவும் தானும் எதிர்பார்த்துக் காத்திருந்த மாற்று அரசியல் கட்சி இதுதான் என்று மனதார நம்பியவர், கோடிக்கணக்கில் சம்பளம் தரும் பணியை உதறிவிட்டு, இந்தியா வந்து ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

“ஆம் ஆத்மியினால் நிறைய சாதிக்க முடியும்; தாத்தா லால்பகதூர் சாஸ்திரியைப் போன்ற தூய்மையாளர்கள் இக்கட்சியில் உள்ளனர்” என்கிறார் ஆதர்ஷ். ஆதர்ஷின் தந்தையும், லால்பகதூரின் மைந்தருமான அனில் சாஸ்திரி இன்னமும் காங்கிரஸ்ஸில் தான் இருக்கிறார். தந்தையின் சம்மதத்துடனேயே தான் ஆம் ஆத்மியில் இணைந்துள்ளதாக ஆதர்ஷ் கூறுகிறார்.

 

source::::inneram .com

natarajan

Message For the Day…” Control Your Tongue For Your Peace…”

Silence is the only language of the realized. Practice moderation in speech. That will help you in many ways. It will develop love, for most misunderstandings and factions arise out of carelessly spoken words. When the foot slips, the wound can be healed; but when the tongue slips, the wound it causes in the heart of another will fester for life. The tongue is liable for four big errors: uttering falsehood, scandalizing, finding fault with others, and excessive articulation. These have to be avoided if there is to be peace for the individual as well as for society. The bond between one another will be strengthened if people speak less and sweetly. That is why silence was prescribed as a vow for spiritual aspirants by the scriptures. You are all spiritual aspirants at various stages of the road, and so this discipline is valuable for you.

 

Sathya Sai Baba

” சர்க்கரை பாலில் கரைவது போல ….” !!!

 

மாமன்னன் போஜராஜனின் அரசவையில் ஒருசமயம் ஒரு கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அவை நிரம்பி வழிந்தது. அப்படி ஒரு கூட்டம். அங்கு கற்றறிந்த பண்டிதர் ஒருவர் அரசவைக்குள் வர எண்ணினார். ஆனால், காலதாமதமாக வந்தார். வாயிற்காவலர் உள்ளே இடமில்லை என்று அவரைத் தடுத்தனர். “”நீ போய் அரசரிடம் அவரைக் கண்டு முக்கியமாக ஒன்றைப் பேச நான் வந்திருப்பதாய்ச் சொல்!” என்று கண்டிப்பாய்ச் சொல்கிறார் அவர். அவரின் எடுப்பான, களையான தோற்றத்தைக் கண்டு வாயிற்காவலன் அரசரிடம் சென்று “”நாங்கள் என்ன தடுத்தும் உங்களுடன் பேச வேண்டும் என்று பிடிவாதமாக ஒரு பண்டிதர் வெளியில் நிற்கிறார்” என்றான். அரசன் அந்த வாயிற்காவலனுடன் எதுவும் பேசவில்லை. ஒரு சேவகனை அழைத்து “”ஒரு கோப்பை நிறைய பாலை எடுத்துக்கொண்டு போய் அந்தப் பண்டிதரிடம் கொடு!” என்றான். அந்த சேவகனும் அவ்வாறே சென்று அந்தப் பண்டிதரிடம் பால் நிரம்பிய கோப்பையைக் கொடுத்தான்.

பால் கோப்பையைப் பார்த்த பண்டிதர் உடனே தன் தோளில் மாட்டியிருந்த ஜோல்னாப் பையைத் திறந்து அதனுள் இருந்த ஒரு பொட்டலத்தை எடுத்துப் பிரித்து அதிலிருந்த சர்க்கரையைப் பாலில் இட்டு அந்தக் கோப்பையை மீண்டும் மன்னரிடமே எடுத்துச் செல்லப் பணித்தார்.

பால் கோப்பை திரும்பி வந்ததைப் பார்த்த போஜராஜன் என்ன ஆயிற்று என்று வினவினான். “”அரசே.. அந்தப் பண்டிதர் எதுவும் பேசவில்லை. நீவிர் அனுப்பிய பால் கோப்பையைப் பார்த்ததும் தன் பையிலிருந்த ஒரு பொட்டலத்திலிருந்து சர்க்கரையை எடுத்து ஜாக்கிரதையாய்ப் பாலில் கலந்துவிட்டு உங்களிடம் கோப்பையைத் தரச் சொன்னார்!” என்றான் காவலாளி.

உடனே போஜராஜன் “”ஆஹா… என்னுடைய சபையில் இப்படிப்பட்டவர்தான் இருக்க வேண்டும். உடனே அவரை உள்ளே அழைத்து வாருங்கள்!”

என்று கட்டளையிட்டான்! அவையில் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அரசன் பால் கோப்பையை வெளியே அனுப்ப அவர் சர்க்கரையைப் போட்டுத் திரும்ப உள்ளே அனுப்ப அரசர் அவரை உள்ளே அழைத்து வரச் சொன்னதைக் கேட்ட அவர்கள் அதன் அர்த்தத்தைத் தெரிந்துகொள்ள விரும்பி துணிந்து அரசனிடமே கேட்டனர். அதற்கு போஜராஜன், “”அவையில் கூட்டம் முழுமையாக இருக்கிறது. உள்ளே இடமில்லை என்பதைத் தெரிவிக்கக் கோப்பை நிறையப் பாலை நிரப்பி அனுப்பினேன். ஆனால், அவரோ எவ்வளவு கூட்டம் இருந்தாலும் சர்க்கரை பாலில் கரைவதுபோல கூட்டத்தில் என்னைக் கரைத்துக் கொள்வேன். சர்க்கரையைப்போல என் தனித்துவத்தை எடுத்துவிட்டுச் சுற்றுப்புறத்தை இனிமையாக்குவேன். எந்த விஷயத்திலும் உட்புக மாட்டேன். பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட மாட்டேன். அப்படி நான் கரைந்து அந்தச் சூழலை  இனிமையாக்கும்போது நான் உள்ளே தாராளமாகச் செல்லலாமே என்று தெரிவித்தார் அந்தப் பண்டிதர்” என்று விளக்கினான்! (போஜராஜன் அவையில் அப்படிப்பட்ட பண்டிதருக்கு இடமில்லை என்று சொல்லலாமா?!)

“அமைதியை நோக்கி’ என்ற நூலில் இருந்து.

ஆங்கில மூலம்:  ஸ்வாமி முருகானந்த ஸரஸ்வதி

தமிழாக்கம்: காந்தலக்ஷ்மி சந்திரமவுலி.

source:::::dinamani tamil daily…Kadir

natarajan

 

Message For the Day… “Sanctify the Time Given to You by Serving Society…”

People worship God with devotion and sincerity, but God is not satisfied with external worship. You should serve society. Only service can confer bliss on you. By rendering service to society, you can alleviate the sufferings of the people, and also bring about transformation in their lives. Yad Bhavam Tad Bhavathi(as is the feeling, so is the result). When you serve with sacred feelings, it is bound to yield sacred results. Serve society to your utmost capacity. The satisfaction that you get by participating in bhajans is temporary, whereas service confers permanent satisfaction. Time is the most precious gift of God, but you are wasting it in vain pursuits and unsacred feelings. Sanctify the time given to you by serving society. Through service alone you can get rid of worries, ego, pomp and show, and other evil qualities.

 Sathya Sai Baba