” எனக்கு கோட்டு தருகிறாயா …? ” ….

மகா பெரியவாளை தரிசிக்க செல்லும்போது ஆச்சரியமான பல நிகழ்சிகளை கண்டிருக்கிறேன்.

ஒரு சமயம் செல்வந்தர் ஒருவர், தான் கண்ட கனவை பெரியவாளிடம் உணர்ச்சி பொங்க விவரித்து கொண்டிருந்தார்.

அவர் கனவில் பெரியவாள் தோன்றியதாகவும், ‘எனக்கு கோட்டு தருகிறாயா?” என்று கேட்டதாகவும் சொல்லிகொண்டிருந்தார்.

இதை கேட்டுவிட்டு மகா சுவாமிகள் மெல்ல சிரித்தார்கள். “கோட்டு கேட்டேனா?” என்று சொல்லி விட்டு ஓர் இடைவெளி, “கேட்டிருப்பேன்… கேட்டிருப்பேன்”.

அருகில் இருந்தவர்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ‘பெரியவாளுக்கு கோட்டு என்னத்துக்கு?”

பெரியவாளே பேசினார்கள்:

“கோட்டுன்னா என்ன அர்த்தம் தெரியுமா?”

என்ன பதில் சொல்ல? Coat என்றால் கோட்டுதான்!

“கோட்டு என்பதற்கு சரியான தமிழ்பதம் சொலுங்களேன்..”

‘மலை’ என்றார் ஒருவர். ‘கொம்பு’ என்றார் இன்னொருவர். “மேலங்கி” என்றார் மற்றொருவர்.

எல்லோரும் பெரியவாளின் பதிலுக்காக, செவிகளை தீட்டி கொண்டு காத்திருந்தார்கள்.

“அதெல்லாம் சரி. கோட்டு என்றால் கவசம்னு ஒரு அர்த்தம் உண்டு. காமாட்சி அம்பாளுக்கு தங்க கவசம் சார்தணும்னு ஒரு எண்ணம் வந்தது. தங்க கவசம் பண்றதுன்னா.. சின்ன காரியமா? பணம் வேணுமே… இவர் பணக்காரர்.. ஒருவேளை இவரை கேட்டால், செய்து கொடுப்பார்னு தோன்றியிருக்கும். அதனால் கனவிலே போய் கேட்டிருக்கேன். எல்லாம் எனக்கு காமாட்சிதான். அம்பாளுக்கு கவசம் சாத்தினால், நான் கோட்டு போட்டுக்கொண்ட மாதிரிதான்…”

அந்த செல்வந்தருக்கு அடித்தது யோகம் – தங்க கவசம் செய்து சமர்ப்பிக்கும் யோகம்!

எத்தனை தலைமுறை புண்ணியமோ?

source:::::www.periva.proboards.com

natarajan

Message For the Day…”Peel Away the Skin of of Your Ego and Remove the Seeds of Evil Thoughts …”

The fruit of love is present in each and every person’s life. The only task to be done to experience the fruit is to remove the outer skin. Once you peel the skin of the fruit, also remove the bitter seeds within it. Then you can extract the sweet juice, partake it and discard the pulp. Understand that God has given you this body only to relish the sweetness of Love. Peel away the skin of ego and ostentatiousness. Remove all the seeds of evil intentions, thoughts and deeds. Discard the pulp of possession and attachment. Then what remains is the sweet juice of love. All of you are farmers. You must engage in spiritual practices to cultivate your heart. Is there any use for an uncultivated land? Without wasting your life and keeping the land barren, focus on cultivating your heart to enjoy the sweetness of the Divine.

 

Sathya Sai Baba

Message For The Day…” Realize That Your Peace Depends On the Peace of Those Around You …”

God is love and He is pleased with the pure hearted who love Him 100%. Make every effort to experience the indweller (Dehi) within the body (deha). The Dehi (Divine Soul) within you is immortal with no birth or death. Don’t forget that you are alive due to His Grace. You must necessarily do your bit to take care of your body without being attached to it. Always keep in view the Dehi within, connect with Him and discharge your duties. At the end of every day or every meeting, pray, “May all the beings in all the Worlds be happy” (Samasta Loka Sukhino Bhavanthu). Realize that the individual peace depends on the peace of those around you. Therefore always pray for the wellbeing and peace of everyone in the Universe.

Sathya Sai Baba

 

Joke for the Week end …..” I stepped on A Duck….” !!!

Three women die together in an accident
And go to heaven.

When they get there, St. Peter says,
‘We only have one rule here in heaven:
Don’t step on the ducks!’

So they enter heaven, and sure enough,
There are ducks all over the place.
It is almost impossible not to step on a duck,
And although they try their best to avoid them,
The first woman accidentally steps on one.

Along comes St. Peter with the ugliest man she ever saw.
St. Peter chains them together and says,
‘Your punishment for stepping on a duck is to
Spend eternity chained to this ugly man!’
The next day,
The second woman steps accidentally on a duck
And along comes St. Peter,
Who doesn’t miss a thing.
With him is another extremely ugly man.
He chains them together
With the same admonishment as for the first woman.

The third woman has observed all this and,
Not wanting to be chained
For all eternity to an ugly man, is very,
VERY careful where she steps.

She manages to go months
Without stepping on any ducks,
But
One day St.Peter comes up to her
With the most handsome man she has ever laid eyes on
…. Very tall, long eyelashes, muscular.

St. Peter chains them together without saying a word.

The happy woman says,
‘I wonder what I did to deserve being
Chained to you for all of eternity?’

The guy says,
‘I don’t know about you,
But I stepped on a
Duck.!!!!

 

source:::unknown… input from my friend…

natarajan

Message For the Day…” Our Heart is Like a Piece of Land to be Cultivated with Care and Love…”

To cultivate a piece of land, the farmer works really long and hard. First, he has to soften the entire piece of land. He must then plough it, sow the seeds and water it regularly. After that, the crop has to grow to a certain stage, and to aid that, he needs to use fertilizers and remove the weeds at regular intervals. Only after all this, will he be able to bring home the food grains. That is exactly what we have to do with our hearts too. The heart is like a piece of land to be cultivated, and we must cultivate it with utmost care and concern. It must be watered with the water of love. Using the plough of enquiry, you must plough it and sow the seed of the Name of God, and then guard it very vigilantly using the fence of caution and care. You must protect it with egolessness, then you will receive the fruit of love.

 

Sathya Sai Baba

இன்று அக்ஷய திரிதியை … திருமகளே வருக… திருவருள் தருக …

 

2014
00:21

அட்சய திரிதியை நன்னாளான இன்று லட்சுமியை வழிபடும் விதத்தில் இந்த ஸ்தோத்திரம் இடம்பெற்றுள்ளது.

* மகாலட்சுமி தாயே! திருமாலின் மார்பில் உறைபவளே! மூவுலகையும் காத்து அருள்பவளே! ஸ்ரீ பீடத்தில் வீற்றிருப்பவளே! செந்தாமரை மலரில் உறைந்திருப்பவளே! மதுர வல்லித் தாயே! உன்னைப் போற்றுகிறோம்.
* பிருகு முனிவரின் மகளாக அவதரித்த பார்கவியே! குலமாதர் போற்றும் குலக்கொடியே! ஸ்ரீதரனின் துணைவியே! நல்லோரைக் கரை சேர்க்கும் நாயகியே! குபேரனுக்கு வாழ்வு அளிப்பவளே! உன் பாதமலரைச் சரணடைகிறோம்.
* அமுதம் நிறைந்த பொற்கலசம் தாங்கி நிற்பவளே! அருள் நெஞ்சினர் உள்ளத்தில் வாழ்பவளே! அலங்கார ரூபிணியே! உன் கடைக்கண் பார்வையால் எங்கள் இல்லம் செழித்திருக்கட்டும். எங்களுக்கு ராஜயோக வாழ்வைத் தந்தருள்வாயாக.
* பூங்கொடியாகத் திகழ்பவளே! அலமேலு மங்கை தாயே! மூவரும் தேவரும் போற்றும் முதல்வியே! ஜகன்மாதாவே! பாற்கடலில் அவதரித்தவளே! அலைமகளே! அஷ்ட ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்குவாயாக.
* முதலும் முடிவும் இல்லாதவளே! ஆதிலட்சுமியே! தஞ்சமென வந்தவரைத் தாங்கும் தயாபரியே! மகாவிஷ்ணுவின் இதயகமலத்தில் வாழ்பவளே! நிலவைப் போல குளிர்ச்சி மிக்க பார்வையால் எங்கள் மீது அருள்மழை பொழிவாயாக.
* நவரத்தின ஆபரணங்களை விரும்பி அணிபவளே! செவ்வானம் போல சிவந்த மேனிவண்ணம் கொண்டவளே! குறையில்லா வாழ்வு தரும் கோமளவல்லியே! செங்கமலத் தாயாரே! அபயக்கரம் நீட்டி எங்களை ஆதரிக்க வேண்டும் அம்மா!
* மங்கல ரூபிணியே! பசுவின் அம்சம் கொண்டவளே! வரம் தரும் கற்பகமே! சிவந்த தாமரையை மலரை விரும்பி ஏற்றவளே! லோகமாதாவே! உன் அருளால் இந்த உலகமெலாம் செழித்தோங்கட்டும். உயிர்கள் எல்லாம் இன்புற்று வாழட்டும்.

 

source:::: DinaMalar …Tamil Daily

natarajan

 

Message For the Day…” Respect and Revere Your Parents…”

Humility alone makes you deserving and affluent, and eventually helps you attain Divinity. You must also, always respect and revere your parents and consider the education and all the facilities they have provided as their gift to you. Many parents suffer a great deal of stress and strain to provide these to you. At times, they may even fast to pay your fees and bills. Scriptures clearly declare, ‘Mother is God, Father is God, Teacher is God, Guests are Divine, Teacher is Divine (Mathru Devo Bhava, Pithru Devo Bhava, Athithi Devo Bhava, and Acharya Devo Bhava). Your good character will be understood only when you are humble and respect your parents. Many people have lived these values in an exalted manner. Those with humility and obedience to parents will achieve great success in all spheres of life.

 

Sathya Sai Baba

” பெரியவாவை பார்க்க நாளைக்கு போறீங்களா … ? “

நமஸ்காரம்.

சுவாரஸ்யமான சில அனுபவங்களை உடனுக்குடன் போஸ்ட் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், அவசர கதியில் அள்ளிப் போட்டுக் கொண்டு ஓடுவதில், முடியாமல் போகிறது.

அப்படித்தான் சமீபத்தில் எனக்கு ஏற்பட்ட ஓர் அனுபவத்தை வியந்து வியந்து பார்த்தேன். நெகிழ்ந்து நெகிழ்ந்து போனேன். ஆன்மிக அன்பர்கள் அதைப் படிக்க வேண்டும் என்று பதிவிட விரும்பினேன். ஆனால், நேரம் தள்ளிக் கொண்டே போனது.

தற்போது இதைப் பதிவிடுவதற்கு பெங்களூரு மகா பெரியவா அத்யந்த பக்தர் திரு. கார்த்தி நாகரத்தினம் புண்ணியம் கட்டிக் கொண்டார். தேங்க்ஸ் கார்த்தி.
முதலில் விஷயத்துக்கு வருகிறேன்.

கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி வியாழன் அன்று எனது ‘மகா பெரியவா மகிமை’ சொற்பொழிவு நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூரில் பாரதிய வித்யா பவன் அரங்கில் துவங்கியது (ஒவ்வொரு ஆங்கில மாதமும் இரண்டாவது வியாழன் அன்று). அன்றைய தினம் எனது நான்கு நூல்கள் வெளியீட்டு விழாவும் நடந்தது.

இதற்கான அழைப்பிதழை ‘க்ளேரியன் காஸ்மடிக்ஸ்’ நிறுவனத்தார் தயார் செய்திருந்தார்கள். என் தொடர்புடைய எந்த ஒரு அழைப்பிதழாக இருந்தாலும் சரி… நல்ல நிகழ்வாக இருந்தாலும் சரி… காஞ்சி ஸ்ரீமடம் போய் மகா பெரியவா அதிஷ்டானத்தில் வைத்து ஆசி பெற்று அதன் பின் பணிகளைத் துவங்குவது வழக்கம். ஆனால், இந்த அழைப்பிதழ் வந்தும், உடன் நான் காஞ்சிக்குப் போக முடியவில்லை. என்ன ஒரு சமாதானம் என்றால், எப்படியும் இன்னும் நான்கைந்து நாட்களில் வெளியிடப்பட வேண்டிய புத்தகங்களின் பிரதிகள் வந்து விடும். அவற்றைக் கொண்டு போய் அதிஷ்டானத்தில் வைக்கலாம் என்று நேரம் கருதி எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டேன்.

அழைப்பிதழின் பிரதிகளை கூரியர் மூலம் அனுப்பத் தொடங்கி விட்டோம். சிறப்பு அழைப்பாளரான மயிலை ஸ்ரீகபாலீஸ்வரர் ஆலய இணை இயக்குநர் திருமதி. காவேரி மேடத்துக்குக் கொடுக்கலாம் என்று மயிலை போனேன். நேரில் கொடுத்தேன். அங்கிருந்து இன்னொரு நண்பர் மூலமாக திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளை தரிசிக்கலாம் என்று என் மனைவி, மகளோடு புறப்பட்டு விட்டேன்.

அன்று சனிக்கிழமை (5.4.2014). ஸ்ரீபார்த்தசாரதி ஆலயத்தில் கூட்டமான கூட்டம். நண்பர் உதவியால் சிறப்பு தரிசனம் முடித்த பின் இதர சந்நிதிகளைத் தரிசித்துக் கொண்டு வரும்போது பின்பக்கம் உள்ள ஸ்ரீநரசிம்மரை தரிசிக்கப் போனேன். திருவல்லிக்கேணியில் ஸ்ரீபார்த்தசாரதிக்கு எவ்வளவு மரியாதையோ, அந்த அளவுக்கு ஸ்ரீநரசிம்மருக்கும் உண்டு. இந்த ஸ்ரீநரசிம்மர் ஆழ்வாரால் பாடல் பெற்றவர். தனி கொடி மரம், வைபவங்கள் எல்லாமே உண்டு. எப்போதும் இவர் சந்நிதியிலும் கூட்டம் இருக்கும்.

நரசிம்மரைத் தரிசிக்கப் போனோம். கூட்டமான கூட்டம். உள்ளே சந்நிதியில் இருந்த பட்டாச்சார்யர் ஆரத்தி காண்பித்து விட்டு வெளியே எடுத்துக் கொண்டு வந்தார். என்னிடம் காண்பிக்கும்போது ‘பெரியவாளைப் பாக்க நாளைக்குப் போவேளா?’ என்று கேட்டார். அவரை அதிசயமாகப் பார்த்தேன். இருவருக்கும் அறிமுகம் இல்லை.

‘பெரியவா’ என்றால், என்னைப் பொறுத்தவரை ‘மகா பெரியவா’தான் என்றாலும், ஒரு வைணவ ஆலயத்தில் உள்ள பட்டாச்சார்யர் யாரை பெரியவா என நம்மிடம் குறிப்பிடுகிறார் என்று குழம்பி, ‘‘புரியல’’ என்று சொன்னேன்.

பிறகு தெளிவாக, ‘‘மகா பெரியவா அதிஷ்டானத்துக்கு நாளைக்குப் போவேளானு கேட்டேன்’’ என்றார்.

தூக்கி வாரிப் போட்டது. ‘இவர் ஏன் கேட்கிறார்? காஞ்சிபுரம் பக்கத்தில் இருக்கா என்ன?’.

பிறகு சொன்னேன்: ‘‘நாளைக்குப் போற ஐடியா இல்லே. இன்னும் மூணு, நாள் கழிச்சுப் போவேன்’’ (புது புத்தகம் அப்போதுதான் அச்சகத்தில் இருந்து வரும். அதை வைக்கும் எண்ணத்தில் சொன்னேன்).

‘‘ஜீ தமிழ்ல தெய்வத்தின் குரல் டெய்லி பாக்கறேன். நன்னாருக்கு’’ என்றவர், ‘‘ஒரு நிமிஷம் இருங்கோ’’ என்று கருவறைக்குள்ளே போய் விட்டு ஸ்ரீநரசிம்மரின் பின்னால் இருந்து ஒரு பெரிய சம்பங்கி மாலையை எடுத்து வந்தார். என்னிடம் கொடுத்து விட்டு, ‘‘நீங்க எப்ப காஞ்சிபுரம் அதிஷ்டானம் போறேளோ, அப்ப இதை அவருக்கு சமர்ப்பிச்சிடுங்கோ’’ என்றார். ஸ்தம்பித்துப் போனேன்.

‘புத்தக ரிலீஸுக்குப் பத்திரிகை அடிச்சு எல்லோருக்கும் கொடுத்துண்டு இருக்கே… எனக்கு இன்னும் கொடுக்கலையேடா’ என்று மகா பெரியவாளே கேட்பது போல் ஒரு எண்ணம் அந்த வேளையில் வந்தது.

புத்தம் புது மாலையை பவ்யமாகக் கைகளில் வாங்கிக் கொண்டேன். ‘‘நிச்சயம் சமர்ப்பிச்சிடறேன்’’ என்று புறப்பட்டேன்.

பயணத் திட்டத்தை மகா பெரியவா ஏற்படுத்திக் கொடுக்கிறார். ‘மலர் மாலையோட பத்திரிகையும் கொண்டு வாடா’ என்று சொல்றார் போலிருக்கு.

அடுத்த நாள் அதிகாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து சம்பங்கி மாலையுடனும், புத்தக ரிலீஸ் பத்திரிகையுடனும் காஞ்சிக்கு ஒரு டிராவல்ஸ் வண்டியில் புறப்பட்டு விட்டேன்.
………………………………………………..
இதில் பெங்களூரு கார்த்தி நாகரத்தினம் எங்கே வந்தார்?

பெரியவா மகிமை பற்றி அவர் ஓர் அனுபவத்தை எடுத்துச் சொல்ல… நான் இந்த திருவல்லிக்கேணி ஸ்ரீநரசிம்மர் அனுபவத்தைச் சொன்னேன். அப்போது நரசிம்மருக்கும் பெரியவாளுக்கும் உள்ள தொடர்பை எடுத்துச் சொல்லி, ‘எல்லாம் அவரது விளையாடல்தான்’ என்றார். அதன் விளைவுதான் இந்தப் பதிவு.
…………………………………………………
இந்த நேரத்தில் இன்னொரு நரசிம்மர் அனுபவமும் என் நினைவுக்கு வருகிறது. நான் ‘மகா பெரியவா மகிமை’ பற்றிப் பேச வந்த நேரம் அது… 2012-ஆம் வருடம் ஒரு புரட்டாசி சனி என்று நினைக்கிறேன். கோவிந்தபுரம் விட்டல்தாஸ் மஹராஜ் அவர்கள் சென்னை தி.நகர் பாண்டி பஜார் பாலாஜி திருமண மண்டபத்தில் தங்கி இருந்தார். சனி காலை 9.30 மணிக்கு அவர் சொற்பொழிவுக்கு முன்னால் என்னை அரை மணி நேரம் பேசுமாறு – அதாவது 9.00 – 9.30 வரை பேசுமாறு பணித்திருந்தார். அன்று காலை இல்லத்தில் இருந்து சீக்கிரமாகக் கிளம்பினேன்.

மகா பெரியவா தொடர்பாக என்னென்ன சம்பவம் சொல்லலாம் என்று தீர்மானித்திருந்தேன். இடையே, நேரம் இருந்தால் – ஒரு நரசிம்மர் அனுபவத்தைச் சொல்லலாமா வேண்டாம என்று யோசித்தேன். ஆனாலும், நரசிம்மர் அனுபவத்தை சொல்வது அநேகமாக என் திட்டத்தில் இல்லை (ஒரு பெண்மணிக்குப் பிரசவ காலத்தில் கனவில் நரசிம்மர் வந்து ‘என் பெயர் வை’ என்று சொன்ன சம்பவம் அது)

ஏனோ, தொடர்பே இல்லாமல் சிவா விஷ்ணு கோயில் வழியாகப் போக நேர்ந்தது. கோயிலுக்குள் போகாமல் செல்ல மனமில்லை. உள்ளே போனோம். விறுவிறுவென்று சுற்றி விட்டு வெளியே வருவதாகத் திட்டம். வெளியே வந்து ஒரு ஆட்டோ பிடித்து பாலாஜி திருமண மண்டபம் போக வேண்டும். மணி இங்கேயே 9 ஆகப் போகிறது. எனக்குள் பதட்டம், தாமதம் ஆகி விடுமோ என்று.

பிராகாரம் சுற்றி வரும்போது ஸ்ரீநரசிம்மர் சந்நிதியில் இருந்த ஒரு பட்டாச்சார்யர் (அறிமுகம் இல்லை) எங்களைப் பார்த்து, ‘ஒரு ரெண்டு நிமிஷம் இங்க வாங்கோ. அபிஷேகம் பண்ணிட்டு, ஆரத்தி காண்பிக்கறேன். பாத்துட்டுப் பிரசாதம் வாங்கிண்டு போங்கோ. எல்லாமே ரெடியா இருக்கு’’ என்று கையைப் பிடித்து இழுக்காத குறையாக அழைத்தார்.

திவ்ய தரிசனம். நரசிம்மரைப் பத்தி மொதல்ல சொல்லு என்று மகா பெரியவாளே எனக்கு அறிவுறுத்துவதாக எண்ணி, அந்த சம்பவத்தைதான் பாலாஜி திருமண மண்டபத்தில் முதலாவதாகச் சொன்னேன்.
……………………………………
அன்புடன்,
பி. சுவாமிநாதன்

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர

source:::: Experience of Shri. Swaminathan, my Friend thro email

natarajan

” நான் தான் அவனைத் திருட சொன்னேன் ….!!! “

Source: Dinamalar dated 29 April 2014  & http://www.periva.proboards.com

natarajan

 

ஒரு சமயம், காஞ்சி மகாபெரியவர், சிவகங்கை மாவட்டம் இளையாத்தங்குடியில் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிக்க முகாமிட்டிருந்தார்.

ஒருநாள் இரவில், தேவகோட்டையில் இருந்து, ஒரு பஸ் நிறைய மக்கள் அவ்வூருக்கு வந்தார்கள். ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாய் ஏகமாய் சத்தம் கேட்க, பெரியவர் அங்கிருந்த கஜானா ராமச்சந்திர அய்யரை அழைத்து, “”வெளியே நிறைய பேர் வந்திருக்கிறார்கள் போல் தெரிகிறது. யாரென்று பார்த்து வா…” என்றவர், அவரை நிறுத்தி, “”அவர்களெல்லாம் சாப்பிட்டு விட்டார்களா என்று விசாரித்து வா,” என்றார்.

அவரும் விசாரித்து வந்தார்.

“சுவாமி! அவர்கள் தேவகோட்டையில் இருந்து வருகிறார்களாம். அவர்கள் வந்த பஸ், வழியில் ரிப்பேராகி விட்டதால், தாமதமாக வந்திருக்கிறார்கள். யாரும் சாப்பிடவில்லையாம்,’ என்றார்.

“”ராமச்சந்திரா! வெளியே பூஜைக்கட்டில் மேலூர் மாமா படுத்திருப்பார். அவர் பக்கத்தில் கட்டுப்பெட்டி சாவி கிடக்கும். நீ சந்தடி செய்யாமல் அதை எடுத்துப்போய் பெட்டியைத் திறந்து, அதிலுள்ள பழங்கள் எல்லாவற்றையும் எடுத்துப் போய், அவர்களிடம் கொடு. நாளை அபிஷேகத்திற்காக தயிர், பால் வைத்திருப்பார். எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போய், அவர்களை சாப்பிட வை. பிறகு, சந்தடி செய்யாமல், சாவியை இருந்த இடத்திலேயே வைத்து விடு,” என்று சொல்லி விட்டு உறங்கச் சென்று விட்டார்.

மறுநாள் விடிந்தது. மேலூர் ராமச்சந்திர அய்யர் கட்டுப்பெட்டியை திறந்தார். உள்ளே பழம், தயிர், பால் எதுவும் இல்லை. அவருக்கு கோபம் வந்து விட்டது.

“”எந்த திருட்டுப்பயலோ, ராத்திரி மறுசாவி போட்டு பெட்டியைத் திறந்து, பழங்களை எடுத்துப் போயிருக்கிறான்,” என்று மிகவும் சத்தமாகக் கத்தினார்.

அப்போது, பக்கத்து ரூமில் தான் பெரியவர் இருந்தார். அவர் அங்கிருந்து வந்து, “”அய்யர்வாள்! நான் தான் கஜானா ராமச்சந்திரன் என்ற திருடனுக்கு உடந்தையாக இருந்து, அவனைத் திருடச் சொன்னேன்,” என்றார்.

அய்யர் அலறாத குறை தான். “”பெரியவா! மன்னிச்சுடுங்கோ” என்று அவரது பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.

பூஜைக்கான பொருள் என்றாலும், அவசரம் கருதி, அது மக்களின் பசி தீர்க்க உதவுமானால், அதற்கே முதலிடம் என்ற கொள்கையுடைய மகாசுவாமிகள், கருணாமூர்த்தியாக நம் கண்முன் இன்றும் காட்சி தருகிறார்.

Message For The Day…” The One Who transforms Mind, Attains Divinity…”

 

People practice various forms of worship and rituals following their family tradition and culture. However they do not transform even a bit in spite of months and years of spiritual practice. Frustrated, they change the Name they are chanting, because they are tired of waiting for results. At times, people change not just the Name they chant, but also their religion. Know clearly that you cannot attain God’s Grace by changing the Name you chant or the religion. You must transform yourself. The dog in the home always recognizes its Master, no matter whether he or she wears a jogging dress, office uniform or party attire. It has no doubt about its Master, despite the dress worn. So too, you cannot convince God by merely changing your external appearance. You have to acquire virtues and conduct yourself righteously. Only the one who transforms the mind pleases the Lord and attains Divinity.  

Sathya Sai Baba