“பிள்ளையார் கண் திறந்து விட்டார் “….சொன்னார் மகாபெரியவர் !!!

Source: Email from our respected member Sri G Vaidyanathan

http://www.periva.proboards.com

Natarajan

பல வருடங்களுக்கு முன் காஞ்சி மகா பெரியவர் தமிழகத்தின் தென்பகுதிகளில் யாத்திரை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பம்….. தஞ்சாவூர் ,திருச்சி, திருவானைக்காவல், ஸ்ரீரங்கம்,திண்டுக்கல், சோழவந்தான் ஆகிய ஊர்களுக்கு விஜயம் செய்துவிட்டு, மதுரையை நோக்கித் தன் பரிவாரங்களுடன் வந்துகொண்டிருந்தார். ஸ்வாமிகள் . வழி நெடுகிலும் உள்ள கிராம மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் திரளாக வந்து ஸ்வாமிகளை தரிசித்து ஆசிபெற்றுச் சென்றனர். அவர்களுக்கெல்லாம் இன்முகத்தோடு அருளாசி வழங்கினார். பழம், கல்கண்டு ஆகியவற்றைப் பிரசாதமாக கொடுத்துக்கொண்டே நடந்தார் ஸ்வாமிகள்.

மதுரை மாநகரை நெருங்கும் நேரம். அங்கிருந்த ஒரு கிராமத்து ஜனங்கள் அனைவரும் ஒன்றுகூடி “பூர்ணகும்ப” மரியாதையுடன் ஸ்வாமிகளை வரவேற்றார்கள்.அந்த ஜனங்களின் பக்தியையும் ஆர்வத்தையும் பார்த்த ஸ்வாமிகளுக்கு ஏக சந்தோஷம். சாலையோரம் இருந்த ஓர் அரசுமரத்து வேரில் வந்து அவராகவே அமர்ந்துகொண்டார் . அனைவரும் கீழே விழுந்து நமஸ்கரித்தனர்.

அந்த ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் மிகுந்த பக்தியுடன் ஸ்வாமிகளை நமஸ்கரித்தார் . பிறகு, “பெரியவங்ககிட்ட ஒண்ணு பிரார்த்திக்கிறோம் . நாங்க ஏழை சனங்கல்லாம் ஒண்ணா சேந்து, பக்கத்துல ஒரு புள்ளயார் கோயிலை புதுசா கட்டி முடிச்சிருக்கோம். சாமி பாதம் அங்க படணும்னு வேண்டிக்கிறோம்….கருண பண்ணணும்!” என்று கன்னத்தில் போட்டுக்கொண்டார்.

குதூகலத்தோடு எழுந்த ஆச்சார்யாள், “கோயில் எங்கே இருக்கு?” என வினவினார்.

பஞ்சாயத்துத் தலைவர், “இதோ கூப்பிடு தூரத்திலதான் சாமி இருக்கு.வந்து அருள் பண்ணணும்!” என்றார்.

ஸ்வாமிகள் மிக வேகமாக பிள்ளையார் கோயிலை நோக்கி நடந்தார். மேளதாள -பூரணகும்ப மரியாதையுடன் ஆச்சார்யாள் கோயிலுக்குள் பிரவேசித்தார் . கர்ப்பக்கிருகத்துள் ஆறடி உயர சிலா ரூபமாக விநாயகர் வீற்றிருந்தார். விக்கிரகம் கம்பீரமாக பளிச்சென்று
இருந்தது . வைத்த கண் வாங்காமல் சற்று நேரம் விநாயகரையே பார்த்த பெரியவா,பஞ்சாயத்துத் தலைவரிடம், “கோயிலுக்கு கும்பாபிஷேகம் ஆயிடுத்தோ?” என்று கேட்டார்.

” இன்னும் ஆகலீங்க சாமி” என்றார் தலைவர்.

” அதான் எல்லாமே பூர்த்தியாகி இருக்கே…ஏன் இன்னும் கும்பாபிஷேகம் நடத்தலே?” என்று கேட்டார் ஸ்வாமிகள்.

பஞ்சாயத்துத் தலைவர் பவ்வியமாக பதில் சொன்னார்.; “எல்லாமே பூர்த்தி ஆயிடுச்சு சாமி. இன்னும் ஒரு மாசத்துக்குள்ளாற மகாத்மா காந்தி இந்த வழியா மதுரைக்கு வாராறாம்.அவுரு வர்றன்னிக்கு , ‘அவருக்கு முன்னால வெச்சே கும்பாபிஷேகத்த நடத்த ஏற்பாடு பண்ணித் தர்றோம்’னு மதுரையைச் சேர்ந்த சில பெரிய மனுஷங்க உறுதி கொடுத்திருக்காங்க! அதனாலதான் காந்தீஜீக்காகக் காத்துக்கிட்ருக்கோம்!”

ஆச்சார்யாள் தனக்குள் சிரித்துக்கொண்டார். இரண்டு நிமிஷம் கண்ணிமைக்காமல் விநாயகரையே பார்த்துவிட்டுச் சொன்னார்.

” அதுக்கு அவசியம் இருக்காது போலத் தோண்றதே! கணபதி கண்ணத் திறந்து நன்னா பாத்துண்ருக்காரே…இனிமே கும்பாபிஷேகத்த தாமசப்படுத்தப்படாது. ஒடனேயே நல்ல நாள் பார்த்து பண்ணிடுங்கோ.”

உடனே பஞ்சாயத்துத் தலைவர், “இல்லீங்க சாமி! கண் தொறக்கிற சடங்கு விநாயகருக்கு இன்னும் நடக்கலீங்க சாமி! நீங்க இப்படி சொல்றத பாத்தா ஒண்ணும் புரியலீங்களே..” என்று குழம்பினார்.

ஸ்வாமிகள் மீண்டும் சிரித்துக்கொண்டே, “இது நானா சொல்லலே! கணபதி கண்ணைத் திறந்து நன்னா “ஸ்பஷ்டமா” பார்த்துண்ருக்கார். சீக்கிரமே கும்பாபிஷேகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் பண்ணுங்கோ! காந்தி வந்தா நன்னா தரிசனம் பண்ணிட்டுப் போகட்டுமே” என்று கூறினார் . குழுமியிருந்த ஜனங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அமைதியோடு காத்திருந்தனர்.

பஞ்சாயத்துத் தலைவருக்கும் குழப்பம் தீரவில்லை. உடனே ஆளனுப்பி விநாயகர் சிலையை வடிவமைத்த ஸ்தபதியை வரவழைத்தனர் .அவரிடம் ஆச்சார்யாள் சொன்ன விஷயம் தெரிவிக்கப்பட்டது .

சிற்பியும் அடித்துச் சொன்னார்; “இல்லீங்க ஸ்வாமி..இன்னும் விநாயகருக்கு கண் தொறக்கலீங்க. தொறந்தா விக்கிரகத்தச் செதுக்கின நான்தானே தொறக்கணும்..இன்னும் அது ஆவுலீங்க..” மூன்று தடவை ஆச்சார்யாள் காலில் விழுந்து கை கட்டி நின்றார் சிற்பி.

மீண்டும் ஒருமுறை விக்கிரகத்தையே உற்று நோக்கிய ஸ்வாமிகள் “மகா கணபதிக்கு நன்னா கண் தெறந்தாச்சு! அவர் சந்தோஷமா பாத்துண்டிருக்கார் . இனிமேலும் தாமதிக்கிறது நல்லதில்லே. சீக்கிரமா ஒரு நல்ல நாள் பாத்து கும்பாபிஷேகத்த நடத்துங்கோ..
க்ஷேமம் உண்டாகும்” என்று சொல்லிவிட்டு வேகவேகமாகப் புறப்பட்டுவிட்டார் ஆச்சார்யாள். பரிவாரம் பின்தொடர்ந்தது. ஆச்சார்யாளை அந்த ஊர் எல்லை வரை சென்று வழி அனுப்பி வைத்துவிட்டுத் திரும்பினர்,அத்தனை பேரும்.

சற்று நேரத்துக்கெல்லாம் அந்த ஊர் கிராமப் பஞ்சாயத்து சபை’ கூடியது . ஆச்சார்யாள் கூறிவிட்டுப் போன விஷயம் குறித்து அலசி ஆராயப்பட்டது. விநாயகர் விக்கிரகத்தைச் செதுக்கிய சற்று வயதான ஸ்தபதி அடித்துச் சொன்னார். “ஆச்சார்ய ஸ்வாமிங்களுக்கு ஞான திருஷ்டில எல்லா விஷயங்களும் தெரிஞ்சுடும்.இருந்தாலும் எங்கையால் நான் இன்னும் கண்ண தொறக்கலே.சாமி எப்டி சொல்றாங்கனு தெரியலே .நானும்கூட விக்கிரகத்துகிட்ட போயி உன்னிப்பா கவனிச்சுப் பாத்துட்டேன்.அப்டி ஆனதா தெரியலீங்க…. இப்ப என்ன பண்றது?”

அங்கே மௌனம் நிலவியது. ஒருவரும் வாய் திறக்கவில்லை. திடீரென்று பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க உள்ளூர்ப் பையன் ஒருவன் அந்த இடத்துக்கு ஓடி வந்தான்.கை கட்டி நின்றான்.

அவனைப் பார்த்த தலைவர், “தம்பி! ஏன் இப்படி ஓடி வர்றே? என்ன விஷயம்?” என்று கேட்டார்.

உடனே அந்தப் பையன் “தலைவரே! கோயில் விநாயகர் சிலை பத்தி எனக்கு ஒரு விஷயம் தெரியும்..சொல்லலாங்களா?” என்று கேட்டான் பவ்யமாக.

” ஒனக்கு என்ன தெரியும்..சொல்லு தம்பி!” என்று மிக ஆர்வம் காட்டினார் தலைவர். கூட்டமும் அந்தப் பையனையே பார்த்துக் கொண்டிருந்தது.

பையன் பேச ஆரம்பித்தான்; “ஐயா தலைவரே! எனக்கு தெரிஞ்ச உண்மையை சத்தியமா சொல்றேங்க. அந்த சாமியார் சாமி [ஆச்சார்யாள்] ‘புள்ளையாருக்கு கண் தொறந்தாச்சு’னு சொல்லிட்டுப் போனது மெய்தாங்க! எப்படீன்னா ஒரு பத்து நாளுக்கு முந்தி ஒரு நாள் உச்சி வெயில் நேரமுங்க.இதோ ஒக்காந்துருக்காரே ..புள்ளையார் விக்கிரகத்தைச் செஞ்ச தாத்தா.. இவரோட பேரப் பையன்..என் சிநேகிதன். என்ன வேலை பண்ணான் தெரியுமா? இவங்க தாத்தா சிலைகளின் கண்ண தொறக்கறத்துக்கு வெச்சிருக்கிற சின்ன உளியையும்,சுத்தியையும் எடுத்துக்கிட்டு ,எங்களையும் கூட்டிக்கிட்டு கோயிலுக்குப் போனான்.

” இதோ பாருங்கடா! எங்க தாத்தா இப்புடித்தான் சிலைங்க கண்ணைத் தொறப்பாருன் ‘ன்னு சொல்லிகிட்டே,’புள்ளையாரே,கண்ணத்தொற… புள்ளையாரே ,கண்ணத் தொற!’னு அவனும் சொல்லி, எங்களையும் ஒரக்க சொல்லச் சொல்லி, “டொக்கு..டொக்குனு” உளிய புள்ளயாரின் ரண்டு கண்ணுலயும் வச்சு தட்டினான்..”புள்ளையாருக்கு கண் தொறந்தாச்சு “னு எல்லாப் பசங்களும் குதிச்சு ஆடினோம்.இந்த விஷயம் ஊர்ல ஒருத்தவங்களுக்கும் தெரியாது. நாங்களும் வெளியிலே மூச்சு வுடலே! இது தாங்க நடந்துச்சு….எங்களை மன்னிச்சுருங்க.”

பிரமிப்போடு அமர்ந்திருந்தது கூட்டம். பஞ்சாயத்துத் தலைவர் கண்களில் நீர் சுரந்தது.ஆச்சார்யாளின் மகிமையைப் பார்த்து அந்த ஊரே வியப்பில் ஆழ்ந்தது . சிற்பியின் பேரனுக்கு எட்டு வயதிருக்கும். பஞ்சாயத்து அந்தச் சிறுவனை அழைத்து விசாரித்தது. விநாயகருக்கு, தான் கண்களைத் திறந்துவிட்டதை ஒப்புக் கொண்டான். எல்லோரும் கோயிலுக்கு ஓடிச் சென்று விநாயகரை விழுந்து வணங்கினர். சிற்பி, ஒரு பூதக் கண்ணாடியின் உதவியோடு கணபதியின் கண்களை நன்கு பரிசீலித்தார். மிக அழகாக “நேத்ரோன் மீலனம்” [கண் திறப்பு] செய்யப்பட்டிருந்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார்.

ஊரே திரண்டு ஆச்சார்யாள் சென்ற திசையை நோக்கி ஓடியது. அடுத்த கிராமத்தில் சாலை ஓரமிருந்த ஒரு பெரிய ஆலமர நிழலில் பரிவாரங்களுடன் இளைப்பாறிக்கொண்டு இருந்தார் ஸ்வாமிகள். அனைவரும் ஓடிப் போய் ஸ்வாமிகள் காலில் விழுந்து எழுந்தனர்.
அந்தப் பஞ்சாயத்துத் தலைவரும்,சிற்பியும் கேவிக்கேவி அழ ஆரம்பித்துவிட்டனர்.

இவர்களைப் பார்த்த அந்த பரப்பிரம்மம் சிரித்துக்கொண்டே கேட்டது; “புள்ளையாருக்குக் கண் தெறந்தாச்சுங்கறத பிரத்தியட்சமா தெரிஞ்சுண்டுட்டேளோல்லியோ ? போங்கோ….போய் சீக்கிரமா கும்பாபிஷேகத்த நடத்தி முடியுங்கோ. அந்த பிராந்தியத்துக்கே க்ஷேமம் உண்டாகும்.”

சிரித்தபடியே கை தூக்கி ஆசிர்வதித்தது அந்த நடமாடும் தெய்வம்.

Read more: http://periva.proboards.com/thread/4379/#ixzz2U2DTOEps

Strange Inventions of History !!!!

Who needs the internet? The Wireless Newspaper invented in 1938, picture shows children reading the pages of a Missouri paper

Who needs Internet !!!!…The wireless Newspaper invented in 1938 …Picture shows children reading the pages of Missouri Paper.

 

A wheelie good idea: A wheel motorcycle invented by Italian M. Goventosa de Udine, in 1931

A Wheelie good idea !!!!…One wheel Motorcycle invented by an Italian M.Goventosa de Udine in 1931

 

A pedestrian catcher: A shovel was fixed onto the front of a car was used to reduce the number of casualties among drunk pedestrians in Paris, 1924

A shovel is fixed on to the front of a car….To reduce the number of casualities among drunk pedistrians in Paris !!!!…in 1924…!!!

Size is not object: An extensible caravan, built by a French engineer in France, 1934

An extensible caravan built by a French Engineer….France,,in 1934..

 

The amphibious bike: The 'Cyclomer' was capable of using on both land and water. It was created in Paris in 1932

The amphibious bike…”cyclomer” was capable of running in land and water , both…invented in Paris.1932.

 

Stiff upper lip: A gas resistant pram, pictured in England, Hextable, 1938

A Gas resistant Pram …Pictured in England…1938…

source:::Daily mail reporter

Natarajan

ஆபத்பாந்தவான் நம் மகாபெரியவர் !!!!

அவதார புருஷர்- பெரியவா

காஞ்சியில் ஒரு கோவிலில் பெரியவா எல்லாருக்கும் தர்சனம் குடுத்துக் கொண்டிருந்தார். அப்போது உணர்ச்சிப் பெருக்கை உடலால் சமாளிக்க முடியாமல் ஒரு தம்பதி தங்கள் பெண் குழந்தையுடன் வந்து பெரியவாளை நமஸ்கரித்தனர்.

”ஆந்த்ரப்ரபா” பத்திரிகையின் ஆசிரியரும், காந்திஜியின் நெருக்கமான தோழருமான நீலம் ராஜு வேங்கடஸேஷைய்யாவின; புதல்விதான் அந்த அம்மா. பெரியவா அவர்களுடைய க்ஷேம லாபங்களை விஜாரித்தார். அவர்கள் கண்களில் கண்ணீர் வழிந்தோட கூறியதை கேட்டு, சுற்றி நின்று கொண்டிருந்த அத்தனை பேருக்கும் மயிர்க்கூச்சல் எடுத்தது..
“இன்னிக்கு பெரியவாளோட க்ருபையாலதான் இங்க வந்திருக்கோம்…நாஙக லண்டன்ல இருக்கோம். கொஞ்ச நாளைக்கு முன்னால [ஏதோ ஒரு தேசத்தின் பெயரைக் கூறி] அந்த country க்கு flight ல போய்ண்டிருந்தோம். திடீர்னு இஞ்சின்ல ஏதோ பெரிய கோளாறு. அதுனால safe landing கூட முடியாது..ங்கற மாதிரி பைலட் எல்லாருக்கும் ரெட் சிக்னல் குடுத்தார். விமானத்துக்குள்ள இருந்த அத்தனை பேரோட மனநிலையும் சொல்லக் கூட முடியாது!

ஆனா, உயிரே போகப்போறது..ங்கற நிலைமைல எங்களால பெரியவாளைத் தவிர வேற எதையுமே நினைக்கத் தோணலை! பெரியவாளோட சரணங்களை மானசீகமா கெட்டியா பிடிச்சிண்டோம்! எங்களோட பயம் பயமாத் தெரியலை! எங்களோட டிராவல் பண்ணிக் கொண்டிருந்த அத்தனை வெளிநாட்டுக்காராளயும் தைரியமா இருக்கச் சொல்லி, “Sage of Kanchi ” ன்னு பெரியவாளை நாங்க தெய்வமாவே வர்ணிச்சு, ஆபத்பாந்தவர் அவரை வேண்டிண்டா, எந்த பெரிய விபத்தும் ஓடிப் போய்டும்ன்னு சொன்னதும், ப்ராணாபத்து வந்தா, பொழைக்கறதுக்கு எதைத்தான் பிடிச்சுக்க மாட்டா? அன்னிக்கி அந்த முழு விமானமும் பெரியவாளை த்யானிக்கற, பெரியவாளோட திருவடில தஞ்சமடையற த்யானகூடமாயிடுத்த

கொஞ்ச நேரத்துல பைலட்டுகளுக்கு cooperate பண்ணாத முக்யமான இஞ்சின்கள், கருவிகள் எல்லாமே ஏதோ அதிசயமா “miracle “ன்னு அத்தனை பேரும் [பைலட்டுகள் உட்பட] ஆச்சர்யப்படும்படி ரொம்ப லகுவா வேலை செய்ய ஆரம்பிச்சுடுத்து! சாவோட விளிம்புலேர்ந்து எங்க எல்லாரையும் பெரியவா காப்பாத்திட்டா! விமானம் கீழ இறங்கினதும், பைலட்டுலேர்ந்து அத்தனை பேரும் எங்களை சூழ்ந்துண்டு, Kanchi Sage க்கு லெட்டர் எழுதினாலோ, அவரை பார்த்தாலோ, எங்க எல்லாரோட இதயபூர்வமான நன்றியையும், நமஸ்காரத்தையும் கட்டாயம் அவருக்கு தெரிவிக்கணும்ன்னு ரொம்ப கேட்டுண்டா….எங்களு கோ ஒடனே இந்தியாவுக்கு வந்து பெரியவாளை தர்சனம் பண்ணி, அவருக்கு பாதபூஜை பண்ணனும்னு ரொம்ப தவியா தவிச்சு, நேரே இங்க வந்துட்டோம்…” என்று விம்மல்களுக்கிடைய சொல்லி முடித்தனர்.

ஆனால் பெரியவாளோ எப்போதும்போல் தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி, தனக்கு அவர்கள் சொல்லித்தான் எதுவுமே தெரிந்தா மாதிரி மலர்ந்து சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தார். பாரிஷதரிடம் பாதுகைகளை கொண்டு வரச் சொல்லிவிட்டு, அவர்களுடைய சின்னப் பெண் குழந்தையை அருகில் அழைத்து, பெற்றோர் கொண்டுவந்திருந்த ஸ்வர்ணபுஷ்பங்கள், வாஸனை புஷ்பங்கள் எல்லாவற்றையும் அதன் குட்டி பூ போன்ற கைகளால் அள்ளி அள்ளி போடச் சொன்னார். அதுவும் அழகாக அர்ச்சனையாகவே பாதுகைக்கு புஷ்பங்களைப் போட்டது.

பெரியவா அந்த தம்பதியிடம் “நீங்க ரெண்டு பேரும் சேந்துதான் இந்தக் கொழந்தை. இது பண்ற பூஜை, நீங்களே பண்ணறதுதான்! அதோட ஒங்க கையால பண்றதை விட, இது குட்டிக் கையால பண்ணறச்சே நெறைய அர்ச்சனை, நெறைய நாழி நடக்கும்!” என்று தெலுங்கில் கூறினார். அன்று அங்கு எல்லோருமே அந்த ஆனந்தத்தை அனுபவித்தனர்.

அவதார புருஷர்களிடம் உண்மையான பக்தி கொண்டவர்கள், எங்கிருந்தாலும் எந்த ஆபத்திலிருந்தும் நிச்சயம் காப்பாற்றப் படுவார்கள்.

SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM

Read more: http://periva.proboards.com/thread/4348/avathara-purushar-kanchi-maha-periva/#ixzz2TkXfRKHM

Natarajan

 

Old is Gold…Some Vintage Photo Collections For You !!!!

I love old photos because this is the only way I can really see our history. I like to check out the details such as clothing, decorations or food products because is not only interesting to see their habits but also how these evolved during decades or centuries. The images below were taken in the ’30s in various circumstances from an ice-skating scene and all the way to a legendary image with Stalin fooling around. I hope that you like them as much as I do.

Bogdan in stumble upon.com….Bogdan is the founder of Top Design Magazine

 Very Interesting Photos From The ’30s…

 

Young skater with safety cushion

 

Einstein with Einstein Puppet

The photo was taken by Harry Burnett at Cal Tech in Pasadena where Albert Einstein was teaching. Einstein saw the puppet perform at the Teato Torito and was quite amused. He reached into his jacket’s breast pocket, pulled out a letter and crumpled it up. Speaking in German, he said, “The puppet wasn’t fat enough!” He laughed and stuffed the crumpled letter up under the smock to give the puppet a fatter belly.

 

 

 

A photograph of the making of a programme by the BBC about driving errors, taken by Saidman in 1939 for the Daily Herald.

 

 

Stalin is captured in this photograph by Lt. Gen. Nikolai Vlasik, the Soviet dictator’s bodyguard. Vlasik’s off-the-record photos of Stalin caused a sensation in the early 1960s when an enterprising Soviet journalist spirited some out, selling them to newspapers and magazines worldwide.

 

A crazy designed method of crossing a river.

 

Coats Coat Coat Store..A huge showcase of clothes.

 

Probably a tool of measuring the dimensions of “beauty”.

 

Construction of the Hoover Dam

 

Burning cigarette dispenser!!!

 

A baby suspended in a wire cage attached to the outside of a high tenement block window. The cages were distributed to members of the Chelsea Baby Club in London who have no gardens”

 

Empire State Opening

 

Alfred Hitchcock in LA

 

Construction of Mount Rushmore

 

The screen manually scrolls paper maps that are attached to a cable that is similar to a modern mechanical speedometer. Thus, the scroll rate of the map is proportional to vehicle’s speed….

SatNav

.

source::::stumbleupon.com

Natarajan

 

அஞ்சிலே ஒன்று பெற்றான் !!!!…கம்பன் கவி நயம் !!!!

 

அஞ்சிலே ஒன்று பெற்றான்

அஞ்சிலே ஒன்று பெற்றான்
                  அஞ்சிலே ஒன்றை தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக
                ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே  ஒன்று பெற்ற
              அணங்கைகண்டு  ; அயலான் ஊரில
அஞ்சிலே ஒன்று வைத்தான்
              அவன்  நம்மை அளித்து காப்பான் 

இது கம்பராமாயணத்தில் பால காண்டத்தில் வரும் ஒரு பா ..தமிழ் சினிமா காரங்க சொல்லூர மாதிரி ரொம்ப எபெட் எடுத்து தான் கம்பர் இந்த பாடலை புனைந்திருக்க  வேண்டும் .

அனுமனுக்கு வணக்கம் வைக்கும்வகையில இந்த பா உருவாக்க பட்டிருக்கும் .
முதல் அடி கம்பர் ஆரம்பிக்கிறார் அனுமன் பிறப்பில்   அஞ்சிலே ஒன்றுபெற்றான் .அஞ்சு என்று கம்பர்  விளிப்பது ஐம்பூதங்களை என்பது வாசிக்கும் உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது .

அனுமனை வாயுபுத்திரன் என்றும் வாயுமைந்தன் என்றும் விளிப்பார்கள் .காரணம் அவன் வாயுபகவானின் வாரிசு என்கிற படியால் .அதே கருத்தை கம்பர் தன் பாவில்   அஞ்சிலே ஒன்று பெற்றான் என்றுஆரம்பித்திருக்கிறார்.

அடுத்து   அஞ்சிலே ஒன்றை தாவி        இந்த  கவி இடம் பெறும் படலம் பால காண்டம் சீதா பிராட்டியை தேடும் படலம் எனவே அஞ்சில் ஒன்றாகிய நீரை  கடக்க போவதை அதாவது கடலை கடந்து போவதை கம்பர் தன் பாணியில் எடுத்து விட்டிருக்கிறார்..அத்தோடு   அஞ்சிலே ஒன்று ஆறு ஆக   எனும் போது வான் வீதி வழியாக தாவி கடல் கடக்கிறான் என்கிறார் கம்பர்
எதுக்கு?  ஆருயிர் சீதாதேவியை காக்க கடல் தாண்டி செல்கிறான் ,சொல்கிறார் கம்பர்

கடல் தாண்டி அயலூர் அதாவது இலங்கை வருகிறான்,இங்கும் அந்த அஞ்சு என்பதை கம்பர் விடாமல் தொட்டு கொண்டே இருக்கிறார் .அஞ்சிலே  ஒன்று பெற்ற அணங்கை கண்டு இது சீதாபிராட்டி பற்றியது ,சீதா பூமா தேவி மகள் எனவே இந்த வரி இங்கு ..இதை விட அடுத்த வரி தன் முத்திரையை அழகாய் பதித்து விட்டு போயிருக்கிறார் கம்பர்

அஞ்சிலே ஒன்று வைத்தான்  இலங்கா புரிக்கு தீ வைத்தான் என்று முடித்து அவன் நம்மை காப்பான் என்று முடித்திருக்கிறார் கம்பர் …

source::::tamil manam blog site
Natarajan

“ஒரு பவுன் காசு கிடைக்குமா ?”..கேட்டார் மகாபெரியவர் !!!!

கோயில் பிரசாதத்தை பெரியவாளுக்குக் கொடுத்தார், பங்காரு காமாட்சி ஸ்தானீகர். ஸ்ரீ வித்யா உபாசகர். இப்படிப்பட்டவருக்கு மரியாதை செய்ய பவுன் தரவிழைந்தார் பெரியவா. ஆனால் அவர் வந்த சமயத்தில் பெரியவாளிடம் பவுன் எதுவுமில்லை.

பெரியவா பழைய நினைவுக் காட்சிகளை அங்கிருந்தவர்களிடம் சொன்னார். “எனக்குப் பட்டத்துக்கு வந்ததும் முதலில் பரிவட்டம் கட்டினது தஞ்சாவூர் பங்காரு காமாட்சிதான். அவளுக்கு பூஜை பண்ணுபவருக்கு முக்கியமாக பவுன் ஒன்று தரணுமே!” என்று முடிப்பதற்குள் அங்கிருந்த பெண்மணிகள் தங்கள் நகைகளைக் கழற்ற ஆரம்பித்தனர். பெரியவாளோ, “எனக்கு நகை வேண்டாம்; ஒரு பவுன் நாணயம்தான் வேணும்!” என்று அவற்றை வாங்க மறுத்து விடுகிறார்.

நேரம் ஆக ஆக “உனக்கு ஒரு பவுன் கொடுக்க முடியாது போல இருக்கே..” என்று வருத்தப்பட ஆரம்பித்து விட்டார். வந்தவரோ, “எனக்கு எதுவும் வேண்டாம். நீங்கள் நினைப்பதே போதும். தங்கள் அனுக்கிரகம் மட்டும்தான் வேணும்” என்று சமாதானப்படுத்துகிறார். அவருக்கு உடனே ஊருக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம். உத்தரவு கிடைக்கவில்லை. பவுன் கொடுக்காமல் அனுப்ப ஸ்வாமிகளுக்கு மனமில்லை.

பகல் கடந்த பின் திருச்சியிலிருந்து ஒரு தம்பதி வந்தனர். அவருக்கு சஷ்டியப்த பூர்த்தி நடக்கவிருக்கிறது. பெரியவா அனுக்கிரகத்துக்காக வந்தார்கள். பெரியவாளுக்கு முன்னால் ஒரு திருமாங்கல்யத்தையும் ஒரு பவுனையும் எடுத்து வைத்தார்கள்.

எங்களுக்கு ஒரு பிரச்னை, பெரியவா அதைத் தீர்க்கணும். தீர்க்க சுமங்கலியாக இருந்த என் அம்மாவுடையது இந்த மாங்கல்யம். சஷ்டியப்த பூர்த்தியில் இதைத்தான் என் மனைவிக்குக் கட்ட வேண்டுமென்பது என் ஆசை. ஆனால் சிலர் “அது தவறு. புதிதாகத்தான் செய்து போடவேண்டும்” என்கிறார்கள். அதனால் ஒரு பவுன் வாங்கினேன். பெரியவா எதைத் தொட்டு ஆசிர்வாதித்துக் கொடுக்கிறேளோ அதையே பயன்படுத்தப் போகிறேன்” என்று சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திருந்தார். பெரியவா, “உங்க அம்மா திருமாங்கல்யத்தையே கட்டிவிடு, க்ஷேமமாக இருப்பீர்கள்” என்று ஆசி கூறினார். இதையே எதிர்பார்த்தவருக்கு ஆனந்தக் கண்ணீர் வந்தது.

பிரசாதத்துடன் திருமாங்கல்யத்தைத் தம்பதியிடம் கொடுத்த பெரியவா, “இந்தப் பவுனை நான் வைத்துக்கொள்ளட்டுமா?” என்று கேட்டார். அதனைப் பெரிய பாக்கியமாகக் கருதி
ஆனந்தமாக அவர் காலடியில் அர்ப்பணித்து நின்றார்கள் திருச்சி தம்பதியினர். பெரியவாளும் அகமகிழ்ந்து அந்தப் பவுனைத் தர வேண்டியவருக்குக் கொடுத்துவிட்டு அவரையும் வந்தவர்கள் காரிலேயே அனுப்பி வைத்தார்.

அவர் மனம் வைத்துவிட்டால் அந்தக் காரியம் நிறைவேறாமல் விடமாட்டார். சந்தர்ப்பங்கள் தானாகவே வந்து சேரும்.

இப்படி அனுக்கிரகம் பண்ணுவதற்கு வந்தவர், வராதவர்; தெரிந்தவர், தெரியாதவர், வைதவர், வாழ்த்தினவர், கேட்டவர், கேட்காதவர், ஏழை-பணக்காரர் என்று எந்தப் பாகுபாட்டையும் அவரிடம் காண முடியாது. அருளையோ, பொருளையோ அள்ளி அளிப்பது ஒன்றுதான் அவருடைய கோட்பாடு.

“சதாசிவ அனுக்கிரஹதா..” என்று வருணிக்கப்படும் அம்பாள் ஸ்வரூபமே அவரல்லாவா?

– எஸ்.கணேச சர்மா எழுதிய புத்தகத்தில் இருந்து….

Read more: http://periva.proboards.com/thread/630/gold-coin#ixzz2Tcd1Jbzn

source::::periva.proboards.com

Natarajan

மகாபெரியவர் படிப்பிலே “மக்கு ” இல்லையே !!!!!!

பெரியவா
படிப்பிலே ‘மக்கு’ ன்னு நீ நெனச்சியோ  !!!illaiye

நான் திண்டிவனம் பள்ளிக்கு சென்று பெரியவா படித்ததற்கு அடையாளமாக ஏதாவது கிடைக்குமா என்ற ஆர்வத்தில் தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் பழைய ரெக்கார்ட்கள் வைக்கப்பட்டிருந்த அறையை துழாவினேன். அதிசயத்திலும் அதிசயமாக ஒரு வருகை பதிவேட்டின் ஒரே ஒரு காகிதம் மட்டும் கிடைத்தது. அது 1904 ஆம் வருடம், பெரியவா ரெண்டாம் பாரம் படித்தபோது, அந்த வகுப்பின் வருகை பதிவேட்டின் ஒரு ஷீட்.

அதில் ‘சுவாமிநாதன்’ என்ற பெயரை கண்டபோது எனக்கு மகிழ்ச்சி நிலைகொள்ளவில்லை. மறுநாளே, ஆந்திராவில் இருந்த பெரியவாளை தரிசிக்க சென்றேன்.

நடுநிசி, பூர்ண நிலா, பெரியவா ஓர் ஊரில் இருந்து வேறோர் கேம்ப் க்கு மேனாவில் பயணித்து கொண்டிருந்தார். கூடவே ஓடி, திண்டிவனம் சென்ற விவரத்தையும், ‘வருகை பதிவேடு’ காகிதம் கிடைத்த செய்தியையும் கூறினேன். சற்று தொலைவு சென்றதும் மேனா நின்றது. உடன் வந்தவர்களையும் மேனாவை தூக்கி வந்தவர்களையும் ஆகாரம் செய்து விட்டு, வரும்படி பணித்துவிட்டு, பெரியவா அந்த வருகை பதிவேட்டு ஷீட்டை வாங்கி டார்ச் லைட் லென்ஸ் உதவியோடு பார்த்தார். முகம் மலர்ந்தது.

இது எப்படிடா உனக்கு கிடச்சுது? என்று ஆச்சரியத்துடன் கேட்டு விட்டு, அதில் இருந்த பெயர்களை ஒவ்வொன்றாக படித்தார். அறுபத்து நான்கு வருடங்கள் முந்தய நாட்களின் நினைவுகளில் ஒரு கணம் மூழ்கி போனார். தம்முடன் ரெண்டாம் பாரத்தில் படித்த மாணவர்களை நினைவு கூர்ந்தார்.

அவர்களில் யார் யார் அப்போது உயிருடன் இல்லை என்பதையும் மற்றவர்கள் எந்த ஊரில் இருக்கிறார்கள் என்பதையும் சொன்னார்.

இறுதியாக, ‘என் பேர் எல்லோருக்கும் கடைசிலே இருக்கே, பெரியவா படிப்பிலே ‘மக்கு’ ன்னு நீ நெனச்சியோ?’ என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.

‘இல்லே, பெரியவா பேர் ஏன் கடைசிலே இருக்குன்னு நெனச்சிண்டேன்’ என்ற உண்மையை சொன்னேன்.

‘என் பூர்வாச்ரம தகப்பனாருக்கு ஸ்கூல் இன்ஸ்பெக்டர் உத்தியோகம். அடிக்கடி அவரை, ஊர் மாத்திடுவா. சிதம்பரத்திலேருந்து திண்டிவனத்துக்கு செப்டம்பர் மாசம் மாத்தலாயி வந்தார். பாதியிலே வந்து இந்த ஸ்கூல் லே சேர்ந்தேன். அதனால தான் என் பேரு கடைசிலே இருக்கு’ என்று விளக்கம் தந்தார்.

அன்பே அருளே புத்தகத்தில் ஸ்ரீ. பரணீதரன் அவர்கள்.

Natarajan

காஞ்சி சுவாமி ….கஞ்சி சுவாமி. !!!…காஞ்சி பெரியவரின் சிலேடை !!!!

காஞ்சிபுரத்தில் வேத பாஷ்ய பரிட்சை நடந்தது.ஏராளமான பண்டிதர்கள் கலந்து கொண்டனர்.

அந்த நாள்களில்,ஸ்ரீ மடத்தில் டீ,காபி கொடுக்கும் வழக்கம் இல்லை.வித்வான்களுக்கு மோர்க் கஞ்சி,பால் கஞ்சிதான் கொடுப்பது வழக்கம்.

ஒரு பக்தர்,வித்வான்களுக்கு கஞ்சி கொடுத்துக்கொண்டிருந்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் எல்லாரும் கஞ்சிக்காக நின்று கொண்டிருந்தார்கள்.

ஒரு வித்வான் கஞ்சி கொடுத்துக்கொண்டிருந்த நபரைப் பார்த்து,[தனக்கு உடனே கொடுக்க வேண்டும் என்பதற்காக] ‘கஞ்சி ஸ்வாமி….கஞ்சி ஸ்வாமி”என்று உரத்த குரலில் அழைத்துக் கொண்டிருந்தார். [கஞ்சி கொடுங்கோ ஸார் என்பதைப் போல கஞ்சி ஸ்வாமி!]

சற்றுத் தொலைவில் உட்கார்ந்தபடி ஸ்ரீ பெரியவாள் இதைக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தார்.

அந்த சமயம் பார்த்து, ஒரு வித்வான் [கஞ்சி கேட்டவரின் குரலைக் கேட்டு] பரபரப்புடன்,”கஞ்சி ஸ்வாமிகள் எக்கட உன்னாரு?” என்று[பெரியவாள் தரிசனத்துக்காக] ஆவலுடன் கேட்டார்.

இரண்டையும் கேட்டுக் கொண்டிருந்த பெரியவாள் மெல்லச் சிரித்தபடியே……

“தெலுங்கில்தான் ‘கஞ்சி ஸ்வாமி’யாக நான் இருந்தேன். இப்போது தமிழிலும் ‘கஞ்சி’ ஸ்வாமியாக [கஞ்சி கொடுக்கும் நபர்] ஆகிவிட்டேன்.ரொம்பப் பொருத்தம்” என்று கூறி, பொருள் சிலம்பம் செய்தார்கள்.
Jaya Jaya Shankara, Hara Hara Shankara !

source::::periva.proboards.com
Natarajan
Read more: http://periva.proboards.com/thread/4050/kanchi-swami/#ixzz2SPk8wxzw

Boeing…..A Retrospective Look !!!

A Pan American Airways flying boat aircraft passing over a clipper ship on the Spanish coast. (Photo by Hulton Archive/Getty Images). January 1938

 

Colonel Roscoe Turner, the pilot of an American Boeing plane, showing his wife a model of the plane, at the airfield in Mildenhall. (Photo by R. Wesley/Fox Photos/Getty Images). 19th October 1934

 

The Boeing B-17-C-type Flying Fortress, known to the RAF as a Fortress I bomber, in flight. (Photo by Three Lions/Getty Images). Circa 1950

 

Three Boeing B-29 Superfortress bombers dropping bombs over North Korea. (Photo by Keystone/Getty Images). 1952

 


The Pan-American World Airways clipper “Flying Cloud”, the first of a fleet which will fly between New York and London. (Photo by Topical Press Agency/Getty Images). 1949

 

Interior of a giant Boeing 707 jet airliner which can take up to 165 economy class passengers. Owned by Pan-Am she is carrying a service crew for noise test flights over Britain. (Photo by Keystone/Getty Images). 8th September 1958

 

A Boeing 720 crash lands on a runway with a faulty nosewheel. (Photo by Stroud/Getty Images). 1962

 

The hijacked Boeing 707 of Lebanon’s Middle East Airlines, with the safety chutes down, at Lydda Airport, Israel. The plane was hijacked by a whisky-drinking Libyan, armed with two pistols, soon after its take-off from Nicosia, Cyprus, en route to Beirut, and diverted to Israel. Israeli commandos stormed the plane and rescued the 109 passengers and 10 crew. (Photo by Daniel Rosenblum/Keystone/Getty Images). 17th August 1973

 

A Pan-American 747 jumbo jet on the tarmac at Heathrow Airport, where it touched down after carrying 380 people, a new world record for the number of people ever to fly in one aircraft. (Photo by Dennis Oulds/Central Press/Getty Images). 12th January 1970

 

 
After completing its second successful mission into space, the STS-2 Orbiter Columbia begins its return flight to the Kennedy Space Centre aboard the Boeing 747 Shuttle Carrier Aircraft. (Photo by Hulton Archive/Getty Images). 1981

 

source:::avaxnewsnet

Natarajan

 

 

கனவில் வந்த மாமுனிவர் !!!!

கனவில் வந்த மெய்யர்!
எழுதியவர் : ஜானா கண்ணன், மைலாப்பூர், சென்னை.
மூலம் : மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் – ஐந்தாம் பகுதி

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நாட்கள். பெரியவாளைப் பற்றிப் பொதுவாகத் தெரிந்து கொண்டிருந்தேனே தவிர, விசேஷமான பக்தி என்று எதுவும் இல்லாத காலம்.

திடீரென்று தரிசனம் கொடுத்தார்கள் – கனவில்! ‘ஏதோ, பிரமை’ என்று ஒதுக்கித் தள்ள முடியவில்லை. அடிக்கடி வந்து தரிசனம் கொடுத்தார்கள்.
இந்தப் புனிதக் கனவுகளுக்கு ஒரு கௌரவம் கொடுக்க வேண்டாமா?

குருவார விரதம் மேற்கொண்டேன். அது முதல் ஒவ்வொரு வியாழனிலும் தரிசனம் கிடைக்க ஆரம்பித்தது. சந்தோஷமாக இருந்தது. ஆனால் அது நீடிக்கவில்லை.
பெரியவா வருவதை நிறுத்திக் கொண்டுவிட்டார்கள். நான் என்ன தவறு செய்தேன்?

அன்று வியாழக்கிழமை. படுக்கையில் உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டு பிரார்த்திக்கிறேன். ‘இன்றைக்காவது தரிசனம் கொடுக்கணும்’.
ஊஹூம்… பெரியவாள் வரவில்லை.

ரொம்பவும் ஏக்கமாகத்தான் இருந்தது. என் பிரார்த்தனையை ஏன் பெரியவாள் ஏற்றுக் கொள்ளவில்லை?

இரண்டு நாட்கள் கழித்து சொப்பனத்தில் காட்சி தந்தார்கள். “பெரியவாள் தரிசனம் முன்பெல்லாம் அடிக்கடி கிடைச்சுது. இப்போ பெரியவா வரதே இல்லை” என்று வருத்தத்துடன் கூறினேன்.

பெரியவாள் மெல்லச் சிரித்தார்கள். “எனக்கு வயசாயிடுத்தோன்னோ? நான் கிழவனாயிட்டேன். (தண்டத்தைக் காட்டி) இந்தக் குச்சியை எடுத்துண்டு அவ்வளவு தூரம் வரமுடியல்லே. நீ தான் என்னைப் பார்க்க வரணும்”.

“பெரியவா அனுக்ரஹம் இருந்தால் வருவேன்.”

“உத்ஸவத்துக்கு வரயா?”

“அனுக்ரஹம் செய்தால் வருவேன்”.

கனவு கலைந்தது. ஒன்றும் விளங்கவில்லை. எந்த உற்சவத்துக்கு வரவேண்டும்? அதற்கும் பெரியவாள் தரிசனத்துக்கும் என்ன சம்பந்தம்?

மறுநாளே அந்த ஆச்சரியம் நடந்தது.

சென்னையில் ஒரு கல்யாணத்துக்கு என் பெரியம்மா போக வேண்டியிருந்தது. “துணைக்கு நீ வாயேன். நீ வந்தால்,, போகிற வழியில், காஞ்சிபுரத்தில் பெரியவாளை தரிசனம் பண்ணிவிட்டுப் போகலாம்.”

அடுத்த நிமிடமே நான் தயாராகிவிட்டேன்!

மறுநாள் காலை நாங்கள் காஞ்சிபுரம் மடத்து வாசலுக்குச் சென்றபோது, அங்கே காமாக்ஷி வந்து நின்றுகொண்டிருந்தாள். ஏகக் கூட்டம். மூன்று பெரியவர்களும் வலம் வந்து கொண்டிருந்தார்கள்.

“என்ன விசேஷம் இன்னிக்கு” என்று உள்ளூர்ப் பெண்மணியைக் கேட்டேன்.

“தெரியாதா உனக்கு? காமாக்ஷி கோயில் உத்ஸவம் நடந்து கொண்டிருக்கு”.

எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. “உத்ஸ்வத்துக்கு வரயா?” – வெறும் கனவு அல்ல; தெய்வ சங்கல்பம்!

source::::periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/4226/mere-dream-divine-decision/#ixzz2SIoEgk8g