Type the year only!!
Then click the question (?) mark!
Sit back and enjoy!!
Click the below link :
Type the year only!!
Then click the question (?) mark!
Sit back and enjoy!!
Click the below link :
|
Giraffe Riddle on Facebook-Truth! |
|
Summary of the eRumor: |
The Truth:
The good news is your friends have not been hacked.
“It’s the newest social media craze to involve a cute animal,” according to an October 28, 2013 article by the Chicago Tribune News.
Participants of the riddle voluntarily changed their profile photos to an image of a giraffe if they could not correctly answer a riddle that has gone viral on Facebook.
The riddle goes like this:
It’s 3 a.m., the doorbell rings and you wake up. Unexpected visitors! It’s your parents and they are here for breakfast. You have strawberry jam, honey, wine, bread and cheese. What is the first thing you open?
The rules of the game say that if the players answer the riddle incorrectly that they have to change their Facebook profile photo to an image of a giraffe.
Spoiler:
If you guessed your eyes or the door you are correct. Those are the only two acceptable answers to the riddle.
source:::: truth or fiction .com
natarajan

source:::: glasbergen.com….. While seeing this cartoon, it is but natural to recall the recent “outburst ” of Mr. Rao . , Scientist on the allocation of funds to Scientific projects !!!
natarajan

“ஒபாமா, மன்மோகன் சிங் உள்ளிட்டவர்கள் எல்லாம் என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் நான் முடிவு செய்வேன். வீட்டில் யார் துணி துவைப்பது, பாத்திரம் துலக்குவது போன்ற வேலைகளை என் மனைவி முடிவு செய்வாள்’’ என்ற கணவன் – மனைவி ஜோக் இங்கு மிகப் பிரபலம். ஆனால், நாளாக நாளாக இந்த ஜோக் உண்மையாகிவருகிறது. இப்போதெல்லாம் ஒபாமா என்ன செய்ய வேண்டும், மன்மோகன் சிங் என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் யார் வேண்டுமானாலும் முடிவுசெய்கிறார்கள். கேட்கவோ பார்க்கவோ ஒரு கூட்டம் இருக்கிறது என்பதற்காக டி.வி-யிலோ, சமூக ஊடகங்களிலோ எல்லாப் பிரச்சினைகளுக்கும் கருத்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.
கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக எழுதப்பட்டது அல்ல இந்தக் கட்டுரை. ஆனால், எல்லாப் பிரச்சினைகளுக்கும் நம்மாட்கள் எப்படி அடுத்தடுத்த நிமிஷங்களில் கருத்து சொல்கிறார்கள் என்பதை யோசித்துப்பாருங்கள்… பிரமித்துப் போவீர்கள். ஒருவர் ஒரு விஷயத்தில் நிபுணராக இருக்கலாம்; இரண்டு விஷயங்களில் நிபுணராக இருக்கலாம். அதெப்படி எல்லா விஷயங்களிலும்? தெரியவில்லை!
சமூக வலைதளங்களில் பின்னிஎடுக்கும் ஒரு நண்பர் சொன்ன தகவல் இது, “சனிக் கிழமை மதியத்துக்குப் பிறகு ஃபேஸ்புக்கில் போடும் ஸ்டேட்டஸுக்கு மதிப்பு கிடையாது. காலையில் 11 மணிக்கும் மதியம் 3 மணிக்கும் ஸ்டேட்டஸ் போட்டுப்பாருங்கள், நல்ல ஹிட்ஸ் அள்ளும்.”
நம்மூரில் வணிக நிர்வாகவியல் படிப்புகள் வந்த புதிதில், அதற்காகப் பிரத்யேக மாகப் பேராசிரியர்கள் யாரும் கிடையாது. கல்லூரிகளில் என்ன செய்வார்கள் என்றால், பெரிய நிறுவனங்களில் இருக்கும் அதிகாரிகளை அழைத்து வந்து, எப்படி நிறுவனங்களை நடத்த வேண்டும், பிரச்சினை களை எப்படிக் கையாள வேண்டும் என்று பாடம் எடுப்பார்கள். கூடிய சீக்கிரம், அதுபோல டி.வி. சேனல்களுக்குச் செல்லும் முன்பு அங்கு இருப்பது நீல நிற மேடைப் பின்னணியா, பச்சை நிறப் பின்னணியா; எந்தப் பின்னணிக்கு எப்படிப்பட்ட ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும்; நாற்காலியில் நேராக அமராமல் கால் மேல் கால் போட்டு 40 டிகிரி கோணத்தில் சாய்வாக ஏன் அமர வேண்டும்; எதை எடுத்தாலும் முந்திக்கொண்டு எப்படிக் கருத்துச் சொல்ல வேண்டும்; ஃபேஸ்புக்கில் கருத்துத் தெரிவிக்கும்போது எந்தக் கிழமை எந்த நேரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றெல்லாம் வகுப்புகள் நடத்துவார்கள்போல கருத்துப் புயல்கள்.
“இர்பான் பதான் பந்து வீசும் சமயத்தில் என் அருகில் இன்னொரு வர்ணனையாளராக வாசிம் அக்ரம் இருப்பார். அதுபோன்ற சமயத்தில் நான் ‘ரிவர்ஸ் ஸ்விங்’ பற்றிப் பேசக் கூடாது என்பது எனக்குத் தெரியும்’’ – இது கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே சொன்ன வார்த்தைகள். சச்சின் எப்படி பேட் பிடிக்க வேண்டும் என்று கருத்துச் சொல்பவர்கள் பலர் கிரிக்கெட்டே தெரியாதவர்கள்.
கொஞ்சம் தெரிந்தவர்கள் இப்படிக் கொடுமைப்படுத்துகிறார்கள் என்றால், ஒன்றுமே தெரியாதவர்கள், “இப்போதுதான் படத்துக்குப் போனேன்; சாயங்காலம் குளிக்கப்போகிறேன்” என்றெல்லாம் பதிவு போட்டுக் கொல்கிறார்கள். ஸ்டேட்டஸ் போடுவது ஒரு போதை என்றால், எத்தனை லைக்ஸ் விழுந்திருக்கின்றன என்று எண்ணிக்கொண்டே இருப்பது போதை ஊறுகாய். மது போதைக்குக்கூட ஓர் எல்லை உண்டு. இந்த போதைக்கு?
வாசு கார்த்தி – தொடர்புக்கு: vasucarthi@gmail.com

source:::::glasbergen.com
natarajan


இதனைத் தலைப்பாக்கி ஓர் இணைய தளம், நச்சென்று நாம் எப்படி தண்ணீரைக் காப்பாற்ற வேண்டும் என ஒரு சில படங்களில் அறிவுறுத்துகிறது. இந்த தளம் பிரிட்டன் நாட்டு மக்களை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டு இயங்கினாலும், நீர் ஆதாரங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும் இந்த உலகின் அனைத்து மக்களையும் பார்த்து நகைச்சுவை கலந்து, தகவல்களைத் தந்து எச்சரிக்கை செய்தியை வழங்குகிறது. இந்த அருமையான தளம் இயங்கும் முகவரி:http://everylastdrop.co.uk நம்முடன் தகவலைத் தந்து பேசும் இந்த தளத்தில் நுழைந்து, பின்னர், நாம் கீழாகச் செல்கையில், இதன் மேற்பகுதி மாறுகிறது. பகலாக இருப்பது இரவாகிறது. நமக்கு ஒரு செய்தி கிடைக்கிறது. ஒவ்வொரு நாளும், அன்றாட வாழ்க்கை முறையிலும், தொழிற்சாலைகளிலும், நாம் எவ்வளவு தண்ணீரைப் பயன்படுத்துகிறோம் என்று காட்டப்படுகிறது. நம் வாழ்வியல் முறைகளை மாற்றினால், எப்படி தண்ணீரை மிச்சப்படுத்தலாம் என்று காட்டப்படுகிறது. எடுத்துக் காட்டாக, நாம் வழக்கமாகக் குளிப்பதைக் காட்டிலும், ஷவர் மூலம் குளித்தால், எவ்வளவு தண்ணீரை மிச்சப்படுத்தலாம் என்று காட்டப்படுகிறது. அதே போல, ஆடைகளைத் தயாரிப்பதிலும், சாப்பிடும் முறைகளை மாற்றுவதிலும், மிச்சப்படுத்தும் தண்ணீரின் அளவு தெரிவிக்கப்படுகிறது. இதே திரையில் இன்னும் வேகமாக ஸ்குரோல் செய்து சென்றால், ஒன்றரை நிமிடம் இயங்கும் வீடியோ குறும்படம் காட்டப்படுகிறது. இதில் தண்ணீரை எவ்வாறெல்லாம் மிச்சப்படுத்தலாம் என்று பல தகவல்கள் தரப்படுகின்றன. இதை எல்லாம் பார்த்த பின்னர், ஒவ்வொருவரும் தண்ணீரை மிச்சப்படுத்தும் பல வழிகளைக் கடைப்பிடிப்பார்கள் என்பது உறுதி. பல் துலக்கும்போதும், துணிகளை சலவை செய்திடும்போதும் நிச்சயம் தண்ணீரைச் சிக்கனமாய்ச் செலவு செய்திட முயற்சிப்போம். இந்த அருமையான இணைய தளம் இயங்கும் முகவரி : http://everylastdrop.co.uk
source:::::computer malar from Dinamalar Tamil Daily
natarajan


பதினைந்து ஆண்டுகளுக்கு முன், செப்டம்பர் 27ல், மக்கள் தங்கள் இணைய உலாவில், கூகுள் தேடுதளத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். அப்போது ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் இல்லை; குரோம்புக் பயன்படுத்தி யாரும் வீடியோ பார்க்கவில்லை; கூகுள் கிளாஸ் அணிந்து பாட்டு கேட்கவில்லை; அல்லது ஹாட் பலூன் தரும் இணைய இணைப்பில் தேடலை மேற்கொள்ளவில்லை. சாதாரண தேடு தளம் தரும் நிறுவனமாக, 15 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப் பட்ட கூகுள் நிறுவனம், இன்று உலகில் மிகச் சிறந்த சக்தியும் தொழில் நுட்பமும் கொண்ட நிறுவனமாக, ஆக்டோபஸ் போல பல திசைகளில் தன் செயல்பாட்டினைக் கொண்டுள்ளது. உலகின் பல கோடி மக்கள் குறித்த தகவல்களைத் தன்னகத்தே கொண்ட ஒரே நிறுவனம் இதுவாகத்தான் இருக்கும். இந்த உலகம் மட்டுமின்றி, பிரபஞ்சம் குறித்த தகவல்களைத் தன்னிடத்தே வைத்திருப்பதிலும், விளம்பரம் வழியே வருமானம் பெறுவதிலும், கூகுள் நிறுவனத்தை மிஞ்ச இன்று எந்த நிறுவனமும் இல்லை. பலூன் வழியே இன்டர்நெட், ட்ரைவர் இல்லாத கார், கண்களின் அணியும் கம்ப்யூட்டர் என கூகுள் செல்வதைப் பார்த்தால், “”என்னிடம் வா, உன் வாழ் நாளை 10 ஆண்டுகள் நீட்டித்துத் தருகிறேன்” என்று கூகுள் சொன்னாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.
இணையம் என்பது புரியாத புதிராகவும், குழப்பமான குவியலாக இருந்ததை, இதில் நீங்கள் மதித்துப் போற்ற வேண்டிய விஷயங்கள் உள்ளன என்று மக்களை ஏற்றுக் கொள்ள வைத்தது கூகுள்.
இணையத்தில் நம் அன்றாட பிரச்னைகளுக்கான தீர்வுக்காக அணுகியபோது, நம் சமூகத் தொடர்புகளை, நண்பர்களுடான உறவு கொண்டாடும் அஞ்சல்களை, அழகாக அடுக்கி வைத்து நாம் பயன்படத் தந்தது. நம் பேச்சுக்களை டெக்ஸ்ட்டாக மாற்றித் தந்தது. உலகில் நாம் எங்கு இருக்கிறோம்; எங்கெல்லாம் போக ஆசைப்படுவோம் என்று எடுத்துக் காட்டியது. நாம் பயணிக்கும்போது, நாம் செல்ல வேண்டிய பாதையைக் காட்டி, எடுத்துச் சொல்லி, வழிகாட்டியது. எல்லாவற்றிற்கும் மேலாக, நம்மைப் பற்றிய தகவல்களை ஆய்வு செய்து, நம் எதிர்காலத் தேவைகளும், விருப்பங்களும் என்னவாக இருக்கும் என்று எடுத்துக் காட்டுகிறது.
உலகக் குடிமக்கள் அனைவரையும் வளைத்துப் போட்டு, அனைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான நிறுவனமாக கூகுள் எப்படி வளர்ந்தது? அமெரிக்காவின் மென்லோ பார்க் என்ற இடத்தில், லாரி பேஜ் மற்றும் செர்கே பிரின் ஆகிய இருவரால், சூசன் ஓஜ்சிக்கி என்பவரது வீட்டின் கார் நிறுத்துமிடத்தில், 1998ல் தொடங்கப்பட்ட கூகுள் நிறுவனம், இன்று உலகளாவிய நிறுவனமாகத் தன் 15 ஆவது ஆண்டின் நிறைவு விழாவினைக் கொண்டாடியது.
தேடுதல் வர்த்தகத்தில், கூகுளை நெருங்க, மைக்ரோசாப்ட் எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை. பல கோடி டாலர்கள் செலவில் தன் பிங் (Bing) தேடல் தளத்தினைத் தொடர்ந்து மாற்றி அமைத்து வருகிறது. ஆனாலும், அமெரிக்காவில் தேடல் வர்த்தகத்தில் 18 சதவீதப் பங்கினையே பெற முடிந்தது. கூகுள் அமெரிக்கா வில் 70 சதவீதப் பங்கினையும், உலக அளவில் 90 சதவீதத்தையும் கொண்டு வேகமாக முன்னேறியும் வருகிறது.
பதினைந்து வயது நிரம்பிய கூகுள், தொடர்ந்து முன்னேறுகையில், பல ஆண்டுகள் டிஜிட்டல் உலகில் கொடி நாட்டிய மைக்ரோசாப்ட், மொபைல் சாதனங்களில் ஏற்பட்ட மாற்றத்தை கோட்டைவிட்டதால், இன்னும் எழுந்து வர இயலாமல் தவிக்கிறது. கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் இயங்கு தளம், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். தளத்துடன் இணைந்து, மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் மொபைல் போன் திட்டங்களைத் தகர்த்தது. மைக்ரோசாப்ட் பெற்ற வெற்றிமுனைகளையும், மேற்கொண்ட தவறுகளையும், கூகுள் பாடமாக எடுத்துக் கொண்டு தன் திட்டங்களை வகுத்தால், தோல்வியின்றி தொடரும் என்பதில் சந்தேகமில்லை.
கூகுள் கடந்து வந்த பாதை:
நவம்பர் 1998: கூகுள் தன் இணையதளத்தினை http://google.stanford.edu என்ற முகவரியில் தொடங்கியது. ஐ.பி.எம், இண்டெல் மற்றும் சன் நிறுவனங்கள் இலவசமாகக் கொடுத்த சாதனங்களுடன், தன் நிறுவனத்தைத் தொடங்கியது கூகுள். சன் மைக்ரோசிஸ்டத்தின் துணை நிறுவனர் பெக்டால்ஷிம் ஒரு லட்சம் டாலர் நிதி அளித்து உதவி செய்தார்.
ஜனவரி 1999: கூகுளின் சோதனைத் தளம் http://alpha.google.com என்ற முகவரியில் இயங்கத் தொடங்கியது. பின்னர் Google.com என்ற முகவரிக்கு மாறியது.
ஏப்ரல் 1999: தன் அலுவலகத்தினைப் புதிய இடத்திற்கு மாற்றியது.
மே 2000: கூகுள் உலகளாவிய அளவில் தன் சேவையை நீட்டித்தது. பயனாளர்கள், பிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலியன், ஸ்வீடிஷ், பின்னிஷ், ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ், டச், நார்வேஜியன் மற்றும் டேனிஷ் ஆகிய மொழிகளில் தங்கள் தேடல்களை மேற்கொள்ள கூகுள் உதவியது.
ஜூலை 2000: கூகுள் நூறு கோடிக்கும் மேலான இணைய தளங்களைப் பட்டியல் இட்டு, தகவல்களைத் தர முடிந்தது.
ஆகஸ்ட் 2000: எங்களுடன் விளம்பரப் படுத்துங்கள் என்ற லிங்க்கை கூகுள் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது. கூகுளில் தேடல் களின் நாளொன்றின் எண்ணிக்கை, ஒரு கோடியே 30 லட்சமாக உயர்ந்தது.
அக்டோபர் 2000: AdWords என்று சொல்லப்படுகிற விளம்பரச் சொற்கள், கூகுள் இணைய தளத்தில் வரத் தொடங்கின.
ஜூலை 2001: கூகுள் குரூப் தொடங்கப்பட்டது. தேஜா நியூஸ் என்ற நிறுவனத்தை கூகுள் வாங்கியது.இது செய்திகளைச் சேர்த்து வைத்துப் பயன்படுத்தும் நிறுவனமாகும்.இதனை groups.google.com என்ற தன் நிறுவனப் பிரிவிற்கு அளித்து, தன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த வழங்கியது.
பிப்ரவரி 2002: கூகுள் ‘Search Appliance’ என்ற தேடல் வகையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம அனைத்து இணைய டாகுமெண்ட்களும் அலசப்பட்டு, தொகுப்பு பட்டியல் உருவாக்கப்பட்டு தரப்பட்டன. மைக் ரோசாப்ட் ஆபீஸ் டாகுமெண்ட்ஸ் மற்றும் பி.டி.எப். பைல் உட்பட பலவகையான பைல் வகைகள் இதன் கீழ் ஆய்வுக்கும் தொகுப்புக்கும் எடுத்துக் கொள்ளப்பட்டன.
நவம்பர் 2002: Google Answers சேவை வெளியானது. கூகுள் சலித்துத் தேடிக் கண்டறிந்த 500 வல்லுநர்களும், அறிஞர்களும், வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு 24 மணி நேரத்தில் பதில் அளிக்கும் சேவை இது. இதற்கு கேள்வி ஒன்றுக்கு 2.50 டாலர் கட்டணம். 24 மணி நேரத்தில் விடை கிடைக்கும்.
மார்ச் 2003: Business Solutions தொடங்கப்பட்டது. நிறுவனங்களின் செயல்பாட்டிற்கு இந்த தீர்வு முறை மிகவும் உதவி வருகிறது.
மார்ச் 2004: Froogle அறிமுகமானது. நுகர்வோர் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் பொருட்கள் பட்டியல், வாடிக்கையாளர்களுக்குக் கிடைத்தது. பின்னர் 2007ல் இது Google Product Search எனவும், 2012ல் Google Shopping எனவும் பெயர் மாற்றம் பெற்றது.
பிப்ரவரி 2005: Google Local வெளியானது. வாடிக்கையாளர்கள், தாங்கள் வசிக்கும் இடங்களில், தங்களுக்குத் தேவையான வர்த்தகத் தகவல்களைப் பெற இந்தப் பிரிவு உதவுகிறது.
ஏப்ரல் 2006: கூகுள் மேப்ஸ் (Google Maps) அறிமுகமானது. டிஜிட்டல் உலகில் புதிய சகாப்தத்தினை இது ஏற்படுத்தியது. Google Local இதனுடன் இணைக்கப்பட்டது.
ஆகஸ்ட் 2006: கூகுள் வீடியோ (Google Video) உருவாக்கப்பட்டுச் சோதனை முறையில் தரப்பட்டது. உலகின் முதல் ஆன்லைன் வீடியோ வர்த்தக மையமாக இது பெயர் பெற்றது. டிவி நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் டாகுமெண்ட்ரி படங்களை இதன் மூலம் தேடிப் பெற முடிந்தது. கூகுள் வீடியோ ஸ்டோரில், படங்களை விற்கலாம், வாங்கலாம், வாடகைக்கு எடுக்கலாம். அக்டோபர் 2006ல், யு ட்யூப் வாங்கப்பட்டு, அதனுடன் கூகுள் வீடியோ இணைக்கப்பட்டது.
மே 2007: கூகுள் இணைய தளத்திற்கு புதிய இண்டர்பேஸ் தரப்பட்டது. இதுவரை சர்ச் கட்டத்தின் மேலாகத் தரப்பட்ட லிங்க்ஸ் அனைத்தும், மேல் இடது பக்கம் கொடுக்கப்பட்டன. Maps, Labs, Patents, Reader, Scholar மற்றும் Finance போன்ற லிங்க்குகள் இடம் பெற்றன.
செப்டம்பர் 2009: யூசர் இண்டர்பேஸ் மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டது. I’m Feeling Lucky சர்ச் பாக்ஸிலிருந்து தள்ளி இடம் பெற்றது.
நவம்பர் 2011: Google + அறிமுகப்படுத்தப் பட்டது. முதலில் அழைப்பு பெற்றவர்களுக்கு மட்டும் எனச் செயல்படத் தொடங்கி, பின்னர், செப்டம்பர் 2011ல், அனைவருக்கும் தரப்பட்டது.
செப்டம்பர் 2013: கூகுள் தன் 15 ஆவது ஆண்டுவிழாவினைக் கொண்டாடியது. கூகுளின் புதிய தேடல் முறையாக “”ஹம்மிங் பேர்ட்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில், கம்ப்யூட்டர் மற்றும் பிற இணையத் தொடர்பு சாதனங்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. வலைத் தளங்களின் எண்ணிக்கையும் வளர்ந்துள்ளது. எனவே, இந்த தேடல் முறை, மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாலெட்ஜ் கிராப் (Knowledge Graph) என்ற ஒரு தேடல் முறையை முன்பு அறிமுகப்படுத்திய கூகுள், தற்போது அதன் மேம்பாடடைந்த தொழில் நுட்பமாக இதனைத் தந்துள்ளது.
source >>>>>computer malar from Dinamalar….
natarajan
பரபரப்பை மட்டுமே தீனியாக எண்ணி உலா வரும் டிவி செய்தி சேனல்கள் மகிழும் வண்ணம் கிலோ கணக்கில் அவல் மூட்டைகளை அவர்களின் வெறும் வாய்கள் மெல்வதற்கு அள்ளி வீசியிருக்கிறது இயற்கை. அதாவது ‘பைலின்’ புயல். இரண்டு நாட்களாக, அனைத்து செய்தி சேனல்களும், குறிப்பாக ஆங்கிலச் செய்திச் சேனல்களும் ‘பைலின்’பால் கொண்ட பற்று அப்பப்பா..!
இயற்கை சீற்றத்தால் இன்னலுற்றுத் தவிக்கும் ஏராளமான மக்களுக்கு இவர்கள் எந்த வித உதவியும் செய்யவில்லை. மாறாக இவர்கள், ‘செய்தி சேகரிப்பு’ என்ற பெயரில் நடத்தும் அராஜகத்தை பாருங்கள்… ஒரு சேனலில் மெத்தப் படித்த மேதாவி போல் காட்சி தரும் ஒரு செய்தியாளர், மாவட்ட கலெக்டரை பேட்டி எடுக்கிறார். எப்போது? இன்னும் சில மணி நேரங்களில் புயல் தாக்கும் என்ற நிலையில் ஊர் ஊராக சென்று உஷார் செய்ய வேண்டிய அவசரத்தில் கலெக்டர் இருக்கையில். செய்தியாளரின் கேள்விகள் மெய் சிலிர்க்க வைக்கும்.
“இதற்கு முன் புயல் சூழலில் பணியாற்றிய அனுபவம் உண்டா?” என்கிறார். சினிமா பேட்டி எடுக்கும் அனுபவம் பெற்றவர் போலும் அந்த செய்தியாளர். கலெக்டரும் சற்றும் குறைந்தவரல்ல.. ஒரே நாளில் நாடு முழுவதும் தான் தெரிகிறோம் என்று நினைத்திருப்பார் போலும்.. ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாக பதில் சொன்னார். அல்லது, பதில் சொல்லவில்லையென்றால் ‘மக்களைப் பற்றிய பொறுப்பற்ற கலெக்டர்’ என்று திரி கொளுத்திப் போட்டு விடும் இந்தச் செய்தி சேனல்கள் என்று பயந்து விட்டாரோ?
இதன் உச்சக்கட்டமாக ஒரு அபத்தம் நிகழ்ந்தது. அந்த கலெக்டர் தான் எப்படியெல்லாம் ஊர் மக்களிடம் புயல் பற்றி விளக்கி அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம் செய்து வருகிறேன் என்று சொல்ல, பழம் நழுவி பாலில் (பைலின்?) விழுந்தது போல கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார் சேனல் நிருபர். சற்று தள்ளியிருந்த வீட்டின் முன் இருந்தோரைக் காட்டி, “நீங்கள் அவர்களிடம் விளக்கி வெளியேற்றுங்களேன் நாங்கள் காட்ட வசதியாக இருக்கும் என்று போட்டாரே ஒரு போடு. கலெக்டரும் முகமெல்லாம் பெருமிதம் பொங்க சேனல்காரர்கள் சொன்னதை செவ்வனே செய்தார்.
“எவ்வளவு வேலை இருக்கிறது இப்படி பொறுப்பில்லாமல் என் நேரத்தை விரயம் செய்கிறீர்களே” என்று கலெக்டர் சேனல்களிடம் பாய்வார் என்று நாம் எதிர்பார்த்தால்.. நாம் பழம் பஞ்சாங்கம் ஆகி விடுவோம். இதெல்லாம் ‘பரபரப்பு கவரேஜ்.. அவரவருக்கு மைலேஜ்’ காலம்! பாவம்.. இன்னும் அவர் போக வேண்டிய கிராமங்களில் இருக்கும் மக்களெல்லாம் இந்த ‘டிவி பணி’ முடிந்து தங்கள் ஊருக்கு கலெக்டர் வரும் வரை காத்திருக்க வேண்டும். புயல் காத்திருக்குமா என்ன?
இது போதாதென்று, எங்கு செல்வது என்ன செய்வது என்று திகைப்பில் இருந்த சாதாரண மக்களிடம் “புயல் பற்றி தங்கள் கருத்து என்ன?” என்றெல்லாம் கேட்டு செய்தி ஒளிபரப்பில் புதிய பரிமாணத்தையும் அறிவீனத்தின் புதிய கோட்பாட்டையும் ஒருங்கே செய்து புரட்சி படைத்தன செய்திச் சேனல்கள். எந்த சேனலைத் திருப்பினாலும் இதே கதை தான்.
இந்த லட்சணத்தில், ஒரு சேனல் ‘முப்பது பேர் கொண்ட குழு அமைத்திருக்கும் முதல் சேனல்’ என்று பெருமையுடன் விளம்பரம் வேறு செய்தது. நிவாரணப் பணியில் ஈடுபடுவதற்கோ என்று நாம் நினைத்து விடக் கூடாது. பறந்து பறந்து புயலைக் காட்டவும், அவசர வேலைகள் செய்வோரையும் தடுத்து நிறுத்தி தங்களுக்கு வேண்டியதை ‘கறப்பதற்கும்’ தான்!
“உபகாரம் செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இரு” என்பார்கள் முன்னோர்கள். இதை யார் இவர்களின் படுபயங்கர மூளைக்கு புரிய வைப்பது?
விட்டால் ‘பைலின்’ புயலை உங்களுக்கு வழங்கியோர் என்று ஸ்பான்ஸர்கள் பேர்களைச் சொன்னால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
கட்டுரையாளரின் வலைப்பதிவுத் தளம்: http://kali-kaalam.blogspot.in
source:::::The Hindu….Tamil
natarajan