வேண்டாம் டாஸ்மாக் ….தமிழன் வாங்கட்டும் பாஸ்மார்க் !!!

தினமலர் ‘இது உங்கள் இடம்’
வேண்டாம் டாஸ்மாக்; வேண்டும் பாஸ்மார்க்!
ஏ.வி.ராமநாதன், சென்னையிலிருந்து அனுப்பிய, “இ-மெயில்’ கடிதம்: 24-09-2013
தமிழக அரசு, மலிவு விலையில் உணவு, குடிநீர் வழங்குவது போல, “டாஸ்மாக்’ பார்களில், மலிவு விலையில் ஊறுகாய், வறுத்த முந்திரி, தண்ணீர் பாக்கெட் வழங்கி, “குடிமகன்’கள் வயிற்றில், சரக்கை வார்க்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்து, இப்பகுதியில், “குடிமகன்’ ஒருவர், கடிதம் எழுதி இருந்தார்.
அதைக் கண்டு, “நஞ்சுண்பார் கள்ளுண்பவர்’ என, “கள்ளுண்ணாமை’யை ஆணித்தரமாக வலியுறுத்திய, வள்ளுவர் காட்டிய வழியில் இருந்து, தமிழன் இப்படித் தடம் புரண்டு போய்க் கொண்டிருக்கிறானே என, வேதனைப்படுவதா அல்லது இலவசங்களால், மக்களைக் கவர நினைக்கும் அரசுக்கு, இப்படியும் ஒரு கோரிக்கை வைக்கலாம் என, அவர் எண்ணியதை நினைத்து, சிரிப்பதா என, தெரியவில்லை.
எப்படியோ ஒரு உண்மை புரிகிறது. இந்த இலவச, மலிவுக் கலாசாரம், தமிழன் நல்வாழ்வுக்கு உதவாமல், அவனை மேலும், சோம்பேறியாக, பிச்சைக்காரனாக, தன்மானம் இல்லாதவனாக மாற்றிக் கொண்டிருக்கிறது.
உச்ச நீதிமன்ற அறிவுரையை பின்பற்றாமல், வாழ்வுத் தரத்தை முன்னேற்றாத, மக்களை மயக்கி ஏமாற்றும், தற்காலிக பயன் தரும், இலவச பொருட்களை அள்ளிவிடும் அரசியல் கலாசாரத்திற்கு அடிமையாகாமல், இனி, இலவசங்களை புறக்கணிப்போம்.

மதுக்கடைகளால், அரசுக்கு வரும் வருமானத்தைப் பற்றி கவலைப்படாமல், பூரண மதுவிலக்கை, பல ஆண்டுகளாக அமல்படுத்தி, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களால், “ஜம்’மென்று வளர்ந்து வரும் குஜராத் மாநிலத்தை, தமிழகமும், மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்.
மலிவு ஊறுகாயோடு, சரக்கடிக்க, முதல்வருக்கு கோரிக்கை விடுக்கும், வீரக் குடிமகன்களும், அவர் தம் குடும்பங்களும், தமிழகமும் மேலும் சீரழிவதைத் தடுக்க, தமிழக முதல்வர் டாஸ்மாக் கடைகளை இழுத்து மூட வேண்டும்.
வேண்டாம் டாஸ்மாக்; தமிழன் வாங்கட்டும், “பாஸ்மார்க்

 

source::::: A Letter from my Friend A.V.Ramanathan  in Dinamalar  Tamil Daily

Natarajan

அஞ்சிலும் அம்பதிலும் வளைந்து எம்பதுக்கு மேலே 93 லும் வளையும் பாட்டி !!!

முதியோர் என்றாலே கூன்முதுகும், மூக்கு கண்ணாடியும், கைத்தடியும், சுருங்கிய தோலும்தான் ஞாபகம் வரும். ஆனால், கோவை கணபதியைச் சேர்ந்த 93 வயது நானம்மாளைப் பார்த்தால் அவ்வளவு வயது அவருக்கிருக்கும் என்று நம்பமாட்டீர்கள். 93 வயதை எட்டியிருந்தாலும் இப்போதும் 50 யோகாசனங்களைச் செய்து வியக்கச் செய்கிறார். யோகாசனங்கள் மூலம் தனது மனதையும், உடலையும் வலுப்படுத்தி வைத்துள்ளார்.
 “”சிறுவயது முதல் செய்த யோகாசனங்களால் மருத்துவமனைப் பக்கமே சென்றது இல்லை; எந்த நோயும் என்னை அண்டியது இல்லை” என்கிறார் அவர். மூதாட்டியாக இருந்தாலும் தனது உடலை நாணலைப் போல வளைத்து யோகாசனம் செய்து ஆரோக்கியமாக உள்ளார் நானம்மாள். பரம்பரை பரம்பரையாக யோகா செய்து வரும் குடும்பத்தைச் சேர்ந்த நானம்மாள் 1920 இல் பிறந்தவர். தனது கணவர் வெங்கிடசாமி, தனது சித்தப்பா மன்னாரிடம் யோகாசனங்களை முறையாகக் கற்றவர். 50 வயதைக் கடந்தவர்கள் யாரும் யோகாசனங்களைச் செய்வது இல்லை. ஆனால் 93 வயதிலும் யோகாசனங்கள் செய்து தேசிய அளவில் 4 தங்கப் பதக்கங்களையும், அந்தமானில் நடந்த சர்வதேச யோகா போட்டியில் தங்கம் வென்றும் சாதித்துள்ளார்.
 அவரிடம் பேசியபோது:
 “” எனது குடும்பத்தினர் வீட்டில் யோகாசனங்கள் செய்வது வழக்கம். எனக்கும் சிறு வயது முதலே யோகாசனம் செய்வதில் ஈடுபாடு ஏற்பட்டது. அன்றாட வேலைகளைச் செய்வதைப் போல யோகாசனத்தையும் தவறாமல் செய்து வந்தேன். இப்போது 93 வயதானாலும், தினந்தோறும் யோகாசனங்கள் செய்து வருகிறேன். காலையில் வேப்பங் குச்சியில்தான் பல் துலக்குகிறேன். கம்பு, வரகு, ராகி, சாமை, குதிரைவாலி போன்ற பலவகை சிறுதானியங்களைக் கொண்டு செய்யப்பட்ட சத்து மாவை காலை திரவ உணவாக எடுத்துக் கொள்கிறேன். இதுபோன்ற சிறுதானிய உணவு வகைகளில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் மூட்டு வலி போன்ற எந்தப் பிரச்னையும் ஏற்படுவதில்லை. மதிய உணவாக அரிசி, பருப்பு சாதங்களை உட்கொள்வேன். இரவு நேரத்தில் ஒரு டம்ளர் பால் மற்றும் 2 பழத்தைச் சாப்பிடுவேன். யோகாசனம் செய்வதால் மனதும், உடலும் ஆரோக்கியமாக உள்ளது.
 என்னுடைய மகன், மகள்கள் 5 பேரும் யோகாசன மாஸ்டர்களாக உள்ளனர். அவர்களின் குழந்தைகளும் யோகாசனம் கற்று வருகின்றனர். சிலர் மாஸ்டர்களாகவும் உள்ளனர். என்னுடைய மகன் வி.பாலகிருஷ்ணன், யோகாசனம் விழிப்புணர்வுக்காக மார்பு மீது கார் ஏற்றியும், கிணற்று நீரில் ஒரு மணி நேரம் மிதந்தும் சாதனை செய்துள்ளார். அவர் நடத்தும் பல்வேறு யோகாசனப் பயிற்சி முகாம்களுக்கு சிறப்பு அழைப்பாளராகச் சென்று பொதுமக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் யோகாசனம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்”என்றார்.
 “ஓசோன் யோகா’ மையத்தின் நிர்வாகியும், நானம்மாளின் மகனுமான வி.பாலகிருஷ்ணன் கூறியது: “”எனது குடும்பத்தினருக்கு சித்த மருத்துவம், யோகாசனம் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு உள்ளது. எனது தாய் நானம்மாளுக்கு 50 வகை ஆசனங்கள் தெரியும். அதில் குறிப்பாக தூலாசனம் செய்வதால் தோள் பட்டை, கைகளுக்கு பலம் கிடைக்கும். இப்போதெல்லாம் 40 வயதைக் கடந்தவர்களுக்கு சாதாரண வேலை செய்தாலும்கூட கைகள் தளர்ந்து விடுகின்றன. இதற்கு இந்த யோகாசனம் தீர்வாக உள்ளது. வஜ்ராசனம் செய்வதால் முதுகுத் தண்டுவடம், மூட்டு மற்றும் முழங்கால் வலி தீரும். சசாங்காசனம் செய்வதால் கல்லீரல் நோய் உள்ளிட்டவை வராது. என்னிடம் யோகா கற்க வந்த பலர் சர்க்கரை நோயுடன் வந்தார்கள். அவர்கள் தொடர்ந்து யோகாசனம் செய்ததன் மூலம் சர்க்கரை நோய் கட்டுக்குள் வந்துள்ளது. இப்போது, அவர்கள் ஆரோக்கியமாக எந்தவித மாத்திரையும் உட்கொள்ளாமல் 
 உள்ளனர்.
 அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் கூட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு யோகாசனம் கற்றுத் தரப்படுகிறது. யோகாசனத்தின் பிறப்பிடமான இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் உள்ள எல்லா பள்ளிகளிலும் யோகாசனம் கட்டாயமாக்கப்பட வேண்டும். இதன்மூலம் ஆரோக்கியமான இளம் தலைமுறையை உருவாக்க முடியும். நோயில்லாத சமுதாயத்தைப் படைக்க முடியும்”என்றார்.
 -ஆர்.ஆதித்தன்.
 படங்கள்: கே.ரமேஷ்.
 

source:::: Dinamani ….Tamil Daily

natarajan

” நம்மை கட்டிப் போடும் நாட்டியம் ” !!!

 


பரத நாட்டியம் என்பது பாரம்பரிய கலைகளுள் ஒன்று.
விபரிக்க வார்த்தையில்லை வீடியோ பாருங்க உங்களுக்கும் புரியும் பரதநாட்டிய அரங்கேற்றங்களை பார்த்திருப்பீர்கள் ஆனால் இப்படியொரு நடனத்தைநீங்கள் இதுவரை  பார்த்திருக்க வாய்ப்பில்லை என்றே சொல்லத்தோன்றுகிறது.

ஒரு இளம் பெண்ணின் இந்த நடனத்தை விபரிக்க வார்த்தைகள் போதவில்லை. அப்படிச்சொல்வதென்றாலும்
அருமை, ஆச்சரியம், பிரமாதம், அசத்தல், சாதனை, வியப்பு, திறமை என்ற
வார்த்தைகளே மிகப்பொருத்தமாக இருக்கும்.http://www.youtube.com/watch?feature=player_embedded&v=G607ezQ_hxk

 

source:::: You tube…. input from a friend of mine

natarajan

பழமையின் பெருமை !!!…. பழைய சாதம் அருமை !!!

Something  which most of us have grown up with but have now forgotten!

   பழைய சாதம்
              Previous day’s cooked rice soaked in plain water overnight is excellent foodDuring the good old days, there was no special practice of preparing hot morning break-fast, as we do now, among
most South Indian families, except that, previous day’s cooked rice that was soaked in plain water the previous
night was consumed the next day morning with some nutritious supplements such as fresh buttermilk, slightly-salted
onions or other non-spicy pickles such as  goose berry or lemon. This is an excellent, rich and the most nutritious
food. This is known as ” Pazhaya Saadham” (meaning old rice) in Tamil and “Saddhi Annamu” or “Saddhennamu” (meaning
cold rice) in Telugu.

An American Nutritionist, dietitian and scientist had researched on the food practices among  various regions in the
world and concluded that the South Indian tradition of consuming the previous day’s cooked rice soaked in plain
water overnight, in the morning next day, as break-fast, is the best.

For centuries, this has been the staple food of many South Indian families, particularly of the low income groups.
It is, of course, now replaced with fashionable hot break-fast.

It is found out that previous day’s cooked rice soaked in plain water is very compact and complete break-fast. It
has the rare B6 B12 vitamins which are not otherwise easily available in other food supplements. This rice generates
and harbours trillions of beneficial bacteria that help digestion and has many disease fighting and immunity
developing agents. The bacteria that grow in the intestines due to this rice safeguard the internal organs and keep
all organs battle fit and ready. Consuming this rice helps quicker digestion and wards off ageing, bone related
ailments and muscular pains.

It is worth giving a try. The cooked rice can be soaked in an earthen vessel or vessels made of natural clay or
rock. (In Tamil families, vessels made of natural rock, called as “Kalchatti” was used. Many South Indian families
also use this even now though it is called by different names in other languages. Some families use this
“Kalchatti”  that is handed down to them since generations even. It is found to be free from harmful bacteria and
other normal disease causing harmful elements.

Brown rice is the best for this as its nutrients are retained intact.

You will be happy to know that the American Nutritionist had listed the following benefits that accrue to the body
if you stick to the practice of consuming such soaked rice.
1.  Consuming this rice as break-fast keeps the body light and
also energetic.
2. Beneficial bacteria gets produced in abundance for the
body.
3.  Stomach ailments disappear when this is consumed in the
morning, as, excessive and harmful heat retained in the
body is neutralized.
4. As this food is very fibrous, it removes constipation and also dullness in the body.
5. Blood pressure is normalised and hypertension subsides appreciably.
6.  Body feels less tired due to this food as a result of which
one feels fresh through out the day.
7.  This removes allergy induced problems and also skin
related ailments.
8.  It removes all types of ulcers in the body.
9.  Fresh infections are kept at bay due to consuming this rice.
10. It helps in maintaining youthful and radiant look.
Once you consume this, the body does not crave for tea or coffee. In the olden days, people who worked in the fields
used to leave their houses in the early morning after consuming this soaked rice and worked hard for over 8 to 10
hours non-stop.
Dear Friends and wellwishers,
In fact one கனபாடிகள் said that it is the staple food students have before they begin the  வேத பாராயணம் for the
day to provide the required nourishment and also offset the body heat generated during full throated chanting.

பழைய சாதம் சாப்பிட்டு வாழ்க வளமுடன் !   We need Americans and others to tell us how good our stuffs are!source::::input from a friend of mine …

natarajan
 

Where Humans , Snakes Coexist Peacefully !!!!

Paambu kulam in Vellammal's backyard at Maruthur in Vedharanyam. Photo: B. Velankanni Raj

Paambu kulam in Vellammal’s backyard at Maruthur in Vedharanyam

 

A pond built by a hutment dweller venerates the guardian deity and the snakes that inhabit a grove

Beneath the dark shade of the wooded Wodier grove is a stone structure of Veeran, the guardian deity of the hutments of Velliammal and her three sons.

Modestly decorated with specks of vermilion, Veeran is seated a stone’s throwaway from the Velliammal hutments — a cluster of three huts and the Paambu Kulam (snake pond) that fringes her backyard. The paambu kulam or the snake pond has been in existence for close to 28 years, says Velliammal.

In these times of human-animal conflict, Velliammal’s snake pond in Marudhur village, some 20 km from Vedaranyam, represents a tale of ecological harmony and coexistence between humans and the snakes that frequent their houses.

The snake pond is Velliammal’s way of venerating Veeran and the snakes that inhabit his wooded grove. For, it is on the temple lands of Veeran that the hutments are situated, she says. “Where will the snakes go to quench their thirst? So, the kulam was dug so that they do not stray.”

Each year, the family of farm-wage labourers spends some money to desilt and deepen the pond so that the snakes can come and quench their thirst. They do not step into the pond unless it is full to the brim. Velliammal believes that the snakes guard not just Veeran but also her property. Her anecdotal references attest to her belief. “The household objects may lie around, and on several occasions, a snake will be guarding my property. No outsider can cross over or touch the objects,” she says.

There is the problem of peacocks in the fields that the snakes are pushed to human habitations, says Rani, Velliammal’s daughter-in law, whose hut is fully thatched from the roof to the walls. Snakes have no place to go, and the pond is necessary. When the pond is dry, the women pump just enough water into the pond from the lift pump for the snakes to drink from. Within the space of the bamboo fenced hutment, Velliammal rears goats, pigeons, a cow and a dog.

The women of the household will do nothing that may offend the gods and snakes that live around the Veeran temple. “We do not even wash our hands in the pond during our menstrual cycle. That will be an affront to the snakes,” says Rani.

Keywords: Wodier grovePaambu KulamVelliammal hutments

source::::: P.V.Srividya  in THE HINDU

natarajan

” ஊரில் எல்லா பய பிள்ளைகளும் படிக்க வேண்டும் ” !!!

கோவை மாவட்டம், திம்மராயன்பாளையத்தைச் சேர்ந்த கொதியப்பா- நஞ்சம்மாள் தம்பதிகளின் மகனாகப் பிறந்தவர் டி.கே.ராமசாமி. எழுபத்தைந்து வயதான இவர், முன்னாள் தலைமையாசிரியர்.
இவர், தன், கிராமத்தைச் சேர்ந்த, எந்த குழந்தையும் படிக்காமல் இருந்துவிடக்கூடாது என்பதற்காக, தனது கைகாசு மட்டுமல்லாமல், கடன் வாங்கி, கல்விக்காக, செலவழித்து வருகிறார்.
தனது கல்விச்சேவை குறித்து அவர் கூறியதாவது: என் அம்மா ஒரு தெய்வமுங்க. அப்போது, ஐந்தாம் வகுப்பு படிக்க வேண்டும் என்றாலே, பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பள்ளிக்கூடம் போக வேண்டும். ஆனாலும், என் அம்மா, ” நான்தான் கைநாட்டா போய்விட்டேன் ராசா, நீ அப்படி இருக்கக் கூடாது; நல்லா படிக்கணும். நல்லா படிக்கிறது மட்டுமில்ல, நீ, நாலு பேரை படிக்க வைக்கணும்’ என்று, சொல்லிச் சொல்லியே என்னை வளர்த்தார்.
பள்ளிக்கூடம் போவதற்காக, 1952 ல், 52 ரூபாய்க்கு, ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். அந்த 52 ரூபாய், கடனை அடைக்க மூணு வருஷம் கஷ்டப்பட்டார். அதிகாலை மூணு மணிக்கு எழுந்து, மாட்டுத்தீவன புல்லை அறுத்து, அலசி எடுத்து, பரிசல் மூலம் ஆற்றைக் கடந்து, மேட்டுப்பாளையம் போய் காலணா, அரையணா காசிற்கு விற்று சம்பாதித்த காசில், சைக்கிள் வாங்கிய கடனை அடைத்தார்.
அந்த கஷ்டத்திலேயும், எனக்கு பிடிச்ச கடலை பொரியை வாங்கி, மடியில் கட்டிக்கொண்டு வந்து, கொடுப்பார். நான் சாப்பிடும் அழகை, பார்த்து ரசித்த, என் அம்மாவிற்கு, நான் செலுத்தும் காணிக்கையே, தற்போது, ஏழை மாணவர்களை தேடிப் பிடித்து படிக்க வைப்பது.
பள்ளி ஆசிரியராக, 1961ல் சேர்ந்து, 1998ல், தலைமையாசிரியராக பணி ஓய்வு பெற்றேன். நான் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில், மாணவ,மாணவியரை என் சொந்த பிள்ளைகளாகவும், பள்ளி கூடத்தை என் வீடாகவே பாவித்து வந்தேன். கிராமத்தில் எந்த குழந்தையும் படிக்காமல் இருந்து விடக்கூடாது என்பதில், தீவிரமாக செயல்பட்டேன். பள்ளி மற்றும் அதனை சார்ந்த இடங்களில் மரம் வளர்ப்பதில் பெரிதும் ஆர்வம் காட்டினேன். சிறுமுகை பள்ளியில் பணியாற்றும் போது, நான் வளர்த்த தேக்கு மரங்கள், இன்று, பல லட்சம் பெறும் என்பதை எண்ணும்போது, சந்தோஷமாக இருக்கிறது. விடுமுறை தினங்களில் மாணவர்களை அழைத்துக் கொண்டு, ஊரில்,தெருவில் மரம் நட கிளம்பி விடுவேன். அந்த வகையில், இன்று, இலுப்பம் பாளையம் கிராமம் ஒரு சோலை போல இருக்கிறது என்றால், நானும், என் பிள்ளைகளும், அன்று வைத்த மரங்களே காரணம் என்று சொல்லுவேன்.
நான் படித்து, பணியாற்றி, ஓய்வு பெற்ற இலுப்பம் பாளையம் அரசு பள்ளி தான், எனக்கு சொர்க்கமான இடம். அரசு சார்பில், சுற்றுச்சுவர் கட்டிக் கொடுத்த போது, அந்த சுவர்களில் தேசிய மலர், தலைவர்கள், விலங்கு மற்றும் மழைநீர் சேமிப்பின் அவசியம், மரங்களின் முக்கியம் போன்றவைகளை, முப்பதாயிரம் ரூபாய் செலவழித்து, ஓவியமாக வரைந்து வைத்துள்ளேன். இதை, தினமும் பார்க்கும் குழந்தைகள் மனதில், நிச்சயம் ஒரு மாற்றம் உருவாகும்.
கடந்த, 98ல், பணி ஓய்வு பெற்ற பிறகு, சமூகப்பணியாற்றுவதில் தீவிரமாக இறங்கினேன். என் பென்ஷன் பணம் 17 ஆயிரத்தில், எனக்கும்,என் மனைவிக்குமான குடும்ப செலவிற்கு, மாதம் ஆறாயிரம் ரூபாய் எடுத்துக்கொண்டு, மீதம் 11 ஆயிரம் ரூபாயை, பொதுக்காரியத்திற்கு செலவிடுவதை நோக்கமாக கொண்டுள்ளேன்.
அதிலும், பெரும்பகுதி பணத்தை, கிராமத்து பள்ளி குழந்தைகளின் நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள் வாங்குவதற்கு செலவு செய்து விடுவேன். பள்ளி ஆரம்பிக்கும் போது, கொஞ்சம் கூடுதலாக செலவாகும். அதைப்பற்றி கவலைப்படாமல், கடன் வாங்கி செலவழித்து, அப்புறம் பென்ஷன் பணம் வந்த பின், கடனை அடைப்பேன்.
இது போக, ஊர் பிரச்னைகளை, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது, கோவில் காரியங்களை எடுத்துச் செய்வது, சுற்றுச்சூழல், கல்வி, தனிமனித ஒழுக்கம் குறித்து, பள்ளிகளுக்குச் சென்று இலவச பாடங்கள் நடத்துவதுடன், உயர் கல்வியின் அவசியம் குறித்து எடுத்துச் சொல்கிறேன். மேலும், நர்சிங்,என்ஜினியரிங் மாணவர்களை ஊக்கப்படுத்துவதுடன், என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்.
நான் பணியில் இருக்கும் போது செய்த நற்காரியங்களை பாராட்டி, மத்திய, மாநில அரசுகளின் சார்பில், நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கவுரவித்தனர். விருதுக்காக நான் எப்போதும் வேலை செய்தது இல்லை. என் மனசாட்சிக்காகவும், “நீயும் நாலு பிள்ளைகளை படிக்க வைக்கணும்’ என்று, என் தாய் சொன்ன சொல்லுக்காகவும், முடிந்ததை செய்து வருகிறேன். இதை, என் ஆயுள் உள்ளவரை தொடர்ந்து செய்வேன்.
பெரியவர் ராமசாமி சொல்லி முடிக்கும் போது, வானம் இருண்டு, மழை பெய்ய ஆரம்பித்தது. “நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை’ என்பதற்கிணங்க, இந்த மழை, ராமசாமி என்ற நல்லார் பொருட்டு, எல்லாருக்கும் பெய்த மழையாகும்.

source::::: Dina Malar….Tamil Daily

natarajan

வாருங்கள் வாழ்த்துவோம் !!! உச்ச நீதிமன்ற நீதிபதியாக சி.நாகப்பன் நியமனம் !!!

உச்ச நீதிமன்ற நீதிபதியாக சி.நாகப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய இவர், கடந்த பிப்ரவரி மாதம் ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவர் தற்போது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திங்கள்கிழமை பிறப்பித்துள்ளார். இம்மாதம் 19-ம் தேதி அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்பார் எனத் தெரிகிறது.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பி.சதாசிவம் தற்போது உள்ளார். அதேபோல் நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா உச்ச நீதிமன்ற நீதிபதியாக உள்ளார். இந்நிலையில் தற்போது சி.நாகப்பன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்கிறது.

வாழ்க்கைக் குறிப்பு:

தொழிலதிபர் மறைந்த வி.என்.சொக்கலிங்கம் – வைரம் தம்பதியினரின் மகனாக 4.10.1951 அன்று கரூரில் நாகப்பன் பிறந்தார். கரூரில் பள்ளிப் படிப்பை முடித்த நாகப்பன், திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பி.யு.சி.யும், மதுரை மதுரா கல்லூரியில் பி.எஸ்.சி. வேதியியல் படிப்பையும் முடித்தார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற அவர், 1974-ம் ஆண்டு பல்கலைக்கழக இறுதித் தேர்வில் மூன்றாமிடம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.எல். கிரிமினல் சட்டப் படிப்பில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.

இந்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் கே.பராசரனின் ஜூனியர் வழக்குரைஞராக சேர்ந்த சி.நாகப்பன், சென்னை சட்டக் கல்லூரியில் பகுதி நேர பேராசிரியராக 7 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

கடந்த 1987-ம் ஆண்டு மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக தேர்வு செய்யப்பட்ட சி.நாகப்பன், பல்வேறு மாவட்டங்களில் நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார். கடந்த 27.9.2000 அன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், இந்த ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி ஒடிசா மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். இந்நிலையில் அவர் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது உள்பட முக்கியமான வழக்குகளில் நீதிபதி நாகப்பன் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

source :::::: http://tamil.the hindu.com    The Hindu Tamil edition chennai 17 sep 2013
natarajan

நனவாகும் நூறாண்டுக் கனவு!….தமிழால் இணைவோம் !!!

நூறு ஆண்டு காலக் கனவு நனவாகிறது. இதோ, ‘தி இந்து’ குழுமத்திலிருந்து அதே பெயருடன் தமிழ் நாளிதழ் மலர்கிறது. கதிரோன் காட்டும் புது விடியல், பறவைகள் கூட்டத்தின் புதுப் பயணம், எங்கும் நிறையும் இனிய இசை, நுரைக்கும் காபியின் புதிய மணம்… இவற்றுடன் இனி தினந்தோறும் உங்கள் அதிகாலையை அலங்கரிக்கப்போகிறது ‘தி இந்து’ நாளிதழின் தமிழ்க் கோலம்.

இந்து குடும்பத்தின் கனவு மட்டும் அல்ல இது; தமிழ்ச் சமூகத்தின் நெடுநாள் கனவு என்பதை நாங்கள் அறிவோம். இன்று அதை நனவாக்கியுள்ளோம்.

தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஓர் ஆண்டு 1878.

சுதேசிகளின் அரசியல் எழுச்சியை ஒடுக்கும் நடவடிக்கைகள் அரங்கேறிய காலகட்டம் அது. ஆங்கிலேய அரசுக்கு எதிராகக் குரல்கொடுக்கும் உள்நாட்டுப் பத்திரிகைகளை மொத்தமாக முடக்கிப்போடும் வகையில் அடக்குமுறைச் சட்டம் கொண்டுவந்தார் வைஸ்ராய் லிட்டன்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி நாற்காலியில் ஒரு தமிழர் – டி. முத்துசுவாமி ஐயர் – அமரும் வாய்ப்புக்கு எதிராகப் பெரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டன ஆங்கிலேயர் ஆதரவுப் பத்திரிகைகள். மோசமான இந்தச் சூழலை எதிர்த்து, ஆறு இளம் தமிழர்கள் ஏகப்பட்ட நெருக்கடிகளுக்கு நடுவே ஓர் ஆங்கிலப் பத்திரிகையைத் தொடங்கினர். இப்படித்தான் பிறந்தது ‘தி இந்து’.

‘‘பத்திரிகை என்பது மக்களின் கருத்தை வெளிப்படுத்தும் சாதனம் மட்டும் அல்ல. சூழலுக்கு ஏற்ப மக்களின் கருத்துகளைச் செழுமைப்படுத்தி உருவாக்குவதும் ஆகும். அந்தத் தேவையைப் பூர்த்திசெய்யவே நாங்கள் களம் இறங்குகிறோம்.’’

‘‘நியாயமும் நீதியுமே எங்களை வழிநடத்துவதற்காக நாங்கள் நிர்ணயித்துக்கொண்டிருக்கும் எளிய கோட்பாடுகள்.’’

‘‘நம் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் வளர்க்க வேண்டும். மதச்சார்பின்மையை உறுதியாகப் பின்பற்ற வேண்டும். விவேகமான எல்லாக் கருத்துகளுக்கும், நியாயமான அனைத்துத் தரப்பு விமர்சனங்களுக்கும் பாரபட்சமின்றி இடம் அளிக்க வேண்டும். ஆள்பவர்களுக்கும் ஆளப்படுபவர்களுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையை உருவாக்க வேண்டும். இவையே எங்கள் லட்சியம்.’’

-‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் முதல் நாள் தலையங்கத்தில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் இவை. ‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்கும் இந்த வாசகங்கள் பொருந்தும்.

உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழில், எம் சொந்த மொழியில், கால் பதிக்கும்போது, எம் முன்னே நிற்கும் பெரிய எதிர்பார்ப்புகளையும் சவால்களையும் நாங்கள் உணர்கிறோம். இரண்டாயிரம் ஆண்டுக் கலாச்சார வளம் மிக்க ஒரு சமூகம் மொழி, இனம் சார்ந்து எதிர்கொள்ளும் சவால்களையும் தமிழ் ஊடகங்கள் முன் இருக்கும் பெரும் பொறுப்புகளையும் நாங்கள் முழுமையாக உணர்கிறோம்.

இன்றைக்குப் பூமிப் பந்தின் எந்த மூலைக்குப் போனாலும், அங்கே தமிழர்களின் கம்பீரக் குரலைக் கேட்க முடிகிறது. தம் அசாத்திய அறிவாலும் உழைப்பாலும் முன்னேறிக்கொண்டேயிருக்கும் தமிழர்கள் பதிக்கும் சாதனைச் சுவடுகளைப் பார்க்க முடிகிறது.

காலத்துக்கு ஏற்ப ரசனைகளும் மாறுகின்றன. வாசிப்பின் தரம் இன்னும் மேலே செல்கிறது. உங்கள் தேவைகளை நாங்கள் நன்கு அறிந்திருக்கிறோம். ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் அத்தனை சிறப்பியல்புகளையும் நீங்கள் தமிழிலும் எதிர்பார்க்கலாம். அதேசமயம், ஒரு தேசிய நாளிதழாக ஆங்கில நாளேடு செயல்படும் களத்திலிருந்து இந்தத் தமிழ் நாளிதழின் முகமும் களமும் மாறுபடும். இந்தப் புதிய நாளிதழ், உலகைத் தமிழ் மண்ணின் கண் கொண்டே பார்க்கும்.

உள்ளூர்ச் செய்திகளில் தொடங்கி உலகச் செய்திகள்வரை தருவதோடு இலக்கியம் முதல் சினிமாவரை தமிழ் மக்களின் ருசி அறிந்து இந்த நாளிதழ் விருந்து படைக்கும். நவீன வாழ்வை எதிர்கொள்ள வாழ்வியல் வழிகாட்டுவதோடு மன அமைதிக்கு ஆன்மிக ஆறுதலும் தரும். பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்களுக்கு எனப் பிரத்தியேக இணைப்புகளும் உடன் வரும். அதேசமயம், எவை எல்லாம் உங்கள் குடும்பத்துக்குத் தேவை என்பதோடு, எவை எல்லாம் தவிர்க்கப்பட வேண்டியவை என்பதையும் எங்களின் நீண்ட அனுபவம் கற்றுக்கொடுத்திருக்கிறது. அநாகரிகமான அந்தரங்கச் செய்திகள் ஒருபோதும் இதில் இடம்பெறாது. சுருக்கமாக, ஒவ்வொரு புதிய நாளையும் தொடங்கும்போது, நம்பிக்கையைத் தாங்கிவரும் உங்கள் குடும்ப நாளிதழாக இது திகழும்.

முக்கியமாக, வாசகர்களாகிய உங்களுடைய பங்கேற்புக்கும் விசாலமான களம் இங்கே காத்திருக்கிறது. கருத்துச் சித்திரம் வரையும் பொறுப்பை இன்று முதல் உங்களிடமே ஒப்படைக்கிறோம்.

இனி, தரம் விரும்பும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் மேடையாக உங்கள் ‘தி இந்து’ தமிழ் திகழும்… என்றென்றும்!

Keywords: தி இந்து, தமிழ் நாளிதழ், தலையங்கம்
Topics: சமூகம்| இந்தியா| தமிழ்நாடு|

சக்கர நாற்காலியில் ஒரு சாதனையாளர் !!!

ஊன்றி நடக்க
உறுதி கொண்டால்
ஒட்டடை நூல்கூட
ஊன்று கோல்தான்.

என்ற கவிதைக்குச் சாட்சியாக காட்சியளிப்பவர்தான் சூர்யா என்றழைக்கப்படும் அருள்மொழிவர்மன்….

நடுங்கும் கைகளுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி திணறி, திணறிப் பேசும் சூர்யாவாவிற்கு 23 வயதாகிறது.
இவரை நேரில் பார்ப்பவர்கள் இவரா இதையெல்லாம் செய்வது என்று நிச்சயம் ஆச்சர்யப்பட்டு போவார்கள்.

அப்படி சூர்யா என்னதான் செய்கிறார் கொஞ்சம் ஆரம்பத்தில் இருந்து தெரிந்து கொள்ளுங்களேன்.

பிறந்த 6 மாதத்திலேயே சூர்யா இயல்பானவன் இல்லை என்பது தெரிந்து விட்டது. முதுகுத் தண்டுவடப் பிரச்னை காரணமாக அவனது இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதி சரியாகச் செயல்படாது என்ற சூழ்நிலை.
செயல்படாத உடம்பின் பாகங்களுக்கும் சேர்த்து மூளை அபாரமாகச் செயல்பட்டது. இடதுகைப் பழக்கம் காரணமாக, இடக்கையில் எடுத்துச் சாப்பிடுவதைக் கவனித்த தாத்தா, சாப்பிடுவதையாவது வலது கையில் செய்யக் கூடாதா? என்று கேட்டதும், சற்றும் தயங்காமல், “கடவுள் எனக்கு வலது கையை இந்தப் பக்கம் வச்சுட்டான் தாத்தா”, என்று சொன்ன போது சூரியாவுக்கு வயது 3 தான். இப்படி அறிவான சூர்யாவை சென்னையில் உள்ள சிறப்பு பள்ளியில் பெற்றோர் படிக்க வைத்தனர். சூர்யாவும் இங்கு சிறப்பாக படித்தான்.

நான்காம் வகுப்பு ப் படிக்கும் போது இன்னொரு கடுமையான சோதனை,‘வாக்கரின்’ உதவியோடு நடந்து கொண்டிருந்த சூர்யாவை விளையாடிக் கொண்டிருந்த வேறு சில சிறுவர்கள் தெரியாமல் தள்ளிவிட்டதில் சூர்யாவிற்குத் தலையில் பலத்த அடி. உடனடியாக மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு சென்றனர். சிகிச்சையளித்த மருத்துவர்கள், சூர்யா இனிமேல் ‘வாக்கர்’ வைத்தும் நடக்கமுடியாது ‘வீல்சேரில்தான்’ நடமாட முடியும், இதுவரை இயங்கி வந்த கைகளும் வழக்கம் போல இயங்காது, ஒருவித நடுக்கத்துடன்தான் செயல்படும், பேசும்போது வார்த்தைகள் ரொம்பவே திக்கும், என்று சொல்லிவிட்டனர். இந்த வேதனையை எல்லாம்கூடத் தாங்கிக் கொண்ட சூரியாவால் பள்ளியில் படிப்பைத் தொடரமுடியாது என்ற வேதனையைத்தான் தாங்கமுடியவில்லை.
வீட்டிலிருந்தபடியே படிக்க ஆரம்பித்தான். தனது அண்ணனின் கம்ப்யூட்ரைப் பொழுது போக்காக இயக்க ஆரம்பித்தான். நடுங்கும் தனது கைகளைக் கொஞ்சமாவாது நிலையாக நிறுத்த அது ஒரு பயிற்சியாக இருந்தது; அண்ணனும் தனக்குத் தெரிந்ததைத் தம்பிக்கு ஆர்வமுடன் கற்றுக் கொடுத்தார். கம்ப்யூட்டரே தனக்கான வடிகால் என்று சூர்யா எடுத்துக் கொண்டதும் அதில் முழுமூச்சாக இறங்கிவிட்டான்.

கம்ப்யூட்டரை ஆராய்ந்து, ஆராய்ந்து இத்தனை வருடங்களில் அதில் தேர்ந்து விட்ட சூர்யா இப்போது அகில இந்திய அளவில் செயல்படக்கூடிய பெரிய சிறிய நிறுவனங்களின் வெப் டிசைனர் ஆவார்.
நிறுவனங்கள் பெரியதோ, சிறியதோ தம்மைப் பற்றி வெளியில் சொல்ல ஒரு வெப் சைட் அவசியம் தேவை, அந்த வெப்சைட் பார்ப்பவர்களை ஈர்க்கும்படியாக இருக்க வேண்டும், எல்லாவிதத் தகவல்களையும் சுவாரசியமாகச் சொல்ல வேண்டும்.
இப்படி ஒரு வெப் சைட்டை உருவாக்கித் தருவதுடன், அனிமேசன் மற்றும் ஆடியோ வீடியோ எடிட்டிங் போன்ற அருமையான புத்திசாலித்தனமான துறைகளிலும் ‘ஒன்மேன்ஆர்மியாக’ சூர்யா தற்போது சாதித்து வருகிறார்.

புகழ் பெற்ற திருமண அழைப்பிதழ்கள் தயாரிக்கும் நிறுவனமான MENAKA CARDS PVT LTD,NORTH EASTERN MARITIMES SERVICE PVT.LTD,BUDGET FURNITURE,IMPERIAL INFOTECH,VARNA உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் வெப் சைட்கள் இவர் டிசைன் செய்தவைதான்.
சூர்யாவின் தந்தை காவல்துறையின் கைரேகைப் பிரிவில் இன்ஸ்பெக்டராக சென்னையில் இருந்தவர். பணி ஒய்வுக்குப் பிறகு குடும்பத்துடன் பொள்ளாச்சி சென்றுவிட்டார். சூர்யா தற்போது பொள்ளாச்சியில் இருந்து கொண்டுதான் இயங்கிக் கொண்டு இருக்கிறார். தந்தை பாலகுருசாமி, தாயார் தேன்மொழி, அண்ணன் நாகசுந்தரம், அண்ணி மதுமதி ஆகியோர், ‘எப்படியும் நம்ம சூர்யா நாலுபேர் பாராட்டும்படி வருவான்’ என்ற நம்பிக்கையுடன் அன்பையும், பாசத்தையும் வற்றாது வழங்கி வருகின்றனர்.

அவர்களது நம்பிக்கைக்கு ஏற்ப, பல இரவுகளைப் பகலாக்கிக் கடுமையாக உழைத்து, நல்லதொரு வெப் டிசைனராக வளர்ந்து வரும் சூர்யா தனக்கு உற்றுழி உதவிய பக்கத்து வீட்டு அண்ணன்கள் சதீஷ், காளிராஜ் , மற்றும் பல நண்பர்களையும் உறவினர்களையும் மிகுந்த நன்றியோடு நினைவு கூறுகிறார்.
இவ்வளவு திறமையா என்று இவரது வெப் டிசைனைப் பார்த்தவர்கள் பாராட்டுகின்றனர்.

ஆனால், சூர்யாவின் அணுகுமுறை வேறாக இருக்கிறது; என்னைப் பார்த்து என் மீது இரக்கப்பட்டு வரும் வாய்ப்புகள் எனக்கு வேண்டாம்; என் திறமையை, என் கற்பனையை, என் தொழிலை மட்டும் பாருங்கள்; பின் உங்கள் நிறுவனத்தின் வெப் சைட்டை டிசைன் செய்ய எனக்கொரு வாய்ப்புத் தாருங்கள்; அது போதும் என்று சொல்லும் சூர்யாவின் ஆற்றலை அறிய, கிரியேடிவ் இ ஸ்டுடியோ.காம் (creative E studio.com) என்ற வலைதளத்துக்குச் செல்லவும்.
அவரது அலைபேசி எண்: 9790741542.

source:::::DinaMalar Tamil Daily

natarajan