Image of the Day… Close View of Mercury !!!

Super-close views of Mercury

The MESSENGER spacecraft is now dropping closer to Mercury, and long anticipated, super-close views of the planet are beginning to come in.

Image via NASA / JHU / APL MESSENGER spacecraft

The image above is one of the highest resolution images ever returned of Mercury. MESSENGER acquired it on June 11, 2014. Last Friday – July 25, 2014 – MESSENGER’s periherm(closest point to Mercury) dropped below 100 kilometers / 62 miles. MESSSENGER is the first manmade object ever to come this close to Mercury.

On June 17 – around the time the image above was taken – the periherm had dropped to 113.80 kilometers / 70.80 miles. The image has absolutely incredible 2.90-meter resolution, showing a cluster of tiny secondary craters within the northern intercrater lava plains in a 3.00 kilometer / 1.86 mile wide area within Mercury’s North Polar Borealis Quadrangle.

The craters seen here are a few hundred meters at most in width, many much smaller. These are secondary craters from an impact out of this frame, where impact ejecta fell back on ballistic trajectories forming smaller craters. Many can be hundreds of kilometers away from the primary impact if the impact was large enough.

There are a handful of much smaller craters in the area too.

All of these craters in this image are of the simple bowl shaped type.

The image is a little ‘noisy’ due to the very short exposure required to prevent blurring of the image as MESSENGER was lower and faster than usual above the surface of Mercury.

On August 19, 2014, periherm will drop below 50 kilometers / 31 miles. On September 12, 2014, periherm will have lowered to 25 kilometers / 15.52 miles.

The number of such high resolution and even higher resolution images will increase as periherm continues to lower.

The fuel on board MESSENGER is expected to be depleted on January 21, 2015. MESSENGER is expected to impact Mercury during the last weekend of March, 2015.

Source:::: earth sky news site

Natarajan

” மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் … ” !!!

 

 

சென்னை – பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையை ஒருங்கிணைக்கும் நகரம். இதனை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் வகையிலான ‘மெட்ராஸ் இஸ் ப்யூட்டிஃபுல்’ என்ற வீடியோ பதிவு, யூடியூப் தளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இரண்டரை நிமிடமே கொண்ட இந்த வீடியோவை, மெட்ராஸுடன் தங்களை பிணைத்துக்கொண்ட பலர் இணையத்தில் கண்டு ரசித்து வருகின்றனர். இப்போதும் இயங்கும் பழைய கிராமபோன், மெரினா கடற்கரையில் குளிக்கும் சிறுவர்கள், தனது வாழ்நாள் ஆதாயத்துக்காக கடலை நோக்கி புறப்படும் மீனவர், பாரிமுனையில் இருக்கும் கூலி வேலையாட்கள் என தமிழ் மனங்களை தொடும் மெல்லிய வருடலான பிண்ணனி இசையோடு மெட்ராஸின் முகங்களை இந்த வீடியோ பதிவு செய்துள்ளது.

இதனை பாலாஜி மகேஷ்வர் என்ற 28 வயது மிக்க ஆவணப்பட கலைஞர் உருவாக்கியுள்ளார். இது குறித்து கூறும் பாலாஜி, “மெட்ராஸ் அழகானது என்பதை உணர்த்தும் நிறைய நிகழ்வுகளை நாம் தினமும் பார்க்கிறோம். அவை அனைத்தும் மெட்ராஸ் எவ்வளவு அழகானது என்பதனை நமக்கு உணர்த்தக் கூடியது. இந்த வீடியோ அதனை அப்படியே திரையில் வெளிப்படுத்துகிறது.

சென்னை என்று கூறுவதைவிட மெட்ராஸ் என்று கூறும்போது நாம் மிகவும் இந்த நகரத்தோடு ஒன்றிப்போவதாக உணர்கிறேன். அதனால்தான் இதற்கு ‘மெட்ராஸ் இஸ் ப்யூட்டிஃபுல்’ என்று பெயர் வைத்தேன்” என்கிறார்.

ஜூலை 25-ஆம் தேதி இரவு 9 மணிக்கு யூடியூபில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 57,000 பார்வைகளைக் கடந்துள்ளது. பல பின்னூட்டங்களும் தொடர்கின்றன.

பாலாஜி மகேஷ்வர், புகைப்படக் கலை மீது உள்ள ஈடுபாட்டால், மென்பொருள் வேலையை விட்டு வெளியேறி தற்போது ஆவணப்படங்களை இயக்கி வருகிறார். பாலாஜியின் இந்த வீடியோவுக்கு சென்னைவாசிகளின் வரவேற்பு இணையத்தில் குவிகிறது.

Source:::: பிரியதர்ஷனி   in The Hindu….Tamil

Natarajan

” சத்தமில்லாமல் ஒரு அசாத்திய சாதனை …” !!!

  • ராமநாதன் ஐஏஎஸ்
    ராமநாதன் ஐஏஎஸ்

19 ஆண்டுகளில் 583 ஏழை மாணவர்களை தத்தெடுத்து

உயர்த்திய ஐஏஎஸ் அதிகாரி:

அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களை முன்னுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதற் காக 19 ஆண்டுகளாக போற்றுதலுக் குரிய பணியை செய்து கொண் டிருக்கிறார் ராமநாதன் ஐஏஎஸ்.

குமரி மாவட்டம் அழகிய பாண்டிபுரத்தில் பிறந்து, தற்போது மதுரையில் செட்டிலாகி இருக்கும் ராமநாதன், ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றவர். தென்அமெரிக்காவில் அரசு ஆலோசகராக இருந்தார். விருப்ப ஓய்வில் 1995-ல் தாயகம் திரும்பிய இவர், மதுரை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பத்து மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் ஏழை மாணவர்களை தத்து எடுத்து அவர்களை தனது சொந்தச் செலவில் படிக்க வைக்கத் தொடங்கினார். இப்படியொரு அறப் பணியில் இவர் இறங்குவதற்குக் காரணம்? அதை அவரே விவரிக்கிறார்..

‘‘நானும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன்தான். தினமும் 3 கி.மீ. தூரம் நடந்துதான் பள்ளிக்குப் போவேன். அப்போதே ஏழைக் குழந்தைகளுக்கு என்னால் ஆன சின்னச் சின்ன உதவிகளை செய்திருக்கிறேன்.

அமெரிக்காவில் அரசுப் பணியில் கை நிறைய சம்பளத்தில் சந்தோஷமாக எனது நாட்கள் நகர்ந்தன. ஆனால், அந்த சந்தோஷம் இறுதிவரை நீடிக்கவில்லை. என் மனைவிக்கு ஃபிளட் கேன்சர் என்று சொன்ன டாக்டர்கள், ‘அதிகபட்சம் இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் அவர் உயிருடன் இருப்பார்’என்று கெடு வும் வைத்துவிட்டனர்.

அதனால், அமெரிக்காவில் இருக்கப் பிடிக்காமல் வேலையை விட்டுவிட்டு இந்தியாவுக்கு வந்துவிட்டேன். இங்கு வந்ததும், ஆதரவற்ற முதியோருக்காக ஒரு காப்பகம் கட்ட வேண்டும் என்று என் மனைவி ஆசைப்பட்டார். அவரது விருப்பத்தை நிறைவேற்றினேன்.

1995-ல் என் மனைவி இறந்தபிறகு, அந்தக் காப்பகத்தை இன்னொருவர் பொறுப்பில் விட்டுவிட்டு, பணம் இல்லாததால் படிப்பை கைவிடும் ஏழை மாணவர் களின் பக்கம் எனது கவனத்தைத் திருப்பினேன். அதற்காக 1996-ல் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் பத்தாம் வகுப்பில் 90 சதவீதம் மதிப்பெண் எடுத்திருந்த ஏழை மாணவர்களின் பட்டியலை கேட்டு கடிதம் எழுதினேன்.

சரியான மாணவர்களுக்கு உதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக, பள்ளிகள் பரிந்துரை செய்திருந்த மாணவர்களை அழைத்து, நானே ஒரு தேர்வு வைத்தேன். அதில் முதல் ஆண்டு தேர்வான 13 பேரை தத்தெடுத்து அவர்களுக்கான படிப்புச் செலவுகள் அனைத்தையும் செய்து படிக்க வைத்தேன். படிப்பு மட்டுமில்லாமல் மற்ற திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சி வகுப்புகளையும் தனியாக நடத்த ஆரம்பித்தோம்.

மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை பொது அறிவு உள்ளிட்ட தனித் திறன் பயிற்சி வகுப்பை நிபுணர்களைக் கொண்டு நடத்தினோம். இப்படி, கடந்த 19 ஆண்டுகளில் 583 பேரை தத்தெடுத்து நல்வழிப்படுத்தி இருக்கிறோம்.

கூடலூரைச் சேர்ந்த பால் விற்கும் பெண்ணின் மகன் ஒருவன், கையில் பணம் இல்லாத தால் படிப்பை பாதியில் விட்டு விட்டு வேலைக்குப் போகும் முடிவில் இருந்தான். அவனை நாங்கள் தத்தெடுத்து படிக்க வைத்தோம். அவன் அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.டெக்., முடித்தான். தற்போது தனது தம்பியை மதுரை அமெரிக்கன் காலேஜில் எம்.எஸ்சி. படிக்க வைத்திருக்கிறான்.

எங்களிடம் பயிற்சி பெற்று படித்த 8 பேர் டாக்டர்களாகவும் நிறைய பேர் பொறியாளர்களாகவும் உள்ளனர். எங்களிடம் பயின்ற மாணவர்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்கள். 15 வயதில்தான் மாணவர்கள் வழி தடுமாறிப் போகின்றனர். அந்த நேரத்தில் உரிய கவனம் செலுத்தி அவர்களை நல்வழிப்படுத்தி விட்டால் நல்ல நிலைக்கு கொண்டு வந்துவிடலாம். அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

எல்லாவற்றுக்கும் அரசையே எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் நல்ல நிலையில் இருப்பவர்கள் தங்கள் தகுதிக்கேற்ப தங்களால் ஆன உதவிகளை இயலாத வர்களுக்குச் செய்ய வேண்டும். எங்களிடம் படித்து பணியில் சேர்ந்திருக்கும் இளைஞர்கள் அத்தகைய உதவிகளை செய்ய ஆரம்பித்திருப்பதை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்’’ என்றார் ராமநாதன்

(தொடர்புக்கு -9442564078).

Message For the Day…” Understand the Supreme Infinite Power …”

Is there any object in the world without a creator? Consider a loud speaker. It has the power to broadcast sound, way beyond any individual’s voice and must take someone with required knowledge and skill to design and produce it. He or she may be in Germany, Switzerland or Japan, and perhaps invisible to you! Without that person, would this loudspeaker have come into existence? No! Similarly for everything that you enjoy in this world, there is a Creator. The stars that twinkle, the Sun and the Moon that illumine the world have been created by a Supreme Infinite Power. It is obvious to us that no ordinary person can create these super objects and ensure they are still working, after billions of years. Scriptures (Vedas) describe to us that this Super Power is Aprameya (One beyond description, beyond all proofs and limitations). The primary objective of every being in this Universe must be to seek and understand this Infinite Power.

Sathya Sai Baba

Message For the day…” Train Your Mind to Follow the Path of Human Being …”

The moment a bad thought comes, you must teach your mind, “Oh mind, are you on the path of human values or on the path of an animal? This thought is an animal thought – you are not an animal.” Train your mind saying, “Oh mind, human beings are not meant to eat, sleep and enjoy pleasures. Shed all animal qualities, give up previous habits and old ways. You must get away from all evil”. If you thus teach your mind, its speed will be lessened and the flow of thoughts will change. You must consistently teach your mind to transform your thoughts. There will be difficulties in the process. But let them come – the one who works hard and passes through these hardships will enjoy abundant peace. Without effort, there cannot be gain or pleasure. Hence don’t worry about difficulties.

Sathya Sai Baba

Message For the Day…” You Must Upkeep The Name , Honour and Reputation of Your Family…”

Even animals react based on your feelings. As is the feeling so is the reaction. Every being goes by these three: reaction, reflection and resound. It is only the evil tendencies, the bad feelings amongst human beings which cause wild reaction from animals. Two sons born in the same family constantly fight. What is the reason for hatred? Their own minds are responsible for their temperament. Never have bad temperament. You must always cultivate and develop noble feelings. All of you have good upbringing, good family and good education. You must upkeep the name, honour and reputation of your family and the University you studied. To earn a good name, you must have good friendship. “Tell me who your friends are, I shall tell you who you are” is a famous quote. As is the company, so you are. Therefore always seek and keep good company – it is your good fortune to have and be in good company.

Sathya Sai Baba

Message For the Day…” Don’t Brood Over the Past and Don’t Worry about Future… “

Everyone is very interested about their future. What is future? It is based on the past. Don’t brood over the past and don’t worry about the future. Past is past. What is the use in thinking about it or worrying about something that is dead and gone? Just forget it! Present is very important. Live in the moment and follow the present. Often many think of the past or of the future and ruin the present. Many times you feel you were happy in the past and are unhappy now. To what extent were you happy then? Has your attitude changed since the past? Has the dirtiness in your mind been cleansed? Believe that you are happy now; you have sufficiency in everything. Your mind is right now blessed. You must always “Help Ever and Hurt Never”. Bhagawan wants you to appreciate the importance of the “present” and work for your progress, living in the present and living in the moment.

Sathya Sai Baba

Message For the Day…” For a Student , Period of Education is Like Cultivation Season …”

Just as the cultivation season is the most important time for the farmer, the youth is the most important time in the life of a student. The farmer waits for the opportune moment to sow his seeds so that he can reap rich harvest. Time is a very critical element for the success of the crop. During the cultivation season, the farmer does not care about food, water or sleep, and works hard with his entire focus on achieving a good harvest. He believes that a good crop is the only source of all happiness. So too, for the student (Vidhyarthi), the period of their education is like the cultivation season. It is the most important time and is the very basis of their lives. They must dedicate all their time, without worrying even about hunger, thirst and sleep, or loss and gain, and must only focus on building their good character and gaining full and complete knowledge.

Sathya Sai Baba

” மறைந்து போன வயிற்று வலி…”

போன இடம் தெரியாத வயிற்று வலி…..

காட்டுப்பள்ளி எஸ்டேட் உரிமையாளர் சண்முகசுந்தர முதலியார். அவரது மேனேஜர் கிருஷ்ணானந்தம். இருவரும் மஹாபெரியவாளின் பக்தர்கள்.

1965-ஆம் வருடம் மஹான் தண்டையார்பேட்டையில் முகாமிட்டிருந்தபோது, தாம் காட்டுபள்ளிக்கு விஜயம் செய்வதாக முதலியாரிடம் சொன்னார். முதலியாருக்கு அளவற்ற மகிழ்ச்சி.

கிருஷ்ணானந்தத்தின் மனைவிக்குத் தொடர்ச்சியாக வயிற்று வலி. மஹாபெரியவாளிடம் முறையிட்டுப் பிரசாதம் வாங்கிக் கொடுத்தார். இதற்கிடையில் ஒரு நாள் மஹான் எப்போதோ கிருஷ்ணானந்தம் சொன்னதை நினைவில் கொண்டு,
”உன் மனிவிக்கு சிகிச்சை அளிக்க வேலூர் போவதாகச் சொன்னாயே நாளையே அழைத்துப் போ” என்று புன்சிரிப்போடு, அவரைச் சோதிப்பது போலக் கூறினார்கள்.

அதன்படியே இவரும் தயாராகி, மனைவியை மைலாப்பூரில் ஒரு உறவினர் வீட்டில் தங்க வைத்து அடுத்த நாள் வேலூர் போகத் திட்டமிட்டார்.

ஆனால் நடந்ததோ வேறு. முதலாளியிடமிருந்து மஹாபெரியவா அதே நாளில் காட்டுப் பள்ளிக்கு விஜயம் செய்வதாகத் தகவல் வர, கிருஷ்ணானந்தம் எல்லாம் தெய்வச் செயல் என்று மனைவியுடன் ஊருக்கே திரும்பிவிட்டார். வேலூர் பயணம் தவிர்க்கப்பட்டது. மேலும் எதிர்பாராத விதமாக காட்டுப் பள்ளியிலேயே மஹாபெரியவா சாதுர்மாஸ்ய வியாச பூஜையை செய்யத் திட்டமிட்டார்.

போக்குவரத்து வசதியில்லாமல் படகில் வந்து போகும் கிராமத்திற்கு இப்படி ஒரு வாய்ப்பு கிட்டியதில் எல்லோருக்கும் மகிழ்ச்சி.

மஹான் அங்கேயே நாலரை மாதங்கள் தங்கி, பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருந்தார்.

முதலியாரின் மேனேஜர் தன் மனைவி படும்பாட்டை மஹானின் முன் முறையிட்டார். மஹான் கிருஷ்ணானந்தத்தின் மனைவியை அங்கே அழைத்து வந்து ஒரு வாரம் தங்கும்படி சொல்ல, மேனேஜரும் அவ்வாறே செய்தார். அவரது மனவி தினமும் குளித்துவிட்டு, பூஜைக்கு சென்றார். வயிற்றுவலி தாங்காமல் அந்தப் பெண்மணியும் கண்களில் நீர் தளும்ப அமர்ந்திருப்பார். கருணாமூர்த்திக்கு இதெல்லாம் தெரியாதா என்ன?

முதலியாரின் மைத்துனரை அழைத்து குளத்தங்கரைக்குப் பக்கத்தில் குளியலறை போன்று தற்காலிக ஏற்பாடாக தென்னக்கீற்றினால் அமைக்கப்பட்டது.

மறுநாள் அந்த அம்மாள் ஸ்நானம் செய்தபின், சுவாசினிகள் பூஜைக்கு அமர்ந்தபோது,

“இந்த அம்மாவை குளியலறைக்கு அழைத்துப் போய் இரு ஸ்டூல்களைப் போட்டு ஒன்றில் உட்காரவைத்து, அபிஷேகத் தீர்த்தத்தை பாதத்தில் படாமல் எல்லா ஜலத்தையும் சிரசில் விடுங்கள் என்றார்” மஹான்.

அபிஷேக தீர்த்தம் உதவியாள் மூலமாக அனுப்பப்பட்டது. சிரசில் நீர் கொட்டும்போது மேனேஜர் மனைவி மெய்மறந்த நிலையில் இருந்தாராம். ஸ்நானம் முடிந்தவுடன் புத்துணர்ச்சி பெற்று வயிற்றுவலி போன இடம் தெரியாமல் வலி நீங்கப் பெற்றவராக வந்தாராம். அதற்குப் பிறகு வயிற்றுவலி அந்த அம்மையாருக்கு வரவே இல்லை.

இப்படிப்பட்ட அதிசயமான அனுபவம் வேறு யாருக்கும் கிட்டியிருக்காது என்று கிருஷ்ணானந்தம் நன்றிப் பெருக்கோடு குறிப்பிடுகிறார்.

மஹாபெரியவாளெனும் மாபெரும் தெய்வம் தன்னை அண்டியவர்களுக்கெல்லாம் அற்புதமான அனுபவங்களை அருளிக் காத்து நிற்கிறார்.

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!!

source::: http://www.periva.proboards.com
Natarajan
Read more: http://periva.proboards.com/thread/7364/abhisheka-theertham-book-venkatasaamy#ixzz37nO9aX95

” எக்ஸாம் இன்னிக்கு இருக்கோ …. ”

சாதாரணமான ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவன் அவன். வயது பன்னிரண்டு அல்லது பதிமூன்று இருக்கலாம். ஐந்தாவதோ ஆறாவதோ படித்துக் கொண்டிருக்கலாம்.

மாநிறம். எண்ணெய் அதிகம் கண்டிராத தலை. தடிமனான அரை டிராயர்; கசங்கிப் போன மேல்சட்டை… அரை டிராயரும் மேல்சட்டையும் என்ன நிறம் என்பதைப் பார்த்த மாத்திரத்தில் எவரும் சொல்லி விடமுடியாது. அழுக்கேறிப் போயிருந்தாலும் அந்த ஆடைகள் அவ்வப்போது துவைத்துத் தான் அணியப் படுகின்றன என்பதை அதைப் பார்க்கும் எவராலும் புரிந்து கொள்ள முடியும். நெற்றியில் ஒரு வளைந்த கீற்றாக – முறையே இல்லாமல் ஏனோ தானோ என்று விபூதி பூசப்பட்டிருந்தது. ஒருவேளை இங்கு கிளம்பி வருகிற அவசரத்தில் அவனது அம்மா இட்டு விட்டிருக்கலாம்.

தேர்வு காலங்களில் கிராமத்தில் இருப்பவர்கள் தெருமுனையில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குப் போய், ஒரு சின்ன கற்பூரத்தை ஏற்றி வைத்து, பேனாவை பிள்ளையார் பாதத்தில் வைத்து வழிபட்டு விட்டுப் பரிட்சை எழுதப் போவார்கள். இது ஒரு விதமான நம்பிக்கை. அதாவது இறைவன் அருளோடு தேர்வு எழுதப் போகிறோம் என்கிற ஒரு தைரியம் மாணவர்களுக்கு வரும்.

அது போல் இந்த சிறுவன் காஞ்சிபுரத்தில் வசிப்பவன் என்பதாலும், மஹா பெரியவாளின் சாந்நித்யம் பற்றி யாரோ சொல்ல – அவன் தகுதிக்கு ஏதோ கேள்விப்பட்டிருந்தாலும் இன்று தேர்வு எழுதப் போகும் முன் ஸ்ரீமடத்துக்கே வந்து விட்டான் போலிருக்கிறது.

விடிகாலை நேரத்தில் விஸ்வரூபதரிசனம் காண வந்திருந்த பக்தர்கள் பலரும் இன்னமும் நகராமல் அங்கேயே நின்றிருந்தபடி பெரியவா தரிசனத்தில் திளைத்திருந்தார்கள். இதைத் தவிர, காலை வேளையில் ஏராளமான பக்தர்கள் வேறு ஸ்ரீமடத்தில் குவிந்து விட்டிருந்தார்கள். நாம பஜனைகளும் சங்கர கோஷமுமாக ஸ்ரீமடமே பக்தி மணம் கமழ… அருள் நிரம்பிக் காணப்பட்டது.

இவ்வளவு கூட்டம் பெரியவா தரிசனத்திற்காகக் காத்து நின்றாலும், சிறுவனாகப் பட்டவன் வரிசையில் நின்று கொண்டிருக்கும் எந்த ஒரு பக்தரைப் பற்றியும் கவலைப் படாமல், ராஜபாட்டை போல் விறுவிறுவென்று நடந்து மஹா பெரியவாளின் சந்நிதியை நெருங்கினான்.

முகத்தில் உற்சாகம் கொப்பளிக்க, பெரியவாளைப் பார்த்தபடியே நின்றான். அவனை எவரும் தடுக்கவில்லை. ஏதும் கேள்வி கேட்கவில்லை. காரணம் – அந்தச் சிறுவனின் ஆர்வத்தையும் பரபரப்பையும் பார்த்த பின் இயல்பான அந்த பக்திக்குத் தடை போட எவருக்கும் விருப்பமில்லை.

“மடத்துக்குப் போய் சாமியைக் கும்பிடணும்னா, அவருக்குத் தோதா ஏதாவது எடுத்துட்டுப் போகணும்” என்று அவனுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்களோ…. தெரியவில்லை. தன் கையில் தொடுத்த ஒரு மாலையை வைத்திருந்தான். அந்த மாலையைப் பார்த்த பல பக்தர்களும் வெவ்வேறு விதமான உணர்ச்சிகளைத் தங்களுக்குள் வெளிப்படுத்திக்கொண்டு விமர்சித்துப் பேசினார்கள்.

சிலர் வியந்தார்கள்; சிலர் வெளியே ஏதும் பேச முடியாமல் தங்களுக்குள் கேலியாகச் சிரித்துக் கொண்டார்கள்.

பலரது விமரிசனத்துக்கும் கேலிச் சிரிப்புக்கும் உள்ளான அந்த மாலையில் அப்படி என்ன விசேஷம் என்கிறீர்களா?

அது – துளசி மாலை!

அதுவும் துளசியை அடர்த்தியாக – கொத்துக் கொத்தாக வைத்துக் கட்டப்பட்ட மாலை இல்லை. தனித் தனி துளசி இலைகளைக் கோணாமாணா என்று – ஒரு முறை இல்லாமல் கோர்த்துத் தொடுக்கப்பட்டிருந்த மாலை.

ஒருவேளை அடுத்தடுத்து துளசி இலைகளை நெருக்கமாக வைத்துத் தொடுத்திருந்தால் அதில் இடைவெளி என்பதே தெரியாமல் போயிருக்கும். ஆனால் இந்தச் சிறுவன் தொடுத்துக் கொண்டு வந்திருந்த துளசி மாலையில் இடைவெளி அதிகம் தெரிந்தது. அதனால் பார்த்தவுடன் ’மாலை’ என்று சொல்வதற்கு எவருக்கும் வாய் வராது.

இதில் இன்னொரு அலங்கோலமும் வெளிப்பட்டது. அதாவது இறைவழிபாட்டிற்குக் கொண்டு செல்கிற துளசியைப் பெரும்பாலும் வாழைநாரில்தான் கட்டுவார்கள். ஆனால் இந்தச் சிறுவன் ஒரு சணலில் இந்த ’மாலை’யைக் கட்டி எடுத்து வந்திருந்தான். (வீட்டில் ஏதாவது பொருளைக் கட்டி வைத்திருந்த மூட்டையில் இருந்த சணலை மட்டும் பிரித்து எடுத்திருப்பான் போலிருக்கிறது). இது போன்ற காரணங்களால் சிறுவன் எடுத்து வந்திருந்த துளசி மாலையைப் பார்த்து சிலர் சிரித்தார்கள்.
ஆனால் பக்குவப்பட்ட சிலர், ”இந்த வயதில் இந்த அளவுக்கு பெரியவாளிடம் ஒரு பக்தி இருக்கிறதே… வெறுங்கையோடு வரக்கூடாது என்கிற நாசூக்கு தெரிந்திருக்கிறதே” என்று நெகிழ்ந்தார்கள்.

ஒரு கட்டத்தில் பெரியவாளின் திருப்பார்வை அவன் மேல் விழுந்தது. ஒரு புன்னகையை உதட்டோரம் தவழ விட்டு, ”அருகில் வா” என்பது போல் அவனுக்கு ஜாடை காட்டினார்.
விறுவிறுவென்று நடந்து முன்னுக்கு வந்தான்.

”என்ன?” என்பது போல் ஆச்சரியமான முகத்துடன் தலையை மேலும் கீழும் அசைத்து ரசனையாகக் கேட்டது அந்தப் பரப்ரம்மம்.

சிறுவன் சந்தோஷமானான். தனக்கு உரிய அங்கீகாரம் இந்த சந்நிதானத்தில் கிடைத்துவிட்டது என்பதாக மகிழ்ந்தான். கையில் துளசி மாலையோடு பெரியவாளை இன்னும் நெருங்கி, அவரின் திருவடி அருகே இதை சமர்ப்பித்தான். பெரியவாளின் கைங்கர்யப் பணிக்காக அங்கே இருந்த சீடர் ஒருவர் அந்த துளசி மாலையை அங்கிருந்து எடுத்து வேறு இடத்தில் சேர்ப்பிப்பதற்காகக் குனிந்தார்.

சற்றே நிமிர்ந்து அந்த சீடரைப் பார்த்த பெரியவா, ’வேண்டாம்’ என்பது போல் வலது ஆட்காட்டி விரலை இடப்புறமும் வலப்புறமும் அசைத்து சமிக்ஞை செய்தார். சீடரையும் தள்ளி நிற்கச் சொன்னார். அந்த மாலையைத் தான் அகற்றுவதைப் பெரியவா விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்ட சீடன், நின்ற வாக்கிலேயே அப்படியே ரிவர்ஸில் நகர்ந்து கொண்டான்.

”எக்ஸாம் இன்னிக்கு இருக்கோ?” – சிறுவனைப் பார்த்துப் பெரியவா கேட்டார்.

இவ்வளவு பேர் கூடி இருக்கும் இடத்தில் தன்னைப் பார்த்துப் பெரியவா ஒரு கேள்வி கேட்கிறார் என்பது அந்தச் சிறுவனின் முகத்தில் ஏராளமான சந்தோஷத்தைக் கொடுத்திருந்தது. தவிர, தனக்குத் தேர்வு இருப்பதைப் பெரியவா எப்படிக் கண்டு பிடித்தார் என்கிற ஆச்சரியமும் அவன் முகத்தில். பிரகாசமானவன், “ஆமா சாமி, இன்னைக்கு சயின்ஸ்” என்று கூடுதல் தகவலையும் சொன்னான்.

”தொளசி மாலையை எனக்காகக் கொண்டு வந்தியோ?” என்று அவனைப் பார்த்துக் கேட்டு, அந்த மாலையைக் கையில் எடுத்தார்.

இப்படியும் அப்படியும் அதை ஆராய்ந்தார். தான் காணிக்கையாக எடுத்து வந்திருந்த மாலையைப் பெரியவா தன் கையால் எடுத்து விட்டார் என்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே அச்சிறுவனுக்குப் பெருமை பிடிபடவில்லை…”எங்க வீட்டுலேயே துளசிச் செடி இருக்கு… அதுலேர்ந்து நானே பறிச்சுக் கட்டினேன்.”
அந்தப் பரப்ரம்மம் அவனைப் பார்த்துச் சிரித்தது. கூடி இருந்த திரளான பக்தர்களும் அடுத்துப் பெரியவா என்ன செய்யப் போகிறார் என்பதைக் கவனிப்பதில் ஆர்வமானார்கள். ஒரு க்ஷண நேரத்தில் இந்தச் சிறுவன் பெரியவரின் கவனத்தை இப்படிக் கவர்ந்து விடுவான் என்று அங்கிருந்த எவரும் எதிர் பார்க்கவில்லை. சிறுவன் மேல் பெரியவா செலுத்தும் கரிசனத்தைக் கண்டு, சீடர்களும் மடத்துச் சிப்பந்திகளும் கூட அதிசயப் பட்டுப் போனார்கள்.

அந்தத் துளசி மாலையை தன் கையில் எடுத்துக் கொண்டார். வலக் கரத்தால் அந்த மாலையை எடுத்துத் தன் தலைக்கு மேல் வைத்தார். என்ன புண்ணியம் செய்ததோ அந்தத் துளசி மாலை! பெரியவாளின் தலையில் அமர்ந்து கொண்டது. துளசி மாலை பெரியவா சிரசில் அப்படியே நின்றது. சுற்றிலும் நின்றிருந்த தன் பக்தர்களை இப்படியும் அப்படியும் திரும்பிப் பார்த்தார் பெரியவர். எல்லாப் பக்கமும் திரும்பிப் பார்க்கிற வேளையில் அவர் முகத்தில் ஒரு புன்னகை ததும்பியது. ”இந்தக் கோலத்தில் நான் எப்படி இருக்கேன்? இந்த மாலை நன்னா இருக்கா?” என்று பெரியவா கேட்பதாக எல்லோருக்கும் பட்டது.

பெரியவாளுக்கு சமர்ப்பிக்க வேண்டி பக்தர்கள் வாங்கி வந்திருந்த எத்தனையோ மலர் மாலைகள் அவருக்கு முன்னால் – சற்றும் மணம் குறையாமல் – மலை போல் குவிந்திருந்தன. ரோஜா, மல்லிகை, சம்பங்கி என விதம் விதமான மலர்களைக் கொண்டு மிகவும் நேர்த்தியாகத் தொடுக்கப்பட்டிருந்த மாலைகள் அவை. ஆனால், அனைத்தையும் விட்டு விட்டு, ஒரு ஒழுங்குமுறையே இல்லாத, ஒரு மாலைக்கு உரிய எந்த விதமான இலக்கணத்திலும் சேராத, சாதாரண சிறுவன் கொண்டு வந்த துளசி மாலை ஏனோ பெரியவாளுக்குப் பிடித்து விட்டது. தானே அதை ஸ்வீகரித்துக் கொண்டார்.

’இதுதான் பக்தி’ என்பதை அங்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் உணர்த்தும் விதத்தில், ‘இந்த மாலையை அணிந்திருக்கிற நான் எப்படி இருக்கேன்?’ என்பதாக அனைவரையும் பார்த்தாரோ? எத்தனையோ மலர் மாலைகள் இருந்தும் அன்பின் மிகுதியால் – ஆர்வத்தின் வெளிப்பாடாகத் தொடுத்துக் கொண்டு வரப்பட்ட இந்தத் துளசி மாலை என் உள்ளத்தைக் கவர்ந்து விட்டது என்பதைப் பகட்டான பக்தர்களுக்கு உணர்த்துகிறாரோ?

பக்தி என்றால் என்ன என்பதைப் பற்றிப் பெரிதும் படிக்காத, கேட்காத இந்தச் சிறுவன் தன் செய்கையால் அங்கிருந்த அனைவருக்கும் பெரியவரின் அருட்செயலின் மூலம் உணரச் செய்து விட்டான். செல்வச் செழிப்பில் திளைக்கும் எத்தனையோ பக்தர்கள் குவிந்திருக்கும் இந்த சந்நிதானத்தில் தான் அன்புடன் எடுத்து வந்திருக்கும் ஒரு துளசி மாலைக்கு இவ்வளவு மரியாதையா என்று சிறுவன் திகைத்துப் போனான்.

அவன் விழிகளில் லேசாக ஈரம் ததும்பியது. சரேலென்று தரையில் விழுந்து பெரியவாளை நமஸ்கரித்தான். எழுந்து நின்றான். சுமார் பத்து நிமிடங்கள் கழித்துத் தான் அந்தத் துளசி மாலையைத் தன் தலையிலிருந்து எடுத்துக் கீழே வைத்தார் பெரியவா. புன்னகை அரும்ப அந்த சிறுவனை ஆசீர்வதித்தார். கல்கண்டும் குங்குமமும் கொடுத்தார்.

தன் தலையில் வைத்திருந்த மாலையை அருட் பிரசாதமாக அவனிடமே கொடுத்தார். அதன் அருமை தெரிந்தோ தெரியாமலோ பயபக்தியுடன் வாங்கிக் கொண்டான். எந்த ஒரு மாலையைப் பார்த்துப் பரிகசித்துத் தங்களுக்குள் விமர்சித்துக் கொண்டார்களோ, அந்த பக்தர்கள் இப்போது நெகிழ்ந்து போனார்கள். அவர்களின் பரிகசிப்புக்கு உள்ளான மாலை இப்போது புனிதம் பெற்று விட்டது.

மாலையைப் பெற்றுக்கொண்டு வெளியேறும் அந்தச் சிறுவனிடம் இருந்து, “குழந்தே, அதில் இருந்து ரெண்டு துளசி தளங்களைப் பிய்ச்சு எங்ககிட்ட தாயேன். அது பெரியவா பிரசாதம்” என்று கெஞ்சும் குரலில் கேட்டனர்.

அப்படிக் கேட்டவர்களுக்கெல்லாம் துளசி இலைகளைப் பிய்த்துக் கொடுத்துவிட்டு, “எக்ஸாமுக்கு டயமாச்சு. ஸ்கூல்ல பெல் அடிச்சுடுவாங்க..” என்று சொல்லி விட்டான் ஒரே ஓட்டம்! இன்று சயின்ஸ் தேர்வாயிற்றே!

Read more: http://periva.proboards.com/

Natarajan