Message for the Day…” You Must always Talk to others in a Pleasing Manner…”

In a story, Birbal tells Akbar, “Sweet talk is the sweetest thing in the world; nothing else, not milk, honey or jaggery comes close to it. A sweet word is the most valuable thing; through it one we can win a person over, give great joy and even attain a higher status. When crows caw at us, we throw stones at them. Whereas, when cuckoos sing, we respect them. Neither is the cuckoo going to give us a crown, nor will the crow punish us. When one’s speech is good, one earns a good name. Hence, a sweet word is indeed the sweetest thing in the world.” You must always talk to others in a manner which would give them contentment and joy. This is the essence of all scriptures. It is not enough to listen to, learn or chant Vedas, scriptures and Puranas (ancient spiritual texts), you must give joy and satisfaction to others.

Sathya Sai Baba

 

“பாவ மூட்டையை எப்படி எறக்கப் போறே ? ….”

பல வருடங்களுக்கு முன்பு நடந்தது இந்த நிகழ்ச்சி.

அன்று மஹானின் தரிசனம் எல்லோருக்கும் கிடைத்துக் கொண்டிருந்தது. மெளன அஞ்சலிக்குப் பிறகு பிரசாதத்தைப் பெற்று போனவர்களும் தங்களின் குறைகளை ஓரிரு வார்த்தைகளால் சொல்லி ஆறுதல் பெற்றவர்களும் இருந்தார்கள்.

தொடரின் நடுவே ஒருவர் வந்து நின்றார். அவரை மஹான் ஏறிட்டுப் பார்த்தார். பிறகு மெதுவான குரலில்,
“உன் பிள்ளைகளுக்கும் குடும்பத்தாருக்கும் ந்ல்லது செய்யறதாக நினைச்சுண்டு மேலே மேலே பாவ மூட்டையை அவா பேர்லே ஏத்திண்டு இருக்கே” என்றார்.

எதிரில் இருந்தவர் திடுக்கிட்டார். மனதறிந்து தாம் எந்தப் பாவமும் செய்யவில்லையே என்கிற எண்ணம் அவருக்கு….மஹானை ஏறிட்டுப் பார்த்தார்.

“பிராமணனா பிறந்தவர்கள் அன்னத்தை விலைக்கு விற்கப் படாதுன்னு சாஸ்திரத்திலே சொல்லியிருக்கே, அதை நீ படிச்சதில்லையா?”

அந்தப் பக்தர் ஓட்டல் நடத்துபவர். பிழைப்பிற்காக இதை பல வருடங்களாக நடத்தி வந்திருக்கிறார். பக்தர் அதற்கும் பதில் சொல்லவில்லை.

“சரி, அது உன் பிழைப்புக்காகன்னு வெச்சிண்டா கூட, அதுக்கு மேலேயும் வேறொரு பெரிய பாவத்தையும் பண்ணிண்டு இருக்கே…”

பக்தருக்கு உண்மையில் அது என்னவென்றே தெரியவில்லை. மஹானே தொடர்ந்தார்: “சேத்து வச்சிருக்க பணம் போதாதுன்னு, அதை வட்டிக்கு விட்டு அநியாயமா பணத்தை வசூல் செய்யறே. இது நீ அடுத்த தலைமுறைக்கு சேத்து வைக்கிற பாவம்” என்றார்.

தான் பணத்தை வட்டிக்கு விடுவது மஹானுக்கு எப்படித் தெரியும் என்கிற பிரமிப்பு நீங்கும் முன்னர் மஹான் சொன்னார்:

“நீ கேட்கிற அநியாய வட்டியைத் திருப்பிக் கொடுக்கும் போது வயிறெரிந்து உன்னையும் உன் குடும்பத்தாரையும் சபிக்க மாட்டார்களா?” அப்படி பல சம்பவங்கள் நடந்தது பக்தருக்குத் தெரியும்.

”இந்தப் பாவமூட்டை உன் சந்ததியின் தலைமேல் ஏறி உட்கார்ந்து கொள்ளுமே. அதை எப்படி இறக்கப்போறே? இதுவரைக்கும் நீ சேத்து வச்ச பணம் போறாதா? எதுக்கு மேலே மேலே ஆசைப்பட்டு உன் சந்ததிக்கு பாவமூட்டையை சேர்த்து வைக்கறே?” மஹான் இப்படிக் கேட்டதுதான் தாமதம். அந்த பக்தர் நெடுஞ்சாண்கிடையாக மஹானின் காலில் விழுந்தார்; கதறித் துடித்தார்.

“இனி நான் என்ன செய்யணும் சொல்லுங்கோ மஹாபிரபு!”

எழுந்தவரை ஆசீர்வதித்த பின்னர்,

“நீ இதுவரை சேர்த்த பணம் உன் தலைமுறைக்கும் போதும். முதல்லே நீ நடத்தற ஓட்டலை மூடி.. அன்னமுன்னு கேட்டு வர்றவாளுக்கு உன் ஆத்திலே சாப்பாடு போடு. வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்கறதையும் நிறுத்திடு”.

“அப்படியே ஆகட்டும்” என்று கை கூப்பினார் பக்தர்.

“இன்னும் ஒரு விஷயம் பாக்கி இருக்கே!”

“மஹா பெரியவா சொன்னா கேட்டுக்கிறேன்”.

“இதுவரை நீ வாங்கின வட்டியை எல்லாம் கணக்குப் போடு. எவ்வளவு பணம் சேந்திருக்குன்னு பார். அதை மொத்தம் எடுத்துண்டு போய் திருப்பதி ஏழுமலையான் உண்டியிலே போட்டுட்டு அவரை சேவிச்சு வா”.

பக்தர் விடை பெற்றுக் கொண்டார்.

மஹாபெரியவா பக்தர்கள் பாவ மூட்டையை சுமக்கக் கூடாதென்பதில் எவ்வளவு கண்ணும் கருத்துமாக இருந்தார் என்பது இதிலிருந்து தெரிகிறது அல்லவா?

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source::::www.periva.proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/6647/mahaperiyavaas-concern-extract-book-venkatasamy#ixzz2v6KQPHNB

” வாடிய பயிரை பார்க்கும் போது வாடும் ஒரு மனிதர் …”

 

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் வாணியம்பாடி செல்லும் சாலையோரத்தில் இருக்கிறது ஏலகிரி ஓட்டல். அங்குச் சாப்பிட்டுவிட்டுச் சிலர் பணம் கொடுக்காமல் வணக்கம் மட்டும் தெரிவித்து விட்டுச் செல்கின்றனர். கல்லாவில் இருந்தவரும் காசு கேட்பதில்லை. பணத்துக்குப் பதில் வணக்கம் செலுத்தினால் போதுமா? விசாரித்தபோதுதான் மேலே தொங்கிக்கொண்டிருந்த சிலேட்டுப் பலகைகளைக் காட்டினார். விஷயம் புரிந்தது.

‘முதியோர், ஊனமுற்றோர்களுக்கு காலை 8 முதல் 11 மணி வரை இலவச உணவு’ (100 பேர் வரை), ‘பால் வாங்கப் பணமில்லையென்றால் குழந்தைகளுக்கு இலவசமாகப் பால்’, ‘வாரம் 100 மாணவர்களுக்கு இலவசமாக பேனா அல்லது பென்சில்’, ‘1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை முதல் மாலை வரை பாதி விலையில் உணவு’ இந்த அறிவுப்புகள் சிலேட்டுப் பலகைகளில் சாக்பீஸால் எழுதப்பட்டிருந்தன.

ஆச்சரியத்துடன் கேட்டால், “பணத்துக்காக வாழ்றதில்லிங்க; வாழ்றதுக்குதாங்க பணம்” பெரிய தத்துவத்தை எளிதாகச் சொல்கிறார் இந்த ஓட்டலின் உரிமையாளர் நாகராஜ். அவர் இந்தச் சேவையை 25 ஆண்டுக்கும் மேலாகச் செய்துவருகிறார். ஒரு நாளைக்கு ஏறக்குறைய 100 பேர் வரை இந்த ஓட்டலை நம்பியே காலம் தள்ளுகின்றனர்.

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வட மற்றும் தென் தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திரத்தை இணைக்கும் முக்கியச் சந்திப்பு. இந்த நிலையத்தைக் கடந்ததுதான் அனைத்து ரயில்களும் பயணிக்கின்றன.

பயணத்தின்போது காலி தண்ணீர் பாட்டிலை ஜன்னல் வழியே வீசுவதைப்போல குடும்பத்தில் பாரமென கருதப்படும் மனிதர்களை ரயிலில் அழைத்து வந்து இங்கே இறக்கிவிட்டுச் சென்று விடுகின்றனர். அவர்கள் பெரும்பாலும் முதியவர்கள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். மாதந்தோறும் குறைந்தபட்சம் 15 பேராவது இப்படி அனாதைகளாகத் தனித்து விடப்படுகின்றனர்.

திக்குத் தெரியாமல் தவிக்கும் அவர்கள் ஜோலார்பேட்டையிலேயே சுற்றித்திரிகின்றனர். இவர்களுக்கு இந்த ஓட்டல் ஒரு அன்னச் சத்திரமாக இருக்கிறது. “பசி என்ற உணர்வு மட்டும்தான் சுயநினைவு இல்லாத வருக்குக்கூட உணவு நமக்கு தேவை என்பதை உணர்த்து கிறது” என்கிறார் நாகராஜ்.

இவர்கள் தவிர சுற்றுவட்டாரங்களில் வீடுகளில் கவனிக்க முடியாத நிலையில் இருக்கும் முதியவர்களுக்குத் தேவையான உணவை அவர்களது குடும்பத்தினர் வந்து இலவசமாக பார்சல் வாங்கிச் செல்லலாம். நாகராஜின் மனைவி சுஜாதாவும் தன் கணவரின் இந்தத் தொண்டுக்குப் பக்கபலமாக இருக்கிறார்.

மிகச் சின்ன வருமானத்தில் இதையெல்லா எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “இவர்களுக் கென்று தனியாக உலை வைக்கப்போதில்லை. வழக்க மாக சமைக்கும் அளவோடு கொஞ்சம் கூடுதலாக சமைக்கிறேன். 5 கிலோ மாவு புரோட்டோ போட்டாலும் 10 கிலோ மாவு போட்டாலும் மாஸ்டருக்கு ஒரே கூலிதான். எரிபொருளும் ஏறக்குறைய ஒரே அளவில்தான் செலவா கிறது.

சில ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்புதான் என்றாலும் எனக்கு குடும்பம் நடத்தத் தேவையான லாபம் கிடைக்கிறது. மனதுக்கும் சந்தோஷமாக இருக்கிறது” என்கிறார் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் ‘வாடி நிற்கும்’ நாகராஜ்.

source:::::The Hindu….Tamil
natarajan

Message for the Day…” How to do Meditation …” ?

During meditation, care must be taken to keep the back straight and steady without bending forward or backward or sideward. If you bend or move, misdirection of highly potent energy (Kundalini) can occur resulting in mental derangement. Also wear loose clothes. Your eyes must concentrate on the tip of the nose. They must be half-open, so you are neither distracted nor falling asleep. Free your mind from bad thoughts and fill it with sacred ones. To achieve this, you must control your senses. Your ears must be trained to listen only to noble and elevating ideas, and to eschew evil speech and gossip. Your eyes must be tuned to see the Divine. The restless mind must be restrained by making it concentrate on inhalation and exhalation while incessantly repeating the Mantra‘So-Ham’ (I am He). Through these postures and activities, your life-breath is controlled and this will ensure that the great power of Yoga is revealed unto you.   

Sathya Sai Baba

“இதைப் படி முதலில் …. “

தந்தது உன் தன்னை

தன் மனம், மார்க்கம் அனைத்துமே ஸ்ரீமஹா பெரியவாளே என்னும் ஆனந்தக் களிப்போடு தன் பிறவிப்பேற்றை அனுபவித்த ‘பிரதோஷம் மாமா’வின் அதி தீவிர பக்தி, அவரை ’64-ஆம் நாயன்மார்’ என்று மஹா பெரியவாளே அங்கீகரித்தருளும்படி செய்தது.

இவரின் பக்திநெறி ஒவ்வொன்றையும் மஹா பெரியவாளே வகுத்துக் கொடுத்ததாக பல அபூர்வ சம்பவங்கள் சாட்சியாக விளங்குகின்றன.

நடு இரவில் தன் இல்லத்திலிருந்து புறப்பட்டு வழி நெடுக ஈஸ்வர நாமாக்களை விடாது பாடிக்கொண்டு சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரத்திலிருந்த ஸ்ரீமடத்திற்கு பாதயாத்திரை செய்து தரிசிப்பதை ‘பிரதோஷம் மாமா’ தனது ஆனந்த அனுபவமாகவே கொண்டிருந்தார்.

பிரதோஷம் மாமா நடுநிசியில் பயணம் செய்யும்போது சில பக்தர்களும் அவருடன் வருவது வழக்கம். அதுபோல அன்றொரு நாள் இரவு தரிசன யாத்திரையில் திருவரத ஓதுவாரும் கலந்து கொண்டார். இதனால் வழியெங்கும் தேவாரமும், திருவாசகமும் ஒலிக்கத் தொடங்கியது. ஓதுவார் உரக்கப் பாட உடன் சென்றவர்களும் இதே போல் குரலெடுத்துப் பாடினார்கள்.

எப்போதும் ஓங்கி ஒலிக்கும் ’அருணாசல சிவ’ அப்போது தடைபட்டது போல் பிரதோஷம் மாமா உணர்ந்தார். ரமண மஹரிஷியின் மீது இவருக்கு இருந்த அபரிமித பக்தியினால், திருவாசகத்திற்குப் பதிலாக ‘அருணாசல சிவ’ என்று சொல்லலாமே என்று உடன் வந்தவர்களிடம் சொல்லிப் பார்த்தார். நமச்சிவாயமும், அருணாசல சிவமும் வேறல்ல என்று ஏன் இவருக்குப் புரியவில்லை? இதனால் மடத்தில் வீற்றிருந்த சர்வேஸ்வரருக்கு இவருக்கு பதில் சொல்லவேண்டும் என்ற தீர்மானம் ஏற்பட்டு விட்டது. தரிசன யாத்திரை முடிந்து, அவருடன் வந்தவர்கள் மஹா பெரியவாளை தரிசித்து மகிழ்ந்தார்கள். ஓதுவார் ஸ்ரீமடத்திலிருந்து புறப்பட்டு போய்விட்டார்.
அப்போது மஹான் தமது திருவிளையாடல் நாடகத்தை ஆரம்பித்தார்.

“ஓதுவார் எங்கே?” என்று மஹான் கேட்டார். அவர் புறப்பட்டுப் போய்விட்டார் என்று மஹானுக்குத் தெரியாதா என்ன? பிரதோஷ மாமாவுக்கு விளங்கவில்லை – ஏன் மஹான் ஓதுவாரை அழைக்கிறார் என்று…

மஹான் பிரதோஷ மாமாவை அழைத்துக் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். அது தன் கைக்கு வந்தவுடன் மெய் சிலிர்த்ததை உணர்ந்தார் பிரதோஷ மாமா. அருணாசலமா, நமச்சிவாயமா என்ற இவரது மன சஞ்சலத்தை அனைத்தும் நானே என்று சொல்லாமல் சொல்லித் தீர்த்து வைத்து விட்டது போலிருந்தது.

அவரது சிந்தனை வேறு பக்கம் திரும்பக் கூடாது என்று நினைத்த மஹான், “இந்தப் புத்தகம் எந்த வருடம் வெளியானதுன்னு ஓதுவாரைக் கேட்டுத் தெரிஞ்சுண்டு வா” என்றார்.

இது போன்ற வேலையை மஹான் தன்னிடம் சொன்னதே இல்லையே, இந்த விஷயம் இவருக்குத் தெரியாதா? இந்த வேலைக்கு மடத்து ஊழியர் போதாதா? இதற்கு ஏதாவது காரணம் இருக்கும் என்று நினைத்த பிரதோஷம் மாமா இதற்காக சென்னைக்குச் செல்ல வேண்டிய நிலை. காஞ்சியை விட்டு எப்போதும் அகலாதவருக்கு இப்படி ஒரு சோதனையா?

மஹானின் மனதை யார் அறிவார்? சென்னை சென்று ஓதுவாரை பார்த்துத் தகவல் அறியச் சென்றவருக்கு அங்கே ஓதுவாரைத் தேடவும் ஒரு துணை தேவைப்பட்டது.
இதற்காக மஹானிடம் பரமபக்தி கொண்டிருந்த ஒரு வைணவ அன்பரைத் தொடர்பு கொண்டு ஒத்தாசை செய்ய அழைக்கலாம் என்று நினைத்தார். போன் வசதி இல்லாத காலம் அது. இதனால் பணி ஓய்வு பெற்றபின், பிரதோஷ மாமா தனது அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயம்.

அலுவலகத்தின் உள்ளே நுழைந்ததும் இவரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஒரு அன்பர் இவரை வரவேற்று மூச்சு விடாமல் பேசத் தொடங்கினார்.
“ரொம்ப ஆச்சர்யம். நீங்க எப்படி இங்கே வந்தீங்க? உங்களுக்கு நாங்களே கடிதம் எழுதி வரவழைக்கலாமுன்னு நினைச்சோம்… ஏன்னா, உங்களுக்கு அரியர்ஸ் பணம் ஆயிரத்துக்கு மேலே வந்திருக்கு… ஆபீஸிலே இன்னிக்கு நீங்க வரலேன்னா பணத்தைத் திருப்பி அனுப்பச் சொல்லி உத்தரவு. என்ன செய்யறதுன்னே தெரியாம தவிச்சுண்டு இருந்தேன்…. பின்னாலே பணத்தை வாங்கறது மிகவும் சிரமமா இருக்கும்”.

பிரதோஷம் மாமா உண்மையில் திணறித்தான் போனார். அந்தக் கால கட்டத்தில் இந்தப் பணம் எவ்வளவு பெரியது? இதைத் தன்னிடம் சேர்க்க திருவாசக புத்தகத்தின் மூலம் மஹான் திருவிளையாடல் நடத்தியிருக்கிறார் என்றே தோன்றியது.

பிரதோஷம் மாமா, புத்தகம் எப்போது வெளியிடப்பட்டது என்பதைப் பலரிடம் விசாரித்துக் கொண்டு காஞ்சி வந்து, மஹானிடம் விவரங்களைச் சொன்னார். அதை மஹான் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை. தன்னை எதற்காக சென்னைக்கு அனுப்பினார் என்று மஹானுக்குத் தெரியாதா என்ன?

திருவாசகம் புத்தகத்தை அவரிடம் கொடுத்து “இதைப் படி” என்றார் மஹான்.

முதலில் எதைப் படிப்பது என்று இவர் தடுமாற “முதல்லேயிருந்து சில பக்கங்களையாவது படி” என்றார்.

அவர் புத்தகத்தைப் பிரித்தபோதே பிரமிப்பு….

“நமச்சிவாய வாழ்க” என்று தொடங்கும் சிவபுராணம் தான் முதலில் தென்பட்டது.

இப்படி பிரதோஷ மாமாவை நாயன்மாராக அங்கீகரித்தருளி “தந்தது உன் தன்னை கொண்டது என் தன்னை” என்று பக்தருக்குள்ளே ஐக்கியமாகி ஒவ்வொரு பக்தி நெறிக்கும் வழிகாட்டுபவராக ஸ்ரீமஹா பெரியவா பிரதோஷம் மாமாவுக்கு அருள் புரிந்தார்.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

Read more: http://periva.proboards.com/thread/6543/pradosham-maamaa-venkatasaamys-book#ixzz2uPz4MF6U

natarajan

London”s New Solar Bridge… Largest in the World …

solar brdige
Network Rail

Network Rail, which is responsible for Britain’s rail infrastructure, just opened the “world’s largest solar-powered bridge” — which stretches across the Thames, has 4,400 solar panels on it, and will provide half the energy to central London’s Blackfriars train station.

BusinessGreen reports:

The project was one of the most complex to date for Solarcentury, which installed the panels in a series of phases over the past two years, pausing to minimise the impact on the station during the 2012 Olympic Games.

“We had different sections of roof available at different times to fit in with this complicated jigsaw of getting everything up and going,” explained Gavin Roberts, Solarcentury’s senior project manager, adding that the company had even considered shipping some of the components in via the Thames.

This is exactly the sort of project, though, that gets easier the more times a company’s done similar work — the more big, urban solar projects go up, the faster and cheaper the next one will be. Looking forward to an all-solar London Bridge

source:::: Sarah Laskow in grist.org

Sarah Laskow is a reporter based in New York City who covers environment, energy, and sustainability issues, among other things. Follow her on Twitter.

natarajan

Telling the Time Now !!!…It is Robo Clock !!!

http://www.dailymail.co.uk/sciencetech/article-2563133/Now-thats-telling-time-RoboCLOCK-continuously-writes-rubs-hour-real-time.html

Pl click the above link and read the full story ….

The Plotclock, pictured, was designed by Thingiverse member Joo, also known as Johannes from Nuremburg. It writes the time, in hours and minutes, on a white board using a dry wipe pen, before erasing it and starting again

The traditional clock has had its day.

A German creator has designed a robot that writes the time using a dry wipe pen on a miniature white board.

Its mechanical arms then erase the time from this board, before starting again – and each time the robot writes, the numbers correspond to the real-world time as its being written.

Read more:

source::::mailonline.com UK

natarajan

” இவர் சிவப் பழம் …இவருக்கு நெறைய பழம் கொடு …”

 

ஒரு வைதிகர், எளிய வாழ்க்கை, போதுமென்ற
மனமே பொன் செய்யும் மருந்து.

கோயில் திருப்பணிகளில் மிகவும் ஆர்வம்.
தன் கிராமத்திலுள்ள பிள்ளையார் கோயில்,
மாரியம்மன் கோயில்,சிவன் கோயில்
எல்லாவற்றுக்கும் அரும்பாடுபட்டுத்
திருப்பணிகள் செய்தார்.

பெரிய தொகை நன்கொடை கொடுப்பவர்கள் கூட
அவரிடமிருந்து ரசீது எதிர்பார்க்கமாட்டார்கள்.
அவ்வளவு சுத்தம். அவருடைய சேவையை அண்டை
கிராமத்தார்களும் பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஒரு வயற்காட்டில் ஒரு பெரிய சிவலிங்கம்
தன்னந்தனியாக வெயிலில் காய்ந்து, குளிரில்
நடுங்கிக் கொண்டிருந்தார். இந்த வைதிகர்
முயற்சியால் இப்போது அவர் (சிவலிங்கம்)
மழை-காற்றுக்கு அஞ்சாமல்,கருவறையில்
கோயில் கொண்டுள்ளார்.

இப்படி எத்தனையோ கோயில்கள்.

ஆனால்,வைதிகர் எந்தக் கும்பாபிஷேகத்திலும்
தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதில்லை.
கூட்டத்தில் ஒரு மூலையில் ஒண்டிக்கொண்டு நிற்பார்!

தம்பட்டமே இல்லாத இவரைப் பற்றிப்
பெரியவாளுக்கு தெரிந்திருந்தது.

‘எப்படி?’ என்றெல்லாம் கேட்கக்கூடாது.
அது சிவரகசியம்!

அந்த வைதிகர் அடிக்கடி ஸ்ரீமடத்துக்கு வருபவர் அல்லர்.
அவருக்கு ஓய்வு கிடைத்தால்தானே வெளியே போவதற்கு!

அவர் வழி அப்பர் வழி, ஆமாம். Upper வழி.

உழவாரப் பணி, கோபுரங்களில் வேலை,நாலைந்து
பையன்களை உடன் வைத்துக்கொண்டு
சந்தடி இல்லாமல் சிவத்தொண்டு செய்வார்.

ஒருதடவை பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார்.
பெரியவாளை வந்தனம் செய்துவிட்டு ஓரமாக
நின்றார். வழக்கமான ஊர்-பேர் விசாரணைகூடச்
செய்யவில்லை பெரியவாள்.

அந்தச் சமயத்தில் பரம பக்தர்களான பணக்காரத்
தம்பதிகள் வந்து வந்தனம் செய்துவிட்டு எழுந்தார்கள்.

பெரியவாள், தொண்டருக்கு என்ன குறிப்பு
கொடுத்தாரோ, தெரியாது.விலையுயர்ந்த
ஒரு சால்வையைக் கொண்டுவந்து தட்டில்
வைத்தார் ஓர் அணுக்கத் தொண்டர்.பெரியவாள்,
அந்தப் பணக்காரப் பக்தரை அழைத்து, அந்தச்
சால்வையை, வைதிக பக்தருக்குப் போர்த்தச்
சொன்னார்கள்.

எல்லோருக்குமே வியப்பாக இருந்தது.

இந்த வைதிகர் என்ன, அவ்வளவு பெரிய
பண்டிதரா? யாகம் செய்தவரா..?

பெரியவா பணக்காரரிடம் சொன்னார்கள்.

“இவரைப் பார்த்திருக்கிறாயோ?”

“இல்லை”

“இவர் அட்ரஸ் தெரியுமோ?”

“தெரியாது”

“எனக்குத் தெரியும்! சொல்லட்டுமா?”
(என்ன குறும்பு!)

“சாஸ்திரிகள் கேர் ஆஃப் சிவன் கோயில்!
இவர் பெரிய Builder.என்ன? பல சிவன்களுக்கு
வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்…!”

பக்தர்கள் கூட்டம் நெகிழ்ந்து உருகியது.
ஒரு பத்திரிகையில்கூட இவர் புகைப்படத்தைப்
பார்த்ததில்லையே…

“இவர் சிவப்பழம்…பிரசாதத்தோட நெறய்ய
பழங்கள் கொடு…”

அறிமுகமே இல்லாத இவர், தூய சிவப்பணியாளர்
என்பது பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?.

அது எந்தவகை ஸித்தி?
ஆயிரம் கன்றுக்குட்டிகள் நடுவில் ஒரு தாய்ப்பசு
தன் கன்றை அடையாளம் கண்டுகொள்ளாதா, என்ன?

 

            
source::::input from a friend of mine
natarajanIvarukku

 

How to Achieve 101% Success !!!

 

Beauty of Mathematics !!!!!!!

1 x 8 + 1 = 9
12 x 8 + 2 = 98
123 x 8 + 3 = 987
1234 x 8 + 4 = 9876
12345 x 8 + 5 = 98765
123456 x 8 + 6 = 987654
1234567 x 8 + 7 = 9876543
12345678 x 8 + 8 = 98765432
123456789 x 8 + 9 = 987654321

1 x 9 + 2 = 11
12 x 9 + 3 = 111
123 x 9 + 4 = 1111
1234 x 9 + 5 = 11111
12345 x 9 + 6 = 111111
123456 x 9 + 7 = 1111111
1234567 x 9 + 8 = 11111111
12345678 x 9 + 9 = 111111111
123456789 x 9 +10=  1111111111  1111111111

9 x 9 + 7 = 88
98 x 9 + 6 = 888
987 x 9 + 5 = 8888
9876 x 9 + 4 = 88888
98765 x 9 + 3 = 888888
987654 x 9 + 2 = 8888888
9876543 x 9 + 1 = 88888888
98765432 x 9 + 0 = 888888888

Brilliant, isn’t it?

And look at this symmetry:

1 x 1 = 1
11 x 11 = 121
111 x 111 = 12321
1111 x 1111 = 1234321
11111 x 11111 = 123454321
111111 x 111111 = 12345654321
1111111 x 1111111 = 1234567654321
11111111 x 11111111 = 123456787654321
111111111 x 111111111 = 12345678987654321

 

Now, take a look at this…


101%

 

From a strictly mathematical viewpoint:

 

What Equals 100%?
What does it mean to give MORE than 100%?

Ever wonder about those people who say they are giving more than 100%?

We have all been in situations where someone wants you to
GIVE OVER 100%.

How about ACHIEVING 101%?


What equals 100% in life?


Here’s a little mathematical formula that might help
answer these questions:


If:

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Is represented as:

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26.


If:


H-A-R-D-W-O- R- K

8+1+18+4+23+ 15+18+11 = 98%


And:

K-N-O-W-L-E- D-G-E

11+14+15+23+ 12+5+4+7+ 5 = 96%


But:

A-T-T-I-T-U- D-E

1+20+20+9+20+ 21+4+5 = 100%

 

THEN, look how far the love of God will take you:

 

L-O-V-E- O-F- G-O-D

12+15+22+5+15+ 6+7+15+4 = 101%


Therefore, one can conclude with mathematical certainty that:

While Hard Work and Knowledge will get you close, and Attitude will
get you there, It’s the Love of God that will put you over the top!

 

 

source::::input from a friend of mine

natarajan

Message for the Day…” God is Giving us Everything with many Hands…”

There was once an old woman in Paris. It was winter and December was around the corner. Many poor people were sleeping on the streets and shivering with cold. She went around the streets and covered them with a blanket. She completed the job without any fuss or noise. Over time, the people in the town came to know about it. They wondered why this humble old woman who was herself struggling to make her ends meet setting out to help others! When children used to ask her, “Grandma, why are you walking with your head down? You are a great person!” she would respond humbly, “God is giving us everything with many hands, and I am giving with a single hand. Is that not a shame for me?” Many great people world over, have placed before us the high ideals of charity  

Sathya Sai Baba