
source:::::input from a friend of mine…
natarajan

source:::::input from a friend of mine…
natarajan

Scientists in Shanghai have developed a wifi-emitting LED lightbulb that can connect as many as four computers to the internet at once
As many as four devices near the lightbulb can connect to its signal using light frequencies rather than radio waves, according to Gizmodo.
The bulb itself is embedded with a microchip that produces its signal, which at 150 megabites per second, is considerably faster than the average wifi connection in the country.
Next month researchers will unveil 10 sample lightbulbs and their accompanying kits at the International Industry Fair in Shanghai.
Experts suggest that this faster, cheaper and more energy efficient way of connecting to the internet could become common practice in Chinese homes, where more and more people are abandoning traditional lightbulbs in favour of LEDs.
Li-Fi reportedly only uses five per cent of the energy required to power other wifi-emitting devices which rely on cooling systems to supply internet to cell towers and stations.
Though the new technology is well suited to the country’s changing technological trends, developers have encountered problems in its design and manufacturing, with particular difficulty being found in the design of the microchip.
Moreover, the connection is lost if the light is turned off or if its bulb becomes blocked, according to technology experts Dvice.
souece:::::mailonlinUk
natarajan

கௌஹாத்தி நகரின் விமான நிலையத்திலிருந்து சிறிது தூரம்தான் சென்றிருப்பேன். என்னுடைய வாகனத்தைத் தாண்டி செங்கொடிகள் காற்றில் வேகமாக அலைபாய போலீஸ் வாகனம் ஒன்று சென்றது. பின்னால் தொடர்ந்து வந்த வாகனங்களிலும் செங்கொடி தாங்கிய போலீஸார். “என்ன, அஸ்ஸாமில் புரட்சி வெடிக்கிறதா?” என்று நண்பரிடம் கேட்டேன். “இல்லை, கிருஷ்ணன். இது இங்குள்ள பெரிய புள்ளி ஒருவருக்கு செக்யூரிட்டி. அபாயச் சங்கோடு இந்தக் கொடிப் பழக்கமும் இங்கு உண்டு. புரட்சியை மழுங்கடிப்பதற்கான உத்தியாகவும் இருக்கலாம்.”
அன்று மாலை நண்பர் வீட்டில் ஒரு தேநீர் விருந்து. பெரிய புள்ளிகள் சிலர் வந்திருந்தனர். அவர்களைப் பாதுகாக்க வந்த காவலர்கள். ஒருவருக்கு 10 பேர் என்ற வீதத்தில் இருந்தார்கள். விருந்தை முழுவதுமாக ஆக்கிரமித்துக்கொண்டவர்கள் அவர்கள்தான்.
“சமோசாவைத் தேடுகிறீர்களா? கிடைக்காது. எங்கள் போலீஸ்காரர்களுக்கு அதன் மீது மாளாத காதல். ஒருவருக்குக் குறைந்தது ஐந்து சமோசாக்களாவது தேவை. அஸ்ஸாமில் தொந்தியை அறிமுகம் செய்ததே எங்கள் போலீஸ்காரர்கள்தான்.”
இது நடந்தது திங்கட்கிழமை. அக்டோபர் 7, 2013.
ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அக்டோபர் மாதத்தில்தான் இரு அசாமிய முதல்வர்களைச் சந்தித்தேன். ஒருவர் சரத் சின்ஹா. ஏழு வருடங்கள் முதல்வராக இருந்தவர். பதவியைத் துறந்த அன்று கக்கத்தில் குடையை இடுக்கிக்கொண்டு பஸ் பிடித்து வீடு திரும்பினார் என்று சொல்கிறார்கள். அவருக்குப் பாதுகாப்பு என்றாலே வெறுப்பு. போகும் இடங்களுக்கெல்லாம் பஸ்ஸில்தான் சென்றுகொண்டிருந்தார். மற்றவர் ஹிதேஷ்வர் சைக்யா. அப்போது முதல்வராகவே இருந்தார். சந்திக்க நேரம் கேட்க அவரது அலுவலகத்துக்கு போன் செய்தேன். அவரே போனை எடுத்தார். அந்தரங்கச் செயலாளர் விடுப்பில் இருந்தாராம். நான் அவரைப் பல தடவை சந்தித்திருக்கிறேன். சைக்யா மீது உல்ஃபா தீவிரவாதிகள் குறிவைத்திருந்தார்கள். இருந்தாலும், அவரைச் சுற்றி அதிக பாதுகாவலர்களை நான் என்றுமே பார்த்ததில்லை.
50-களிலும் 60-களின் முற்பகுதியிலும் தமிழ்நாடும் வேறுவிதமாக இருந்தது.
எங்கள் மாவட்டத்தில் சங்கரன்கோவிலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அப்துல் மஜீத் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது, என் தந்தையுடன் பஸ்ஸில் பயணம் செய்திருக்கிறார். பஸ் நிலையத்தில் என்னை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தது நன்றாக நினைவிருக்கிறது.
மற்றொரு சம்பவம் நாங்குநேரியில் நடந்தது. காமராஜர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்திருந்தார். எனது அத்தையின் வீட்டில்தான் காங்கிரஸ் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டிருந்தது. நான் காமராஜரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலோடு காத்துக்கொண்டிருந்தேன். இரவு 12 மணியளவில் பின்னால் ஒரு போலீஸ் வாகனம் தொடர, அழுக்கு ஜீப் ஒன்றில் வந்தார். தொண்டர் ஒருவர் அருகில் வந்து “ஐயா, இந்த வீட்டில் ஃப்ளஷ் அவுட் வசதியில்லை” என்றார். அவர் “நான் என்ன செய்யப்போறேன்? ஒண்ணுக்குதான இருக்கப்போறேன்” என்று சொல்லிக்கொண்டே உள்ளே சென்றுவிட்டார். அங்குதான் இரவைக் கழித்தார். கட்டில்கூட இல்லாத வீடு. காமராஜரும் பஸ்ஸில் பயணம் செய்யத் தயங்கியிருக்க மாட்டார்.
நாம் வெகுதூரம் வந்துவிட்டோம்.
அக்டோபர் 10 அன்று தில்லி திரும்பியதுமே கண்ணில் பட்டது வீரப்ப மொய்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார் என்பதுதான். வாரம் ஒரு முறை பயணம் செய்வாராம். தொலைக் காட்சியில் ரயிலேறு படலத்தைப் பார்த்தபோது அவரைப் பரிவார தேவதைகள் சூழ்ந்திருந்தார்கள். வாராவாரம் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய மற்ற அமைச்சர்களும் நினைத்தால், இவர்களுக்காகத் தனி ரயில்தான் விட வேண்டும். இல்லையென்றால்,
பொதுமக்கள் பயணம் செய்ய முடியாது.
அமைச்சர் ரயிலைப் பயன்படுத்தியது செய்தியாக ஆனது, பொதுப் போக்குவரத்து நமது நாட்டில் எந்த நிலையில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இன்னும் சில ஆண்டுகளில், ‘அமைச்சர் சாலையில் காலைப் பதித்தார்’என்பது செய்தியாக ஆனால், வியப்படைவதற்கு ஒன்றுமே இருக்காது.
நான் சொல்வதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால், உங்கள் ஊரில் இருக்கும் முக்கிய கடைத்தெரு ஒன்றில் வாகனங்கள் நிறுத்திவைத்திருக்கும் இடத்துக்குச் சென்று எத்தனை அரசு வாகனங்கள் நிற்கின்றன என்பதைக் கணக்கெடுங்கள். இந்தியாவின் எந்த ஊருக்குச் சென்றாலும், அங்கு மக்கள் பொருட்கள் வாங்கும் இடத்தில் ‘பஞ்சாயத்துத் தலைவர்’‘தாளாளர்’‘ஆய்வாளர்’போன்ற சிவப்புப் பின்புலத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பலகைகளைத் தாங்கிய வாகனங்களைப் பார்க்காமல் இருக்க முடியாது.
அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் தொழிற்துறையில் முன்னணியில் இருப்பவர்களும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தாவிட்டால், சாலைகளும் பொதுப் போக்குவரத்தும் முன்னேற்றம் அடைய முடியாது. ‘அச்சுறுத்தல்கள் இருக்கின்றன, அதனால் பாதுகாப்பு தேவை’ என்பது மிகச் சில அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மட்டுமே பொருந்தும். இதுபற்றி உச்ச நீதிமன்றத்தில் வழக்கொன்று வாதாடப்பட்டுவருகிறது. வரப்போகும் தீர்ப்பினால் பரிவார தேவதைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைய வாய்ப்புகள் இருக்கின்றன.
இந்தத் தீர்ப்பு வந்தவுடன் அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் பொதுப் போக்குவரத்தைக் கூடுமானவரை பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறையை மத்திய, மாநில அரசுகள் கொண்டுவர வேண்டும். அரசு வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட வேண்டும். நம்மைப் போன்றவர்களும் கார்களைக் குறைவாகப் பயன்படுத்த வேண்டும்.
இந்தியச் சாலைகள் எரிபொருளில் இயங்கும் தனியார் வாகனங்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. ஆனால், அந்த எண்ணத்தில்தான் பலர் இயங்குகிறார்கள். தில்லியைப் பொறுத்த அளவில், கார்களைப் பயன்படுத்துபவர்கள் மக்கள்தொகையில் 10 சதவீதம் இருப்பார்கள். ஆனால், 90 சதவீதச் சாலைகளை ஆக்கிரமித்துக்கொள்கிறார்கள். சென்ற 10 ஆண்டுகளில் இத்தகைய வாகனங்கள் வருடத்துக்கு 13 சதவீதம் அதிகரித்திருக்கின்றன. ஆனால், சாலைகள் அதிகரிப்பு 1 சதவீதம். நடந்துபோனாலே செல்லுமிடத்துக்கு வேகமாகச் சென்றுவிடலாம் என்ற நிலைமை வருவதற்கு வெகு நாட்கள் இல்லை. கார்களை விட, நமக்கு அதிக தேவை பஸ்கள் என்ற புரிதல் ஏற்படுவதற்கும் நாம் வெகு நாட்கள் காத்திருக்க வேண்டாம். தமிழக அரசுக்கு இந்தப் புரிதல் இருக்கிறது. இந்தியாவிலேயே மிகத் திறமையாக இயங்கும் மிகச் சில பொதுப் போக்குவரத்து நிறுவனங்களில் சென்னையில் இயங்கும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஒன்றாக இருக்க வேண்டும்.
நாமும் அரசோடு ஒத்துழைக்க வேண்டும்.
கார்களில் செல்வதைக் கூடிய மட்டும் குறைத்துக்கொள்ளுங்கள். பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள். முடியுமானால், சைக்கிளில் அல்லது நடந்து செல்லுங்கள். அமைச்சர்களும் அதிகாரிகளும் நம்கூட வர வேண்டும் என்பதை வலியுறுத்திக்கொண்டே இருங்கள்.
பி. ஏ. கிருஷ்ணன், எழுத்தாளர், பொதுத்துறை நிறுவன நிர்வாக இயக்குனர் (ஓய்வு), தொடர்புக்கு – tigerclaw@gmail.com
தமிழ்நாட்டில் இயற்கை ஆர்வலர் மத்தியில் பிரபலமான ஒரு பெயர் சேந்தங்குடி தங்கசாமி. ‘மரம் தங்கசாமி’என்று சொன்னால், பெயர் எளிதில் விளங்கும்.

ஒரு சாதாரண விவசாயியான தங்கசாமி ஏராளமான மரங்களை வளர்த்துப் பணக்காரர் ஆன கதை எல்லோராலும் எழுதப்பட்டது. அது சுயமுன்னேற்றக் கதை. தங்கசாமியிடம் நம் சமூகம் கவனிக்காமல் விட்ட இன்னொரு கதை உண்டு – எதிர்கால இந்திய விவசாயத்தின் மறுமலர்ச்சிக்கான விதை அது – குறுங்காடு வளர்ப்பு!
பத்து ஏக்கர் நிலம். அதில் ஒரு வீடு. வீட்டையொட்டி சின்னதாய்க் காய்கறித் தோட்டம். சுற்றிலும் குறுங்காடு. ஆமாம், சின்னக் காடுதான் அது. புன்னை, முந்திரி, சிவகுண்டலம், பூவரசம், தென்னை, பனை, புங்கன், வேம்பு, அழிஞ்சி, நாட்டு வாதுமை, புங்கன், பெருங்காலி, தங்கபட்டி, கோவர்தனம், பவழமல்லி, மந்தாரை, தங்க அரளி, செண்பகம், கறிவேப்பிலை, வேம்பு, மகிழம், செவ்வில்வம், மலைவேம்பு, பிணாரி, இலவம்பஞ்சு, ஒதியம், வாகை, கொண்டைவாகை, இயல்வாகை, வாதநாராயணம், நுணா, பாலை, தேன்பூச்சி, மூக்குச்சளி, தூங்குமூஞ்சி, நாவல், நெல்லி, பலா, வில்வம், மா, இலுப்பை, கொடுக்காப்புளி, சப்போட்டா, இலந்தை, சீதா, மாதுளம், அரநெல்லி, கரம்போலா, கொய்யா, கம்பளி, அகத்தி, அத்தி, அழிஞ்சி, பூமருது, அசோகா, மயில் கொன்றை, திருவாட்சி, மந்தாரை, கொக்கு மந்தாரை, மரவல்லி, சரக்கொன்றை, மஞ்சக் கொன்றை, நெருப்புக் கொன்றை, தேக்கு, சந்தனம், ஆலம், அரசம்… நூற்றுக் கணக்கான மரங்கள் அல்ல; வகைகள். ஏழாயிரத்துச் சொச்ச மரங்கள். கூடவே, சிறிதும் பெரிதுமான பல்லாயிரக் கணக்கான உயிரினங்கள்… இதுதான் தங்கசாமியின் குறுங்காடு.
ஒருகாலத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தின் வெம்மைக்கும் வறட்சிக்கும் சரியான உதாரணம் தங்கசாமியின் ஊரான சேந்தங்குடி. இன்றைக்கு அந்தப் பிரதேசத்துக்குள் நுழையும்போதே காற்றில் குளுமையை உணர முடிகிறது. எங்கும் பசுமை வியாபித்திருக்கிறது. 46 ஆண்டுகளில் தங்கசாமி உருவாக்கிய மாற்றம் இது.
“பாரம்பரியமான வெவசாயக் குடும்பம். எஸ்.எஸ்.எல்.சி. படிச்சு முடிச்சதும் வெவசாயத் துறையிலேயே வேலை கிடைச்சுது. வீட்டுல சொன்னாக, ‘யப்பா… வீட்டுக்கு நீ ஒரே புள்ள. நீ பாட்டுக்கு வேலைக்குப் போயிட்டீன்னா, குல வெவசாயம் செத்துப்போகும்’னு. சரிதான்னுட்டு, பயிற்சியை மட்டும் முடிச்சுப்புட்டு வயக்காட்டுக்கே வந்துட்டேன். படிச்ச ஆளு, அதுவும் அப்ப வெவசாயப் பயிற்சி வேற எடுத்துக்கிட்ட துடிப்பு, ஊரு முழுக்கப் பச்சைப் புரட்சியைப் பேசுறான்… சும்மா பழைய வழியிலேயே போவ முடியுமா? நவீன வெவசாயம்… நவீன வெவசாயம்னு கூவிக்கிட்டு உரம், பூச்சிக்கொல்லில தொடங்கி பட்டுப்பூச்சி, தேனீ வளர்ப்பு வரைக்கும் போய்ட்டேன். கொஞ்ச நாள்தான். எல்லாம் காலி. 30 ஆயிரம் கடன். 1960-ல 30 ஆயிரம் எவ்வளவு பெரிய தொகை? ஒரு குடியானவன் சேத்து அடைக்குற காசா அது? மனசு விட்டுப்போச்சு. தற்கொலைதான் கடைசி வழின்னு தோணுச்சு. ஒடிஞ்சு உட்கார்ந்துட்டேன்.
அப்போதான் ரேடியோல ஒரு குரல். சீனிவாசன் ஐயா பேசுறார். ‘மரப் பயிறும் பணப் பயிரே…’, ‘தோப்பில்லா குடும்பத்துக்குக் காப்பில்லை’னு. அப்படியே கடவுளே வந்து சொன்ன மாதிரி இருந்துச்சு. அன்னைக்கு மரத்தைக் கட்டிக்கிட்டேன். வெவசாயம் பண்றதுக்குத்தானே தண்ணியோட்டம் உள்ள பூமியா இருக்கணும்? மரம், பூமிக்கேத்த மாதிரி நடலாம். அங்கேயும் இங்கேயுமா இருந்த வயவாய்க்கால் எல்லாத்தையும் பங்காளிங்ககிட்டே கொடுத்துட்டு, கடனை அடைச்சேன்; ஒரே இடத்துல பத்து ஏக்கராவா சேர்த்து வாங்குனேன். மரக்கன்னா நட்டேன். கொஞ்ச வருஷம். நட்டேன். வெட்டுனேன். நட்டேன். வெட்டுனேன். தேவையான காசு வந்துடுச்சு. ஒரு நா விடியக்காலையில முழிச்சுப்பார்க்குறேன். அது நா வரைக்கும் நான் மரமா பார்த்தது எல்லாம் திரண்டு காடா நிக்குது. சத்தியமா அன்னைக்கு வரைக்கும் மரத்தைக் காசாத்தான் பார்த்தான் இந்தத் தங்கசாமி; ஆனா, காடு காசு இல்லை; அது சாமி. பொறி தட்டிடுச்சு. ‘தங்கசாமி இனி உனக்கு வேலை இதுதான்டா’ன்னு.
அன்னைக்கு ஆரம்பிச்சு இன்னைக்கு வரைக்கும் காடுதான் என் மூச்சுலேயும் பேச்சுலேயும் கலந்துகெடக்கு. யாரு என் வீட்டுக்கு வந்தாலும் சரி; யாரு வீட்டுக்கு நான் போனாலும் சரி… மரக்கன்னு ஒண்ணைப் புடிச்சு நட்டுடறது. வீட்டுல எந்த விசேஷ நாள்னாலும் மரக்கன்னை நட்டுப்புடுறது. இன்னைக்கு என் கை பட்ட மரக்கன்னு உலகம் முழுக்க முளைச்சுக் கெடக்கு. நம்புவீங்களா, கோடி வெதை, கன்னுங்களைத் தன் கையால கொடுத்திருக்கான் தங்கசாமி. என் மவன் கல்யாணத்து அன்னைக்கு மட்டும் ஊருல 10 ஆயிரம் கன்னுகளைக் கொடுத்தேன். அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், இஸ்ரேல்னு எங்கெங்கோ இருந்து வர்ற புள்ளைங்க இந்த வெவசாயிகிட்டே இருந்து பாடம் கத்துக்கிட்டுப்போவுதுங்க.
ஆனா, இந்தக் கதை எல்லாம் இப்போதான். ஆரம்பத்துல சுத்தி நின்ன அத்தனை பேரும் என்ன சொன்னான் தெரியுமா? தங்கசாமி ஒரு லூஸுப் பையன்னான். அப்புறம், தங்கசாமி மாதிரி நம்மளும் மரம் நட்டுக் காசு பார்க்கலாம்னு எல்லாரும் மரம் நட்டான். இங்கே நான் சுட்டிக்காட்டணும்னு நெனைக்குற விஷயம் ஒண்ணு உண்டு. மரம் வளர்க்குறதுக்கும் குறுங்காடு வளர்க்குறதுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. மரம் வளர்க்குறது நீங்க ஒரு வீடு கட்டுற மாதிரி; குறுங்காடு வளர்க்குறது ஒரு அரண்மனையையே கட்டி எல்லாருக்கும் இடம் கொடுக்குற மாதிரி. ஒரு ஆச்சரியம் என்னன்னா, வீடு கட்டுறதைவிட அரண்மனை கட்டுறதுதான் எளிமையான விஷயம்கிறதுதான். மரம் வளர்க்குறது ஒரே மாதிரி மரங்களா பத்திவிடறது. குறுங்காடு வளர்க்குறது எல்லா வகை மரங்களுக்கும் இடம் கொடுக்குறது.
மரங்கள்ல பூமிக்குச் சத்து கொடுக்குற மரங்களும் உண்டு; பூமிகிட்டே இருந்து சத்தை எடுத்துக்குற மரங்களும் உண்டு. குறுங்காடுங்கிறது இந்த ரெண்டு வகை மரங்களையும் உள்ளடக்கினது. மனுஷங்களுக்கான பூ மரங்கள் – பழ மரங்கள் மட்டும் இல்லை; பறவைங்க விரும்பி வர்ற மரங்களும் இங்கே இருக்கும். காரண காரியங்கள் இல்லாம வளர்க்குற மரங்களுக்கு இடையிலேயே செஞ்சந்தனம், தேக்கு, ரோஸ்வுட், வாழை, தென்னைனு காசு பார்க்க என்னென்ன மரங்கள் வேணுமோ அதுகளையும் நாம வளர்த்துக்கலாம்.
ஒரு முத்தின செஞ்சந்தன மரம் விலை இரண்டரை லட்சம். இங்கே பல நூறு செஞ்சந்தன மரம் நிக்குது. நான் எவ்வளவோ பெரிய கோடீஸ்வரன்? பாம்பு, பல்லியில ஆரம்பிச்சு எந்தெந்த மூலையில இருந்தோ இங்கே வர்ற பேர் தெரியாத பறவைகள் வரைக்கும் இந்தக் காட்டுல ஆயிரமாயிரம் உயிரினங்கள் வாழுது. எனக்கு எவ்வளவு சொந்தஞ்சோளி?
நம்ம வெவசாயிகளுக்கு நான் சொல்றது சின்ன யோசனைதான். உங்க நெலம் எவ்வளவு இருக்கோ, அதை மூணாப் பிரியுங்க. ரெண்டு பங்குல மாத்தி மாத்தி விவசாயம் பண்ணி நாசமாப் போங்க – அது உங்க உரிமை, கடமை. மிச்ச ஒரு பங்குல மட்டுமாவது கண்டிப்பா மரங்களை நடுங்க. உங்க சந்ததி பொழைச்சுக்கும். விவசாயிங்க மட்டும் இல்லை; அரசாங்கமும் இதை யோசிக்கணும். பெருகுற மக்கள்தொகையால கெடுற சுற்றுச்சூழலையும் உணவுத் தேவையையும் சமாளிக்கணும்னா, தரிசாக் கெடக்குற நெலத்திலெல்லாம் பல வகை மரங்களை நடணும்” – தீர்க்கமான குரலில் பேசுகிறார் தங்கசாமி.
பக்தர்கள் மலைக்கு மாலை போடுவதுபோல, தங்கசாமியும் மாலை போடுவது உண்டு. இது 18-வது வருடம். ஆண்டுதோறும் மாலை போட்டு, 48 நாட்கள் விரதம் இருந்து, குடுமியான்மலை, ஆடுதுறை என்று வேளாண் மையங்களுக்குச் சென்று விரதம் முடிக்கிறார். போகும் வழிநெடுக குறுங்காடு பிரச்சாரம். “இந்த நாடு விவசாயிகளின் நாடு; இந்த நாட்டின் மறுமலர்ச்சி கிராமங்களில் இருந்துதான் தொடங்கும்” என்கிற காந்தியின் வார்த்தைகள்தான் தங்கசாமியின் இயக்கத்துக்கான ஆதார சுருதி. தன்னுடைய பயணத்தில் தங்கசாமி தவறாமல் வலியுறுத்தும் காந்தியின் வார்த்தைகள் இன்னும் சிலவும் உண்டு: “எல்லாருடைய ஆசையையும் நிறைவேற்றும் வல்லமை இந்த பூமிக்கு உண்டு; ஆனால், எல்லாருடைய பேராசையையும் நிறைவேற்றும் திராணி அதற்குக் கிடையாது!”
சமஸ் – தொடர்புக்கு: writersamas@gmail.com


பதினைந்து ஆண்டுகளுக்கு முன், செப்டம்பர் 27ல், மக்கள் தங்கள் இணைய உலாவில், கூகுள் தேடுதளத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். அப்போது ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் இல்லை; குரோம்புக் பயன்படுத்தி யாரும் வீடியோ பார்க்கவில்லை; கூகுள் கிளாஸ் அணிந்து பாட்டு கேட்கவில்லை; அல்லது ஹாட் பலூன் தரும் இணைய இணைப்பில் தேடலை மேற்கொள்ளவில்லை. சாதாரண தேடு தளம் தரும் நிறுவனமாக, 15 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப் பட்ட கூகுள் நிறுவனம், இன்று உலகில் மிகச் சிறந்த சக்தியும் தொழில் நுட்பமும் கொண்ட நிறுவனமாக, ஆக்டோபஸ் போல பல திசைகளில் தன் செயல்பாட்டினைக் கொண்டுள்ளது. உலகின் பல கோடி மக்கள் குறித்த தகவல்களைத் தன்னகத்தே கொண்ட ஒரே நிறுவனம் இதுவாகத்தான் இருக்கும். இந்த உலகம் மட்டுமின்றி, பிரபஞ்சம் குறித்த தகவல்களைத் தன்னிடத்தே வைத்திருப்பதிலும், விளம்பரம் வழியே வருமானம் பெறுவதிலும், கூகுள் நிறுவனத்தை மிஞ்ச இன்று எந்த நிறுவனமும் இல்லை. பலூன் வழியே இன்டர்நெட், ட்ரைவர் இல்லாத கார், கண்களின் அணியும் கம்ப்யூட்டர் என கூகுள் செல்வதைப் பார்த்தால், “”என்னிடம் வா, உன் வாழ் நாளை 10 ஆண்டுகள் நீட்டித்துத் தருகிறேன்” என்று கூகுள் சொன்னாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.
இணையம் என்பது புரியாத புதிராகவும், குழப்பமான குவியலாக இருந்ததை, இதில் நீங்கள் மதித்துப் போற்ற வேண்டிய விஷயங்கள் உள்ளன என்று மக்களை ஏற்றுக் கொள்ள வைத்தது கூகுள்.
இணையத்தில் நம் அன்றாட பிரச்னைகளுக்கான தீர்வுக்காக அணுகியபோது, நம் சமூகத் தொடர்புகளை, நண்பர்களுடான உறவு கொண்டாடும் அஞ்சல்களை, அழகாக அடுக்கி வைத்து நாம் பயன்படத் தந்தது. நம் பேச்சுக்களை டெக்ஸ்ட்டாக மாற்றித் தந்தது. உலகில் நாம் எங்கு இருக்கிறோம்; எங்கெல்லாம் போக ஆசைப்படுவோம் என்று எடுத்துக் காட்டியது. நாம் பயணிக்கும்போது, நாம் செல்ல வேண்டிய பாதையைக் காட்டி, எடுத்துச் சொல்லி, வழிகாட்டியது. எல்லாவற்றிற்கும் மேலாக, நம்மைப் பற்றிய தகவல்களை ஆய்வு செய்து, நம் எதிர்காலத் தேவைகளும், விருப்பங்களும் என்னவாக இருக்கும் என்று எடுத்துக் காட்டுகிறது.
உலகக் குடிமக்கள் அனைவரையும் வளைத்துப் போட்டு, அனைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான நிறுவனமாக கூகுள் எப்படி வளர்ந்தது? அமெரிக்காவின் மென்லோ பார்க் என்ற இடத்தில், லாரி பேஜ் மற்றும் செர்கே பிரின் ஆகிய இருவரால், சூசன் ஓஜ்சிக்கி என்பவரது வீட்டின் கார் நிறுத்துமிடத்தில், 1998ல் தொடங்கப்பட்ட கூகுள் நிறுவனம், இன்று உலகளாவிய நிறுவனமாகத் தன் 15 ஆவது ஆண்டின் நிறைவு விழாவினைக் கொண்டாடியது.
தேடுதல் வர்த்தகத்தில், கூகுளை நெருங்க, மைக்ரோசாப்ட் எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை. பல கோடி டாலர்கள் செலவில் தன் பிங் (Bing) தேடல் தளத்தினைத் தொடர்ந்து மாற்றி அமைத்து வருகிறது. ஆனாலும், அமெரிக்காவில் தேடல் வர்த்தகத்தில் 18 சதவீதப் பங்கினையே பெற முடிந்தது. கூகுள் அமெரிக்கா வில் 70 சதவீதப் பங்கினையும், உலக அளவில் 90 சதவீதத்தையும் கொண்டு வேகமாக முன்னேறியும் வருகிறது.
பதினைந்து வயது நிரம்பிய கூகுள், தொடர்ந்து முன்னேறுகையில், பல ஆண்டுகள் டிஜிட்டல் உலகில் கொடி நாட்டிய மைக்ரோசாப்ட், மொபைல் சாதனங்களில் ஏற்பட்ட மாற்றத்தை கோட்டைவிட்டதால், இன்னும் எழுந்து வர இயலாமல் தவிக்கிறது. கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் இயங்கு தளம், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். தளத்துடன் இணைந்து, மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் மொபைல் போன் திட்டங்களைத் தகர்த்தது. மைக்ரோசாப்ட் பெற்ற வெற்றிமுனைகளையும், மேற்கொண்ட தவறுகளையும், கூகுள் பாடமாக எடுத்துக் கொண்டு தன் திட்டங்களை வகுத்தால், தோல்வியின்றி தொடரும் என்பதில் சந்தேகமில்லை.
கூகுள் கடந்து வந்த பாதை:
நவம்பர் 1998: கூகுள் தன் இணையதளத்தினை http://google.stanford.edu என்ற முகவரியில் தொடங்கியது. ஐ.பி.எம், இண்டெல் மற்றும் சன் நிறுவனங்கள் இலவசமாகக் கொடுத்த சாதனங்களுடன், தன் நிறுவனத்தைத் தொடங்கியது கூகுள். சன் மைக்ரோசிஸ்டத்தின் துணை நிறுவனர் பெக்டால்ஷிம் ஒரு லட்சம் டாலர் நிதி அளித்து உதவி செய்தார்.
ஜனவரி 1999: கூகுளின் சோதனைத் தளம் http://alpha.google.com என்ற முகவரியில் இயங்கத் தொடங்கியது. பின்னர் Google.com என்ற முகவரிக்கு மாறியது.
ஏப்ரல் 1999: தன் அலுவலகத்தினைப் புதிய இடத்திற்கு மாற்றியது.
மே 2000: கூகுள் உலகளாவிய அளவில் தன் சேவையை நீட்டித்தது. பயனாளர்கள், பிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலியன், ஸ்வீடிஷ், பின்னிஷ், ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ், டச், நார்வேஜியன் மற்றும் டேனிஷ் ஆகிய மொழிகளில் தங்கள் தேடல்களை மேற்கொள்ள கூகுள் உதவியது.
ஜூலை 2000: கூகுள் நூறு கோடிக்கும் மேலான இணைய தளங்களைப் பட்டியல் இட்டு, தகவல்களைத் தர முடிந்தது.
ஆகஸ்ட் 2000: எங்களுடன் விளம்பரப் படுத்துங்கள் என்ற லிங்க்கை கூகுள் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது. கூகுளில் தேடல் களின் நாளொன்றின் எண்ணிக்கை, ஒரு கோடியே 30 லட்சமாக உயர்ந்தது.
அக்டோபர் 2000: AdWords என்று சொல்லப்படுகிற விளம்பரச் சொற்கள், கூகுள் இணைய தளத்தில் வரத் தொடங்கின.
ஜூலை 2001: கூகுள் குரூப் தொடங்கப்பட்டது. தேஜா நியூஸ் என்ற நிறுவனத்தை கூகுள் வாங்கியது.இது செய்திகளைச் சேர்த்து வைத்துப் பயன்படுத்தும் நிறுவனமாகும்.இதனை groups.google.com என்ற தன் நிறுவனப் பிரிவிற்கு அளித்து, தன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த வழங்கியது.
பிப்ரவரி 2002: கூகுள் ‘Search Appliance’ என்ற தேடல் வகையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம அனைத்து இணைய டாகுமெண்ட்களும் அலசப்பட்டு, தொகுப்பு பட்டியல் உருவாக்கப்பட்டு தரப்பட்டன. மைக் ரோசாப்ட் ஆபீஸ் டாகுமெண்ட்ஸ் மற்றும் பி.டி.எப். பைல் உட்பட பலவகையான பைல் வகைகள் இதன் கீழ் ஆய்வுக்கும் தொகுப்புக்கும் எடுத்துக் கொள்ளப்பட்டன.
நவம்பர் 2002: Google Answers சேவை வெளியானது. கூகுள் சலித்துத் தேடிக் கண்டறிந்த 500 வல்லுநர்களும், அறிஞர்களும், வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு 24 மணி நேரத்தில் பதில் அளிக்கும் சேவை இது. இதற்கு கேள்வி ஒன்றுக்கு 2.50 டாலர் கட்டணம். 24 மணி நேரத்தில் விடை கிடைக்கும்.
மார்ச் 2003: Business Solutions தொடங்கப்பட்டது. நிறுவனங்களின் செயல்பாட்டிற்கு இந்த தீர்வு முறை மிகவும் உதவி வருகிறது.
மார்ச் 2004: Froogle அறிமுகமானது. நுகர்வோர் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் பொருட்கள் பட்டியல், வாடிக்கையாளர்களுக்குக் கிடைத்தது. பின்னர் 2007ல் இது Google Product Search எனவும், 2012ல் Google Shopping எனவும் பெயர் மாற்றம் பெற்றது.
பிப்ரவரி 2005: Google Local வெளியானது. வாடிக்கையாளர்கள், தாங்கள் வசிக்கும் இடங்களில், தங்களுக்குத் தேவையான வர்த்தகத் தகவல்களைப் பெற இந்தப் பிரிவு உதவுகிறது.
ஏப்ரல் 2006: கூகுள் மேப்ஸ் (Google Maps) அறிமுகமானது. டிஜிட்டல் உலகில் புதிய சகாப்தத்தினை இது ஏற்படுத்தியது. Google Local இதனுடன் இணைக்கப்பட்டது.
ஆகஸ்ட் 2006: கூகுள் வீடியோ (Google Video) உருவாக்கப்பட்டுச் சோதனை முறையில் தரப்பட்டது. உலகின் முதல் ஆன்லைன் வீடியோ வர்த்தக மையமாக இது பெயர் பெற்றது. டிவி நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் டாகுமெண்ட்ரி படங்களை இதன் மூலம் தேடிப் பெற முடிந்தது. கூகுள் வீடியோ ஸ்டோரில், படங்களை விற்கலாம், வாங்கலாம், வாடகைக்கு எடுக்கலாம். அக்டோபர் 2006ல், யு ட்யூப் வாங்கப்பட்டு, அதனுடன் கூகுள் வீடியோ இணைக்கப்பட்டது.
மே 2007: கூகுள் இணைய தளத்திற்கு புதிய இண்டர்பேஸ் தரப்பட்டது. இதுவரை சர்ச் கட்டத்தின் மேலாகத் தரப்பட்ட லிங்க்ஸ் அனைத்தும், மேல் இடது பக்கம் கொடுக்கப்பட்டன. Maps, Labs, Patents, Reader, Scholar மற்றும் Finance போன்ற லிங்க்குகள் இடம் பெற்றன.
செப்டம்பர் 2009: யூசர் இண்டர்பேஸ் மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டது. I’m Feeling Lucky சர்ச் பாக்ஸிலிருந்து தள்ளி இடம் பெற்றது.
நவம்பர் 2011: Google + அறிமுகப்படுத்தப் பட்டது. முதலில் அழைப்பு பெற்றவர்களுக்கு மட்டும் எனச் செயல்படத் தொடங்கி, பின்னர், செப்டம்பர் 2011ல், அனைவருக்கும் தரப்பட்டது.
செப்டம்பர் 2013: கூகுள் தன் 15 ஆவது ஆண்டுவிழாவினைக் கொண்டாடியது. கூகுளின் புதிய தேடல் முறையாக “”ஹம்மிங் பேர்ட்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில், கம்ப்யூட்டர் மற்றும் பிற இணையத் தொடர்பு சாதனங்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. வலைத் தளங்களின் எண்ணிக்கையும் வளர்ந்துள்ளது. எனவே, இந்த தேடல் முறை, மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாலெட்ஜ் கிராப் (Knowledge Graph) என்ற ஒரு தேடல் முறையை முன்பு அறிமுகப்படுத்திய கூகுள், தற்போது அதன் மேம்பாடடைந்த தொழில் நுட்பமாக இதனைத் தந்துள்ளது.
source >>>>>computer malar from Dinamalar….
natarajan

Malala Yousafzai, the 16-year-old Pakistani advocate for womens rights and access to education, appeared on the Daily Show last night, ahead of Friday’s pending announcement for the 2013 recipient of the Nobel Peace Prize.
Her answer to one of Jon Stewart’s questions left him speechless.
An outspoken critic of the Taliban’s tactics in her native Swat Valley from a young age, Malala was the subject of an attempted assassination at the hands of a Taliban gunman because she was unafraid to speak out.
Then, at just 14 years old, a Talib fighter boarded her bus, pointed a pistol at her head, and pulled the trigger. But she survived, made a full recovery in England, and has become and transformative figure in human rights.
Now, she is poised to become the youngest Nobel Peace laureate ever.
In the key moment of the interview, Stewart asked her how she reacted when she learned that the Taliban wanted her dead. Her answer was absolutely remarkable (emphasis added):
I started thinking about that, and I used to think that the Talib would come, and he would just kill me. But then I said ‘if he comes, what would you do Malala?’ then I would reply to myself, ‘Malala, just take a shoe and hit him.’ But then I said ‘if you hit a Talib with your shoe, then there would be no difference between you and the Talib. You must not treat others with cruelty and that much harshly, you must fight others but through peace and through dialogue and through education.’ Then I said I will tell him how important education is and that ‘I even want education for your children as well,’ and I will tell him, ‘that’s what I want to tell you, now do what you want.’
source:::::BusinessInsider Australia
natarajan