” மஹா பெரியவர் சொன்ன மணியான வார்த்தைகள் …”

Goddess Kamakshi and Maha Periyava Maniyam ....jpg
நாம் வெள்ளைக்காரர்கள் அல்ல. ஜனவரி முதல் நாள் எந்த விதத்திலும் நமது புத்தாண்டு அல்ல. ஆனால் பல நூறு ஆண்டுகள் வெள்ளையர் ஆண்ட நாடு இது. அவர்கள் அறிமுகப்படுத்திய பழக்க வழக்கங்கள் இன்றும் நம்மை விட்டு போகவில்லையே. ஆங்கிலத்தில் வீட்டிலேயே பேசும் தமிழ்க்குடும்பங்கள் அதை நாகரிகமாக கருதுகிறோமா? தாய்மொழி தள்ளி வைக்கப்படுவது ஏன்? அதன் சிறப்பு ஏன் புரியவில்லை? கொஞ்சம் கொஞ்சமாக நாம் மேற்கு நோக்கி ஏன் நகர்கிறோம்? நாம் என்ன காட்டு மிராண்டிகளா இன்னும்? எனக்கு இதற்கெல்லாம் விடை தெரியாது. ஏனெனில் நானும் கும்பலில் ஒருத்தன் தானே.

 ஒரு உருப்படியான விஷயமும் தருகிறேனே. நான் தரவில்லை இந்த விஷயம். மகா பெரியவா உங்களுக்கு தந்தது.  

 

 

1. உடம்பினால் நல்ல காரியம் செய்யவேண்டும். கோயிலுக்குப் போய் பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும். தண்டம்சமர்ப்பித்தல் என்று சமஸ்காரத்தைச் சொல்லுவார்கள். தடியைப்போல் விழுவது தான் அது. இந்த உடம்பு நமதன்று, அவருடையது என்று நினைத்து அவர் சந்நிதியில் போட்டு விட வேண்டும்.

2. இந்த ஜென்மத்திற்குப் பின்பும் உபயோகப்படக் கூடிய சில காரியங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம். விபூதி இட்டுக் கொள்ளுதல், ருத்ராக்ஷம் அணிதல், ச்ராத்தம் செய்தல் முதலிய காரியங்கள் நாம் எப்பொழுதும் சௌக்யமாக இருப்பதற்கு உதவுங்காரியங்கள்.

3. நாமாவும் ரூபமும் இல்லாத மதம் நமது மதம். பேர் ஏன் இல்லை? அடையாளம் ஏன் இல்லை? மற்ற மதங்களுக்கெல்லாம் இருக்கிறதேஎன்று ஒரு சமயம் யோசித்துப் பார்த்தேன். அப்புறம் எனக்கு நிரம்ப சந்தோஷமாக இருந்தது. பேரில்லாமல் இருப்பது ஒரு கௌரவம் என்பது ஏற்பட்டது.

4. நம்முடைய மதம் எவ்வளவோ யுகங்களாக நீடித்து வாழ்ந்து வருகிறது. நமக்குத் தெரியாமல் ஏதோ ஒன்று இதைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. எவ்வளவோ வித்யாசங்கள் இருந்தாலும் இந்த மதம் அழியாமல் நிற்கிறது. லோகம் புரண்டு போனாலும் நம்முடைய கடமைகளைச் செய்து கொண்டு பயமின்றி அன்புடன் சாமாண்ய தர்மங்களை நன்றாக ரக்ஷித்து விசேஷதர்மத்தைக் கூடியவரை ரக்ஷிக்க வேண்டும். அதற்குரிய சக்தியைப் பகவான் அளிப்பாராக.

5. மூன்று மூர்த்திகளுக்கும் மேலே அதீதராகப் பரமசிவன் இருக்கிறார். அவர் ப்ரம்மாவுக்கு அனுக்ரஹம் பண்ணுகிறார். காமேச்வரனாக அருள் புரிகிறார். பராசக்தி காமேச்வரியாக அனுக்ரஹிப்பாள். பரமேச்வரனுடைய அனுக்ரஹத்தால் ப்ரம்மா வேதங்களை அறிந்து கொள்கிறார். நான்கு வேதங்களையும் நான்கு முகத்தில் சொல்லிக் கொண்டு சிருஷ்டியைச் செய்து கொண்டிருக்கிறார்.

6. வேதத்திலிருப்பதை எல்லோருக்கும் நன்றாக விளங்க வைப்பது பதினெட்டு புராணங்கள். பதினெட்டு உப புராணங்கள் வேறேஇருக்கின்றன. பதினெட்டு புராணங்களும் சேர்ந்து நான்கு லட்சம் கிரந்தம். ஒரு கிரந்தம் என்பது 32 எழுத்துக்ள் கொண்டது. பதினெழு புராணங்கள் மூன்று லட்சம் கொண்டவை. மிகுதியுள்ள ஒரு லட்ச கிரந்தம் ஸ்காந்த புராணம். பரமசிவனைப் பற்றிச் சொல்பவை பத்து புராணங்கள், அவைகளுள் ஒன்றே லட்சம் கிரந்தம் உடையது.

7. பாபத்தை ஒரேக்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு வஸ்து உண்டு. இரண்டு எழுத்துக்களாலான பெயர் அது. வேதங்களின் ஜீவரத்னம் அதுவே. கோயிலில் மஹாலிங்கம் போலவும் தேகத்தில் உயிர் போலவும் அது வேதங்களின் மத்தியில் இருக்கிறது. (”சிவ” என்ற இரண்டு எழுத்துக்களே அது) அதை ஒருதரம் சொன்னால் போதும். வேறு ஒரு காரியத்துக்கு நடுவிலும் சொல்லலாம். சொன்னால் அந்த க்ஷணத்திலேயே பாபத்தைப் போக்கிவிடும்.

8. வேதங்களுள் யஜுர் வேதம் முக்கியமானது. அதற்குள் அதன் மத்திய பாகமாகிய நாலாவது காண்டம் முக்கியமானது. அதற்குள்ளும் மத்திய பாகமான நாலாவது ப்ரச்னம் முக்கிய மானது. அதுதான் ஸ்ரீருத்ரம். அதற்குள்ளும் ‘நம: சிவாய’ என்ற பஞ்சாக்ஷர வாக்கியம் மத்தியில் இருக்கிறது. அதன் மத்தியில் ‘சிவ’ என்ற இரண்டு அக்ஷரங்கள் அடங்கியுள்ளன. இதையே ஜீவரத்னம் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இந்த அபிப்பிராயத்தை அப்பய்ய தீக்ஷிதர் ப்ரம்மதர்க்க ஸ்தவத்தில் சொல்லியிருக்கிறார்கள். அந்த ப்ரம்மம் சிவஸ்வரூபம் என்று தெரிகிறது.

9. அப்படிப்பட்ட ஸ்வரூபத்தை ஆராதிப்பதற்கு அடையாளமாகச் சிவபக்தர்கள் எல்லோரும் ஐந்து வித காரியங்களைச் செய்து கொண்டிருக்க வேண்டும். அவைகளாவன: (1) விபூதி தரித்தல், (2) ருத்ராக்ஷம் அணிதல், (3) பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜபம் செய்தல், பஞ்சாக்ஷர மந்திரம் உபதேசமாகாதவர்கள் ‘சிவ’ என்ற பதத்தை ஜபம் செய்தல், (4) வில்வ தளத்தால் பரமேச்வரனைப் பூசித்தல், (5) இருதயத்தில் சதா சிவத்யானம் செய்தல் இவைகள் ஒவ்வொன்றும் ஈச்வரனுக்கு விசேஷப்ரீதியைக் கொடுக்கக் கூடியது.

(குறிப்பு: பஞ்சாக்ஷர மந்திரத்தை உபதேச பெற்று ஜபம் செய்தல் சிறப்பு. எனினும் உபதேசம் பெறாதவரும் இம்மந்திரத்தைத் தாராளம் சொல்லலாம். ”கொல்வாரேனும், குணம் பல நன்மைகள் இல்லாரேனும் இயம்புவராயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயவே” – சம்பந்தர்.)

10. பரமேச்வரனுடைய கீர்த்தியை நாம் வாக்கினால் சொல்லுவதனாலும் கேட்பதனாலும் பவித்திரர்களாக ஆகிறோம். அவருடைய ஆக்ஞையை யாரும் மீறமுடியாது. அகம்பாவமாக இருக்கும்போது அவர் சிக்ஷிக்கிறார். குழந்தைகள் ஏதாவது தப்பு செய்தால் நாம்அடிக்கிறோம். அதுபோல பரமேச்வரன் தேவதைகளை சிக்ஷித்தார். ஹாலஹால விஷம் பாற்கடலில் உண்டானபொழுது அதைச் சாப்பிட்டு ரக்ஷித்தார். சகல தேவதைகளும் பரமேச்வரனுடைய குழந்தைகள்.

11. பரமேச்வரன் ஓங்காரம், ஸ்வரூப ப்ரம்மமும் ஓங்காரந்தான். அதனுடைய அர்த்தத்தை விசாரிக்கும் ஓர் உபநிஷத்தே தனியாக இருக்கிறது. அதற்கு மாண்டூக்யோபநிஷத் என்று பெயர். அதில் ‘சாந்தம் சிவம் அத்வைதம் சதுர்த்தம் மன்யந்தே’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. சிவஸ்வரூபம் தான் பரப்பிரம்மம். ப்ரதோஷ காலத்தில் ஈச்வர தரிசனம் செய்ய வேண்டும். ஈச்வரன் கோயிலில் ப்ரதோஷ காலத்தில் எல்லாத் தேவர்களும் வந்து ஈச்வர தரிசனம் செய்கிறார்கள்.

12. சாங்க்ய சூத்திரத்தில் மூன்று கண் உள்ளவன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அமரமும் அப்படியே சொல்லுகிறது. லோகத்தில் ஈச்வரன் என்ற சப்தம் சிவனுக்கே வழங்கப்படுகிறது. அவன் மஹாபுருஷன், ப்ரம்ம சூத்திரத்தில் ‘சப்தாதேவப்ரமித’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஈசானன் என்னும் சப்தத்திற்கு எது அர்த்தமோ அதுதான் பரமேச்வர ஸ்வரூபம்.

13. நம்முடைய ஆசார்ய ஸ்வாமிகள் ப்ரச்நோத்தர ரத்ன மாலிகா என்ற க்ரந்தத்தில் ஒரு கேள்வி கேட்கிறார். ‘கோ ப்ராம்மணை ருபாஸ்ய:?’ ‘காயத்ரி அர்க்காக்னி கோசர: சம்பு:’ எந்த வஸ்து காயத்ரி, அக்னி, அர்க்கன் (சூரியன்) என்னும் மூன்றிலும் ப்ரகாசிக்கிறது? சிவன் தான். காயத்ரியின் பரமதாத்பர்யமாயிருப்பவர் அவரே. சூரியனிடத்தில் பிரகாசிப்பவரும் அவர் தான். ஸ்ரீருத்ரத்தில் பரமேச்வரன் அக்னி ஸ்வரூபியாக இருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எனவே இந்த மூன்றிலும் பரமேச்வரனை ஆராதிக்க வேண்டும்.

14. விவாஹ காலத்தில் அம்பாளை அவசியம் ஆராதிக்க வேண்டும். ருக்மணி ஸ்ரீகிருஷ்ணன் பர்த்தாவாக வரவேண்டுமென்று அம்பிகையை ஆராதித்தாள். அம்பிகையின் ஆராதனத்தால் பதிபக்தியும் குருபக்தியும் உண்டாகிறது. அதற்காகத்தான் ருக்மணி பூஜை செய்தாள்.

15. ஜகத்துக்குத் தாயாகவும் கருணையுடையவளாகவும் இருக்கும் பரதேவதையிடம் பக்தி இருக்க வேண்டும். எப்படி குழந்தைக்கு வேண்டியதைத் தாய் தருவாளோ அப்படி அம்பிகை லோகத்தில் வித்தை, செல்வம் முதலியவைகளை அடையச் செய்து பின்பு தானாகப் பழுத்துப் பரமானந்தத்தைப் பெறும்படி அனுக்ரஹம் செய்வாள் 

 ​.

source::::input from a friend of mine…

natarajan

 

 

Message For the Day…”Keep Your Heart Sacred and Pure…”

Who is a bad person? Anyone who sees evil in good is bad; stay away from them. If you join bad company, knowingly or unknowingly, you will lose good qualities. Many have reaped poor fate due to bad company. Who is a good person? Anyone who sees good, even in a bad person, is good. You must develop friendship with the good. There may be some evil qualities in you; do not worry or become weak because of this. Develop good qualities increasingly. God will always be in you, with you, around you and will take care of you. Whatever task you undertake, discriminate carefully, follow the noble path and always do good acts. Keep your heart sacred and pure. Never fill it with bad thoughts and feelings. You must start early, drive slowly and reach safely. When you develop good qualities, your journey to the future will be smooth

 

Sathya Sai Baba

” சந்தர்ப்பங்களை நாம்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும் …”

சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. ஒரு பிரபல வாரப்பத்திரிகை ஆசிரியர் மஹானிடம் தனிமையில் பேசி தமக்கு ஏற்பட்டுள்ள சில சந்தேகங்களைப் போக்கிக் கொள்ள நினைத்தார், சந்தித்தார்.”நீ இப்போது என்னிடம் பேசலாம்” என்றார் மஹான் தமிழில்.

“சில விஷயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளவே நான் தங்களை சந்திக்க விரும்பினேன்” என்றார் ஆசிரியர் சுத்தமான தமிழில்.

“உன் தாய்மொழி என்ன?” முகத்தில் லேசாகப் புன்னகை தவழ மஹான் கேட்கிறார்; பின் அவரே தொடருகிறார். “உன் தாய் மொழி நிச்சயம் தமிழ்மொழியாக இருக்காது என்று எனக்குத் தெரியும்” என்கிறார். இதற்குக் காரணம் ஆசிரியர் சிரமப்பட்டுப் பேசிய தமிழ்தான்.

“தெலுங்கு” என்கிறார் ஆசிரியர்.

“நீ பிறந்த ஊர் எது?” என்று சுந்தரமான தெலுங்கில் கேட்டுவிட்டு, ஆசிரியரின் இளமைக்காலம், பெற்றோர், வாழ்க்கை, கல்வி, திருமணம், உத்தியோகம் – வேறு பல விஷயங்களில் இருந்த ஈடுபாடு போன்றவை பற்றி தெலுங்கிலேயே பேசி, ஆசிரியரையும் பேசவைத்தார்.

ஆசிரியர் இவற்றிற்கெல்லாம் பதில் சொன்னதால் அவர்களுக்கிடையே இருந்த இறுக்கம் சுத்தமாக மறைந்து போனது.

இந்த நேரத்தில் அங்கே வந்த ஒரு பக்தர் கன்னடத்தில் உரத்துப் பேசி ஆரம்பிக்கிறார். ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டே அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சுத்தமான கன்னடத்தில் பதில் சொல்கிறார்.

ஆசிரியருக்கு இதனால் ஏற்பட்ட வியப்பு மறைவதற்குள் இன்னொரு பக்தர் அங்கே வந்து மஹானை தனது தாய்மொழியான மலையாளத்தில் போற்றிப் புகழ்கிறார். இதனால் அவரது பேச்சுக்கு மஹான் ஒரு சிறு பிரசங்கமே செய்ய வேண்டியிருக்கிறது. அப்போது அவர் பேசிய மொழி மலையாளம்.

வருபவர்கள் எந்த மொழியில் பேசினாலும் அதே மொழியில் பதில் சொல்லும் மஹான் எந்தப் பள்ளியில் இந்த மொழிகளை படித்திருப்பார் என்று பத்திரிகை ஆசிரியர் வியந்து கொண்டிருக்கும்போதே, ஒரு பெரிய குழு அங்கே வருகிறது. அவர்கள் யாத்ரீகர்கள். அவர்களை அழைத்து வந்தவர் உள்ளூர் சம்ஸ்கிருத பண்டிதர். அவர் மஹானின் பேரில் சம்ஸ்கிருத பாஷையில் அழகான ஒரு கவிதையை வாசித்தார். மலையருவியின் நீர் வீழ்ச்சியைப் போன்ற சம்ஸ்கிருத பாஷையில் சொன்ன பாராட்டுரையைக் கேட்டு மகிழ்ந்த மஹானும், அவர்களுக்குப் பிடித்தமான சம்ஸ்கிருத பாஷையிலேயே பேசி அவர்களை ஆசீர்வதித்து பிரசாதம் கொடுத்து அனுப்பினார்.

அடுத்ததாக, அரசாங்கத்தின் கடிதங்களுக்கு ஆங்கிலத்திலேயே பதில் சொல்லி, எழுத வைத்து அதை சிப்பந்தியிடம் அப்போது அனுப்பி வைத்தார்.

ஆக, இந்தியாவின் புழக்கத்தில் உள்ள அவ்வளவு மொழிகளையும் மஹான் அறிந்து வைத்திருக்கிறார்.

ஆசிரியரும் இவரும் தொடர்ந்து பேச ஆரம்பிக்கும்போது இன்னொரு இடையூறு-வடநாட்டு யாத்ரீகர்கள் பலர், தங்களது உள்ளக்கிடக்கையை ஹிந்தியில் சொல்ல மஹான், அவர்களது சொந்த மொழியிலேயே ஹிந்தியிலேயே அவர்களுடன் பேசுகிறார். அவர்கள் போகும்போது அவர்கள் முகத்தில் காணப்பட்ட மகிழ்ச்சி ஆசிரியரைப் புல்லரிக்க வைக்கிறது.

அவர்கள் போனவுடன் மஹான் மெளனியாகிவிட்டார். பேச ஆரம்பிக்கலாம் என்று நினைத்த ஆசிரியருக்கோ இது அதிர்ச்சியைத் தந்தது. அப்போது திடீரென மஹான் சொல்கிறார்:

“இப்போது இந்துமத தர்மத்தில் பல குறைகள் இருக்கின்றன. அவைகளை அடுக்கிச் சொல்லிவிடலாம். ஆனால் அதன் நன்மைகளை ஆராய்ந்தால், வானத்து நட்சத்திரங்களைப் போல் அவை கணக்கிலடங்கா” என்றார்.

தொடர்ந்து மேலும் ஒரு இடையூறு –

ஆசிரியர் சொல்கிறார்:

“இன்று எனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று நினைக்கிறேன்”

மஹான் புன்னகை புரிந்தவாறு சொல்கிறார்:

“சந்தர்ப்பங்களை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். நாங்கள் நாளை மறுதினம் மதுரை செல்கிறோம். நீ அங்கே வரலாம். உனக்குத் தங்க வசதி செய்து கொடுக்கச் சொல்கிறேன்”.

“அவசியம் அங்கே வருகிறேன் ஸ்வாமிகளே” என்று ஆசிரியர் உத்தரவு பெற்றுக் கொள்கிறார். இந்த சம்பவத்தை சொல்வதற்குக் காரணம், ரட்சகரான மஹா பெரியவருக்கு எல்லா மொழிகளிலும் புலமையும் இருந்தது என்பதைச் சுட்டிக் காட்டத்தான். அந்த பத்திரிகை ஆசிரியரின் பெயர் ஏ.எஸ்.ராமன். அவர் அப்போது “இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆஃப் இண்டியா” என்னும் பிரபல ஆங்கில வார இதழின் ஆசிரியர்.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source::::www.periva.proboards.com
natarajan

Read more: http://www.periva.proboards.com/thread/6486/multilinguist-mahaperiyavaa-book-venkatasaam#ixzz2tAhXvmEu

Message For the Day…”Moderation is Very Essential For Happy Living …”

If the number of passengers in a bus is within the permissible limits, travel is safe. On the other hand if it is overloaded with people or luggage, its owner has to pay the fine imposed by the Road Transport Officer (RTO). Similarly, if you overload yourself with food or desires, the Officer of Virtues, will impose the fine of grief and ill-health on you; you might even be penalized by the Break Inspector, for lacking sense control and speeding up. Hence moderation is very essential for happy living – be it in food or desires. An overloaded truck driver will find it difficult to drive it up a steep-hill and at times, the consequences can be disastrous. If you want to progress and maintain good health consistently, it is imperative that you must not over indulge yourself. You will not be able to attain the elevated stage of bliss, if you eat more than what your body needs.

 

Sathya Sai Baba

Message For the Day…” What is SATWIK Service ? ‘…

With regards to service, you must be clear on what is Rajasik service andSatwik service. You may go to clean streets, build roads, dig wells or build houses, and do them all as service to the community. You may also go to a hospital and visit patients. Doing service in the name of ‘social work’ is not real service. Satwik service is that which gives real happiness. It requires that you serve any and every person as an embodiment of the Divine. Divinity (Narayana) is present in two forms amongst all people – wealthy (Lakshmi Narayana) or poor and needy (Daridra Narayana). A rich man may have any number of people to attend to him. But there would be no one to serve the destitute and disadvantaged. Treating the poor and needy as Divine embodiments and serving them lovingly is Satwik service.   

Sathya Sai Baba

” இங்கே வேலை செயரானே ஒரு பையன் குண்டுன்னு …”

‘அதுவொரு தீபாவளி சமயம்! எல்லோரும் புடவை, வேஷ்டி எல்லாம் கொண்டு வந்து தேனம்பாக்கத்தில் அவரிடம் கொடுப்பார்கள். அங்கே கிணற்றுக்குப் பக்கத்தில் ஒரு தொட்டி உண்டு. அதில் ஜவுளி வகையறா எல்லாவற்றையும் போட்டு மூடி வைத்துவிடுவோம்…”

– மீண்டும் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தில் துவங்கியது பாலுவின் உரையாடல்.

”குண்டு-ன்னு ஒரு பையன்… 18, 19 வயசு இருக்கும். இங்கே எடுபிடி வேலைகள் பார்த்துக்கொண்டிருந்தான் பெரியவாளுக்கு அவன் மேல ரொம்பப் பிரியம். ஒரு நாள் காலம்பர எங்களையெல்லாம் கூப்பிட்டுத் தொட்டியைக் காட்டினார். தொட்டி காலியாக இருந்தது; உள்ளே ஜவுளி எதுவும் இல்லை. எப்படி அத்தனையும் மாயமா மறைஞ்சு போச்சுன்னு எங்களுக்குத் தெரியலை. மகா பெரியவா எங்களைக் கூப்பிட்டு, நிறைய பட்சணம்லாம் வாங்கிட்டு வரச் சொன்னார். தீபாவளி அன்னிக்கு எண்ணெய் ஸ்நானம் பண்ண எண்ணெய் வேணுமே… அதையும் வாங்கிட்டு வரச் சொன்னார். எங்களுக்கு ஒண்ணுமே புரியலை. பட்சணம், நல்லெண்ணெய் வந்து சேர்ந்தது. பட்டாசு வேணும்னு சொன்னார் பெரியவா. அதுவும் வந்தாச்சு!

எல்லாவற்றையும் வாங்கி வைத்துக்கொண்டு, ‘இங்கே வேலை செய்றானே ஒரு பையன் குண்டுன்னு… அவனுக்கு வெறுமனே வேட்டியும் புடவையும் இருந்தா போறுமா, தீபாவளி கொண்டாட?! அதை மட்டும் வெச்சுண்டு, பாவம் அவன் என்ன செய்வான்? நல்லெண்ணெய், பட்சணம், பட்டாசு எல்லாம் கொண்டு போய்க் கொடுத்துட்டு வாங்கோ… சட்டுனு போங்கோ!’ என்றார் பெரியவா. அப்புறம்தான் எங்களுக்கு, புடவை- வேஷ்டிகளை எல்லாம் எடுத்துண்டு போனது குண்டுதான்னு தெரிஞ்சுது. ஆனா, பெரியவாளுக்குத் துளிக்கூட அவன் மேல கோபம் வரலை!” என்ற பாலு, சற்று இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்…

”பெரியவாளுக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை… முக்குறுணிக் கொழுக்கட்டை செய்து பிள்ளையாருக்கு நைவேத்தியம் பண்ணனும்னு…” என்றவர், அது பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

”மதுரை, திருச்சி, ராமேஸ்வரம்னு சில தலங்களில் முக்குறுணிப் பிள்ளையார் உண்டு. முக்குறுணின்னா… ஆறு படி அளவு. பெரியவா அரிசி அரைச்சுட்டு வரச் சொன்னார். பிரம்மசாரி ராமகிருஷ்ணன்கிட்ட ஐம்பது தேங்காயை உடைச்சு துருவிக் கொண்டுவரும்படி சொன்னார். பூரணம் பண்ணி ஒரே கொழுக் கட்டையா செய்யணும். பெரியவா ஆலோசனைப்படி எட்டு முழ வேட்டியில் கட்டி, வரதராஜ பெருமாள் கோயில்ல இருந்து பெரிய அண்டா கொண்டு வந்தோம். அன்னிக்கு காலைலேர்ந்து சாயங்கால வரைக்கும் கொழுக்கட்டை வெந்தது.

சரி… பிள்ளையாருக்கு நைவேத்தியம் பண்ணணுமே. கொழுக்கட்டையை பெரியவா முன்னாடி வைத்ததும்… ‘தேனம்பாக்கத்துல ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு. அங்க வாசல்படியில் வெச்சுட்டு வந்துடுங்கோ’ன்னார் பெரியவா. பக்தர்களும் அப்படியே செஞ்சாங்க. அங்க என்னடான்னா… கோயில் வாசல்ல பெரிய மூட்டை கணக்கா இருந்த அண்டாவைப் பார்த்ததும், ஊர் ஜனங்க என்னவோ ஏதோன்னு பதறிட்டாங்க. அப்புறமா, அது பிள்ளையாருக்கான நைவேத்தியம்னு தெரிஞ்சதும், கட்டைப் பிரிச்சிருக்காங்க. உள்ளே பிரமாண்ட கொழுக்கட்டை!

எல்லாருமா பிரிச்சு சாப்பிட்டதுக்குப் பிறகு, ‘சாமி, கொழுக்கட்டை நல்லா இருந்தது’ன்னு பெரியவாளை நமஸ்காரம் பண்ணினாங்க. பெரியவாளுக்கோ, பிள்ளையாருக்கு நைவேத்தியம் பண்ணணும்கற ஆசை நிறைவேறியதோட, ஜனங்களுக்கு அந்தக் கொழுக்கட்டையைத் தின்னக் கொடுத்த திருப்தி!” என்ற பாலு, அடுத்து ஒரு கிரகணத்தன்று நடந்த சம்பவத்தை விவரித்தார்.

”அந்த முறை பெரியவாளோட அனுஷ நட்சத்திரத்துலேயே கிரகணம் பிடிச்சது. கிரகணம் விட்டு ஸ்நானம் எல்லாம் முடிஞ்சதும், தானம் செய்ய உட்கார்ந்தார் பெரியவா. நிறைவா பசு மாடு கொடுக்கணும். திருவட்டீசுவரன்பேட்டை வெங்கட்ராமன், பசு மாட்டுக்குப் பதிலா மட்டைத் தேங்காயை எடுத்து வைத்தார்.

அதாவது, பசு தானம் செய்ய முடியலைன்னா அதுக்கு ப்ரீத்தியாக மட்டைத் தேங்காய் கொடுப்பார்கள். ஆனா, மகா பெரியவா கோவிச்சுக்கிட்டார். ‘என்னை ஏமாத்தப் பார்க்கறியா? மாட்டைக் கொண்டு வான்னா, நல்லதா ஒரு மாட்டைத்தான் கொண்டு வரணும்’னுட்டார். அப்புறம், எப்படியோ நல்லதொரு கறவை மாடாகக் கொண்டு வந்து நிறுத்தினாங்க. அதைத் தானம் கொடுத்த பிறகுதான் பெரியவாளுக்குத் திருப்தி! அதேபோன்று பூதானத்துக்கு ப்ரீத்தியா சந்தனக் கட்டை கொடுக்கலாம். ஆனால், அப்போதும் பெரியவா, கூடலூர் கல்யாண சுந்தரமய்யர் கொடுத்த ஒன்றரை ஏக்கர் நிலத்தை வேறு ஒருவருக்கு அப்படியே தானமாகக் கொடுத்துவிட்டார்!

விளாப்பாக்கம் என்ற ஊரில் குமரேசன்னு ஒரு பக்தர். அவர் குடும்பத்துல யாரோ பில்லி-சூன்யம் வெச்சுட்டாங்க. குளிச்சு உலர்த்தும் ஈரத்துணியும் தீப்பிடிக்குமாம். அவர் பெண்ணுக்குக் கண்ணைத் திறக்கவே முடியாது. ஜோசியம்லாம் பார்த்தும் பலனில்லை. அவர், தன் பெண்ணை பெரியவாகிட்ட அழைச்சுட்டு வந்தார். ‘யாரோ என் பெண்ணோட கண்ணைக் கட்டிட்டா! பெரியவாதான் அனுக்கிரகம் பண்ணணும்’னு கதறினார். பெரியவா, அந்தப் பெண்ணோட கண்ணையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தார். அப்புறம், அவளை துர்கை சந்நிதிக்கு அழைச்சுட்டுப் போகச் சொன்னார். அம்பாளுக்கு முன்னாடி நிறுத்தி, கண்ணைத் திறக்கும்படி சொன்னார். என்ன ஆச்சரியம்..! அவளால் கண்ணைத் திறக்க முடிஞ்சுது. கண்ணைத் திறந்ததும், எதிரே துர்கை தரிசனம்… சிலிர்த்துப் போயிட்டா. அவளுக்குப் பார்வை சரியானதோடு, அன்னியிலேர்ந்து வீட்டில் துணிமணிகள் தீப்பற்றி எரிவதும் நின்னு போச்சு!”

– பாலு சொல்லி முடிக்க, அந்தக் கருணைக் கடாட்சங்களை எண்ணி, நம்மையும் அறியாமல் காஞ்சி தெய்வத்தை தொழுது பணிகிறது நம் உள்ளம்….

source::::www.periva.proboards.com

natarajan..

Read more: http://www.periva.proboards.com/thread/625/thenambakkam-incidents#ixzz2t0Olcy9I

Message For the Day…” whatever Happens is only For Your Good …”

 

When you face troubles develop courage in yourself. Do not think, “Why should I be troubled like this?” Develop broadmindedness. Firmly believe that whatever happens is only for your good. Never forget that trouble, loss, illness, etc. come only for your good. Do not see bad in good. Always see good in bad. Light has much more value when there is darkness around. The value of joy is realized only when there are troubles. During the rainy and winter season, we want heat. In summer times, we look for coolness. You need both heat and cold, depending upon the circumstance. No matter in which situation you are, you must develop good feelings. You must start this habit of always having noble feelings from a very young age. Whatever thoughts and feelings you develop then, will last forever. Develop good thoughts and give up bad company.

 Sathya Sai Baba

Message For the Day…” With Pure Thoughts , You will Naturally Have Pure Feelings…”

It is necessary to fill the room where you live or study with a Satwikatmosphere. The pictures or objects you see must be filled with peaceful and loving thoughts. Objects that arouse agitation and bad thoughts should have no place in your living area. The room must be clean and free from anything that is impure. Along with a clean room, your thoughts and feelings must be pure. Only then you can get the full benefit of a clean room and a good family. If you must develop Satwikfeelings, your vision must be pure. All creation (srishti) is based upon your sight (drishti). It is only when you have wrong vision that you develop wrong thoughts. With pure thoughts, you will naturally have pure feelings. Never make any mistake or offence that you will not tolerate if others do unto you.

 

Sathya Sai Baba

Message for the Day…” Without Troubles One Will Not Realize the Value of Comfort”…

If you work for 24 hours in an air-conditioned place, you will take this for granted and not realize its value. But if you work for four hours in the Sun, and then sit in an air-conditioned room, you will recognize its value. Without heat, there is no value for the air-conditioner. So too, without troubles, we will not realize the value of comforts. Only when we suffer, we realize what is joy! At times, to relieve the pain and suffering in one part of your body, the doctor may perform an operation. The surgery is a painful procedure. However, without undergoing that short term pain, you cannot remove the long term suffering. That is why the scriptures clearly call out that happiness cannot be derived from happiness. Without goodness, life has no meaning. Without sorrow, there is no value for happiness.

 

Sathya Sai Baba