|
Even in selecting a Guru, use your discrimination. Not all clouds are rain bearing. A true Guru will be able to attract His seekers from afar, merely by His personality. He need not be talked about in glowing terms. His presence will be felt and aspirants will rush towards Him like bees towards a lotus in full bloom. Take up the path of spiritual practice, very enthusiastically. Half-hearted halting steps will not yield fruit. It is like cleaning a slushy area by slowly moving a stream of water. If the currents in the stream flow slowly, the slush cannot be cleared. The stream of water must flow full and fast, driving everything before it, so that the slush is cleared completely–
Divine Discourse Aug 2 1958
|
message for the day
“Parabrahmam in Vibuthi Snaanam ” ….A Beautiful Painting !!!!

Looking at the image, my thoughts ran like this:
We have very often heard the word Parabrahmam; He Himaself had talked about it many a times in His discourses. Another thought that occurred to me was the five types of ‘SNAANAA’ ( BATHING) He talks about ( DHEYVATHTHIN KURAL—-Vol. 3–pp 499 to 502). One of them happens to be ‘VIBHUTHI SNAANAM’
Looking at this image, I am overwhelmed by the sight of HIM , His body fully soaked in Vibhoothi and sitting as a Parabrahmam, meditating for the good of this world!
Hope you like the picture.
source ::::periva.proboards.com
Natarajan
Read more: http://periva.proboards.com/thread/4454/mahaperiava-jayanthi-2013-25th/#ixzz2VWR1Udb1
Divine Image of The Day… Shirdi Sai….

Message For The Day….Hold On to HIM …You Will Never Slip ….
This microphone before Me, must have been made by someone, is it not? The creator is not visible or known to you presently, but you have no doubts of this person’s existence. Besides, you are confident that this person understands and knows fully well all the components, characteristics, features and effective functioning of this microphone. So too, there must be a Creator for this Universe and He must be know all about it. This Universe is composed of the five elements, and He is their Manipulator, fully aware of their subtle characteristics and properties. That Creator is your Indweller (Kshetrajna), who knows His Field (Kshethra). Hold on to Him and live your lives; you will not slip. Build your activities on that basis, your career will not cave in. You will develop courage and faith in yourself and in your destiny.
– Divine Discourse, Aug 16, 1964

“திருக்குறள் படிக்க வேண்டாம் “…என்று மகாபெரியவர் சொன்னாரா என்ன !!!!
ஒரு பத்திரிக்கைக்காரன் என்கிற முறையில் பரமாச்சாரியார் பற்றி இரண்டு முக்கிய செய்திகளில் நான் பங்கு பெற நேர்ந்தது.
ஒன்று – நான் நிருபராக ஒரு மாலை பத்திரிக்கையில் பணிபுரிந்த போது . வயது இருபது தான் இருக்கும்.
அடுத்தது – assosiate editor ஆக வார இதழில் பணிபுரிந்தபோது !
அது 1962 என்று நினைக்கிறேன் . அன்று ஞாயிற்றுக்கிழமை . மாலை பத்திரிக்கைக்கு பரபரப்பாக ஏதாவது வேண்டுமே! அன்று நானும் நியூஸ் எடிட்டரும் என்னன்னவோ செய்தும் – பெரிய சேதி கிடைக்கவில்லை .
ஒரு மணி . எல்லாரும் சாப்பிட்டுக்கொண்டிருக்க , நான் தபாலில் வந்தவைகளை பிரித்து பார்த்துக்கொண்டிருந்தேன். மத சம்பந்தமான ஒரு இதழ் . பிரித்து பார்த்தேன். அதிர்ச்சி அடைந்தேன்.
‘திருக்குறளை படிக்க வேண்டாம்’ என்று பரமாச்சாரியர்கள் சொன்னதாக ஒரு செய்தி . அது மார்கழி மாதம்.
திருப்பாவையில் – பாவை நோன்பு கடைபிடிப்பது பற்றி ஆண்டாள் . ‘ நெய் உண்ணோம் . பால் உண்ணோம் ‘ என்று வரிசைப் படுத்துகிறார். அப்போது தீக்குறளை சென்றோதோம்’ என்று அந்தப்பாடலில் வருகிறது.
இதற்குப்பொருளாக – ‘திருக்குறளை படிக்கக்கூடாது ‘ என்று பரமாச்சாரியார் கூறியதாக அதில் இருந்தது !
தீக்குறளை சென்றோதோம் என்றால் – ஒருவரைப்பற்றி ‘ கோள் ‘ சொல்வது – புறம்கூறுவது செய்ய மாட்டோம் என்று தான் பொருள்.
திருப்பாவை வேதத்தின் சாரம் என்று சொல்லப்படுவது . ஒருவரைப்பற்றி பொல்லாங்கு – கோள் – சொல்வதை வேதம் மாபெரும் பாவம் , தவறு என்று கூறுகிறது. ஆண்டாள் அதைத்தான் கூறினார்.
பரமாச்சாரியார் இப்படி கூறியிருப்பாரா ? எங்கோ தவறு நடந்திருக்கிறது என்று நினைத்தவாறு – அந்தப்பகுதியை நியூஸ் எடிட்டர் பார்வைக்கு அனுப்பினேன் . பிறகு மறந்தேன்
அன்று மாலை பேப்பரை பார்த்து திடுக்கிட்டேன்.
‘திருக்குறளைப் படிக்காதே – காஞ்சி சங்கராச்சாரியார் உத்தரவு !” என்று வெளியிடப்பட்டிருந்தது. இது பரபரப்பு ஏற்படுத்திவிட்டது .தமிழ் அறிஞர்கள் திடுக்கிட்டார்கள் . பெரும் கண்டனம் தமிழ் அறிஞர்களிடம் இருந்து கிளம்பியது.
எனக்கு வருத்தமாக இருந்தது. நிச்சயம் ஏதோ பிழை என்று தோன்றியதை செய்தி ஆசிரியரிடம் கூற தவறி விட்டேனே என்று உள்ளம் உறுத்தியது.
மற்ற தமிழ் நாளிதழ்களிலும் அடுத்தடுத்து வந்த நாட்களில் தினமும் இந்த செய்தி பெரிதுபடுத்தபட்டது. தினம் ஒரு கண்டன அறிக்கை !
ஆச்சாரிய சுவாமிகளிடமிருந்து விளக்கம் வராது என்பது எனக்கு தெரியும் . யாராவது அவரிடம் போய் பேசினால் , தவறு திருத்தப்பட வாய்ப்பு ஏற்படும்.
அதற்குள் ‘ குமுதம் ‘ இதழில் இது குறித்து தலையங்கம் எழுதப்பட்டு விட்டது. தலைப்பு –
‘யானைக்கும் அடி சறுக்கும்?’
குமுதம் தலையங்கம் அக்காலத்தில் மிகவும் விறுவிறுப்புடன் இருக்கும் . சுடச்சுட விஷயங்களைத் தொடுவார் எஸ்.ஏ.பி.
இந்த தலையங்கம் பலன் தந்தது . திருமதி சௌந்திரா கைலாசம் , காஞ்சி பெரியாரை தரிசிக்க சென்றார்.அப்போது இந்த விஷயத்தை மெதுவாக எழுப்பினார். பெரியவர் கூறியது தவறாக வந்திருக்கலாம் என்று சுட்டிக்காட்டினார்.
காஞ்சி பெரியவர் கூறிய விளக்கம் அடுத்த குமுதம் இதழில் செய்தியாக திருமதி கைலாசம் எழுதினார் :
“மார்கழி மாதம் கடவுளைப்பற்றிய நினைவுகளுக்கு மட்டுமே செலுத்த வேண்டிய மாதம் .
தீக்குறள் மட்டுமல்ல – திருக்குறள் போன்ற மிக உயர்ந்த நல்ல விஷயங்களைக்கூட கூறாமல் – கடவுள் நாமத்தையே சொல்ல வேண்டும் ”
பெரியவர் இப்படி மார்கழி மாதத்தில் இறைவனை மட்டுமே நினைக்க வேண்டியதை வலியுறுத்த சொல்லி இருக்கிறார் !
இந்த விளக்கம் வந்தவுடன் அமைதி ஏற்பட்டுவிட்டது . சௌந்திரா கைலாசம் அவர்களுக்கு என் மனம் நன்றி கூறியது.
அடுத்த நிகழ்ச்சி – 1987 ம் ஆண்டு .
ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சி மடத்தை விட்டு வெளியேறியதை அடுத்து ஏற்பட்ட பரபரப்பு நிகழ்ச்சி.
பல்வேறு அவதூறான செய்திகள் வந்து கொண்டிருந்தன. எனது இதழுக்காக உண்மைகளை சேகரித்தேன்.
காஞ்சிபுரம் சென்று ஸ்ரீமடத்திலும் மெல்ல தகவல் சேகரித்தேன். மகா பெரியவர் – ஓரிடத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். இந்த விஷயமாக மகா பெரியவரை பேட்டி எடுத்தால் என்ன என்றே தோன்றியது. 1962 நிகழ்ச்சியில் – ‘ அவசரப்பட்டதுபோல’ இப்போது கூடாது . எதிரே காட்சி தருகிறாரே … கேட்கலாமே என்று மனசாட்சி கூறியது . பணிந்தேன்.
சுவாமிகளிடம் நான் பேச முற்பட்ட போது சுற்றி இருந்த வயதான பக்தர்கள் தடுத்தார்கள். ‘ பெரியவரிடம் இதைப்பற்றி எல்லாம் கேட்பதா ? அவரை பேட்டி எடுப்பதா ‘ என்று சினந்து என்னை வெளியேறச் சொன்னார்கள்.
“என்ன …. என்ன …. அவன் என்ன கேட்கிறான் ?” என்று சுவாமிகள் நாற்புறமும் திரும்பி
விசாரித்தும் – அதற்கு பக்தர்கள் பதில் கூறாமல் என்னை விரட்டுவதிலேயே குறியாக இருந்தார்கள்.
நான் ஸ்ரீமடத்தைவிட்டு வெளியே வந்து , டிபன் சாப்பிட போகலாம் என்று நினைத்தேன். அதற்குள் ஒரு வயதான பக்தர் ஓடிவந்தார். ” பெரியவா கூப்பிடுகிறார்” என்றார். நான் ஓடினேன்.
“என்ன சந்தேகம் ….. கேளு ” என்று மெதுவான குரலில் பரமச்சாரியார் கூறினார். நான் கேள்விகளை பணிவுடன் கேட்டேன்.
“பரமாச்சாரியாரிடம் கோபித்துக் கொண்டே ஜெயேந்திரர் வெளியேறினாரா ? என்று கேட்டேன் . பக்தர்கள் முகத்தில் கோபம் பளிச்சிட்டது.
‘ அப்படி இல்லை . அவருக்கு என் மீது ரொம்ப அன்பு . எனக்கு கனகாபிஷேகம் செய்து பார்த்தரே ” என்று பரமாச்சாரியார் கூறும் போது ஜெயேந்திரர் மீது அவருக்கு இருந்த அன்பு வெளிப்பட்டது.
” ஸ்ரீ மடத்திலிருந்து பணம் எடுத்துச் சென்றாரா ?” என்று கேட்க நேர்ந்தது.
பரமாச்சாரியார் மறுத்து தலையாட்டினார். ” அவருக்கு எதற்கு பணம் ? அவர் நினைத்தால் பணம் கொட்டும் . இந்த மடம் ஏழை மடமாக இருந்தது. அதை மாற்றி – பல நல்ல காரியங்களை செய்பவர் அவர் ” – சுவாமிகள் கூறினார்.
வெளியே சொல்லப்பட்ட வதந்திகளை நான் கேட்க நேர்ந்தது.
“இம் மாதிரி நிகழ்ச்சி ஸ்ரீ மடம் பற்றி மக்கள் என்னவாறு நினைக்க செய்யும் “….
“மக்கள் மிக உயர்ந்தவர்கள் . அவர்கள் கருத்து எதுவானாலும் அது முக்கியம் . அதை அலட்சியப்படுத்தமுடியுமா ?” – பெரியவர் கூறினார். இன்னும் பல கேள்விகள் எழுப்பினேன் !
பத்திரிக்கையில் இந்த பேட்டி பரபரப்பாக வந்தது. ஜெயேந்திரர் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. அடுத்து சில நாட்களில் ஜெயேந்திரர் திரும்பினார்.
பரமாச்சாரியாரிடம் சங்கடமான கேள்விகள் கேட்டதற்கு ஒரு சில பக்தர்கள் என்னை திட்டினாலும் , ஜெயேந்திரர் பற்றி பரமாச்சாரியார் அந்த பேட்டியில் உயர்வாக கூறியிருந்தது – தமிழகம் முழுவதும் இருந்த பக்தர்களுக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் அளித்தது.
source::::Shri.Ramanathan in periva.proboards.com
Natarajan
Read more: http://periva.proboards.com/thread/4472/#ixzz2VQPkrU6M
Message For The Day….Our Mind To be Fixed On Sathya and Nithya Thro Viveka …
The life principle (Jeevathathwa) is like the grain covered in the husk of delusion (Maya), as that rice is enveloped in the paddy. The husk (Maya) has to be removed. The grain (Jeevathathwa) has to be boiled and made soft and assimilated so that it might add to health and strength. The softened rice can be compared to the Supreme Soul (Paramathma). The mind should be employed in this process. It has to be fixed in the Truth (Sathya) and the Ever-lasting (Nithya). To remove the husk, Discrimination (Viveka) is an effective instrument. Develop the power of discrimination and find out, which is beneficial, and which is not. Seek the light always – be full of confidence and zest. Never yield to despair, for it has never produced any results!

– Divine Discourse, Aug 2, 1958.
Divine Image of The Day….Shirdi Sai….

If you know that SAI stands with you.. It hardly matters who stands against you.
source::::shirdi sai speaks …H.Deepa
Natarajan
“அர்த்தமுள்ள இந்து மதம் ” அரும்பி மலர்ந்த கதை !!!!

சாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்தபோது மிக மோசமான விபத்து ஏற்பட்டது. அதில் சின்னப்பா தேவருக்கு அவ்வளவாகக் காயம் இல்லை. ஆனால் கண்ணதாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தார்.
காஞ்சிப் பெரியவரிடம் மிகுந்த பக்தியும் மரியாதையும் கொண்ட தேவர் அவர்கள், சிவஸ்தானம் எனப்படும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பெரியவரைப் பார்த்து வணங்கி ‘விபத்து நேர்ந்து விட்டது’ என்று சொன்ன மாத்திரத்தில் ‘கண்ணதாசன் எப்படியிருக்கிறான்’ என்றும் பெரியவர் கேட்க, அதிர்ந்து போனார் தேவர். கண்கள் கலங்க வியப்பும் வருத்தமுமாய் “அவர் படுகாயத்துடன் நினைவில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார்” என நா தழுதழுக்கக் கூறினார்.
தேவரின் கவலையை உணர்ந்த பெரியவர், ‘சரி, கவலைப்படாதே. இந்த விபூதியைக் கொண்டுபோய், அவன் நெற்றியில் இட்டு, வாயிலும் சிறிதளவு போடு, மீதி இருப்பதை அவன் தலையணைக்குக் கீழ் வைத்துவிடு’ என்று தன் திருக்கரங்களால் விபூதி எடுத்து மடித்துத் தர, தேவர் விதிர் விதிர்த்து, பெரியவரை மறுத்துப் பேசவும் துணிவின்றி தயங்க, மீண்டும் பெரியவரின் கட்டளைக்கிணங்கி தயக்கத்தோடு கைநீட்டி விபூதியைப் பெறுகிறார்.
தேவரின் தயக்கத்திற்குக் காரணம், கண்ணதாசன் நாத்திகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு, திராவிட கட்சிகளின் சார்பில் பிராமணர்களையும் சனாதன தர்மத்தையும் நாக்கில் நரம்பில்லாது போல் மேடைகளில் பேசி வந்த காலகட்டம் அது. விபத்து நடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு எதிரிலேயே நடந்த கூட்டத்தின் மேடையில் படுபயங்கரமாகப் பேசி மடாதிபதிகளை இழிவுபடுத்திப் பேசியிருந்தார். எனவே அவரிடம் போய் இந்த விபூதியை எப்படிக் கொடுப்பது என்பதுதான் தேவரின் பெரியத் தயக்கமாயிருந்தது.
ஆனால் முக்காலமுணர்ந்த ஞானியாகிய பெரியவர், தேவரின் மனத்தயக்கத்தை உணர்ந்து ‘தயங்காமல் கொண்டுபோய் பூசு. சூரியனை சில சமயம் மேகம் மறைப்பது போல் நாத்திகமேகம் இதுவரை அவனை மறைத்திருந்தது. இனி அவன் சூரியனாகத் திகழ்வான். அவன் எப்பேர்ப்பட்ட பரம்பரையைச் சேர்ந்தவன் தெரியுமா? கோவில் திருப்பணி செய்வதற்கே பிறந்தவர்கள் போல் திகழ்ந்தவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள். வரதராஜப் பெருமாள் கோவில் கோபுரத் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் கொள்ளுத் தாத்தா. ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தாத்தா. காமாக்ஷி கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தகப்பனார். இப்ப புரியறதா?’ என திருவாய் மலர்ந்தருளினார்.
தேவர் மனந்தெளிந்தவராய் பெரியவரை வணங்கி விடைபெற்று, நேராக மருத்துவமனைக்குச் சென்றார். நினைவிழந்து படுத்திருந்த கண்ணதாசனின் நெற்றியில் விபூதியைப் பூசிவிட்டு சிறிது விபூதியை வாயிலும் இட்டு, மீதியை தலையணையின் கீழ் வைத்துவிட்டு வீடு திரும்பினார். அவர் சிந்தனையெல்லாம் கண்ணதாசன் நினைவு திரும்பி நடந்ததை அறிந்து என்ன சொல்வாரோ என்றே நினைத்தது.
மறுநாள் தேவர் மருத்துவமனை சென்று கண்ணதாசனின் படுக்கையை சற்றே படபடக்கும் நெஞ்சோடு நெருங்கியபோது கண்ணதாசனுக்கு நினைவு திரும்பி கண் விழித்திருந்தார். தேவரைப் பார்த்தவுடன், ‘வாங்க, எத்தனை நாளா இப்படி படுக்கையில் இருக்கேன். கொஞ்சம் கண்ணாடியை எடுத்துக் கொடுங்களேன். என் முகத்தைப் பார்க்கணும்’ என்றார். நேற்று இட்ட விபூதி இன்னமும் நெற்றியில் திகழ, தேவர் தயங்கியபடியே தந்த கண்ணாடியில் தன் முகம் கண்ட கண்ணதாசன் ‘இதென்ன விபூதி?’ என்று தேவரை ஏறிட்டுப் பார்க்க, வேறு வழியின்றி வந்தது வரட்டுமென தேவர், தான் பெரியவரைப் பார்த்ததையும், பெரியவர் ஆசீர்வாதம் செய்து விபூதி கொடுத்ததையும் சொல்ல, கண்ணதாசனின் விழிகளில் அருவியெனக் கொட்டியது கண்ணீர். திகைத்து நின்ற தேவரின் செவிகளில் தேனாகப் பாயந்தது கண்ணதாசனின் வார்த்தைகள், ‘எனக்கா? என்னிடமா இவ்வளவு கருணை? போனவாரம்தான் அவரை, ஐயோ’ என வாய்விட்டுப் புலம்பி அழுததோடு, தேவரிடம் ஒரு வேண்டுகோளையும் சமர்ப்பித்தார். ‘எனக்கு உடல்நலமாகி மருத்துவமனையிலிருந்து வெளியேறும் சமயம் நான் வீட்டிற்குச் செல்லமாட்டேன். இந்தப் பாவியிடம் கருணைவைத்த அந்த மகானிடம் முதலில் என்னை தயவுசெய்து அழைத்துச் செல்லுங்கள்’ என மனமுருகி வேண்டினார்.
கண்ணதாசன் வேண்டியபடியே அந்த நல்ல சந்திப்பும், பாவமன்னிப்பும் நடந்தது. மாறியது மனம், நன்றியில் ஊறியது தினம், வீறிட்டு வெளிவந்தது ஒரு கவிதை. அக்கவிதையை எடுத்துக் கொண்டு, பெரியவரை நேரில் கண்டு வணங்கி, கவிதையைச் சமர்ப்பித்தார், கண்ணதாசன். அக்கவிதை இதோ :
பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்ற
தீர்த்தப் பெருக்கு, திருவாசகத்தின் உட்கருத்து
கூர்த்த மதியால் மெய்ஞானக் கருத்துணர்த்தும் முழுமூர்த்தம்
கலிமொய்க்கும் இவ்வுலகைக் காக்கவந்த கண்கண்ட தெய்வம்
எம்மதத்தோரும் சம்மதத்துடன் தம்மதத் தலைவனென
தொழுதேத்தும் தெய்வக் கமலக் கழல் தொழுவோம் வாரீர்!
கவிதை வரிகளைக் கண்ட பெரியவர், கண்ணதாசனைக் கனிவோடு நோக்கி, ‘அனந்த கோடி அற்புத லீலா சாகித்ய மாயமானுஷாய நமோ நமஹ, அர்த்தநாரி திருவண்ணாமலை சேஷாத்ரி மகானுக்கல்லவா இது பொருந்தும்’ என்று அருளாசிக் கூறி, ‘அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் நிர்மலப் பொருள் ஞானசூரியனாம், மதத்தின் பெருமையை எழுது’ என்று திருவாய் மலர்ந்தருள, அக்கணமே கண்ணதாசனின் மனதில் “அர்த்தமுள்ள இந்துமதம்” அழகாய் அரும்பி பலநாள் உழைப்பில் இதழ்விரித்து மணம் வீசியது.
பெரியவா பாதம் சரணம்!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!
source::::periva.proboards.com
Natarajan
Read more: http://periva.proboards.com/thread/4496/kannadasans-change-heart/#ixzz2VKagcOJg
Message for The Day…How to Reach Dharma kshetra….
Every being is a pilgrim towards Dharmakshetra (Righteous land), which is also the abode of peace. But, on the way, he or she is led into the by-lanes and alleys of objective pleasure by the senses, to which the person becomes a slave. People are eager to know about all kinds of trivialities like the details of others’ lives, other places, etc., but they have no keenness to know their own origin. People are deeply sunk in ignorance about their source and substance, their goals and destiny. You are the inheritor of unlimited wealth and fortune, yet you feel like a poor man (pauper). Remove this boundary of ego within your mind – you will then recognize the vastness of yourself.
– Divine Discourse, Aug 16, 1964.

“இப்போ போட்டோ எடுத்துக்கோ ” !!!….சொன்னார் மகாபெரியவர் !!!
மூலம் : மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் – ஐந்தாம் பாகம்
நினைவு கூர்ந்தவர் : எஸ். சீதாராமன், சென்னை – 28.

புகைப்படம் எடுப்பது எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு.
பெரியவாள் முன்னிலையில், slide viewer –ல் ஸ்லைடுகளைப் போட்டுக் காண்பித்துக் கொண்டிருந்தேன். அது, ஸ்லைடில் உள்ள படங்களை நான்கு மடங்கு பெரிதாகக் காட்டும். படங்களைப் பார்த்துக் கொண்டிருந்த பெரியவாள், “இதில் ஸ்லைடு வைக்குமிடத்தில் நெகடிவ் பிலிமைப் போட்டால், நன்றாகத் தெரியுமா?” என்று கேட்டார்.
(பெரியவாளுக்குப் புகைப்படக் கலையின் ஒவ்வொரு நுட்பமும் தெரியும். ஆனால், தனக்குத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ள மாட்டார்கள் என்பதும் எனக்குத் தெரியும்! ஆனால், என்னுடைய அக்ஞானம் என்னை விட்டுப் போய்விடுமா என்ன?)
”நெகடிவ் போட்டால், திரைப்படத்தில், கறுப்பு வெள்ளையாகவும், வெள்ளை கறுப்பாகவும் தெரியும்..”
பெரியவாள் உடனே, “அதுதான் எனக்கு வேணும்.. நரைத்துப் போன என் தலைமுடி, கறுப்பாகத் தெரியும்! நான் இன்னும் இளைமையாக இருப்பேனோல்லியோ…”
அருகிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தவர்கள் அட்டகாசமாகச் சிரித்து மகிழ்ந்தார்கள்.
பெரியவாளுடைய நகைச்சுவை உணர்வு, எவரெஸ்டுக்கு மேலே பத்து அங்குலம்!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!
***********
வானகரத்தில் ஒரு சவுக்குத் தோப்பில் உட்கார்ந்திருந்தார் பெரியவா. முன்னர் எடுத்திருந்த புகைப்பட ஆல்பத்தைக் கொடுத்தேன். அப்போது, பல்வேறு காரணங்களால் புகைப்படங்களில் குறைகள் ஏற்பட்டிருந்தன.
இந்தத் தோப்பில் எவ்விதக் குறைகளுமில்லாமல் புகைப்படம் எடுக்க முடியும் என்பது என்னுடைய துணிபு.
பெரியவா, ஒரு சிஷ்யரைக் கூப்பிட்டு, ஒரு தாழங்குடை கொண்டுவரச் சொல்லி, அதைத் தன் தலைக்கு மேல் பிடிக்கச் சொன்னார்.
“இப்போ போட்டோ எடுத்துக்கோ…”
அப்போது நான் எடுத்த புகைப்படம் மிக அருமையாக வந்திருந்தது. (பின்னால் கல்கி தீபாவளி மலர் ஒன்றில் ஸ்ரீருத்ர வாக்கியமான, ‘நமோ வன்யாய ச கக்ஷ்யாய ச’ என்ற விளக்கத்துடன் முகப்புப் படமாக வெளியாயிற்று).
பெரியவாள் தாழங்குடையைப் பிடிக்கச் சொன்னதற்கும் காரணம் இருந்தது. மரங்கள் வழியே வந்த ஒளி, அவர்கள் மேல் திட்டுத் திட்டாக விழுந்து கொண்டிருந்தது. அந்த நிலையில் படம் எடுத்தால் நன்றாக வராது என்பதால், அந்த ஷாட் நன்றாக அமைய வேண்டும் என்பதற்கான சூழ்நிலையை உண்டாக்கிக் கொடுத்தார்கள்.
மெய்ப் படங்களைக் கற்றுத் தேர்ந்தவர்கள் அவர்கள். நிழற் படங்களின் நுட்பங்களை எந்தக் குருகுலத்தில் கற்றுத் தெளிந்தார்கள்?
ஆயிரம் படம் படைத்த ஆதிசேஷ்னே அறிவார்!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!
source::::periva.proboards.com
Natarajan
Read more: http://periva.proboards.com/thread/4494/maha-periyavaa-photographer/#ixzz2VFnPJvMb
