” இது சரி இல்லை “…சொல்கிறார் மகாபெரியவர் ….

இது சரியில்லை!

மும்பை வேதரக்ஷண அறக்கட்டளைக் குழுவினர் மஹாபெரியவா ஜயந்தியையும் சிறப்பாகக் கொண்டாடினார்கள்.
சுப்ரமண்யம் என்ற பொறுப்பாளர் ஜயந்திக்குப் பின் பெரியவா தரிசனத்துக்குச் சென்றார்.

”இதோ பார் – இந்த நோட்டீஸை – இது நீங்கள் போட்டது இல்லை. வேறொரு சபையினர் போட்டது. இந்தமாதிரி நோட்டீஸ்களில் ஆதிசங்கரர் – வ்யாஸர் – ஆசார்யாள் படம் போடக்கூடாது. நோட்டீஸைப் பெற்றுக்கொண்டு போகிறவர்கள், பின்னர் தெருவில் எறிவார்கள். காலால் மிதிப்பார்கள்; குப்பைத் தொட்டியில் போடுவார்கள்! இது சரியில்லைதானே?”

இந்த அறிவுரை ஒரு சுப்ரமண்யத்துக்கு மட்டுமில்லை – எல்லா சுப்ரமண்யன்களுக்கும்தான்! கல்யாணப் பத்திரிகையில் மிக அழகாக ஸ்வாமி படங்களைப் போடுகிறார்கள். கல்யாணத்துக்கு மறுநாள் இந்த ஸ்வாமிகள் எல்லாம் எந்த இடத்தில் பூஜிக்கப்படுவார்கள்?

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source::::periva.proboards.com
Natarajan
Read more: http://periva.proboards.com/thread/4104/advice#ixzz2QpS94JPq

தீப ஆரத்தியின் அர்த்தம் !!!

அறிவார்ந்த ஆன்மிகம்

ம் வழிபாட்டு முறைகளில் பலவும் காரணம் புரியாத சடங்குகளாகவும் சம்பிரதாயங்களாகவும் ஆகி விடுகின்றன. அவற்றை அப்படியே நாமும் பின்பற்றுகிறோமே ஒழிய அவற்றில் புதைந்துள்ள ஆழ்ந்த பொருளை நாம் உணரத் தவறி விடுகிறோம்.  உதாரணத்திற்கு கோயில்களில் இறைவனுக்கு தீப ஆரத்தி எடுப்பதை எடுத்துக் கொள்வோம். தீப ஆரத்தி எடுப்பதை நாம் நாள் தோறும் பார்க்கிறோம் என்றாலும் அது எதற்காக என்றும், ஆரத்தி எடுப்பதன் பின்னால் உள்ள தத்துவம் என்ன என்றும் நம்மில் பெரும்பாலானோர் அறிவதில்லை. அதன் உண்மைப் பொருளை இப்போது பார்ப்போம்.
பூஜையில் இறைவனுக்குச் செய்யப்படும் பதினாறு வகை உபசாரங்களில் தீப ஆரத்தியும் ஒன்று. அதை வடமொழியில் ஷோடச உபசாரா என்று சொல்வார்கள். பூஜை காலத்தில் தீப ஆரத்தி எடுப்பதற்கு முன்பு இறைவன் விக்கிரகத்தின் முன் திரை போட்டு இருப்பார்கள். அந்தத் திரை மறைப்பதால் நம்மால் இறைவனைக் காண முடியாது. ’நான்’என்னும் அறியாமைத் திரை நம்முள் இருக்கும் வரை அதைத் தாண்டி உள்ள எல்லாம் வல்ல இறைவனை நம்மால் அறிந்து கொள்ள முடியாது என்பதை அது குறிக்கிறது. அந்தத் திரை விலகினால் மட்டுமே இறைவனைக் காண முடியும். அப்போதும் கூட இறைவன் மிகத் தெளிவாகத் தெரிவது இல்லை. இறைவனை மிகத் தெளிவாக அறிய ஞானம் என்ற விளக்கு வேண்டும். அந்த ஞான விளக்கொளி இருந்தால் தான் இறைவனை முழுமையாகத் தரிசிக்கும் அனுபவம் வாய்க்கும். அந்த ஞான ஒளி தான் தீப ஆரத்தி. நான் என்னும் ஆணவத் திரை விலகிய பின்னர் ஞானத்தின் துணையுடன் இறைவனைக் காண முடியும் என்பதை தீப ஆரத்தி விளக்குகிறது.
திரை விலகுதல், தீப ஆரத்தி காட்டுதல், இருள் நீங்குதல், இறைவனைக் காணல் எல்லாம் ஏக காலத்தில் நிகழ்வது போல ஆணவம் விலகி, ஞானம் பெற்று, அறியாமை நீங்கி, இறைவனை உணர்தல் எல்லாம் ஏக காலத்தில் மனிதன் மனதில் நிகழ வேண்டும் என்பதை தீப ஆரத்தி குறிப்பால் உணர்த்துகிறது.
உள்ளத்தில் ஞான விளக்கேற்றுவது குறித்து பத்தாம் திருமுறையில் திருமூலர் மிக அழகாகக் கூறுவார்.
  விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே!
இதன் பொருள்: உங்களுக்குள் இருக்கும் ஞான விளக்கை ஏற்றி பரஞான வெளியாக இருக்கும் பரம் பொருளை அறியுங்கள். அந்த ஞான விளக்கின் முன்னே உங்கள் வேதனைகள் மாறும். அந்த ஞான விளக்கை விளங்கிக் கொள்ளும் ஞானம் உடையவர்கள் தாங்களே ஞான விளக்காக விளங்குவார்கள்.
(ஞான விளக்கின் ஒளியின் அனைத்தையும் காணும் போது அறியாமையால் நாம் உணர்கின்ற துன்பங்கள் தானாக மாறி விடும் என்றும் ஞானம் பெற்றவர்கள் தாமாக மற்றவர்களுக்கு ஞான விளக்காக இருந்து வழிகாட்டுவார்கள் என்றும் திருமூலர் விளக்குகிறார்.)
கற்பூர தீப ஆரத்தியில் இன்னொரு மெய்ஞான உண்மை வலியுறுத்தப் படுகிறது. கற்பூரம் ஏற்றப்படும் போது அது எரிந்து ஒளி கொடுத்து பின் கடைசியில் இருந்த சுவடே இல்லாமல் முடிந்து விடுகிறது. கற்பூரம் நான், எனது என்ற எண்ணங்களால் ஏற்படும் வாசனைகளைக் குறிக்கிறது. இறைவனில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு வாழும் தன்மையைக் குறிக்கிறது. ஆனால் எல்லாம் இறைவன் என்ற ஞானம் பற்றிக் கொள்ளும் போது மனிதனின் வாசனைகளும், அறியாமையும் கொஞ்சம் கொஞ்சமாய் அழிய மற்றவர்களுக்கு ஒளி தரும் வாழ்க்கையை மனிதன் வாழ ஆரம்பிக்கிறான். அவன் காலம் முடிந்து விடும் போது அவன் வாசனைகளும் முடிந்து போகின்றன. ஒளிமயமான, உபயோகமான வாழ்க்கை வாழ்ந்து முடித்து இருந்த சுவடில்லாமல் அவன் இறைவனுடன் ஐக்கியமாகி விடுகிறான். இது கற்பூர தீப ஆரத்தி மூலமாக உணர்த்தப்படும் இன்னொரு மாபெரும் தத்துவம்.
தீப ஆரத்தியின் முடிவில் தீபத்தின் மேல் நம் கைகளை வைத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டு தலையையும் தொட்டுக் கொள்கிறோம். ’இந்த ஞான ஒளி என் அகக் கண்களைத் திறக்கட்டும். என் எண்ணங்களும், நோக்கங்களும், அறிவும் மேன்மையானதாக இருக்கட்டும்.’ என்ற பாவனையில் செய்யப்படும் செயலே அது.
எந்திரத்தனமாகக் கோயிலுக்குச் சென்று தீப ஆரத்தியைக் கண்டு இறைவனை வணங்கி அங்கிருந்து எந்த பாதிப்பும் இல்லாமல் கிளம்பி விடாமல் மேற்கண்ட தத்துவக் கண்ணோட்டத்தோடு தீப ஆரத்தியைக் கண்டு வணங்குங்கள். அதுவே உண்மையான பயனுள்ள வழிபாட்டு முறை. அப்படி உயர்ந்த பாவனையுடன் வழிபட ஆரம்பிக்கும் போது மிக மேன்மையான ஆன்மிக அனுபவத்தை உணர்வீர்கள். உண்மையான வழிபாட்டின் பலனை அடைவீர்கள்!
சரி அப்படியானால் மனிதர்களுக்கும் ஆரத்தி எடுக்கிறார்களே அது எதற்காக என்ற கேள்வி ஒருவர் மனதில் எழுவது இயற்கை. அதற்கான பதிலையும் பார்ப்போம்.
புதிதாய் திருமணம் முடிந்து வீட்டுக்கு வரும் தம்பதியர், குழந்தை பெற்றுக் கொண்டு வீடு திரும்பும் தாய், தொலை தூரங்களுக்குச் சென்று வெற்றிகரமாக ஒரு செயலை முடித்து விட்டு வருபவர் முதலானோருக்கு ஆரத்தி எடுக்கும் வழக்கம் நம் நாட்டில் இருக்கிறது.
அவர்களுக்கு ஆரத்தி எடுப்பது இறைவனுக்கு ஆரத்தி எடுக்கும் முறையில் இருப்பதில்லை. அவர்களுக்கு ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீருடன் மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு கலந்து தண்ணீரை சிவப்பாக்கிக் கொள்கிறார்கள். பின் எண்ணெய் தோய்த்த திரியை விளிம்பில் வைத்து தீபமாக்கி ஆரத்தி எடுக்கிறார்கள்.
ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா(aura)என்ற சூட்சுமப் பகுதி இருக்கிறது. மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச் சேரும் தீய கிருமிகள் ஆகியவை அந்த சூட்சும பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள் புகுகின்றன. திருமணம், குழந்தை பெறுதல், வெற்றியடைதல் ஆகியவற்றால் பலருடைய  திருஷ்டி மணமக்கள், தாய்-சேய், வெற்றியாளர் மீது அதிகம் விழ வாய்ப்பு அதிகம் உள்ளது.
மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு இரண்டிற்கும் விஷக் கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதாக நம் முன்னோர் கண்டிருந்தார்கள் எனவே தான் திருஷ்டி கழிக்கும் சக்தி உள்ள கிருமி நாசினிகளான மஞ்சளையும் சுண்ணாம்பையும் தண்ணீரில் கலந்து திருஷ்டி கழித்து அந்தத் தண்ணீரை வெளியேயே கொட்டி விடுகிறார்கள். வீட்டினுள் நுழையும் முன்பே ஆரா சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப் பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் வழக்கம் உள்ளது.
எனவே அது போல் ஆரத்தி எடுக்கும் போது பொருள் அறிந்து சரியான பாவனையுடன் செய்வது முக்கியம். அப்போது தான் அதன் பலனும் முழுமையாக இருக்கும்.
source:::::input from a friend of mine
Natarajan

Message For The Day…A dose of Dhyanam and Japam as Breakfast !!!!!

I know how systematic you all are in eating and drinking. You take pretty good care of the body. I do not condemn it; I only want that you should take equally good care of the needs of the spirit also. Take a dose of Dhyanam (meditation) and Japam(repetition of holy Names) as the morning breakfast; Puja andArchana (prayer and worship) as lunch at noon; someSathsang (holy company) or Sathchinthana (holy thoughts) or reading of holy books or Nama likhitha (writing of holy Names) as afternoon tea and snacks; an hour of bhajan as dinner; and a small ten-minute manana (reflection) as the cup of milk before going to bed. This diet is enough to keep your inner being happy and healthy. That is My advice to you today.

 

Sathya Sai Baba

Indian Railways….160 Years Strong !!!

India's first passenger train   India's first train that ran between Bombay and Thane

Google Doodle To mark the occassion !!!! ..First label                                                                  2nd Photo  Indias”S 1ST Train that ran between BOMBAY and Thane

India celebrates 160th anniversary of its first passenger train here on Tuesday. It was on this day in 1853 that the first train ran between Bombay and Thane. It was drawn by three engines and covered a total distance of 34 km in 57 minutes.The three locomotives that pulled the first passenger train were named Sahib, Sindh, and Sultan.It was in 1853-54 that two new railway companies, Great Indian Peninsular Railway (GIPR) and East Indian Railway (EIR) were formed in the country, which pioneered the railway construction in the country.However, the experiment on railway line construction had begun long back in 1836 when the first rail line of the Indian sub-continent came up near Chintadripet Bridge, near Chennai.

The next phase of railway development in the country was witnessed in 1844 when the then the Governor-General of India Lord Hardinge allowed private entrepreneurs to set up rail system in the country.

Subsequently, the East India Company invited private investors to invest in the railway sector with adequate guarantee of an annual return.

Today, the Indian Railways is under complete government control but there have been demand of allowing private entrepreneurs in the sector.

source:::India Today
Natarajan

” பணத்துக்கு நீ சொந்தக்காரன் இல்லை”…மகாபெரியவர் சொல்கிறார் !!!

ஆடிட்டர் ஒருவர் தர்மகாரியங்களில் ஆர்வமாக ஈடுபடுவார். ராமநவமி, கிருஷ்ணஜெயந்தி, சங்கர ஜெயந்தி என்று எந்த விழாவாக இருந்தாலும் அவர் முதல் ஆளாக முன்னிற்பார். ஏழை எளியவர்கள் மீது இரக்கம் கொண்டு உதவி செய்வார். அவரை ஊர்மக்கள் “பெரியவர்’ என்று தான் அழைப்பர். காஞ்சிப்பெரியவரிடத்தில் ஆடிட்டருக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு.
ஆடிட்டரின் மூத்த மனைவி காலமானபின், பெரியவரின் ஆசியுடன் இரண்டாம் கல்யாணமும் செய்து கொண்டார். நான்கு பையன்களும் ஒரு பெண்ணுமாக ஐந்து பிள்ளைகள் இருந்தனர். பெரியவரைத் தரிசிக்க வரும்போதெல்லாம் , ஆடிட்டரைப் பார்த்து,””கர்ணன் மாதிரி எல்லாருக்கும் தானதர்மம் செய்றே!” என்று அன்போடு சொல்வார். காலம் ஓடியது. ஆடிட்டரின் பிள்ளைகளும் ஆடிட்டர்களாகவே பணியாற்றினர். பெண்ணும் ஒரு ஆடிட்டரையே திருமணம் செய்து கொண்டு செல்வச்செழிப்போடு வாழ்ந்து வந்தார். அவருக்குப் பிறந்த பையனும் ஆடிட்டர் தான்.
பெற்றோர் மறைவுக்குப்பின், பிள்ளைகள் எல்லாம் தானதர்மம் செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனாலும், அப்பா வகித்து வந்த தர்ம ஸ்தாபனப் பதவிகளில் மூத்தமகன் இருந்து வந்தார். தான தர்மம் என்று யாரும் கேட்டால், “”அது என்ன விலை? எந்த கடையில் கிடைக்கும்?” என்று கேட்கும் அளவுக்கு அவருடைய நிலை மோசமாக இருந்தது.

ஒருசமயம், அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. பரிசோதித்ததில், “கேன்சர்’ என்று சொல்லிவிட்டார்கள். அவருக்கு பேர் சொல்ல ஒரு பிள்ளையும் இல்லை. அவரது மனதை கவலை வாட்டியது. குடும்பத்தின் மதிப்பிற்குரிய மகானான காஞ்சிப்பெரியவரைத் தரிசித்து வருவதென்று முடிவெடுத்து காஞ்சி மடத்திற்குப் புறப்பட்டார்.

“”சுவாமி! அடியேனின் பணிவான நமஸ்காரம்! எனக்கு ரத்தஅழுத்தம், சர்க்கரைநோய் ரொம்ப காலமாக இருக்கு! இப்போ கேன்சரும் வாட்டி வதைக்குது! மனசாலும், உடம்பாலும் நான் படும் அவஸ்தைகளை சொல்லி முடியாது. பெரியவா நீங்க தான் எனக்கு நல்வழிகாட்டி அனுகிரஹம் பண்ணணும்!” என்று சொல்லி அழுதார்.

“”உன்னை ரொம்ப நன்னாவே எனக்குத் தெரியும்! உங்கப்பா தானதர்மங்களை கர்ணன் மாதிரி செய்து வந்தார். அதனால் ஜனங்களெல்லாம் “பெரியவர்’ என்று அவரை மதிப்போடு கூப்பிடுவாங்க. விதியை யாராலும் மாத்தி எழுத முடியாது.
கிணத்திலே தண்ணீர் இருக்கு! ஆனால், அது தண்ணீரை தன்னுடையது என்று சொல்லி சொந்தம் கொண்டாடுவதில்லை! மரத்திலே பூக்கள் அடுக்கடுக்கா பூத்துக் குலுங்குது! ஆனால், பூவெல்லாம் எனக்குத்தான் என்று மரம் ஆர்ப்பரிப்பதில்லை! பசு பால் தருகிறது. பால் முழுவதும் தனக்கு தான் என்று பசு உரிமை பாராட்டுவதில்லை! உனக்கும் பட்டம் பதவிகள் இருக்கிறது. ஆனால், அந்த பதவியின் பயனாக நாலுபேருக்கு நீ நல்லது செய்யவில்லை. அதனால் தான் இந்த வேண்டாத கஷ்டமெல்லாம் உனக்கு வந்துவிட்டது. பணத்தோடு மனுஷனுக்கு குணமும் மிக அவசியம். உங்கிட்ட இருக்கும் பணத்துக்கு நீ டிரஸ்டி மட்டும் தான். சொந்தக்காரன் இல்லை என்பதை புரிந்து கொள்,” என்று அவரது மனதில் பதியும்படி எடுத்துச் சொன்னார்.

அந்த ஆடிட்டர், தான் நடத்தி வந்த வாழ்க்கை முறையை எண்ணி வருந்தியதோடு இனிமேல் தந்தையைப் போல தானதர்மங்களை செய்து வாழ்வது என்ற முடிவுடன் அங்கிருந்து கிளம்பினார்.

SRI KANCHI MAHA PERIVA SARANAM

source:::periva.proboards.com
Natarajan

Read more: http://periva.proboards.com/thread/4049/sri-paramacharya-on-dhanam#ixzz2QbChwEzs

Message For The Day…God is Beyond Human Vocabulary….

The five elements and their permutations and combinations constitute the Universe. Earth is the grossest, and has the highest number of characteristics. It has its own smell as well as the characteristics of touch, taste, form and sound (Gandha, Sparsha, Rasa, Rupa and Sabdha). The next element is Water, which is subtler than the earth and has only – taste, touch and form. The next element, Fire is subtler still and has sound and touch. The element Air is even subtler and has touch as its special attribute and sound as another predominant characteristic. The most subtle and pervasive element, Sky or Ether has only one characteristic, sound. God is subtler than all the above and so He is all-pervading, even more than ether or anything more pervasive than that. His nature is beyond all human vocabulary, beyond all human mathematics. Have this conviction well stabilised in your intellect.

 Sathya Sai Baba

Message For The Day….When You Accept Love You Accept God !!!

God is everywhere, and is everything; so, it appears as if He is nowhere, and He is not in anything! For, to know Him you try to identify Him as someone foreign and unique. He is Love, Power, Truth, Wisdom and Beauty. When you accept Love, you accept God. The tender plant of spirituality can grow only in the field of Love. It cannot thrive in the dehydrated loveless land of human hearts. Remove all traces of salinity from your hearts adding to the soil the precious complement of the Name of the Lord. Water it with Faith. Then plant the seedlings of Divinity; have discipline as the fence, and steadfastness as the pesticide to be sprayed. Then, you can reap the rich harvest of Jnana (wisdom), which will free you from the task of cultivation forever.

There is no promotion without examination. –

Sathya Sai Baba

 

வர வேண்டும் ..வர வேண்டும் விஜய ஆண்டு !!!

அன்பர்களே ..நண்பர்களே

தங்குதடை இல்லா மின்சாரம்

நமக்கு இனி கிட்டட்டும் !!!

பருவமழை பொழியட்டும்

பயிர் எங்கும் செழிக்கட்டும் !!!

சுற்றுப்புறமும் சூழலும்

சுத்தமாக மாறட்டும் !!!!

மக்கள் எல்லோரும்

மகிழ்ச்சியுடன் வாழட்டும் !!!!

சித்திரைத் திருநாளில்

சிறப்பு எல்லாம் கை கோர்த்து ..ஒரு

திறப்பு விழா நடத்தட்டும் நம் வளமான

வாழ்வுக்கு !!!

எங்கும் எதிலும் ஜெயமே என்று முத்திரை

பதிக்க வரவேண்டும் விஜய ஆண்டு !!!

வரவேண்டும் வர வேண்டும் விஜய ஆண்டே !!!..நலம் பல

தர வேண்டும் தர வேண்டும், என்று வேண்டும் ….

நடராஜன்