Message For the Day…” One Must Pay Due Care to Understand the Teachings of Great Avatars…”

There may be a few statements in Bhagavad Gita or other scriptures that might appear to contradict each other. For instance, in the Gita at one place, Lord Krishna stresses the need for action, at another the adherence to Dharma, and in another place commends renunciation of all Dharma and urges complete surrender to the Lord. These apparent contradictions are not contradictions. The teaching varies according to the state of spiritual development of the person concerned and the situation in which one is placed. The lesson here is one must pay due care and attention to understanding completely the inner significance of the great teachings of the Avatars and sages before any criticism is attempted.

Sathya Sai Baba

 

 

Message For the Day…” What is the Meaning of BABA …” ?

Fix your faith firmly in the Lord and not on the things of the world. When you have strong faith in the Lord, your discrimination will be perfect. You will be guided by your Conscience, which will always lead you properly. In vedantic parlance, the Conscience is called‘Chit’. God is ‘Sat-Chit-Ananda’. Sat means Being, Chit means Awareness. When and where these two are combined, there is Bliss. This is the meaning of the divine name, BABA – Being +Awareness Bliss + Atma. All of you are aspirants of bliss. You must enjoy uninterrupted bliss. To attain that Ananda (Bliss), you must combine Sat (Being) and Chit (Awareness). Without Divinity, there is no bliss or joy. Hence always think of Him, Live in His presence.

Sathya Sai Baba

Message For the Day… ” Understand The Meaning of Sanskrit Term ‘ Ekoham Bahushyam’ …”

Clay is one substance, but from it, several products of different shapes and names can be made. The same white milk is obtained from cows of different colours living in different countries. Similarly God is One, but dwells in innumerable bodies with different names and forms. Take the example of gold. From the same metal, a variety of different types of ornaments can be made. If you examine the cosmic scene, you will find that out of the same basic substance a variety of objects with different forms are produced. Out of a single seed comes a tree with different branches, leaves, flowers and fruits. Branches, leaves, flowers and fruits are unique and distinct, vary in form, name and use; but all of them have come from the one same seed, their source. This is the meaning of the Sanskrit term, “Ekoham Bahushyam” implying “The One, who chose to become Many.”

Sathya Sai Baba

Message For the Day…” Lack of Faith is the Source Of Weakness…”

Prema (Love) is the seed, thanmayathwam or overpowering experience of merging, is the tree and inexhaustible bliss is the fruit. For this consummation, faith is essential. Look at Arjuna! When the choice was placed before him to decide which he should receive, the army of redoubtable heroes belonging to the Yadava clan or Krishna alone who is unarmed and refusing to fight, he asked only for Krishna! He knew; he believed; and he was saved. The same choice all have to make even now, when the Lord has appeared in His swaruupa (form) here. What does it profit if one accumulates money, gold and grain? The bliss, derived from the worship of the name and form which arouses spiritual joy, is far more desirable than these. Want of faith is the source of weakness in all fields.

Sathya Sai Baba

Message For the Day…” Selfishness Will End in Ruin …”

Duryodhana symbolises one who has wicked thoughts. His minister was Dushasana. Dushasana represents one who promulgates bad laws. The combination of these two led to the growth of greed. On account of unrestricted growth of greed (lobha), Kauravas were totally destroyed. On another occasion Lord Krishna said, Arjuna means a person whose heart is pure and immaculate. Lord Krishna clarified to Arjuna in the battlefield, “Destiny is all powerful. Justice always wins. Selfishness will end in ruin. This is the law of the Universe (Yuga Dharma). He further explained to Arjuna that greed of Kauravas will cause them ruin.” Kauravas were not prepared to give their rightful share to the Pandavas. They wanted to keep everything to themselves, including what belongs to others. This selfishness is called greed   

Sathya Sai Baba

” என்னை இங்கு சங்கராச்சார்யா என்று சொல்லுவா …” !!!

அம்பத்தூரில் வசித்த கம்பெனி தொழிலாளி ஒருவர். அவர் மனைவி ஒரு நோயாளி.அவருக்குப் பிறந்த பிள்ளைகளோ பொறுப்பு இல்லாமல் தறுதலையாக அலைந்தார்கள். இப்படி சிரமங்களையே சந்தித்துக் கொண்டிருந்த அவருக்கு நண்பர் ஒருவர். மகானின் பக்தர்.

“கருணைக் கடலாக இருக்கும் காஞ்சி மகானிடம் ஒரு தடவை சென்று தரிசித்தபின் அவரது ஆசியைப் பெற்றுக்கொண்டு வா… உன் சிரமங்கள் எல்லாம் காற்றோடு போய்விடும்”- என்று யோசனை சொன்னார்.

அப்போதிலிருந்து அவரது மனதில் “காஞ்சி மகானைப் பார்க்க வேண்டும்” என்கிற எண்ணம் வேர் விட ஆரம்பித்தது.

தொழில் சம்பந்தமாக அவர் வெளியூர் செல்லும்போது காஞ்சி வழியாகப் போகும் சந்தர்ப்பம் வரவே,காஞ்சியில் இறங்கி யாரிடமோ வழிகேட்டு வரும்போதுதான் அவரது
மனதில் அந்த எண்ணம் தோன்றியது.

“உலகோர் போற்றிப் புகழும் நிலையில் பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக நிற்க, பரிவாரங்களுடன் அமர்ந்திருக்கும் இந்த சாமியாரைத் தான் எப்படிப் பார்ப்பது” என்கிற
எண்ணத்துடன் இவர் அந்த குறிப்பிட்ட இடத்தை நோக்கிச் சென்று கொண்டு இருந்தார். இவர் எதிர்பார்த்த மாதிரி ஆடம்பரங்களோ..ஆரவாரமோ ஏதும் தென்படவில்லை.

“அந்த சாமியார் வேறு எங்கோ போய்விட்டார் போலிருக்கிறது” என்று இவர் நினைத்துக் கொண்டார். தனக்கு விடிவுகாலம் பிறக்க அவரிடம் ஆசி பெறலாம் என்று வந்த அவரது
கடுகளவு ஆசையும் மறையத் தொடங்கியது.

யாரிடம் போய்க்கேட்பது? ஆள் அரவமே இல்லையே என்று அவரது கண்கள் தேடியபோது,ஒரு பெரியவர் மட்டும் அவரது கண்களில் தென்பட்டார்.

வந்தவர் அவரிடம் கேட்டார்.

“இங்கே ஒரு சன்யாசி இருக்காராமே…அவர் எங்கே போயிருக்கார்?”

“அவரையா பார்க்க வந்தேள்? யார் சொல்லி அனுப்பினா?”

இந்தக் கேள்வியும் அவரது அமைதியான முகபாவமும் வந்தவரின் உள்ளத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தின. அதனால் வந்தவர் தனது குடும்ப சூழ்நிலையையும் தற்போது
ஏற்பட்டுள்ள வறுமையான சூழ்நிலையையும் சொல்லி, தன் நண்பர் ஒருவர் இங்கே இருக்கும் சாமியாரைப் பார்த்து ஆசிகள் வாங்கச் சொன்னார் என்றார்.

“அவர் கிட்டே சிரமங்களைச் சொன்னா தீர்வு கிடைக்குமா என்ன?” கேள்வி பிறந்தது.அவருக்கு

வந்தவரோ, ‘இந்த வயதான கிழவர் தன்னிடம் ஏன் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறார்’ என்று நினைத்தார்.

வயதான பெரியவர் தொடர்ந்தார். “சிரமம்..சிரமம்னு சொல்றியே..அதை ஏன் நீ படறதா நினைக்கிறே..அந்தப் பாரம் உன்னோடது இல்லையின்னு நீ நினைச்சிட்டா மனம் லேசாயிடுமே…”

இது எப்படி சாத்தியம் என்று வந்தவருக்கு மனதில் சந்தேகம்.

“அது எப்படி சுவாமி? நான்தானே அத்தனை கஷ்டங்களையும் தாங்கிக்க வேண்டிருக்கு..என் கஷ்டங்களை வேறு யார் சுமப்பா?”

வயதான பெரியவர் சிரித்தபடியே சொன்னார். “இப்போ ஊருக்குப் போறோம்னு வையுங்க..உங்களோட பெட்டி,மூட்டை முடிச்சு எல்லா பாரத்தையும் சுமந்துண்டு
போய்த்தானே ஆகணும்? அப்ப என்ன பண்றோம்? யாராவது கூலியாள் கிட்டே குடுத்து சுமக்கச் சொல்றோம் இல்லையா? அது போலத்தான் நாம படற சிரமங்களை
நம்மது இல்லே,பகவான் பார்த்துப்பான்னு பூரண சரணாகதி அடைஞ்சுட்டா நமக்கு எந்த பாதிப்பும் வராது..”

இதைக் கேட்ட அம்பத்தூர்காரருக்கு கொஞ்சம் மனத்தெளிவு ஏற்பட்டது போல் இருந்தது.

அவர் வயதான பெரியவரைப் பார்த்து, “பெரியவரே இப்ப எனக்கு கொஞ்சம் மனசு லேசானது போல இருக்கு.என்பாரம் உன்னோடதுன்னு பகவான்கிட்டே சொல்லிடறது நல்லதுதான்..நீங்கள் சொல்ற மாதிரி இந்த சாமியார் கிட்ட வந்து என் பாரங்களை இறக்கி வெச்சுட்டுப் போகலாமுன்னு வந்தா, இங்கே அவரைப் பார்க்க முடியல்லே..
எனக்கு உடனே மெட்ராஸ் போயாகணும்…காத்திருந்து அவரைப் பார்க்க முடியாது.எனக்கு இன்னமும் நல்ல காலம் வரலே போலத் தோணுது. ஆனா உங்களாண்டை பேசினதுனாலே மனசுக்குக் கொஞ்சம் இதமாக இருக்கு…ஆமா நீங்க யாரு? இதே ஊரா?”என்று கேட்டார்.

வயதான பெரியவர் முகத்தில் சிரிப்பு. “என்னை இங்கே சங்கராச்சார்யார்னு சொல்லுவா” என்று சொன்னதும் அம்பத்தூர்காரருக்கு இன்ப அதிர்ச்சி.

வியப்போடு அந்த எளிமையின் உருவத்தைப் பார்த்தவண்ணம் ஒன்றுமே தோன்றாமல்…மலைத்து நின்றார்.

அதுவரை அந்த மனித தெய்வத்திடம் அஞ்ஞானமாகப் பேசிக் கொண்டிருந்தவர் சற்றே திரும்பிப் பார்க்க, அந்தத் தவமுனிவரைத் தரிசிக்க ஒரு பெருங்கூட்டமே காத்திருந்தது.

இத்தனை நேரம் ஒரு மாபெரும் மகானிடம் சர்வ சாதாரணமாகப் பேசி, அவரிடம் யோசனைகள் பெற்றதை எண்ணி அந்தப் பக்தர் வியந்தார்.

“நமஸ்காரம் பண்ணிக்கிறேன்” என்ற பக்தரை சட்டையை கழற்றும்படி சொன்னார் மகான். தான் பூணூல் அணியாததால் சட்டையைக் கழற்ற அந்தப்பக்தர் யோசிக்க, மடத்து
சிப்பந்தி ஒருவரிடம் சொல்லி அவரை உள்ளே அழைத்துக் கொண்டுபோய் பூணூல் அணிவிக்கச் செய்து ஆசிர்வதித்தார் மகான்.

யாருக்குமே கிட்டாத மாபெரும் பாக்கியம் அவருக்குக் கிடைத்தது. தொடர்ந்து அவரது இன்னல்கள் யாவும் பனிபோல் விலகின…..

எளிமைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

Read more: http://periva.proboards.com/thread/4661/#ixzz3FNSj5vJE

Natarajan

Eid In India …. Few Pictures reflecting the Festive and Religious Moments …

Children celebrating Eid-al-Azha at the historic Jama Masjid in New Delhi. Photo: Sandeep Saxena

 

Children exchange greetings at Idgah Masjid on the occasion of Eid-al-Azha in Nalgonda on Monday. Photo:Singam Venkataramana

 

People greet each other at Jama Masjid on the occasion of Eid al-Azha in New Delhi on Monday. Photo: Sandeep Saxena

 

People offer prayers at Jama Masjid on the occasion of Eid al-Azha in New Delhi on Monday. Photo: Sandeep Saxena

 

Devotees gathered at the Ferozshah Kotla in Delhi to offer Eid prayers

SOURCE:::: The Hindu.com

Natarajan

” ஐப்பசி மாதத்தில்… காவிரியில் கங்காதேவியும் வாசம் செய்கிறாள்.

photo (19)

புண்ணிய நதிகள் ஏழு. அவற்றில் முதலாவது- கங்கை; 7-வது நதி- காவிரி. இந்த நதியில் பொன் எனும் உலோகமும் கலந்திருப்பதால், ‘பொன்னி’ என்றும் பெயர் உண்டு காவிரிக்கு!


புண்ணிய நதிகளான கங்கையையும் காவிரியையும் இணைத்தால், இந்தியாவில் தண்ணீர்ப் பிரச்னையே இருக்காது என்று சொல்லப்படுகிறது. ஆனால், இந்த இரண்டு நதிகளையும் என்றைக்கோ இணைத்து விட்டது புராணம்!

என்ன… ஆச்சரியமாக இருக்கிறதா?

துலா மாதம் எனப்படும் ஐப்பசியில், அதிகாலை வேளையில் எழுந்து வீட்டில் நீராடுவது நல்லது. நதியில் நீராடுவது மிகச் சிறப்பு. அதிலும் குறிப்பாக காவிரியில் அல்லது அதன் உற்பத்தி ஸ்தானமான தலைக்காவிரியில் நீராட வேண்டுமாம். முக்கியமாக, மயிலாடுதுறையில் உள்ள துலா கட்ட காவிரியில் நீராடுவது வெகு விசேஷம்!

துலா புராணப்படி, ஐப்பசி மாதத்தில்… காவிரியில் கங்காதேவியும் வாசம் செய்கிறாள்! ஐப்பசி மாதக் கடைசி நாளில், இங்கே நீராடுவதற்கு ‘கடை முழுக்கு’ என்று பெயர். இந்த நாளில், மயிலாடுதுறையில் உள்ள அனைத்து ஆலயங்களில் குடிகொண்டிருக்கும் மூர்த்திகளும் காவிரியில் எழுந்தருளி, தீர்த்தவாரி கண்டருளுவர்!

வான் நதியாம் கங்கையை பூமிக்கு அழைத்தான் பகீரதன்.

”எண்ணற்ற பாவங்களைச் செய்துவிட்டு, எல்லோரும் அதனை என்னிடம் கொண்டு வந்து சேர்ப்பார்கள். நான் வரமாட்டேன்” என்று தயங்கி மறுத்தாள் கங்காதேவி.

உடனே பகீரதன், ”பாவம் செய்பவர்களை ஏன் சிந்திக்கிறாய்? எத்தனையோ மகான்கள் நீராடுவார்களே…” என்று சொல்ல, பூமிக்கு வர சந்தோஷத்துடன் சம்மதித்தாளாம் கங்காதேவி! அதன்படியே வடக்கே குடிகொண்டாள். அதுமட்டுமா? தென்னக மக்களும் பயனுறும் வகையில், இங்கே… ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் வாசம் செய்கிறாள்!

இதையறிந்த பக்கத்து ஊர்க்காரர் ஒருவர்… பாவம், அவருக்கு கால் ஊனம்… கடைமுழுக்கு நாளன்று மிகவும் கஷ்டப்பட்டு நடந்து வந்தார். கடைமுழுக்கின் மறுநாள்தான் அவரால் துலா கட்டத்துக்கு வந்து சேர முடிந்தது. இதையறிந்து வருந்திய கங்காதேவி, அந்த நாளிலும் காவிரியில் இருந்தாள். இதனால், கடைமுழுக்குக்கு அடுத்த நாளை (கார்த்திகை முதல் நாள்) ‘முடவன் முழுக்கு’ என்பர்!

Maha Periyava 30

காஞ்சி பெரியவாள் ஒருமுறை மயிலாடுதுறையில் முகாமிட்டிருந்தார். காவிரி ஸ்நானம் செய்வதில் லயித்துப் போவார் ஸ்வாமிகள். இந்த வேளையில், கோயில் திருப்பணி விஷயமாக மடத்து ஊழியர் ஒருவரை அழைத்த ஸ்வாமிகள், ஊரில் உள்ள பிரமுகர் ஒருவரது பெயரைக் குறிப்பிட்டு, அவரிடம் ஆலயத்துக்கான கைங்கர்யத்தைச் செய்ய முடியுமா என்று கேட்டுவரும்படி பணித்தார்.

மடத்தில் இருந்து எந்தவொரு வேலையாக வெளியே கிளம்பினாலும், விநாயகருக்கு சூரைத்தேங்காய் உடைத்து வணங்கிவிட்டுச் செல்வதே வழக்கம். இதனை அந்த சிப்பந்தியிடம் நினைவுபடுத்தினார் ஸ்வாமிகள். அப்படியே செய்தார் ஊழியர்!

சிறிது நேரம் கழிந்தது. பிரமுகரைப் பார்த்து விட்டு வந்த மடத்தின் ஊழியர், ”போன காரியம் நிறைவேறவில்லை. அதுமட்டுமின்றி, விக்ன விநாயகருக்கு தேங்காய் உடைத்தேன்; அவர் விக்னத்தைப் போக்குவதற்கு பதிலாக விக்னத்தை உண்டு பண்ணி விட்டார்!” என்று சொல்ல, மகாபெரியவாளின் முகம் மாறியது. எவருடனும் எதுவும் பேசாமல், அன்றைய பூஜை அனுஷ்டானங்களில் மூழ்கிப்போனார் ஸ்வாமிகள்.

அந்த ஊழியர் ஆடிப்போனார். ‘எல்லோரிடமும் பேசுவது போலபெரியவாளிடம் பேசியது தவறுதானே?’ என்று வருத்தப்பட்டார். ‘குருநாதரின் மனம் நோகும்படி நடந்து கொண்டோமே…’ என்று தவித்து மருகினார். சாப்பிடவும் முடியவில்லை; வேறு வேலைகளில் ஈடுபடவும் மனம் ஒத்துழைக்கவில்லை.

ஒருகட்டத்தில், விறுவிறுவென ஸ்வாமிகளிடம் சென்று, அவரை விழுந்து நமஸ்கரித்து மன்னிப்பு கேட்டார் ஊழியர். ஆனால் பெரியவாள், ”ஒரு தப்பும் செய்யலியே நீ? வருத்தப்படாதே! என்ன… ‘விக்னத்தை களையறதுக்கு பதிலா உண்டு பண்ணிட்டார்’னு நீ சொன்னதுதான் தப்பு. இன்னொரு விஷயம்… நீ தேங்காயை உடைச்சதுமே, ‘இந்த வேலை இந்த பிரமுகரால நடக்காது; வேற ஒரு பிரமுகரை அனுப்பி வைக்கிறேன்’னு பிள்ளையாரே சொல்லிட்டார். அப்படியிருக்க, விக்னத்தை உண்டு பண்ணிட்டதா சொல்லிட்டியே… அவ்ளோதான்!” என்று மெள்ள புன்னகைத்தார் ஸ்வாமிகள்.

தெய்வத்திடம் நாம் வைக்கிற நியாயமான பிரார்த்தனைகள் ஒருநாளும் வீண் போகாது! நாம் எதிர்பார்த்த நேரத்தில், எதிர்பார்த்தபடி நடக்காவிட்டாலும்கூட, ஏதோவொரு நாளில்… நிறைவேறியே தீரும்! இதை உணர்ந்து, தெளிந்து வணங்கும் நாளெல்லாம் திருநாள்தான்!

மஹா பெரியவா அருள்வாக்கு : –

தானம், தொண்டு இவற்றால் மற்றவர்கள் லாபமடைந்தாலும் அடையாவிட்டாலும் நம்முடைய மனஸின் அஹங்காரம் குறையும். எல்லாரும் சேர்ந்து குளம் வெட்டினால், அப்போது கொஞ்சம் கொஞ்சம் நம் அஹம்பாவத்தையும் வெட்டி எடுக்கிறோம். குளத்தில் ஜலம் வருவதைவிட, நம் நெஞ்சில் ஈரம் வருகிறதே அது பரமாத்ம ஸ்வரூபத்தை நாம் உணருவதற்குப் பிரயோஜனமாகும்.

SOURCE CREDIT:::: balhanuman”s blog …balhanuman@wordpress.com

Natarajan

” இவர் பெரிய ‘பில்டர்’…உனக்கு தெரியுமா …? ”

“ஆயிரம் கன்றுக்குட்டிகள் நடுவில் ஒரு தாய்ப்பசு

தன் கன்றை அடையாளம் கண்டுகொள்ளாதா, என்ன?

Featured Image -- 11217

(வலையில் படித்தது)

ஒரு வைதிகர், எளிய வாழ்க்கை, போதுமென்ற

மனமே பொன் செய்யும் மருந்து.

கோயில் திருப்பணிகளில் மிகவும் ஆர்வம்.

தன் கிராமத்திலுள்ள பிள்ளையார் கோயில்,

மாரியம்மன் கோயில்,சிவன் கோயில்

எல்லாவற்றுக்கும் அரும்பாடுபட்டுத்

திருப்பணிகள் செய்தார்.

பெரிய தொகை நன்கொடை கொடுப்பவர்கள் கூட

அவரிடமிருந்து ரசீது எதிர்பார்க்கமாட்டார்கள்.

அவ்வளவு சுத்தம். அவருடைய சேவையை அண்டை

கிராமத்தார்களும் பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஒரு வயற்காட்டில் ஒரு பெரிய சிவலிங்கம்

தன்னந்தனியாக வெயிலில் காய்ந்து, குளிரில்

நடுங்கிக் கொண்டிருந்தார். இந்த வைதிகர்

முயற்சியால் இப்போது அவர் (சிவலிங்கம்)

மழை-காற்றுக்கு அஞ்சாமல்,கருவறையில்

கோயில் கொண்டுள்ளார்.

இப்படி எத்தனையோ கோயில்கள்.

ஆனால்,வைதிகர் எந்தக் கும்பாபிஷேகத்திலும்

தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதில்லை.

கூட்டத்தில் ஒரு மூலையில் ஒண்டிக்கொண்டு நிற்பார்!

தம்பட்டமே இல்லாத இவரைப் பற்றிப்

பெரியவாளுக்கு தெரிந்திருந்தது.

‘எப்படி?’ என்றெல்லாம் கேட்கக்கூடாது.

அது சிவரகசியம்!

அந்த வைதிகர் அடிக்கடி ஸ்ரீமடத்துக்கு வருபவர் அல்லர்.

அவருக்கு ஓய்வு கிடைத்தால்தானே வெளியே போவதற்கு!

அவர் வழி அப்பர் வழி, ஆமாம். Upper வழி.

உழவாரப் பணி, கோபுரங்களில் வேலை,நாலைந்து

பையன்களை உடன் வைத்துக்கொண்டு

சந்தடி இல்லாமல் சிவத்தொண்டு செய்வார்.

ஒருதடவை பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார்.

பெரியவாளை வந்தனம் செய்துவிட்டு ஓரமாக

நின்றார். வழக்கமான ஊர்-பேர் விசாரணைகூடச்

செய்யவில்லை பெரியவாள்.

அந்தச் சமயத்தில் பரம பக்தர்களான பணக்காரத்

தம்பதிகள் வந்து வந்தனம் செய்துவிட்டு எழுந்தார்கள்.

பெரியவாள், தொண்டருக்கு என்ன குறிப்பு

கொடுத்தாரோ, தெரியாது.விலையுயர்ந்த

ஒரு சால்வையைக் கொண்டுவந்து தட்டில்

வைத்தார் ஓர் அணுக்கத் தொண்டர்.பெரியவாள்,

அந்தப் பணக்காரப் பக்தரை அழைத்து, அந்தச்

சால்வையை, வைதிக பக்தருக்குப் போர்த்தச்

சொன்னார்கள்.

எல்லோருக்குமே வியப்பாக இருந்தது.

இந்த வைதிகர் என்ன, அவ்வளவு பெரிய

பண்டிதரா? யாகம் செய்தவரா..?

பெரியவா பணக்காரரிடம் சொன்னார்கள்.

“இவரைப் பார்த்திருக்கிறாயோ?”

“இல்லை”

“இவர் அட்ரஸ் தெரியுமோ?”

“தெரியாது”

“எனக்குத் தெரியும்! சொல்லட்டுமா?”

(என்ன குறும்பு!)

“சாஸ்திரிகள் கேர் ஆஃப் சிவன் கோயில்!

இவர் பெரிய Builder.என்ன? பல சிவன்களுக்கு

வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்…!”

பக்தர்கள் கூட்டம் நெகிழ்ந்து உருகியது.

ஒரு பத்திரிகையில்கூட இவர் புகைப்படத்தைப்

பார்த்ததில்லையே…

“இவர் சிவப்பழம்…பிரசாதத்தோட நெறய்ய

பழங்கள் கொடு…”

அறிமுகமே இல்லாத இவர், தூய சிவப்பணியாளர்

என்பது பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?.

அது எந்தவகை ஸித்தி?

ஆயிரம் கன்றுக்குட்டிகள் நடுவில் ஒரு தாய்ப்பசு

தன் கன்றை அடையாளம் கண்டுகொள்ளாதா, என்ன?

SOURCE:::: http://www.periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/8060/#ixzz3Eu6M6EaW