தைப்பூசமும் வேல் வழிபாடும் …

தைப்பூசம்-ன்னா என்ன?
* பழனிப் பாதயாத்திரை
* மலை முழுதும் பாய்ந்தோடும் காவடி ஆறு!
* வடலூரிலே வள்ளலார் சோதி தரிசனம்,
* திருவரங்கத்திலே தமிழ்த் திருநாளாம் தைத்திருநாள்!!
…இப்படி பல விழாக்கள்!

என்னவன் முருகனுக்கும் தைப்பூசத்துக்கும் என்ன தொடர்பு?

* முருகன் தோன்றிய நாள் = வைகாசி விசாகம்
* அறுவரும் ஒருவர் ஆன நாள் = கார்த்திகையில் கார்த்திகை
* அன்னையிடம் வேல் வாங்கிய நாள் = தைப்பூசம்
* அசுரரை அழித்தாட்கொண்ட நாள் = ஐப்பசியில் சஷ்டி
* வள்ளியைத் திருமணம் புரிந்த நாள் = பங்குனி உத்திரம்

இப்படி…
அன்னையிடம் வேல் வாங்கி,  முதன் முதலாக,  திருக்கையில் வேல் ஏந்திய நாளே = தைப்பூசம்!

இந்த வேல் வாங்கிய நாளிலே, “வேல்” என்றால் என்ன?-ன்னு கொஞ்சம் பார்ப்போமா?
வேல் என்பது தமிழ்த் தொன்மத்தின் தனித்த அடையாளம்!!

வேல், சங்கத் தமிழில் எப்படியெல்லாம் வலம் வருகிறது….



1. வேல் – பெயர்க்காரணம்:

வேலுக்கு அப்படி என்ன சிறப்பு-ன்னு கேக்குறீங்களா?
வெல் = வேல்!
’வெல்’ என்ற வினைச்சொல்லே நீண்டு ’வேல்’ என்ற பெயர்ச்சொல் ஆகிறது!
ஆகவே, வேல் = வெற்றி!

2. வேல் – தமிழ்த் தொன்மம்:

ஆயிரம் ஆயுதங்கள் இருப்பினும், தமிழ் மன்னர்களின் தனித்த பெருமிதம் = வேல்!
ஆண்டாளே, வென்று பகை கெடுக்கும் நின் கையில் “வேல்” போற்றி-ன்னு தான் மாயோனாகிய கண்ணனைப் பாடுறா!
வேலும் சங்கும் சங்கத் தமிழ் மரபு! திருமங்கை ஆழ்வார் கையில் இப்பவும் வேல் உண்டு!

சங்க காலத் தமிழ் மண்ணில், வேல் வழிபாடே மிகுந்து இருந்தது! பின்னாளில் தான் உருவமும், ஆறு முகங்களும், பன்னிரு கரங்களும்!
ஆகமம், அது இது-ன்னு நுழைத்த பின்பே, ஒரு சாராரின் தலையீட்டால், மற்ற வழிபாடுகள் மெல்ல மெல்லப் புகுந்தன!

சிலப்பதிகாரத்தில், வேலுக்கு எனத் தனிக் கோட்டமே இருக்கும்! இந்த வேல் வழிபாடு நாளடைவில் நின்று விட்டது!
வேல் வழிபாடு-ன்னா நாகரிகம் இல்லாதவர்கள் கும்புடுவது, விக்ரஹாதி மந்திர வழிபாடே நாகரிகம் என்று ஆகி விட்டது:(

பல தொன்மையான கோயில்களில் முருகன் சிலையே இருக்காது! வெறும் வேல் வழிபாடு தான்!
* பழமுதிர்சோலை, திருச்செங்கோடு,
* ஈழத்தில் செல்வர் சந்நிதி,
* மலேசியாவில் பத்துமலை,
* பல கிராம ஆலயங்கள் எல்லாம் வேல் வழிபாடு தான்!

 

சிக்கல் சிங்காரவேலன் வேல் வாங்கும் காட்சி:

முருகன் அன்னையிடம் வேல் வாங்கும் காட்சியை, சிக்கல் சிங்காரவேலர் சன்னிதியில், ஒவ்வொரு ஆண்டும் நடித்துக் காட்டுவது வழக்கம்!
அப்போது சிங்காரவேலர் திருமேனி, வேலின் கொதியால் வியர்க்கிறது என்று சொல்வாரும் உளர்!

முருகன் திருமேனியைத் துடைத்து எடுப்பதும் வழக்கம்! எந்தத் திருமுழுக்கும் (அபிஷேகம்) இல்லாமலேயே, ஒத்தி எடுக்கும் துணிகள், ஈரமாய் நனைவதைக் காணலாம் என்று கூறுவர்!

முருகன் வேறு, வேல் வேறு அல்ல!

வேலுக்கு = உடம்பிடித் தெய்வம்-ன்னே பேரு!
= உடன் பிடித் தெய்வம்!
முருகனைப் போலவே வேலுக்கும் ஆறு முகம் உண்டு! ஆறு படைகள் உண்டு!பார்த்து இருக்கீங்களா?

இன்னிக்கு பார்த்தீங்கன்னா….பல படைவீடுகளிலும் முருகன், தன் கையில் வேல் ஏந்தியே இருக்க மாட்டான்!
அவன் தோளிலே தனியாக, சார்த்தியே வைத்திருப்பார்கள்!

ஏனோ, அதைப் பார்க்கும் போதெல்லாம்….நானே அவன் தோளில் சாய்ந்து கொள்வது போல ஒரு உணர்வு எனக்கு!

வேல் வேறு, முருகன் வேறல்ல!
வேலே = முருகன்! முருகனே = வேல்!
முந்து முந்து…..முருகவேள் என்னுள் முருகவேலாய் முந்து!!

வெஞ்சமரில் அஞ்சேல் என “வேல்” தோன்றும்…முருகா என்று ஓதுவார் முன்!

source::::http://madhavipanthal.blogspot.com.au/

natarajan

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்வோம் …

வைகுண்ட ஏகாதசியான இன்று, இந்த ஸ்தோத்திரத்தைப் படித்து ரங்கநாதர்அருள் பெறுவோம்.

 

* காவிரி நதியின் நடுவில் இருக்கும் ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டவரே! ஏழு திருமதில்களால் சூழப்பட்டவரே! தாமரை மொட்டு போன்ற அழகான விமானம்
கொண்டவரே! ஆதிசேஷன் என்னும் கட்டிலில் யோக நித்திரையில் ஆழ்ந்திருப்பவரே! கருணைக் கடலாகத் திகழ்பவரே! ரங்கராஜரே! உம்மைப் போற்றுகிறேன்.
* ஸ்ரீதேவி, பூதேவியரால்வணங்கப்படுபவரே! இடக்கையை இடுப்பில் வைத்தபடி துயில்பவரே! கஸ்தூரி மணம் கமழும் “ஊர்த்துவ புண்ட்ரம்’ என்னும் திலகத்தை
நெற்றியில் கொண்டவரே! காது வரை நீண்டிருக்கும் பெரிய அழகான தாமரைக் கண்களை உடையவரே! தரிசிக்கும் பக்தர்களின்உள்ளங்களைக் கொள்ளை
கொள்பவரே! தாமரை மலர் போன்ற திருமுகம் கொண்டவரே!
சம்சார சாகரத்திலிருந்து உயிர்களைக் காப்பவரே! உம்மைத் தரிசித்த பாக்கியத்தைத் தந்தருள வேண்டும்.
* மது, கைடபர் என்னும் அரக்கர்களை அழித்தவரே! இந்திர நீலமணி போல பிரகாசம் மிக்கவரே! நாராயணா, மாதவா, கேசவா, ஹரி, முகுந்தா, முராரி, கோவிந்தா
என்னும் திருநாமங்களால் போற்றப்படுபவரே! ஸ்ரீரங்கப் பட்டணத்தை அலங்கரிப்பவரே! நீராடுவோரின் பாவம் போக்கும் காவிரிக் கரையில் நித்யவாசம்
செய்பவரே! புண்ணியம் மிக்கவரே! கீர்த்தி நிறைந்தவரே! எப்போதும் எங்களைக் காத்தருள வேண்டும்.
* லட்சுமியின் விலாசமாகத் திகழும் ஸ்ரீரங்க நகரில் வாழ்பவரே! வேத கோஷம் கேட்டபடி துயில்பவரே! மோட்சத்தை அருள்பவரே! முத்துக்கள் இழைத்த கிரீடம் அணிந்தவரே! மங்கள குணம் கொண்டவரே! தேவியர் வருடுகின்ற திருப்பாதங்களை உடையவரே! உலக உயிர்களைக் காப்பவரே! பிரம்மதேவரால் பூஜிக்கப்பட்டவரே! செல்வ வளம் தருபவரே! எங்கள் விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றி வைப்பீரா..

source:::: Dinamalar Tamil Daily

natarajan

பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள் !!!

பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன. அவைகளில் சில………

* திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் “சிலாதோரணம்” என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

* எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாக இருக்கின்றன.

* ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பாறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை.

* ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது. பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக் கொதிக்கின்றன.

திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாக இருக்கின்றன.

2* திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிகவும் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.

* ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப்படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டிச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

* ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12,500 ரூபாய் செலுத்த வேண்டும். வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

* உள்சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

* சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

* ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

* ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.

* பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.

* ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

* அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

* ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலை சுமார் 80 ரூபாய்.

* மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ணதேவராயர், அச்சதராயர் போன்றோர். ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்5கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.

* ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார்.

* திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

* வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

* சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதி வைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.

* அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

* ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.

* எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.

* ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.

* 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன் செலுத்தியிருக்கிறார்.1

* திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.

* திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.

* ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.

* ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

* கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

4* வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் ” வேங்கடமெனப்பெற்ற” என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.

* திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்.

* திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.

source:::: in ஆன்மீக அர்த்தங்கள்கட்டுரைகள்  & Dinamani Jothidam

natarajan

 

Message for the Day..”Virtue Of Kshama is not Achieved by Reading Books”…

Divinity is the manifestation of Prema and Kshama. The virtue of Kshama (forbearance, unlimited patience and ability to forgive and forget) is not achieved by reading books or learnt from an instructor. Nor can it be received as a gift from someone. This prime virtue, can be acquired solely by self effort, by facing squarely diverse problems, difficulties of various sorts, anxieties, suffering as well as sorrow. In the absence of Kshama, you will become susceptible to all kinds of evil tendencies. Hatred and jealousy easily take root in a person lacking this virtue. Kshama gives complete protection to the one who possesses it. Hence Kshama, a priceless possession, is the greatest, grandest and the noblest amongst all virtues. Kshama is all encompassing.  

 

Sathya Sai Baba

ஜீவகாருண்யம் அன்பின் ஒரு பகுதி ….

அன்பைப் பேணுபவர்கள், அன்பு செலுத்த விரும்புகிறவர்கள், அன்பை மதிப்பவர்கள், அன்பாக இருக்க விரும்புபவர்கள் காருண்யத்தை கடைப்பிடித்தேயாக வேண்டும்.
அருளாளர் மாணிக்கவாசகரிடம் “ஐய நீவிர் எதைக் கண்டு மிகவும் பயப்படுவீர்கள்’ என்று வினவினார்கள். கள்வரோ, கொலைகாரரோ, காட்டு மிருகங்களோ அவருக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை. “அன்பிலார் தமைக் கண்டு அஞ்சுமாறே’ என்றார். அன்பிலாதவர்கள் கொடியவர்களாக, அஞ்சப்பட வேண்டியவர்கள் என்பது அவரது கணிப்பு.
திருமூலர் “அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்’ என்றார். அன்புதான் இறைவனென்றால் அன்புக்கு ஒப்பிட வேறு ஒன்றும் இல்லை.
ஜீவகாருண்யத்தை வெகுவாகப் போற்றி இறைவனை நாடுபவர்கள் அதைக் கடைபிடிக்க வேண்டுமென்று ஆழமாக எடுத்துச் சொன்னவர்களுள் வள்ளலார் முன்னிலையில் நிற்கிறார். அவருடைய பாடல்கள் ஜீவகாருண்யம் என்பது மனிதர்களையும், விலங்குகளையும் மட்டுமல்லாது செடி, கொடி பயிர்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கும் என்று பேசுகிறது.
“வாடிய பயிறைக் கண்டோ தெல்லாம் வாடினேன்
பசியினால் இளைத்தே,
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக்
கண்டுளம் பதைத்தேன்.
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர்
உறக்கண்டுளந்துடித்தேன்,
ஈடின்மானிகளாய் ஏழைகளாய் நெஞ் சிளைத்தவர்
தமைக்கண்டே இளைத்தேன்’ என்று வள்ளார் பாடினார். இத்துடன் அவர் நிற்கவில்லை.
மற்றவர்களுடைய துன்பத்தைப் போக்கும் வல்லமையை வரமாகத் தரும்படி வள்ளலார் இறைவனிடம் வேண்டினார்.
ஜீவ காருண்யத்தைப் பற்றி மனதை உருக்கும் திருக்குறள் ஒன்று உண்டு.
“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்’
“உயிர்களைக் கொல்லாதவன், விலங்குகளின் தசையை உண்ணாதவன், பாதையில் நடந்து செல்லும் பொழுது பாதையில் அவனைப் பார்க்கின்ற உயிர்களெல்லாம் அவனைக் கைகூப்பித் தொழும்’ என்று வள்ளுவர் சொல்கிறார்.
திரு. சுகிசிவம் அவர்கள் இது பற்றி ஒரு கருத்துச் சொல்வார்கள். ஒரு பாம்பு போகும் போது அதைச் சீண்டினால் அது தனது உயிருக்கு ஆபத்து என்று அறிந்தவுடன் தன் உடலிலுள்ள விஷத்தையெல்லாம் தேக்கிக் கடித்து விஷத்தை உமிழ்கிறது. இதைப்போல் எந்த ஒரு பிராணியும் அதனுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும்போது தன் உடலிலுள்ள விஷத்தை வெளியில் கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை. கொல்லப்படும்போது எல்லா விலங்குகளும் தங்களுடைய உடம்பிலுள்ள விஷத்தை வெளிக் கொணர்ந்து விடுகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை.
ஜீவன்களுக்கு கருணைக் காட்டுவதில் சத்தியசாயி பகவான் மிக உச்சத்தில் காணப்படுகிறார்.
ஒருமுறை பகவான் காரில் போய்க் கொண்டிருந்தார்கள். பாதையில் ஒரு பாம்பு குறுக்கே ஓடியது. ஓட்டுனர் வண்டியை பிரேக் போடாமல் பாம்பின் மேல் வண்டியை ஏற்றிவிட்டான். புட்டப்பர்த்தி வந்ததும் பகவான் வாகனத்திலிருந்து இறங்கினார். நேரே தனது அறைக்குச் சென்றார். ஓட்டுனரை கூப்பிட்டு அனுப்பினார். ஓட்டுனர் வந்தவுடன் தனது மேலங்கியை கழற்றி ஓட்டுனருக்குக் காட்டினார். முதுகிலே டயரின் தடம் பதிந்திருந்தது. பகவான் “பார் அந்தப் பாம்பின் மேல் நீ காரை ஏற்றவில்லை என் முதுகின் மேல் ஏற்றிவிட்டாய்’ என்றார். ஓட்டுனருக்கு வியர்த்தது. கையும் காலும் ஓடவில்லை. “இனிமேல் இம்மாதிரியாக நடந்து கொள்ளாதே’ என்று எச்சரித்து அனுப்பி வைத்தார்.
இன்னொரு முறை சித்திராவதி நதிக்கு அக்கரையிலிருந்து ஒரு குடும்பம் பகவானைப் பார்க்க வந்திருந்தார்கள். அவர்கள் இரண்டு நாட்கள் தங்கினார்கள். பகவானிடம் விடை பெற்று, தங்கள் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். பகவான் உடனே அவர்களை கூப்பிட்டு அனுப்பினார். “நீங்கள் மாட்டு வண்டியில் தானே வந்தீர்கள்’ என்று பகவான் கேட்டார். தொடர்ந்தும் சொன்னார். “நான்கு பெரியவர்களும், மூன்று குழந்தைகளும் இருக்கின்றீர்கள்’. சித்திராவதி நதிப்படுக்கை மணலாக இருக்கிறது. ஆற்றøக் கடந்த பிறகு நீங்கள் வண்டியில் ஏறிக் கொள்ளுங்கள். அதற்கு முன் வண்டியில் ஏறினால் மாடு மிகவும் கஷ்டப்படும். மாட்டைக் கஷ்டப்படுத்தாதீர்கள் என்று அவர்களுக்கு அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார். எங்கோ இருக்கின்ற மாட்டுக்காக இறைவனின் இதயம் எவ்வளவு கனிகிறது என்று பாருங்கள்.
சாயி பல்கலைக்கழகத்தில் உடற்பயிற்சி விளையாட்டுகள் நடக்கின்றன. அதில் அங்கமாக மார்ச் பாஸ்ட் என்ற அணிவகுப்பு நடக்கிறது. அச்சமயம் பார்த்து நிறைமாதக் கர்ப்பமாகத் தெரியும் ஒரு நாய் மைதானத்துள் புகுகிறது. விளையாட்டு ஆரவாரங்களை அது சற்றும் கவனியாமல் நேரே பல்கலைக்கழக வேந்தனான பகவானை நோக்கி ஓடுகிறத. விளையாட்டுக்களை பார்வையிட பகவான் மேடையிலே அமர்ந்திருக்கிறார். அவரை நோக்கி அந்த நாய் ஓடுகிறது. பகவானை நோக்கி ஓடுகிற நாயை எப்படித் துரத்துவதென்று எல்லோரும் திகைத்துக் கொண்டிருந்தார்கள். அணியை விட்டு விலகிப் போய் அந்த நாயை விரட்டுவதை சுவாமி ஏற்றுக்கொள்வாரா என்று மாணவர்கள் கலங்கிக் கொண்டே லெஃப்ட்ரைட் போட்டுச் சென்றனர்.
ஒரு மாணவன் மாத்திரம் சற்று துணிவு கொண்டு நாயை விரட்டப் பார்த்தான். ஆனால் நாயோ சற்றும் சளைக்காமல் பகவானை நோக்கி ஓடியது. மேடை அருகில் அந்த நாய் நின்றது. முகம் தூக்கி நேரே நாயகன் முகம் பார்த்தது. பகவான விளையாட்டு விழாவை மறந்தார். அந்த நாய்க்கு அன்பு செய்யவே அங்கு வந்தாற் போன்ற ஒரு பிரேமை ஆட்கொண்டது. அவரது கரத்திலிருந்து தின்பண்டங்கள் விழுந்து கொண்டே இருந்தன. கர்ப்பிணி நாய் லபக் லபக் என்று உண்டது. எல்லையில்லா கருணையுள்ளம் அல்லவா இது.
அன்பு காட்ட ஆளின்றி தெருத் தெருவாய் அலைந்த ஒரு நாயைக் கண்டு அலறினார் ஆங்கிலக் கவிஞர் அன்னா பிராஞ்ச்.
உனக்கொரு கடவுள் இல்லையெனில் எனக்கும் கடவுள் இல்லையே இல்லை என்று பாடிய ஆங்கிலக் கவிஞர் இந்தக் காட்சியைக் கண்டிருந்தால் இந்தப் பாட்டைப் பாடியிருக்கமாட்டார்.
புறப்படுவதற்காக எழுந்திருந்த சுவாமி சட்டென்று திரும்பி மேலும் சில தின்பண்டங்களை நாயின் வாயில் ஊட்டினார்.
இந்த நாய்க்கு காட்டிய கனிவு முந்திய அவதாரத்திலிருந்தே வருகிறதோ?
ஒருநாள் மாலை சீரடி பாபா, தாத்யாவுடன் மசூதியில் அமர்ந்துகொண்டிருக்கும் போது லட்சுமிபாய் வந்து வணங்கினாள். “பாபா அவளிடம், ஓ! லட்சுமி, நான் மிகவும் பசியாய் இருக்கிறேன்’ என்றார். “பாபா சற்றுநேரம் பொறுங்கள். நான் ரொட்டியுடன் வருகிறேன்’ என்று கூறிக்கொண்டு சென்றாள். பிறகு ரொட்டி, காய்கறிகளுடன் அவள் திரும்பினாள். அவர் அதை எடுத்து நாய்க்குக் கொடுத்தார்.
அதற்கு லட்சுமி, பாபா இது என்ன? உங்களுக்காக நான் அவசரமாக ஓடி எனது கைகளால் ரொட்டி தயாரித்தேன். நீங்கள் அதில் சிறிதேனும் எடுத்துக் கொள்ளாமல் நாயிடம் தூக்கி ஏறிகிறீர்களே! வீணாக எனக்குத் தொல்லை கொடுத்தீர்கள்? என்றாள். அதற்க பாபா, ஒன்றுமில்லாததற்காக ஏன் கவலைப்படுகிறாய். நாயின் பசிøய் தணிப்பது என் பசியைத் தணிப்பது போன்றதேயாம். நாய்க்கும் ஓர் ஆத்மா இருக்கிறது. ஜந்துக்கள் வெவ்வேறாயிருப்பினும் சில பேசினும், சில ஊமையாயிருப்பினும் அவையாவற்றுமுடைய பசியும் ஒன்றேயாம். பசியாய் இருப்போருக்கு உணவு அளிப்பவன் உண்மையிலேயே எனக்கு உணவைப் பரிமாறுகிறான் என்று நிச்சயமாக அறிந்து கொள்வாயாக. இதை ஒரு ஆதார நீதிக்கதையாகக் கருது என்று பதிலளித்தார். இது ஒரு சாதாரண சிறிய நிகழ்ச்சிதான். ஆனால், அது ஒரு மிகப் பெரும் ஆன்மிக உண்மையை பாபா அதன் மூலம் முன்னிலைக்குக் கொணர்ந்து காட்டினார். தினசரி வாழ்வில் அதை நடைமுறைக்குக் கொண்டுவருவதலை, எவருடைய உணர்ச்சியும் துன்புறாதமுøயில் எடுத்துக்காட்டினார்.
1972ல் பாபாவின் பிறந்தநாளுக்காக 108 பக்தர்களுக்கு நவம்பர் 24ம் தேதி திகதிபஜனை மண்டபத்தில் தனியாக, பிரத்தியேக தரிசனம் வழங்குகிறார். வரிசையாக உள்ள ஒவ்வொருவரிடமும் வந்து தாமே விபூதி பொட்டலம் தருகிறார். அமர்ந்திருந்த பெண்மணிக்கு வழங்கிவிட்டு, அடுத்தவரிடம் நகர்ந்த பாபா மீண்டும் அவளிடமே தரும்பி வந்து இன்னும் 2 பொட்டலங்களைப் போட்டு “யே பில்லி கே லியே’ (இவை பூனைக்காக என்கிறார்) ஆம் அவளுக்கு நினைவு வந்து விட்டது. கண்கள் குளமாயின. எட்டு மாதங்களுக்கு முன் அவளுடைய வளர்ப்புப் பூனை திடீரென்று மேசைக்குத்தாவி ஒரு தின்பண்டத்தை கௌவிக் கொண்டு ஓடியது. கடும் கோபம் கொண்ட பெண்மணி பக்கத்திலிருந்த தடியால் கடுமையாக அடித்துவிட்டார். சுவரில் மாட்டியிருந்த பாபவின் படங்கள் அனைத்தும் தடதடவென விழுந்தன.
மனமிறங்கி புனித அச்சத்தினால் நடுங்கினாள். பூனையைக் கையிலே தூக்கி வருடினாள் என்ன ஆச்சர்யம். பூனை மேல் பூராவும் விபூதி. பாபாவின் வியூதிக்கே உரிய சுகந்தம் வீசுகிறது. பூனையின் புண் ஆறியது. புண் செய்தவளின் கண் ஆறாகப் பெருகியது. அதில் அவள் செய்த குற்றம் கரைந்தது.
எட்டு மாதங்களுக்குப் பின் அந்த பூனைக்குத் தான் ஸ்பெஷலாக இரண்டு பொட்டலங்கள் கொடத்தனுப்புகிறார் கருணை வள்ளல் பாபா. வாயில்லா ஜீவங்களுக்காகத் தன் நிலையிலிருந்து இறங்கிவந்து அருளும் பகவான் தொண்டுசெய்யும் நமக்காக என்னவெல்லாம் செய்வான்

– தெ. ஈஸ்வரன்  in Kalaimagal  …Tamil Monthly

natarajan

“நீ பாக்காட்டா என்ன … நான் உன்னைப் பாக்கறேன் …”

உத்தமமான குருவானவர், தன் சிஷ்யர்களை மட்டுமில்லை, சாமான்யமாக அவர்களுடைய திருஷ்டியில் படும், வஸ்துக்கள் அனைத்தையும் தன் பார்வையால் கடாக்ஷிப்பது. அந்த கடாக்ஷத்தை உள்வாங்கிக் கொள்ளும் பக்குவம் நமக்கு இருக்கிறதோ இல்லையோ, அந்த கடாக்ஷமே தன் வேலையை செய்ய ஆரம்பித்து விடும்.

மீன், தன் குஞ்சுகளை பார்வையாலேயே ரக்ஷிப்பது போன்றது மஹான்களின் திருஷ்டி. அதனால்தான் நம் குழந்தைகளை மஹான்களின் சன்னிதானத்திற்கு அழைத்துப் போவது.

அக்குழந்தைகளுக்கு மஹான்கள் யாரென்று கூட புரிந்து கொள்ளும் பக்குவம் இருக்கிறதோ இல்லையோ, அவர்களின் மேல் சூழ்ந்துள்ள தோஷங்களை நிவர்த்திக்கும் சக்தி அந்த திருஷ்டிக்கு உண்டு.

காஞ்சி மகாபெரியவாளிடம் ஆழ்ந்த பக்தி கொண்ட ஒரு பெண் இருந்தாள். அவளுடைய புருஷனுக்கோ, கடவுள், மஹான்கள், கோவில் என்று எதிலுமே நம்பிக்கை இல்லை. அதிலும் மஹான்கள் எல்லோருமே நம்மை போல் சாதாரண மனிதர்கள்தான்! என்ற ஒரு பேதைமை உண்டு.

ஒருமுறை அந்த அம்மாவின் வற்புறுத்தலின் பேரில் பெரியவாளை தரிசனம் பண்ண ஒப்புக் கொண்டார். ஆனால் அவர் போட்ட நிபந்தனை “நா அங்க வருவேன். pant shirt தான் போட்டுப்பேன். பஞ்சகச்சம் விபூதி எதுவும் கெடையாது. அவரை நமஸ்காரம் பண்ண மாட்டேன். உனக்காக வரேன் ஆனா,அவரைப் பாக்க மாட்டேன். தள்ளிதான் நிப்பேன்”.

பாவம் அந்த அம்மா ஒத்துக் கொண்டாள். போனார்கள். அவர் காலில் போட்டிருந்த ஷூவைக் கூட கழற்றவில்லை.

அந்த அம்மா மானசீகமா பெரியவாளிடம் பிரார்த்தனை பண்ணினாள் கணவருக்கு நல்ல புத்தி வேண்டி.

நம்ம பெரியவா சாக்ஷாத் காமாக்ஷித் தாயாரில்லையா? “நீ பாக்காட்டா என்ன? நான் ஒன்னைப் பாக்கறேன்” என்று சொல்லுவதுபோல், மேனாவுக்குள் இருந்து லேசாக எட்டி அந்த மனுஷனைப் பார்த்தார்.

அவ்வளவுதான்! கொஞ்ச நாள் கழித்து கணவர் “வாயேன்…போய் மடத்ல ஸ்வாமியை பார்த்துட்டு வருவோம்”. சாதாரண வேஷ்டி, ஷர்ட், லேசான விபூதி கீற்று! கொஞ்சநாள் கழித்து, பஞ்சகச்சம், குடுமி வைத்துக் கொள்ள ஆரம்பித்து, நாட்கள் செல்ல செல்ல, அந்த அம்மாவை விட பெரியவா மேல் பித்தாகிப் போனார்.

வேலையை விட்டார். பெரியவா படத்தை வைத்துக் கொண்டு சதா பஜனை, தியானம் என்று பரம பக்தராக மாறிவிட்டார்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால்…….

பெரியவா அன்று ஒரே ஒரு தடவை அவரை கடாக்ஷித்ததுதான்! அப்புறம் ஒரு வார்த்தை பேசக் கூட இல்லை!

மஹான்களின் திருஷ்டி பிரபாவம்!

source:::: http://www.periva.proboards.com

Read more: http://www.periva.proboards.com/thread/6148/#ixzz2pQAhGWuc

natarajan

ஆஞ்சனேயர் செந்தூரமானது ஏன்?

அஞ்சனை மைந்தன் ஆஞ்சனேயன் சிவ சொரூபம் என்பார்கள். குழந்தை ஆஞ்சனேயர் சூரியனைப் பிடிக்கச் சென்று தாடை வீக்கம் பெற்று, அதனைத் தன் மாறாத அடையாளமாகவே கொண்டவர். இவர் செந்தூர ஆஞ்சனேயர் என்ற அடையாளமும் கொண்டவர்தான். அவரது தாடை வீக்கத்திற்குக் காரணம் தெரியும். செந்தூர நிறத்திற்குக் காரணம் என்ன?

இதற்கு காரணமாகக் கதை ஓன்றை சொல்கிறார்கள் வடநாட்டில். ஸ்ரீராமரை ஓரு கணம் கூட விடாமல் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டே இருக்க விருப்பம் கொண்டவர் அனுமான்.

காட்டிலும், போரிலும் இருந்தவரை இதற்குத் தடையொன்றும் ஏற்படவில்லை. நாட்டிற்கு வந்து பட்டாபிஷேகத்திற்குப் பிறகு அன்னை சீதாப்பிராட்டியுடன் தனித்து இருக்க வேண்டிய காலமான இரவின் உச்சிக் காலமும் வந்தது. ஸ்ரீராமர் தன் அறையில் இருக்க, அவர் பாதத்தின் அருகே, ராமர் முகத்தையே பார்த்துக்கொண்டு அனுமன் அமர்ந்திருந்தாராம். சிறிது நேரத்தில் சீதா தேவி வர, அனுமன் எழுந்து வெளியே போகாமல் அங்கேயே அமர்ந்திருந்தாராம். கண்ணைச் சிறிதளவும் ஸ்ரீராமர் முகத்தைவிட்டு அவர் அகற்றவில்லை.

சீதா தேவி, அனுமனுக்கு விடை கொடுக்கக் கூறி கண் அசைத்து ஸ்ரீராமருக்குக் உணர்த்த, ஸ்ரீராமரும் அனுமனுக்குத் தெரிவிக்கும் முகமாக, “நெற்றி உச்சியில் சிவந்த குங்குமம் வைத்திருக்கும் சீதா தேவியுடன் இருக்கும் நேரமிது. அதனால் விடியற் காலையில் எழுந்து வா ஹானுமான்” என்கிறார்.

சீதா தேவியின் உச்சிப் பொட்டைப் பார்த்த அனுமன், கடைத் தெருவிற்கு பாய்ந்து ஓடிச் சென்றார். இரவானதால் பூட்டியிருந்த கடைகளின் கதவையெல்லாம் உடைத்து, ஓவ்வொரு கடையாக குங்குமம் எங்கே இருக்கும் என்று தேடினார். ஹோலிக்கு பூசப்படும் வண்ணப்பொடிக் கடை அரையிருளில் அவர் கண்ணில் பட்டது. கடைக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே போனவுடன், அவரது மனதில் பளிச்சென்று எண்ணமொன்று தோன்றியது. அங்கிருந்த பொடியில் விழுந்து புரண்டார். உடம்பெல்லாம் பூசிக் கொண்டார்.

இப்பொழுது யாரால் தன்னை ஸ்ரீராமனிடம் இருந்து பிரிக்க முடியும் என்ற கனிந்த பக்தி எண்ணத்துடன், அவரது அறைக்குச் சென்றார். இதற்குள் மூன்றாம் சாமம் ஆகிவிட்டதால் கதவைத் திறந்து கொண்டு, தம்பதியராய் ஸ்ரீராமரும், சீதையும் வெளியே வந்தார்கள். அனுமனின் இந்த புதிய வண்ணத்தைப் பார்த்து இருவரும் சிரிக்கத் தொடங்கிவிட்டார்கள். பின்னர் அனுமனிடம் காரணம் கேட்க, சீத்தம்மாவுக்கு உச்சிப் பொட்டு மட்டுமே குங்குமம். தனக்கு உடலெல்லாம் குங்குமம் எனவே தனக்கே ராமனுடன் எப்போதும் இருப்பதற்கான உரிமை உள்ளது என்று பணிவுடன் கூறியுள்ளார்.

அனுமன் பிரம்மச்சாரியாக இருப்பதால் அவருக்கு இவ்விஷயம் தெரியவில்லை என்று உணர்ந்த பின் இருவரும் சிரிப்பதை நிறுத்திவிட்டு “ஹனுமான் உன் உடம்பில் பூசப்பட்டு இருப்பது குங்குமமில்லை செந்தூரம்” என்று சொல்லி மீண்டும் சிரிக்கத் தொடங்கி விட்டார்களாம். ஸ்ரீராம பக்தியின் தீவிரத்தைக் காட்டும் செந்தூர ஆஞ்சனேயரின் பல திரு உருவத்தை, திருமலையில் காணலாம்.

source:::: The Hindu…Tamil
natarajan

” அவன் நந்தன் அம்சம் …” இவர் தேடி கொடுக்கிற தெய்வம் !!!

தேடித் தேடித் போய் கொடுக்கிற தெய்வம்…

உயிர் உருக்கும் சம்பவம் இது…

எத்தனை முறை நினைத்தாலும் கண்களில் கண்ணீர் வரும்.ஸ்ரீ கணேச சர்மா மாமா அவர்கள் சொல்லும் போது அவரும் நெகிழ்வார். நம்மையும் நெகிழ பண்ணுவார்.

ஐயன் ஏதோ ஒரு கிராமத்தில் முகாம். காலை எங்கோ செல்லும் போது வயல்வெளியாக செல்வார் பரிவாரத்துடன்.

தூரத்தில் ஒரு குடியானவர்(ன் போட முடியவில்லை) கோவணாண்டியாக, ஐயனை பார்த்து கைகூப்பிக்கொண்டு நிற்பார்.

ஐயன் சென்று விடுவார்.

திரும்பி வரும்போது வயக்காடு மேட்டில் பூசணி, வாழை, பரங்கி என்று நிறைய காய் கறி கீரை பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும்.

ஐயன் சொடுக்கி தன் உயிரே ஆன அந்த குடியானவ பக்தரை கூப்பிடுவார்.

‘சாமி நான் கொடுத்த வாங்கிப்பீங்களோ ன்னு தான், காய் கறி… எடுத்துப்பிங்களா சாமி?’.

ஐயன் கருணையோடு நோக்கி… சொல்வார் பாரிஷதரிடம் ,’இன்னிக்கு பிக்ஷைக்கு இதெல்லாம் தான். எடுத்துக்கோங்கோ’.

அங்கே நிற்காது கருணை வெள்ளம். சிறிதே தூரம் சென்று நட்ட நாடு சாலையில் நின்று ஸ்ரீ மடம் பாலு மாமா அவர்களிடம் ஏதோ விஷயம், உப்பு பெறாது என்போமே, அதை ஆரம்பிப்பார். இதை ஏன் இங்கே வெட்ட வெளியிலே, நட்ட நாடு ரோட்டிலே, மொட்டை வெயிலிலே என்று பாலு மாமா பாடாத பாடு படுவார். ஸ்ரீ கணேச சர்மா மாமா சொல்லி கேட்கவேண்டும்.

கிழக்காலே மேற்காலே, தெக்காலே, வடக்காலே, ஒத்தை காலை மடிச்சிண்டு, தலைல வஸ்த்ரம் போட்டுண்டு போடாம, குனிஞ்சு, நிமிந்து என்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரம். அப்புறம் கிளம்பி, ஸ்நானம் ஆகி, பூஜை முடிஞ்சு, பிக்ஷை பண்ணி, விஸ்ராந்தி பண்ணிக்கும் போது மெதுவாக, ஸ்ரீ பாலு மாமாவிடம் கேட்டாராம் ஐயன்.

‘ஏண்டா பாலு, ஒன்னை ரொம்ப நேரம் வெயில்ல கால் கடுக்க நிக்க வெச்சுட்டேனோ?’.

வெச்சாச்சு. வெச்சுட்டு என்ன கேள்வி வேறே? எப்படி கேட்க முடியும்?

மாமா சொன்னார்களாம், ‘அதெல்லாம் ஒன்னும் இல்லே’.

சும்மா விடுமா நம் தெய்வம்? ‘இல்லேடா, ஒன்னை ரொம்ப நிக்க வெச்சுட்டேன். ஏன் ன்னு கேளு?’.

இதுவேறயா, பண்றதையும் பண்ணிப்பிட்டு…

ஏன்? பெரியவா?’.

‘இல்லே, என்னை முன்னாடி பார்க்கணும் ன்னா நீ என்ன பண்ணுவே?’

‘இது என்ன கேள்வி பெரியவா, இதோ ஒங்க முன்னாடி வந்து நின்னு நன்னா நன்னா பாத்துட்டு போவேன்’.

‘சரி, பின்னாடி இருந்து என்னை பார்க்க?’.

விடமாட்டாரே… ‘இதோ, பின்னாடி போய் உங்க முதுகை பார்த்துண்டு நிப்பேன், பக்கவாட்டிலேயும் அப்படித்தான்’ என்றார் மாமா முன்யோசிதமாய்.

‘அதெல்லாம் சரி டா, ஒன்னாலே இதெல்லாம் முடியும். அங்கே வயல்ல வெயில்ல நின்னு வேலை பார்த்துண்டு இருந்தானே, அவன் நந்தன் அம்சம் டா. அவனால இதெல்லாம் பண்ண முடியுமா? இதுக்கெல்லாம் நேரம் இருக்குமா? அதுனால தான் நான் திரும்பி திரும்பி நின்னு அவன் நன்னா பார்க்கற மாதிரி பண்ணினேன்’.

வேறு எதுவும் சொல்லவேண்டுமா?

இதுவல்லவோ தேடித் தேடித் போய் கொடுக்கிற தெய்வம்…

Source: Shri Karthi Nagaratnam in Kanchi Maha Periva -My Guru

Read more: http://periva.proboards.com/