” அவ்வை பாட்டியின் அகந்தையை அகற்றிய ஆறுமுகப் பெருமான் …”

அவ்வைப் பாட்டியின் கர்வபங்கம்….
அவ்வைப்பாட்டிக்கு தான்தான் அனைத்தையும்
கற்றுவிட்டதாக மண்டை கர்வம்.

அதே பாட்டிதான்   கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்று எழுதி வைத்தாள்

ஆனால் அது ஊருக்குதான் உபதேசம் போலும்.

கல்லாதவரை அவமதிப்பதில்
யாரும் அவளுக்கு நிகரில்லை போலும்.

அவள் ஒரு பாட்டில் கூறுகிறாள்.

கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி
தானும் அதுவாகப் பாவித்து – தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமேகல்லாதான் கற்ற கவி.

ஒரு காட்டில் மயில்கள் தன் அழகிய தோகையை விரித்து ஆடுவதைக் கண்ட வான்கோழி தன்னையும் மயில் போல பாவித்து அது தனக்கு உள்ள சிறகை விரித்து ஆடியதாம்.

அதில் என்ன தவறு.
அதை இழிவாக பேசுகிறாள் அவ்வைப் பாட்டி

இறைவன் படைப்பில் அனைத்துமே அழகுதான்.
அதை ரசிக்கும் பரந்த குணம் அவளுக்கு இல்லை.

இதை எதற்காக உதாரணம் காட்டுகிறாள் என்றால்
கல்லாதவன் கவி எழுதினால்
இதைப்போல் மட்டமாகத்தான் இருக்குமாம்.

கவி எழுதுவது என்பது இதயத்தில் தோன்றும்
உணர்சிகளின் வெளிப்பாடு .
அது ஊற்றுப்போல் வெளிப்படுவது.
அதற்க்கு வரைமுறைகள் கிடையாது

நாட்டுப்புறப் பாடல்களை இயற்றியவர்கள்
எந்த இலக்கணம் கற்றார்கள்?

கவி சக்ரவர்த்தி கம்பனே ஒரு ஏற்றம்
இறைப்பவனிடம் திணறிப் போனான்
என்பது வரலாறு.

க (கவிதைக்கு ) விதை (கலைமகளின் அருள்தான்)
என்பதை பலர் மறந்துவிடுகிறார்கள். .

தான் கற்றவர் என்ற கர்வம். அவளுக்கு.

ஆனால் இறைவனுக்கு அவனின்
எல்லா படைப்புகளும் ஒன்றுதான்.

அழகே உருவான முருகன். அவ்வைக்கு அளித்த அழகிய வடிவத்தை துறந்து காண்போர் வெறுக்கும் தொண்டு கிழவிபோல் வடிவை வேண்டிப் பெற்ற அவ்வையின் கர்வத்தை ஒடுக்க மனம் கொண்டான்.

அவள் நடந்து வரும் வழியில் ஒரு நாவல் மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டான்.

பசியினால் களைத்து வந்த அவ்வை அவனைப் பார்த்து சிறுவனே கொஞ்சம் நாவல் மரத்தை உலுக்குகிறாயா ,நான் கொஞ்சம் நாவல் பழம் உண்டு பசியாறுகிறேன் என்றாள்

அப்போது அந்த சிறுவன் ,பாட்டி உனக்கு சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டான்

அவ்வை திடுக்கிட்டாள் .

பழத்தில் சுட்ட பழம், சுடாத பழம் என்று வகைகள் இருக்கிறதா என்று திகைத்தாள்

எனினினும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் சுட்ட பழமே போடு என்றாள்

சிறுவன் மரத்தை உலுக்கினான்.
நாவல் பழங்கள் உதிர்ந்தன

பழங்களை பொருக்கி கையில் எடுத்தாள் அவ்வை பாட்டி.
அதில் மணல் ஒட்டிக்கொண்டிருந்தது.

அதை வாயிற் வைத்து ஊதினாள் மணல்துகள் அகல.

உடனே அந்தசிறுவன் கேட்டான்
என்ன பாட்டி, பழம் சுடுகிறதோ வாயால் ஊதி சாப்பிடுகிறாய்.

ஒரு மாடு மேய்க்கும் சிறுவன்
தன்னை திணற வைத்துவிட்டானே என்று
அதிசயித்தாள்.

அப்போது சிறுவனே நீ யார் ?

தான் கற்றவள் கல்லாதவர்கள் மூடர்கள்
என்று நினைத்த உன்னை சோதிக்க வந்தவன்.

உன் அகந்தையை விட்டுவிட்டு என்னைப் பார்
,நான் யார் என்பது புரியும்.
அவள் புரிந்துகொண்டாள்

இனி யாரையும் இழிவு செய்யாதே
என்று அறிவுறுத்தி மறைந்துபோனான்
ஞான பண்டிதன். .

அகந்தை கொண்ட மனிதர்களை யாரும் அழிக்கவேண்டாம். அவர்களே அதற்கான வழியை தாங்களே தேடிக்கொள்வார்கள் என்பதுதான் வரலாறு.

அந்த அறிவுரை நமக்கும்தான்.

 

source:::: Murugan Bhakti

natarajan

” Everything Happens for a Reason…..”

 

It is My special characteristic that I look always to, and provide for the welfare of those devoteeswho worship Me whole-heartedly with their minds ever fixed on Me.
May our Sadguru Sainath Shower his kind grace on our loved ones and bless them with all the love in the world, all the joy that a heart can hold, all the good health that can make our life much more precious than gold and prosperity that will make them go one step closer to bliss and God alone. 
Sai Bhakt,  
The Story of Life
Sometimes people come into your life and you know right away that they were meant to be there, to serve some sort of purpose, teach you a lesson, or to help you figure out who you are or who you want to become. You never know who these people may be (possibly your roommate, neighbor, coworker, long lost friend, lover, or even a complete stranger) but when you lock eyes with them, you know at that very moment that they will affect your life in some profound way.
And sometimes things happen to you that may seem horrible, painful, and unfair at first, but in reflection you find that without overcoming those obstacles you would have never realized your potential, strength, willpower, or heart.
Everything happens for a reason. Nothing happens by chance or by means of luck. Illness, injury, love, lost moments of true greatness, and sheer stupidity all occur to test the limits of your soul. Without these small tests, whatever they may be, life would be like a smoothly paved, straight, flat road to nowhere. It would be safe and comfortable, but dull and utterly pointless.
The people you meet who affect your life, and the success and downfalls you experience help to create who you become. Even the bad experiences can be learned from. In fact, they are probably the most poignant and important ones. If someone hurts you, betrays you, or breaks your heart, forgive them, for they have helped you learn about trust and the importance of being cautious when you open your heart. If someone loves you, love them back unconditionally, not only because they love you, but because in a way, they are teaching you to love and how to open your heart and eyes to things.
Make every day count!!! Appreciate every moment and take from those moments everything that you possibly can for you may never be able to experience it again. Talk to people that you have never talked to before, and actually listen. Let yourself fall in love, break free, and set your sights high. Hold your head up because you have every right to. Tell yourself you are a great individual and believe in yourself, for if you don’t believe in yourself, it will be hard for others to believe in you. You can make of your life anything you wish. Create your own life then go out and live it with absolutely no regrets.
source::::debu7370.blogspot.in

“இதைப் படி முதலில் …. “

தந்தது உன் தன்னை

தன் மனம், மார்க்கம் அனைத்துமே ஸ்ரீமஹா பெரியவாளே என்னும் ஆனந்தக் களிப்போடு தன் பிறவிப்பேற்றை அனுபவித்த ‘பிரதோஷம் மாமா’வின் அதி தீவிர பக்தி, அவரை ’64-ஆம் நாயன்மார்’ என்று மஹா பெரியவாளே அங்கீகரித்தருளும்படி செய்தது.

இவரின் பக்திநெறி ஒவ்வொன்றையும் மஹா பெரியவாளே வகுத்துக் கொடுத்ததாக பல அபூர்வ சம்பவங்கள் சாட்சியாக விளங்குகின்றன.

நடு இரவில் தன் இல்லத்திலிருந்து புறப்பட்டு வழி நெடுக ஈஸ்வர நாமாக்களை விடாது பாடிக்கொண்டு சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரத்திலிருந்த ஸ்ரீமடத்திற்கு பாதயாத்திரை செய்து தரிசிப்பதை ‘பிரதோஷம் மாமா’ தனது ஆனந்த அனுபவமாகவே கொண்டிருந்தார்.

பிரதோஷம் மாமா நடுநிசியில் பயணம் செய்யும்போது சில பக்தர்களும் அவருடன் வருவது வழக்கம். அதுபோல அன்றொரு நாள் இரவு தரிசன யாத்திரையில் திருவரத ஓதுவாரும் கலந்து கொண்டார். இதனால் வழியெங்கும் தேவாரமும், திருவாசகமும் ஒலிக்கத் தொடங்கியது. ஓதுவார் உரக்கப் பாட உடன் சென்றவர்களும் இதே போல் குரலெடுத்துப் பாடினார்கள்.

எப்போதும் ஓங்கி ஒலிக்கும் ’அருணாசல சிவ’ அப்போது தடைபட்டது போல் பிரதோஷம் மாமா உணர்ந்தார். ரமண மஹரிஷியின் மீது இவருக்கு இருந்த அபரிமித பக்தியினால், திருவாசகத்திற்குப் பதிலாக ‘அருணாசல சிவ’ என்று சொல்லலாமே என்று உடன் வந்தவர்களிடம் சொல்லிப் பார்த்தார். நமச்சிவாயமும், அருணாசல சிவமும் வேறல்ல என்று ஏன் இவருக்குப் புரியவில்லை? இதனால் மடத்தில் வீற்றிருந்த சர்வேஸ்வரருக்கு இவருக்கு பதில் சொல்லவேண்டும் என்ற தீர்மானம் ஏற்பட்டு விட்டது. தரிசன யாத்திரை முடிந்து, அவருடன் வந்தவர்கள் மஹா பெரியவாளை தரிசித்து மகிழ்ந்தார்கள். ஓதுவார் ஸ்ரீமடத்திலிருந்து புறப்பட்டு போய்விட்டார்.
அப்போது மஹான் தமது திருவிளையாடல் நாடகத்தை ஆரம்பித்தார்.

“ஓதுவார் எங்கே?” என்று மஹான் கேட்டார். அவர் புறப்பட்டுப் போய்விட்டார் என்று மஹானுக்குத் தெரியாதா என்ன? பிரதோஷ மாமாவுக்கு விளங்கவில்லை – ஏன் மஹான் ஓதுவாரை அழைக்கிறார் என்று…

மஹான் பிரதோஷ மாமாவை அழைத்துக் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். அது தன் கைக்கு வந்தவுடன் மெய் சிலிர்த்ததை உணர்ந்தார் பிரதோஷ மாமா. அருணாசலமா, நமச்சிவாயமா என்ற இவரது மன சஞ்சலத்தை அனைத்தும் நானே என்று சொல்லாமல் சொல்லித் தீர்த்து வைத்து விட்டது போலிருந்தது.

அவரது சிந்தனை வேறு பக்கம் திரும்பக் கூடாது என்று நினைத்த மஹான், “இந்தப் புத்தகம் எந்த வருடம் வெளியானதுன்னு ஓதுவாரைக் கேட்டுத் தெரிஞ்சுண்டு வா” என்றார்.

இது போன்ற வேலையை மஹான் தன்னிடம் சொன்னதே இல்லையே, இந்த விஷயம் இவருக்குத் தெரியாதா? இந்த வேலைக்கு மடத்து ஊழியர் போதாதா? இதற்கு ஏதாவது காரணம் இருக்கும் என்று நினைத்த பிரதோஷம் மாமா இதற்காக சென்னைக்குச் செல்ல வேண்டிய நிலை. காஞ்சியை விட்டு எப்போதும் அகலாதவருக்கு இப்படி ஒரு சோதனையா?

மஹானின் மனதை யார் அறிவார்? சென்னை சென்று ஓதுவாரை பார்த்துத் தகவல் அறியச் சென்றவருக்கு அங்கே ஓதுவாரைத் தேடவும் ஒரு துணை தேவைப்பட்டது.
இதற்காக மஹானிடம் பரமபக்தி கொண்டிருந்த ஒரு வைணவ அன்பரைத் தொடர்பு கொண்டு ஒத்தாசை செய்ய அழைக்கலாம் என்று நினைத்தார். போன் வசதி இல்லாத காலம் அது. இதனால் பணி ஓய்வு பெற்றபின், பிரதோஷ மாமா தனது அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயம்.

அலுவலகத்தின் உள்ளே நுழைந்ததும் இவரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஒரு அன்பர் இவரை வரவேற்று மூச்சு விடாமல் பேசத் தொடங்கினார்.
“ரொம்ப ஆச்சர்யம். நீங்க எப்படி இங்கே வந்தீங்க? உங்களுக்கு நாங்களே கடிதம் எழுதி வரவழைக்கலாமுன்னு நினைச்சோம்… ஏன்னா, உங்களுக்கு அரியர்ஸ் பணம் ஆயிரத்துக்கு மேலே வந்திருக்கு… ஆபீஸிலே இன்னிக்கு நீங்க வரலேன்னா பணத்தைத் திருப்பி அனுப்பச் சொல்லி உத்தரவு. என்ன செய்யறதுன்னே தெரியாம தவிச்சுண்டு இருந்தேன்…. பின்னாலே பணத்தை வாங்கறது மிகவும் சிரமமா இருக்கும்”.

பிரதோஷம் மாமா உண்மையில் திணறித்தான் போனார். அந்தக் கால கட்டத்தில் இந்தப் பணம் எவ்வளவு பெரியது? இதைத் தன்னிடம் சேர்க்க திருவாசக புத்தகத்தின் மூலம் மஹான் திருவிளையாடல் நடத்தியிருக்கிறார் என்றே தோன்றியது.

பிரதோஷம் மாமா, புத்தகம் எப்போது வெளியிடப்பட்டது என்பதைப் பலரிடம் விசாரித்துக் கொண்டு காஞ்சி வந்து, மஹானிடம் விவரங்களைச் சொன்னார். அதை மஹான் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை. தன்னை எதற்காக சென்னைக்கு அனுப்பினார் என்று மஹானுக்குத் தெரியாதா என்ன?

திருவாசகம் புத்தகத்தை அவரிடம் கொடுத்து “இதைப் படி” என்றார் மஹான்.

முதலில் எதைப் படிப்பது என்று இவர் தடுமாற “முதல்லேயிருந்து சில பக்கங்களையாவது படி” என்றார்.

அவர் புத்தகத்தைப் பிரித்தபோதே பிரமிப்பு….

“நமச்சிவாய வாழ்க” என்று தொடங்கும் சிவபுராணம் தான் முதலில் தென்பட்டது.

இப்படி பிரதோஷ மாமாவை நாயன்மாராக அங்கீகரித்தருளி “தந்தது உன் தன்னை கொண்டது என் தன்னை” என்று பக்தருக்குள்ளே ஐக்கியமாகி ஒவ்வொரு பக்தி நெறிக்கும் வழிகாட்டுபவராக ஸ்ரீமஹா பெரியவா பிரதோஷம் மாமாவுக்கு அருள் புரிந்தார்.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

Read more: http://periva.proboards.com/thread/6543/pradosham-maamaa-venkatasaamys-book#ixzz2uPz4MF6U

natarajan

“Hanuman Chalisa” Tells You the Distance Between Earth and Sun !!!

Any one knows the Hanuman chalisa?In Hanuman Chalisa, it is said :
“Yug sahastra yojan per Bhanu!
Leelyo taahi madhur phal janu!!

1 Yug = 12000 years
1 Sahastra = 1000
1 Yojan = 8 Miles

Yug x Sahastra x Yojan = par Bhanu
12000 x 1000 x 8 miles = 96000000 miles

1 mile = 1.6kms

96000000 miles = 96000000 x 1.6kms =
1536000000 kms to Sun

NASA has said that, it is the exact distance between Earth and Sun (Bhanu).
Which proves Hanuman ji did jump to Planet Sun, thinking it as a sweet fruit (Madhu phal)..

It is really interesting how accurate and meaningful our ancient scriptures are..Unfortunately barely it is recognized, interpreted accurately or realized by any in today’s time…

……………………………..

GAYATRI MANTRA”  the most powerful hymn in the world
Dr.Howard Steingeril,
an american scientist, collected Mantras, Hymns and invocations from all over the world and tested their strength in his Physiology Laboratory…

Hindus’ Gayatri Mantra produced 110,000 sound waves /second…

This was the highest and was found to be the most powerful hymn in the world.
Through the combination of sound or sound waves of a particular frequency, this Mantra is claimed to be capable of developing specific spritual potentialities.
The Hamburg university initiated research into the efficacy of the Gayatri Mantra both on the mental and physical plane of CREATION…

The GAYATRI MANTRA is broadcasted daily for 15 minutes from 7 P.M. onwards over Radio Paramaribo, Surinam, South America for the past two years, and in Amsterdam, Holland for the last six months.

“Om Bhoor Bhuwah Swah, Tat Savitur Varenyam, Bhargo Devasya Dheemahi, Dhiyo Yo Nah Pra-chodayaat !”

“It’s meaning:
God is dear to me like my own breath, He is the dispeller of my pains, and giver of happiness.
I meditate on the supremely adorable Light of the Divine Creator, that it may inspire my thought and understanding.”

source::::input from a friend of mine

natarajan

” ராம நாமம் கேட்கும் இடம் எல்லாம் ஹனுமான் நான் இருப்பேன் …”

  

   
பொதுவாக ஸ்ரீ ராமாயண சொற்பொழிவு நடைபெறும் இடங்களில் எல்லாம் அனுமன் நேரில் வந்துஅடியார்களுள் அடியாராய் பக்தருள் பக்தராய் அமர்ந்து உபந்நியாசத்தை பேரானந்தத்துடன் ரசித்து கேட்பதாக ஒரு ஐதீகம்.
இதனால்தான் துளசிதாசர் ஸ்ரீ ராமாயண பிரவசனம்(சொற்பொழிவு) தொடங்கும் முன்னர் பக்தர்களை பிரதட்சனமாக சுற்றி வருவாராம் .அங்கு பக்தர்களுடன் பக்தராக மாருதியும் எழுந்தருளிருப்பார் என்பதாலேயே அனுமனை வணங்கும் விதமாக துளசிதாசர் பக்தர்களை வலம் வந்து வணங்கியபிறகேதனது சொற்பொழிவை துவக்குவாராம்.
அதனாலேயேராமநாமத்தை சொல்லும் முன்பாக அந்த இடத்தில் ஒரு சிறிய மனையைப்போட்டு அதன்மீது ஒரு சுத்தமான துணியை போர்த்தி ஒரு இருக்கை தயார்செய்துவைத்துவிட்டுத்தான் ராமாயண உபன்யாசம் துவக்கப்படுவது வழக்கம்.
நிச்சயம் அங்கு அனுமன் வந்து அந்த மனையில் அமர்ந்து ராமகாதையை மனம்குளிர்ந்து கேட்பார் என்பது இதுநாள் வரை பலரும் சொல்லக்கேட்டிருப்போம்.
ஆனால்நிஜத்தில் அப்படி ஒருக்காட்சியே அரங்கேறி பார்ப்பவர்களை சிலிர்க்கவைத்திருக்கிறது.
 
இந்தியாவில் மத்தியபிரதேசத்தில் இருக்கும் ஒரு முக்கியமான நகரம்தான் ரட்லம்(Ratlam).    இங்கு காளிகாமாதா எனும் மிகவும் பிரபலமானதொரு கோவில் நகரின்மையப்பகுதியில் அமைந்துள்ளது 

இங்கு சமீபத்தில் ஸ்ரீராமாயண சரித்தித்தை உபன்யாசம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
ராமா..ராமா..என உபன்யாசகர் பாட ஆரம்பித்ததும்…அங்கே அழகான ஒரு வெண்குரங்கு வந்து அதை ரசிக்கத்தொடங்கிய அழகை நீங்களே பாருங்கள் 

 
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்ம மும் மரணமும் இன்றித்தீருமே
இம்மையே இராம என்றிரண் டெழுத்தினால்…..!
 
ஓராயிரம் மகப்புரி பயனை உய்க்குமே
சுராதிபர் செல்வமும் புகழும் நல்குமே
வீராய் எனும் பாவங்களை வேரறுக்குமே
இராம என் றொரு மொழி இயம்பும் காலையே…!
 
மும்மை சால் உலகுக்கு எல்லாம் 
மூல மந்திரத்தைமுற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
தனிப்பெரும் பதத்தைதானே
இம்மையே எழுமை நோய்க்கும்
மருந்தினை, ‘இராமன்‘ என்னும்
செம்மைசேர் நாமம் தன்னைக்
கண்களின் தெரியக் கண்டான்…!

இப்படி ராமநாமத்தின் சிறப்புகளை கம்பர் பாடியதன் சுவையை இந்த வானரமும் அனுமனாகவே வந்து
 ரசிக்கிறதோ ….

 

source::::input from a friend of mine

natarajan

 

 

Message For the Day…” Offer Food to God First and then Take it as Prasadam …”

 Sathya Sai Baba

All food emanated from God. As it has come from the Divine(Brahman), it should be offered to God and only then be taken. Then it becomes Satwik food. There are many impurities associated with the grains and vegetables you purchase. These impurities enter inside you. To remove the various types of defects associated with food, offer it to the Lord and then partake of it as Prasadam. When the food is offered to God (Naivedyam), there will no longer be any defects in it. Meera was a great devotee of Lord Krishna. She always offered everything to the Lord before partaking it. When the Maharana asked his associates to give her very strongly poisoned milk, Meera was unaware of it. As is her habit, she offered the milk to Lord Krishna and took it, and remained unharmed. Thus any type of food, once offered to the Lord will turn nectarous, even if it is poisonous.

“அன்னதான சிவன் …”

தேப்பெருமாநல்லூர் சிவன் என்றால் சட்டென்று யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள். அன்னதான சிவன் என்றால் எல்லோருக்கும் தெரியும். அன்னதானம் செய்வதில் என்றைக்குமே சளைக்காதவர்.

அவருக்குக் காஞ்சி மஹானிடம் அளவுகடந்த பக்தியுண்டு. அந்த பக்தியின் காரணமாக மஹானுக்கு ஒரு நீண்ட கடிதத்தை எழுதினார். மஹான் பல தினங்கள் உபவாசம் இருந்த காலம் அது.

இதனால் தனது உள்ளத்தில் ஏற்பட்ட வேதனையை மஹானுக்குத் தெரிவித்து இதில் பல விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தார்.

”மஹான் தொடர்ந்து உபவாசம் இருந்தால் அவரது உடல்நிலை கெட்டுவிடும். அவர் ஆரோக்கியமாக இருந்தால் தான் பக்தர்கள் நீண்ட காலம் அவரது அருளைப் பெற முடியும். ஆதலால் சிறிதளவேனும் அன்ன பிட்க்ஷை ஏற்க வேண்டும். உடல்நிலை சரியில்லை என்றால் சீதோஷ்ண ஸ்திதிக்கு ஏற்றவாறு வெந்நீரில் குளிக்கவேண்டும். சமுத்திர ஸ்நானம் செய்யப்போகும்போது துணையோடு போகவேண்டும். நதிகளில் ஆழம் பார்த்துத்தான் இறங்கவேண்டும். பூஜையை முடித்தபின் சற்றுநேரம் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு வெகுதூரம் கண்விழித்துப் படிக்கக்கூடாது. தாங்கள் எப்போதும் நலமாக இருக்கவேண்டும் என்கிற காரணத்திற்காக இக்கடிதத்தை எழுதுகிறேன்” என்று முடித்திருந்தார்.

மஹான் அக்கடிதத்தை ஒருமுறை அல்ல; இருமுறை படிக்கச் சொல்லி புன்முறுவலோடு அதைக்கேட்டார்கள். மடத்தில் உள்ள அனைவருக்கும் சிவன் மீது அளவு கடந்த மரியாதை. மஹான் அவசியம் இதற்கு பதில் எழுதுவார் என்று நினைத்தார்கள்.

ஆனால் அதற்கு பதிலாக மஹான், ஒரு நபர் மூலம் செய்தியாகத் தன் எண்ணத்தைச் சொல்லி அனுப்பினார்.

“கடிதத்தில் எழுதியுள்ளபடி எல்லாம் நடைபெறும்” என்கிற செய்தி சிவனிடம் சொல்லப்பட்ட பிறகுதான் அவர் மனம் சமாதானம் அடைந்தது.

மஹானிடம் இப்படி வேண்டுகோள் விடுக்க, அப்போது சிவன் ஒருவருக்குத்தான் மனோபலம் இருந்தது. இதே வேண்டுகோளை சிவன், மஹானை நேரில் பார்க்க வரும்போதும் கோரிக்கையாக வைப்பார். மஹான் அவர்பால் பரிவு கொண்டு அவரைப் பாராட்டி மகிழ்வார்.

சிவனுக்கு முதிர்ந்த நிலை வந்தபோது அவரைக் கவனித்துக் கொள்ள மஹான் மடத்து சிப்பந்திகளை அனுப்பி இருந்தார். தனது கடைசி காலத்தில் தனது சொந்த ஊருக்குச் சென்ற சிவன் அங்கேயே இறைவனடி சேர்ந்தார்.

மஹான் அந்த சமயம் காசி யாத்திரை சென்றிருந்தார். திரும்பிய பிறகுதான் சிவனின் மறைவு குறித்து அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

”சிவன் ஒரு சன்னியாசி இல்லை என்றாலும் துறவியைப் போல் பற்றற்ற வாழ்க்கையை மேற்கொண்டு இருந்தார். பிறருக்கு சேவை செய்ததுடன் ‘பசி’ என்று வந்தவர்களுக்கு அன்னமளிக்காமல் அனுப்பியதில்லை. மிகவும் புண்ணியம் செய்த அவர் நிச்சயம் மோட்சத்திற்குத்தான் போவார்” என்று சொன்ன மஹான், சிவனின் நற்கதிக்காக கும்பகோணத்திலும் திருபுவனத்திலும் உள்ள கோயில்களில் மோட்ச தீபம் ஏற்றுமாறு கட்டளையிட்டார்.

சிவன் மறைந்த பத்தாவது நாளன்று, கும்பகோணத்தில் உள்ள மடத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு அளிக்க மஹான் ஏற்பாடு செய்தார். தனக்கென்று ஏதும் வைத்துக்கொள்ளாத சிவன் இறக்கும் தருவாயில் தன்னிடம் இருந்த சொற்பப் பணத்தை முழுவதும் தர்மத்திற்காக செலவிடும்படி கூறியிருந்தார்.

அதனால் இப்பணத்தைக் கொண்டு ஹரிஜனங்களுக்குப் பயன்படும் வகையில் குளம் ஒன்றை செப்பனிட்டு வழங்கும்படி மஹான் உத்தரவிட்டார்.

அன்னதான சிவன் மீது மஹான் கொண்டிருந்த அன்புக்கு அளவு இல்லை என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. மஹானை ஆதரவோடு பார்த்து அன்புக்கட்டளை இட்ட மாமனிதர் தான் இந்த அன்னதான சிவன்.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source:::: http://www.periva.proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/6429/annadhana-sivan-venkatasaamys-book-mahaperiva#ixzz2sKdo42zp

” குங்குமம் … அதன் மகிமை ” …

திருவாரூரை அடுத்த சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேங்கட சுப்பிரமணியம். வேத விற்பன்னர். மகாபெரியவர் சன்னிதானத்தில் முதல் பக்தர். ஒரு முறை மகாபெரியவர் மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு விஜயம் செய்தார். கற்பகாம்பாள் சன்னிதியில் கொடுக்கப்பட்ட குங்குமப் பிரசாதத்தைப் பார்த்ததும், அந்தக் குங்குமம் சுத்தமான தயாரிப்பாக இருக்க முடியாது என்று அவருக்குத் தோன்றியது. தூரத்தே கோஷ்டியில் நின்றுகொண்டிருந்த வேங்கட சுப்பிரமணியத்தை அருகில் வரும்படி கட்டளையிட்டார். ஓடோடி வந்து பவ்யமாக குனிந்தபடி நின்றார் அவர். உனக்கொரு வேலை கொடுக்கப் போறேன். செய்வியா?” என்றார். உத்தரவு” என்றார் வேங்கட சுப்பிரமணியம். தமிழ்நாட்டில் பல கோயில்களில் அம்பாள் சன்னிதியில் கொடுக்கப்படும் குங்குமம் அசலான தயாரிப்பாக இல்லை. எனவே, பக்தர்களுக்காக நீ சாஸ்திரோக்தமாக குங்குமம் தயாரிக்க வேண்டும்” என்று ஆக்ஞையிட்டார் மகாபெரியவர்.

மகாபெரியவர் கட்டளையிட்டவுடன் சும்மா இருக்க முடியுமா? வேதங்கள், உபநிஷத்துக்கள், அம்பாளின் மகத்துவத்தை விளக்கும் ஸ்தோத்திரங்கள் ஆகியவற்றில் குங்குமத்தின் பெருமைகளைக் குறித்த தகவல்களைச் சேகரித்தார். குங்குமம் தயாரிப்பு தொடர்பான புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடித்தார். பின் தயாரிப்பைத் துவக்கினார். நல்ல தரமான குண்டு மஞ்சள், எலுமிச்சை, படிகாரம், வெண்காரம், நல்லெண்ணெய் ஆகியவைதான் குங்குமத் தயாரிப்புக்கான மூலப் பொருட்கள். பழந்தயாரிப்புப்படி கைகளாலேயே தயாரிக்கப்பட்ட குங்குமத்தைச் செய்து முடித்ததும் வேங்கட சுப்பிரமணியத்துக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. தயாரித்த குங்குமத்தை ஒரு துணிப்பையில் போட்டு எடுத்துக்கொண்டு மகாபெரியவரைப் பார்க்க கும்பகோணம் விரைந்தார். குங்குமத்தை உள்ளங்கையில் இட்டுப் பார்த்தவுடன் மகாபெரியவரின் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. இந்தப் பணியை நீ தொடர வேண்டும்” என்று சைகையிலேயே ஆணையிட்டார். வேங்கட சுப்பிர மணியம் ஸ்ரீவித்யா உபாசகர். அம்பாள் குங்குமப் பிரியை ஆயிற்றே! ஒரு அர்ப்பணிப்போடு குங்குமத் தயாரிப்பில் இறங்கிவிட்டார் வேங்கட சுப்பிரமணியம்.

ஸ குங்கும விலேபனாம் அளிக சும்பி கஸ்தூரிகாம்
ஸமந்த ஹஸிதேக்ஷணாம் ஸ ஸரஸாப பாசாங்குசாம்
அசேஷஜ நமோஹினீம் அருணமால்ய பூஷாம்பராம்
ஜபாகுஸூம பாசுராம் ஜப விதௌ ஸ்மரேத் அம்பிகாம்என்று லலிதா சகஸ்ரநாமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

அதாவது குங்குமப் பூவின் விழுதைப் பூசிக் கொண்டிருப்பவளும், நெற்றியை அலங்கரிக்கும் கஸ்தூரி திலகம் இட்டவளும், புன்னகைக்கும் கண்கள் உள்ளவளும், வில், அம்பு, பாசம், அங்குசம் ஏந்தியவளும், எல்லா மக்களையும் தன்பால் ஈர்ப்பவளும், செந்நிற மாலை, ஆடைகள் அணிந்து, செம்பருத்திப் பூ போல ஒளிமயமாக இருப்பவளுமான அம்பிகையை ஜபகாலத்தில் நினைவு கொள்கிறேன் என்பதுதான் இதன் பொருள். அம்பாள் உமைக்கு பல அம்சங்கள். திரிபுரசுந்தரி, காமாட்சி, அபிராமி, பார்வதி, லலிதா என்று பல திருநாமங்கள். ஒவ்வொரு அம்சத்திலும், பல பாக்கியங்களை பக்தர்களுக்கு அள்ளித் தருகிறாள் அம்பாள். எப்போதும் சுமங்கலியாகவே இருப்பவள் லலிதா” என்று லலிதா சகஸ்ரநாமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சுமங்கலியான பெண்ணை பளிச்சென்று வெளிப்படுத்துவது, அவளது நெற்றியில் அலங்கரிக்கும் குங்குமம்தான். ஒரு பெண் தன் திருமணத்தின் போதுதான் குங்குமம் வைத்துக் கொள்ளும் தகுதியைப் பெறுகிறாள். நெற்றியிலுள்ள குங்குமம், ஒரு பெண்ணின் சுமங்கலித் தன்மையை மட்டும் சொல்வதல்ல. அவளுக்குள் பொதிந்திருக்கும் ஞானத்தையும், ஆற்றலையும் குறியீடாக உணர்த்தும் தன்மையும் கொண்டது. சௌந்தர்ய லஹரியும் லலிதா சகஸ்ரநாமமும் குங்குமத்தின் பெருமைகளை எடுத்து வைக்கின்றன.

சுமார் 5,000 வருடங்களாக, குங்குமம் வைத்துக் கொள்வது என்பது நமது சம்பிரதாயமாக இருந்து வருகிறது என்கிறது ஒரு புராணத் தகவல். இரண்டு இமைகளுக்கு நடுவில் நெற்றிப் பொட்டில் குங்குமம் வைத்துக் கொள்வதற்குப் பல காரணங்கள் உண்டு. நமது உடலில் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் ஏழு சக்கரங்கள் உள்ளன. நமது செயல்கள், சாதனைகள், சாகசங்கள் என்று அனைத்துக்குமே காரணமாக அமைந்தவை இந்தச் சக்கரங்கள். இந்தச் சக்கரங்களின் செயல்பாட்டைத் தூண்டி விடுவதில், முதுகுத் தண்டுக்கு அடிப்பகுதியில் பொக்கிஷமாக இருக்கும் குண்டலினி சக்திக்கு பெரும்பங்கு உண்டு. யோகம், தியானம் போன்றவற்றின் மூலம் குண்டலினி சக்தியை எழுப்பி, இந்த ஏழு சக்கரங்களைத் தூண்டி விடலாம். இந்த ஏழு சக்கரங்களில் ஒன்றான ஆக்ஞை, நெற்றிப்பொட்டில், புருவங்களின் மத்தியில்தான் உள்ளது. ஒருவரின் ஞானம், பேரறிவு ஆகியவை வெளிப்பட காரணமாக அமைவது இந்த ஆக்ஞா சக்கரம் தான். அதைக் குறித்துத்தான் நெற்றிப்பொட்டில் குங்குமம் வைக்கிறோம்.

source::::www.periva.proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/6421/#ixzz2sEOUcCFk

” கணபதிக்கு தினமும் நெய் தீபம் …”

 

காஞ்சி மஹான் எப்போது எந்த இடத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் என்று சொல்லவே முடியாது.அன்றொரு நாள் மடத்தில் பின்கட்டிலுள்ள சதுரமான பாறாங்கல்லின் மீது மஹான் அமர்ந்திருந்தார். அப்போது பாறை உறுத்தலாக தெரியவே, மஹான் அதை என்னவென்று தடவிப்பார்த்தார்கள். கல்லில் ஏதோ எழுத்துக்கள் செதுக்கப்பட்டிருந்தது அவர் கண்களுக்குத் தெரிந்தது. உடனே மடத்து சிப்பந்திகளிடம் சுண்ணாம்பைக் கொண்டு வரச்செய்து பாறாங்கல்லின் மீது லேசாகத் தடவச் சொன்னார்கள். தமிழில் எழுதப்பட்டிருந்த அந்தக் கல்வெட்டில் இருந்த எழுத்துக்கள் தெளிவாகத் தெரிந்தன.

கணேசருக்கு தினசரி நெய் தீபம் போடுவதற்காக, சில ஆடுகளை அளித்திருப்பதாக அதில் ஒருவரின் எண்ணம் எழுத்து வடிவமாக இருந்தது.

மஹாபெரியவா பழங்கால விஷயங்களை எங்கிருந்தாலும் தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமுள்ளவர். தொல்பொருள் ஆய்விலும், கல்வெட்டு ஆராய்ச்சியிலும் மிகவும் அக்கறையோடு ஈடுபடுவார். அதனால் அத்துறை நிபுணர்களை உடனே அங்கே வரவழைத்தார். வந்த நிபுணர்கள் கல்வெட்டை மிகவும் உன்னிப்பாக ஆராயந்து அது ராஜ ராஜசோழன் காலத்துக் கல்வெட்டு என்றும் அதில் குறிப்பிட்டுள்ள கணேசமூர்த்தி, காஞ்சி மடத்திற்குள் ஆதிசங்கரர் மண்டபத்தின் வாயிற்படிக்கு வெளியில் உள்ள கணபதியே என்றும் தங்களின் ஆராய்ச்சி முடிவைச் சொன்னார்கள்.

இதை அறிந்த மஹான், சென்னையைச் சேர்ந்த சில பக்தர்களை உடனே காஞ்சி வருமாறு பணித்தார்கள். அவர்களிடம் கல்லில் காணப்பட்ட செய்திகளை விவரமாகக் கூறி, “பரம பக்தர் ஒருவர் கணேசருக்கு தினசரி நெய்தீபம் ஏற்றுவதற்காக தர்மம் செய்துவிட்டுப் போயிருக்கிறார். அவ்விதம் நடக்காவிடில் தமக்குப் பாவம் வந்து சேரும்” என்று கவலையோடு மஹான் வந்த வேதவிற்பன்னர்களிடம் தெரிவித்து இருக்கிறார். அவர் மனம் வாட பக்தர்கள் பொறுப்பார்களா? தினசரி நெய்தீபம் ஏற்ற ஏற்பாடு செய்துவிடலாம் என்று அப்போதே அவர்கள் உறுதி அளித்தார்கள். அந்தக் கைங்கர்யத்திற்காக ஒரு டிரஸ்ட் உருவாயிற்று. ஏழை பக்தனின் விருப்பப்படி கணேசரின் சந்நிதியில் தினமும் நெய்விளக்கு எரியலாயிற்று. இது மிகவும் சிறிய விஷயந்தான்.

ஆனால், அதைக்கூட விட்டுவிடக்கூடாது என்கிற நற்குணம் மஹானிடம் இயற்கையாகவே இருந்தது. என்றோ, யாரோ எழுதிவிட்டுப் போன தர்மப் பணியை அலட்சியம் செய்யாமல் அதை நடைமுறைக்குக் கொண்டுவந்த மஹான், நடமாடும் தெய்வமாக இருப்பதில் வியப்பென்ன இருக்கிறது!

source::::www.periva.proboards.com

natarajan

Read more: http://www.periva.proboards.com/thread/6274/extract-book-venkatasamy-kanchi-periva#ixzz2qXhVf9rd