Message For the Day…” Yearn For the Happiness and Prosperity of all Mankind…”

Virtuous living, beneficial thoughts, elevating ideals and righteous conduct can confer not only good health, but what is even more precious, Aatmaananda, the ecstatic Awareness of the Reality itself. When one yearns for the happiness and prosperity of all mankind, he or she is blessed with the wisdom and strength to mark out the way and lead them towards it. The person sees one’s chosen God in everyone. Every act of theirs will be as pure, as sincere and as sacred as an offering to God. A very effective way to conquer all sources of physical and mental disease and debility is awareness of one’s Divine (Aatmic) Reality. That will bring about an upsurge of Love and Light, for, when one recognises that he or she is the Atma, one would cognize the same Atma in all, and share in the joy and grief, strength and weakness of all.

Sathya Sai Baba

” பழமொழி …அர்த்தமுள்ள பொன் மொழிகள் !!!

c1446-corridorof1000pillarsinramanathaswamytempleinrameswaram-tamilnadu1928

பழமொழிகளில் நாட்டுப்புற மருத்துவம்

மக்களால் பயன்படுத்தப்படும் பழமொழிகளால் மக்களின் பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும், சமுதாயப் பின்னணியையும் அறிந்து கொள்ள முடிகின்றது. இத்தகைய பழமொழிகளில் மருத்துவச் செய்திகளும், நோய் ஏற்படாமல் இருக்கக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளும், மற்றும் மருந்துப் பொருட்களும் கூறப்படுவதுடன், ஆதனால் தீரும் நோய் பற்றியும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

“இளைத்தவனுக்கு எள்ளைக்கொடு;
கொளுத்தவனுக்குக் கொள்ளைக் கொடு”

எள், கொள்ளு என்பவை இரண்டும் உணவு வகைகள் ஆகும். எள் என்பது நல்ல சத்துள்ள உணவாகும். மிகவும் மெலிந்த தேகம் கொண்டவர்கள் எள்ளைத் தின்றால் நன்கு உடல் பெருக்கும் என்றும், அதிகமான உடலைக் கொண்டவர்கள் கொள்ளைத் தின்றால், உடல் மெலிந்து போதுமான அளவோடு இருக்கும் என்றும் இப்பழமொழி கூறுகிறது.

“ஆற்றுநீர் வாதம் போக்கும்; அருவி நீர் பித்தம் போக்கும்; சோற்று நீர் இரண்டையும் போக்கும்”

மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய 4448 நோய்களுக்கும் அடிப்படை வாதம், பித்தம், கபம் என்ற மூன்றுமே ஆகும். இவற்றுள் வாதம், பித்தம் தொடர்பாக ஏற்படும் நோய்களைப் போக்கும் வழிமுறைகளை இப்பழமொழி விளக்குகின்றது. ஆற்று நீரிலும், அருவி நீரிலும் உயர்ந்த தாதுப் பொருட்களும், மூலிகைச் சத்துக்களும், நிறைந்து காணப்படும். ஏனெனில், ஆற்றுப் படுகையிலும், அருவிக்கு நீர் வரும் மலைப் பகுதியிலும் மூலிகைச் செடிகள் நிறைந்து காணப்படும். இந்நீர் மூலிகைகளின் மீது பட்டு வருவதால் இத்தகைய குணமுடையதாக உள்ளது. வாதநோய் தொடர்பாக நரம்புக்கோளாறுகளும், பித்தநோய் தொடர்பாக மூளைக் கோளாறும் ஏற்படுகின்றன. இவற்றைக் குணப்படுத்த ஆற்று நீரும், அருவி நீரும், பயன்படுகின்றன. வாதம், பித்தம் இரண்டையும் சோற்று நீர் குணமாக்குகின்றது. இத்தகைய மருத்துவகுணம் கருதியே நாட்டுப்புற மக்கள் காலையில் எழுந்ததும் சோற்று நீரை அருந்துகின்றனர்.

“வேலம் பட்டை பித்தத்தைப் போக்கும்; ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும்”

வேலம்பட்டையை இடித்து ஒரு குவளை நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி அரைக் குவளையாக்கித் தினமும் காலை, வேளை மட்டும் குடித்துவர பித்த நோய்களான, வயிற்றுப்புண், பித்தமயக்கம், கைகால் குடைச்சல் குணமாகும். ஆலமரத்தின் பட்டையைக் குடிநீராக்கி குடித்து வர வாய்ப்புண், வாய்நாற்றம், சிரங்கு, கரப்பான்படை, ஆகியன விலகும் என்கிறது பழமொழி.

“மாதா ஊட்டாத அன்னத்தை மாங்காய் ஊட்டும்”

மாங்காய் என்பது மாங்காய் ஊறுகாயைக் குறிக்கும், மாங்காய் ஊறுகாய் பசியைத் தூண்டுகிறது. எனவே உணவில் மாங்காய் ஊறுகாயைச் சேர்த்துக் கொள்வதால் ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை இப்பழமொழி விளக்குகிறது.

“ஒரு போது உண்பான் யோகி; இருபோது உண்பான் போகி; முப்போது உண்பான் ரோகி”

ஒரு வேளை உணவை உட்கொண்டு ஆழ்ந்த யோகப் பயிற்சி மேற்கொள்வதால், மூளையின் அடிப்பகுதியில் ஹைப்போதாலமஸ் என்னும் அமைப்பிற்குக் கீழே உள்ள சுரப்பியிலிருந்து அமிர்தம் என்று சித்தர்களால் கூறப்படும் முறையும், மேலும் நரை திரை நோய்கள் அணுகாது. இருவேளை உணவை உட்கொள்வதால் வாழ்வு நோயற்று இன்பமுடையதாக இருக்கும். மூன்றுவேளை உணவு கொள்பவர்கள் நோயாளிகளாகவே இருப்பர். அஜீரணம், மலச்சிக்கல், குடல்நோய் போன்றவற்றால் இவர்கள் பாதிக்கப்பட்டு, எந்நேரமும் நோயுடன் போராடி வாழும் நிலையை உண்டாகும்.

அழுத பிள்ளை சிரித்ததாம் கழுதைப் பாலைக் குடித்ததாம்

சில குழந்தைகள் பிறக்கும்போதே நோய்களின் அறிகுறியுடன் பிறக்கும். உள்ளங்கை, உள்ளங்கால் பகுதிகள் நீல நிறமாக இருப்பின் குழந்தை செவ்வாப்பு என்னும் நோயால் தாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கருதுகின்றனர். இதற்குரிய மருந்தாகக் கழுதைப் பால் புகட்டப்படுகிறது. என்பதனை இப்பழமொழி குறிக்கிறது. கழுதைப்பால், செவ்வாப்பு நோயைக் குணப்படுத்த வல்லது, கழுதைப்பாலில் இருந்து தோற்றம் பெற்றது இப்பழமொழி.

ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்”

இதனைக் கிராமப்புற மக்கள் ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்று வழங்குகின்றனர். ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பதுவே இதன் பொருளாகும். நாட்டுப்புற மருந்துகளில் மூலிகைச் செடிகளும் அவற்றின் வேர்கள் மற்றும் பட்டைகளும் பயன்படுகின்றன. இவற்றுள் குறைந்தது ஆயிரம் வேர்களின் பயன்பாடு பற்றி ஒருவன் தெரிந்திருந்தால் தான் அரை வைத்தியன் என்ற நிலையைப் பெற இயலும் என்பதை இப்பழமொழி உணர்த்துகிறது.

“அரசனை நம்பிப் புருஷனை கைவிட்டாளம்”

அரச மரத்தைச் சுற்றிவந்தால் குழந்தைப் பாக்கியம் ஏற்படும் என்று யாரோ, கூறக்கேட்ட ஒருத்தி கணவனுடன் சேராமல், அரசமரத்தை மட்டுமே சுற்றி வந்தாளாம். அரசமரம், வேம்பும் இணைந்த மரத்தினைச் சுற்றிவர காற்றானது கருப்பையில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை வாய்ந்தது என்பதை அறிந்தே நம் முன்னோர்கள் பிள்ளையார் சிலையை இந்த மரத்தின் கீழ் வைத்தனர். குழந்தைப் பாக்கியமற்ற பெண்கள் கும்பிடுவதற்கு இதுவே முக்கிய காரணம் ஆகும்.

“ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி”

ஆலும் என்பது ஆலமரத்தின் விழுதினையும், வேலமரம் என்பது கருவேல மரத்தின் குச்சிகளையும், நால் என்பது நாலடியாரையும் இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கும். இது பொதுமக்கள் அனைவராலும் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் பழமொழியாகும். ஆலமரத்தின் விழுதினையும், கருவேல மரத்தின் மரக்குச்சிகளையும் நன்கு மென்று பல்விளக்க, பல் நன்கு பளபளப்புடனும், பல் ஈறுகள் நல்ல பலத்துடனும் காணப்படும் என்னும் செய்தி இப்பழமொழியில் விளக்கம் பெறுகிறது.

“பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்”

மருத்துவக் குணம் கொண்ட மிளகு நம் உணவில் பயன்படுத்தப்படும் பொருள்களுள் ஒன்றாகும். இந்த மிளகு நஞ்சு நீக்கும் தன்மையுடையது. பகைவர்களின் வீட்டில் உண்ணும் உணவில் விஷம் கலந்திருந்தாலும், பாம்பின் விஷம் தாக்கியவர்களுக்கு விஷத்தின் தன்மையைக் கண்டறிவதற்கு மிளகு பயன்படுகிறது. பாம்பால் கடியுண்டவருக்கு மிளகின் எரிப்புச் சுவை தெரியாவிட்டால் உடம்பில் விஷம் தாக்கி விட்டதாகக் கூறுகின்றனர்.

“ஆவாரைப் பூத்திருக்கச் சாவோரைக் கண்டதுண்டோ”

ஆவாரைப் பூ இதழ்களைச் சேகரித்து, நிழலில் உலர்த்திக் காய வைத்து எடுத்து இடித்து வைத்துக் கொண்டு தேனீர், டீப்பொடி இவைகளுக்குப் பதிலாக உபயோகித்து வர உடல் வறட்சி, உடல் நாற்றம், சர்க்கரை நோய், தோல் நோய் ஆகிய நோய்களைக் குணமாக்குவதால், ஆவாரைப் பூவின் மகத்துவத்தைக் குறிக்க வந்த பழமொழியாகும்.

Source:::: Input from a Friend of mine

Natarajan

A Simple Story With a Strong Message …

John worked at a meat distribution factory. One day, when he finished with his work schedule, he went into the meat cold room (Freezer) to inspect something but in a moment of bad luck, the door closed and he was locked inside with no help in sight. Although he screamed and knocked with all his might, his cries went unheard as no one could hear him. Most of the workers had already gone and outside the cold room (freezer), it’s impossible to hear what was going on inside. Five hours later, whilst John was on the verge of death, the security guard of the factory eventually opened the door and saved him. John then asked the security guard what he came to do there as it wasn’t part of his work routine.
His replies: “I’ve been working in this factory for 35 years. Hundreds of workers come in and out every day but you’re one of the few who greets me in the morning and says goodbye to me every night when leaving after working hours. Many treat me as if I am invisible. So today like every other day, you greeted me in your simple manner “Hello” at the entrance when resuming for work, But curiously after working hours today, I observed I’ve not heard your “Good bye see you tomorrow”. Hence I decided to check around the factory.
I look forward to your greetings every day because to you, I am someone. By not hearing your farewell, I knew something had happened. Then I Sought and found you!

 

Moral  of the Story…
Be humble, love and respect those around you because life is too short. Try to have an impact on people in ways we can’t even imagine especially the people that cross our path daily. Stay blessed!

 

Source::: Input from a friend of mine

Natarajan

Message For the Day…” Desire Distorts and Denigrates the Mind…”

As a pilgrim, you are helped or handicapped by the antics of the mind. The mind has as its warp and woof, desire or thirst for something or the other, getting some gain or avoiding some loss. Desire arises from attachment, which is a consequence of delusion. Desire distorts and denigrates the mind, and keeps it incessantly agitated. No sheet of water can be calm when stones drop on it, and if there is a perpetual shower of desires, it will be pitifully restless. The bliss which emanates from the Soul (Atma) must be stored leveraging the reservoir of your mind (Buddhi). But, if the reservoir has many cracks and crevices (senses), bliss (Aananda) will be frittered away rendering the reservoir of mind dry. When the hunger of the senses is sought to be appeased, your mind becomes vacillating and wayward. Your mind’s legitimate role is to be the master of your senses, which are its servants.

Sathya Sai Baba

” இந்த தங்க கிண்ணம் தேசிய பாதுகாப்பு நிதிக்கு…”

அந்த அம்மாள் காஞ்சிமாமுனிவரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார். தாம் கண்ட ஆச்சர்யமான கனவு ஒன்றை ஸ்வாமிகளிடம் விவரித்தார். “நான் ஒரு தங்கக் கிண்ணத்தில் கற்கண்டும் திராட்சைப் பழமும் சமர்ப்பித்துத் தங்களிடம் ஆசியைப் பெறுவதுபோல் கனவு கண்டேன்” என்றார் அந்தப் பெண்மணி.

“அப்படியா, அதுமாதிரி செய்ய உனக்கு விருப்பம் இருந்தா அப்படியே செய்” என்றார் ஸ்வாமிகள்.

“இந்த ஏழையிடம் அதற்கான மனம் இருக்கிறதே தவிர பணம் இல்லையே!” என்று ஏக்கத்துடன் கூறினார் அந்தப் பெண்மணி.

“சௌகரியப்படும்போது செய்யலாம்” என்றார்கள்.

சிறிது காலம் சென்றது. அந்த அம்மாளின் பெரிய தகப்பனார் தம் சொத்தில் ஒரு பங்கை அந்தப் பெண்மணி பேருக்கு எழுதி வைத்து இறந்து போனார். அதன் பிறகு அந்த அம்மாள் சுமார் ரூபாய் நான்காயிரம் எடுத்துக் கொண்டு ஸ்வாமிகளிடம் வந்தார். ஒரு தட்டில் பணத்தைச் சமர்ப்பித்தார்.

“எதுக்கு இந்தப் பணத்தை என்னிடம் கொடுக்கிறாய்!” என்று கேட்டார்கள். அதற்கு அந்த அம்மாள் தாம் முன்பு கூறியபடி தங்கக் கிண்ணத்தில் கற்கண்டும், திராட்சையும் சேர்த்துக் கொடுப்பதற்குப் பதில் பணமாகவே சமர்ப்பித்து விடலாம் என்று எண்ணியதாகக் கூறினார்.

“உன் சொப்பனத்தில் நீ எப்படிச் செய்கிறதாகக் கண்டாயோ அதுமாதிரி விருப்பமானால் செய்யலாம். அதுக்குப் பதில் பணமாகக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை” என்றார் ஆசார்ய ஸ்வாமிகள்.

அந்தப் பெண்மணி பணத்தைத் திரும்ப எடுத்துக் கொண்டு சென்றார். தங்கத்தினால் சிறிய கிண்ணம் ஒன்றைச் செய்வித்து, அதில் நிறைய கற்கண்டும், திராட்சைப் பழமும் வைத்து மறுபடியும் ஸ்வாமிகளிடம் கொணர்ந்தார். அந்தச் சமயம் அவர்கள் காட்டுப்பள்ளியில் எழுந்தருளி இருந்தார்கள். தங்கக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்ட ஸ்வாமிகள் அந்தப் பெண்மணிக்கு ஆசி வழங்கினார்கள். அந்த அம்மாள் தன் கனவு நிறைவேறியதனால் மிக்க மனநிறைவோடு விடை பெற்றுக் கொண்டார்.

பிறகு ஸ்வாமிகள் மடத்து அதிகாரியிடம், “இதைக் கணக்கில் சேர்த்துக் கொள்வதில் ஆக்ஷேபம் ஏதும் உண்டா?” என்று கேட்டார்கள். அதிகாரி சற்றுத் தயங்கினார். தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம் அமலில் இருந்த சமயம் அது. அவருடைய தயக்கத்தைப் புரிந்து கொண்டார்கள் ஸ்வாமிகள். “இதை இப்படியே மடத்துக் கணக்கில் சேர்த்துவிட்டால் நான் ஒரு பொய்க்கு உடந்தையாக இருந்ததாக முடியும். நான் உங்களுக்கெல்லாம் வழி காட்டுகிற பீடத்தில் இருந்து கொண்டு ஒரு பொய் சொன்னால், அப்புறம் நீங்களெல்லாம் அதுபோல் ஒன்பது மடங்கு பொய்யைக் கூசாமல் சொல்லலாம் அல்லவா? எனவே எது நியாயமோ அதையே செய்ய வேண்டும்” என்று திருவாய் மலர்ந்தருளினார்கள்.

சரி. அப்படியானால் ஸ்வாமிகள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை ஊகிக்க முடியாமல் அதிகாரி திகைத்தார். “இந்தக் கிண்ணத்தைச் சென்னைக்குக் கொண்டு போய் தேசிய பாதுகாப்பு நிதிக்கு என்று முதல் மந்திரியிடம் சேர்த்து விடுங்கள்” என்று கூறி உடனே அதை அனுப்பி விட்டார்கள்.

அப்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயம் – (1965). சென்னை சென்றிருந்தவர்கள் அப்பொழுதிருந்த முதல்வர் மூலமாக அந்த தங்கக் கிண்ணத்தை யுத்தத்தின் முன்னணியில் நின்ற நம் வீரர்களுக்கு அனுப்பி வைத்தார். அதிலிருந்த பிரசாதம் போர்முனையில் நின்ற நம் பாரத வீரர்களுக்கு விநியோகிக்கப் பெற்றது.

மஹா பெரியவா அருள்வாக்கு : –

* செல்வத்தில் சிறந்த செல்வம் நல்லறிவே. அதனால் அம்பிகையின் திருவடியில் சரணடைந்து நல்லறிவைத் தரும்படி வேண்டுங்கள்.


* இதயத்தில் கடவுள் குடியிருக்கிறார். அதில் கீழான சிந்தனையை அனுமதித்து குப்பைத் தொட்டியாக வைத்திருப்பது கூடாது.

Message For the Day…” Appreciate the Legitimate Role of the Mind as The Master of Senses..”

In the Ramayana story, Queen Kaikeyi yields to the selfish wiles of her maid and as a consequence, her lord King Dasaratha lost his life. Rama who she regarded as her very life-breath was exiled into the forest, and Bharatha her son, disowned her for the very same act! She drew on herself the condemnation from all the people in the Kingdom of Ayodhya. The story is an allegory. Dasaratha is the human body with the five senses of perception and the five senses of action – the ten chariots or Dasha-ratha. He wedded the Queen, the Mind, and the mind yielded to the servant and caused the downfall. This clearly teaches us the legitimate role of the mind as the master of one’s senses. If the master serves the servants, then, he or she loses their self-respect and falls in the esteem of all.

Sathya Sai Baba

Message For the Day…” Do Appreciate the Value of Air You Breathe…”

Co-operation among individuals grouped as a society guarantees security and stability. It is called, Shri Rama Raksha (protection), the mark of Divine Grace. The surest sign of awareness of one’s Divine Nature is the recognition of the bond of kinship with other beings. This bond has now snapped, and as a result, life has been rendered meaningless. The evil spirits of greed and pride, of envy and hatred, are executing their demonic dance in the hearts of man. People are not able to appreciate the value of the air they breathe, of the Sun’s rays that illumine the world, the drops of rain that sustain life, and the subtle power that underlies every object in Nature. They have become low-minded people, dedicating their lives to meaningless pursuits. What needs to be done today is to foster people who are determined to stand and even suffer to realise the holy goals of peace and prosperity for the entire world.

Sathya Sai Baba

“என் பெயர் நிகரன் …”

‘என் பெயர் நிகரன். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன். தமிழ் வழியில் கல்வி பயில்கிறேன்’ – இப்படி ஒரு சிறுவன் என்னிடம் அறிமுகப்படுத்தியபோது என் காதுகளில் தேன் பாய்வதை உணர்ந்தேன்.

வீட்டிற்கு வரும் விருந்தினர், உறவினரிடம் ‘பாப்பா அங்கிளுக்கு ஒரு ரைம்ஸ் சொல்லு’, ‘சே ஹலோ டூ ஆன்ட்டி’ என்றெல்லாம் வித்தை காட்டுவது போல் குழந்தைகளின் ஆங்கிலப் புலமையை பறைசாற்றிக் பெருமைகொள்ளும் இந்த காலகட்டத்தில், எத்தனை பெற்றோர்கள் தங்கள் குழந்தை அழகாக தமிழ் பேச வேண்டும் என விரும்புகின்றனர், ஊக்குவிக்கின்றனர்?

இதை அறிந்துகொள்ள எத்தனித்தபோதுதான் நிகரனின் அறிமுகம் கிடைத்தது. அழகாக தமிழ் பேசும் நிகரனைப் பார்த்து அக்கம்பக்கத்தில் உள்ள அவனது நண்பர்களும் தமிழ் உச்சரிப்பைக் கற்றுக் கொள்கின்றனர் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தானே. நிகரன் வீட்டில் அனைவருமே அநாவசியமாக ஆங்கிலக் கலப்பு இல்லாமல் இனிமையாக தமிழ் பேசுகின்றனர்.

நிகரனின் தாய் காந்திமதியுடன் பேச்சு விரிவடைந்தது. பொதுவாக குழந்தைகள் நுனி நாக்கு ஆங்கிலம் பேச வேண்டும் என விரும்பும் பெற்றோர்கள் மத்தியில் சற்று வேறுபட்டு நிற்கிறார்கள் நிகரனின் பெற்றோர். குறிப்பாக நிகரனின் தாய் காந்திமதி.

“ஆங்கிலத்தில் பேசுவது சமூக அந்தஸ்தாக கருதப்படுகிறது. ஆங்கிலப் புலமை உள்ள நபர் மிகப் பெரிய அறிவாளி என்ற தோற்றமும் நிலவுகிறது. சமுதாயத்தோடு ஒன்றரக்கலந்துவிட்ட இந்த கருத்தோடு இயைந்து வாழ சமூகமும் பழகிவிட்டது.

ஆங்கிலம் தெரியாமல் போய்விட்டால் எதிர்காலத்தில் குழந்தை தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதன் காரணமாகவே ஆங்கில வழிக்கல்வி, வீட்டிலும் ஆங்கிலம் பற்றாகுறைக்கு ஸ்போகன் இங்கிலிஷ் வகுப்பு என குழந்தைகள் ஆங்கிலம் பயில்வதில் அதீத கவனம் செலுத்தப்படுகிறது.

என் குழந்தையை தமிழ் வழிக்கல்வி பயிற்றுவிக்கும் பள்ளியில் சேர்க்கப்போகிறேன் என்றபோது குடும்பத்திற்குள்ளேயே அவ்வளவு எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. அவற்றை மீறியும் நானும் என் கணவரும் எங்கள் விருப்பம் போல் குழந்தையை தமிழ் வழிப் பள்ளியில் சேர்த்தோம்” என்றார்.

தமிழ்வழிக் கல்விக்கான அவசியத்தை விவரித்தபோது, “தாய்மொழி வழி கற்றலே உண்மையான கற்றல். அவ்வாறு கற்பதன் மூலமே துரிதமான புரிதல் ஏற்படுகிறது. சுயசிந்தனை, கற்பனைத் திறன் கூடுதலாக வளர்கிறது. ஆங்கில மொழிக்கற்றலில் எவ்வளவு உருப்போட்டாலும் புரிதல் என்பது முழுமையானதாக இருக்காது. மனித மூளையானது, தாய்மொழியிலேயே சிந்திக்கும். அப்படி இருக்கும்போது ஆங்கில மொழியில் கல்வி கற்கும்போது, ஒவ்வொரு முறையும் தமிழில் மொழிபெயர்த்து அதன்பின்னரே புரிதல் ஏற்படுகிறது. இதனால் சிந்தனைத் திறனுக்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது.

தாய்மொழிக் கல்வியால், சிறு வயதிலேயே புத்தகங்கள், செய்தித்தாள்கள் வாசிக்கும் பழக்கமும் உருவாகிறது. தன் மரபு சார்ந்த, கலாச்சாரம் சார்ந்த நூல்களை அதிகம் வாசிக்கும் போது பக்கவாட்டுச் சிந்தனை உதயமாகிறது. ஆனால், ஆங்கிலத்தை நாங்கள் புறக்கணிக்கவில்லை. ஆங்கிலத்தின் அவசியத்தை உணர்ந்திருக்கிறோம். நிகரனும், ஆங்கிலத்தையும் ஒரு புதிய மொழி என்றளவில் ஆர்வத்துடன் கற்றுக்கொள்கிறான்” என தன் கருத்துகளை முன்வைத்தார்.

நிகரன் ஒரு முன்மாதிரி என்பதில் ஐயமில்லை. நிகரனும் தமிழும் அந்த வீட்டில் அழகாக விளையாடிக் கொண்டிருக்க, இன்னொருவரையும் சந்திக்க நேர்ந்தது. இல்லத்தரசி சவிதா, தன் மகனுடன் விளையாடிக் கொண்டிருந்தார். குழந்தை வாயில் வார்த்தைகள் அரும்பும் போதே மம்மி, டாடி, அங்கிள், ஆன்ட்டி என சிறு சிறு வார்த்தைகளை வலுக்கட்டாயமாக திணிக்காமல் பிள்ளைத் தமிழை வளர்த்துக் கொண்டிருக்கிறார் சவிதா.

“குழந்தையின் மூன்று வயது வரை முழு நேரமும் அதனுடன் செலவிட்டு அரவணைத்துச் செல்வது அவசியம். அதனாலேயே என் ஊடகப் பணியை தற்காலிகமாக ஒதுக்கிவிட்டு ஆற்றல் அறிவனுடன் வீட்டில் இருக்கிறேன். என் நேரமும், பொழுதும் செம்மையாக செலவாகிறது. ஆற்றலுடன் நாங்கள் எப்போதும் தமிழில் தான் பேசுகிறோம்.

ஆங்கிலம் பயில்வதோ, பேசுவதோ தவறில்லை. ஆங்கிலமும் அத்தியாவசியம் தான். ஆனால் அது எங்கு தேவையோ, எவ்வளவு தேவையோ அவ்வளவே பயன்படுத்தினால் போதுமானது. வீட்டில் குழந்தைகளுடன் தமிழில் உரையாடுவதே உறவுகளுக்கு இடையே இனக்கத்தை வலுப்படுத்தும். குழந்தையின் உணர்வுகள் அப்படியே பிரதிபலிக்கப்படும். குழந்தை அழுத்தமாக, அழகாக, தமிழ் பேசும் போது கேட்டுப் பாருங்கள் அப்போது தமிழுக்கும் அமுதென்று பேர் என பாவேந்தர் சொன்னது புரியும்.

ஆற்றல், வளர்ந்து வரும்போது அவனை தமிழ்வழிக் கல்வியில் சேர்க்கவே திட்டமிட்டுள்ளோம். கண்களால் நேரடியாக ஒரு பொருளைக் காண்பதற்கும், கண்ணாடி வழியாக காண்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறதோ அதைத் தான் தமிழ்வழிக் கற்றலுக்கும் ஆங்கிலவழிக் கற்றலுக்கும் உள்ள வேறுபாடாக உணர்கிறேன்.

தமிழ் வழியில் கற்கும் போது எளிதில் புரிதல் ஏற்படும். மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. எத்தனை காலம் ஆனாலும் படித்தது பசும்மரத்து ஆணி போல் பதிந்திருக்கும். கசடற கற்று அதன்படி நிற்க தாய்மொழியே சிறந்தது” என்றார் சவிதா.

நிகரன், ஆற்றல் நம் கண் முன் இரு சாட்சிகள். இவர்கள் போன்று இன்னும் பல இங்கும், அயல்நாடுகளிலும் இருக்கின்றனர்.

பொதுவாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பொதுஇடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது ஏன் தமிழ்ப்பேச ஊக்குவிப்பதில்லை என பேராசிரியர் ராஜராஜனிடம் ஒரு கேள்வியை முன்வைத்தபோது, “அது ஆங்கிலம் நம் சமூகத்தில் பெற்றிருக்கும் மதிப்பின் விளைவு” என்றார்.

‘ஆங்கிலத்தின் மதிப்பை’ விவரித்த அவர், “காலனி ஆதிக்கத்தில் இருந்த நம் நாட்டில் அந்த ஆதிக்கம் முற்று பெற்றாலும் கூட அது விட்டுச்சென்ற மொழியின் ஆதிக்கம் இன்னும் சற்று கூட அகலவில்லை. உயர்கல்வியில் ஆங்கிலத்திற்கு இருக்கும் முக்கியத்துவம், அதற்குள்ள பொருளாதார மதிப்பு, உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என பல்வேறு கூறுகள் ஆங்கிலத்திற்கு தனி மதிப்பளித்துள்ளன. ஒரு மொழி ஆர்வலராக, ஆய்வாளராக ஆங்கில் மொழிக்கென நம் சமூகத்தில் ஒரு தனி மதிப்பு இருப்பதை உணர்கிறேன்.

பன்மொழிப்பேசக் கூடிய, பலவகை கலாச்சாரங்கள் ஒருங்கிணைந்துள்ள நம் இந்திய திருநாட்டில், ஆங்கிலம் வெறும் பயன்பாட்டு மொழியில் இருந்து ஒரு தேவையாகிவிட்டது.

இதன் காரணமாகவே தொடர்பு மொழி என்ற ஒரு நிலை வரும்போது ஆங்கிலத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆங்கிலம் பெற்றிருக்கும் மதிப்பு மாயை அல்ல, அது உண்மையானதே.

அதுவே பெற்றோர்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாகவே ஆங்கிலத்தில் குழந்தைகள் சிறந்து விளங்க வேண்டும் என்பதில் கவனத்துடன் இருக்கின்றனர். ஆங்கிலத்தின் பயன்பாடும், மதிப்பும் அதிகரித்துக் கொண்டிருப்பதால் தமிழ் மொழி வளர்ச்சி நடக்காமல் இல்லை. தமிழ் மொழி வளர்ச்சி அந்த அளவுக்கு வெளிப்படையாக தெரியவில்லை. அந்த வெற்றிடத்தை இப்போது ஊடகங்கள் நிரப்பி வருகின்றன. தமிழ் வளர்ச்சி குறித்த செய்திகளை அவ்வப்போது உலகிற்கு வெளிச்சம் காட்டி வருகின்றன.

இவை ஒருபுறம் இருக்க, ஆங்கிலம் பெற்றிருக்கும் மதிப்பை மீறி தமிழ் மொழியானது பேச்சில் இருந்து கற்றல் வரை எங்கும் வேரூன்றி நிலைநிறுத்தப்பட்ட உருமொழியாகும். ஆனால் இவை ஒரு நாள் இரவில் ஏற்பட்டுவிடாது, அதற்கு காலங்கள் சில ஆகும்.

அத்தகைய சமூக மாற்றத்திற்கு மக்களின் மொழிப்பற்றும் அதிகரிக்க வேண்டும். தாய்மொழி வழி கற்றல் குறித்த விழிப்புணர்வும் பரவலாக ஏற்பட வேண்டும். ஜப்பான், ஜெர்மனி, கொரியா போன்ற நாடுகளில் தாய்மொழி வழிக்கல்வியால் ஏற்பட்டுள்ள நன்மை அப்போதுதான் உணரப்படும். தாய்மொழிக் கல்வியே சமூக வளர்ச்சிக்கும், தனிமனித வளர்ச்சிக்கும் வித்திடும்.

இப்போது அங்கொன்றும், இங்கொன்றுமாக மட்டும் தமிழ்வழிக் கல்வி பயிலும் குழந்தைகள் இருக்கும் நிலை மாற அண்மையில் ஐ.ஏ.எஸ். தேர்வில் முழுக்க முழுக்க தமிழில் படித்து வெற்றி பெற்ற ஜெயசீலன் போன்றோர் தூண்டுகோலாக இருப்பர். ஒன்று, நூறாகும், நூறு ஆயிரமாகும். எல்லாம் மாறும் எதிர்காலத்தில்” என்றார் ராஜராஜன்.

பாரதி ஆனந்த், தொடர்புக்கு ap.bharathi@yahoo.com

Keywords: தமிழ் வழிக் கல்வி, தாய்மொழி, தமிழ் மொழி
Topics: சமூகம்| பதிவுகள்| பார்வைகள்|

Source:::: The Hindu….Tamil

Natarajan

” படித்ததில் பிடித்தது …மௌனம் கேட்கவும் …”

ஒரு சீன அரசன் தன் மகனுக்குப் பட்டம் சூட்டிவிட வேண்டும் என்று முடிவு செய்தார். அரசன் தன் மகனுக்கு அரசனாகும் தகுதி இருக்கிறதா என அறிந்துகொள்வதற்காக ஒரு ஜென் குருவிடம் அனுப்பிவைத்தார்.

குரு இளவரசனிடம், “ நீ காட்டுக்குச் சென்று ஆறு மாதங்கள் கழித்து வா” என்றார்.

இளவரசன் காட்டில் பல இன்னல்களை அனுபவித்து ஆறு மாதங்கள் கழித்து வந்தார்.

குரு, “நீ காட்டில் என்னென்ன ஓசைகளைக் கேட்டாய் ?”

இளவரசன், “குருவே, நான் காட்டில் சிங்கங்களின் கர்ஜனை, புலியின் உறுமல், நரியின் ஊளையிடும் சத்தங்களைக் கேட்டேன்” என்றான்.

குரு, “நீ மீண்டும் காட்டுக்குச் சென்று ஆறு மாதங்கள் கழித்து வா”

சலிப்படைந்த இளவரசன் இம்முறைத் தன் காதுகளைக் கொண்டுக் கூர்மையாகக் கேட்கத் தொடங்கினான். ஆறு மாதங்களுக்குப் பின் குருவின் முன் வந்து நின்றான்.

குரு அவனிடம் முன்புக் கேட்டக் கேள்வியையே கேட்டார்.

இளவரசன், “குருவே இம்முறை பறவைகளின் ஒலிகளைக் கேட்டேன், பூச்சிகளின் சத்தங்களைக் கேட்டேன்”

குரு மீண்டும் அவனைக் காட்டுக்கு அனுப்பினார். ஆண்டுகள் உருண்டோடின. ஒருநாள் இளவரசன் குருவின் முன் வந்து வணங்கி நின்றான். அவன் முகத்தில் அமைதியும் ஒளியும் குடிகொண்டிருந்தன. இளவரசனின் நிலையைக் கண்ட குரு அரசனை அழைத்து வருமாறு ஆளனுப்பினார்.

இம்முறை குரு அவனிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. இளவரசனே பேசத் தொடங்கினான், “குருவே, காட்டில் மொட்டுக்கள் அவிழும் ஓசையைக் கேட்டேன், பிற உயிர்கள் தங்கள் மனங்களில் பேசுவதையும் தெளிவாகக் கேட்டேன், அவற்றின் மௌனத்துக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் எண்ணங்களின் அதிர்வுகளையும் கேட்டேன்” என்றார்.

அங்கு வந்த அரசன், இளவரசன் பேசுவதையெல்லாம் ஆச்சரியத்தோடுக் கேட்டுக்கொண்டு இருந்தார்.

குரு அரசனைப் பார்த்து, “அரசனே இப்போது இளவரசன் நாட்டையாளும் முழுத் தகுதியைப் பெற்றுவிட்டார். வெறும் வெற்று ஆரவாரங்களில் உண்மை இல்லை என்பதையும், உண்மையானது மௌனத்துக்குள் ஒளிந்திருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டுவிட்டார்.” என்றார்.

மகிழ்ச்சியடைந்த அரசனும் இளவரசனும் குருவை வணங்கி விடைபெற்றனர்.

Message For the Day…” Repeat the Name of God and Gain Control Over your Mind… “

What manifests externally is called ‘Manas’ (Mind). That which is internal is ‘Nama’ (The Name of the Lord). Repeating the Name of the Lord, you can gain control over your mind and attain the state where there is no Mind (Amanaska). As long as you are under the influence of your mind, you will tread the worldly path and get lost. You can clearly hear the voice of the Lord, only when you attain the ‘No Mind’ State. To attain that state, you must listen to the inner voice, the voice of the Lord within you. To hear Him, you must practice Devotion and Surrender. The easiest way to understand and experience God is to Love Him. You can easily grow in love for God, by worshipping Him in a specific form. A true devotee does all duties with total surrender only to please God, and dedicates every action to please Him.

Sathya Sai Baba