வாரம் ஒரு கவிதை …” கவிக்கோவுக்கு ஒரு கவிதாஞ்சலி “

 

கவிக்கோவுக்கு கவிதாஞ்சலி
————————-
கவிஞன் என்று சொன்னாலே  அது கவிக்கோ !
கதையிலும்  கவிதை விதை விதைத்து  கவி
சொன்ன கவிஞன் அவன் ….இந்த புவி கேட்ட
கவிதை தானும் கேட்க விழைந்தானோ அந்த
இறைவன் ?  இறை அழைப்பு ஏற்று இப்புவி
துறந்து எமை  மறந்து பறந்து சென்றாயோ கவிஞனே ?
நீ பறந்து சென்ற வேகம் பார்த்து நான் வாய் மூடி
மௌனியானேன் …உன் பால் வீதி கவிதைப் பயணம்
முடித்து  உன் வீட்டு  வீதிக்கு நீ மீண்டும் திரும்பும் நாள்
வரை காத்திருப்பேன் நான் மெளனமாக !
உன் பால் வீதி பயணத்தில் என் மௌனத்தின் குரல்
உனக்கு கேட்காமல் இருக்குமா என்ன ?
Natarajan
12th June 2017

வாரம் ஒரு கவிதை …” மேகம் போடும் தாளம் “

 

மேகம்  போடும்  தாளம்
__———————
நீல வானம் இசைக்கும் மழை இசைக் கச்சேரிக்கு
வான் மேகம்  தவறாமல் போட்டிடும்  சரியான தாளம் !
கரு மேகத்  தாளம் இல்லாமல் மழை  இசைக் கச்சேரி ஏது ?
மனிதன் போட்ட தப்பு தாளத்தால் இன்று நீல
வானம் இசைக்க மறந்ததே தன் இன்னிசை மழையை !
மழையின்றி மனிதன் தவித்து ஒரு வாய் குடிநீருக்கு
போடுகிறான்  தாளம் இன்று ! மேள தாள வாத்தியம்
சகிதம் காத்திருக்கிறான் அவன்   வான் மழை இசைக்கு !
வான் மழை இசைக்கு சரியான தாளம் போடும்
மேகமே இன்று போடுதே தாளம் அதன் முகத்தை
தொலைத்து விட்டு !
தொலைத்த முகத்தை தேடி எடுத்து வான் மேகம்
போட வேண்டும் மீண்டும் ஒரு தாளம் வான் மழை
இசைக்கு கட்டியம் கூறி !  இசைக்க மறந்த  வானமும்
மேகம் போடும் தாளத்தில் தன்னை மறந்து இசைக்க
வேண்டும் ஒரு இனிய மழை  கீதம் இந்த மண் குளிர!
Natarajan … in http://www.dinamani.com datec 5th June 2017

வாரம் ஒரு கவிதை ….” கல் வீச்சு “

 

கல் வீச்சு
———-
கல் எறிய கற்றுக் கொடுக்கவில்லை உன் கல்வி
கற்றது மறந்து கல் எடுத்து நீ வீசி உடைப்பது
ஒரு பேருந்தின் கண்ணாடியை மட்டும் அல்ல
உன்னைப் பெற்றவரின் இதயத்தையும்தான் !
பேசி தீர்த்துக்கொள்ளும்  பிரச்சனையை கல்
வீசி தீர்க்க முடியுமா சொல்லு …தம்பி ?
நீ கற்ற கல்வி உனக்கு காட்டாத  வழியை
ஒரு கல் காட்டி விடுமா உனக்கு ?
சற்றே யோசி நீ தம்பி … உன் வாழ்வின்
வெற்றிக்கு உன் கல்வி மட்டுமே அடித்தளம் !
அது மறந்து ஒரு கல் நீ கையில் எடுத்தால்
அந்த ஒரு கல் உருமாறும் ஒரு தடைக்கல்லாக
உன் வெற்றிப் பயணத்தை சீர் குலைக்க !
கல் வீச்சில் வீரன் என்னும் பெயர் உனக்கு
வேண்டாம் … கல்வியில் அசகாய சூரன்
என்னும் பட்டம் மட்டுமே வேண்டும் உனக்கு !
My Tamil kavithai  in http://www.dinamani.com dated 29th May 2017
Natarajan

வாரம் ஒரு கவிதை…. ” குழந்தையின் குரல் “

 

குழந்தையின் குரல்
——————–
மழலையின் குரல் ஒரு அன்னைக்கு
அழைப்பு மணி என்றால் அந்த
அன்னையின் பதில் குரல் தந்திடும்
ஒரு புத்துணர்ச்சி அந்த குழந்தைக்கு !
இது ஒரு பாசப்பிணைப்பு !
குரல் ஒலி வழியில்  குழந்தையும்
தாயும் இணையும் இந்த பாச  சங்கமம்
ஐந்தறிவு ஜீவனுக்கும் சொந்தமே !
இறைவன் படைப்பில் இது ஒரு
அதிசயம் …ஆச்சர்யம் !
தொடு திரை கணினி அலை பேசி
நம் கையில் குழந்தை போல இன்று !
“தாய்” நம் குரலை இனம் கண்டு
தன் கதவு திறந்து இந்த உலகையே
நம் கண் முன் கொண்டு வந்து சேர்க்குதே
இந்த அலைபேசி “குழந்தை” !
இந்த  கணினி அலைபேசி நமக்கு
குழந்தையா ….இல்லை  நாம்
அதற்கு குழந்தையா !  இது இன்று
புரியாத  புதிர் !
தன் குழந்தையின் குரல் மறந்தாலும்
தங்கள்  அலை பேசியின் அழைப்பு
மணியின் ஒலியை சற்றும் மறக்காத
தாய் தந்தை பலர் நம்மிடையே  உண்டு இன்று !
இது விந்தையிலும் விந்தை !
K. Natarajan  in http://www.dinamani.com dated 21st May 2017

வாரம் ஒரு கவிதை ….’ சுமையும் சுகங்களும் “

 

சுமைகளும் சுகங்களும்
———————–
கருவில் சுமக்கும் குழந்தை தாய்க்கு சுமையல்ல
தோளில் பிள்ளை …ஒரு தந்தைக்கு சுமை இல்லை !
சுமையும் சுகமாக தோன்றும்  நேரம் அது !
நிழலின் சுகம் வெய்யிலை சுமந்தவனுக்கு புரியும் !
நீரின் சுகம் பாலைவனத்தில் நடப்பவனுக்கு தெரியும் !
ஒளியின் சுகம் இருளில் புரியும் ! பொருளின்
அருமை அது இல்லாதவனுக்கு தெரியும் !
ஒரு சுமையை சுமந்தவனுக்கு மட்டுமே  புரியும்
சுகத்தின் அருமை!
சுமை சுமக்காமல்  சுகம் இல்லை … சுகம்
அளிக்காத சுமையும்  இல்லை !
சுமை சுமப்பவனுக்கு  சுகம் நிச்சயம் !
சுமை தவிர்த்து சுகம் மட்டும் நாடும்
ஒருவனுக்கு அந்த சுகமே சுமையாய் மாறும் !
Natarajan
in http://www.dinamani.com dated 15th may 2017

வாரம் ஒரு கவிதை …” கோடை மழை “

 

கோடை மழை
————–
சாரல் மழை ….தூறல் மழை …அடை மழை !
அடை மொழி உனக்கு எதுவானாலும் மழை
நீ எனக்கு ஒரு நன்கொடைதான்  எப்போதும்!
கோடை வெயிலில் வாடும் இந்த மண்ணுக்கு
ஒரு கொடை  மழையாய் நீ வரவேண்டும் மண்ணும்
என் மனசும் குளிர ! வருவாயா நீ கோடை மழையே ?
குடை துறந்து  உன் கொடையில் நான் என்னை
மறந்து துள்ளி விளையாட சீக்கிரமே வந்து விடு மழையே !
அடை மழையாய் நீ என்  மண்ணை புரட்டி போட்ட சமயம்
என்ன மழை ..என்ன மழை …விடாமல் பேய்   மழை என  நான்
உன்னை வசை பாடியது உண்மை !
இன்று சுட்டெரிக்கும் சூரியனின் தாக்கத்தில்  ஒரு சொட்டு மழை
நீருக்கு காத்திருக்கும் பல உயிரில் நானும் ஒருவன் !
நான் பாடிய வசைமொழி மறந்து மன்னிக்க வேண்டும் என்னை
மழைத்  தோழி நீ   ! இசைக்க வேண்டும் ஒரு இனிய கீதம் நீ எனக்காக !
இடி மழை மின்னலுடன் நீ ஆட வேண்டும் ஒரு அழகு
நாட்டியம் என் மண்ணில் …கோடையில் உன் இசை நாட்டியம்
கட்டியம் கூற வேண்டும் ஒரு கோடை இசை விழாவுக்கே !
தட்டாமல் நீ வரவேண்டும் கோடை மழையே ! கை தட்டி உன்னை
அரவணைக்க காத்திருக்கிறோம் நானும் என் மண்ணும் !
Natarajan  in www. dinamani.com  dated 24th april 2017

வாரம் ஒரு கவிதை …” சூரிய தாகம் “

 

சூரிய தாகம்
————–
சுள்ளென்று எரிக்கும் சூரியனின் தாக்கம் தெரியும்
அது என்ன சூரிய தாகம் ? சூரியனுக்கே  தாகமா !
இல்லை  தாகம்,  சூரிய வெப்பம் தாக்கும் பூமிக்கா ?
தாகம் பூமிக்கு மட்டும் அல்ல …  சூரியனுக்கும் இருக்கு !
மண்ணில் உள்ள நீர் மனிதனுக்கு மட்டுமல்ல சொந்தம் !
விண்ணில் உள்ள மேகத்துக்கும் அதுதானே நீராகாரம் !
மண்ணிலிருந்து நீர் உறிஞ்சி வெண் மேகம் நெய்து
கொடுக்கும் கரு மழை மேக புத்தாடை  சூரியனுக்கு
ஒரு பட்டாடை ! கதிரவன் அவன் தாகம் தீர்க்கும்
தண்ணீர் பந்தலும் அதுவே !
விண்ணின் தண்ணீர் பந்தல் அள்ளி வழங்கும்
கொடையே இந்த மண்ணுக்கு துள்ளி வரும் மழை !
மண்ணுக்கு துள்ளி வரும் மழை நீரை வரவேற்க
ஏரி குளம் ஒன்றும் இல்லையே நம் மண்ணில் இன்று !
மண்ணுக்கு குடை பிடித்து கருமேக மழைப்
பொழிவை வழி காட்டி வரவேற்கும் மரம்,
கானகமும் கண்ணில் படவில்லையே இன்று !
வரிசை கட்டி வானம் தொடும் கட்டிடங்கள்தான்
தெரியுது கண்ணுக்கு எட்டும் தூரம் மட்டும் !
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் ! ஏரி குளம்
அருமை புரிந்து நம்  மண்ணின் நீர் வளம்
காப்போம் !
மரம் வளர்த்து நீர் வளம் பெருக்கினால்
தீரும் அந்த சூரிய தாகம் !
சூரிய தாகம் தணிந்தால்  தீரும் இந்த மண்ணின்
தண்ணீர் தாகம்  தன்னால் !
Natarajan  in http://www.dinamani.com  dated 17th April 2017
Natarajan

வாரம் ஒரு கவிதை ….” கை கோர்ப்போம் ” !

 

கை கோர்ப்போம் …
——————-
“பார்க்கிறேன் நான் ஒரு கை”  என்று சொல்லும்
வாய்  “கோர்க்கிறேன் என் கை உன்னுடன்” என்று
சொல்ல வேண்டும் …
கை கோர்த்து நிற்கும் மனித சங்கிலி தொடுவது
இரு ஊரின் எல்லையை  மட்டுமல்ல ! எல்லை தாண்டி
இருக்கும் இதயங்களையும் சேர்த்துதான் !
நிலவுக்கே மின்தூக்கியும்  படியும் அமைக்க
வழி சொல்லும் இன்றைய இளம் தலைமுறை
நமக்கு நினைவு படுத்தும்  பாடம்  “கூடி வாழ்ந்தால்
கோடி நன்மை “
இல்லை இனிமேல் எங்கள் ஊருக்கு ஒரு எல்லை
இல்லை இனிமேல் எங்கள் நதிக்கு  ஒரு எல்லை
இல்லை இனி ஒரு சாதி மத பேதம் எங்கள் நாட்டுக்குள்
இல்லை இனி ஒரு மத துவேஷம் எங்களுக்குள் !
இது எதுவும் இல்லையென்றால்  வானம்தான் எல்லை
நம் நாட்டின் மறுமலர்ச்சிக்கு…  வளர்ச்சிக்கு !
இணையும் கைகள் இணைக்கும் நம்
இதயங்களையும் ! இனித்து மலரும் புது உறவும் !
உறவுகள் ஒன்றானால்  சச்சரவு ஓடி மறையும் !
இதயங்கள் இணையும் நேரம் நதிகளும் இணையும் தன்னால் !
இன்னும் என்ன தயக்கம் நமக்கு ?  கோர்ப்போம் கைகளை
இன்றே ! நிலவுக்கு படி கட்ட நினைக்கும் நம் பிள்ளைக்கு
காட்ட  வேண்டும் பச்சைக் கொடி நாம் அனைவரும் நம்
கை கோர்த்து ! நிலவின் படிக்கட்டுக்கு நாம் அமைத்துக்
கொடுக்கும் வலுவான  அடித்தளம் இணையும் கைகளே !
கை கோர்ப்போம் …கை கொடுப்போம் …இளம்
விஞ்ஞானிகள் கனவு  நனவாக !
Natarajan
in http://www.dinamani.com dated 10th April 2017

வாரம் ஒரு கவிதை …’ பச்சை நிலம் “

 

பச்சை நிலம்
————
பச்சை மண்ணில் கால் பதித்து நித்தம் நித்தம்
நீர் பாய்ச்சி  ஒரு பச்சை பயிர் பட்டாடை நெய்து
அதை தன்  நிலத்துக்கு  சூட்டி அழகு பார்க்கும்  பிறவிக்
கலைஞன் அந்த உழவனிடம் மிச்சம் இருப்பது  ஒரு
சிறு பச்சை துண்டு மட்டுமே !
பசி பசி என்று நாம் எல்லாம் சிவப்பு கொடி
பிடித்து ஊரெல்லாம் நியாயம்  கேட்டு
அலைந்த நேரம்  , புசி புசி  என்று  பச்சைக்
கொடி காட்டி நமக்கு அன்னமிட்ட அந்த விவசாயி
இன்று ஊர் விட்டு ஊர் சென்று தன் குறை
தீர முறையிட்டும்… காட்டவில்லையே அரசாங்கம்
அவனுக்கு ஒரு பச்சைக் கொடி  இன்னும் !
சிவப்புக் கொடி காட்டி அவன் குரலை ஒடுக்காமல்
ஒரு சிகப்பு கம்பளம் விரித்து அந்த பிறவிக் கலைஞனை
அரவணைத்து நம் அரசாங்கம் பேச வேண்டும் அவனுடன் !
அவன் குறை தீர்ந்தால்  மன நிறைவு அவனுக்கு மட்டுமல்ல!
அன்னமிடும் அவன் கையை எதிர்பார்க்கும் நம்
அனைவரின் வீட்டிலும் அது அரசு  ஏற்றிவைக்கும் பச்சை விளக்கு !
Natarajan   in http://www.dinamani.com dated 3rd april 2017

வாரம் ஒரு கவிதை…” ஆறோடும் நீரோடும் “

 

ஆறோடும்  நீரோடும் …
——————-
நீரோட்டம் இல்லையென்றால் ஆறோட்டம் ஏது ?
நீரில்லா ஆற்றில்  மணல் நிரம்பி  இருக்க ..இன்று
மணல் அள்ள ஓடும் வண்டிகள்  ஓட்டம் எந்த
ஒரு ஆற்றின் நீர் ஓட்டத்தையும் தள்ளும் பின்னுக்கு !
நீரோடும் ஆறே  ஒரு பாலைவனம் ஆகும் நேரம்
சோலைவனம் எங்கே இருக்கும் நாட்டுக்குள் ?
இன்று நிழல் தேடி ஓடும் நாம்   குடி நீர் தேடி
அலையவும் வேண்டுமா ? சிந்திக்க வேண்டும் நாம் !
இணைய தளம் மூலம் உலகத்தின் ஒரு ஒரு
மூலையையும் இணைத்து விட்டோம் !
இணைய தளம் மூலம் இதயங்கள் பல
இணையவும் வழி காட்டி  விட்டோம் !
கணினி அறிவியல் கையில் எடுத்து
விண்வெளியிலும்  நம் வெற்றிக் கணக்கை
துவக்கி விட்டோம் !  நதி நீர்
இணைப்பை மட்டும் நமக்கு எட்டாக் கனி
என்று விட்டு விடுவது என்ன நியாயம் ?
மண்ணையும்  விண்ணையும் இணைத்த
நாம் நம் நாட்டு நதி நீரை இணைக்க
முடியாதா என்ன ?  “உன்னால் முடியும் தம்பி “
என்ற சொல்லின் பின்னால் இருக்கும்
நம்பிக்கை ஒரு வேத வாக்கு அல்லவா !
வெற்று வாக்கு இல்லையே அந்த மந்திர வாக்கு !
மாய மந்திரம் எதுவும் செய்ய வேண்டாம் நாம் ! ஒரு வழி
வகுப்போம் நதி நீர் இணைப்புக்கு இன்றே
இப்பொழுதே ! இமயம் முதல் குமரி வரை
சாலைகளை  இணைத்த நமக்கு சாலையோரம்
சீறிப்பாயும் நதிகளையும் இணைப்பது  ஏன்
முடியாத இலக்கு இன்று வரை ?
சற்றே சிந்தித்து எதிர்கொள்ள வேண்டும்
இந்த சவாலையும் ! முயன்றால் முடியாதது
என்று ஒன்று உண்டா ?
இணைவோம் நாம் ஒன்றாக …இணைப்போம்
நம் நதி யாவும்  ! இணையப்போவது நதிகள்
மட்டும் அல்ல ! இந்திய மக்களின் தேசிய ஒருமைப்பாட்டின்
 நீரோட்டமும் சேர்ந்துதான்! வற்றாமல்  தொடரட்டும் நீரோட்டம் ஒரு ஒரு
ஆற்றிலும் ! இது ஜீவ நதி அது ஜீவ நதி என்னும்
பேதம் இல்லாமல் நீரோடும் ஒரு ஒரு ஆறும்
ஒரு ஜீவ நதியாக மாறட்டும் ! ஆறு செல்லும்
வழி எல்லாம் பூமி செழிக்கட்டும் ! நதி இணைப்பு
நம் நாட்டு மக்கள் அனைவரையும் ஓர் அணியில்
இணைக்கும் அன்பு  பாலமாகவும்  அமையட்டும் !
Natarajan.. in http://www.dinamani.com dated 27th March 2017