“Move Ahead with Some Smile and Laughter “….

 

 

Move ahead with Confidence
Move ahead with Faith
Move ahead with Respect
But above all Move ahead with some Sense of Humor in your Life..
Move ahead with some Laughter
Move ahead with some Smile
Move ahead with Grace
And no matter how hard the road of your life ahead may seem
It will ease away all your Problems and Pain
It will make the nightmare of your hardships turn into sweet memories
Move ahead with Positivity
Move ahead Throwing Negativity
Move ahead to Celebrate Life’s Beautiful Moments.
Because after all , you just have one life to live-Live it with smile and Pause the time.
 
May our Sadguru Sainath bless us with the ability of making everyone around us smile in this journey of life which will lead us to his Lotus feet…  
source:::::H.Deepa in  http://debu7370.blogspot.com/
natarajan

” வாங்க …வாழ்த்துவோம் ஸ்வர்ண லக்ஷ்மியை ” !!!

அமெரிக்காவில் உள்ள ஐநா சபையில் ஒருவர் ஒரு முறை பேசினாலே வாழ்க்கையில் பாக்கியம் பெற்றவர் ஆவார் ஆனால் பார்வையற்ற சென்னை மாணவி சுவர்ணலட்சுமி ஒரு முறைக்கு இரு முறை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஐநாவில் பேசியுள்ளார் அவர் யார் என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறதா..

 

.ஐநாவும் என்னை அழைக்கும்..

சென்னை கனரா பாங்கின் நிறுவனர் நாள் விழாவினை முன்னிட்டு சாதனை புரிந்த மாணவ, மாணவியருக்கான பாராட்டு விழா ப்ரீடம் ட்ரஸ்ட் டாக்டர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது.
மேடைக்கு அழைக்கப்பட்டவர்களில் சுவர்ணலட்சுமி பலரது கருத்தையும் கவர்ந்தார்.
சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவிதுரைக்கண்ணு- லட்சுமி தேவி தம்பதியின் ஒரே மகள் சுவர்ணலட்சுமி.
சுவர்ணலட்சுமிக்கு பிறவியிலே கண்பார்வை இல்லை. இவருக்கு பார்வைவேண்டி பலவித முயற்சிகள் எடுத்த பெற்றோர் அந்த முயற்சிகள் தந்த தோல்வியினால் துவண்டு போகவில்லை, காரணம் தாங்கள் துவண்டு போனால் அது தங்களது மகளை பாதிக்கும் என்பதால் மகளின் விருப்பம், அவரது முன்னேற்றத்திற்காக தங்களது வாழ்க்கை ஒதுக்கவும், சுவர்ணலட்சுமியின் வளர்ச்சியை செதுக்கவும் செய்தனர்.
சுவர்ணலட்சுமி சென்னையில் உள்ள பார்வையற்றோருக்கான லிட்டில் பிளவர் கான்வெண்ட் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பிரமாதமாக படித்து வருகிறார் தற்போது அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார்
பாட்டு பாடுவது, கீபோர்டு வாசிப்பது, நீந்துவது, செஸ் விளையாடுவது என்று எதையும் விட்டு விடாமல் எதிலும் சோடை போகாமல் வளர்ந்து வந்த சுவர்ணலட்சுமிக்கு பள்ளியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பார்லிமெண்ட் அமைப்பின் தகவல் தொடர்புதுறை அமைச்சர் பதவி கிடைத்தது.
இந்த இடத்தில் குழந்தைகள் பாராளுமன்றம் பற்றி ஒரு சில வார்த்தை
இந்தியாவின் பல மாநிலங்களில் குழந்தைகளை மட்டுமேவைத்து அமைக்கப்பட்டதுதான் இந்த குழந்தைகள் பாராளுமன்றம். தமிழகத்தில் எட்வின் என்பவரால் 1993ல் நாகர்கோவிலில் தொடங்கப்பட்டு, சிறப்பாக இயங்கி வருகிறது. தமிழகத்தில் மட்டும் 15,000 குழந்தைகள் பாராளுமன்றங்கள் உள்ளன. சமூக ஆர்வலர்களின் மூலம் நடத்தப்படும் இந்தப் பாராளுமன்றங்களில் பிரதமர் மற்றும் பிற அமைச்சர்கள் வரை அனைவரும் பள்ளி மாணவர்களே, இதன் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சூரியசந்திரன்.
குழந்தை திருமணம், பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, தங்களது பிரச்னைகளைத் தாங்களே பேசித் தீர்வுகாண்பது என இந்தப் பாராளுமன்றங்களின் பணிகள் மகத்தானவை. இதன் மூலம் மாணவர்கள், தங்களது பள்ளிப் பருவத்திலேயே தன்னம்பிக்கையையும் ஆளுமைப் பண்பையும் வளர்த்துக் கொள்ள முடிகிறது.
இந்த பாராளுமன்றத்தில் வெட்டி பேச்சு கிடையாது, வேட்டி கிழியும் அபாயமும் கிடையாது, வெளிநடப்பும் கிடையாது எல்லா பேச்சும் அளவானவை, ஆரோக்கியமானவை, குழந்தைகள் உரிமையை நிலைநாட்டுபவை, அவர்களது வளர்ச்சிக்கு வழிகாணுபவை.
ஒவ்வொரு பாராளுமன்றத்திலும் தேர்தல் மூலமாக அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அந்தந்தப் பகுதிகளில் தேர்வு செய்யப்படும் அமைச்சர்கள் அடங்கிய பாராளுமன்றங்களின் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடக்கும். அதில் சிறப்பாகப் பேசியவர்கள், செயல்பட்டவர்கள் மாநில அளவிலான பாராளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.
தகவல் தொடர்பு அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட சுவர்ணலட்சுமிக்கு இயல்பாகவே சமூக சேவை எண்ணம் உண்டு. இதன் காரணமாக கடலூரில் தானே புயல் தாக்குதல் சம்பவத்தை கேள்விப்பட்டு 30 ஆயிரம் ரூபாயை சேகரித்து நேரடியாக சம்பவ இடத்திற்கு போய் பாதிக்கப்பட்ட மக்களிடம் அந்த நிதியை வழங்கினார்.
அதன்பிறகு அனைவருக்கும் தொண்டு செய்யும் எண்ணம் வரவேண்டும் என்பதற்காக ஒருவருக்கு ஒரு ரூபாய் என்ற திட்டத்தை கொண்டு வந்து அந்த ஒரு ரூபாயும் பள்ளி குழந்தைகள்தான் தரவேண்டும் என்று சொல்லி ஏழாயிரம் ரூபாயை ஏழாயிரம் பேரிடம் இருந்து வசூல் செய்தார். இந்த பணத்தை கொண்டு இரண்டு குழந்தைகளின் படிப்பு கட்டணத்தை கட்டியதுடன் சிலருக்கு சீருடையும் வாங்கிக் கொடுத்தார்.
இந்த நிலையில் அடுத்து நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் சுவர்ணலட்சுமி நிதி அமைச்சராக தேர்வானார் இவரது பேச்சு செயல்பாடு காரணமாக அடுத்து நடந்த மாநில அளவிலான கூட்டத்தில் குழந்தைகள் பாராளுமன்ற பிரதமராக தேர்வானார்.
இந்த நிலையில் ஐநாவின் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் பற்றி பேச அனுமதிக்கப்பட்டார், இவரது சிறப்பான பேச்சு காரணமாக அமெரிக்கா போய் திரும்பி சில மாதங்களிலேயே திரும்பவும் ஐநா அழைக்கப்பட்டு மீண்டும் போய் பேசிவிட்டு வந்தார்.
இப்படி ஒரு முறைக்கு இருமுறை ஐநா போய்வந்த சுவர்ணலட்சுமிக்கு இங்குள்ள பல்வேறு அமைப்புகள் பாராட்டு விழா நடத்திவருகின்றன.
ஆரம்பத்தில் என்னிடம் பல விஷயங்களில் பயம், தயக்கம், பார்வை இல்லையே என்கிற வருத்தம் இருந்தது. சில்ரன்’ஸ் பார்லிமென்டில் சேர்ந்த பிறகு, தைரியமும் தன்னம்பிக்கையும் வளர்ந்தன. ‘எந்தச் செயலையும் பளுவாக நினைக்காமல், புதிய கண்ணோட்டத்துடன் அணுகினால் ஜெயிக்கலாம்’ என்பதைக் கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு பாராளுமன்றக் கூட்டத்தின் போதும் எந்த மாதிரியான பிரச்னைகள் விவாதத்துக்கு வரும், அதற்கு எப்படிப் பட்ட தீர்வைச் சொன்னால் சரியாக இருக்கும்னு ஒரு முன் தயாரிப்போடு இருப்பேன்.
இந்த திட்டமிட்ட உழைப்பு என்னை தற்போது இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த பாராட்டுக்கள் என்னை இன்னும் சமூகத்திற்கு உழைக்க தூண்டுகிறது. எதிர்காலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராகி இன்னும் நிறைய உழைக்க என்னை நான் தயார் செய்து கொண்டு வருகிறேன். நம்மை வாழவிடாமல் தடுப்பதற்கு நாட்டில் ஆயிரம் காரணங்கள் இருக்கும் ஆனால் வாழவைக்க ஏதேனும் ஒரு காரணம் இருக்கும் அந்த காரணத்தை பிடித்துக்கொண்டு நாமும் வளர வேண்டும், நம்மைச் சார்ந்தவர்களையும் வளர்க்க வேண்டும். பயமும், தயக்கமும்தான் நமது லட்சியப் பயணத்திற்கான தடைக்கற்கள் முதலில் அந்த தடைக்கற்களை தகர்த்து எறியுங்கள் என்று முழங்கும் சுவர்ணலட்சுமியை      வாழ்த்த  வார்த்தைகள் இல்லை !!!
– எல்.முருகராஜ்  in Dinamalar …Tamil daily

natarajan

“If You Dial a Wrong Number , You Never Get a Busy Tone ” !!!

 

I DIDN’T BELIEVE THESE LAWS AT FIRST, BUT HAVE FOUND THEM TO BE TRUE FROM ACTUAL EXPERIENCE.

 

 1.Law of Mechanical Repair – After your hands become coated with grease, your nose will begin to itch and you’ll have to pee


2.
Law of Gravity – Any tool, nut, bolt, screw, when dropped, will roll to the least accessible corner.

3.
 Law of Probability The probability of being watched is directly proportional to the stupidity of your act.

4.
Law of Random Numbers – If you dial a wrong number, you never get a busy signal and someone always answers.

5.
Supermarket Law – As soon as you get in the smallest line, the cashier will have to call for help.

6.
Variation Law –If you change lines (or traffic lanes), the one you were in will always move faster than the one you are in now.

7.Law of the Bath – When the body is fully immersed in water, the telephone rings.

8.
 Law of Close Encounters – The probability of meeting someone you know increases dramatically when you are with someone you don’t want to be seen with.

9.
 Law of the Result – When you try to prove to someone that a machine won’t work, it will.

10.
 Law of Biomechanics – The severity of the itch is inversely proportional to the reach.

11..
 Law of the Theater & Hockey Arena – At any event, the people whose seats are furthest from the aisle, always arrive last. They are the ones who will leave their seats several times to go for food, beer, or the toilet and who leave early before the end of the performance or the game is over. The folks in the aisle seats come early, never move once, have long gangly legs or big bellies and stay to the bitter end of the performance. The aisle people also are very surly folk.

12.
 The Coffee Law – As soon as you sit down to a cup of hot coffee, your boss will ask you to do something which will last until the coffee is cold.

13.
 Murphy’s Law of Lockers – If there are only 2 people in a locker room, they will have adjacent lockers.

14.
 Law of Physical Surfaces – The chances of an open-faced jam sandwich landing face down on a floor, are directly correlated to the newness and cost of the carpet or rug.

15.
Law of Logical ArgumentAnything is possible if you don’t know what you are talking about.

16.
 Brown’s Law of Physical Appearance – If the clothes fit, they’re ugly.

17.
Oliver’s Law of Public Speaking– A closed mouth gathers no feet.

18.
Wilson’s Law of Commercial Marketing StrategyAs soon as you find a product that you really like, they will stop making it.

19.
 Doctors’ Law– If you don’t feel well, make an appointment to go to the doctor, by the time you get there you’ll feel better… But don’t make an appointment, and you’ll stay sick. This has been proven over and over with taking children to the pediatrician.

 

sourc:::::: input from a friend of mine…

natarajan

படித்து ரசித்தது …வத்த குழம்பும் , கீரை மசியலும் !!!

 ஸாதம் – வத்தல் குழம்பும்கீரை மசியலும்!

​ நம்ம உடம்புல பஞ்ச கோசங்கள்ள “அன்னமய கோசம்”ன்னு ஒண்ணு இருக்கு. என்ன கவனிக்கணும்ன்னா,நம்ம பெரியவாள்ளாம் அன்னமய கோசம்ன்னுதான் சொல்லியிருக்காளே  தவிர, கோதுமைமய கோசம்,ராகிமய கோசம்ன்னு சொல்லலை. ஏன்னா…அன்னம்தான்

 ஜீவாதாரம். மஹாகவி காளிதாஸ் கதைல கூட, ப்ரக்ஞை இல்லாம விழுந்து கெடக்கறவாளுக்கு இந்தக் காலத்ல ட்ரிப்ஸ் ஏத்தற மாதிரி, அப்போ ஸாதத்ல கொஞ்சம்  ஜலத்தை விட்டு அதை அப்பிடியே அவா வயத்துல தடவினா, கொஞ்சம் சக்தி வரும்ன்னு படிச்ச ஞாபகம்.  “ராத்ரிக்கு சாதத்தை யார் சாப்பிடுவா?ரொம்ப ஹெவியா போய்டும்.
இப்போல்லாம் ராத்ரி லைட்டா ரெண்டே ரெண்டு சப்பாத்திதான் சாப்பிடறோம். ஒரு தால் பண்ணினா ஆச்சு! இல்லாட்ட வேகவெச்ச காய்கறி ஒரு கப், கொஞ்சம் sprouts ” ன்னு அலட்டறது ரொம்ப ஜாஸ்தியா போய்டுத்து. வெள்ளைக்காரன், வடக்கத்திக்காரன் இவாளைப் பாத்து ஈயடிச்சான் காப்பி அடிக்கறதில் நமக்குத்தான் gold medal கெடைக்கும்.அதுலயும் நம்ம பக்கத்து சாப்பாட்டை ஏதோ “வேஸ்ட்” மாதிரியும், “மட்டமான சாப்பாடு” மாதிரியும் போஸ் பண்ணிண்டு திரியறவாளும் உண்டு.

ராத்ரி ரொம்ப சிம்பிளா ரெண்டு உருண்டை [சாப்பிட ஆரம்பிச்சதும் இருவது உருண்டையாவும் ஆகும்] தயிர் or மோர் சாதம். தொட்டுக்க கார்த்தால மிச்சம் இருக்கற ஸாம்பார், ரசத்து வண்டல்,வத்தல் குழம்பு. அதுவும் யாராவது பிசைஞ்சு கையில் போடப் போட, நடுவுல குழிச்சிண்டு குழம்பை ஊத்திண்டு சாப்பிடறஅம்ருதத்துக்கு நிகரா, சப்பாத்தி,குப்பாத்தியெல்லாம் துண்டைக் காணோம்,துணியைக்
காணோம்ன்னு ஓடிப்போயிடும். ஸாதம் சீக்கிரமா ஜீரணம் ஆகும்.சப்பாத்தி ஜீரணம் ஆகறதுக்கு லேட் ஆகும். northல கூட, வெயில் காலத்ல ராத்ரிக்கு ஸாதம் சாப்பிடுவா. காரணம்? ஈஸியா digest ஆகும்.

வத்தல் குழம்புன்னு படிச்சதும், அழகா அம்சமா ஒரு கச்சட்டில தாமரை இலைத் தண்ணி மாதிரி நல்லெண்ணெய் அங்கங்க ஓவல் ஷேப்புல மொதக்கும் . ஒண்ணு ரெண்டு கறிவேப்பிலை,மிளகா வத்தல்,மணத்தக்காளி வத்தல்,கடுகு அதோட குழம்புப் பொடியோட
ஒரு ரெட் கலர்தான் எல்லாருக்கும் மனசுல காக்ஷி குடுக்கும். குடுக்கறதா?
கசப்புச் சுண்டைக்கான்னு ஒண்ணு இருக்கு. அதை வாங்கி அலம்பி, கொதிக்கவெச்சு ஆறின ஜலத்துல கல்லுப்பு போட்டு ஒரு ஜாடியில ஊறப் போடுவா. இந்த வத்தகுழம்புக்கு இந்த ஊறவெச்ச சுண்டக்காயை தாளிச்சுக் கொட்டினா,அந்த flavourரே தனி!
[காதுக்கும்,கடவாய்க்கும் நடுவுல சின்னதா ஒரு வலி இருக்கா? அப்போ சரிதான். உங்க taste buds நன்னா வேலை  செய்யறது; நீங்க ஹெல்தியா இருக்கேள்; நல்ல பசி
இருக்குன்னு அர்த்தம். Good. Keep it up!]

கொஞ்சம் வென்னீரைக் கொதிக்க வெச்சு அதுல ஒரு உருண்டை புளியைத் தூக்கிப் போட்டு “ஒரு பக்கமா அக்கடான்னு இரு”ன்னுட்டு வெக்கணும். ஆறினதும் கரைச்சுக்கணும்.
நன்னாப் பழகின கச்சட்டியா இருந்தாலும் அதுலேயே எண்ணை விட்டு தாளிக்கற ரிஸ்க் வேணாம். இலுப்பச்சட்டின்னா அதுல நன்னா மனஸார நல்லெண்ணெய் விட்டு [ஒரு மாசத்துக்கு நம்ம உடம்புக்குத் தேவையான மொத்த எண்ணையையும் ஒரு வத்தக் குழம்புலேயே விட்டு சாப்பிட்டா என்ன ஆறது?..]இப்பிடி யாராவது கேட்டால், அவாளை அலக்ஷியமாப் பாக்கக் கத்துக்கணும். மிளகா  வத்தல், கடுகு,வெந்தயம் or வெந்தயப்பொடி, மணத்தக்காளி வத்தல்/சுண்டக்கா வத்தல் ஏதாவது ஒரு வத்தல், கட்டிப் பெருங்காயம் [இதை மட்டும் கண்ணைத் திறந்து பாக்காம போடணும்.வத்தக்குழம்புக்கு பெருங்காயம் மாமா முறை!] கறிவேப்பிலை, கடைசியா வத்தக்குழம்புப் பொடி[உரைப்பு ஆகாதுன்னு சிலபேர், பேருக்கு குழம்புப் பொடி போடுவா..அது பச்சை துரோகம்] எதையெதை எப்பிடிப் பண்ணிச் சாப்பிடணுமோ,அதையதை
அப்பிடிப் பண்ணிச் சாப்பிடணும். இப்போ அதுல கரைச்சு வெச்சிருக்கற புளிஜலத்தை விட்டு விளாவி, கல் உப்பை அப்டி கையால எடுத்துப் போடணும். அவ்வளவுதான்.கடைசில கொஞ்சம் கெட்டியா ஆகணும்ன்னா,இருக்கவே இருக்கு அரிசி மாவு!

குழம்புக்கு சரியான combination கீரை மசியல், சுட்ட அப்பளாம், மாவடு, டாங்கர் பச்சடி. கீரையைப் பண்ணும்போது ரொம்ப ரொம்ப முக்கியம்…அதோட பச்சைக் கலர் மாறாம பண்ணணும். சில வீடுகள்ள அது கீரை மசியல்ன்னு சத்தியம் பண்ணினாக் கூட நம்ப முடியாது. காய்ஞ்சு போன மருதாணி கலர்ல இருக்கும்.
முளைக்கீரை,அரைக்கீரை,டெல்லி பாலக் [பசலைக்கீரையை பாலக்..ன்னு சொல்லித் தலைலகட்டுவான்]சிறுகீரை இதெல்லாம் மசியலுக்கு ரொம்ப நன்னா இருக்கும். கீரையை நன்னா
மண்ணு போக நெறைய வாட்டி அலம்பிட்டு, பொடியா நறுக்கி, மண் சட்டில போட்டு, நெறைய ஜீரகம்,பச்சை மிளகா, பெருங்காயம் போட்டு,கொஞ்சமா ஜலத்தை விட்டு, மூடாம அப்பப்போ கிளறி, தண்டை நசுக்கி வெந்துடுத்தான்னு பாத்துட்டு, கல் உப்பைப் போட்டு, மத்தால மசிக்கலாம் இல்லாட்டா, மிக்ஸில ஒரு திருப்பு திருப்பினா, அப்டி
டார்க் பச்சைக் கலர்ல மசியல் ரெடி. தேங்காய் எண்ணையில கடுகு, உளுந்து,மிளகா வத்தல் தாளிச்சு இந்த பச்சைமலை மேல “சர்”..ன்னு கொட்டணும். இன்னும் கொஞ்சம் நகாசு வேலை பண்ணனும்ன்னா,[இது அவாவா வீட்டுல, சமைக்கறவா மூடை யாரும் கெடுக்காம
பாத்துண்டா..நகாசு வேலை பண்ணலாம்]  தாளிச்சதும், இன்னும் கொஞ்சம் தேங்கா எண்ணெய் விட்டு,இந்த “கருவடாம் கருவடாம்”ன்னு ஒரு “antique” வஸ்து இருக்கு. அதை அப்டியே ரெண்டு மூணு கைப்பிடி அள்ளிப் போட்டு [வறுத்ததை வெறுமனே தின்னது
போக கீரைக்குப் போடறதுக்கு கொஞ்சம் இருக்கணும் இல்லியா?] exact ஆ golden brown
கலர்ல வறுத்து கீரை மேல கூரை மாதிரிப் போடணும். உடனேயே சாப்பிடறதா இல்லைன்னா, தனியா வெச்சுண்டு, சாப்பிடறச்சே மிக்ஸ் பண்ணிக்கலாம். அப்போதான் மசியலோட “கறுக்முறுக்”ன்னு கருவடாமும்,”கடுக்கடுக்”ன்னு வறுபட்ட உளுந்தும் வாய்ல ஆனந்த
நர்த்தனமே ஆடும்.ஆஹாஹா!

“டாங்கர்”பச்சடிங்கறது இப்போல்லாம் நெறையப் பேருக்குத் தெரியுமான்னே சந்தேஹம்!
ரொம்ப சிம்பிள்! உளுந்தை லேஸா எண்ணை இல்லாம வெறுமன வறுத்து, மிக்ஸில பொடிச்சுவெச்சுக்கணும். அந்தப் பொடிலேர்ந்து ரெண்டு,மூணு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ப்ளர் கெட்டியாக் கடைஞ்ச தயிர்ல நன்னா மிக்ஸ் பண்ணி, உப்பு,பச்சை மிளகா,
பெருங்காயம்,கறிவேப்பிலை,கொத்தமல்லி போட்டு, கடுகு மட்டும் தாளிக்கணும். வறுக்காத உளுத்தமாவுன்னா,ஜீரகம் பச்சையா சேத்துக்கோங்கோ.[முறுக்குமாவை சாப்பிடற மாதிரி இருக்கும்].

இப்போ பாதியா கட் பண்ணின வாழை இலைல, ஒரு மூலைல டாங்கர் பச்சடி. லைட்டா மங்கினவெள்ளைக் கலர் தயிர்ல,பச்சை,ப்ரௌன்,பிளாக் கலர்கள் ஒரு கலக்கலா இருக்கும்.
கொஞ்சம் தள்ளி டார்க் க்ரீன் கலர் கீரை மசியல், அப்புறம் இந்த ஓரமா மொத்தையா வீங்கின மண்டை மாதிரி இல்லாம, 112 வயசு சைனாக்கார பாட்டியோட முகத்துல எத்தனை கோடுகள் இருக்குமோ,[now you can visualise] அது  மாதிரி கன்னப்பின்னான்னு
கோடுகளாப் போட்ட மாதிரி நன்னா சுருங்கின நம்ம பக்கம் போடற மாவடு, ஒரேயடியாக் கருகாம அம்சமாச் சுட்ட, அப்பளாம்! இதோ….கொதிக்கக்கொதிக்க ஸாதம் இலைல போட்டாச்சு! வத்தக்குழம்புக்கு நல்லெண்ணெய்தான்! ரெண்டு ஸ்பூன் எதேஷ்டம்!
இப்போ சாதத்தை நன்னா மசியப் பிசைஞ்சுண்டு, கொஞ்சங்கொஞ்சமா குழம்பை விட்டுப் பிசையணும். ஏன்னா…..வத்தக்குழம்பு ஸாதம், ஸாம்பார்,ரஸம் மாதிரி ரொம்ப தளர இருக்கக்கூடாது. சிலபேர் ரஸம் சாதத்தையே கெட்டியா, கொஞ்சூண்டு ரசத்தை  விட்டுண்டு, ஏதோ மாரடைச்சான் உருண்டையாட்டம் சாப்பிடுவா.

இப்போ turn போட்டுண்டு பச்சடி,கீரை,அப்பளாம்,மாவடு எல்லாத்தையும் தொட்டுண்டு  மணக்க மணக்க வத்தக்குழம்புஞ்சாதத்தை ஒரு வெட்டு வெட்டுங்கோ!! வத்தக்குழம்பு சாதத்தோட ஒரு special advantageஎன்னன்னா….சில சமயம் லீவு நாள்ள, காலைல குளிக்க முடியாம ஏதோ ஒழிச்சல் வேலை,சோம்பேறித்தனம்ன்னு இருந்தா, முந்தினநாள்
பண்ணின வத்தக்குழம்பு இருந்தா [ரொம்ப நன்னா இருக்கும்] ஒரு பாத்திரத்ல சாதத்தைப் போட்டு, அது தலைல நல்லெண்ணெய் விட்டு,பழேத்துக் குழம்பை விட்டு மொத்தமா உருட்டிப் பிசைஞ்சு, நம்ம உள்ளங்கை ஸைசுக்கு ஒரு உருண்டையா [திருப்பதி
லட்டு சைஸ்] உருட்டி எடுத்துண்டுபோய், பின்னால தோய்க்கறகல் மேலேயோ[இப்போ washing machine],தோட்டத்துலேயோ, பால்கனிலேயோ உக்காந்து சாப்பிட்டா….புல்லரிக்கும்!! அனுபவியுங்கோ!

source::::input from a friend of mine….

natarajan

“சாஞ்சாடம்மா சாஞ்சாடு …சாயக் கிளியே சாஞ்சாடு “!!!

 

தற்பொழுது பிறக்கும் முன்பே, பிறந்த உடனேயே போதிக்கும் வகுப்புகள் வந்துவிட்டன. உங்கள் குழந்தை மேதை ஆக வேண்டுமா? என்ற விளம்பரங்கள் எங்கும் காணப்படுகின்றன. அதிலும் விளம்பரங்களில் பிக்காசா, ஐன்ஸ்டீன், சாக்ரடீஸ் போன்ற வெளிநாட்டு அறிவாளிகளை காட்டுவார்கள். ராமானுஜம், சி.வி.ராமன், ஆர்யபட்டர் போல என்று காட்டுவதே இல்லை. நம் பெற்றோர் நம் குழந்தைகள் இந்தியர் ஆயிற்றே… எப்படி அவர்களை போல ஆக முடியும் என்று யோசிப்பது இல்லை.

பழங்காலத்தில் சிறு குழந்தைகளுக்கும் விளையாட்டு வைத்து இருந்தனர். தற்பொழுது போல கெடுதலான பிளாஸ்டிக் பொம்மைகள் இல்லையே தவிர, மரத்தாலான பொம்மைகள் உண்டு. ஆனால் அப்பொழுது கூட்டு குடும்பம் என்பதால் நாள் முழுவதும் குழந்தைகளுக்கு விளையாட ஆள் இருந்து கொண்டே இருக்கும். அவர்களுக்கு பொழுது போகவில்லை என்பதை விட அவர்களுக்கு பொழுது போதவில்லை என்பதே சரியாக இருக்கும்.

சின்ன குழந்தை கொஞ்சம் உட்கார ஆரம்பித்தவுடன் ‘சாஞ்சாடம்மா சாஞ்சாடு..’ ஆரம்பித்து விடுவோம். அடுத்து ‘கை வீசு..’ அதற்கான பாடல்கள் ஆரம்பிக்கும். உட்காரும் வயதுக்கே பாட்டு பாடி விளையாடுவது நம் பாரம்பரியம். நிறைய குழந்தைப் பாடல்கள் உள்ளன.

குழந்தையை மடியில் உட்கார வைத்து, முன்னும் பின்னும் ஆட்டி…

“சாஞ்சாடம்மா சாஞ்சாடு

சாயக்கிளியே சாஞ்சாடு

குத்து விளக்கே சாஞ்சாடு

கோயில் புறாவே சாஞ்சாடு

மானே மயிலே சாஞ்சாடு

மரகதக் கிளியே சாஞ்சாடு

கண்ணே மணியே சாஞ்சாடு

கட்டிக் கரும்பே சாஞ்சாடு

மயிலே குயிலே சாஞ்சாடு

மடியில் வந்து சாஞ்சாடு”

இது அவரவர் இடத்துக்கு தகுந்தவாறு மாறுபடும். அதைத் தவிர, நிறைய குழந்தைப் பாடல்களும் உள்ளன. அடுத்து கைவீசம்மா கை வீசு, சோறூட்ட நிலா, நிலா ஓடிவா போன்றவை தமில் ரைம்ஸ் போட்டு விற்க ஆரம்பித்து உள்ளனர். நல்லது. அப்பா அல்லது அண்ணன், அம்மா மேலே உக்கார வைத்து யானை விளையாட்டு பாடி கொண்டே தாழ்வாரம் முழுக்க தவழ்ந்து யானை போல சுத்தி வருவர். பத்துக்கு பத்தில் எங்கு சுத்தி வருவது என்று கேட்டால் பதில்.. மனமிருந்தால் மார்க்கமுண்டு.

“யானை யான அழகர் யானை

அழகரும் சொர்க்கரும் ஏறும் ஆனை

குட்டி ஆனைக்குக் கொம்பு மொளச்சுதாம்

பட்டணம் எல்லாம் பறந்தோடிப் போச்சுதாம்”

அடுத்து பருப்பு கடைதல். குழந்தையை வைத்து சோறுட்டி சாப்பாட்டின் மேல் ஆர்வத்தைத் தூண்டும் விளையாட்டு. குழந்தையின் கையை எடுத்து வைத்து கொண்டு அதன் மேல் முட்டி கை வைத்து பருப்பு கடைய வேண்டும் அப்புறம் ஊட்டுவது போல செய்து காட்டவேண்டும். தொட்டுக்க வேணுமா என்று கேட்டு விரல்களை வைத்து இது சாம்பார், பொரியல் என்று விளையாட்டை நீட்டி கொண்டு போகலாம். கீரை பற்றியும் சொல்லலாம்.

“பருப்பு கடைஞ்சு,

நெய் ஊத்தி,

நல்லா பிசைஞ்சு

அப்பாவுக்குக் கொஞ்சம்

அம்மாவுக்குக் கொஞ்சம்

பாட்டிக்குக் கொஞ்சம்

தாத்தாவுக்குக் கொஞ்சம்

பாப்பாவுக்குக் கொஞ்சம்

கொடுத்திட்டு அடுப்பு கழுவி (அந்த காலத்தில் விறகடுப்பை கழுவி கோலம் போடும் வழக்கம் உண்டு)

சிலர் வெறும் கிச்சு, கிச்சு மூட்டுவர். சிலர் நண்டு ஊறுது நரி ஊறுது என்று சொல்லி கொண்டு கையை பிடித்து விரல்களால் ஊர்ந்து கைக்கு அடியில் கிச்சு, கிச்சு மூட்டுவர். குழந்தைகள் மிக விரும்பும் விளையாட்டு.

அடுத்து இரண்டு வயதுக்கு மேல் குழந்தைகளை கையை குழித்து வைத்து கொள்ள சொல்லி நாம் முஷ்டியை மடக்கி குத்த வேண்டும்.

அம்மா குத்து,

அப்பா குத்து,

பாட்டி குத்து,

பேரன் குத்து

பிள்ளையார் குத்து,

பிடிசிக்கோ குத்து.

இந்த பிடிச்சிக்கோ குத்து சொல்லும்பொழுது குழந்தை கையைப் பிடித்துக்கொள்ள வேண்டும். மாற்றி, மாற்றி விளையாடலாம். பிடிக்காமல்விட்டால் அவரின் முறை மாறும். சிறுவர், சிறுமிகளும் விளையாடும் பொழுதுபோக்கு விளையாட்டு.

இந்த விளையாட்டு முறைகள், பாடல்கள் வீட்டு வீடு, இடத்துக்கு இடம் கொஞ்சம் வேறுபடலாம். ஆனால் தலைமுறை தலைமுறையாக விளையாடி வந்த விளையாட்டுகளை நம் தலைமுறையோடு முடித்தால் அத்தனையும் மறந்தும், அழிந்தும் விடும். இது போன்ற விளையாட்டுகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நம் கடமையாகும்.

கிருத்திகா தரண் – தொடர்புக்கு kirthikatharan@gmail.com

source:::::The Hindu..Tamil

natarajan

” Sometime We Need Someone to be Simply be There “….

 

People say, I want someone to be there for me. They forget that God is always there for us. People say, I want someone to care for me. They forget that God cares even when we forget Him.
Fall in love with Him, He will hold you, He will protect you, He will care for you, He will always be there for you  
May Sai always bless us with his love, compassion , kindness , protection and above all the grace to appreciate and recognize his Leela’s in our life..

 

Quote of BABA:
I have to take care of my children day and night and give an account to God of every paisa. The wise are cheerful and content with their lot in life.  
source::::H.Deepa in   http://debu7370.blogspot.com
natarajan

Message For the Day…”God is Always With You , In You and Around You “…

May you all develop Divine Love and stand out as the harbingers of a new age, free from selfishness, greed, hatred and violence. Let each of you be light unto yourself and thereby be a light unto others. There should be no differences or quarrel amongst devotees. When you come together and work on a common cause, there should be no scramble for power or position. What matters is the purity, intensity and sincerity of the devotion and the spirit of selfless sacrifice in which each devotee renders service to the needy and the suffering. God is always with you, in you and around you. When all differences are eradicated and devotees unite and conduct themselves with selfless devotion, each one of you will realise that God and you are one. I bless you so you may attain that bliss. This is Sai’s Message to you all.

 Sathya Sai Baba

“Love People Who Never Look at their Schedule When You Need Them “

 

People will come and go out of your life. Strangers will become friends and your friends might become your enemies .Relatives will love you one day and hate you the next but Sai is the eternal truth. He will always be there by your side in all your lives to come. May Sai always guide us towards the light that will help us to  distinguish between what is pure illusion / Maya and the one and only one truth which is none other than,- our creator himself..   
source::::H.Deepa in  http://debu7370.blogspot.com/
natarajan