Laughter The Best Medicine….” Give me Back My Dog “!!!

A gwala (cattle herder) named Budhi Ram was overseeing his herd in a remote mountainous pasture in Himachal when suddenly a brand-new BMW advanced towards him out of a cloud of dust.

The driver, a young man in a Brioni suit, Gucci shoes, RayBan sunglasses and YSL tie, leaned out the window and asked the cowboy, “If I tell you exactly how many cows and calves you have in your herd, Will you give me a calf?”

Budhi Ram looks at the man, obviously a yuppie, then looks at his peacefully grazing herd and calmly answers, “Sure, Why not?”

The yuppie parks his car, whips out his macBook Air computer, connects it to his iphone, and surfs to a NASApage on the Internet, where he calls up a GPS satellite to get an exact fix on his location which he then feeds to another NASA satellite that scans the area in an ultra-high-resolution photo.

The young man then opens the digital photo in iPhoto and exports it to an image processing facility in Hamburg , Germany .

Within seconds, he receives an email on his iPhone that the image has been processed and the data stored. He then accesses an MS-SQL database through an ODBC connected Excel spreadsheet with email on his iPhone and, after a few minutes, receives a response.

Finally, he prints out a full-color, 150-page report on his hi-tech, miniaturized LaserJet printer, turns to Budhi Ramy and says, “You have exactly 1,586 cows and calves.”

“That’s right. Well, I guess you can take one of my calves,” says Budhi- Ram.

He watches the young man select one of the animals and looks on with amusement as the young man stuffs it into the trunk of his car.

Then Budhi Ram says to the young man, “Hey, if I can tell you exactly who you are & what is your business , will you give me back my calf?”

The young man thinks about it for a second and then says, “Okay, why not?”

“You’re a Business  and Investment Consultant  says Budhi- Ram.

“Wow! That’s correct,” says the yuppie idiot, “but how did you guess that?”

“No guessing required.” answered Budhi Ram. “You showed up here even though nobody called you; you want to get paid for an answer I already knew, to a question I never asked. You used millions of dollars worth of equipment trying to show me how much smarter than me you are; and you don’t know a thing about how working people make a living – or about cows, for that matter. This is a herd of sheep. …

Now give me back my  Dog !!!!

source:::: input from a friend of mine

natarajan

இயற்கையுடன் இணைந்த இனிய வாழ்க்கை !!!

இயற்கையோடு இணைந்து வாழும் முத்துசாமி - சுப்புலட்சுமி தம்பதி

இயற்கையோடு இணைந்து வாழும் முத்துசாமி – சுப்புலட்சுமி தம்பதி

“காலை இஞ்சி.. கடும்பகல் சுக்கு.. மாலை கடுக்காய்.. மண்டலம் உண்டோர் கோல் இன்றி நடப்பாரே – இதுதானே பண்டைத் தமிழரின் வாழ்வியல் உணவு முறை” என முண்டாசை சரிசெய்தபடி மீசையை முறுக்குகிறார் முத்துச்சாமி. 75 வயதானாலும் 25 வயது இளைஞனிடம் இல்லாத சுறுசுறுப்பை இவரிடம் பார்க்கலாம்.

திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் உள்ள முத்துச்சாமியின் வீடு இந்தத் தலைமுறை நிச்சயம் காணவேண்டிய ஒரு அருங்காட்சியகம். சாணம் மெழுகிய திண்ணைகள், கயிற்றுக்கட்டில், பனை ஓலை விசிறி, சீமை ஓட்டு மேல்கூரை, பொன்னாங்கண்ணி, வில்வம், கத்தாழை, தூதுவளை, புதினாவுடன் கூடிய மூலிகைத் தோட்டம், தினசரி சாப்பாட்டுக்காக மாடியில் காய்கறித் தோட்டம், அதன் பக்கத்தில் அறிவை மேம்படுத்தும் பெரிய நூலகம்.. என்று இயற்கையோடு இயைந்து, இணைந்து வாழ்கிறார் முத்துச்சாமி. அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் அவரது வாழ்க்கை முறையைப் பார்த்து வாயைப் பிளக்கிறார்கள்.

“எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்பதுதான் நான் வாழும் இந்த வாழ்க்கையின் உண்மை தத்துவம். தமிழகத்தின் தேசிய மரம் பனை. ஆனால், கொஞ்சம்கூட யோசிக்காம அதை அழிச்சிட்டு வர்றாங்க. செங்கல் சூளைக்காக பனை மரத்தை தூரோடு வெட்டி எடுத்துட்டே இருக்காங்க. பனைப்பால், பனை நுங்கு, பனை ஓலை, கருப்பட்டி என வாழைக் கன்றுபோல பனையின் அனைத்து பாகங்களும் பயன்படும். பனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, ஒரு குறளுக்கு 100 மரம் வீதம் ஒரு லட்சத்து 33 ஆயிரம் பனை மரங்களை திருப்பூர், காங்கயம், சென்னிமலை, கைத்தமலை, ஜல்லிப்பட்டி, செஞ்சேரிமலை, நரசிபுரம், பவானி உள்ளிட்ட பகுதிகளில் நட்டுவைத்தோம். ஆனாலும், பனை மரங்களை அழிப்பது நின்றபாடில்லை” – இயற்கையின் மீது தனக்குள்ள அக்கறையை வெளிப்படுத்திய முத்துச்சாமி, தன்னைப் பற்றியும் பேசினார்.

“வருஷா வருஷம் முதியோர் தடகளப் போட்டியில் எனக்குதான் முதலிடம். அந்தளவுக்கு என் மனசையும் உடம்பையும் இயற்கை உணவு காப்பாத்தி வைச்சுருக்கு. இதுவரை எந்த நோயும் அண்டியதில்லை. காலையில் வரகரிசி உப்புமா, கொஞ்சம் கீரை, அரை வேக்காட்டில் காய்கறிகள், மூலிகை தோசை, ராகி, கேப்பை, கம்பு, கூழ்னு எனக்குப் பிடிச்சத எடுத்துக்குவேன். சிறுதானியங்கள் என் உணவுல பிரதான அங்கம். தமிழரின் வாழ்க்கை முறையே அப்படி இருந்ததுதானே. இன்றைக்கு இருப்பதுபோல பளபளக்கும் பகட்டு டப்பாக்களுக்குள் நம் முன்னோர்கள் முடங்கிப் போகவில்லையே?

வீட்டில் சமையலுக்குகூட, கடைகளில் அரைத்து விற்கப்படும் எந்தவொரு பொருளையும் நாங்க பயன்படுத்துறதில்லை. மூணு வேளையும் முழு கட்டு கட்டுற வேலையும் எனக்குப் பிடிக்காது. காலை மற்றும் பொழுதுசாயும் நேரம் என தினமும் ரெண்டு வேளைதான் சாப்பாடு. மத்த நேரங்களில் சுக்கு கசாயம் போதும். வெளியூர் போனா ஓட்டலைத் தேடிப் போறதில்லை. அதுக்குப் பதிலா, கொஞ்சூண்டு அவல் எடுத்துட்டுப் போயிருவேன். ஒருவேளை பசியாற மூணு கைப்பிடி அவல் போதும். நான் மட்டுமல்ல.. சுப்புலட்சுமியும் அப்படித்தான்” என்று தன் மனைவியை அறிமுகப்படுத்துகிறார்.

“எந்தச் சூழலிலும் இயற்கைக்கு முரணா வாழக்கூடாதுன்னு இவரு அடிக்கடி சொல்வாரு. செல்போன் அதிகரிச்சதால சிட்டுக்குருவிகள் அழிஞ்சுட்டு இருக்கு, அதனால செல்போனை நாங்க கையால தொடுறதே இல்லை. பெட்ரோலுக்குத்தானே இந்த உலகத்துல பெரும் யுத்தம் நடக்குது. பெட்ரோல் வண்டிகளோட கரும் புகை நம்மைச் சுற்றி நச்சுக்களை பரப்பி இயற்கையை அழிச்சுக்கிட்டே இருக்கு. அதனால, பெட்ரோல் பயன்படுத்தவே கூடாதுன்னு வைராக்கியம் வச்சுக்கிட்டு, இப்ப வரைக்கும் சைக்கிள்தான் ஓட்டுறாரு.

அளவுக்கு அதிகமாக தண்ணீரை வீணடிக்கிறதும் நாம பூமிக்கு செய்யுற துரோகம்னு சொல்வாரு. வீட்டுல மின்சார வசதிகூட ரொம்ப நாளா இல்லை. இப்பத்தான் சோலார் பேனல் மூலமா ஒரே ஒரு லைட்டுக்கும், காத்தாடிக்கும் தேவையான அளவுக்கு இயற்கை மின்சாரம் உபயோகிக்கிறோம். இவரு வெளியூர்களுக்கு போனாக்கூட கீழாநெல்லி, துளசி மாதிரியான கன்றுகளைத்தான் வாங்கிட்டு வருவாரு. நாங்க, முடிஞ்ச வரைக்கும் இயற்கையை சீரழிக்காம வாழ்ந்துட்டு இருக்கோம். அதனால, எங்க வாழ்க்கையும் ரொம்ப ஆரோக்கியமாக இருக்கு. ஆனா, தங்களையும் அறியாமல் இயற்கையை அழிச்சிட்டு இருக்கிற சனங்க, ‘எப்படி உங்களால இந்தக் காலத்துலயும் இப்படி எல்லாம் வாழமுடியுது. இந்தக் காலத்துக்கு இதெல்லாம் சரிப்பட்டு வருமா?’ன்னு கேள்வி கேக்குறப்ப சிரிக்கிறதா வேதனைப்படுறதான்னு தெரியல” கணவர் கருத்திலிருந்து கடுகளவும் மாறாமல் பேசினார் சுப்புலட்சுமி.

‘அரசு விழாக்களில் புலால் உணவு பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும்’ என முத்துச்சாமி எழுதிய கோரிக்கை மனுவை ஏற்றுத்தான், ‘இனி, அரசு விழாக்களில் சைவ உணவு மட்டுமே பரிமாறப்படும்’என்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பித்ததாம். பெருமையுடன் சொல்கிறார் முத்துச்சாமி.

இயற்கையோடு இணைந்த இவர்களது வாழ்க்கைமுறை பற்றி கேள்விப்பட்டு, இந்தக் காலத்து இளைஞர்கள் பலரும் இவர்களது வீட்டுக்கு வந்து விசாரித்துவிட்டுப் போகிறார்களாம். இவர்களில் பலர், ‘நாங்களும் உங்களைப் போல இயற்கைக்கு மாறிட்டோம் ஐயா’ என்று சொல்ல ஆரம்பித்திருப்பது முத்துச்சாமியின் இயற்கை வாழ்வியல் முறைக்கு கிடைத்த இன்னொரு வெற்றி!

 source:::::The Hindu …Tamil
நடராஜன்

Message For The Day…”When HE is within you, Why do you lose Hope “?

Most agriculturists feed on hope for their survival. Hope sustains them while they plough, sow, plant and manure the crops that they raise. That hope, must become a mental habit not just during agriculture, but as part of everyone’s daily life, in all the manifold activities. Never give any chance for that vile thing, despair, to eat into the vitals of activity and effort. Despair is a sin against God. When He is within you, why do you lose hope? That is why the Lord says, “Why fear, when I am here?” Be always joyful, optimistic and courageous. Know that the strongest connection between you and the Divine is when the life-giving waters of courage and hope, flow in your heart.

 

Sathya Sai Baba

Spot The Hidden Messages In Brand Logos !!!

IMAGE CREDIT:
WENDY’S

When Wendy’s redesigned its logo earlier this year, the company insisted the word “MOM” in the collar was unintentional. But plenty of other logos contain messages that were very much intended. Here are some examples, some more obvious than others.

1. THE FEDEX ARROW

 

The classic! As Matthew May said in The Laws of Subtraction, “Nearly every design school professor and graphic designer with a blog has at some point focused on the FedEx logo to discuss the use of negative space.” I recently pointed out the arrow to my five-year-old daughter and blew her mind.

2. THE OLD MILWAUKEE BREWERS LOGO

 

There’s a Facebook group called Best Day of My Life: When I Realized the Brewers Logo Was a Ball and Glove AND the Letters M and B. If for you that day is today, this must be very exciting. Soak it up!

3. TOBLERONE

 

Look! There’s a bear in the mountain! There’s also something hidden in the candy’s name: Toblerone is a portmanteau of its creator’s name, Theodor Tobler, and “torrone,” an Italian word for a type of nougat.

4. PITTSBURGH ZOO

 

It’s a tree! And a lion! And a gorilla! And now it’s no longer hidden.

5. TOUR DE FRANCE

 

The ‘R’ is a cyclist.

6. AMAZON.COM

 

As David Vik says in The Culture Secret, “That’s a subtle reminder to employees and customers alike that Amazon has everything from A to Z.”

7. BASKIN-ROBBINS

 

See that “31,” for the “31 flavors”? Yeah. In case it comes up, Burt Baskin and Irv Robbins were brothers-in-law.

8. TOSTITOS

 

Two Ts sharing salsa! The logo has changed slightly, but that element remains.

9. BIG TEN CONFERENCE

 

The Big Ten likes adding extras into logos. Notice the ’11’ in the previous logo on the bottom, back when 11 schools were involved. When Nebraska joined, the subtle 11 had to go. The conference explained exactly what it was doing: “[The logo’s] contemporary collegiate lettering includes an embedded numeral ’10’ in the word ‘BIG,’ which allows fans to see ‘BIG’ and ’10’ in a single word.”

10. MERCK

 

The pharmaceutical company’s logo is made up of a capsule and two pills. In a very scientific poll of the two people next to me, 50% were surprised, while the other 50% said that’s the only thing that logo could possibly be.

11. CARIBOU COFFEE

 

The coffee chain refreshed its logo in 2010, and the caribou’s body is now made of coffee beans. But that’s not the only change. “While the Caribou in the previous logo was leaping left,” the company said, “the caribou now leaps right, signifying the direction the company is heading.” You probably picked up on that already.

* * *

source:::: mentalfloss.com

natarajan

Read the full text here: http://mentalfloss.com/article/53146/11-hidden-messages-company-logos#ixzz2iKdpA4po
–brought to you by mental_floss!

படித்ததில் பிடித்தது …பணம் மட்டும் செல்வம் இல்லை !!!

மனதைத் தொட்ட வரிகள்!

பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம்.
உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம்.
உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது.
ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம்.
ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.

குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்.

சுயநலம் என்பது சிறு உலகம்.அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான.
வெற்றியின் ரகசியம் -எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல்

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது.

நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!

அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!

செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை

நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

பறக்க விரும்புபவனால் படர முடியாது.

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது.
ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவ தவறவிடுகிறோம்.

source:::::unknown… input from a friend of mine

natarajan

“வில்லேஜ் விஞ்ஞானி ” சுப்ரமணியம் !!!

தான் உருவாக்கிய நவீன காற்றாலை மின் உற்பத்தி எந்திரத்தின் முன்னால் சுப்பிரமணியம்

தான் உருவாக்கிய நவீன காற்றாலை மின் உற்பத்தி எந்திரத்தின் முன்னால் சுப்பிரமணியம்

“படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு.. பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு..’ என்ற கண்ணதாசனின் காப்பிய வரிகளுக்கு கச்சிதமான உதாரணம் சுப்பிரமணியம்!

சுப்பிரமணியத்தின் சொந்த ஊர், ஈரோடு மாவட்டம் சென்னிமலை. குடும்பச் சூழலால் பத்தாம் வகுப்புக்கு மேல் தாண்ட முடியாத சுப்பிரமணியம் இப்போது, தனியார் கல்லூரியின் தற்காலிக ஊழியர். ஆனால், இவரது சாதனைப் பட்டியல், பெரிய சைன்டிஸ்ட் ரேஞ்சுக்கு நீள்கிறது.

மெட்ரிக் முறையில் இயங்கும் கடிகாரம், செலவைக் குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் புதிய பெட்ரோல் இயந்திரம், தினசரி, மாத காலண்டர்களைப் போல வார காலண்டர், சாண எரிவாயு உற்பத்தியில் புதிய தொழில்நுட்பம், தமிழ் எழுத்து சீர்திருத்தத்துக்கான முயற்சி… என பல கண்டுபிடிப்புகளால் மிரட்டுகிறார் மனிதர்!

இதுமட்டுமா, சிலந்தி வலை சிக்கலில் எனது நாடு, டீசல், இந்தியா – உலக நாடுகள் பல்வகை ஒப்பீடு உள்ளிட்ட நூல்களையும் சுப்பிரமணியம் எழுதியுள்ளார். இதில், ‘சிலந்திவலை சிக்கலில் எனது நாடு’ என்ற நூலை, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து நூலகங்களிலும் வைக்க வேண்டும் என முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளது சிறப்பிலும் சிறப்பு.

“படிப்பு கம்மினாலும், புதுசா எந்தத் தகவல் கிடைச்சாலும் மறக்காம நோட்டுல குறிச்சு வைச்சிக்குவேன். அதைத் தொகுத்துத்தான் நூல்களா எழுதிருக்கேன். எட்டு மாசத்துக்கு முந்தித்தான் இப்ப நான் இருக்கிற வேலையில சேர்ந்தேன். அதுக்கு முந்தி கம்ப்யூட்டரை தொட்டுக்கூட பார்த்ததில்லை” என்று தன்னை வெளிச்சம் போட்டுக் கொள்ளும் சுப்பிரமணியம், கடந்த, 2000-ம் ஆண்டில், தமிழக அரசின், புதிய கண்டு பிடிப்புக்கான அறிவியல் ஆய்வாளர் விருது பெற்றவர்.

இந்த, ‘வில்லேஜ் விஞ்ஞானி’யின் தற்போதைய கண்டுபிடிப்பு நவீன காற்றாலை

மின் உற்பத்தி இயந்திரம். அதுகுறித்து பேசியவர், ’’நம்ம மாநிலத்தில இருக்கிற காற்றாலைகள், வருஷத்துக்கு, 4 மாசம்தான் வேலை செஞ்சு, கரன்ட் உற்பத்தி பண்ணுது. அதுவும், வேகமா காத்து அடிக்கிற தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, கம்பம், உடுமலைப்பேட்டை, தாராபுரம் மாதிரியான ஊர்கள்ளதான் இந்த காற்றலைகளையும் அமைக்க முடியுது. இதுக்கான செலவும் அதிகம்.

ஆனா, நான் கண்டுபிடிச்சிருக்கிற மெஷின் லேசா காத்தடிச்சாலும் ஓடி கரன்ட் உற்பத்தியாகும். காத்து உராய்வு மூலமா, பெரிய ரெக்கைகள் சுத்தி, அது வழியா கரன்ட் உற்பத்தி பண்ணுறாங்க. இதுக்கு பதிலா, காத்து நேரடியா ரெக்கைகளை தள்ளினால், முழு சக்தி கிடைக்கும்; மின்சார உற்பத்தியும் அதிகரிக்கும்னு நினைச்சேன். அதைத்தான் இப்ப செஞ்சிருக்கேன்.

இப்ப இருக்கிற செங்குத்தான பெரிய ரெக்கைகளைக் கொண்ட காற்றாலைகள் மணிக்கு, 12 கி.மீ. வேகத்தில் காத்து வீசினாத்தான், மின்சார உற்பத்தி செய்யும். வருஷத்துல நாலு மாசம்தான், இந்த வேகத்தில் காத்து வீசும்ங்கிறதால, அப்ப மட்டுமே, மின் உற்பத்தி செய்யமுடியும். ஆனா, நான் வடிவமைச்சிருக்கிற காற்றாலையில மணிக்கு, 6 கி.மீ., வேகத்தில் காற்று வீசினாலே மின் உற்பத்தி செய்யமுடியும். அப்படிப் பார்த்தா வருஷத்துல 8 மாசம் மின் உற்பத்தி செய்ய முடியும்.

தற்போதுள்ள காற்றாலை இயந்திரங்களை, 300 மீட்டர் இடைவெளியில் தான் நிறுவமுடியும். என்னுடைய இயந்திரத்தை அருகருகே அமைக்க முடியும். காற்று எந்த திசையில் இருந்து வீசினாலும் மின் உற்பத்தி செய்யமுடியும். முதலில் சின்னதாக ஒரு மாடல் செய்து பார்த்தேன். அதில் வெற்றி கிடைத்ததால், அடுத்ததாய், நான்கு இறக்கைகளுடன் சற்று பெரிய அளவில் வடிவமைத்துள்ளேன். இதனை, 20 இறக்கைகள் வரை அதிகரித்தால், அதற்கு ஏற்ப மின் உற்பத்தியும் அதிகரிக்கும்’’ என்றார்.

கோவை, ‘கொடிசியா’வில், புதிய கண்டுபிடிப்புகளுக்காக நடந்த கண்காட்சியில் இவரது கண்டுபிடிப்புக்கு ஏக வரவேற்பாம். பெருமையோடு இதை நம்மிடம் சொன்ன சுப்பிரமணியம், “இரண்டு இறக்கை கொண்ட காற்றாலை இயந்திரத்தை செய்ய, 60 ஆயிரம் ரூபாய் செலவானது. எனவே, எனது இயந்திரத்தை தனித்தனியாக அமைப்பது நடைமுறை சாத்தியமில்லை. அதிக அளவில் உற்பத்தி செய்யும்போது, செலவு குறையும்.

ராணுவத்தில் பணியாற்றும் முருகசாமி, எனது கண்டுபிடிப்பை ஊக்குவிக்க 35 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்து இந்த இயந்திரத்தை உருவாக்க உதவினார். எட்டு மாதங்கள் பாடுபட்டு இந்த இந்திரத்தை செய்து முடித்திருக்கிறேன். எனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமை கேட்டு விண்ணப்பம் செய்திருக்கின்றேன். அரசு எனக்கு நிதி ஆதாரம்

வழங்கினால் தொழிற்சாலை தொடங்கி இந்த காற்றாலை இயந்திரங்களை அதிக எண்ணிக்கையில் தயாரித்துக் கொடுக்கத் தயாராய் இருக்கிறேன்’’ என்று சொன்னார்.

இவரது நவீன இயந்திரத்தைக் கொண்டு மணிக்கு, 6 கி.மீ. வேகத்தில் காற்று அடிக்குமானால் ஒரு நாளில் 4 யூனிட் வரை மின் உற்பத்தி செய்ய முடியுமாம். இறக்கைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால், மின் உற்பத்தியின் அளவை அதிகரிக்க முடியும். சாதாரணமாக வீட்டின் மாடியில் இதனை பொருத்திவிட்டால், எட்டு மாதத்துக்கு மின்சாரம் தடையின்றி பெறமுடியும்.

ஆயிரக்கணக்கில் கோடிகளை கொட்டி அணு உலைகளை அமைத்து மின்சாரம் தேடும் ஆட்சியாளர்கள் தனது எளிய கண்டுபிடிப்பை அங்கீகரிக்கத் தயங்குவதாக ஆதங்கப்படுகிறார் சுப்பிரமணியம், ‘’அதற்காக நான் சோர்ந்துட மாட்டேன் சார்.. எடிசனையே அவர் ஆயுசு இருக்கும் வரைக்கும் இந்த உலகம் கண்டுக்கல. அதேமாதிரி, என்னையும் ஒருநாள் இந்த உலகம் கண்டுக்கும். அதுவரைக்கும் நாட்டுக்கு

தேவையான நல்ல விஷயங்கள் எதையாவது கண்டுபிடிச்சுக்கிட்டே இருப்பேன் சார்’’ நம்பிக்கை துளிர்க்கச் சொன்னார் சுப்பிரமணியம்.

Topics:

தொழில்நுட்பம்|புதுமை| source::: The Hindu …Tamil

natarajan

Just For Laugh !!!….Today is a Fine Day !!!

Husband to Wife: Today is a Fine Day!.

Next day he says: Today is a Fine Day!.

Again next day, he says same thing:
Today is a Fine Day!.

Finally after a week, the Wife can’t
take it and asks her Husband:
Past one week, you are saying this
‘Today is a Fine Day’. I am Fed up.
What’s the Matter?

Husband: Last week when we had an
argument, you said, ‘I will Leave you
one Fine Day.’ I was just trying to
remind you.!!!!!

 

source :::::unknown….input from a friend of mine…

natarajan