அட்சய திரிதியை அன்று தானம் செய்வது நமது பிரதான கடமை …

 

27ஏப்

2014
00:00

மே 2 – அட்சய திரிதியை

அட்சய திரிதியை அன்று, ஏதாவது மதிப்புள்ள பொருள் வாங்க வேண்டும் என்று சொல்வர்; இது, வெறும் வார்த்தைக்காக சொல்லப்பட்ட விஷயம் அல்ல!
தங்கம் வாங்க வேண்டுமானால், பெரும் தொகை வேண்டும்; பெரும் தொகை கையில் இருக்க வேண்டுமானால், கடும் உழைப்பு இருக்க வேண்டும். ஆக, இது உழைப்பின் பெருமையை வெளிப்படுத்தும் விழா.
கீதையில் கண்ணன் கூறுகிறான்…
‘முயற்சியுடையவன், வேலையை விருப்பத்துடன் செய்கிறவன், எப்போதும் உழைத்துக் கொண்டிருக்கிறவன்… இவர்களைத் தேடி, மகாலட்சுமி வந்தடைகிறாள்…’ என்கிறார் பகவான்.
உழைப்பை அலட்சியம் செய்து, தெய்வம் கொடுக்கும் என்று காத்திருப்பவனைத் தேடி, செல்வம் வருவதில்லை. அட்சய திரிதியை அன்று, ஒருவர் பத்து சவரன் நகை வாங்குகிறார் என்றால், அதை வாங்குவதற்காக, கடந்த காலத்தில், அவர் பட்டபாடுகளை, அதற்காக அவர் கொடுத்த உழைப்பை எண்ணிப் பார்க்க வேண்டும்.
உழைப்பின் பெருமையை விளக்க இதோ ஒரு புராணக்கதை…
அம்பரீஷன் என்று ஒரு மன்னர் இருந்தார்; சிறந்த விஷ்ணு பக்தர்; ஏகாதசி விரதத்தை தவறாமல் கடைபிடிப்பவர். அறம், நீதி நெறி தவறாமல், தர்மம் குலையாமல், குடிமக்கள் மனம் மகிழும்படி ஆட்சி நடத்தி வந்தார். ஒரு அஸ்வமேத யாகம் செய்வதே குதிரைக் கொம்பான விஷயமாக இருக்கும் போது, இவர், நூறு அஸ்வமேத யாகம் செய்தவர். ஆனாலும், இத்தனை யாகங்கள் செய்து விட்டோம் என்ற கர்வம் அவருக்கு ஏற்பட்டதில்லை. மேலும், அந்த யாகங்களை, அவர் தனக்காகவோ, தன் குடும்பத்துக்காகவோ, நாட்டு மக்களுக்காகவோ செய்யவில்லை. எல்லா பலனும் இறைவனுக்கே என்ற ரீதியில், யாகத்தின் பலனை, விஷ்ணுவிடமே அர்ப்பணித்து விட்டார்.
இதனால், மனம் மகிழ்ந்த விஷ்ணு பகவான், அம்பரீஷனுக்கு தரிசனம் தந்து, சுயநலமில்லாத அவரின் உழைப்பை பாராட்டும் விதமாக, தன் சக்கரத்தையே பரிசாகக் கொடுத்தார். அந்த சக்கரத்தைத் தெய்வமாகக் கருதி, வழிபட்டு வந்தார் அம்பரீஷன். அந்த வழிபாடு தான், இன்றும் சக்கரத்தாழ்வார் வழிபாடாக தொடர்கிறது. அந்த சக்கரமே, பிற்காலத்தில், துர்வாச முனிவர் தந்த கஷ்டத்திலிருந்தும், அம்பரீஷனைப் பாதுகாத்தது.
சரி…எவ்வளவு தான் உழைத்தாலும், கஷ்டப்படுபவர்கள் என்று, ஒரு ரகம் எப்போதுமே இருக்கத்தான் செய்கின்றனர். இவர்களுக்கு அட்சய திரிதியை நன்னாளில், தானம் செய்வது பிரதான கடமை. ஒரு காலத்தில், அட்சய திருநாள் கொண்டாடப்படும் சித்திரை மாத வெயிலில், தயிர்சாதம் தானம் செய்வது மிக உயர்ந்ததாகக் கருதப்பட்டது. இப்போது, கால மாற்றத்திற்கேற்ப கல்வி உதவித்தொகை, உடைகள், மருத்துவ உதவி போன்ற தானங்களைச் செய்யலாம். இவ்வாறு செய்தால், தானம் செய்பவருக்கு புண்ணியம் கிடைக்கும். குடும்பத்தில் செல்வம் தழைத்தோங்கும் என்பது ஐதீகம்.
நன்றாக உழைக்க வேண்டும். உழைப்பால் வரும் செல்வத்தில், நமக்கு தேவையானது போக, மற்றதை தகுதியானவர்களுக்கு தானம் செய்ய வேண்டும். அப்படி செய்தால், அது கடவுளுக்கே செய்தது போல! அவ்வாறு செய்தால், கடவுளின் அருள் கிடைக்கும். அப்போது, எல்லா நாட்களும் நமக்கு அட்சய திருநாள் தான்!

தி.செல்லப்பா  in Dinamalar …vara malar 

natarajan

சுவை தேடி: கும்பகோணம் டிகிரி காபி !!!

 

 

குடகு மலையில் தோன்றித் தஞ்சைக்கு ஓடிவந்த காவிரி கூடவே காபி மீதான காதலையும் கொண்டுவந்து சேர்த்துவிட்டது என்றே நினைக்கத் தோன்றுகிறது. தஞ்சை நகரின் எந்தவொரு ஹோட்டலிலும் காபியின் சுவைக்குக் குறைந்தபட்ச உத்திரவாதம் உண்டு. வீட்டுக்கு வந்த விருந்தினரை வரவேற்று உபசரிக்கையில் காபியா, டீயா என்று கேட்பது வழக்கமில்லை. காபி ஸ்ட்ராங்கா வேணுமா லைட்டா வேணுமா என்பதுதான் பொதுவான கேள்வியாக இருக்கும். பால் இல்லாத வேளைகளில் வரக் காப்பியைத் (பால் கலக்காத காபி) துணையாகக் கொள்வதும் உண்டு.

காபி பொடியைப் பொறுத்தவரை கம்பெனி தயாரிப்புகளைவிடவும் தேவையான அளவுகளில் சிக்கரி கலந்து அரைத்துக்கொடுக்கும் உள்ளூர்க் கடைகளுக்கே முன்னுரிமை. சுருக்கமாகச் சொன்னால், தஞ்சைப் பகுதியே ஆனந்தக் கசப்புக்கு அடிமையான பிரதேசம். தமிழ்நாட்டின் மற்ற நகரங்களிலும்கூட காபிக்கென்று புகழ்பெற்ற உணவகங்கள் இருக்கின்றன. இருந்தாலும் தஞ்சாவூருக்கும் காபிக்கும்தான் அதிக நெருக்கம். மாவட்டம் முழுவதற்குமான காபி பெருமையைத் தற்போது கும்பகோணமே தட்டிப் பறித்துக்கொண்டு போய்விட்டது. கோயில் நகரம், அங்கு கூடுகின்ற சுற்றுலாப் பயணிகள் என்ற காரணங்களையெல்லாம் தாண்டி கும்பகோணத்திற்கு அந்தப் பெருமை கிடைத்தது பஞ்சாபிகேச அய்யர் நடத்திய லெட்சுமி விலாஸ் என்ற காபிக் கடையால்தான். காபிக்குத் தேவைப்படும் பாலுக்காக அவர் பதினைந்து பசு மாடுகளைப் பராமரித்து வந்தார். அதனால் அந்தக் கடைக்குப் பசும்பால் காபிக்கடை என்ற பெயரும்கூட உண்டு.

முதல் தலைமுறைத் தமிழ் எழுத்தாளர்கள் பலரும் தஞ்சையைச் சேர்ந்தவர்கள் என்பதால் காபி அருந்துவது தமிழகக் கலை இலக்கிய ரசனையின் ஒரு பகுதியாகவும் ஆகிவிட்டது. தி. ஜானகிராமன் தனது கதாபாத்திரங்களை நுரைத்து மணத்த “கும்மாணம்” காபியை உள்ளம் குளிரக் குடிக்க வைத்து மனநிறைவை அடைந்திருக்கிறார். தஞ்சை ப்ரகாஷ் தனது வடிகால் வாரியம் என்ற கதையில் காபி போடும் செய்முறையை வாசகர்களுக்கு விளக்கி உதவியிருக்கிறார். கறந்த பசும்பாலில் தண்ணீர் கலக்காமல் ஆடை படராமல் தயாரிக்கிற காபிக்குத்தான் டிகிரி காபி என்ற முதல் மரியாதை. பாலுக்கு இணையான முக்கியத்துவம் காபி டிக்காஷனைத் தயாரிப்பதற்கும் உண்டு.

நூறு கிராம் அளவுள்ள காபிக் கொட்டைகளைப் பதமான சூட்டில் வறுத்து அரைத்தெடுக்கையில் அது எண்பது கிராம் வர வேண்டும். அந்தக் காபிப்பொடியிலிருந்து டிக்காஷன் வடித்தெடுக்க இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டும். காபிப் பொடியிலிருந்து இரண்டாவது தடவை டிக்காஷன் வடிக்கக் கூடாது. டிக்காஷனைப் பாய்லரில் வைத்து சூடு காக்க வேண்டும். காபி கலக்கும்போது முதலில் சர்க்கரையை இட்டு அதன்மீது டிக்காஷனை ஊற்றி அதற்கும் மேலாகத் தேவையான அளவில் பாலைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். எங்கேயும் எப்போதும் பாக்கெட் பால் என்றாகிவிட்ட பிறகு டிகிரி காபி என்று பெயர் சொல்வதில் இப்போது எந்தப் பொருத்தமும் இல்லை.

கடையில் பாய்லரும் பித்தளை டவராக்களும் இருந்தால் மட்டும் டிகிரி காபி ஆகிவிடாது. ஆனாலும் தேசிய நெடுஞ்சாலையின் வழியெல்லாம் கும்பகோணம் டிகிரி காபி என்ற பெயர்ப் பலகைகளைப் பார்க்காமல் பயணிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

source:::: The Hindu….Tamil

natarajan

 

 

How Krishnans Brought Wimbledon Home …!!!

 

 

Ramanathan Krishnan and Lalitha Krishnan at their natural grass court patterned on those at Wimbledon. Photo : R Ravindran.

 

 

The English championship is two months away and fans are making plans to be there. But the first family of Indian tennis has other ideas

No sprightly girls and boys to chase the yellow balls. No linesmen to yell out calls. No electronic board to flash the scores. But superlative matches are played every day at this grass court, where tall trees fill in for spectators.

These ‘matches’ defy the humdrum order of time, space and sequence. One moment, an iceberg-cool Borg and a fiery McEnroe are locked in a nail-biting tie-breaker. In the next, Ashe gets the better of Connors with a clever mix of slice and spin. Then come Nadal and Federer fighting a war of attrition, which is followed by an emotion-soaked final where a kind Duchess of Kent offers her shoulder to a teary-eyed Jana Novotna, disconsolate after her loss to Steffi Graf.

Welcome to the private grass court at Oliver Road in Mylapore, maintained by Indian tennis’ first family, the Krishnans, as a tribute to Wimbledon. For the Krishnans, this natural grass court, which borrows features from the hallowed courts of Wimbledon, serves as a mind screen to replay and relive the timeless matches from the prestigious English championship. (Also significant is that this court is one of the very few natural grass courts in the country.)

 “Wimbledon is dear to every member of our family. We have followed the championship closely for decades,” says Ramanathan Krishnan, 77 now.

 The Krishnans not only tracked Wimbledon, they also excelled in it — a fact that largely shaped their deep attachment to the championship and also the decision to design a natural grass court patterned on those at Wimbledon. Ramanathan Krishnan is a two-time semi-finalist (1960 and 1961) at Wimbledon and his son Ramesh Krishnan, the winner of the 1979 Wimbledon juniors title and a quarter-finalist in the men’s section in 1986.

 “It was our son Ramesh’s idea to design a Wimbledon-type grass court at our house on Oliver Road. Around four years ago, he came up with this plan and everyone was excited about it. Ramesh got all the necessary information from Wimbledon. My wife Lalitha assisted in executing the project. And when it was done, we knew we had brought Wimbledon home,” declares Ramanathan, who spends the evening hours with Lalitha at this private grass court, both of them merrily parked in broad, deliciously comfortable bamboo chairs.  “When Wimbledon is on, we bring out the television set and watch the matches sitting here,” says Lalitha, 70.

The Krishnans are going to a lot of trouble to make Wimbledon more immediate for themselves: they have put two men, A. Shanmugam and M. Manickam, on the job of maintaining the court. Natural grass court maintenance is costly and cumbersome, the reason we don’t have many of them around.

Notably, this grass court is not used regularly — for ‘real’ matches, that is. “Once in two months, Ramesh, who lives in R.A. Puram, brings some of his friends along for a game,” says Ramanathan.

Besides the love of Wimbledon, there are other sentiments that spur the desire to keep the court in shape and working order. Beneath the grass, lie clayey memories of long practice hours and family bonding. “This was a clay court for well over three decades, before it was turned into a grass court four years ago. We set up the clay court in 1975. It was a training ground for Ramesh,” says Ramanathan.

 “Father would train Ramesh from 10 a.m. to 5 p.m. at this court,” recalls Gowri Krishnan-Tirumurti, Ramanathan’s daughter, who also trained at the court and is the 1982 Indian national juniors champion.

In its clayey days, the court saw five south Indian champions play and practise the sport — T.K. Ramanathan, Ramanathan Krishnan, Ramesh Krishnan, Gowri Krishnan and Shankar Krishnan (a cousin of Ramesh and Gowri). “Just like my dad and brother, Shankar went on to play Davis Cup,” says Gowri.

This private tennis court may have created champions, but its charm lies in the sense of togetherness it has fostered among the Krishnans. “I remember when we would be practising, our mother would sit on the sidelines and peel oranges for us,” says Gowri.

The bonding has extended to the youngest generation. Ramanathan’s grandchildren — Gayathri, Nandita, Bhavani and Vishwajit — are in their twenties and studies have taken some of them away from home; yet, when they visit their grandparents, they love to sit around this clay-turned-grass court. Says Gowri, “Successive generations have learnt many things around this court. Discipline is one of them.”

 And, surely, also what it takes to be a winner.

Keywords: KrishnansWimbledon

 

source:::: The Hindu…

natarajan

 

படித்து ரசித்தது …” மனம் தேடி தவிக்கிறது …”

 

வளர்ந்தாலும் உணவை
வாயில் ஊட்டிவிடும்
அம்மாவையும்

வரும்வரை வாசலிலேயே
தூங்காமல் காத்திருக்கும்
அப்பாவையும்

வாஞ்சøயாய்த் தலைகோதி
முத்தமிட்டு நெட்டி முறிக்கும்
பாட்டியையும்

டி.வி. ரிமோட்டுக்கு தினமும்
சண்டையிடும் அருமைத்
தம்பியையும்

ஊர்வம்பு பேசியபடியே
வீட்டைக் கூட்டிப் பெருக்கும்
கண்ணம்மாவையும்

“உன் கையாலே போணி பண்ணு’ என
உரிமையுடன் கேட்கும்
பூக்காரம்மாவையும்

மனம் தேடித் தவிக்கிறது…
அமெரிக்க தேசத்தின்
அந்நிய முகங்களிடையே….

– ஜி. ராஜி, சென்னை  in Mangaiyar Malar

natarajan

” முருகனுக்கு வாகனம் மாறி விட்டதா … ” !!!

2014-02-26 21.16.35

இந்தக் காட்சியைக் கண்டு எனக்குத் தோன்றியது…
உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

தன் வாகனத்தைத் தம்பிக்குத் தந்து
அண்ணன் அயர்ந்து அமர்ந்து விட்டார்!

எந்த சோதிடன் பலன் சொன்னானோ?

வாகன மாற்றம் உண்டு என்று?

ஆயிரம்தான் இருந்தாலும்,
அதிககனம் இருந்தாலும்,
இயல்புக்கு மாறாக இளவல் நிற்பினும்
முழி பிதுங்குது மூஞ்சுறு!

சோடி தேடி ஓடிப் போனதோ
இல்லை…
சோகத்தோடே பறந்து போனதோ?
தோகை மயில்!

கவலை அறுத்த உள்ளம்
கருணை பொங்கும் கண்கள்
முறுவல் பூத்த முகம்
முருகன் என்றால் அழகன்தானே!

ஒய்யாரக் கோலம்…
ஓய்வான நேரம்!

ஆண்டி என நின்றதால்
அச்சம் இல்லை.
மடியில் கனம் இல்லை
மனத்தில் பயம் இல்லை…
உணர்ந்த உண்மை இது!

மனையாள் பயம் இல்லை
மாலைக்குள் திரும்ப வேண்டாம்!
கைகட்டி சேவகம் என
எங்குமே குனிந்திருக்க வேண்டாம்!

குடும்பக் கவலையு மில்லை…
குழந்தை குட்டி பிக்கல் பிடுங்கல்
கொஞ்சமும் இல்லை என்றால்
முகத்தின் புன்னகை முழுநேரம்தானே!
உணர்ந்த உண்மை இது!

கையில் கொண்ட கோல் ஒன்று
நிமிர்ந்து நிற்கும் நிலைத்திருக்கும்!
செங்கோல் வழுவாது…
செங்கைவிட்டு நழுவாது!

(சென்னை, கே.கே.நகர் சிவன் பூங்கா அருகிலுள்ள, விநாயகர் கோவில் மண்டபத்தில் க்ளிக்கியது!)

source::::Kavithai  by Sengottai Sriram in Dinamani.blogspot.com

natarajan

T.Nagar Chennai… India”s Biggest Shopping District !!!

  • This 6km  long  stretch has …..
Just like many of its shoppers,Theagaraya Nagar-reputed to be the biggest shopping district in India by revenue-could be heading for a much-needed makeover, giving national retailers a chance to set up shop alongside established regional players in this much sought-after area.

For long, this 6 km-long stretch has been the heart of shopping not only for Tamil Nadu, but also the whole of South India.

By some estimates, the shops in T Nagar-a majority of them selling textiles or gold jewelry-are together hitting revenues of nearly 20,000 crore every year. The official estimates put it much lower at over Rs 10,000 crore, but this is still double that of New Delhi’s Connaught Place, Linking Road in Mumbai and Bangalore’s Brigade Road which clock Rs 4,000-6,000 crore.

This has led to retailers flocking to this area, resulting in buildings with poor planning and facilities. The scene on the roads is worse; traffic jams are the norm and even on a lean day about 2 lakh pedestrians traverse the roads around Panagal Park, the central part of T Nagar.

“It’s the mecca of retail,” said India’s largest retailer Kishore Biyani of Future Group, which has over 17 million square feet of retail space in the country and more than two dozen brands. But it still hasn’t managed to open a single door at the main T Nagar junction. “We are working on a strategy for Chennai and you can’t ignore T Nagar. But getting space there has always been the only issue.”

It is to address such concerns that the city’s municipal corporation has tied up with real estate advisory firm Jones Lang LaSalle to work out a proposal to redevelop the area and make shopping there a more pleasant experience.

But at the same time they want to preserve what is good. “There are old shopping buildings that have become a heritage and we want to preserve that,” said A Shankar, local director of strategic consulting at Jones Lang LaSalle. Some of the suggestions to improve the area include creating a plaza for the hawkers and building skywalks connecting the nearest railway station and bus stand.

Other ideas are constructing multi-level parking lots and ‘pedestrianisation’ of the retail core area around Panagal Park, where about a million shoppers crowd during festivals and other busy periods.

It would be hard for a visitor today to T Nagar-named after one of the founders of the Justice Party, a precursor to other Dravidian parties-to believe that less than a hundred years ago it was all paddy fields. Nalli’s was the first showroom to appear in 1928 and soon other establishments followed.

“Nalli started as a baby here and now it has spread its roots to others parts of the country. This first store is what helped the firm grow to what it is today and venture into newer areas like jewellery,” Nalli Kuppuswamy Chetty said in a recent meeting with ET.

Though the five radial roads that lead to Panagal Park are wide, the pace of T Nagar’s growth took everyone, including the authorities, by surprise. Buildings mushroomed rapidly and the area soon became as popular for its congestion as for its wares.

source::::Economic Times

natarajan…Resident of T.NAGAR Chennai

“உமா மகேஸ்வரிகளை தெரியுமா உங்களுக்கு?- “…

 

கோப்புப் படம்

கோப்புப் படம்

‘யார் இவர்களை இரவு வரை வேலை பார்க்கச் சொன்னது?’

‘காலையில் கிளம்பி நள்ளிரவுதான் வீட்டிற்கு திரும்புகிறாள்… அப்படி என்ன வேலையோ?!

‘ஒழுங்கா கல்யாணம் பண்ணிட்டு வீட்டுல உட்கார வேண்டியதுதானே!’

‘இவங்க போடற டிரெஸ்ஸை பார்த்தாலே, இவங்க எப்படிப்பட்டவங்கன்னு தெரியது?’

உமா மகேஸ்வரியின் மரணம் தொடர்பான செய்திகள் வெளிவரத் தொடங்கியதும், சமூக வலைத்தளங்களில் ஒரு தரப்பினர் உதிர்த்த கருத்து முத்துகள் இவை.

ஐ.டி. பெண்களைப் பற்றியும், அவர்களது வாழ்க்கை முறையைப் பற்றியும் மேலோட்டமாகக் கூட சரிவரத் தெரிந்துகொள்ளாத இவர்கள், ஏதாவது இப்படி கிளப்பி விடுவது வழக்கமாகிவிட்டது.

எந்தக் குடும்பச் சூழலில் பெண்கள் வேலைக்குப் போகிறார்கள் என்பது இந்த அறிவுஜீவிகளுக்குத் தெரியுமா? ‘என் குடும்பத்தின் நிலையை மாற்ற வேண்டும், நான் சுதந்திரமாக நடைபோட வேண்டும்’ என்று எண்ணம் கொண்ட பெண்கள் ஒவ்வொரு நாளும் அக்னி பரீட்சையைதான் சந்திக்கின்றனர்.

நைட்டு வரைக்கும் அப்படி என்ன வேலை செய்கிறார்கள்? என்று கேட்கும் அன்பர்கள் சிலருக்கு, நம் இரவு நேரம்தான் அமெரிக்கா முதலான பல நாடுகளின் வர்த்தக நேரம் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஐ.டி.யில் தொழில் சேவை சார்ந்த நிறுவனங்கள் (Service based companies) பலவும் இப்படி இங்கு இரவு நேரத்தில் ஆந்தை போல் விழித்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது. காரணம் இவர்கள் செய்வது கஸ்டமர் சர்வீஸ். வெளியூரிலுள்ள பலரிடமும் பேச வேண்டியிருக்கும், நாம் வேலையை செய்து முடித்து விட்டு இரவு எட்டு, எட்டரை மணி அளவில் கிளம்பப் பார்த்தாலும் அவர்கள் கூறும் குறைபாடுகளை தீர்த்து வைத்த பிறகே கிளம்ப முடியும்.

அதிலும் பி.பி.ஓ. இருக்கிறதே – பொதுவாக கால் சென்டர் என்று சொல்லப்படுவது – இதில் வேலை பார்ப்பவர்களின் பொழுது குறைந்த பட்சமாக இரவு ஏழு மணி அளவில்தான் தொடங்குகிறது. அடுத்த நாள் அதிகாலை சுமார் மூன்று நான்கு மணி வரை வேலை நேரம் செல்கிறது. திரைப்படத்தில் காட்டுவது போல் சும்மா ஜாலியாக கும்மாளம் அடிப்பது, ஒகே DUDE, சூப்பர் buddy என்று பீட்டர் விடுவது போல் எல்லாம் இந்த மாதிரி கம்பெனிகளில் கிடையாது.

ஒவ்வொரு நாளும் எப்போது நிறுவனத்தை விட்டு கிளம்புவோம் என்று இங்கு யாருக்கும் தெரியாது. எப்போ என்ன வெடி வெடிக்குமோ என்ற பயம் தான் ஒவ்வொரு நாளும் இங்கு ஆள்கின்றது.

நிறுவனத்தை விட்டு வெளியே செல்லும்போது, ஒவ்வொரு மனிதரும் பல மன உளைச்சல்களை சுமந்துதான் வெளிவருகின்றனர். இதில் பெண்கள் பெறும் மன உளைச்சல் இருக்கிறதே மோசம். இரவு ஒன்பது, பத்து, பதினொன்று, பனிரெண்டு மணி, மூன்றுமணி இப்படி பல வேளைகளில் வீட்டிற்கு செல்ல வேண்டிய சூழல் இவர்களுக்கு நிகழ்கின்றது.

தர்மபுரி, ஈரோடு, சேலம், மதுரை, ஜார்கண்ட், ராஜஸ்தான், கோவை, தேனீ, கொச்சின், நெல்லூர், குண்டூர் இப்படி பல ஊர்களிருந்து பல மாநிலங்களிருந்து பெண்கள் நம்மூரில் வந்து வேலைப் பார்க்கின்றனர். பொருளாதார ரீதியாக இப்பெண்களால் இவர்கள் குடும்பத்தின் வாழ்வாதாரம் மாற்றப்பட்டிருக்கிறது, மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் இவர்களும் இவர்கள் குடும்பங்களும் சந்திக்கின்ற வேதனைகள் இருக்கிறதே, அது ஏராளம்.

வேறு ஊரில் வசிக்கும் அப்பாக்கள் தன் மகள் ‘ஹாஸ்டலுக்கு வந்துட்டேன்ப்பா’ என்ற செய்தி கேட்ட பிறகே உறங்குகிறார்கள், தெருமுனையில் இரவு மூன்று மணிக்கு தன் தங்கைக்காக காத்திருக்கும் அண்ணன்களுக்கும், வீட்டில் சாப்பாட்டை வைத்து கண் விழித்துக் காத்திருக்கும் அம்மாக்களுக்கும் எத்தனை பேர் தெரியுமா? அந்த இரவு நேரத்தில் தன் வீட்டுப் பெண் வீடு திரும்பவில்லை, இனி அவள் வரவே மாட்டாள் என்ற செய்தி வந்தால் இவர்களின் நிலையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இன்னும் பல அம்மாக்கள் தன் பிள்ளையை வீட்டில் உறங்க வைத்து, ஏதோ ஒரு பொழுதில் வீட்டிற்கு சென்று தன் குழந்தைக்குத் தரும் முத்தத்தில் தான் உயிர் வாழ்கிறாள். வேலைக்கு சென்ற அம்மா வீட்டிற்கு திரும்ப மாட்டாள் எனும் செய்தியை அக்குழந்தைக்கு எப்படி கூறப்போகீறீர்கள்?

இரவில் தனிச் சாலையில் ஒரு பெண் நடந்து சென்றாலே அவள் ஒரு போகப்பொருளாகவே பலநேரங்களில் பார்க்கப்படுகிறாள். இன்னும் எத்தனை தூரத்திற்கு நம்மால் பாதுகாப்பு தர முடியும். ஒவ்வொரு பெண்ணும் வீட்டுக்கு செல்லும் வரை அவர் பின்னால் ஒரு காவலாளியை அனுப்ப முடியுமா? ஒவ்வொரு சந்திலும் சீ.சி.டி.வீ கேமராவை இணைக்க முடியுமா? இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் ஒரு தவறும் செய்யாத பெண்ணை குறை கூறப் போகிறோம்? எப்போது திருந்தப் போகிறோம்? இன்னும் பெண்ணுக்கு எதிராக நடக்கும் இழிபாடுகளுக்கு பெண்களின் ஆடையும், பெண்களின் நடத்தையை மட்டும் குறைகூறுபவர்களே வெட்கமாக இல்லை உங்களுக்கு!

ஒரு பெண் தனியே நடக்கையில் அவள் ஒரு உயிர், வெறும் ஒரு பண்டம் அல்ல என்ற உண்மை ஒவ்வொரு மனிதனுக்கும் உரைக்க வேண்டும். ஒரு பெண் தனியே நடந்த செல்கையில் இவள் என் நாட்டு பொக்கிஷம். இவளுக்கு யார் தீங்கு செய்தாலும், சிதைக்க முயன்றாலும் நான் விட மாட்டேன் என்ற எண்ணம் ஒவ்வொரு ஆண்மகனுக்கும் வர வேண்டும். என் பெண் காணவில்லை என்ற பதறி வரும் அப்பாவிடம் எங்கேயாவது ஓடி இருப்பாள் என்று கூறும் வாய்களை முதலில் சிறையில் அடைக்க வேண்டும்.

பெண்ணைப் பெற்றவருக்கு நெஞ்சு ஒவ்வொரு நாளும் பக் பக் என்று அடிக்கின்றது, வீட்டிலிருந்து வெளியே சென்ற பெண் பத்திரமாக திரும்பி வர வேண்டும் என்று. உங்களின் சதைப் பசிக்கும், வன்மத்திற்கும் அனாவசியமாக ஒரு குடும்பத்தை இரையாக்காதீர்கள்!

அர்த்த ஜாமத்திலே ஒரு பெண் தனியே நடந்து சென்றால், அவள் உங்கள் வீட்டுப் பெண் என்று, உங்கள் தங்கையென்று, உங்கள் சிநேகிதி என்று நினைத்துக் கொள்ளுங்கள். மனிதம் அத்து மீறப்படும்பொழுது அதைக் காக்க வேண்டுவது ஒவ்வொருவரின் கடமை. ஆண்மை தவறேல்!

எங்காவது ;இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்’ என்று பேசும்பொழுது உங்கள் வீட்டுப் பெண்ணையும் கொஞ்சம் மனதில் வைத்துப் பேசுங்கள்!

உங்களுக்கு இன்னொரு விஷயம் தெரியுமா?

ஐ.டி. நிறுவனங்களின் பணியாற்றும் பெரும்பாலான பெண்கள், பொருளாதார ரீதியில் வசதியான குடும்பங்களைப் பின்னணியாகக் கொண்டவர்கள் அல்ல… கீழ், நடுத்தர நிலையில் உள்ள தங்கள் குடும்பங்களை மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயலாற்றும் உமா மகேஸ்வரிகள் அவர்கள்.

ஹரி, ஐ.டி. நிறுவன ஊழியர் – தொடர்புக்கு nanaprabhu5591@gmail.com

 source::::::The Hindu..Tamil

natarajan

“நாம் சரியாகத்தான் பேசுகிறோமா?”…..!!!

 

ஆம் ஆத்மி கட்சியில் துவங்கி, அம்மியில் சட்னி அரைப்பது வரை அனைத்துக்கும் கருத்துச் சொல்லும் திறமை பலருக்கு இருக்கிறது. நமது பரந்துபட்ட அனுபவங்களுடன் நம் கற்பனைத் திறனும் கை கோக்கும்போது உருவாகிற பேச்சாற்றலுக்கு எல்லையே இல்லை. இடம், பொருள், ஏவல் எல்லாம் பலரது பேச்சுக்கு அப்பாற்பட்டவையாகவே இருந்து வந்திருக்கின்றன. ‘வாய்ச்சொல்லில் வீரரடி’ என்று சொல்லிச் சென்ற பாரதிக்கு மரியாதை செய்யும் நிமித்த மாவது “பயனில சொல்” பலவற்றைப் பேசிக்கொண்டே இருக்க வேண்டாமா?

சரி, அந்தப் பேச்சுத்திறமையின் வீச்சைக் கொஞ்சம் பார்க்கலாமா? தன் கணவரின் அலுவலகத் தோழி குறித்து இயல்பாகச் சொல்லியிருப்பாள் ஒரு தோழி. அதை கேட்டுக்கொண்டு மட்டும் இருந்தால் என்னாவது? நாலைந்து முத்துக்களை உதிர்க்க வேண்டுமே. உடனே, ‘இப்படித்தான் நம்ம தேவியும் வெகுளியா சொன்னா. கடைசியில பார்த்தா அவ வீட்டுக்காரருக்கும் அந்தப் பொண்ணுக்கும் கல்யாணமே ஆகிடுச்சாம். ரெண்டு புள்ளைகளோட இப்ப நிராதரவா இருக்கா’ என்று பொக்ரான் அணுகுண்டை போகிற போக்கில் சிலர் வீசுவார்கள். என்னது… தோழியின் நிம்மதியா? அதைப் பற்றி நமக்கென்ன கவலை?

வினையாகும் விசாரிப்பு

நண்பர் ஒருவர் சர்க்கரையாலோ வேறு சில உடல் சிக்கல்களாலோ மெலிந்திருக்கலாம். வழியில் பார்ப்பவரை வம்படியாக நிறுத்திவைத்து, ‘என்னப்பா இப்படி துரும்பா இளைச்சுட்டே. நல்ல டாக்டரா பாருப்பா. பெரிய வியாதியெல்லாம் இப்படித்தான் ஆரம்பிக்கும்’ என்று சொல்லி அடுத்த நாளே அவருக்கு மருத்துவமனையில் அனுமதி வாங்கிக்கொடுத்து விடுகிறவர்களும் உண்டு. அவருக்கு ஏற்படும் மன உளைச்சல், பேச்சுடன் தரப்படும் இலவச இணைப்பு.

ஒருவர் மருத்துவமனையில் சேர்ந்த பிறகுகூட, அவரை அப்படியே விட்டுவிடலாமா? கையில் நாலு சாத்துக்குடியுடன் சென்று ஆறுதல் சொல்லிவிட்டு, ‘என்னதான் ஆபரேஷன் பண்ணாலும் ஆறு மாசம்தான் தாங்குமாம். எனக்குத் தெரிஞ்ச டாக்டர் சொன்னார்’ என்று அவருக்குத் தேதி குறித்துவிட்டு வருவதில்தான் சிலருக்கு என்னவொரு பேரானந்தம்.

அவதிப்படுத்தும் அனுபவப்பாடம்

கல்லூரிக்குச் செல்லும் மகளை வழியனுப்பிவிட்டு அப்போதுதான் உட்கார்ந்திருப்பார் அந்த அம்மா. அவரை சும்மா இருக்கவிடலாமா? உடனே பிரம்மாஸ்திரத்தை எய்துவிடுவோம். ‘இந்தக் காலத்துல ஆம்பளைப் பசங்களைக்கூட நம்பிடலாம். இந்தப் பொண்ணுங்களைதான் நம்ப முடியறது இல்லை. என் நாத்தனார் பொண்ணும் இப்படித்தான் ஊமைக் கத்தாழை மாதிரி இருப்பா. திடீர்னு போன வாரம் நான் ஒருத்தனைக் காதலிக்கறேன்னு வந்து நிக்கறா. என்ன பண்றது, நீங்களே சொல்லுங்க?’என்று திரியைக் கிள்ளி வைப்போம். மகள் வீட்டுக்கு வந்ததும் அது டைம்பாமாக வெடிக்கலாம்.

திருவாய் மலரும் தருணம்

சாதாரண நாட்களில்தான் என்றில்லை. குடும்பமே கூடியிருக்கும் மகிழ்ச்சியான தருணங்களிலும் பலரும் திருவாய் மலரத் தயங்குவதே இல்லை. குழந்தையைத் தொட்டிலில் போடுகிற நேரமாகப் பார்த்து, ‘ரெண்டாவதும் பொண்ணா போயிடுச்சே. பரவாயில்லை விடுங்க. கடைசி காலத்துல பொண்ணுங்கதான் நம்மளைக் காப்பாத்துவாங்க’ என்று வாழைப்பழத்தில் ஊசியை இறக்குவார்கள். குழந்தையின் தாய் முகத்தில் தோன்றும் வருத்தமும் வேதனையும் அவர்களை ஏன் பாதிக்கப் போகிறது?

உறவினர் வீட்டுத் திருமண விழாவில் முதல் வரிசையில் உட்கார்ந்துகொண்டு, ‘இன்னும் கொஞ்சம் தேடியிருந்தா நல்ல நிறமாவே பொண்ணு கிடைச்சிருக்கும். என்ன பண்றது? எல்லாம் காசு செய்யுற வேலை’என்று தங்கள் வயிற்றெரிச்சலுக்கு வடிகால் தேடிவிட்டு, பந்திக்கு முந்துவார்கள்.

இனிப்பும் கசப்பும்

வேலை கிடைத்த மகிழ்ச்சியைப் பகிர இனிப்புடன் வந்திருப்பான் ஒருவன். நம் அனுபவத்தை எல்லாம் அவன் தலையில் கொட்டுவதுதானே சிலரது சிறப்பியல்பு. ‘வெளுத்தது எல்லாம் பால்னு நினைச்சுடாதப்பா. அந்த சூப்பர்வைசர் ஒரு முசுடு. அந்த சிடுமூஞ்சி மேனேஜர்கிட்டே வேலை பார்க்கறதுக்கு நாலு கழுதையை வாங்கி மேய்க்கலாம். உன் பக்கத்து சீட் ஆள்கிட்டே ரொம்ப கவனமா இருக்கணும்’ என்று அலுவலகத்தில் அவன் யாருடனும் பேசாத அளவுக்குச் செய்துவிடுவதில்தான் எத்தனை மனநிறைவு.

இதோடு முடிந்ததா என்றால் இல்லை. உலகையே ஆளத் துடித்த அலெக்ஸாண்டர் மாதிரி சிலரது பேச்சுத் திறமையும் பரந்துபட்டது. தெரிந்தவர் புதிதாக எதையாவது வாங்கிவிட்டால் போதும். உடனே சிலர் ஸ்க்ரூ டிரைவரும் வாயுமாகக் கிளம்பிவிடுவார்கள். ‘இந்த மாடல் ரொம்பப் பழசாச்சே. திரும்பக் குடுத்தா காயலான் கடைக்காரன்கூட வாங்க மாட்டான். போனவாரம்தான் குறைஞ்ச விலைக்கு புது மாடல், என் மச்சானுக்கு வாங்கிக் கொடுத்தேன். உங்களை நல்லா ஏமாத்திட்டான் சார்’ என்று சொல்லிவிட்டால் போதும். அந்தப் பொருள் பழுதடைந்து, முடங்கும் வரை அவரை நிம்மதியில்லாமல் அலையவிடலாம்.

கருத்து சொல்லும் கலை

இவை மட்டும் இல்லை குழந்தைப் பிறப்பில் தொடங்கி, எரிமேடை வரை எதைப் பற்றியாவது கருத்து சொல்லிச் சொல்லி மாய்ந்து போகிறோம். ஆனால் அவை நேர்மறையானவைதானா? நம் மனதின் ஏமாற்றங்களுக்கு மருந்து போடுவதாக நினைத்துக்கொண்டு அடுத்தவரை காயப்படுத்துகிறோம். அதை நாம் ஒருபோதும் யோசிப்பதே இல்லை. கருத்தை வெளிப்படுத்தும் முனைப்பில் இருக்கிறோம். காரணம் யோசிக்கவும் நேரமின்றி கருத்துச் சொல்லிக் களைத்துப் போகிறோம். அப்படிச் செய்வதன் மூலம் அடுத்தவரையும் கருத்துப் போராளியாக மாற்றி விடுகிறோம். நமக்குத் தெரிந்ததை அடுத்தவருக்குச் சொல்வதில் தவறேதும் இல்லை. ஆனால் எதை, எப்படி, யாரிடம் சொல்கிறோம் என்பதில்தான் நம் பேச்சின் பொருளே அடங்கியிருக்கிறது.

உற்சாகப்படுத்துவது நல்லது

இப்படி எல்லா இடங்களிலும் அடுத்தவரின் கவனத்தைக் கவரவோ, சிதைக்கவோ கருத்துச் சொல்கிற முனைப்பு ஏன் ஏற்படுகிறது? “அடுத்தவர் மத்தியில் தன்னை முன்னிறுத்திக் காட்டத் துடிக்கும் தன்முனைப்புதான் இதற்குக் காரணம்” என்கிறார் மனநல நிபுணர் அசோகன்.

“இப்படி மாற்றுக் கருத்துச் சொல்கிறவர்களில் இரண்டு வகை உண்டு. எதையுமே எதிர்மறையாகப் பார்க்கும் குணம் சிலருக்கு இயல்பிலேயே இருக்கலாம். மற்றொரு வகையினர் தங்கள் வாழ்வின் தோல்விகளின் வெளிப்பாடாக இப்படிப் பேசலாம். தங்களுக்குக் கிடைக்காத கல்வி, படிப்பு, வேலை, வெற்றி இவற்றை எல்லாம் அடுத்தவர் அடையும்போது, அதைப் பார்க்கச் சகிக்காமல் இப்படிப் பேசலாம். தான் மட்டும் தோற்கும்போது, இவர்கள் எப்படி வெற்றி பெறலாம், இவர்களும் தோற்கட்டுமே என்ற நினைப்பு அவர்களை அப்படிப் பேசத் தூண்டும். தோற்றுப்போன மனதின் வெளிப்பாடு என்று சொல்வதைவிட, வாழ்க்கையில் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களின் வெளிப்பாடு என்றும் சொல்லலாம்.

இவர்கள், அடுத்தவரின் உரையாடலைத் தள்ளி நின்று கேட்டாலே, இதுபோல கருத்துக்கள் சொல்வதில் இருந்து விடுபடலாம். தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களைச் சொல்வதன் மூலம் அடுத்தவர் பாதிக்கப்படுவார் என்று தெரிந்தால் அதைத் தவிர்த்துவிடுவது நல்லது. ஒரு எதிர்மறை வார்த்தைக்குப் பதிலாக ஆயிரம் நல்ல வார்த்தைகள் சொல்லி, அடுத்தவருக்கு உற்சாகமூட்டலாம். உறவுநிலைகளிலும், தொடர்புநிலைகளிலும் இணக்கத்துடன் இருந்தாலே போதும். கருத்துச் சொல்லும் மனநிலைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்” என்று இந்த குணத்தைக் கையாளும் வழிமுறைகளைச் சொல்கிறார் அசோகன்.

எதைச் சொல்வதாக இருந்தாலும், கேட்பவர் இடத்தில் நம்மை ஒருமுறை நினைத்துப் பார்த்துவிட்டுத் தொடங்குவது உத்தமம். இடம், பொருள், ஏவல் என்னும் மந்திரத்தை மறந்துவிடக் கூடாது. அப்படியும் உணர்ச்சி வேகத்தில் பேசத் தொடங்கிவிட்டாலும் எதிர்மறைக் கருத்துக்களையாவது தவிர்க்கலாமே. நாலு பேருக்குக் கருத்து சொல்வது மட்டுமல்ல, சொல்லாமல் இருப்பதும் சிலசமயம் நல்லதுதான்.

” என் ஆசி உங்களுக்கு என்றும் உண்டு ” !!!

வடநாட்டைச் சேர்ந்த பெரிய தொழிலதிபர். பிரபலமானவர். அவர் தன் குடும்பத்தாருடன் ஆசாரிய ஸ்வாமிகளைத் தரிசிக்க வந்தார். முன்பு ஸ்வாமிகள் வடநாட்டு யாத்திரை சென்றபோது ஸ்வாமிகளின் குழுவினருக்கு மிகவும் உதவியாக இருந்தவர். புன்னகையுடன் அந்தத் தொழிலதிபரைப் பார்த்துக் கொண்டிருந்தார் ஆசாரிய ஸ்வாமிகள்.

என்ன சொல்லப் போகிறார் என்பதை முன்கூட்டியே ஸ்வாமிகள் புரிந்திருப்பார் போலும்.

“இப்ப பெரிய தொகையை தர்ம காரியங்களுக்கு உதவப் போகிறேன். இனி வருடா வருடம் எங்கள் கம்பெனிகளின் வருமானத்தில் கொஞ்சம் பணத்தை தர்ம காரியங்களுக்கு உதவ முடிவுசெய்து இருக்கிறோம். அந்தப் பணத்தைத் தங்கள் இஷ்டப்படி தர்ம காரியங்களுக்குக் கொடுத்து விடுங்கள் ஸ்வாமி!” என்று பெரிய தொகையை செக்கில் எழுதிக் கொடுத்தார் தொழிலதிபர். அவரது மகனும் மனைவியும் “ஆமாம் ஸ்வாமி, நாங்கள் சம்பாதிப்பதில் ஒரு பகுதி தர்மத்துக்குக் கொடுக்கணும்னு முடிவு செஞ்சு இருக்கோம். இதுக்கு ஸ்வாமிகளின் அநுக்கிரஹம் வேணும்” என்றார்கள்.

செக்கைப் பார்த்தார் ஸ்வாமிகள். மிகப் பெரிய தொகை குறிப்பிடப்பட்டு இருந்தது செக்கில். பிரமித்தார். சிலிர்த்தார். மகிழ்ந்தார். அந்தத் தொழிலதிபரின் மனம் ஜாதியைக் கடந்து மாநிலத்தைக் கடந்து விரிந்து இருப்பதைப் புரிந்து கொண்டு அந்தக் குடும்பத்தின் மீது அருள் பார்வை செலுத்தினார். மௌனமாக ஸ்வாமிகளைத் தரிசித்தவண்ணம் இருந்தது அந்தக் குடும்பம்.

“உங்க தயாள குணத்தைக் கண்டு ரொம்ப சந்தோஷம். உங்க கம்பெனிகள் நன்னா இருக்கும். வருடாவருடம் லாபத்தில் ஒரு சிறு பகுதியை தர்ம காரியத்துக்குக் கொடுக்கப் போறேள். உங்க கம்பெனிகளின் லாபத்தில் சிறுபகுதி என்பது பெரிய தொகையாக இருக்கும். நான் சந்நியாசி. என் பொறுப்பில் இவ்வளவு பணம் இருக்க வேண்டாம். நீங்களே உங்கள் முன்னோர் பெயரில் ஒரு தர்மஸ்தாபனம் அமைத்து இந்தப் பணத்தையும் வருடா வருடம் லாபத்தில் சிறு பகுதியையும் அந்த தர்ம ஸ்தாபனத்தில் செலுத்துங்கள். அந்த தர்மஸ்தாபனம் மனிதநேயத்துடன் மக்களுக்கு உதவட்டும். நீங்களே ஒரு குழு அமைத்து அந்த தர்ம ஸ்தாபனத்தை நடத்துங்கள். என் ஆசி உங்களுக்கு என்றும் உண்டு” என்று சொல்லிக்கொண்டே அந்த செக்கைத் திரும்பக் கொடுத்தார் ஸ்வாமிகள்.

ஸ்வாமிகளின் செயலைக் கண்டு சிலிர்த்தார் தொழிலதிபர். முற்றும் துறந்த முனிவர் என்றால் இவர்தான் என்று எண்ணிய தொழிலதிபர் “ஸ்வாமி! தாங்கள் சொல்வது போல் தர்மஸ்தாபனம் அமைத்துச் செயல்படுகிறேன். முதல் காரியமாக தாங்கள் சொல்லும் திருப்பணியைச் செய்கிறேன். உத்தரவு வேணும் ஸ்வாமி!” என்று கேட்டார் தொழிலதிபர்.

சற்று நேரம் யோசனை செய்தார். சிதிலம் அடைந்த புராதனமான ஒரு கோயிலைச் சீரமைத்துக் கும்பாபிஷேகம் செய்யச் சொன்னார். அதைச் செய்ய ஒப்புக் கொண்டார் தொழிலதிபர்.

source::::www.periva.proboards.com

natarajan
Read more: http://periva.proboards.com/thread/5979/kanchi-mahaswamigal-sri-rangavasan/#ixzz2nbX0plTP

“படிக்க …சிரிக்க …படிக்க ….சிரிக்க…” !!!

 

ஆசிரியர்: உன்னுடைய வயதில் ஜனாதிபதிகள் அனைவரின் பேரையும் வரிசை கிரமமாகச் சொல்வேன்.

மாணவன்: உங்கள் வயதில் அப்போது மூன்று நான்கு ஜனாதிபதிகள்தான் இருந்திருப்பார்கள் டீச்சர்!

******************************

தாமதமாக வந்த மாணவனைப் பார்த்து ஆசிரியர் கேட்டார்: “”ஏன் லேட்?”

மாணவன்: வழியில் ஒரு தகவல் பலகை இருந்தது டீச்சர். அதில்…

இடையே குறுக்கிட்ட ஆசிரியர்: நீ லேட்டாக வர்ற அளவுக்கு அந்த பலகையில் என்ன எழுதியிருந்தது.

மாணவன்: பள்ளிக்கூடம் வருகிறது. மெதுவாகச் செல்!

******************************

புதிதாக சேர்ந்த வேலைக்கார பெண்ணிடம் வீட்டுக்காரி கேட்டாள்: “”மீன் தொட்டியில் உள்ள மீன்களுக்கு இன்று புதிதாக தண்ணீர் மாற்றினாயா?”

வேலைக்காரப் பெண்: “”இல்லையம்மா! நேற்று ஊற்றிய தண்ணீரையே அவை இன்னும் குடித்து முடிக்கவில்லையே!”

******************************

டிராபிக் போலிஸ்: மேடம்! நீங்கள் மணிக்கு 70 மைல் வேகத்தில் காரை ஓட்டி வந்திருக்கிறீர்கள்

பெண்: வாவ்! இது மிகவும் ஆச்சரியமில்லையா? நான் கார் ஓட்டக் கற்றுக் கொண்டதே நேற்றிலிருந்துதான்!

******************************

வீட்டுப் பெண்மணி: எப்போதும் எங்கள் வீட்டிற்கே வந்து பிச்சை எடுக்கிறாயே ஏன்?

பிச்சைக்காரன்: டாக்டர்தான் சொன்னார்

வீட்டுப் பெண்மணி: டாக்டர் என்ன சொன்னார்?

பிச்சைக்காரன்: உன்னுடைய உடல் நலனுக்கு எந்த உணவு ஒத்துக்கொள்கிறதோ அதையே தொடர்ந்து சாப்பிடு என்றார்.

******************************

டாக்டர்: உங்கள் மனைவிக்கு “லோக்கல்’ அனஸ்தீஷியா கொடுக்கலாமா?

கணவன்: நோ. நோ. என்னிடம் ஏராளமான பணமிருக்கிறது. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவே கொடுங்கள்.

******************************

டாக்டர்: என்னிடம் வருவதற்கு முன் நீங்கள் வேறு டாக்டர் யாரிடமாவது சென்றீர்களா?

நோயாளி: இல்லை டாக்டர். இந்தத் தெருவில் உள்ள மருந்து கடைக்காரரிடம்தான் சென்றேன்.

டாக்டர்: அந்த மடையன் என்ன சொன்னான்?

நோயாளி: அவர்தான் உங்களிடம் போகச் சொன்னார்!

 

source::::Dinamani …TamilDaily  Blogsite

natarajan