Message For the Day…”Love all, Even Those Who hate You “…

You must develop a sense of spiritual oneness. Out of that sense of oneness, love will grow. Love alone can bind the whole of humanity into one unit. What do you see in the precincts of Prashanthi Nilayam? People gather from Japan, Indonesia, Malaysia and all parts of the world. What has brought them together in this small village? It is only love and the sense of oneness shared with others. The bliss of life is embedded in love, and it gives you pure bliss. When your life dances on the waves of this love, it attains fulfillment. Love and Sacrifice (Prema and Thyaga) are the two most important ideals in life. Love all, even those who hate you. That is the index of your devotion. Peace, truth and love are inherent in every being. Why do you search for them outside? Manifest these qualities which are within you. Cultivate forbearance and compassion. This is the way to foster the love principle

Sathya Sai Baba

Message For the Day…” Learn From Animals ,Birds &Insects ….”

Man can learn any number of good qualities from animals, birds, insects and worms. The animal, donkey is viewed with contempt. But the quality of patience to be found in a donkey is not found even in man. Whatever burdens may be heaped on its back, it bears them all with forbearance. Even when it is starved of food and water, it presents a calm face. Man has thus to learn the quality of forbearance from the donkey. The ant is one of the tiniest among insects. But the ant has a capacity for foresight; with foreknowledge of the rainy season ahead, it starts storing food from three months in advance. Then, there is the spider – Determination is one of its traits. How many times its web may be destroyed or broken, the spider will go on remaking it with relentless determination.

 

Sathya Sai Baba

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் “….மகாகவியின் கவிநயம் !!!

earth

தமிழ்

யாமறிந்த மொழிகளிலே   தமிழ்மொழி  போல்
இனிதாவது எங்கும் காணோம்
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப்  பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
வாழ்திடுதல்  நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை  செய்தல் வேண்டும்

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போ
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போ
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை;
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை;
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம், ஒரு சொற் கேளிர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லம்
தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்

source::::blog.dinamani.com

natarajan

 

Message For The Day…” Understand Your Limit for Enjoying the Natural Resources”…

Just as a child is entitled to enjoy the milk from its mother, there can be no objection to man enjoying the resources of nature. But as a result of uncontrolled desires and reckless exploitation of natural resources, Nature is exhibiting frightening disorders. Natural calamities like earthquakes, volcanic eruptions, droughts and floods are the result of disturbances in the balance of Nature caused by this reckless exploitation. Mankind today appears like a foolish man who is wielding the axe at the branch of a tree on which he is sitting. You have to develop a sense of spiritual oneness. Out of that sense of oneness, love will grow. Man today does not recognise this sense of oneness. ‘Man’ is not the body alone. One has the mind, intellect and the Spirit (Atma) too. When the balance among these constituents is upset, people are plunged into troubles. On the other hand, when there is a balance, true humanness blossoms.

 Sathya Sai Baba

” பாரதியின் பாப்பா பாட்டு ” ….

ஓடி விளையாடு பாப்பா என்பது பாரதியார் எழுதிய பரந்து அறிமுகமான ஒரு குழந்தைகள் பாட்டு. இப் பாடலின் பல பகுதிகள் இலங்கை, இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பாட நூல்களில் இடம்பெற்றுள்ளன.

bharathiyar

இந்தப் பாடல் பெண் குழந்தைகளை சிறப்பாக ஊக்கப்படுத்தி பாடப்பட்டிருக்கும் … இதோ  அந்த  கவிதை !!!…நீங்கள்  உங்கள் குழந்தைகளுக்கு  சொல்லிக்  கொடுக்க !!!

ஓடி விளையாடு பாப்பா, – நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, – ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.

சின்னஞ் சிறுகுருவி போலே – நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வண்ணப் பறவைகளைக் கண்டு – நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.

கொத்தித் திரியுமந்தக் கோழி – அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் – அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா.

பாலைப் பொழிந்துதரும் பாப்பா, – அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் – அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா.

வண்டி இழுக்கும்நல்ல குதிரை – நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, – இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா.

காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு – என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.

பொய் சொல்லக் கூடாது பாப்பா – என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
தெய்வம் நமக்குத்துணை பாப்பா – ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா.

பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.

துன்பம் நெருங்கிவந்த போதும் – நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு – துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா, – தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,
தேம்பி யழுங்குழந்தை நொண்டி, – நீ
திடங்கொண்டு போராடு பாப்பா.

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற – எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா,
அமிழ்தில் இனியதடி பாப்பா, – நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, – அதைத்
தொழுது படித்திடடி பாப்பா;
செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் – அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.

வடக்கில் இமயமலை பாப்பா – தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா,
கிடக்கும் பெரியகடல் கண்டாய் – இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.

வேத முடையதிந்த நாடு, – நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் – இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.

சாதிகள் இல்லையடி பாப்பா; – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி – அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; – தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்; – இது
வாழும் முறைமையடி பாப்பா.

source::::Dinamani  Tamil Daily…Blogsite

natarajan

Message For The Day…”Knowledge without Wisdom is Useless “…

True education will make you divine. Education is not mere knowledge of words; it should broaden the mind. The mere acquisition of degrees is valueless. Character is more important and it can be developed only by taking to the spiritual path. Of what use is an education that does not promote good qualities? Together with academic education you have to acquire wisdom and a sense of right and wrong. Knowledge without wisdom, scholarship without determination, music without melody, learning without humility, a society without discipline, friendship without gratitude, and speech without truth – all these are utterly useless. Hence everyone should seek to follow the correct path. It is not greatness that matters but goodness. Make proper use of your education for the good of society.

 Sathya Sai Baba

 

Message For the Day.”Ethical and Spritual Values to Coexist Along with Science “…

Men and women must be governed by morality. In all countries morality and integrity should be like the life breath. It is only when people adhere to morality that human ideals like fraternity, equality and liberty can become meaningful in daily life. It is because of moral values having been given the go-by, that you find today’s society filled with disorder and unrest. The world will have respite from violence only when progress in science and technology is accompanied alongside by development of ethical and spiritual values. In the economic sphere, when one’s desires are governed by righteousness, a divine impulse will arise in that person. When the quest for wealth and the concern for worldly desires are based on righteousness (Dharma), the mind will spontaneously turn towards God.

Sathya Sai Baba

 

இதுவும் ஒரு மேலாண்மைப் பாடமே!!!

தும்பா  ராக்கெட் ஏவுதளத்தில் விஞ்ஞானிகள் 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை ஓயாது உழைத்துக் கொண்டிருப்பார்கள். அந்தத் திட்டத்தில் சுமார் 70 விஞ்ஞானிகள் ஈடுபட்டிருந்தனர்.

kalam-friends-black

தங்கள் வேலைப்பளுவின் காரணத்தாலும், பாஸின் (திட்டத் தலைவரின்) நெருக்குதலாலும் கிட்டத்தட்ட எல்லா விஞ்ஞானிகளுமே மனத்தளவில் வெறுத்துப் போயிருந் தார்கள்.  ஆனாலும் “பாஸின்’ மீது கொண்டிருந்த விசுவாசம் நம்பிக்கையால் யாரும் வேலையை விட்டு வெளியே செல்லவில்லை.

ஒருநாள் காலை ஒரு விஞ்ஞானி, பாஸிடம் வந்து, “”சார்! நம் டவுனில் நடக்கும் கண்காட்சிக்கு மாலை 6 மணிக்கு என் குழந்தைகளை அழைத்துப் போவதாக வாக்குக் கொடுத்திருக்கிறேன். அதனால் இன்று 5.30 க்கு நான் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கவும்” என்றார்.
அவரும் “”சரி! நீங்கள் சீக்கிரமே வீட்டுக்குப் போகலாம்” என்று கூறிவிட்டார்.

அந்த விஞ்ஞானி தன் வேலையில் மூழ்கிவிட்டார். ஒரு சிறிய இடைவேளையில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் பணியில் மூழ்கினார். தன்னை மறந்து வேலையில் இருந்து, தனது அன்றைய பணி நிறைவடையும் சூழ்நிலையில், கடிகாரத்தைப் பார்த்தால்  மணி 8.30. திடீரென, குழந்தைகளுக்கு அவர் கொடுத்த வாக்கு நினைவுக்கு வந்தது. தனது பாஸைப் பார்க்கப் போனால், அவர் இல்லை!

பாஸிடம் அனுமதி வாங்கியிருந்தும் இப்படியாகிவிட்டதே என்று வருத்தம் கொண்டு, குழந்தைகளையும் இப்படி ஏமாற்றிவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியோடு வீட்டினுள் நுழைந்தார்.  அவர் மனைவி மட்டும் ஒரு பத்திரிகையைப் படித்துக் கொண்டு கூடத்தில் அமர்ந்திருந்தார். நிசப்தமான அந்த வேளையில் இவர் வாயைத் திறந்து எதுகேட்டாலும் அது பூமராங்காக திருப்பித் தாக்குவது போல் இவருக்குத் தோன்றியது.

இவரைப் பார்த்துவிட்ட மனைவி கேட்டாள்… “”என்ன காப்பி போடட்டுமா? அல்லது இரவு உணவே சாப்பிட்டு விடுகிறீர்களா? பசி எப்படியிருக்கிறது?”

இவர் சொன்னார்… “”காபி போட்டாயானால் எனக்குக் காப்பி கொடு. சரி; குழந்தைகள் எங்கே?”

“”உங்களுக்குத் தெரியாதா?” ஆச்சரியமாகக் கேட்டார் அவர் மனைவி. “”உங்கள் மேலாளர் 5.15 க்கு வீட்டுக்கு வந்தார். கண்காட்சிக்குக் குழந்தைகளை அழைத்துச் சென்றாரே!” என்று வியப்புடன் பதிலளித்தார்.

அப்போதுதான் இவர் தன் பாஸிடம் கேட்டது நினைவுக்கு வந்தது. இவர் பாஸின் மனதை அறிந்தவராதலால் நடந்ததை ஒருவாறு யூகித்துக் கொண்டார்.

5 மணி வரை இவர் தன் வேலையில் மிக உன்னிப்பாக இருப்பதைக் கண்ட பாஸ், “இவர் இப்போதைக்கு சீட்டை விட்டு எழுந்திருக்கப் போவதில்லை’ என்று முடிவு செய்து, இவர் வேலையையும் தொந்தரவு செய்யாமல், அதே நேரம் இவர் apj_kalamகுழந்தைகளுக்குக் கொடுத்த வாக்கையும் நிறைவேற்றி குழ்தைகளும் ஏமாற்றமடையாமல் இருக்க, தானே குழந்தைகளைக் கண்காட்சிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

அவர் ஒவ்வொரு முறையும் இப்படிச் செய்ததில்லை! ஆனால் ஒரேயொரு முறை இப்படிச் செய்ததால், தன்னுடைய அன்பையும் விசுவாசத்தையும் உறுதிப்படுத்தினார்.

எனவேதான் தும்பாவில் உள்ள அந்த விஞ்ஞானிகள்  பல்வேறு மன உளைச்சல்களுக்கும் இடையில் அந்த பாஸின் தலைமையில் தொடர்ந்து வேலை செய்தனர்.

அந்த “பாஸ்’  நமது முன்னாள் ஜனாதிபதி அ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்கள்!

source:::::Dinamalar …Tamil Daily

natarajan