“செருப்பு தொலைந்த கதைகள்” !!!

மந்தைவெளி அம்மனுக்கும் எனக்கும் ஒரு உடன்படிக்கை இருந்தது. பல நாட்கள் செருப்பைக் கோவில் வாசலிலேயே மறந்து போட்டுவிட்டு அருகே இருக்கும் மாநகராட்சிப் பள்ளிக்குச் சென்றிருக்கிறேன். அப்போது நான் மூன்றாவது வகுப்புதான் படித்தேன். எனது கால் அளவும், செருப்பளவும் சிறியதுதான். ஒரு நாளும் திருட்டுப்போனதே இல்லை. மாலையில் வீடு திரும்புகையில், ‘இந்தாடா எடுத்துப் போட்டுட்டுப் போடா ஏ ராசா’ என்று அம்மனே காப்பாற்றி வைத்திருப்பாள் என் ஜோடி செருப்பை.

ஆனால் செருப்பைத் தொலைப்பது என்பது எனது மரபணுவில் உள்ள பிரச்சினை. காசி விஜயம் செய்தபோது, விசுவநாதர் கோயில் வாசலில் எத்தனையோ முறை விட்டும் ஒருமுறையும் தொலைந்தது கிடையாது. தமிழர்கள் தங்குவதற்காக நம்மவர்கள் அங்கே சென்று கட்டி வைத்திருக்கும் சத்திர வாசலில் ஒரே ஒரு முறை கழற்றி வைத்து, அது அடுத்த நொடியே காணாமல் மறைந்துபோய்விட்டது. வெளியே சொல்ல முடியுமா?

இப்படிச் செருப்பு தொலைத்த கதைகள் பல உண்டு. அவற்றில் இரண்டு மிகவும் ருசியானவை.

கதை ஒன்று

ஒரு ஞாயிற்றுக்கிழமை நண்பகலைத் தொடும் நேரத்தில் நான் பி.பி. ஸ்ரீநிவாசாக மாறிக்கொண்டிருந்தது தெரியாமல் எனக்குப் பின்புறம் சுவர் தாண்டி ஏதோ வந்து விழுந்த பெருஞ்சத்தம். திரும்பிப் பார்த்தால் பதினான்கு வயதுகூடச் சொல்ல முடியாத ஒரு சிறுவன். காலில் ஒரே ரத்தம். என்னை அச்சத்தோடு பார்த்தபடி, தத்தித் தத்தி நடந்து வந்தான். “என்னப்பா, யாரு நீ, எங்கிருந்து ஓடி வர்ற, எதுக்கு சுவர் எகிறி குதிச்ச?” என்று கேட்டேன்.

“சார், எங்க மாமா என்ன அடி அடின்னு அடிச்சுத் துவைச்சிட்டாரு சார்… தப்பி ஓடி வர்றேன்… குடிக்க கொஞ்சம் தண்ணி கொடுங்க சார்” என்றான். பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது. பி.பி.எஸ். பாட்டைக் கொஞ்சம் காத்திருக்கச் சொல்லிவிட்டு, உள்ளே சமையல் அறைக்கு ஓடினேன். என்ன ஏது என்று கேட்டுக்கொண்டே வந்த அம்மாவிடம், “பாவம் சின்ன பையன்… மாமா அடிச்சாருன்னு ஓடி வந்து குதிச்சிருக்கான் நம்ம வீட்டுக்குள்ள… தண்ணி தாகம் பாவம்” என்றபடி தோட்டத்திற்குப் போனேன். ஆனால் பையனைக் காணோம்.

பத்து நிமிடங்கள் கழித்து மூன்று நான்கு பேர் ஓடி வந்தனர். “சார் சார், ஒரு பொடிப் பையன் உங்க காம்பவுண்ட் வழியாத் தானே குதிச்சான், எங்கே அவன்?” என்றனர். “நீங்கதான் அவன் மாமாவா..? பாவம், ஏன் இப்படிப் போட்டு அடிக்கிறீங்க… ரத்தம் சொட்டச் சொட்ட வந்தானே…” என்றேன்.

“மண்ணாங்கட்டி, யாருய்யா சொன்னது நான் அவனுக்கு மாமான்னு. திருட்டுப் பய சார். எதையோ திருட எங்க வீட்டுக்குள்ள புகுந்தான். பார்த்துக் குரல் கொடுத்ததும், அப்படியே உங்க காம்பவுண்ட் சுவத்துல ஏறி குதிச்சிருக்கான். அங்கே பதிச்சு வச்சிருக்கிற கண்ணாடிச் சில்லு குத்திக் கிழிச்ச காலில் இருந்து வந்த ரத்தமாயிருக்கும் சார் அது” என்றார் வந்தவரில் ஒருவர். போகட்டும் போ என்று அவர்களை வழி அனுப்பிவிட்டு உள்ளே வந்து பார்த்தால், வீட்டு முகப்பில் விட்டு வைத்திருந்த செருப்பைக் காணவில்லை.

கதை இரண்டு

அதைவிட அருமையான செருப்புத் திருட்டுக்கு ஏமாற நான் திருவான்மியூர் சென்று குடியேற வேண்டியிருந்தது. அந்த வீட்டுக்கு இரண்டு பக்கம் வாசல்படி. முதல் நாள் இரவுதான் புது ஜோடி செருப்பை வாங்கி வந்திருந்தேன். முன்பக்க அறையின் ஓரம் இருந்தது அது. மறுநாள் அதிகாலை வழக்கம்போல், தண்ணீர்க் குழாயில் நீர் பிடித்துக் குடங்களைக் கொண்டு தரும் வேலைக்காரப் பெண்ணுக்காக ஒரு பக்க வாசல் கதவைத் திறந்து வைத்தேன். அப்படியே தரையில் கீழே உட்கார்ந்தவன் சொக்கித் தூங்கிவிட்டேன். விழித்தெழுந்து பார்த்தபோது இரண்டு குடம் தண்ணீர் பத்திரமாயிருந்தது. புது ஜோடி செருப்பு போயே போய்விட்டது.

அது பிரச்சினை இல்லை. எனது மாமனாருக்கு நான் செருப்பை ஏமாந்து திருட்டுக் கொடுத்தது பற்றி விளக்கக் கடமைப்பட்டிருந்தேன். “தெரியல சார்… யாரோ வந்து எடுத்துப் போய்விட்டான்” என்றேன். அவருக்குப் பயங்கர கோபம். உடனே என்னைக் கடிந்துகொள்ள அவருக்குத் துணை நின்றது எனது நாத்திகம்தான். வீட்டுக்கு நடுவே நின்றுகொண்டு, “ஒரு பயலும் இங்க சாமி கும்பிடறதில்ல… ஒரு பூஜை, புனஸ்காரம் எதுவும் இங்க கிடையாது… அதான் செருப்பு போச்சு… கொஞ்சமாவது பயபக்தி இருந்தா இப்படியெல்லாம் நடக் குமா?” என்றார் உரத்த குரலில்.

“நானாவது கோயிலுக்குப் போய் மன்னிப்பு கேட்டுட்டு வர்றேன். இன்னும் என்ன எல்லாம் நடக்குமோ?” என்றபடி இன்னொரு வாசல் பக்கம் சென்றார். தனது செருப்பை எடுத்துப் போட்டுக் கொள்ளச் சென்றவர், நெருப்பை மிதித்தவர் மாதிரி துடித்தார்.

அவரது ஜோடி செருப்புக்களும் சேர்ந்தே காணாமல் போயிருந்தன.

source:::வேணுகோபாலன் in THE HINDU …TAMIL..

BottomLine :::

My Personal Experience ….சென்ற மாதம் ஒரு நாள் மாலை நான் வீட்டுக்கு அருகில் உள்ள கோவிலுக்கு சென்றேன் …காலில் புத்தம் புதிய செருப்பு !!! பத்திரமான இடம் பார்த்து என் செருப்பை விட்டு விட்டு, கோவிலுக்கு உள்ளே சென்றேன் .

ஸ்வாமி தரிசனம் முடிந்து வெளியே வந்தேன். என் செருப்பு நான் வைத்த இடத்தில் பத்திரமாக அப்படியே இருந்தது.

மிக்க மகிழ்ச்சியுடன் அதை அணிந்து கொண்டு வீடு வந்தேன் …

மறுநாள் காலை , என் துணைவியார் கேட்டார் ” என்ன இது உங்க செருப்பு ஒரே வாரத்தில் இவ்வளவு பழசு ஆகி விட்டதே ” ?!

பிறகுதான் நான் கவனித்தேன் , என் செருப்பின் நிலைமையை !!! . ஒரு வாரம் “இளமையான” என் செருப்புக்கு பதிலாக ,

என்னிடம் கோவிலில் இருந்து வந்து சேர்ந்த செருப்பின் வயது நிச்சயம் 2 வருடத்துக்கு மேலே இருக்கும். !!! இது ஒரு புரியாத

புதிர் எனக்கு !!!

ஒன்று மட்டும் நிச்சயம் !!!…. நான் கோவிலுக்குள் இருந்த நேரம் , ஒரு அரை மணி நேரம் மட்டுமே … 2 ஆண்டு அல்ல !!!

நடராஜன்

Message For the Day…” Your Heart is an Ocean Of Milk…”

When the Asuras and Devas (Demons and Gods) churned the Ocean of Milk (Ksheera Sagara), first came poison. They did not give up the churning till they got the Amrit (nectar of immortality). Regard your heart as the Ocean of Milk and the intellect as the Mandhara mountain. Using your yearnings as the churning ropes, carry on the churning by reciting the Lord’s name. Do not mind if the first thing to come out is poison. Go on churning till you get the nectar of divine bliss. When you study the Bhagavad Gita, you will note that it begins with Arjuna Vishaadha Yoga, the (the despondency of Arjuna). But ultimately, Arjuna experiences the Vishvaruupa, the Cosmic Form of the Lord.

 

Sathya Sai Baba

Message For the Day…” Which is the Right Path … ” ?

One’s selfish needs have to be sacrificed. There must be constant efforts to do good to others. Your desire should be to establish the welfare of the world. With all these feelings at heart, you must meditate on the Lord. This is the right path. If great men and those in authority are thus engaged in the service of humanity and in promoting the welfare of the world, the thieves of passion, hatred, pride, jealousy, envy and conceit will not invade the minds of common people; the values such as Right Conduct, Mercy, Truth, Love, Knowledge and Wisdom will be safe from harm. The six internal foes called the Arishadvargas can be uprooted only by the teachings of great souls, love for God, knowledge of the Lord and the company of the holy and the great.

 

Sai

“இதை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் பூஜை செய். …”

மஹாபெரியவாளிடம் இருந்து சந்தனத்தால் உருவாக்கப்பட்ட காமாட்சி, ஒரு தேங்காய், அவரது பாதுகை ஆகியவற்றைப் பெற்று இருக்கிறார் ஒரு பரம பக்தர். அவர் பெயர் சீனிவாசன்.

தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் அருகே உள்ளது உத்தமதானபுரம். அங்கே வசித்தவர் கார்வார் வெங்கட்ராமன். 1901-ஆம் வருடத்திலிருந்து அவர் காஞ்சி மடத்தின் ஊழியராகப் பணி புரிந்தவர். அவர் மடத்தில் சேர்ந்த பல வருடங்கள் கழித்து தான், மஹா பெரியவா பீடாதிபதி பட்டமேற்றார். அவருக்கு முன்பு பீடாதிபதிகளாக இருந்தவர்கள் எப்படி இருந்தார்கள், ஆசார நியமங்களை எந்த விதத்தில் செய்வார்கள் என்றெல்லாம் வெங்கட்ராமனிடம் மஹா பெரியவா விவரமாகக் கேட்டுத் தெரிந்து கொள்வார்களாம். காரணம், பெரியவாளுக்கு முன்பு இருந்த பீடாதிபதிகள் காலத்தில் இவர் பணியாற்றி இருக்கிறார் என்பதே.

அந்த கார்வார் வெங்கட்ராமனின் பிள்ளை தான் சீனிவாசன். இவருக்கு படிப்பு அதிகமில்லை. நாற்பத்தியாறு வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் இவரது வாழ்க்கையின் திசையையே மாற்றி விட்டது எனலாம்.

மஹா பெரியவா சென்னை சம்ஸ்கிருதக் கல்லூரியில் தங்கியிருந்த நேரம். உத்தமதானபுரத்தில் இருந்த சீனுவிற்கு,, ஒரு நாள் தூக்கத்தில் திடீரென விழிப்பு ஏற்பட்டது. ஒரு தெய்வீக அருள் நிலையில் காமாட்சியம்மன் மீது ஆயிரம் அகவல்களை இயற்றினார்.

இப்போது அந்த தினத்தை நினைத்தாலும் தன் உடல் சிலிர்க்கிறது என்கிறார். அந்த பிரமிப்பு நீங்காமல், இதைக் குறித்து அவர் தந்தைக்கும் கடிதம் எழுத, அதை மஹாபெரியவாவிடம் காட்டி இருக்கிறார். இதைத் தொடர்ந்து சென்னைக்கு உடனே வரும்படி மடத்து மானேஜர் சீனுவிற்குக் கடிதம் எழுதியனுப்பினார். சீனிவாசன் மஹானின் கட்டளையாக ஏற்று, சென்னைக்குச் சென்றபோது கி.வா.ஜகந்நாதன், சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் உட்பட பல மேதைகள் பரமாச்சாரியாரின் தரிசனத்திற்காகக் காத்திருந்தனர்.

தரிசனத்திற்கு சீனிவாசன் முறைவந்த போது ‘படி’ என்று மட்டும் சுருக்கமாகச் சொன்னர் மஹான். காமாட்சி ஸ்துதியை அவரும் படித்தார். கேட்டார். அடுத்த நாள் சீனுவை தன் அறைக்கு வருமாறு சொன்னார். அங்கே போன சீனிவாசன், “நான் எந்த ஞானமும் இல்லாதவன். என்னை காமாட்சியம்மன் ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்” என்றார்.

மஹான் முகத்தில் புன்னகையைத் தேக்கியவாறு ஒரு மூங்கில் கட்டிலில் இருந்த சந்தனமேருவையும் (சிறுமலை போல் இடித்து வைக்கப்பட்ட சந்தனம்) ஸ்ரீபாதுகைகளையும் ஒரு தேங்காயையும் கட்டிக் கொண்டு வந்து “இதை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் பூஜை செய். உனது பூஜை உலக நன்மையையே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். எழுதுவதற்காகவே பிறந்தவன் நீ” என்றார்.
சீனிவாசன் உடல் சிலிர்க்க, படபடப்பு அதிகமாகியது.

ஊர் திரும்பிய சீனிவாசன் அவர் கொடுத்த தெய்வத் திருஉருவங்களுக்கு தினசரி பூஜை செய்ய ஆரம்பித்தார். காமாட்சி அருளால் தெய்வங்கள் மீது பாமாலை, அந்தாதி, சதகம் ஸ்லோகம் என்று எழுதிக் குவித்தார்.

”பாரா ஒவ்வொன்றையும் எழுதி முடித்தவுடன் பரமாச்சாரியாரிடம் கொண்டு போய் காட்ட, அவர் படிக்கச் சொல்லிக் கேட்க, அவற்றை மஹான் ரசிப்பதே அழகு” என்கிறார் சீனு.

22.02.61 அன்று மஹான், சீனிவாசனின் வீட்டிற்கே எழுந்தருளி தாம் அளித்த சந்தன காமாட்சி அருகில் அமர்ந்து பூஜை செய்தார். கிடைத்தற்கரிய பெரும் பாக்யம் அல்லவா இது?

1987-வருடத்திலிருந்து சென்னை வண்டலூரில் சீனுவாசன் குடும்பத்துடன் தங்கி தெய்வங்களை பூஜித்து வருகிறார். பரமாச்சாரியார் கூறியதன் பேரில் உத்தமதானபுரத்தில் இருந்த அவர் வீட்டிற்கு இசைப் பேரரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி விஜயம் செய்திருக்கிறார். பூஜை அறையில் அமர்ந்து சில பாடல்களையும் பாடினாராம் இசையரசி.

இன்னொரு அதிசய நிகழ்ச்சி.

ஒருமுறை காஞ்சியருகே இருக்கும் சர்வதீர்த்தக்கரை என்ற இடத்தில் பரமாச்சாரியார் ஒற்றை ஆடையை உடலில் அணிந்து ஒட்டிய தேகத்துடன், சீனிவாசன் வாயிலிருந்து வெளிப்பட்ட நாமாக்களை கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று சீனுவின் கண்ணெதிரே ஒரு அதிசய நிகழ்ச்சி. மஹானின் உடல் முழுவதும் புஷ்பத்தால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தலையில் மலர்க்கிரீடம், அவர் வீற்றிருந்த திண்டு கூட மலர்களாகவே காட்சியளித்தது. உத்தமதானபுரத்தில் காமாட்சியம்மனைத் குறித்து சீனு விவரித்த ஒரு கோலத்தில் பரமாச்சாரியார் காட்சி தந்தார். ‘என்ன பரவசமான காட்சி’ என்று சீனு பரவசமடைகிறார்.

சீனிவாசன் நடத்தும் பூஜைகளில் இனவேறுபாடு இன்றி எல்லோரும் கலந்து கொண்டு அருள்பெற வேண்டுமென உத்தரவாகியதாம். குறி சொல்வது, சோதிடம் போன்ற எதிலும் ஈடுபடாமல் உலக நன்மைக்காக மட்டும் பூஜை செய்கிறார் பக்தர் சீனிவாசன். இந்தக் கலியுகத்திலும் கடவுளின் அருள் குறைவின்றிக் கிடைக்கும் என்பதற்கு உதாரணமாகக் காட்சியளிக்கின்றன அவர் வீட்டில் இருக்கும் தேங்காய் (இதில் இன்னமும் இளநீர் இருக்கிறது) சந்தன காமாட்சி, ஸ்ரீபாதுகைகள் ஆகியவை.

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!!

source:::: http://www.periva.proboards.com

Natarajan

Message For the Day…” Virtues are the Backbones of Life …”

In the world today, knowledge falls into three categories. (1) In terms of daily life, there is factual knowledge based on perception. To treat facts as truth and fiction as untruth is practical knowledge. (2) In the second category are those who regard the phenomenal world as real and treat all that cannot be seen or heard as unreal or non-existent. They regard Nature as real and God as non-existent. (3) The third category consists of those who make no distinction between one thing and another and hold the view that the whole universe is a projection of the Divine and is permeated by the Divine. This is spiritual knowledge. Doubtless, knowledge of the phenomenal world is necessary. But one should go beyond it to know the Eternal and Unchanging Reality. Education is not the be-all and end-all of life; tt is only a part of it. Virtues are the backbone of life and spiritual path is the only means of cultivating it.

 

Sathya Sai Baba

“ஓரிக்கையில் இருக்கும் பெரியவா பாதுகை …”

ஒருநாள் மடத்தில் எக்கச்சக்க கூட்டம்! பெரியவாளுடைய பரம பக்தரான ராமலிங்க பட் வரிசையில் நின்று கொண்டிருந்தார். பக்கத்தில் வேதமூர்த்தி என்ற பக்தரும் இருந்தார். ராமலிங்க பட்டின் கைகளில் பட்டுத் துணியால் போர்த்திய ஒரு பெரிய தாம்பாளம் எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்தது. பட் மெதுவாக வேதமூர்த்தியிடம்,

“எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?”

“சொல்லுங்கோ பட்…. என்ன வேணும்?”

“கையில வெச்சிண்டு இருக்கறதை பெரியவாட்ட குடுத்து ஆசீர்வாதம் பண்ணி வாங்கணும்….ரொம்ப கூட்டமா இருக்கு…ஒங்களுக்கு யாரையாவது தெரியுமா? இதை பெரியவாட்ட குடுக்கறதுக்கு….”

“ரொம்ப கூட்டந்தான்…பாக்கலாம் யாராவது தெரிஞ்சவா இருக்காளான்னு…சரி, பட்டுத்துணி போத்தி என்ன கொண்டு வந்திருக்கேள் ?…”

“இது…பெரியவாளுக்கு பாதுகைகள் ரெண்டு ஜோடி பண்ணிண்டு வந்திருக்கேன். ஓரிக்கையில பெரியவாளுக்கு கோவில் கட்டப்போறா இல்லியா..அதுக்கு அவரோட பாதங்கள்ள போட்டுண்ட பாதுகையை அங்கே ப்ரதிஷ்டைக்கு குடுக்கலாம்ன்னு கொண்டு வந்திருக்கேன். இன்னொரு ஜோடி எங்காத்துல வெச்சு பூஜை பண்ணறதுக்கு.”

” ஒரிக்கைல கோவில் டிரஸ்டிகிட்ட பர்மிஷன் வாங்கிண்டுதானே இந்த பாதுகைகள பண்ணிண்டு வந்தேள்?..” வேதமூர்த்தி அனாயாசமாக ஒரு குண்டைத் தூக்கி போட்டார்.

“பர்மிஷனா!…எனக்கு அதுமாதிரி யார்கிட்டயும் கேக்கலியே! அப்டி கேக்கணும்னு என் மனசுக்கு தோணவே இல்லியே!..” கலவரமடைந்தார் பட். “என்னவோ என்னோட மனசுக்கு பட்டதை செஞ்சிருக்கேன். எங்கம்மா சமீபத்ல சுமங்கலியா காலமானா….அவாளோட சொத்தா கடைசி வரைக்கும் போட்டுண்டு இருந்த எட்டு பவுன் நகைகளையும், இந்த பாதுகையோட பெரியவா கைங்கர்யத்துக்கு சமர்ப்பிக்கணும்னு ரொம்ப ஆசையா இருந்தது.. மைசூர்ல நல்ல ஒசந்த சந்தன கட்டை வாங்கி, நல்ல ஆசாரிகிட்ட குடுத்து, ரொம்ப சுத்தபத்தமா ரெண்டு செட் பாதுகையும் பண்ணிண்டு வந்திருக்கேன்……”

“ஸ்வாமி……நீங்க சொல்றது ரொம்ப நல்ல கார்யம். ஆனா, ஒருவேளை மடத்ல இதை ஏத்துக்கலேன்னா?…” வேதமூர்த்தி கேட்ட க்ஷணமே நொறுங்கிப் போனார் பட். …”பகவானே! ஒருவேளை பர்மிஷன் வாங்காம பண்ணிண்டு வந்தது தப்போ?…” உண்மையில் யாருமே இல்லாத போது பெரியவாளிடம் பாதுகைகளை குடுத்து ஆசீர்வாதம் வாங்கலாம் என்ற எண்ணத்தோடுதான் வந்தார். என்னவோ, ஒரு விசேஷமோ, லீவு நாளோ இல்லாதபோதும் அன்று மடத்தில் சொல்லிமுடியாத கூட்டம்!

வேதமூர்த்தியின் முகம் திடீரென்று ப்ரகாசமானது! “சித்த இருங்கோ பட்! அதோ பெரியவாகிட்ட சந்த்ரான்னு ஒர்த்தர் கைங்கர்யம் பண்றார். அவரைக் கூப்ட்டு விஷயத்தை சொல்லுவோம். அப்புறம் பெரியவா சித்தம்.” என்று சொல்லிவிட்டு, கியூவிலிருந்து அடிக்கடி சந்த்ரா தன்னை பார்க்கும்படி வெளியே எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருந்தார். பெரியவாளோ அசைவற்று அசலமான ப்ரம்மமாக அமர்ந்திருந்தார். உடல்நிலை அவ்வளவு சரியாக இல்லாத நேரம். பார்வையும் குறைந்திருந்தது. யாராவது எதிரில் வந்து இன்னார் என்று சொல்லிக்கொண்டு நின்றால், கண்களை சுருக்கிக்கொண்டு பார்ப்பார். காதும் சரியாக கேட்கவில்லை. சந்த்ராதான் தன்னுடைய வெண்கலக் குரலில் பெரியவாளிடம் யார் வந்திருக்கிறார்கள் என்பதை சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய செயல் எல்லாம் டமார், டுமீர்தான்! அவரிடம் யாரும் ரகசியமே சொல்லிவிட முடியாது! அவருக்கும் மெதுவாகவே பேச வராது!

இதோ! சந்த்ரா வேதமூர்த்தியைப் பார்த்துவிட்டார். “கூட்டமோ திமிலோகப்படறது! இதுல பட் கொண்டுவந்திருக்கற பாதுகைக்கு விளக்கம் குடுத்து சந்திராவுக்கு புரிய வைத்துவிடுவோம்…அவர் பெரியவாட்ட சொல்லிட்டாப் போறும்”….என்று எண்ணி வேதமூர்த்தி சந்திராவை அருகில் வர சைகை பண்ணினார்.

“சொல்லுங்கோ மாமா” என்ற சந்திராவிடம் சுருக்கமாக விஷயத்தை சொன்னார் வேதமூர்த்தி.

“இதானா விஷயம்! குடுங்கோ…மாமா அந்த பாதுகைகளை!” என்று பாதுகைகளையும், எட்டு பவுன் நகைகளையும் வாங்கிக்கொண்டு தன் தலைமீது வைத்துக்கொண்டு பெரியவாளிடம் போய்விட்டார். கல்யாணம், வேலை, வ்யாதி என்று பெரியவா காதில் போட்டுக்கொண்டே, வந்தவர்களுக்கு ப்ரசாதத்தை குடுத்துக்கொண்டே சரியான க்ஷணத்தை எதிர்பார்த்தார் சந்த்ரா. ஒரு க்ஷணம் அடுத்து வந்த கூட்டத்தை காத்திருக்கும்படி சொல்லிவிட்டு, பெரியவாளிடம் விஷயத்தை சொன்னார். பட்டும், வேதமூர்தியும் மூச்சைப் பிடித்துக்கொண்டு பெரியவாளின் திருமுகத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர். அவர் முகத்தில் ஒரு புன்னகை! உடனே சந்த்ரா எல்லாருக்குமாக ஒரு செய்தியை சொல்ல ஆரம்பித்தார்…

“கொஞ்சம் எல்லாரும் அமைதியா இருங்கோ….பெரியவா கார்யமா, அவாளோட அனுக்ரகத்தோட ஒரு சேதி சொல்லப்போறேன்..மஹா பெரியவாளுக்கு ஒரிக்கைல கோவில் கட்டறதுக்கு ப்ரதோஷம் மாமாவும் இன்னும் சில பக்தாளும் முனைப்பா இருக்கா..அந்த கோவில்ல ப்ரதிஷ்டை பண்ணனும்னு ஆசைப்பட்டு ஒரு பக்தர் ஒரு ஜோடி பாதுகைகளை கொண்டு வந்திருக்கார். அவர் பேரு ராமலிங்க பட். அவா அம்மா காலமாற வரைக்கும் போட்டுண்டு இருந்த எட்டு பவுன் செயினையும் கோவில் பணிக்காக குடுத்துறதா இருக்கார்…இது எல்லாத்தையும் பெரியவாளோட சந்நிதியில சமர்ப்பிக்கறேன்…” என்று சொல்லிவிட்டு பாதுகைகளை பெரியவா முன்னிலையில் வைத்தார். நகையை கங்கா ஜலத்தில் அலம்பிவிட்டு ஒரு மூங்கில்தட்டில் வைத்தார். பெரியவா தன் பார்வையால் கூட்டத்தில் துழாவி, ராமலிங்க பட்டை முன்னால் வருமாறு அழைத்தார்.

அவருடைய தாயார் நகையை தன் வயிற்றின் மேல் வைத்துக்கொண்டார். திருப்பாதுகைகளை தன் திருவடிகளில் அணிந்து கொண்டார். அதை குனிந்து பார்த்துவிட்டு குழந்தையைப் போல் சந்தோஷப்பட்டுக்கொண்டார். பிறகு, இடது காலைத்தூக்கி வலது தொடையின் மேல் போட்டுக்கொண்டும், மறுபடி வலது காலைத்தூக்கி இடது தொடையில் போட்டுக்கொண்டும் நடராஜரை போல் எல்லாருக்கும் காக்ஷி குடுத்தார். அவர் முகத்திலோ ஒரே குஷி! இப்படி நான்கு முறை கால்களை மாறி மாறிப்போட்டு ஏக அனுக்ரஹம்! உடல்நிலை சரியில்லாதிருந்த பெரியவா திடீரென்று ஒரு சின்ன குழந்தையின் துள்ளலோடு பாதுகையை போட்டுக்கொண்டு கால் மாற்றி மாற்றி குடுத்த தர்சனம் பக்தர்களிடையே பரவசத்தை உண்டு பண்ணியது. எங்கும் “ஹர ஹர சங்கர; ஜய ஜய சங்கர” கோஷம் !!

இரண்டாவது செட் பாதுகைகளை தன் பாதங்களில் அணிந்து கொண்டு பின்பு கழற்றி விட்டார். நான்கு முறை போட்டுக்கொண்ட பாதுகைகள்தான் இப்போது ஓரிக்கையில் ப்ரதிஷ்டையாகி இருக்கிறது.

ராமலிங்க பட் பெரியவாளின் இந்த அபரிமிதமான ப்ரேமையில் திக்கு முக்காடித்தான் போனார். இப்போது இந்த பாதுகையை ப்ரதோஷம் மாமாவிடம் முதலில் ஒப்படைக்கவேண்டும்.ஸ்ரீமடத்திலிருந்து ஒரு பக்தர் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக நேரே ப்ரதோஷம் மாமாவிடம் போய் பாதுகை விஷயத்தை சொல்லி, அப்பாதுகைகள் அவரைத் தேடி வந்துகொண்டிருப்பதையும் கூறினார். அவர் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. உடனே வாசலில் மெழுகி கோலமிட்டு, பூஜையறையில் விளக்கேற்றி, வாசலில் பூர்ணகும்ப மரியாதையோடு தயாரானார் பெரியவாளை [பாதுகையை] வரவேற்க!

மஹா பக்தர்கள் கூடியதால் பாதுகைக்கு கண்ணீரால் அபிஷேகம் ஆனது. இன்றும் ஓரிக்கையில் பெரியவா அப்பாதுகை மூலமாக அனுக்ரஹம் செய்து கொண்டிருக்கிறார். எப்படி சிதம்பரம் என்றால் நந்தனாரோ, ராமன் என்றால் ஆஞ்சனேயஸ்வாமியோ, குருவாயூரப்பன் என்றால் பூந்தானமோ, அப்படி பெரியவா என்றால் ப்ரதோஷம் மாமா நம் நினைவிற்கு வருகிறார்.

Jaya Jaya Sankara Hara Hara Sankara.

SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM

source::::www.periva.proboards.com

natarajan

Message For the Day…” Don’t Search Peace Elsewhere…It is Inside Your Heart …”

You cannot find peace outside. It is within your heart, so search within. The heart is always filled with peace, love and bliss. It is the basis of all the sacred qualities, such as compassion, love, tolerance etc. All that emanates from your heart is sacred. It is attachment to the body that is the cause of all the evil qualities, such as desire, anger, greed, pride, and jealousy. People undertake many spiritual practices in an attempt to sanctify their lives but, without purity of heart, these will be of no avail. First purify your heart. Do not give any scope for wicked feelings such as desire, anger and greed. In the spiritual path, these three are the worst enemies.

 

Message For the Day…” Which is Your True Freedom…”

Youngsters feel that they need more freedom, and they dislike sense control. They think that they should be able to go where they like and live as they please, without any restrictions. Birds and animals enjoy such freedom. There is no rule whatsoever for monkeys and dogs. They wander where they want and do what they please whenever they wish. What is the specialty of human beings? A human being is one who understands what ‘Sveccha’ truly means (generally translated as ‘One’s will’). Sva (Self) + Ichcha (Desires or thoughts) = Sveccha. Living with thoughts relating to the Divine Self (Atma) is Sweccha. Following the demands of the body is not Sweccha. After discriminating good and bad, and right and wrong, you must exercise control over the body, observe the thoughts entertained by the mind and follow that which gives satisfaction to your Divine Nature. That is true freedom.

 

Sathya Sai Baba

” இன்று தத்தாத்ரேயா ஜெயந்தி … ”

 

 

 

Temple images

மனிதன் இயற்கையை மதிக்கத் தவறியதால் தான், இன்று, மழை பெய்வது அரிதாகி விட்டது. ஆனால், அந்தக் காலத்தில் அப்படி இல்லை. புழு, பூச்சியைக் கூட தன் குருவாக நினைத்தான் மனிதன். கடவுளே மானிடப் பிறப்பெடுத்து, இயற்கையை குருவாக ஏற்று, அதனிடமிருந்து பாடம் கற்றுக்கொண்ட கதை தெரியுமா உங்களுக்கு?

அத்திரி முனிவரின் மனைவி அனுசூயா, கணவனின் மனம் அறிந்து நடக்கும் பதிவிரதை, கணவனிடம் மிகுந்த பக்தி கொண்டவள். இவள், மும்மூர்த்திகளின் தரிசனம் வேண்டி, தவமிருந்தாள். இதையறிந்த மும்மூர்த்திகளும் அவள் முன், துறவிகள் வடிவில் வந்தனர். அவளது பெருமையை உலகறியச் செய்வதற்காக, தங்களுக்கு நிர்வாணக் கோலத்தில் பிச்சையிடும்படி வேண்டினர். கற்புத்தெய்வமான அனுசூயா, தன் கணவர் அத்திரி மகரிஷியை மனதில் நினைத்து, அவர்கள் மீது, அவர் பாதத்தைக் கழுவிய தீர்த்தத்தை தெளித்தாள். உடனே, மும்மூர்த்திகளும், மூன்று குழந்தைகளாயினர். அந்தக் குழந்தைகளை அத்திரி மகரிஷி ஒன்று சேர்த்து, தத்தாத்ரேயன் என்று, பெயரிட்டு வளர்த்து வந்தார்.

ஒரு நாள், காட்டிற்கு வேட்டையாட வந்த, யது என்ற மன்னன், காட்டில் தத்தாத்ரேயர் ஆனந்தமாக இருந்ததைக் கண்டு, ஐயனே… உலகில் உள்ள ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கவலையுடன் வாழுந்து வரும் நிலையில், நீங்களோ வெகு ஆனந்தமாக இருக்கிறீர்களே… உங்களுக்கு இத்தகைய ஆனந்த மார்க்கத்தை கற்றுக் கொடுத்த குரு யார், எனக்கும் கூறுங்கள்… என்று, கேட்டான். எனக்கு ஒன்றல்ல பல குருமார்கள் இருக்கின்றனர். அதில், இந்த பூமிதான் முதல் குரு; இதனிடமிருந்து பொறுமையையும், பிறருக்கு நன்மை செய்வதையும் கற்றேன். தண்ணீரிடமிருந்து, சுத்தத்தைக் கற்றேன். எல்லாரிடமும் பழகினாலும், யாரிடமும் பற்று வைக்காத குணத்தை, காற்றிடம் படித்தேன்.  பரந்து விரிந்திருந்தாலும், எதனிடமும் தொடர்பு இல்லாதது வானம். அந்த தொடர்பற்ற நிலையை ஆகாயமே எனக்கு தெரிவித்தது. ஒரே சூரியன் என்றாலும், எல்லா குடங்களின் நீரிலும் பிரதிபலிப்பது போல, பல சரீரங்களை ஒரே ஆத்மா எடுப்பதைப் பார்த்தேன். வேடனின் வலையில் சிக்கிய புறாக்களைப் பார்த்து, தானும் சிக்கிய தாய் புறாவைப் பார்த்து, பாசபந்தமே துன்பத்திற்கு காரணம் என, உணர்ந்தேன்.

உணவுக்காக தூண்டிலில் சிக்கிய மீனைப் பார்த்து, ஆசையே சுதந்திரத்தை இழப்பதற்கு காரணம் என்பதை, அறிந்தேன். தேனீக்கள் சேர்த்த தேனை, யாரோ ஒருவன் கொண்டு போனதைப் பார்த்து, பொருளை தானம் செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தேன். உணவுக்காக அங்கும் இங்கும் அலையாமல் இருந்த இடத்திலிருந்த படியே கிடைக்கும் உணவைக் கொண்டு திருப்தியடையும் மலைப்பாம்பைப் போல், நானும் திருப்திப்பட வேண்டும் என, உணர்ந்தேன்… என்று, அடுக்கிக் கொண்டே போனார். பார்த்தீர்களா… இயற்கை நமக்கு நன்மைகளை மட்டுமல்ல, உலகவியல் வாழ்வுக்கும் ஆசானாக இருக்கிறது. இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் கருத்தூன்றி பார்ப்பதுடன், பாதுகாக்கவும் செய்யுங்கள். தத்தாத்ரேயர் ஜெயந்தி, வைகாசி தசமியன்று நடக்கும். கோவை மாவட்டம் குமாரலிங்கம் கிராமத்தில், தத்தாத்ரேயருக்கு கோவில் உள்ளது. பழநியிலிருந்து, 21 கி.மீ., உடுமலையிலிருந்து, 18 கி.மீ., தூரத்தில் இவ்வூர் உள்ளது.

source::::DINAMALAR…TAMIL DAILY.

Natarajan

 

Message For the Day…” True Knowledge is to Gain Control Over Senses… “

All human activities must be undertaken with the sole aim of pleasing God. To attain such exalted heights, you must acquire true spiritual knowledge. Spiritual wisdom aids in subduing the senses. Ravana learnt 64 disciplines of education and was an expert in many fields. However he has been labeled foolish and ignorant. Why? He was a slave to the senses. Rama, though learnt only 32 disciplines, subdued His senses and hence is exalted even today. Learning from this, all educated people must realize that a truly knowledgeable person is one who gained control over their senses. People who accomplished this significant inner victory are excellent examples portraying clearly the element of devotion.

Sathya Sai Baba