Message For The Day…” Purify Your Mind and Walk Along the Righteous Path …”

In the Prahaladha story, consider the emergence of the Lord from a pillar. The significance of the destruction of the pillar is a prelude to the manifestation of the Lord. The illusion relating to the body must be destroyed for the Divine to manifest Himself. The body is no doubt essential up to a point; it is for the performance of right actions and to discover the secret underlying all action. Do not give room for the waywardness of the mind. Purify your mind and direct it towards the righteous path. In the spiritual field there is no royal highway or shortcuts. The path is narrow and straight, and the goal is infinitely precious. Crowds swarm a fish market but only a few go to a diamonds shop. The road to God is for the genuine spiritual aspirants.

 

Sathya Sai Baba

“உன்னால் முடிந்தது ஓரளவே …எல்லாம் அவன் செயல் ” ….

கண்ணதாசனின் கவிதைகளில் ஒன்று

தலைப்பு : சம நோக்கு கவிதைkannadasan

காக்கை குருவியைப்போல்
கவலையின்றி நீயிருந்தால்
யாக்கை கொடுத்தவனை
யார்நினைப்பார் இவ்வுலகில்
சட்டியிலே வேகின்ற
சத்தெல்லாம் சரக்கானால்
மட்டின்றிப் படித்துவந்த
மருத்துவர்க்கு வேலையென்ன
கடலருகே வீற்றிருந்தும்
கடுந்தாகம் வரும்பொழுதே
கடவுளெனும் ஒருவனது
கைசரக்கு நினைவுவரும்
இன்னதுதான் இப்படித்தான்
என்பதெல்லாம் பொய்க்கணக்கு
இறைவனிடம் உள்ளதடா
எப்போதும் உன்வழக்கு
எல்லாம் அவன்செயலே
என்பதற்கு என்ன பொருள்
உன்னால் முடிந்ததெல்லாம்
ஓரளவே என்று பொருள் !!!

source:::: Dinamani.blogspot.com

natarajan

” குலதெய்வம் பூஜை சரியா செய்கிறாயா ? “….

பெரியவர் ஊர் ஊராகச் சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த ஒருநாள் அது. அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, ஒரு விவசாயி பெரியவரை மிகவும் பிரயாசைப்பட்டு வந்து சந்தித்தார். அவரிடம் துளியும் உற்சாகமில்லை. முகமும் இருளடைந்து போயிருந்தது. வாயைத் திறந்து தன் துன்பங்களைக் கூற அவசியமே இல்லாதபடி, பார்த்த மாத்திரத்தில் அவரின் துன்பம் பெரியவருக்கு விளங்கி விட்டது.

இருந்தும் அந்த விவசாயி,சாமி… ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்கு. பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலா மான்னுகூட தோணுது. ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல போராட்டம் இருக்கும். ஆனா, என் வரைல போராட்டமே வாழ்க்கையா இருக்கு” என்று துயரத்தைச் சொல்லி அழுதார்.

பெரியவர் அவரிடம், குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா?” என்று கேட்டார்.

குலதெய்வமா… அப்படின்னா?” – திருப்பிக் கேட்டார் அவர்.

சரிதான்… உங்க குலதெய்வம் எதுன்னே தெரியாதா?”

ஆமாம் சாமி… வியாபார விஷயமா எங்க முன்னோர்கள் பர்மா போயிட்டாங்க. பல காலம் அங்க இருந்துட்டு திரும்பிவந்த குடும்பம் எங்க குடும்பம். என் பாட்டன்ல ஒருத்தருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால, அவர் பிள்ளைகளும் அவரைப் பார்த்து அப்படியே வந்துட்டாங்க. நாங்கள்ளாம் அந்த வழில வந்தவங்கதான்” என்றார்.

உன் முன்னோர்கள் யாராவது இப்ப உயிரோட இருக்காங்களா?”

ஒருத்தர் கிராமத்துல இருக்கார். என் அப்பா வழி பாட்டனார் அவர்.”

அவர்கிட்ட போய் உங்க குலதெய்வத்தைப் பத்தி கொஞ்சம் கேட்டுண்டு வா.”

ஏன் சாமி… அந்த சாமி எதுன்னு தெரிஞ்சு கும்பிட்டாதான் என் பிரச்னை தீருமா?”

அப்படித்தான் வெச்சுக்கோயேன்…”

என்ன சாமி நீங்க… ஊர்ல எவ்வளவோ கோயில் இருக்கு. அங்க எல்லாமும் சாமிங்கதான் இருக்கு. அப்ப அதுக்கெல்லாம் சக்தி இல்லையா?”

நான் அப்படிச் சொல்லவே இல்லையே!”

அப்ப இந்த சாமில ஒண்ண கும்பிடச் சொல்லாம, குலதெய்வத்த தெரிஞ்சுக்கிட்டு வரச் சொல்றீங்களே!”

காரணமாத்தான் சொல்றேன். ஓட்டைப் பாத்திரத்துல எவ்வளவு தண்ணி பிடிச்சாலும் நிக்காது. நீ, என்ன மாதிரி எதுவும் வேண்டாம்கற சன்னியாசி இல்லை. வாழ்வாங்கு வாழ விரும்பற குடும்பம்தான். எனக்கு, பாத்திரமே கூட தேவையில்லை. ஆனா, உனக்கு பாத்திரம்தான் பிரதான தேவை. பாத்திரம் இருந்தாத் தானே எதையும் அதுல போட்டு வெக்க முடியும்? அப்படிப்பட்ட பாத்திரம் ஓட்டையா இருந்தா, அதுல எதைப் போட்டாலும் அந்த ஓட்டை வழியா வெளிய போகுமா போகாதா?”

அப்ப குலதெய்வம்தான் பாத்திரமா… அது தெரியாததால ஓட்டைப் பாத்திரமாயிடிச்சுங்கறீங்களா?”

நீ, கேள்வி கேட்காம உன் குலதெய்வம் எதுங்கறத தெரிஞ்சு அந்தக் குலதெய்வத்தைத் தேடிப்போய் சாஷ்டாங்கமா உடம்பு தரைலபட நமஸ்காரம் பண்ணிட்டு வா. உனக்கு அப்புறமா விளக்கமா சொல்றேன்” என்று அவரை அனுப்பி வைத்தார்.

அவரும் ஒரு பத்து நாள் கழித்து, சாமி! நீங்க சொன்னதைச் செய்துட்டேன். எங்க குலதெய்வம் பேச்சாயிங்கற ஒரு அம்மன். அதோட கோயில் ஒரு மலை அடிவாரத்துல இடிஞ்சுபோய் கிடந்துச்சு. யாருமே போகாம விட்டதால, கோயிலை புதர் மூடிடுச்சு. நானும் என் மக்களும் போய் புதரை எல்லாம் வெட்டி எறிஞ்சோம். அங்க, ஒரு நடு கல்தான் பேச்சாயி! ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு அதுமேல பால ஊத்தி அபிஷேகம் செஞ்சு, கற்பூரம் காட்டி கும்பிட்டுட்டு வரேன்” என்றார்.

சபாஷ்… அந்தக் கோயிலை நல்லபடியா எடுத்துக்கட்டு. தினசரி அங்க விளக்கு எரியும்படியா பார்த்துக்கோ! உன் கஷ்டங்கள் தானா நீங்கிவிடும். பேச்சாயி பூவும் பொட்டுமா ஜொலிச்சா, உன் குடும்பமும் ஜொலிக்கும்” என்றார் பெரியவர்!

சாமி! நிறைய விளக்கமெல்லாம் சொல்றதா சொன்னீங்களே… எதுவுமே சொல்லலியே?”

அடுத்த வருஷம் இதே தேதிக்கு வா! அப்ப சொல்றேன். நான் சொன்னதை மறந்துடாதே… பேச்சாயியை விட்டுடாதே!”

அவரும் அவ்வாறே செய்தார். ஒரு வருடமும் ஓடியது. அவரும் பெரியவரைக் காண திரும்ப வந்தார். இந்த முறை அவரிடம் ஒரு செல்வச் செழிப்பு தெரிந்தது. பெரியவரை ஒன்றும் சும்மா பார்க்க வரவில்லை. தட்டு நிறைய பூ, பழம் இவற்றோடு கொஞ்சம் பணம் என்று தான் முன்னால் வந்து நின்றார். பெரியவரும் ஏறிட்டார்.

சாமி… நான் இப்ப நல்லா இருக்கேன். பேச்சாயி புண்ணியத்துல பிள்ளைகளும் நல்லா இருக்காங்க. இதுக்கு வழிகாட்டின பெரியசாமி நீங்கதான்! ஆனா, எனக்கு விளக்கத்த மட்டும் இன்னும் தராமலே இருக்கீங்க… இந்த அதிசயம் எப்படி நடந்தது?” – என்று திரும்ப அவர் கேட்டார். பெரியவரும் திருவாய் மலரத் தொடங்கினார். அது…?

ஒரு வருடம் கழித்து திரும்ப வந்த பர்மாக்காரரிடம் ‘குலதெய்வம்’ என்பது குறித்து பெரியவா சொன்னது மிகவும் கவனமாய் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம்தான் குலதெய்வமாகும். முன்னோர்கள் என்றால், நமக்கு முன்பிறந்த எல்லோருமே முன்னோர்கள்தான். ஆனால் இங்கே முன்னோர்கள் என்றால், நாம் நம் தந்தைவழி பாட்டன் பாட்டிமார்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தந்தைவழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம்.

அதுதான் ‘கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.

பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழிப் பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத் துணையாகக் கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலிக் கண்ணி போல அறுபடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

அடுத்து, இவர்கள் அவ்வளவு பேருக்குமே நட்சத்திரம் வேறாக, உடலமைப்பு வேறாக, குணப்பாடுகள் வேறாகவும் இருக்கும். அதுதான் இயற்கையும்கூட! ஆனால், கோத்திர வழி மாறாதபடி இவர்கள் நம் குலதெய்வம் என்னும் தெய்வ சான்னித்தியத்தில் கைகூப்பி நின்றிருப்பார்கள். தலைமுடி கொடுத்திருப்பார்கள். காது குத்துவது போன்ற வழிவழிச் செயல்பாடுகளும் நடந்துமிருக்கும்.

இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. அந்தக் கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம்; போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வக் கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வரிசைத் தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?”

– பெரியவர் சொல்லச் சொல்ல, பர்மாக்காரரிடம் பரவசம்!

அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்குப் பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்கக்கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப் போக்கு உள்ளது?

ஒரு குடும்பத்தைப் பொருத்தவரையில் அந்த இறைசக்தி குலதெய்வமாக, அவர்களுக்கான ஒரு பெயரில் வெளிப்படுகிறது. இப்படிச் சொல்வதுகூட தவறு. வெளிப்பட, வழிவகை செய்யப்பட்டது! அதுவும் யாரால்? நம் முன்னோர்களால்! அவர்கள் யார்? நம்முடைய தொடக்கங்கள்… நாம் யார்? அந்தத் தொடக்கத்தின் தொடர்ச்சி! மொத்தத்தில், நாம் வேறு அவர்கள் வேறு இல்லை.

இந்த வழிவழிப் போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாகப் புண்ணியத்தைக் கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமேகூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த இறைசக்தியைத் தொழும் போது, அவர்களும் பித்ருக்களாக விண்ணில் இருந்து பார்க்கிறார்கள். நாமும் ஆசீர்வதிக்கப்படுகிறோம். இது எத்தனை தூரப் பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்?”

– பெரியவர் விளக்கி முடிக்க, வந்திருந்த கூட்டம் சிலிர்த்துப் போனது.

இந்தக் குலதெய்வ வழிபாட்டில் மிகப்பெரிய நல்ல சமாச்சாரம் ஒன்றும் அடங்கியுள்ளது. சந்தர்ப்ப சூழல்களால் அல்லது பூர்வ கர்மத்தால், அதுவுமல்லாது பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு பக்தி உணர்வு இல்லாமல் போகிறது என்று வையுங்கள். அதாவது, கண்ணுக்குப் புலப்படாத இந்தக் கடவுளை நாம் நம்பத் தயாரில்லை.

நான் ஒன்றும் முட்டாளில்லை என்று அவர் வீராப்பா பேசி, நாத்திகத்தில் நம்பிக்கை ஏற்பட்டு அதிலேயே அவர் போகும் நிலை வந்தாலும் பெரிதாய் தோஷமில்லை. ஏனென்றால், அவர் இவ்வாறு ஒரு நாத்திக நிலைப்பாடு கொள்ளும் முன்பே, இந்தப் பரம்பரை வரிசையில் பெற்றோர்களால் வணங்க வைக்கப்பட்டு ஆசீர்வதிக்கவும் பட்டிருப்பதால், அவர் ஒருநாள் நிச்சயம் மனம் மாறி அருள் தொடர்புக்கு ஆட்படுவார் என்பது தான் இதிலுள்ள மிகச்சிறந்த ஒரு விஷயமாகும்.

இப்படி நம்பிக்கையற்றுப் போனவர், தன் பிள்ளைகளை அழைத்துவர மாட்டாரே! அவர்கள், இதனால் இந்தப் பரம்பரை தொடர்புக்கு ஆட்படாமல் போய் விடுவார்களே என்று ஒரு கேள்வி எழலாம். பெரும்பாலும் ஒரு வழியில், ஒரே கோத்திரத்தில் திருமணங்கள் புரிந்து கொள்ளாமல், முன்னோர் காட்டிய வழியில் போகும் பட்சத்தில், வாழ்வில் நமக்கு பெரிய கஷ்டங்கள் வருவது இல்லை என்பதுதான் இம்மட்டில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். உடம்புக்கு உணவுப் பொருளால் சக்தி ஏற்படுவது போல், மனதுக்கு இறை அருளால் சக்தி ஏற்படுகிறது.

ஒரு குலதெய்வத்தின் பின்னால், இப்படியான பிரத்யேக சிறப்புகள் நிறையவே உள்ளது. குல தெய்வத்தைப் பக்தியோடு கொண்டாடும்போது, பெரிய தோஷங்களுக்கு இடமில்லாமல் போய் நம் வாழ்வும் சிறப்பாகிறது. பர்மாக்காரர் வரையிலும் அதுதான் நிகழ்ந்தது.

எனக்கும் இந்தக் குலதெய்வ விஷயம் மனசுக்குள் பெரும் உற்சாகத்தைத் தந்தது. நான் எங்கள் குலதெய்வக் கோயிலுக்குப் போனபோது என் பார்வையே மாறிப்போனது. அந்தக் கோயிலில் உள்ள ஒவ்வொரு தூண்களையும் தொடும்போது, என் தாத்தன் தொட்ட தூண்.. என் தாத்தன் நின்று மூச்சுவிட்ட இடம்.. என் முப்பாட்டன், அதற்கும் முற்பட்ட பாட்டன் நடந்து திரிந்த தரைப் பரப்பு.. அவர்களைப் பார்த்த பெருமாள் என்னையும் பார்க்கிறார் என்பதா? இல்லை, அவர்கள் பார்த்த பெருமாளை நான் பார்க்கிறேன் என்பதா?
ஒன்று உறுதி. அந்தப் பெருமாளை வணங்கிய வம்சம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதுவே எத்தனை பெரிய அனுக்ரகம்! இந்தக் குலதெய்வ விளக்கமும், இதன் பின்புலமும் எனக்குள் நம் முன்னோர்கள் மேல் பெரும் மரியாதையை ஏற்படுத்திற்று.

Article by ….Indira SoundraRajan
(நன்றி : தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)

source::::www.periva.proboards.com

natarajan
Read more: http://periva.proboards.com/thread/5975/kula-deivam-maha-perivas-explanation#ixzz2oYvdGOVk

Message For the Day…”Knowledge without Right Action is Useless….”

The human body, made up of the five basic elements and endowed with the five sense organs, is not different from the mind. The mind wears the body as a vesture. The mind, for its enjoyment, uses the body as an instrument. It is the cause of all experiences. A body without a mind is as illusory as a crop on a barren field. In ordinary life people regard the body as permanent and for the sake of its pleasures undertake all kinds of efforts. This is a sign of ignorance. A body without the mind is as useless as a school without a teacher and a temple without a deity. The body should be regarded as an instrument for right living. Today, people are developing their intellectual abilities but are using their intelligence for wrong purposes. Knowledge without right action is useless. Mere action without knowledge is foolishness. Hence it is necessary to combine knowledge with cultivation of character.

Sathya Sai Baba

“நாம் சரியாகத்தான் பேசுகிறோமா?”…..!!!

 

ஆம் ஆத்மி கட்சியில் துவங்கி, அம்மியில் சட்னி அரைப்பது வரை அனைத்துக்கும் கருத்துச் சொல்லும் திறமை பலருக்கு இருக்கிறது. நமது பரந்துபட்ட அனுபவங்களுடன் நம் கற்பனைத் திறனும் கை கோக்கும்போது உருவாகிற பேச்சாற்றலுக்கு எல்லையே இல்லை. இடம், பொருள், ஏவல் எல்லாம் பலரது பேச்சுக்கு அப்பாற்பட்டவையாகவே இருந்து வந்திருக்கின்றன. ‘வாய்ச்சொல்லில் வீரரடி’ என்று சொல்லிச் சென்ற பாரதிக்கு மரியாதை செய்யும் நிமித்த மாவது “பயனில சொல்” பலவற்றைப் பேசிக்கொண்டே இருக்க வேண்டாமா?

சரி, அந்தப் பேச்சுத்திறமையின் வீச்சைக் கொஞ்சம் பார்க்கலாமா? தன் கணவரின் அலுவலகத் தோழி குறித்து இயல்பாகச் சொல்லியிருப்பாள் ஒரு தோழி. அதை கேட்டுக்கொண்டு மட்டும் இருந்தால் என்னாவது? நாலைந்து முத்துக்களை உதிர்க்க வேண்டுமே. உடனே, ‘இப்படித்தான் நம்ம தேவியும் வெகுளியா சொன்னா. கடைசியில பார்த்தா அவ வீட்டுக்காரருக்கும் அந்தப் பொண்ணுக்கும் கல்யாணமே ஆகிடுச்சாம். ரெண்டு புள்ளைகளோட இப்ப நிராதரவா இருக்கா’ என்று பொக்ரான் அணுகுண்டை போகிற போக்கில் சிலர் வீசுவார்கள். என்னது… தோழியின் நிம்மதியா? அதைப் பற்றி நமக்கென்ன கவலை?

வினையாகும் விசாரிப்பு

நண்பர் ஒருவர் சர்க்கரையாலோ வேறு சில உடல் சிக்கல்களாலோ மெலிந்திருக்கலாம். வழியில் பார்ப்பவரை வம்படியாக நிறுத்திவைத்து, ‘என்னப்பா இப்படி துரும்பா இளைச்சுட்டே. நல்ல டாக்டரா பாருப்பா. பெரிய வியாதியெல்லாம் இப்படித்தான் ஆரம்பிக்கும்’ என்று சொல்லி அடுத்த நாளே அவருக்கு மருத்துவமனையில் அனுமதி வாங்கிக்கொடுத்து விடுகிறவர்களும் உண்டு. அவருக்கு ஏற்படும் மன உளைச்சல், பேச்சுடன் தரப்படும் இலவச இணைப்பு.

ஒருவர் மருத்துவமனையில் சேர்ந்த பிறகுகூட, அவரை அப்படியே விட்டுவிடலாமா? கையில் நாலு சாத்துக்குடியுடன் சென்று ஆறுதல் சொல்லிவிட்டு, ‘என்னதான் ஆபரேஷன் பண்ணாலும் ஆறு மாசம்தான் தாங்குமாம். எனக்குத் தெரிஞ்ச டாக்டர் சொன்னார்’ என்று அவருக்குத் தேதி குறித்துவிட்டு வருவதில்தான் சிலருக்கு என்னவொரு பேரானந்தம்.

அவதிப்படுத்தும் அனுபவப்பாடம்

கல்லூரிக்குச் செல்லும் மகளை வழியனுப்பிவிட்டு அப்போதுதான் உட்கார்ந்திருப்பார் அந்த அம்மா. அவரை சும்மா இருக்கவிடலாமா? உடனே பிரம்மாஸ்திரத்தை எய்துவிடுவோம். ‘இந்தக் காலத்துல ஆம்பளைப் பசங்களைக்கூட நம்பிடலாம். இந்தப் பொண்ணுங்களைதான் நம்ப முடியறது இல்லை. என் நாத்தனார் பொண்ணும் இப்படித்தான் ஊமைக் கத்தாழை மாதிரி இருப்பா. திடீர்னு போன வாரம் நான் ஒருத்தனைக் காதலிக்கறேன்னு வந்து நிக்கறா. என்ன பண்றது, நீங்களே சொல்லுங்க?’என்று திரியைக் கிள்ளி வைப்போம். மகள் வீட்டுக்கு வந்ததும் அது டைம்பாமாக வெடிக்கலாம்.

திருவாய் மலரும் தருணம்

சாதாரண நாட்களில்தான் என்றில்லை. குடும்பமே கூடியிருக்கும் மகிழ்ச்சியான தருணங்களிலும் பலரும் திருவாய் மலரத் தயங்குவதே இல்லை. குழந்தையைத் தொட்டிலில் போடுகிற நேரமாகப் பார்த்து, ‘ரெண்டாவதும் பொண்ணா போயிடுச்சே. பரவாயில்லை விடுங்க. கடைசி காலத்துல பொண்ணுங்கதான் நம்மளைக் காப்பாத்துவாங்க’ என்று வாழைப்பழத்தில் ஊசியை இறக்குவார்கள். குழந்தையின் தாய் முகத்தில் தோன்றும் வருத்தமும் வேதனையும் அவர்களை ஏன் பாதிக்கப் போகிறது?

உறவினர் வீட்டுத் திருமண விழாவில் முதல் வரிசையில் உட்கார்ந்துகொண்டு, ‘இன்னும் கொஞ்சம் தேடியிருந்தா நல்ல நிறமாவே பொண்ணு கிடைச்சிருக்கும். என்ன பண்றது? எல்லாம் காசு செய்யுற வேலை’என்று தங்கள் வயிற்றெரிச்சலுக்கு வடிகால் தேடிவிட்டு, பந்திக்கு முந்துவார்கள்.

இனிப்பும் கசப்பும்

வேலை கிடைத்த மகிழ்ச்சியைப் பகிர இனிப்புடன் வந்திருப்பான் ஒருவன். நம் அனுபவத்தை எல்லாம் அவன் தலையில் கொட்டுவதுதானே சிலரது சிறப்பியல்பு. ‘வெளுத்தது எல்லாம் பால்னு நினைச்சுடாதப்பா. அந்த சூப்பர்வைசர் ஒரு முசுடு. அந்த சிடுமூஞ்சி மேனேஜர்கிட்டே வேலை பார்க்கறதுக்கு நாலு கழுதையை வாங்கி மேய்க்கலாம். உன் பக்கத்து சீட் ஆள்கிட்டே ரொம்ப கவனமா இருக்கணும்’ என்று அலுவலகத்தில் அவன் யாருடனும் பேசாத அளவுக்குச் செய்துவிடுவதில்தான் எத்தனை மனநிறைவு.

இதோடு முடிந்ததா என்றால் இல்லை. உலகையே ஆளத் துடித்த அலெக்ஸாண்டர் மாதிரி சிலரது பேச்சுத் திறமையும் பரந்துபட்டது. தெரிந்தவர் புதிதாக எதையாவது வாங்கிவிட்டால் போதும். உடனே சிலர் ஸ்க்ரூ டிரைவரும் வாயுமாகக் கிளம்பிவிடுவார்கள். ‘இந்த மாடல் ரொம்பப் பழசாச்சே. திரும்பக் குடுத்தா காயலான் கடைக்காரன்கூட வாங்க மாட்டான். போனவாரம்தான் குறைஞ்ச விலைக்கு புது மாடல், என் மச்சானுக்கு வாங்கிக் கொடுத்தேன். உங்களை நல்லா ஏமாத்திட்டான் சார்’ என்று சொல்லிவிட்டால் போதும். அந்தப் பொருள் பழுதடைந்து, முடங்கும் வரை அவரை நிம்மதியில்லாமல் அலையவிடலாம்.

கருத்து சொல்லும் கலை

இவை மட்டும் இல்லை குழந்தைப் பிறப்பில் தொடங்கி, எரிமேடை வரை எதைப் பற்றியாவது கருத்து சொல்லிச் சொல்லி மாய்ந்து போகிறோம். ஆனால் அவை நேர்மறையானவைதானா? நம் மனதின் ஏமாற்றங்களுக்கு மருந்து போடுவதாக நினைத்துக்கொண்டு அடுத்தவரை காயப்படுத்துகிறோம். அதை நாம் ஒருபோதும் யோசிப்பதே இல்லை. கருத்தை வெளிப்படுத்தும் முனைப்பில் இருக்கிறோம். காரணம் யோசிக்கவும் நேரமின்றி கருத்துச் சொல்லிக் களைத்துப் போகிறோம். அப்படிச் செய்வதன் மூலம் அடுத்தவரையும் கருத்துப் போராளியாக மாற்றி விடுகிறோம். நமக்குத் தெரிந்ததை அடுத்தவருக்குச் சொல்வதில் தவறேதும் இல்லை. ஆனால் எதை, எப்படி, யாரிடம் சொல்கிறோம் என்பதில்தான் நம் பேச்சின் பொருளே அடங்கியிருக்கிறது.

உற்சாகப்படுத்துவது நல்லது

இப்படி எல்லா இடங்களிலும் அடுத்தவரின் கவனத்தைக் கவரவோ, சிதைக்கவோ கருத்துச் சொல்கிற முனைப்பு ஏன் ஏற்படுகிறது? “அடுத்தவர் மத்தியில் தன்னை முன்னிறுத்திக் காட்டத் துடிக்கும் தன்முனைப்புதான் இதற்குக் காரணம்” என்கிறார் மனநல நிபுணர் அசோகன்.

“இப்படி மாற்றுக் கருத்துச் சொல்கிறவர்களில் இரண்டு வகை உண்டு. எதையுமே எதிர்மறையாகப் பார்க்கும் குணம் சிலருக்கு இயல்பிலேயே இருக்கலாம். மற்றொரு வகையினர் தங்கள் வாழ்வின் தோல்விகளின் வெளிப்பாடாக இப்படிப் பேசலாம். தங்களுக்குக் கிடைக்காத கல்வி, படிப்பு, வேலை, வெற்றி இவற்றை எல்லாம் அடுத்தவர் அடையும்போது, அதைப் பார்க்கச் சகிக்காமல் இப்படிப் பேசலாம். தான் மட்டும் தோற்கும்போது, இவர்கள் எப்படி வெற்றி பெறலாம், இவர்களும் தோற்கட்டுமே என்ற நினைப்பு அவர்களை அப்படிப் பேசத் தூண்டும். தோற்றுப்போன மனதின் வெளிப்பாடு என்று சொல்வதைவிட, வாழ்க்கையில் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களின் வெளிப்பாடு என்றும் சொல்லலாம்.

இவர்கள், அடுத்தவரின் உரையாடலைத் தள்ளி நின்று கேட்டாலே, இதுபோல கருத்துக்கள் சொல்வதில் இருந்து விடுபடலாம். தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களைச் சொல்வதன் மூலம் அடுத்தவர் பாதிக்கப்படுவார் என்று தெரிந்தால் அதைத் தவிர்த்துவிடுவது நல்லது. ஒரு எதிர்மறை வார்த்தைக்குப் பதிலாக ஆயிரம் நல்ல வார்த்தைகள் சொல்லி, அடுத்தவருக்கு உற்சாகமூட்டலாம். உறவுநிலைகளிலும், தொடர்புநிலைகளிலும் இணக்கத்துடன் இருந்தாலே போதும். கருத்துச் சொல்லும் மனநிலைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்” என்று இந்த குணத்தைக் கையாளும் வழிமுறைகளைச் சொல்கிறார் அசோகன்.

எதைச் சொல்வதாக இருந்தாலும், கேட்பவர் இடத்தில் நம்மை ஒருமுறை நினைத்துப் பார்த்துவிட்டுத் தொடங்குவது உத்தமம். இடம், பொருள், ஏவல் என்னும் மந்திரத்தை மறந்துவிடக் கூடாது. அப்படியும் உணர்ச்சி வேகத்தில் பேசத் தொடங்கிவிட்டாலும் எதிர்மறைக் கருத்துக்களையாவது தவிர்க்கலாமே. நாலு பேருக்குக் கருத்து சொல்வது மட்டுமல்ல, சொல்லாமல் இருப்பதும் சிலசமயம் நல்லதுதான்.

Message For The Day…”God Is ONE… Do Not Entertain any Difference” …

You should broaden your heart that it may be filled with all-embracing love. Only then can the sense of spiritual oneness of all mankind be experienced. Out of that sense of unity will be born the love of God. This love will generate in the heart pure bliss that is boundless, indescribable and everlasting. For all forms of bliss, love is the source. A heart without love is like a barren land. Foster love in your hearts and redeem your lives. Whatever your scholarship or wealth, they are valueless without love. Sow the seed of love in your hearts and it will grow in due course into a big tree. God is one. Do not entertain any differences of religion, creed or caste. Carry the message of unity to every home. Embodiments of love! Regard Love as your life-breath and as the sole purpose of your existence.

 

Sathya Sai Baba

Message For the Day…” Don’t Search Peace Outside Your Heart “…

Life must be associated with love, not hatred. Some people do not know how to talk courteously. Whatever they say is discourteous and harsh. This is not correct. Every human being should talk sweetly and softly. Your words must be suffused with love. Only then will you experience peace. When your behavior and speech is unpleasant, how can you expect peace to reign in your heart? Peace is not in the outside world; it is very much in your own heart. There are only pieces outside, not peace. You say “I want peace.” Let your behavior be good and courteous. Then, peace will flow from you. Lead a life of mutual love. ‘Love all! Serve all!’ This is My exhortation to you. If only there is love, you can achieve anything. Love is everything. Love is life; life is love.

 

Sathya Sai Baba

Message For the Day…Two Types Of Agony One Suffers Today …

People suffer from two types of agony – the first one can be allayed through others’ intercession and the second can be allayed only by your own effort. For instance, hunger and thirst can be overcome only when you eat or drink. However much others may eat, will it abate even an iota of your hunger? So too, if your wife, mother or son offers to take an injection on your behalf, can your illness be cured? The hunger and illness of your soul is also the same. You must help yourself. The illness you face today is due to some infection. Your illness is caused by the viruses of desire, anger, greed, delusion, pride, jealousy (Kama, Krodha, Lobha, Moha, Madha and Mathsarya). These viruses prevent your Divinity from shining forth; they cause discontent, worry, grief and pain. You can overcome them by manifesting your inner strength. Do not yield, fight them with the faith that you are eternal and unconquerable.

Sathya Sai Baba