கவியரசு கண்ணதாசனின் கவிதை வண்ணம் !!!

திரையிசையில் இலக்கியமணம் தந்த கண்ணதாசன்

    தாடகை வதத்தில் இராமன் தடக்கையின் உரங்கண்டு மேடைக் கல் மாதவளாய் மாறியதில் அவன் காலின் திறங்கண்டு; விசுவாமித்திரன் பாடுகின்றான்  வியப்பின் எல்லையில் நின்று

மைவண்ணத் தரக்கி போரில் மழைவண்ணத் தண்ணலே
கைவண்ணம் அங்குக் கண்டேன் கால் வண்ணம் இங்குக் கண்டேன் என்று!

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் கம்பன் எழுதிய அவ்வண்ணம் கண்டு ருசித்து ரசித்த கண்ணதாசன் பாடல் ஒன்றில் முழுக்க முழுக்க வண்ணங்களாக வாரி இறைத்துவிடுகிறார் .. பி.பி ஸ்ரீனிவாஸ், பி. சுசிலா குரல்களில் கொடிகட்டிப் பறந்த பாடல் அது.

படம் : பாசம். இதோ, கவியரசரின் கன்னித் தமிழ் வரிகள் :
ஆண் :
பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
பெண் :
கண் வண்ணம் அங்கே கண்டேன்
கைவண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
கார் வண்ண கூந்தல் தொட்டு
தேர் வண்ண மேனி தொட்டு
பூவண்ண பாடம் சொல்ல எண்ணம் இல்லையா?

எப்படி, கண்ணதாசனின் கைவண்ணம் ? இல்லை, இல்லை கவிதை வண்ணம்? !!!!!!!!!!

இதைப் போல, வேறு வண்ணங்களிலும் பாடல்கள் அமைத்துள்ளார் கவிஞர். ஆனால் அவை கம்பன் அடியொற்றிப் பிறந்தவை அல்ல. அதனால் அவை இங்கே இடம் பெறவில்லை. இனி, கவிஞர் எழுதிய திரைப் பாட.ல் ஒன்றை மட்டும் குறிப்பிடுகிறேன். அந்தப் பாடலுக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்ததே கம்பன்தான்! வியட்நாம் வீடு என்ற படத்தில் வருகிறது.

‘பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா…’
என்ற பாடல்தான் அது. அதில் இடம் பெறும்
பரமசிவன் சக்தியை ஓர் பாதியில் வைத்தான் அந்த
பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தான்
பால் கடலில் மாதவனே பக்கத்தில் வைத்தான் – ராஜா
பத்மநாபன் ராணியைத் தன் நெஞ்சில் வைத்தான்.

என்ற இந்த வரிகளின் மூலம் கம்பனில்தான் உள்ளது! !!!!   எங்கே?     எந்த இடத்தில்? ….    யார் கூற்றாகக் கம்பன் இதனைக் கூறுகிறான்?…

சாகும் போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் – என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேகவேண்டும்
எனப் பாடிய கண்ணதாசன் சங்க இலக்கியங்கள் முதல் சிற்றிலக்கியங்கள் ஈறாகத்
தமிழ் இலக்கியங்களை ஊன்றிப் படித்திருக்கவேண்டும்.
எனவே, திரைப் பாடல்களில் தமிழ்த் தென்றலைத் தவழவிட்டவர் கண்ணதாசனே. எள்ளளவும் ஐயம் இதில் கொள்ளலாகாது! அதிலும் கம்பன் மேல் தனிக்காதல் கண்ணதாசனுக்கு உண்டு.

கம்பக் கொல்லையை மேம் போக்காக மேய்ந்த மாடு இல்லை அவர். கம்பனில் கருத்தூன்றிப் படித்திருக்கவேண்டும். இல்லை என்றால் மற்றவர் பார்வையில் படாத பாடல் ஒன்றை அவர் பார்த்திருப்பாரா? பார்த்து ரசித்திருப்பாரா? இல்லை அதனைத் தன் பாடலில் தனக்கே உள்ள முறையில் பதிவுதான் செய்திருப்பாரா? அந்தப் பாடலைக் காணுமுன் மறுபடி கண்ணதாசன் வரிகளை வைக்கிறேன்

உங்கள் பார்வைக்கு :
பரமசிவன் சக்தியை ஓர் பாதியில் வைத்தான் அந்த
பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தான்
பால் கடலில் மாதவனே பக்கத்தில் வைத்தான் – ராஜா
பத்மநாபன் ராணியைத் தன் நெஞ்சில் வைத்தான்.

கம்பனின் காவிய வரிகள் இதோ :

பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத்து இருந்த பெண்ணை
ஆகத்தில் ஒருவன் வைத்தான் அந்தணன் நாவில் வைத்தான்
மேகத்தில் பிறந்த மின்னை வென்ற நுண்இடையாளை
மாகத்தோள் வீர பெற்றால் எங்கனம் வைத்து வாழ்தி!

சூர்ப்பணகை – மூக்கறுபட்டவள் ஆர்ப்பரித்து அழுத வண்ணம் அண்ணன் இராவணனிடம் ஓடோடி வருகிறாள். தன் அவல நிலைக்குக் காரணத்தைத் தருகிறாள். அதே சமயம், சீதையின் அழகை எல்லாம் சொல்லிச் சொல்லிக் காட்டுகிறாள் அவனுக்குக் காமத்தீயை மூட்டுகிறாள். அப்போதே அவன் சீதையை அடைந்துவிட்டதாகக் கற்பனை ஊட்டுகிறாள். அவரவரை அவரவர் இடத்தில் வைக்க வேண்டும் என்றொரு சொலவடை தமிழில் உண்டு. அதனைக் கம்பன் இங்கே கையாள்கிறான்.

‘பரமசிவன் பார்வதியைத் தன் இடப்பக்கத்தில் வைத்திருக்கிறான். தாமரை மலரில் இருந்த திருமகளைத் தன் மார்பிலே வைத்திருக்கிறான் பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன். தன் தேவியாகிய கலைமகளைப் பிரமன் தன் நாவிலேயே வைத்திருக்கிறான். மும்மூர்த்திகளும் தத்தம் தேவியரை இப்படித் தங்களிடமே தங்களுக்கு உள்ளேயே வைத்து வாழ்கிறார்கள். மும்மூர்த்திகளுக்கும் மேலாய்க் கீர்த்தி பெற்ற அண்ணனே மின்னலை விட நுண்ணிய இடை கொண்ட செம்பொன் சிலையாம் சீதையை அடையும் போது அவளை எங்கே வைத்து வாழ்வாய் நீ!’ எனச் சூர்ப்பணகை கேட்பதாய் இப்பாடல் வருகிறது.

ஆரண்ய காண்டம் சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலத்தில் இடம்பெறுகிறது. கம்பன் இங்கே தனக்கே உரிய குறும்போடு ‘எங்ஙனம் வைத்து வாழ்தி!’ என்ற வரியில் கீழறைப்பொருளை (உட்பொருள்) வைக்கிறான் : மும்மூர்த்திகளும் தத்தமக்குரிய தேவிகளைத் தம் உடல்களில் வைத்து வாழ்ந்தார்கள் ! இராவணனோ தனக்கு உரிமை இல்லாத சீதையை எங்கனம் எங்கே வைத்து வாழ்வான்? வாழமாட்டான்! இறுதியில் வீழ்வான் என்ற பொருள் இவ்வரியில் பொதிந்துள்ளது. கம்பனை மேலோட்டமாக மேய்ந்தவர்கள் கண்களில் மட்டுமல்ல கம்பனில் ஆய்ந்து தோய்ந்தவர்கள் பார்வையிலும் படாத பாடல் இது!

எப்படித்தான் கண்ணதாசன் கண்ணில் இது பட்டதோ! எப்படித்தான் அவர் கருத்தையும் கவர்ந்துவிட்டதோ! அகலமான கம்பனை ஆழமாகவும் படித்திருக்கிறார் கண்ணதாசன் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு. கம்பனின் கருத்தை எடுத்துத் திரைக் காட்சிக்கு ஏற்பச் சொற்களை அமைத்து ராஜா பத்மநாபன் ராணியைத் தன் நெஞ்சில் வைத்தான். என்று முத்தாய்ப்பாய் முத்திரை பதிக்கிறார் கவியரசர்!

source::::: input from a friend of mine ..

Natarajan

The Invisible Artist !!!

Chinese artist Liu Bolin is known as the “invisible man” and the “human chameleon” — just take one close look at his work, and you’ll see why. One very close look. See him? Liu has gained international fame for his photographs, which usually feature him painstakingly painted to blend into street scenes or other complex backgrounds.

The work takes hours, with assistants painting the most intricate details onto Liu’s body and clothes, all while the artist tries to remain perfectly still. But Liu’s extreme dedication to his craft has paid off. His artwork regularly fetches five figures, and one (a photo of Liu painted into a mural of Chinese dragons) even sold for more than that…

Liu himself describes what he does NOT as blending into the background, but he explains it as letting the background, the place, take over him, and blend with him, taking into himself the spirit of the place. So he is not trying to hide, but surrenders himself to the place itself…

Some of his art works are…

the invisible man

the invisible man

the invisible man

the invisible man

the invisible man

the invisible man

the invisible man

the invisible man

the invisible man

the invisible man

source::::babamail net

Natarajan

எம்மதமும் எம் மதமே !!!….

மூலம் : மஹாபெரியவாள் தரிசன அனுபவங்கள் – ஐந்தாம் பகுதி
நினைவு கூர்ந்தவர்: ஸ்ரீமடம் பாலு
பக்கம் : 93,94,95

மௌனம் நா அசைத்தது

வட பாரதத்தின் வடமேற்கு மாநிலங்களைச் சேர்ந்த எட்டு முஸ்லிம்கள், பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார்கள். அவர்கள் எல்லோரும் செல்வந்தர்கள் என்ற நினைப்பை ஏற்படுத்தினாலும், எளிய உடை (வேஷ்டி, குல்லாய்) அணிந்திருந்தார்கள்.

“பெரிய பெரிய தேசியத் தலைவர்கள் எல்லாம் இந்த மஹந்திடம் ஆசிபெற்றுச் சென்றிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டோம். அத்தகைய மஹந்தை (மகானை) தரிசனம் செய்ய வந்திருக்கிறோம்.”

பெரியவாள் அன்றைய தினம் காஷ்டமௌனம்! ஒரு ஜாடை, கண் அசைப்பு கூடக் கிடையாது, ஏதேனும் சொன்னால் கேட்டுக் கொண்டிருப்பார்களே தவிர, முகத்தில் எவ்விதச் சலனமும் இருக்காது.

முஸ்லிம்கள், வெகு தூரத்திலிருந்து, மிகவும் பக்தியோடு வந்திருக்கிறார்கள்.

“இன்று பெரியவாள் பேசமாட்டார்கள்” என்று சொல்லி, ஏமாற்றத்துடன் அவர்களை அனுப்பி வைப்பது, மகா அநியாயம். ஆனால், பெரியவாளிடம் யார் போய்ச் சொல்வது?

பாணாம்பட்டு கண்ணன் என்று ஒரு தொண்டர். நியாயமான துணிச்சல்காரர். ‘வடக்கேயிருந்து எட்டு முஸ்லிம்கள் வந்திருக்கிறார்கள். சமயப் பற்றுடையவர்கள் மாதிரி இருக்கு. ரொம்பவும் சாந்தமா இருக்கா… பெரியவாளிடம் ஆசீர்வாதம் வாங்கணும்னு ரொம்ப எதிர்பார்ப்போடு வந்திருக்கா…”

இரண்டு நிமிஷம் கழித்துப் பெரியவாள் வெளியே வந்தார்கள். “ஆயியே… ஆயியே..” என்று அவர்களை அழைத்து உட்காரச் சொல்லிவிட்டு, ஹிந்தியில் ஒவ்வொருவரிடமும் உரையாடினார்கள்.

வந்தவர்கள், “நாங்கள் ஒரு பெரிய பிரச்சினையில் சிக்கியிருக்கிறோம். பெரியவா அனுக்ரஹம் வேணும்” என்று பிரார்த்தித்துக் கொண்டார்கள்.

பெரியவாள் சொன்னார்கள்:

“நீங்கள் எல்லோரும் நல்ல பக்தர்கள். தினமும் ஐந்து வேளை தொழுகை செய்யுங்கள். இது ரம்லான் மாதம். உபவாசம் இருந்து என்னைப் பார்க்க வந்திருக்கிறீர்கள். அதனாலேதான், உங்களிடம் மட்டும் பேசுவதற்காக மௌனத்தை சிறிதுநேரம் விட்டுவிட்டேன்! உங்கள் கஷ்டங்கள் நீங்கும். ஆண்டவர் காப்பாற்றுவார்…”

அந்த எண்மரில், முதியவரான ஒருவருக்கு ஒரு பச்சை நிறச் சால்வையும், மற்றவர்களுக்குப் பழமும் கொடுத்தார்கள்.
அவர்கள் ஆனந்தம் பொங்கத் திரும்பிச் சென்றார்கள்.

source::::periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/3972#ixzz2PZGoBQN5

கனியாக வந்த குழந்தை !!!

கனியாக வந்த குழந்தை

திருமணமாகிப் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.
தசரதன் என்ற மாமன்னன் எதற்காக ஏங்கினானோ, அதே ஏக்கம் எங்களுக்கு. என்ன பாவம் செய்தோம்?

பக்தி சிரத்தையான குடும்பம். பிறந்தது – புகுந்தது என்ற இரண்டுமே வீடுபேறு பெற்ற பரம்பரை. என் மாமனார், புதுக்கோட்டை டாக்டர் ந.தியாகராஜன், புதுக்கோட்டை சங்கர மடத்தில் அப்போதைய முத்ராதிகாரி. மஹாபெரியவாள் இளையாத்தங்குடியில் தங்கியிருந்தபோது (1965) சிறிது உடல்நலம் குன்றியிருந்தார். கோயில் குளத்தில் நீராடிவிட்டு, என் மாமனார்தான் (பெரியவாளைத் தொட்டு) சிகிச்சை அளிக்கும் பாக்கியம் பெற்றவர்.

மஹாபெரியவாளின் பூர்வாசிரம சகோதரர் பிரும்மஸ்ரீ சாம்பமூர்த்தி சாஸ்திரிகள், கடைசிக் காலங்களில் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, சில மாதங்கள் எங்கள் மருத்துவமலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

தசரதனுக்கு வசிஷ்டர் இருந்தார். எங்களுக்கு?

“பெரியவாளைத் தரிசிக்க வேண்டும்” என்ற நோக்கத்துடன், விவாகமான நாள் முதல் (2-2-1977) நானும் என் கணவரும் சேர்ந்து புறப்படவிருக்கும் நேரத்தில் ஏதாவது ஒரு தடங்கல் வந்துவிடும்! யாராவது ஒருவர் மட்டும் சென்று தரிசித்துவிட்டு வருவோம்.

எங்களுக்கும் கொஞ்சம் கொடுப்பினை இருந்தது போலும்! 1-9-1988 அன்று கலவையில் நாங்கள் (இருவருமாக) மஹாபெரியவாளைத் தரிசித்தோம்.

ஒரு மாமாங்க ஏக்கம் தீரப்போகிறது.

நாங்கள் சென்ற சமயம், பெரியவாள் மேனாவுக்குள், கதவை மூடிக்கொண்டு ஜபம் செய்து கொண்டிருந்தார்கள்.

”எப்போது தரிசனம் கொடுப்பார்கள்?”

“சித்தம் போக்கு, சிவம் போக்கு… சாட்சாத் பரமேஸ்வரனாலேயே பதில் சொல்லமுடியாத கேள்வி! இரண்டு மணி நேரம் கழித்துக் கதவைத் திறக்கலாம்; அல்லது இதோ இப்போதே…”அந்த விநாடி வந்துவிட்டது!

ஓர் அணுக்கத் தொண்டர், “புதுக்கோட்டை டாக்டர் தியாகராஜனின் இரண்டாவது பிள்ளை, தம்பதியா வந்திருக்கா தரிசனத்துக்கு” என்று சற்று உரத்த குரலில் விண்ணப்பித்துக் கொள்ள…
பெரியவாளே, கதவைத் திறந்தார்கள். தெய்விகப் புன்முறுவல்! அந்த க்ஷணகாலம் அப்படியே நிரந்தரமாகவே நின்று விடக்கூடாதா – என்றொரு வேட்கை.

“சாம்பமூர்த்தியை ரொம்ப நன்னா கவனிச்சிண்டார், உன் தகப்பனார்…” மெய் சிலிர்த்தது, எங்களுக்கு.

என் கணவர் குமார் (என்ற கிருஷ்ணமூர்த்தி) எங்கள் ஏக்கத்தை, நெஞ்சங் குழையக் கூறினார்.

“நாங்கள் தனித்தனியா தரிசனத்துக்கு வந்திருக்கோம். இப்போதான், முதல் தடவையா, ரெண்டு பேரும் சேர்ந்து வந்திருக்கோம்…”

பெரியவா கைகளைத் தூக்கி ஆசீர்வதித்தார்கள். மேனாவிலிருந்த ஓர் ஆரஞ்சுப்பழத்தை, என் கணவர் கையில் கொடுத்தார்கள். ஒரு குழந்தையையே எடுத்துக் கொடுப்பதுபோல் எங்களுக்குத் தோன்றியது.

21-5-1989 அன்று எனக்கு ஓர் ஆண்மகவு பிறந்தது. “இதிலென்ன ஆச்சரியம்? ஆச்சார்யாள் அனுக்ரஹத்தால் எல்லாம் நடக்கும்” என்று சொல்லிவிடலாம்தான்.

ஆச்சரியம் இருக்கிறது. அன்றைய தினம், வைகாசி அனுஷம் – பெரியவர் ஜன்ம நக்ஷத்ரம்!

முன்னர், ராமேஸ்வரத்தில் சில பரிகாரங்களைச் செய்து முடித்திருந்தோம். அதனால், குழந்தைக்கு இராமநாத் சந்திரசேகர் என்று பெயர் சூட்டினோம்.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர…

source::::periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/3949#ixzz2PZ8YjZ9h

Thought For The Day….Persistence is the Iron Quality of Success !!!

Your ability to persist in the face of adversities, setbacks and disappointments is the measure of your belief in yourself.

-Brian Tracy: Law of Persistence

Thrilling Facts…. Determination and Persistence

This is a real life story of an engineer who build the Brooklyn Bridge in New York, USA.

In 1883, a creative engineer named John Roebling was inspired by an idea to build a spectacular bridge connecting New York with the Long Island. However bridge building experts throughout the world thought that this was an impossible feat and told Roebling to forget the idea. It just could not be done. It was not practical. It had never been done before.

Roebling could not ignore the vision he had in his mind of this bridge. He thought about it all the time and he knew deep in his heart that it could be done. He just had to share the dream with someone else. After much discussion and persuasion he managed to convince his son Washington, an upcoming engineer, that the bridge in fact could be built.

Working together for the first time, the father and son developed concepts of how it could be accomplished and how the obstacles could be overcome. With great excitement and inspiration, and the headiness of a wild challenge before them, they hired their crew and began to build their dream bridge.

The project started well, but when it was only a few months underway a tragic accident on the site took the life of John Roebling. Washington was also injured and left with a certain amount of brain damage, which resulted in him not being able to talk or walk.

“People thought.” “Crazy men and their crazy dreams.” “It’s foolish to chase wild visions.”

Everyone had a negative comment to make and felt that the project should be scrapped since the Roebling’s were the only ones who knew how the bridge could be built. In spite of his handicap Washington was never discouraged and still had a burning desire to complete the bridge and his mind was still as sharp as ever. He tried to inspire and pass on his enthusiasm to some of his friends, but they were too daunted by the task.

As he lay on his bed in his hospital room, with the sunlight streaming through the windows, a gentle breeze blew the flimsy white curtains apart and he was able to see the sky and the tops of the trees outside for just a moment. It seemed that there was a message for him not to give up. Suddenly an idea hit him. All he could do was move one finger and he decided to make the best use of it. By moving this, he slowly developed a code of communication with his wife. He touched his wife’s arm with that finger, indicating to her that he wanted her to call the engineers again. Then he used the same method of tapping her arm to tell the engineers what to do. It seemed foolish but the project was under way again. For 13 years Washington tapped out his instructions with his finger on his wife’s arm, until the bridge was finally completed. Today the spectacular Brooklyn Bridge stands in all its glory as a tribute to the triumph of one man’s indomitable spirit and his determination not to be defeated by circumstances. It is also a tribute to the engineers and their team work, and to their faith in a man who was considered mad by half the world. It stands too as a tangible monument to the love and devotion of his wife who for 13 long years patiently decoded the messages of her husband and told the engineers what to do. The Brooklyn Bridge shows us that dreams that seem impossible can be realized with determination and persistence, no matter what the odds are. Often when we face obstacles in our day-to-day life, our hurdles seem very small in comparison to what many others have to face.

Concluding thought: Persistence is the iron quality of success; if you persist long enough you must eventually succeed where no handicap can keep you from achieving your goal.

source::::: input from a friend of mine…

Natarajan

Message For The Day….Have Water Of Love Inside Your Heart !!!!

The Lord is the Immanent Power in everything; those who refuse to believe that the image in the mirror (the world) is a reflection of themselves, how can they believe in the Lord, when He is reflected in every object around them? The moon is reflected in a pot, provided it has water. So too, the Lord can be clearly seen in your heart, provided, you have the water of Love inside it. When the Lord is not reflected in your heart, you cannot say that there is no Lord. It only means that there is no Love within you.

 Sathya Sai Baba

பழம் எல்லாம் பரம ஏழைக்கு !!!!!

கமால் ஜூம்லெட் என்ற லெபனான் நாட்டு அமைச்சர், மஹாபெரியவாளிடம் அத்யந்த பக்தி கொண்டவர். அத்வைத தத்துவக் கோட்பாடுகளை சென்னை, மும்பை மற்றும் கேரளாவிலிருந்த பல மகாபண்டிதர்களிடம் பாடம் கேட்டுத் தெரிந்து கொண்டவர்.

அவர், பெரியவாளைத் தரிசிக்க வரும்போது, இஸ்லாமிய சம்பிரதாயப்படி, “சலாமாலேகும்” என்று சொல்லி வணக்கம் தெரிவிப்பார்.

ஒரு தடவை, பல கூடைகளில் மாதுளை, ஆப்பிள் என்று வகைவகையான பழங்களைக் கொண்டுவந்து சமர்ப்பித்தார்.

பெரியவாள் ஒரு மாதுளையைக் கையில் எடுத்துப் புரட்டிப் புரட்டிப் பார்த்து மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்தார்கள். அதாவது கமால் ஜூம்லெட் சமர்ப்பித்தவைகளை தான் ஏற்றுக் கொண்டுவிட்டதை அவருக்கு உணர்த்தி, அவரை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கச் செய்து கொண்டிருந்தார்கள்!

கமாலின் ஆனந்தத்துக்கு அளவேயில்லை. பெரியவாளும், ஸ்ரீமடத்துத் தொண்டர்களும் மிக உயர்ந்த ரக மாதுளை – ஆப்பிள்களை சாப்பிடப் போகிறார்கள் என்ற நினைப்பே அவருக்கு அமுதமாய் இனித்தது.

பெரியவாள், “இதுகளெல்லாம் ரொம்ப ஒசத்தியோன்னு அவரைக் கேளு” என்றார்கள்.

“ஆமாம், ஆமாம்! இவைகளை விட உயர்ந்த ரகம் எங்கேயும் இல்லை…”

பெரியவா, ஒரு தொண்டரை அருகில் அழைத்தார்கள்.

“பக்கத்திலே ஹரிஜன் காலனி ஏதாவது இருக்கோ”

“இருக்கு… பத்து நிமிஷ நடை தூரம்…”

“எல்லாக் கூடையையும் எடுத்துண்டு போய், அங்கே உள்ள எல்லோருக்கும் கொடுத்துட்டு வா. காலி கூடையையும் அவாகிட்டேயே கொடுத்துடு…”

தொண்டர் தயங்கினார். கமால் எதிரிலேயே அவர் கொண்டுவந்த பழங்களை இப்படித் (துர்)விநியோகம் பண்ணினால், அவர் மனம் நொந்து போகமாட்டாரா என்று எண்ணியிருக்கலாம்.

பெரியவாள் : “அவாளெல்லாம் பரம ஏழைகள். இந்த மாதிரிப் பழங்களையெல்லாம் பார்த்துக்கூட இருக்கமாட்டா…. அவா சாப்பிடட்டும்.”

இந்த சம்பாஷணை, சமிக்ஞைகளைக் கேட்டுக் கொண்டிருந்த கமால், சிஷ்யரிடம், “வாட்?” என்று கேட்டார். சிஷ்யர் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில், “இந்தப் பழங்கள் எல்லாவற்றையும் பரம ஏழைகளுக்கு விநியோகம் செய்யும்படி பெரியவாள் ஆக்ஞை” என்றார்.

கமாலின் உள்ளம் கொதித்தது. (மன்னிக்கவும். கமாலின் உள்ளம் குதித்தது; களித்தது).

“ஓ! அல்லாஹ்… அல்லாஹ்…. அல்லாஹ்…” என்று இரு கைகளையும் உயரே தூக்கிக் கொண்டு, பரவசமாகக் கத்தினார்.

பெரியவாள், அல்லா மட்டுமல்ல; எல்லாமாக இருப்பவர்கள் என்பது நமக்குத் தெரிந்ததுதானே!

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source::::www.periva.proboards.com

Read more:http://periva.proboards.com/index.cgi?board=exptamil&action=display&thread=3964#ixzz2PD8mkDgV