Message For the Day…”Train Your Sense Organs Only to Perceive Sacred Things…”

In the drama of life, some act on the basis that nothing belongs to them and that, whatever words one utters or whatever action one does, all belong to God and nothing is their own. They play their role in this spirit, ascribing nothing to oneself. The other category are those that are like the actors who are conscious of the role they are playing and do not forget their individuality in their actions. They do not consider themselves as merely acting a part but as the doer. The difference between the two is that while the former realises the temporary nature of the part being played and is not attached to the things connected with the role, the other develops attachment to the role and does not wish to part with things connected with the role. Presently, most people suffer from the possessive attitude. The reason is the failure to use the senses properly and enslavement to the desires prompted by them. Train your sense organs only to perceive sacred things and abstain from indiscriminate enjoyment.

Sathya Sai Baba

Message For the Day…” Realise that Every Human Birth is a Manifestation of Divine Will …”

Sathya Sai Baba  

The whole world is a stage and every individual is an actor. The Divine Lord is the Director of the Cosmic Drama. The primary goal of every actor doing a particular role is to carry out their duty, setting aside their individuality. In a school drama, a boy may play the role of a director. While acting, he must exhibit the behavior of a director and not behave like he would in his normal daily routine; those traits must be given a back seat. Your birth as a human being is a God given gift which must be used with due care. Fill your life with righteous acts and do not misuse your talents for unholy purposes. Your life will have a mixture of good and bad, discriminate and select to play your role in a good manner wherein you manifest humanness, and thus conduct yourself worthily. Realise that every human birth is a manifestation of the Divine will.   

கல கல என்று கலக்கும் பொம்மை கொலு… நவராத்திரி திருவிழா !!!

ஆன்மிக அர்த்தங்களுக்குள் நுழைந்து அதன் ஆதாரங்களைத் தேடாமல், புராணக் கதைகளுடன் அதை முடிச்சுப் போடாமல், வெறும் பொம்மை விளையாட்டாகவே கற்பித்துக் கொண்டாலும் கூடப் பரவாயில்லை.

நவராத்திரி ஓர் உன்னதமான திருவிழா தான்.

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் குழந்தைத்தனமான ஆர்வங்களை வெளியே கொண்டுவரும் ஓர் அற்புதத் தருணம்தான் இந்த நவராத்திரித் திருவிழா என்றால் அது மிகையாகாது.

பொம்மைகள் குழந்தைகளுக்கு மட்டும்தான் பிடிக்க வேண்டுமென்பதில்லை. பெரியவர்களுக்கும் பிடிக்கும். பிடித்துத்தான் தீர வேண்டும்.

ஆதி சங்கரரின் அன்புக்கு இலக்காகிய ஸ்ரீ மூகாம்பிகையும், ஸ்ரீ ராமானுஜரின் பாசத்திற்கு வசப்பட்ட ராமப்ரியனாகிய மேல்கோட்டை சம்பத்குமாரனும், சத்குரு ஸ்ரீ ராகவேந்திரரை வசப்படுத்திய ஸ்ரீ மூலராமரும், ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை இன்றும் கூட சூடிக்களிக்கின்ற ஸ்ரீ வேங்கடாசலபதியும், நாயன்மார்களும் இன்னும் பலரும் பாடிப்பரவிய தில்லை நடராஜரும் கூட அர்ர்ச்சாவதார மூர்த்திகளாய் விளங்கும் ஆன்மிக பொம்மைகள்தாம்.

இன்று திருமலையில் மட்டுமின்றி, தேசம் முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெறுகின்ற ஸ்ரீ ஸ்ரீநிவார் திருக்கல்யாணமும் கூட பக்தர்களின் மனம் கவரும் ஓர் உயர்தர ஆன்மீக பொம்மை விளையாட்டுத்தான்.

திருக்கோயில்களில் பிரம்மோத்வ காலங்களில் பல்வேறு பெரிய பொம்மைகளாகிய வாகனங்களிலும், பல்லக்குகளிலும், சிவிகைகளிலும், தேர்களிலும் தெய்வங்களின்  பஞ்சலோக உருவத்தை அமர்த்தி, அலங்கரித்து, வீதிவலம் செய்வித்து, அத்திருக்காட்சியை பக்தர்கள் வணங்கிப் பரவசம் அடைவதும் கூட ஓர் உன்னதமான பொம்மை விளையாட்டுத்தான்.

குழந்தைகள் சிறுவயதில் விளையாடும் பொம்மை விளையாட்டுதான், பெரியவர்களான பின்பு, திருக்கோயில்களில் வருடம் முழுவதும் திருவிழாக்களாகவும், வீடுகளில் வருடத்தில் ஒன்பது நாள் நவராத்திரி பொம்மைக்கொலுவாகவும் பரிணமித்திருக்கிறது என்று நம்புவதற்கு எல்லா நியாயமும் இருக்கின்றது.

பொம்மைக் கொலு வைக்கும் வழக்கம் உள்ள வீடுகளைப் பொறுத்தவரையில், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளைக்காட்டிலும் நீண்ட நாட்கள் கொண்டாடப் படுவதும், அந்தக்கொண்டாட்டத்திற்கென  அதிகமான முன் தயாரிப்புகள் செய்யப்படுவதும் இந்த நவராத்திரிக்கு மட்டும்தான்.

kolu_2பொம்மைக் கொலு வைப்பதற்குச் சில நாட்கள் முன்பாகவே வீடுகளின் மூலை முடுக்களிலெல்லாம் ஒட்டடை அடிக்கப்படுவதும்,  பரணிலிருக்கும்  பெட்டிகளிலிருந்து பொம்மைகள் வெளியே எடுத்துத் துடைத்துச் சுத்தம் செய்யப்படுவதும், கொலுப்படிகள் நிறுவுவதற்கான திட்டமிடுதலும் ஏற்பாடுகளும் நடைபெறுவதும், வண்ணக் காகிதங்களால் தோரணங்கள் அமைத்து வீடு முழுவதும் அலங்கரிக்கப் படுவதும், வசதியிருந்தால் மின்விளக்குகள் கொண்டு அலங்கரிப்பதும் என, பொம்மைக்கொலு வைப்பது ஒரு திருமணத்துக்கு நிகரான உற்சாகச் செயல்பாடல்லவா
வீட்டின் ஆகப்பெரிய வயதான உறுப்பினர்கள் அறிவுறை கூற, அடுத்தநிலை பெரியவர்கள் ஆலோசனை வழங்க, இளைய தலைமுறையினர் அதை நிறைவேற்றப் பாடுபடுவதுமாக, முன்னேற்பாடுகள் பரபரக்கும். விழா தொடங்கிய  பின்பு, அந்த ஒன்பது நாட்களும், உறவினர்களும், தெரிந்தவர்களும் சாரி சாரியாய் வந்து நம் வீட்டுக் கொலுவைப் பார்த்துவிட்டுப் பாராட்டுவதும், கொலு இன்னும் சிறப்பாக மிளிர்ந்திட ஆலோசனைகள் பலவும் சொல்வதுமாக, ஒவ்வொரு நாளும் சுவாரசியமாக நகரும்.

வித்தியாசமான கருத்தோட்டங்களைப் பிரதிபலிக்கும் புதிய பொம்மைகளை விலை கொடுத்து வாங்கிக் கொலுவில் வைப்பதும், வருபவர்களுக்கு அதைப் பற்றி விளக்குவதும் கூட ஓர் அற்புத அனுபவம்தான்.

கொலுவைப்பார்க்க வரும் வரும் குழந்தைகள் தங்களது விழிகள் விரிய வியப்பதும், அவர்களில் சிலர், பொம்மைகளைக் கையில் எடுத்துப்பார்க்கத் துடிப்பதும், பெரியவர்கள் அவர்களைத் தடுத்துச் சமாதானம் செய்வதும் பொம்மைக்கொலு வைத்துள்ள வீட்டில் அன்றாடம் அரங்கேறும் அழகிய காவியமாகும். கொலுவுடன் இசையும் சேருமானால் அவ்விடம் கந்தர்வலோகம் ஆகிவிடும்.

அவரவர் வசதிக்கேற்ப, கொலுவைக் காண வருபவர்களுக்குத் தாம்பூலத்துடன் ஏதாவது சிறு பரிசுப்பொருளை வழங்குவதும், குழந்தைகளுக்கு சுண்டல் அல்லது இனிப்புகளை வழங்கி அவர்களை முகம் மலர வைப்பதும், திருமணங்களைத் தவிர்த்து, நவராத்திரி நாட்களில்  மட்டுமே சாத்தியம்.

இதையெல்லாம் விடுங்கள்.

பொம்மைக் கொலுவுக்கென பரணிலிருந்து இறக்கிவைக்கப்படும் பொம்மைகளைப் பார்க்கும் போதே, பள்ளி விட்டவுடன் வீடு திரும்ப ஆவலாகக் குதித்தோடத் தயாராகும் குழந்தைகளைப் பார்ப்பது போல் இருக்கும்.

இது மட்டுமா.
நவராத்திரி முடிந்தவுடன் பழையபடி பொம்மைகளைப் பரணில் ஏற்றும் போது, நெருங்கிய உறவினர்களை வழியனுப்ப இரயிலடியில் நிற்பது போன்ற ஓர் உணர்வு நமக்குள் பீறிடுவதைத் தவிர்க்கவே முடியாது.

அடுத்த நவராத்திரி எப்போது வரும் என்று அந்த பொம்மைகள் நம்மைக் கேட்பது போலவே இருக்கும். ஆம்.பொம்மைகள் நம்முடன் பேசும். நம்பினால் நம்புங்கள். நமக்கும் அவற்றுடன் பேசவேண்டும் போல் இருக்கும். இதுதான் நவராத்திரி பொம்மைக்கொலுவின் சிறப்பு.

kolu_4நம்மில் பலரது வீடுகளில் பொம்மைக்கொலு வைப்பதில்லை. வழக்கமில்லை, வசதியில்லை, இடமில்லை, நேரமில்லை. இப்படிப் பல காரணங்கள்.

காரணம் எதுவாக இருந்தாலும் சரி
கொஞ்சமே கொஞ்சம் ஆர்வம் மட்டும் இருந்தால் போதும். பொம்மை கொலு வைக்கப் பழகுங்கள். உங்கள் மனசு மகிழ்ச்சியால் நிறையும். உங்களின் உறவு வட்டம் பெரிதாகும். பொம்மைகள் உங்களின் விருந்தினர்கள் ஆகும். உங்களுக்குள்ளிருக்கும் கலையார்வம் மறுபிறவி எடுக்கும். நீங்களும் குழந்தைகளாவீர்கள்.

கொலு வைக்க வசதியோ, வாய்ப்போ இல்லாதவர்கள் நிச்சயம் ஒவ்வொரு நவராத்திரி பண்டிகை அன்றும், ஒவ்வொரு இடங்களில் வைக்கப்படும் கொலுவுக்குச் சென்று பார்த்து ரசிக்கலாம். நிச்சயமாக முக்கியக் கோயில்களில் கொலு வைக்கப்பட்டிருக்கும் என்பது நினைவில் கொள்ள வேண்டியது.

 

SOURCE:::Vanisri Sivakumar in dinamani.com

Natarajan

Message For the Day…” One Must Always maintain one’s Purity…”

People today repose their faith in the ephemeral and unreal world, and forget God who is the embodiment of truth. This is the root cause for all sorrows and difficulties faced by humanity. You say you are encountering difficulties. From where did they come? Difficulties are the consequences of one’s past deeds and thoughts. Everything in this world is suscep­tible to change. God is the only changeless principle. What is human life for, after all? Is it merely for eating, drinking, sleeping and ultimately dying? In doing so, can the human life be termed as sacred? At the time of birth everyone is pure and sacred. As they grow old, they gradually lose this purity. This is improper! One must always maintain one’s purity. Install the changeless and eternal God in the altar of your sacred heart and offer your love to Him. Thereby, you can experience bliss. This is the foremost duty of every human being.

Sathya Sai Baba

” நெகிழவைத்த கனடா கொலு… கலசமே கொலுவாக …”

ஓவியம்: வெங்கி

ஓவியம்: வெங்கி

நவராத்திரி வந்துவிட்டாலே கனடாவில் இருக்கும் என் தங்கையின் கொலு அனுபவம்தான் என் நினைவுக்கு வரும். அவள் திருமணமாகி வெளிநாடு போகவேண்டும் என்றதும் உறவினர்களையும் நண்பர்களையும் பிரிந்து செல்ல எவ்வளவு வருத்தப்பட்டாளோ அதே அளவு கொலுவை மிஸ் செய்வதற்கும் வருந்தினாள்.

அவளின் கவலையை உணர்ந்து வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல ஏற்றாற்போல எடை குறைவான பொம்மைகளை வாங்கித் தந்தோம். அவற்றுடன் வெளிநாட்டுப் பொம்மைகளையும் கலந்து புதுவிதமாகக் கொலு வைக்கலாம் என்ற ஆலோசனையைக் கேட்டு அவள் ஓரளவு நிம்மதியடைந்தாள். அரைமனதோடு சாஸ்திரத்துக்கு இரண்டு பொம்மைகளை எடுத்துச் சென்றாள்.

அவள் அங்கே போன உடனேயே நவராத்திரி வந்துவிட்டது. ஒரு சிறிய பலகையில் எடுத்துப்போன இரண்டு பொம்மைகள், கலசம் அவற்றுடன் அங்கே வாங்கிய பொம்மைகளை சேர்த்து கொலு வைத்து விட்டாள். சிறிய கொலு என்பதால் எப்படி எல்லோரையும் அழைப்பது என்று அவளுக்குத் தயக்கமாக இருந்தது.

கோயிலில் கொலு வைத்திருக்கிறார்கள் என்றதும் அங்கே போனாள். அங்கே இவளுக்கு அறிமுகமே இல்லாத பெண்மணி தன் வீட்டு கொலுவுக்கு வரும்படி அழைத்திருக்கிறாள். இவளை மட்டுமல்லாமல் கோயிலில் நிறையப் பேரை அழைத்திருக்கிறாள். கிட்டத்தட்ட 20 தம்பதிகள் காரில் அவள் வீட்டுக்குப் போனார்கள். எல்லோருக்கும் ஜூஸ், வடை, கேசரி கொடுத்து உபசரித்திருக்கிறாள். ஏதோ இந்தியர்களுக்கான கெட் டுகெதர் போல எல்லோரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துகொண்டு சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

கடைசியில் அனைவருக்கும் மிகவும் பிரியத்துடன் தாம்பூலம்,ரோஜாப்பூக்கள் கொடுத்திருக்கிறாள் அந்தப் பெண். அப்போதுதான் பேச்சு சுவாரஸ்யத்தில் கொலு பார்க்க மறந்துவிட்டோமே என்று ஞாபகம் வந்து, “கொலு எங்கே?”என்று கேட்டிருக்கிறார்கள். “ஓ , நீங்கள் பார்க்கவில்லையா? இதுதான் கொலு” என்று பிளாஸ்டிக் மாவிலையும் தேங்காயும் வைத்து சந்தனம் குங்குமம் வைத்த ஒரு கலசத்தைக் காட்டினாளாம் அந்தப் பெண். என் தங்கைக்கோ வியப்பு, அதிர்ச்சி, சிரிப்பு எல்லாம் கலந்த உணர்வு. சிரமப்பட்டு அடக்கிக் கொண்டிருக்கிறாள்.

பின்னால் நிதானமாக யோசித்துப் பார்த்தால் அந்தத் தோழியின் உயர்ந்த குணம் புரிந்தது. அவள் கலசத்தையே கொலுவாக, அம்பாள் வடிவமாக, பக்திபூர் வமாகப் பார்த்திருக்கிறாள். எல்லோரையும் அம்பாள் வடிவமாகவே நினைத்து, தெரியாதவர்களைக்கூட அன்போடு தாம்பூலத்துக்கு அழைத்திருக்கிறாள். சிரமப்பட்டுத் தனி ஆளாக உணவு தயாரித்து எல்லோருக்கும் சிநேக உணர்வுடன் கொடுத்திருக்கிறாள். பலருக்கிடையே நட்பு ஏற்பட உதவும் பாலமாக இருந்திருக்கிறாள். அவள் வீட்டு கொலுவுக்குத் தனி மகிமை இருப்பது புரிந்தது. அன்றிலிருந்து கொலுவின் அளவு பற்றி என் தங்கை கவலைப்படுவதே இல்லை. தன்னால் முடிந்த அளவு எல்லோரையும் அழைத்து தாம்பூலம் கொடுக்கிறாள்.

– ரம்யா சங்கரநாராயணன், பெங்களூர்.

Source::::The Hindu …Tamil

” ஸ்வாமிதான் உன்னைக் காப்பாத்தி இருக்கார் …” !!!

Post Options
“ஸ்வாமி தான் உன்னைக் காப்பாத்தியிருக்கார்….
உண்மைதான். ஆனால் “எந்த ஸ்வாமி”?.

Featured Image -- 11217

கார்வேட் நகரில் ஸ்ரீமடம் முகாம்.சென்னையிலிருந்து காரில் வந்த ஒரு குடும்பத்தினர் சாயங்காலமாகத் திரும்புவதற்கு முடிவு செய்திருந்தார்கள்.
எல்லாம் ரெடி. பெரியவாளிடம் உத்தரவு பெற்றுக் கொண்டால்,அடுத்த நிமிஷமே புறப்பட்டு விடலாம். பெரியவா ஒரு வில்வ மரத்தடியில் உட்கார்ந்திருந்தார்கள்.

சபேசன் குடும்பத்தினர் வந்தனம் செய்து பிரசாதத்துக்காக நின்றார்கள்.

அவர்களுக்குப் பிரசாதம் கொடுக்கப்பட்டது.

சபேசன் காரை நோக்கித் திரும்பினார்.

விரல்களால் ஒரு சொடுக்கல்.

சபேசன் திரும்பி வந்தார். ஆவலுடன்.

சற்று தூரத்தில் கருங்கல் ஜல்லி கொட்டப்பட்டிருந்தது.

பெரியவாள் அதைக் காட்டி,

“இதில் கொஞ்சம் சாக்கில் கட்டி வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போ” என்றார்கள்.

எல்லோருக்குமே திகைப்பு. கருங்கல் ஜல்லியை கார்வேட்

நகரிலிருந்து சென்னைக்கு எடுத்துக் கொண்டு போவானேன்?

அந்த ஜல்லியில் அப்படி என்ன சிறப்பு?.

பெரியவாளிடம் விளக்கம் கேட்க முடியாது. எனவே

உத்திரவுப்படி ஒரு சாக்கில் கொஞ்சம் ஜல்லியை மூட்டையாகக் கட்டி கார் டிக்கியில் வைத்துக்கொண்டு புறப்பட்டார் சபேசன்.

மலைப் பாறைகள் நிறைந்த புத்தூர் வழி.

இரவு.நாலைந்து நபர்கள் நடுச்சாலையில் நின்று காரை மறித்தார்கள்.கொள்ளைக்காரர்கள் என்பதில் சந்தேகமில்லை.

எல்லோரையும் காரிலிருந்து இறங்கிச் சொல்லி, உட்புறம் அலசிப் பார்த்தார்கள். ஒரு பெட்டி – பையைக் கூடக் காணோம்.

ஆத்திரத்துடன் டிக்கியை நெம்பித் திறந்து பார்த்தார்கள்.

மூட்டை!

“டேய், இங்கே இருக்குடா!…” கூவினான் ஒருவன்.

மூட்டையை எடுக்க முயன்றான் வேறொருவன்.முடியவில்லை. கனமாக இருந்தது. எல்லோருமாகச் சேர்ந்து மூட்டையைக் கீழே தள்ளிவிட்டு, “போ….போ…” என்று சபேசனை விரட்டினார்கள்.

சபேசன் படு வேகமாகக் காரை செலுத்திக் கொண்டு சென்று, ஒரு கிராமம் வந்ததும் காரை நிறுத்தி மூச்சு விட்டார்.

“பயந்தே போயிட்டேன்!..நகை எல்லாத்தையும் கழட்டுன்னு சொல்லுவாங்களோன்னு நடுங்கிப் போயிட்டேன்!” என்றாள் அவர் மனைவி.

“எல்லோரையும் கட்டிப் போடாமல் விட்டானே!” என்றான் பையன்.

“காரை நொறுக்காமல் விட்டானே!” என்றாள் மகள்.

சபேசன் கார்வேட் நகர் இருந்த திசை நோக்கிக் கும்பிட்டார்.

கனமான சாக்குப் பையில் நிறையப் பணம் இருக்கிறது என்று தப்புக் கணக்குப் போட்ட கொள்ளையர்கள்,

வேறு சாமானியப் பொருள் எதையும் விரும்பாமல் விட்டு விட்டார்கள் என்று அனுமானிக்க முடிந்தது.

இரண்டு நாள் சென்று அவர் மட்டும் தரிசனத்துக்கு வந்து, நடந்த நிகழ்ச்சியைப் பெரியவாளிடம் பரவசத்துடன் விண்ணப்பித்துக் கொண்டார்.

“ஸ்வாமி தான் உன்னைக் காப்பாத்தியிருக்கார்” என்றார்கள் பெரியவா.

உண்மைதான்.

ஆனால், “எந்த ஸ்வாமி?” என்று சபேசனுக்கு நன்றாக புரிந்திருந்தது. இனிமேல் ஜல்லியைப் பார்க்கிற போது, ‘ஒரு சல்லிக் காசு பெறாது’ என்று நினைக்க மாட்டார்!

Source:::www.periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/8006#ixzz3E0NCEVew

Message For the Day…” God Exists at a Level in accordance to One’s Own Level of understanding…”

Inside us, outside and all around there is air. But it cannot be seen, nor can it be grasped by the hand. For this reason can you deny the existence of air? How can one exist if there is no air? To deny the existence of air is to deny one’s own existence. God is all-pervading. He is omnipresent. He transcends time, space and circumstances. God exists at a level which is in accordance to one’s own level of understanding of the Divine. All the animate and inanimate objects in the world are Vishnuswarupa(manifestations of the Divine). It is foolish to look at the cosmos and deny the principle that pervades the cosmos. Equally is it not silly to look at the universe, which is the embodiment of the Divine, and deny the existence of the Divine? That is the reason why the scriptures declared:Pashyannapi na pashyathi mudho (The foolish one, even though he beholds, does not recognise)

Sathya Sai Baba

” மின்னல் என மின்னி விண்ணில் கலந்த நட்சத்திரம் …மாண்டலின் சீனிவாஸ்…”

” நேயர்  விருப்பம்”   நிகழ்ச்சி இந்த மண்ணில்  நடக்கும் போதே ,  ‘இறை விருப்பம்’  உன் இசை கேட்க  உன்னை விண்ணுக்கு அழைத்து

விட்டதோ ?  ….”

இந்த மண்ணிலும்  விண்ணிலும்  என்றும் உன் இசை ஒலிக்கும் …

நடராஜன்

மாண்டலின் ஸ்ரீநிவாஸுக்கு ஓர் அஞ்சலி.

 

 

  

 

நன்றி-தீபம்; பால ஹனுமான்.

மாண்டலின் ஸ்ரீனிவாஸின் வீட்டினுள்ளே நுழைந்தவுடன், நம் கண்களில் தென்படுவது கையை உயர்த்தி ஆசிர்வதிக்கும் பிரம்மாண்டமான சத்ய சாயியின் புகைப்படம். இடது பக்க சுவரில் காஞ்சி பரமாச்சாரியாரின் பெரிய புகைப்படம். அப்படியே மாடிக்குச் சென்றால் ஹால் முழுக்க தெய்வத்திரு உருவங்கள்; தவிர, அவருக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள், பல்வேறு விருதுகளின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், இப்படி நிறைய.

விசாலமான பூஜை அறையில், சுவரில் நடுநாயகமாக பாபா புகைப்படம். அதன் அருகில் தேக்கு மரத்தில் செய்த நாற்காலி. அதில் குஷன். பட்டையான ஜரிகை கொண்ட வேஷ்டி, அங்கவஸ்திரம் சாத்தப்பட்டிருக்கிறது. பாபா இந்த நாற்காலியில் அமர்ந்து எனக்கு எப்போதும் ஆசி வழங்கிக் கொண்டிருப்பதாக நான் நம்புகிறேன்” என்ற ஸ்ரீனிவாஸ் தொடர்ந்து பேசினார். தன் கையை முன்னே நீட்டி, “இந்த நவரத்ன மோதிரம், பாபா கொடுத்த பரிசு. புட்ட பர்த்தியில் பாபா முன்னிலையில் ஒரு முறை கச்சேரி செய்யும் பாக்கியம் கிடைத்தது. கச்சேரி முடிந்ததும், என்னை ஆசிர்வதித்த பாபா, இந்த மோதிரத்தை வரவழைத்து, எனக்குக் கொடுத்தார். அது மட்டுமில்லை; என்னுடன் சேர்ந்து அன்றைக்கு கச்சேரி செய்த என் தம்பி ராஜேஷை பார்த்து புன்னகை புரிந்து, ‘உனக்கும் ஒண்ணு வேணுமா?’ என்பது போல ஒரு பார்வை பார்த்து, எனக்கு அளித்த மோதிரத்தைத் தொட்டுவிட்டு, தன் கையை விரித்தார். அவர் கையில் இன்னொரு நவரத்ன மோதிரம். அந்த அதிசயத்தை என்னால் ஆயுசுக்கும் மறக்க முடியாது.

பரமாச்சாரியாரும், பாபாவும் எனக்கு இரண்டு கண்கள் மாதிரி. அப்போது எனக்கு பதினாறு, பதினேழு வயசு இருக்கும். காஞ்சிபுரம் போயிருந்தோம். நான் எப்போது மடத்துக்குப் போனாலும், கையோடு மாண்டலினை எடுத்துக்கொண்டு போய், பரமாச்சாரியார் முன்னால் அமர்ந்து கொஞ்சநேரம் வாசிப்பது வழக்கம். அன்றைக்கும் வாசித்தேன். என் பக்கத்தில் என்னுடைய தம்பி உட்கார்ந்திருந்தான். அவனுக்கு அப்போது பத்து வயசு இருக்கும், அவனும் மாண்டலின் கற்றுக்கொள்ள ஆரம்பித்து, கொஞ்ச நாள் ஆகி இருந்தது. நான் வாசித்து முடித்ததும், என் பக்கத்தில் இருந்த ராஜேஷைக் காட்டி ‘இது யார்?’ என்று கேட்டார். ‘தம்பி’ என்றேன். ‘அவனுக்கு வாசிக்கத் தெரியுமா?’ என்றதும். ‘இப்பதான் கத்துக்கறான்’ என்றேன். ‘அவன்கிட்டே மாண்டலினைக் கொடு; வாசிக்கட்டும்’ என்றார். அவன் வாசிக்க, அவனையும் ஆசிர்வதித்தார்.

பரமாச்சாரியார் தஞ்சாவூர் ஓவியத்தைப் பார்த்தீர்களே? அது ரொம்ப அபூர்வமான ஒன்று. பிரபாகர் என்பவர் ஒருமுறை திருமண பத்திரிகை கொடுக்க வந்தபோது, இங்கே இருந்த ஏராளமான பரமாச்சாரியார் படங்களைப் பார்த்துவிட்டு, அடுத்த சில மாதங்களில் பரமாச்சாரியாரின் தஞ்சாவூர் ஓவியம் ஒன்றை ஒரு வியாழக்கிழமையன்று காலையில் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்து, சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்துவிட்டார்.

திருப்பதி வெங்கடேச பெருமாள் மேல் எனக்கு ரொம்ப பக்தி உண்டு. நாம எப்போ நினைக்கிறோமோ அப்போ எல்லாம் திருப்பதிக்கு போயிட முடியாது; அவர் நம்மை கூப்பிட்டாத்தான் போக முடியும் என்பது என் ஆழமான நம்பிக்கை. பல வருடங்களாக திருப்பதியில் பிரம்மோத்சவம் நடக்கிறபோது, என்னை அங்கே கச்சேரி செய்யக் கூப்பிடுவார்கள். கச்சேரி முடிந்தவுடன், என்னையும், என் சக கலைஞர்களையும் நேரே சன்னதிக்கு அழைத்துக் கொண்டுபோய், தரிசனம் செய்துவைப்பார்கள். அப்படி ஒருமுறை கச்சேரி முடிந்து, தரிசனத்துக்குப் புறப்பட்டபோது, ‘நமக்குதான் ஸ்பெஷல் தரிசனமாச்சே! பத்து நிமிஷத்தில் தரிசனம் பண்ணிடலாம்’ என்று சொன்னார் சக கலைஞர். ஆனால், கோயிலை அடைந்தபோது பிரம்மோற்சவ மக்கள் கூட்டத்தில் நாங்கள் சிக்கிக்கொள்ள, நான்கு மணி நேரம் காத்திருந்து, தரிசனம் செய்யும்படியானது. அது பெருமாள் வைத்த குட்டு என்று புரிந்தது.

பெருமாளுக்கு திருப்பதி என்றால், வினாயகருக்கு பிள்ளையார்பட்டி. பிள்ளையார்பட்டி கோயில் நிர்வாகத்தினர் என்னை கோயிலின் ஆஸ்தான வித்வானாக்கி கௌரவித்திருக்கிறார்கள். ஆண்டு தோறும் வினாயகர் சதுர்த்தியன்று அங்கே கச்சேரி செய்வது பழக்கம். வருடந்தோறும், ஒரு மூன்று நாட்கள் கும்பகோணம், தஞ்சாவூர் பகுதிகளில் இருக்கும் கோயில்களுக்குச் சென்று, அவற்றின் கலையழகை ரசிப்பதோடு, சுவாமி தரிசனமும் செய்வது மன அமைதியையும், ஆத்ம திருப்தியையும் அளிக்கிறது.

*

–தீபம் – கல்கி வழங்கும் ஆன்மீக மாத இதழ் and Balhanuman blog

Read more: http://periva.proboards.com/thread/8012#ixzz3DuevMY2p

Natarajan

Message For the Day…” Should We not have a concern about The Polluted Mind of Ours …” ?

Today many are concerned about the levels of pollution in water, air and environment. Enormous amounts of time, effort and resources are spent on purifying the elements. Shouldn’t you also be equally concerned, if not more, about the pollution in human minds? Many minds and hearts are much contaminated. The dire need today is to eradicate this pollution. Many are deeply immersed in worldly pleasures and desires. As a result, there is mental dissatisfaction and bitter frustration. Turn the minds, back to the source, from where they have originated. What should a fish out of water do to survive? Can the fish thrive by immersing itself in coffee or by placing itself on the most comfortable couch? The fish will survive happily only when it returns home – water! So too, human minds must be restored to their original home, which is the Divine Self within every being. Mental peace can be attained only by turning inward.

Sathya Sai Baba

Message For the Day… ” Name of the God will Grant Everything You Need …”

Once the saints Namadeva and Gyanadeva were travelling in a forest. They felt thirsty and searched for water and came across an old dried up well. Gyanadeva, who followed the path of wisdom, transformed himself into a bird and flew down, drank the water and returned. Namadeva saw this and didn’t agree with the approach. He thought that one must elevate oneself from this human birth to Divine and not the other way. So he sat at that spot and chanted the name of the Lord. Every time he did it with intensity, the level of water began to rise higher and higher and finally the well started overflowing. He comfortably drank the water and was blissful. He demonstrated clearly wisdom is useful but is not greater than Divinity. He clearly taught the precious lesson that the Name of the Lord will grant everything that one needs in life and ultimately the Divine Himself.

Sathya Sai Baba