” வாடிய பயிரை பார்க்கும் போது வாடும் ஒரு மனிதர் …”

 

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் வாணியம்பாடி செல்லும் சாலையோரத்தில் இருக்கிறது ஏலகிரி ஓட்டல். அங்குச் சாப்பிட்டுவிட்டுச் சிலர் பணம் கொடுக்காமல் வணக்கம் மட்டும் தெரிவித்து விட்டுச் செல்கின்றனர். கல்லாவில் இருந்தவரும் காசு கேட்பதில்லை. பணத்துக்குப் பதில் வணக்கம் செலுத்தினால் போதுமா? விசாரித்தபோதுதான் மேலே தொங்கிக்கொண்டிருந்த சிலேட்டுப் பலகைகளைக் காட்டினார். விஷயம் புரிந்தது.

‘முதியோர், ஊனமுற்றோர்களுக்கு காலை 8 முதல் 11 மணி வரை இலவச உணவு’ (100 பேர் வரை), ‘பால் வாங்கப் பணமில்லையென்றால் குழந்தைகளுக்கு இலவசமாகப் பால்’, ‘வாரம் 100 மாணவர்களுக்கு இலவசமாக பேனா அல்லது பென்சில்’, ‘1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை முதல் மாலை வரை பாதி விலையில் உணவு’ இந்த அறிவுப்புகள் சிலேட்டுப் பலகைகளில் சாக்பீஸால் எழுதப்பட்டிருந்தன.

ஆச்சரியத்துடன் கேட்டால், “பணத்துக்காக வாழ்றதில்லிங்க; வாழ்றதுக்குதாங்க பணம்” பெரிய தத்துவத்தை எளிதாகச் சொல்கிறார் இந்த ஓட்டலின் உரிமையாளர் நாகராஜ். அவர் இந்தச் சேவையை 25 ஆண்டுக்கும் மேலாகச் செய்துவருகிறார். ஒரு நாளைக்கு ஏறக்குறைய 100 பேர் வரை இந்த ஓட்டலை நம்பியே காலம் தள்ளுகின்றனர்.

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வட மற்றும் தென் தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திரத்தை இணைக்கும் முக்கியச் சந்திப்பு. இந்த நிலையத்தைக் கடந்ததுதான் அனைத்து ரயில்களும் பயணிக்கின்றன.

பயணத்தின்போது காலி தண்ணீர் பாட்டிலை ஜன்னல் வழியே வீசுவதைப்போல குடும்பத்தில் பாரமென கருதப்படும் மனிதர்களை ரயிலில் அழைத்து வந்து இங்கே இறக்கிவிட்டுச் சென்று விடுகின்றனர். அவர்கள் பெரும்பாலும் முதியவர்கள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். மாதந்தோறும் குறைந்தபட்சம் 15 பேராவது இப்படி அனாதைகளாகத் தனித்து விடப்படுகின்றனர்.

திக்குத் தெரியாமல் தவிக்கும் அவர்கள் ஜோலார்பேட்டையிலேயே சுற்றித்திரிகின்றனர். இவர்களுக்கு இந்த ஓட்டல் ஒரு அன்னச் சத்திரமாக இருக்கிறது. “பசி என்ற உணர்வு மட்டும்தான் சுயநினைவு இல்லாத வருக்குக்கூட உணவு நமக்கு தேவை என்பதை உணர்த்து கிறது” என்கிறார் நாகராஜ்.

இவர்கள் தவிர சுற்றுவட்டாரங்களில் வீடுகளில் கவனிக்க முடியாத நிலையில் இருக்கும் முதியவர்களுக்குத் தேவையான உணவை அவர்களது குடும்பத்தினர் வந்து இலவசமாக பார்சல் வாங்கிச் செல்லலாம். நாகராஜின் மனைவி சுஜாதாவும் தன் கணவரின் இந்தத் தொண்டுக்குப் பக்கபலமாக இருக்கிறார்.

மிகச் சின்ன வருமானத்தில் இதையெல்லா எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “இவர்களுக் கென்று தனியாக உலை வைக்கப்போதில்லை. வழக்க மாக சமைக்கும் அளவோடு கொஞ்சம் கூடுதலாக சமைக்கிறேன். 5 கிலோ மாவு புரோட்டோ போட்டாலும் 10 கிலோ மாவு போட்டாலும் மாஸ்டருக்கு ஒரே கூலிதான். எரிபொருளும் ஏறக்குறைய ஒரே அளவில்தான் செலவா கிறது.

சில ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்புதான் என்றாலும் எனக்கு குடும்பம் நடத்தத் தேவையான லாபம் கிடைக்கிறது. மனதுக்கும் சந்தோஷமாக இருக்கிறது” என்கிறார் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் ‘வாடி நிற்கும்’ நாகராஜ்.

source:::::The Hindu….Tamil
natarajan

” சந்தர்ப்பங்களை நாம்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும் …”

சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. ஒரு பிரபல வாரப்பத்திரிகை ஆசிரியர் மஹானிடம் தனிமையில் பேசி தமக்கு ஏற்பட்டுள்ள சில சந்தேகங்களைப் போக்கிக் கொள்ள நினைத்தார், சந்தித்தார்.”நீ இப்போது என்னிடம் பேசலாம்” என்றார் மஹான் தமிழில்.

“சில விஷயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளவே நான் தங்களை சந்திக்க விரும்பினேன்” என்றார் ஆசிரியர் சுத்தமான தமிழில்.

“உன் தாய்மொழி என்ன?” முகத்தில் லேசாகப் புன்னகை தவழ மஹான் கேட்கிறார்; பின் அவரே தொடருகிறார். “உன் தாய் மொழி நிச்சயம் தமிழ்மொழியாக இருக்காது என்று எனக்குத் தெரியும்” என்கிறார். இதற்குக் காரணம் ஆசிரியர் சிரமப்பட்டுப் பேசிய தமிழ்தான்.

“தெலுங்கு” என்கிறார் ஆசிரியர்.

“நீ பிறந்த ஊர் எது?” என்று சுந்தரமான தெலுங்கில் கேட்டுவிட்டு, ஆசிரியரின் இளமைக்காலம், பெற்றோர், வாழ்க்கை, கல்வி, திருமணம், உத்தியோகம் – வேறு பல விஷயங்களில் இருந்த ஈடுபாடு போன்றவை பற்றி தெலுங்கிலேயே பேசி, ஆசிரியரையும் பேசவைத்தார்.

ஆசிரியர் இவற்றிற்கெல்லாம் பதில் சொன்னதால் அவர்களுக்கிடையே இருந்த இறுக்கம் சுத்தமாக மறைந்து போனது.

இந்த நேரத்தில் அங்கே வந்த ஒரு பக்தர் கன்னடத்தில் உரத்துப் பேசி ஆரம்பிக்கிறார். ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டே அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சுத்தமான கன்னடத்தில் பதில் சொல்கிறார்.

ஆசிரியருக்கு இதனால் ஏற்பட்ட வியப்பு மறைவதற்குள் இன்னொரு பக்தர் அங்கே வந்து மஹானை தனது தாய்மொழியான மலையாளத்தில் போற்றிப் புகழ்கிறார். இதனால் அவரது பேச்சுக்கு மஹான் ஒரு சிறு பிரசங்கமே செய்ய வேண்டியிருக்கிறது. அப்போது அவர் பேசிய மொழி மலையாளம்.

வருபவர்கள் எந்த மொழியில் பேசினாலும் அதே மொழியில் பதில் சொல்லும் மஹான் எந்தப் பள்ளியில் இந்த மொழிகளை படித்திருப்பார் என்று பத்திரிகை ஆசிரியர் வியந்து கொண்டிருக்கும்போதே, ஒரு பெரிய குழு அங்கே வருகிறது. அவர்கள் யாத்ரீகர்கள். அவர்களை அழைத்து வந்தவர் உள்ளூர் சம்ஸ்கிருத பண்டிதர். அவர் மஹானின் பேரில் சம்ஸ்கிருத பாஷையில் அழகான ஒரு கவிதையை வாசித்தார். மலையருவியின் நீர் வீழ்ச்சியைப் போன்ற சம்ஸ்கிருத பாஷையில் சொன்ன பாராட்டுரையைக் கேட்டு மகிழ்ந்த மஹானும், அவர்களுக்குப் பிடித்தமான சம்ஸ்கிருத பாஷையிலேயே பேசி அவர்களை ஆசீர்வதித்து பிரசாதம் கொடுத்து அனுப்பினார்.

அடுத்ததாக, அரசாங்கத்தின் கடிதங்களுக்கு ஆங்கிலத்திலேயே பதில் சொல்லி, எழுத வைத்து அதை சிப்பந்தியிடம் அப்போது அனுப்பி வைத்தார்.

ஆக, இந்தியாவின் புழக்கத்தில் உள்ள அவ்வளவு மொழிகளையும் மஹான் அறிந்து வைத்திருக்கிறார்.

ஆசிரியரும் இவரும் தொடர்ந்து பேச ஆரம்பிக்கும்போது இன்னொரு இடையூறு-வடநாட்டு யாத்ரீகர்கள் பலர், தங்களது உள்ளக்கிடக்கையை ஹிந்தியில் சொல்ல மஹான், அவர்களது சொந்த மொழியிலேயே ஹிந்தியிலேயே அவர்களுடன் பேசுகிறார். அவர்கள் போகும்போது அவர்கள் முகத்தில் காணப்பட்ட மகிழ்ச்சி ஆசிரியரைப் புல்லரிக்க வைக்கிறது.

அவர்கள் போனவுடன் மஹான் மெளனியாகிவிட்டார். பேச ஆரம்பிக்கலாம் என்று நினைத்த ஆசிரியருக்கோ இது அதிர்ச்சியைத் தந்தது. அப்போது திடீரென மஹான் சொல்கிறார்:

“இப்போது இந்துமத தர்மத்தில் பல குறைகள் இருக்கின்றன. அவைகளை அடுக்கிச் சொல்லிவிடலாம். ஆனால் அதன் நன்மைகளை ஆராய்ந்தால், வானத்து நட்சத்திரங்களைப் போல் அவை கணக்கிலடங்கா” என்றார்.

தொடர்ந்து மேலும் ஒரு இடையூறு –

ஆசிரியர் சொல்கிறார்:

“இன்று எனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று நினைக்கிறேன்”

மஹான் புன்னகை புரிந்தவாறு சொல்கிறார்:

“சந்தர்ப்பங்களை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். நாங்கள் நாளை மறுதினம் மதுரை செல்கிறோம். நீ அங்கே வரலாம். உனக்குத் தங்க வசதி செய்து கொடுக்கச் சொல்கிறேன்”.

“அவசியம் அங்கே வருகிறேன் ஸ்வாமிகளே” என்று ஆசிரியர் உத்தரவு பெற்றுக் கொள்கிறார். இந்த சம்பவத்தை சொல்வதற்குக் காரணம், ரட்சகரான மஹா பெரியவருக்கு எல்லா மொழிகளிலும் புலமையும் இருந்தது என்பதைச் சுட்டிக் காட்டத்தான். அந்த பத்திரிகை ஆசிரியரின் பெயர் ஏ.எஸ்.ராமன். அவர் அப்போது “இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆஃப் இண்டியா” என்னும் பிரபல ஆங்கில வார இதழின் ஆசிரியர்.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source::::www.periva.proboards.com
natarajan

Read more: http://www.periva.proboards.com/thread/6486/multilinguist-mahaperiyavaa-book-venkatasaam#ixzz2tAhXvmEu

” இட்லி என்று பெயர் எப்படி வந்தது … ?” !!!

வாழ்க்கைக்கும் சாப்பாட்டுக்கும் சம்பந்தம்

மஹான் சாப்பிடுவது என்னவோ அவல்பொரிதான். எப்போதாவது கீரையை தமது மதிய உணவில் சேர்த்துக் கொள்வார் என்று மடத்து ஊழியர்கள் சொன்னது உண்டு. இருந்தாலும் சமையல் பக்குவத்தைப் பற்றி அவர் சொல்வதைக் கேட்டு பிரபல சமையல்காரர்களே மூக்கில் விரல் வைத்திருக்கிறார்கள்.

அவ்வப்போது மடத்திற்கு அரிசி, பருப்பு, உளுந்து என்று பக்தர்கள் மூட்டை மூட்டையாகக் கொண்டுவந்து கொடுப்பார்கள். ஒரு தடவை பக்தர் ஒருவர் தன் தோட்டத்தில் பயிரான கருணைக்கிழங்கை மூட்டையாகக் கொண்டு வந்து கொடுத்தார். மடத்தில் சிப்பந்திகள் மிகவும் திருப்தியாக அதை மசியல் செய்து எல்லோருக்கும் பரிமாறினார்கள். சாப்பிட்டவர்கள், முதலில் அதை எடுத்து வாயில் போட்ட பிறகு அதைத் தொடவே இல்லை. இலையில் மூலையில் அதை ஒதுக்கி வைத்து விட்டனர். ஏனெனில் கிழங்கு மசியல் நாக்கில் பட்டவுடன் அரிப்பு ஏற்பட்டு விட்டது. அதனால்தான் ஒதுக்கிவிட்டார்கள்.

இந்த ’மசியல் பகிஷ்காரம்’ மஹானின் காதுக்குப் போகாமல் இருக்குமா?

சமையல் செய்தவர்கள் மஹானின் முன்னால் கையைக் கட்டிக் கொண்டு விசாரணையை எதிர்பார்க்கும் குற்றவாளிகளைப் போல் நின்றுகொண்டு இருந்தார்கள்.

அவர்கள் எல்லோரும் பயந்தபடி ஏதும் நடக்கவில்லை. அமைதியான குரலில் மஹான் கேட்டார்:

“எப்படிச் சமையல் செய்தாய்?”

“கழுநீரில் நன்றாக அலசியபிறகு புளிவிட்டுக் கொதிக்க வைத்தேன்… இந்தக் கிழங்கு அதற்கெல்லாம் மசியவில்லை… அதனுடைய குணம் மாறவில்லை..” என்று பிரதம சமையல்காரர் குறைப்பட்டுக் கொண்டார்.

பெரியவா சிரித்தபடியே சொன்னார்:

“கருணைக்கிழங்கை வெந்நீரில் வேகவைக்கும்போது அதோடு வாழைத்தண்டை சிறிதாக நறுக்கிப் போட வேண்டும். இரண்டும் நன்றாக வேகும்போது, கருணையின் குணம் மாறிவிடும்” என்றார்.

மறுநாள் இந்த முறைப்படி சமைத்தபோது எல்லோரும் விரும்பி, கேட்டுச் சாப்பிட்டார்கள்.

சமையல் விஷயத்தில் மஹானின் இன்னொரு அனுபவம்.

பண்டிதர் ஒருவர் மஹானிடம் பேச வந்தார். அவரிடம் ஏதேதோ பேசிக்கொண்டு இருந்து விட்டு, மஹான் ’‘இட்லி’ என்று ஏன் பெயர் வந்தது?’ என்று கேட்டார்.

ஏதோ புதிய விளக்கம் தருவதாக நினைத்த அந்தப் பண்டிதர் சொன்னார்:

“இலையில் இட்லியைப் போட்டவுடன் அது காலியாகி விடுகிறது. இட்டு+இல்லை=இட்டிலை-இட்லி” என்றார்.

மஹான் சிரித்துக்கொண்டே அவரிடம் கேட்டார்:

“இலையில் இட்லி விழுந்ததும் எல்லோரும் அதை இல்லையின்னு ஆக்கிடும் சாத்தியம் நம்பும்படியாக இல்லையே. என்னை மாதிரி எத்தனையோ பேர் அதை இலையிலேயே வச்சிண்டு உட்கார்ந்து இருக்காளே, அதனால் நீங்கள் சொல்ற விளக்கம் சரியில்லை.”

”பெரியவா சொன்னா கேட்டுக்கிறேன்….”

“ஏதாவது நாம் சமைக்கிறோமுன்னா, அதுக்குக் கொஞ்சம் சிரமம் எடுத்துக்கணும் இல்லையா?”

“அடுப்புப் பக்கத்துலேயே நிக்கணும். கருகிப் போகாமப் பாத்துக்கணும். இல்லேன்னா பக்குவம் கெட்டுப் போகும் இல்லையா? இட்லியை எடுத்துக்கோங்கோ. அதை ஊத்தி வச்சுட்டு பத்து நிமிஷம் அதை மறந்து அந்தண்டை போய் வேறு வேலையைக் கவனிக்கலாம். தானாக வெந்து, பக்குவமாக இருக்கும். ஒன்றை வைத்துவிட்டுத் திரும்பிப் பாராமல் வருவதை இடுதல் என்கிறார்கள். ‘இடுகாடு, இடுமருந்து’ என்பது போல் இட்லி என்று பெயர் வந்திருக்கலாம்” என்று முடித்தார் எல்லாம் தெரிந்த ஞானியான மஹான்.

மிகப்பெரிய விஷயங்கள் மட்டுமல்லாமல் சிறு சிறு விஷயங்களுக்கும் அவர் அளிக்கும் விளக்கங்கள் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டன. சமையல் விஷயமாக அவர் சொன்ன கருத்துக்கள் காஞ்சிமடத்தில் இன்றும் உலா வருகின்றன.

ஒருநாள் மடத்து சமையல்காரர் ஒருவர், மடத்திற்கு சமையல் செய்ய பெருங்காயம் அதிகமாகத் தேவை என்று விண்ணப்பம் கொடுக்க, “சாம்பார், ரசம் வைக்கும்போது தனித்தனியாக பெருங்காயத்தை போடக்கூடாது. நீ பருப்பை சாம்பாருக்காக வேக வைக்கும்போது அதில் பெருங்காயத்தைப் போட்டுடு. அதே பருப்பு தானே சாம்பார், ரசம் வைக்க உதவுகிறது. அதில் பெருங்காய வாசனை இல்லாமலா போகும்? இப்படி செய்து பார். அதிகப் பெருங்காயம் தேவைப்படாது…” என்று மஹான் விளக்கமாகச் சொன்னார். இத்தனை நாள் சமையல் செய்யும் தனக்கு இந்த உத்தி தெரியவில்லையே என்று புலம்பினார் சமையல்காரர்.

இன்னொரு சம்பவம் – ‘ரசமான விவாதம்’ :

அதாவது குழம்புக்கும் ரசத்துக்கும் என்ன வித்தியாசம்?

“இரண்டிலுமே பருப்பு, புளி, உப்பு, சாம்பார்பொடி பெருங்காயம் தானே இருக்கு?”

அங்கிருந்த பக்தர்கள் “சாம்பாரை முதலிலும் ரசத்தை பின்னாலும் சாப்பிடுகிறோம், அதுதான் வித்தியாசம்” என்றார்கள்.

மஹான் பெரிதாகச் சிரித்தார்.

“குழம்பில் காய்கறி உண்டு. ரசத்தில் இல்லை. இதுதான் வித்தியாசம்” என்றார்.

இந்தக் குழம்பையும் ரசத்தையும் வைத்து அன்று ஒரு சிறிய பிரசங்கத்தையே எல்லோருக்கும் விளக்கமாகச் சொன்னாராம்.
அவர் சொன்னதன் கருத்து என்ன?

“தான் என்னும் அகங்காரம் மனதில் இடம் பெற்று விட்டதால், நாம் குழம்பிப் போகிறோம். அதாவது சாம்பார் போல்… ஆனால் இது இல்லையென்றால் மனம் தெளிவாக இருக்கும் ரசம் போல. இவைகளை மறக்கக் கூடாதுங்கிறதுக்காகத்தான் தினமும் குழம்பு ரசம் வைக்கிறோம். நீங்கள் விருந்துக்குச் சென்றால் குழம்பு, ரசம், பாயசம், மோர் என்று வரிசைப்படி சாப்பிடுகிறோம் இல்லையா? இந்த உணவுக்கலாசாரம் வேறு எங்கேயும் இல்லை. மனிதன் பிறக்கும் போதே அவன் மனதில் ‘தான்’ என்னும் அகங்காரம் இடம் பிடித்து வருகிறது. அவன் பலவிதமான குழப்பத்தில் ஆள்வதால் அவன் மனம் குழம்புகிறது. இதைத்தான் முதலில் நாம் சாப்பிடும் ‘குழம்பு’ எடுத்துக் காட்டுகிறது. அது தெளிந்துவிட்டால் ரசம் போல் ஆகிவிடுகிறது. இவற்றை தொடர்வது இனிமை, ஆனந்தம் அவைதான் பாயசம் – மோர் – பட்சணம் – இதைப் போல் மனிதனின் வாழ்க்கைக்கும் சாப்பிடும் சாப்பாட்டுக்கும் பலவிதமான ஒற்றுமைகள் உண்டு.

மோர் தனித்தன்மை வாய்ந்தது. பிரம்மானந்தத்துடன் நம் மனம் லயிக்க இது உதவுகிறது. பாலிலிருந்து தயிர், வெண்ணை, நெய் மோர் என்று தொடராகப் பொருட்கள் நமக்குக் கிடைக்கின்றன. மோர்தான் கடைசி நிலை. அதிலிருந்து நீங்கள் எதையுமே எடுக்க முடியாது.

அதனால் தான் பரமாத்மாவைக் கலந்தபின், மேலே தொட ஏதும் இல்லை என்பதை மோர் தெளிவாக்குகிறது. அதாவது மோர் சாதம் முடிந்தால் இலையை விட்டு எழுந்திருக்க வேண்டாமா?” என்று அன்றைய தினம் நீண்ட பிரசங்கமே செய்து விட்டார் மஹான்.

நாம் தினமும் சாப்பிடும் சாப்பாட்டைப் பற்றிய விளக்கத்தை இதுவரை, இதைப்போல் யாரும் சொன்னதே இல்லை. இவர் சகலமும் தெரிந்தவர் என்பதற்கு இதைப் போல் எவ்வளவோ எடுத்துக்காட்டுகள், தெய்வீகத்தைத் தவிர அவருக்கு வேறு ஏதும் தெரியாது என்று நினைப்பவர்கள், மஹானை சரிவர அறியாதவராகத்தான் இருப்பார்கள்.

source:::: http://www.periva.proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/6446/life-kanchi-swamis-lectures-venkatasaamy#ixzz2sWGfShHA

Satya Nadella…Tipped to be Microsoft”s Next CEO !!!

Satya Nadella is expected to become the third CEO in Microsoft history.

Satya Nadella

 

Satya Nadella is expected to become the third CEO in Microsoft history. Source: Supplied

HERE are 10 things you didn’t know about Satya Nadella, 47, the likely next CEO of Microsoft, where he would be only the third CEO in the company’s 39-year history. Bill Gates and current boss, Steve Ballmer, are the other two.

• Owns 113.666 shares of Microsoft stock – worth about $4.2 million. Current CEO Steve Ballmer owns 333,252,990 shares, or 4 per cent of the $300 billion company.

• Earned $7.7M in total compensation in 2013, the 2d highest amount in company.

• Played cricket in high school growing up in Hyderabad, in southern India.

• Advice to younger engineers: “Be passionate and bold.”

• Graduate of MIT – but not the one in Massachusetts. Got a 1988 degree in Electronics and Communication Engineering from Manipal Institute of Technology, one of the top engineering schools in India.

• First name is actually Satyanarayana. A real engineering geek, he started at Microsoft in 1992. • Worked on Windows, Bing, Servers and now is now Executive Vice President, Cloud and Enterprise at the software giant.

• Helped bring Microsoft’s Office 365 to the cloud. The company’s cloud business, under Nadella, grew to a $20.3 billion operation last year, up 22 per cent from when he took it over two years earlier.

• Microsoft’s commercial cloud service grew 107 per cent last year, under Nadella’s leadership.

• Nadella also has a Master of Science degree in Computer Science from the University of Wisconsin, Milwaukee, and a Master of Business Administration from the University of Chicago.

• Has just 3,549 followers on Twitter – no wonder, his last tweet was three and a half years ago. “HTML 5 – what fun!” he tweeted. but it is better than Ballmer, who has yet to join the Twitter-sphere.

source:::news.com.au

natarajan

This article originally appeared on the New York Post

ஏலக்காய் எத்தனை அருமை பாருங்க !!!

Inline image 2
ஏலக்காயில் இவ்ளோ இருக்கா?
வாசனைப் பொருட்களின் அரசி என்று வர்ணிக்கப்படுவது ஏலக்காய். சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கக்கூடியது.
ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. அவை…

* குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.

* ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.

* மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், ‘ஏலக்காய் டீ’ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.

* நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.

* வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.

* விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.

* வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.

நன்றி : இனியவன் தஞ்சை @ ஃபேஸ்புக்

natarajan

Time to Thank Good Harvest ….

Bonfire tales – The Hindu.

At the Annual Winter Camp, Prithvi found out about harvest festivals in other parts of India. He also realised it was a time to give thanks for the good harvest.

A nice article in The Hindu is being shared with you all…

 

natarajan

” Idli in Paris ” … Meet Muthuswamy of Mumbai !!!

t’s not caviar and champagne but the humble idli, vada and dosa that is going places. Muthuswamy, who once supplied milk in Matunga, has Mumbai’s upper crust eating out of his hand, quite literally. S Balakrishnan talks to the man behind the batter.

Muthuswamy…..- Photo by Rajendra Gawankar/DNA

When big-time diamond merchant and film producer Bharat Shah wanted to throw a party in Antwerp to celebrate the wedding of his son a few years ago, guess who he turned to for catering the food? Not the Hilton or Radisson but Muthukrishnan Reddy aka Muthuswamy of the Matunga Labour Camp, celebrated for his light-as-air idlis and tangy sambhar.

Muthuswamy, 58, accepted the order with his characteristic alacrity and flew down to the land of De Beers with an entourage of ten cooks and a lot of cooking vessels. He rustled up the pleasantly pungent rasam vadas, fluffy idlis, crisp dosas, perfectly spongy panniyarums. The aroma of freshly ground coriander, tamarind and curry leaves wafted in the party hall, and Muthuswamy had the guests, including the who’s who of the diamond trade, licking their manicured fingers.

More recently, when industrialist Mukesh Ambani and wife Nita wanted to host a Diwali party at their Rs1,600 crore home Antilla in Mumbai’s Carmichael Road, the self-effacing Muthuswamy was the natural choice. The five feet something caterer, clad in a white mundu and shirt, is a regular fixture at parties thrown by the richest couple of the land.

Muthuswamy is also sought after by other biggies of India, including the Ruias and Mittals.

The man who started his career 30 years ago by supplying milk in the Matunga Labour Camp-Dharavi area later graduated to selling idlis and dosas at the ramshackle Uma Shankar Hotel in Dharavi, he has since come a long way. His annual turnover runs into a few crores, but he doesn’t like to discuss it. “You know why,’’ he says.

Muthuswamy is truly bitter about the high rates of taxation in India. “Apart from income tax, I have to pay value added tax, service tax, etc. Almost 60 per cent of my earnings goes to the government. It is not worth it,’’ he complains, much like anyone else in the corporate world.

Muthuswamy receives 50 to 60 catering orders every month for large weddings, anniversaries, birthdays and JLT (Just Like That) parties hosted by Mumbai’s upper crust.

When asked which one was the biggest party he has catered, Muthuswamy replies diplomatically: “Well, all clients are the same for me. What I am interested in is the satisfaction of my clients and their guests.’’

Indeed, gastronomic satisfaction is his USP and pride. Many who have consumed hundreds of idlis in Udupi restaurants, guzzled litres of their sambhar and tasted their fair share of chutneys and masala dosas validate Muthuswamy’s food. His idlis are known for their fluffiness and his sambhar recipe beats the best in the business.

Ask for the secret of his recipes and he says, “I do not compromise on quality come what may. I source the best ingredients in the market and prepare the dishes in a traditional manner. I have done my own experimentation and apart from that I have learnt a lot from recipe books like Samaithupaar. I personally supervise the preparation of all items.’’

His micro-management seems to have paid off.  Muthuswamy presides over quite an empire.
He has catered parties all over the world, including Belgium, Italy, France and South Africa. In fact, until sometime ago, he would export ready-to-cook idlis and other foods to a company in South Africa, which in turn exported them to Paris, Rome and other European capitals. He has stopped his export business because of logistical issues.

Muthuswamy has three sons, one of whom is an aeronautical engineer while the other two are
management graduates who help him run the business. They also have plans to expand.

A few years ago, Muthuswamy purchased a fast-food joint called Relax opposite Matunga railway station and renamed it Arya Bhavan. It is no surprise that Arya Bhavan is a big hit with the Gujarati, Kutchi and south Indian community in Matunga. Interestingly, it sells idlis called the Brahmin idli and Iyengar idli. Muthuswamy also owns a restaurant in Madurai called Nellai Arya Bhavan.

source:::: S Balakrishnan in :DNA   Mumbai

natarajan

” உன் பெயர் என்ன ?… ‘நாராயணசுவாமி ‘…” !!!

 
“பரீட்சையில் நிறைய மார்க் வாங்கினால்தான் மேலே மேலே படிக்க முடியும். இல்லையென்றால் வெறும் போஸ்ட்–கிராஜுவேட் படிப்புடன் நின்றுவிட வேண்டியதுதான்.

நான் எவ்வளவு முயன்றும் எண்பதுக்கு மேல் வாங்க முடியவில்லை. தொண்ணூறாவது வேணும். நியுமராலஜி பிரகாரம் பெயரை மாற்றி வைத்துக்கொண்டால் மார்க் நிறைய கிடைக்கும் என்றார்கள். எண்கணித ஜோதிடர் ஒருவரிடம் போனேன். நாராயணஸ்வாமி ( Narayanaswami ) என்ற பெயரை Narain என்று வைத்துக்கொள்ளச்சொல்கிறார். பெரியவா உத்தரவு கொடுத்தால் ‘நாரெய்ன்’ என்று வைத்துக்கொள்வேன்.”

பெரியவா ஸந்நிதியில், பதினைந்து பேர் நின்றுகொண்டிருந்தபோது தன் விண்ணப்பத்தைச் சொல்லிமுடித்தான், கல்லூரி மாணவன் ஒருவன்..

இதைச் சாக்காக வைத்துக்கொண்டு பெரியவா ஒரு சொற்பொழிவையே நிகழ்த்திவிட்டார்கள்.

” நாற்பது சம்ஸ்காரங்களில் ஒன்று, நாமகரணம். பலபேர்கள் முன்னிலையில், வேதமந்திரங்களைக் கூறி நிகழ்த்தப்படும் சடங்கு. நாமகரணம் செய்வதற்குத் ( பெயர் வைப்பதற்குத்)தான்
வேத மந்திரங்கள் இருக்கின்றன. நாமவிகரணத்திற்கு (பெயரை சிதைத்து மாற்றுவதற்கு) இல்லவே இல்லை.

சுவாமி பெயரைத்தான் வைக்கச் சொல்லியிருக்கு. ‘நம்பி பிம்பி என்று பெயர் வைத்தால் அதெல்லாம் பின்னால் காப்பாற்றாது; கண்ணன் பெயரை வையுங்கள்’ என்று ஒரு ஆழ்வார் பாடியிருக்கிறார்.

நாராயணசுவாமியை, அவ்வளவு நீளமாகக் கூப்பிடா விட்டாலும், நாராயணா, நாராயணா என்று அழைப்பார்கள். சுலபமா புண்ணியம் கிடைத்துவிடும்.

நியூமராலஜி என்று சமீப காலத்தில் பிரசித்தமாக இருக்கு. ஒவ்வொரு இங்க்லிஷ் எழுத்துக்கும் நம்பர் கொடுத்து, அதைக்கூட்டி, ‘நல்லது, கெட்டது’ என்கிறார்கள். இது சுதேசி சரக்கு இல்லை என்பது தெரிகிறது. எண்கணிதப்படி பெயர் மாற்றம் செய்து கொண்டவர்களில் பலர், நல்ல பலன் கிடைத்தது என்கிறார்கள். அது போகட்டும், நியூமராலஜியைப் பற்றி இப்போ தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை.

பையனுக்கு நிறைய மார்க்கு வாங்கணும்னு கவலை; அதனால் பெயரைக் கொஞ்சம் மாற்றி வைத்துக்கொண்டால், ஆதாயம் கிடைக்காதா என்று பார்க்கிறான். அந்த ஆசை சரிதான்; வழி அவ்வளவு சரியில்லையே? என்று சிந்திக்க வைக்கிறது.

கல்வி அறிவை சரஸ்வதி கடாக்ஷம் என்பார்கள். சரஸ்வதியின் அருள் இருந்தால் படிப்பு வரும்; மார்க் வரும். அதற்கு என்ன செய்யணும்?

சரஸ்வதி ஸ்தோத்ரம் இருக்கு;ஸௌந்தர்யலஹரியிலே மூணு ஸ்லோகம், சரஸ்வத பிரயோகம்; மேதாஸூக்தம் என்று வேதமந்திரமே இருக்கு; குமரகுருபரரின் சகலகலாவல்லிமாலை, கம்பநாட்டாழ்வாரின் சரஸ்வதி ஸ்தோத்ரம்—–எல்லாம் பாராயணம் செய்யலாம்.

ஹயக்ரீவர் என்று விஷ்ணு அவதாரம். அவர்தான் சகல கலைகளுக்கும் ‘ட்ரெஷர்ஹௌஸ்’ என்பார்கள். ஹயக்ரீவ ஸ்தோத்ரம், மந்திரம் இருக்கு. மேதா தக்ஷிணாமூர்த்தி மந்திரம் இருக்கு.

இவைகளையெல்லாம் லக்ஷியம் செய்யாமல், இங்க்லீஷ் எழுத்துக் கணக்குப்படி பேர் மாற்றம் செய்து கொள்வது, சாஸ்திர சம்மதமாகப் படவில்லை.”

இத்தனை விஷயங்களையும் பொதுவாகச் சொல்லிவிட்டு, பின்னர் மாணவனைப் பார்த்தார்கள் பெரியவா.

அவன் கண்கள் கெஞ்சிக்கொண்டிருந்தன.

தொண்டர் மூலமாகப் பிரசாதம் கொடுக்கச் சொன்னபோது மாணவர் பெயரைக் கேட்கச் சொன்னார்கள் பெரியவா.

“நாராயணஸ்வாமி” என்று கம்பீரமாகப் பதில் வந்தது!

source::::www.periva.proboards.com

natarajan
Read more: http://periva.proboards.com/thread/2799/numerology-analysis#ixzz2q3gzp3dZ

தைப்பூசமும் வேல் வழிபாடும் …

தைப்பூசம்-ன்னா என்ன?
* பழனிப் பாதயாத்திரை
* மலை முழுதும் பாய்ந்தோடும் காவடி ஆறு!
* வடலூரிலே வள்ளலார் சோதி தரிசனம்,
* திருவரங்கத்திலே தமிழ்த் திருநாளாம் தைத்திருநாள்!!
…இப்படி பல விழாக்கள்!

என்னவன் முருகனுக்கும் தைப்பூசத்துக்கும் என்ன தொடர்பு?

* முருகன் தோன்றிய நாள் = வைகாசி விசாகம்
* அறுவரும் ஒருவர் ஆன நாள் = கார்த்திகையில் கார்த்திகை
* அன்னையிடம் வேல் வாங்கிய நாள் = தைப்பூசம்
* அசுரரை அழித்தாட்கொண்ட நாள் = ஐப்பசியில் சஷ்டி
* வள்ளியைத் திருமணம் புரிந்த நாள் = பங்குனி உத்திரம்

இப்படி…
அன்னையிடம் வேல் வாங்கி,  முதன் முதலாக,  திருக்கையில் வேல் ஏந்திய நாளே = தைப்பூசம்!

இந்த வேல் வாங்கிய நாளிலே, “வேல்” என்றால் என்ன?-ன்னு கொஞ்சம் பார்ப்போமா?
வேல் என்பது தமிழ்த் தொன்மத்தின் தனித்த அடையாளம்!!

வேல், சங்கத் தமிழில் எப்படியெல்லாம் வலம் வருகிறது….



1. வேல் – பெயர்க்காரணம்:

வேலுக்கு அப்படி என்ன சிறப்பு-ன்னு கேக்குறீங்களா?
வெல் = வேல்!
’வெல்’ என்ற வினைச்சொல்லே நீண்டு ’வேல்’ என்ற பெயர்ச்சொல் ஆகிறது!
ஆகவே, வேல் = வெற்றி!

2. வேல் – தமிழ்த் தொன்மம்:

ஆயிரம் ஆயுதங்கள் இருப்பினும், தமிழ் மன்னர்களின் தனித்த பெருமிதம் = வேல்!
ஆண்டாளே, வென்று பகை கெடுக்கும் நின் கையில் “வேல்” போற்றி-ன்னு தான் மாயோனாகிய கண்ணனைப் பாடுறா!
வேலும் சங்கும் சங்கத் தமிழ் மரபு! திருமங்கை ஆழ்வார் கையில் இப்பவும் வேல் உண்டு!

சங்க காலத் தமிழ் மண்ணில், வேல் வழிபாடே மிகுந்து இருந்தது! பின்னாளில் தான் உருவமும், ஆறு முகங்களும், பன்னிரு கரங்களும்!
ஆகமம், அது இது-ன்னு நுழைத்த பின்பே, ஒரு சாராரின் தலையீட்டால், மற்ற வழிபாடுகள் மெல்ல மெல்லப் புகுந்தன!

சிலப்பதிகாரத்தில், வேலுக்கு எனத் தனிக் கோட்டமே இருக்கும்! இந்த வேல் வழிபாடு நாளடைவில் நின்று விட்டது!
வேல் வழிபாடு-ன்னா நாகரிகம் இல்லாதவர்கள் கும்புடுவது, விக்ரஹாதி மந்திர வழிபாடே நாகரிகம் என்று ஆகி விட்டது:(

பல தொன்மையான கோயில்களில் முருகன் சிலையே இருக்காது! வெறும் வேல் வழிபாடு தான்!
* பழமுதிர்சோலை, திருச்செங்கோடு,
* ஈழத்தில் செல்வர் சந்நிதி,
* மலேசியாவில் பத்துமலை,
* பல கிராம ஆலயங்கள் எல்லாம் வேல் வழிபாடு தான்!

 

சிக்கல் சிங்காரவேலன் வேல் வாங்கும் காட்சி:

முருகன் அன்னையிடம் வேல் வாங்கும் காட்சியை, சிக்கல் சிங்காரவேலர் சன்னிதியில், ஒவ்வொரு ஆண்டும் நடித்துக் காட்டுவது வழக்கம்!
அப்போது சிங்காரவேலர் திருமேனி, வேலின் கொதியால் வியர்க்கிறது என்று சொல்வாரும் உளர்!

முருகன் திருமேனியைத் துடைத்து எடுப்பதும் வழக்கம்! எந்தத் திருமுழுக்கும் (அபிஷேகம்) இல்லாமலேயே, ஒத்தி எடுக்கும் துணிகள், ஈரமாய் நனைவதைக் காணலாம் என்று கூறுவர்!

முருகன் வேறு, வேல் வேறு அல்ல!

வேலுக்கு = உடம்பிடித் தெய்வம்-ன்னே பேரு!
= உடன் பிடித் தெய்வம்!
முருகனைப் போலவே வேலுக்கும் ஆறு முகம் உண்டு! ஆறு படைகள் உண்டு!பார்த்து இருக்கீங்களா?

இன்னிக்கு பார்த்தீங்கன்னா….பல படைவீடுகளிலும் முருகன், தன் கையில் வேல் ஏந்தியே இருக்க மாட்டான்!
அவன் தோளிலே தனியாக, சார்த்தியே வைத்திருப்பார்கள்!

ஏனோ, அதைப் பார்க்கும் போதெல்லாம்….நானே அவன் தோளில் சாய்ந்து கொள்வது போல ஒரு உணர்வு எனக்கு!

வேல் வேறு, முருகன் வேறல்ல!
வேலே = முருகன்! முருகனே = வேல்!
முந்து முந்து…..முருகவேள் என்னுள் முருகவேலாய் முந்து!!

வெஞ்சமரில் அஞ்சேல் என “வேல்” தோன்றும்…முருகா என்று ஓதுவார் முன்!

source::::http://madhavipanthal.blogspot.com.au/

natarajan

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்வோம் …

வைகுண்ட ஏகாதசியான இன்று, இந்த ஸ்தோத்திரத்தைப் படித்து ரங்கநாதர்அருள் பெறுவோம்.

 

* காவிரி நதியின் நடுவில் இருக்கும் ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டவரே! ஏழு திருமதில்களால் சூழப்பட்டவரே! தாமரை மொட்டு போன்ற அழகான விமானம்
கொண்டவரே! ஆதிசேஷன் என்னும் கட்டிலில் யோக நித்திரையில் ஆழ்ந்திருப்பவரே! கருணைக் கடலாகத் திகழ்பவரே! ரங்கராஜரே! உம்மைப் போற்றுகிறேன்.
* ஸ்ரீதேவி, பூதேவியரால்வணங்கப்படுபவரே! இடக்கையை இடுப்பில் வைத்தபடி துயில்பவரே! கஸ்தூரி மணம் கமழும் “ஊர்த்துவ புண்ட்ரம்’ என்னும் திலகத்தை
நெற்றியில் கொண்டவரே! காது வரை நீண்டிருக்கும் பெரிய அழகான தாமரைக் கண்களை உடையவரே! தரிசிக்கும் பக்தர்களின்உள்ளங்களைக் கொள்ளை
கொள்பவரே! தாமரை மலர் போன்ற திருமுகம் கொண்டவரே!
சம்சார சாகரத்திலிருந்து உயிர்களைக் காப்பவரே! உம்மைத் தரிசித்த பாக்கியத்தைத் தந்தருள வேண்டும்.
* மது, கைடபர் என்னும் அரக்கர்களை அழித்தவரே! இந்திர நீலமணி போல பிரகாசம் மிக்கவரே! நாராயணா, மாதவா, கேசவா, ஹரி, முகுந்தா, முராரி, கோவிந்தா
என்னும் திருநாமங்களால் போற்றப்படுபவரே! ஸ்ரீரங்கப் பட்டணத்தை அலங்கரிப்பவரே! நீராடுவோரின் பாவம் போக்கும் காவிரிக் கரையில் நித்யவாசம்
செய்பவரே! புண்ணியம் மிக்கவரே! கீர்த்தி நிறைந்தவரே! எப்போதும் எங்களைக் காத்தருள வேண்டும்.
* லட்சுமியின் விலாசமாகத் திகழும் ஸ்ரீரங்க நகரில் வாழ்பவரே! வேத கோஷம் கேட்டபடி துயில்பவரே! மோட்சத்தை அருள்பவரே! முத்துக்கள் இழைத்த கிரீடம் அணிந்தவரே! மங்கள குணம் கொண்டவரே! தேவியர் வருடுகின்ற திருப்பாதங்களை உடையவரே! உலக உயிர்களைக் காப்பவரே! பிரம்மதேவரால் பூஜிக்கப்பட்டவரே! செல்வ வளம் தருபவரே! எங்கள் விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றி வைப்பீரா..

source:::: Dinamalar Tamil Daily

natarajan