” நேர்மை பற்றி பேச உரிமை உண்டா நமக்கு … ? ”

இது தேர்தல் காலம். நேர்மை, தூய்மை, ஊழல், லஞ்சம் என்பன உள்ளிட்ட சொற்களின் ஆதிக்கம் மிகுந்த காலம். பிரதமர் வேட்பாளர் முதல் எம்.பி. வேட்பாளர் வரையிலானவர்களின் நேர்மையைப் பற்றி அறிந்தோ அறியாமலோ பேசுகிறோம். சரி, இந்த ‘நேர்மை’யின் நிலைமை நம் அன்றாட வாழ்க்கையில் எப்படி இருக்கிறது?

நல்லனவற்றை தூரத்தில் வைத்து ஆராதித்தே பழக்கப்பட்டுப்போன நாம், அதன் கரம் பிடித்து நடக்க முயல்வதே இல்லை. அதனால்தானோ என்னவோ, இறைவனுடன் கூட வழிநடப்பதை தவிர்த்து அவருக்கு தனியாக இல்லம் அமைத்து கொடுத்து வணங்குகிறோம். வெறும் சொல்லாக பார்க்கப்பட வேண்டிய ‘நேர்மை’க்கு, என்று தூய்மை சாயம் பூசப்பட்டதோ, அன்றே அது ஊர் பஞ்சாயத்தால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுவிட்டது.

‘எங்கு பார்த்தாலும் ஊழல், ஊழல், ஊழல், ஐயகோ..!’ என்று தினம் தினம் செய்தித்தாளை பார்த்து விட்டு குமுறும் நடுத்தர வர்க்க தந்தை, தன் மகளுக்கு ஆயிரக்கணக்கில் லஞ்சம் (மன்னிக்கவும். அதிகாரப்பூர்வ சொல் – டொனேஷன்) கொடுத்து சிறந்தது எனக் கருதப்படும் பள்ளியில் எல்.கே.ஜி. சீட் பெற்று கொடுத்து பெருமை கொள்வதை என்னவென்று சொல்வது?

ஐந்து வயதில் பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைத்து விட்டு, அறுபதில் கரும்பாய் இருக்க வேண்டும் என்று எண்ணுவது எந்த விதத்தில் நியாயம்?

மகனின் பழக்கவழக்கத்தை வளர்க்கிறேன் என்ற பெயரில் மளிகைக் கடைக்கு அழைத்து செல்கிறார் தாய். கடையில் இருக்கும் ஏழை முதியவர் கணக்குப் பிழையில் பத்து ரூபாய் குறைத்து சொல்ல, சொன்னதை கொடுத்து விட்டு திரும்பும் தாயிடம், “பத்து ரூபாய் கூடுதலா வருமே மா?” என்று கேட்கிறான் மகன். “விடுடா. பத்து ரூபாய் லாபம்” என்று சொல்லி சிரிக்கும் தாய், மகனிடம் விதைப்பது நல்ல பழக்கவழக்கங்களை அல்ல, எளியவரை ஏய்ப்பது என்ற கொடூரமான விதையை. விதைப்பது சரியாய் இருந்தால்தானே வளர்வது முறையாய் இருக்கும்?

நேர்மை இச்சமூகத்தால் இரு வகையாய் அனுசரிக்கப்படுகிறது. ஒன்று அர்ச்சிக்கப்படுகிறது அல்லது வஞ்சிக்கப்படுகிறது. இரண்டுமே தவறென்ற போதிலும், அர்ச்சிக்கப்பட்டாலாவது செய்வது தவறென்ற உள்ளுணர்வு உள்ளத்தை உறுத்தும். நேர்மை வஞ்சிக்கப்படும்போது, நேர்மையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படும் அவல நிலைக்கு தள்ளப்படுகிறது. செய்வது தவறென்றுகூட புரியாத பரிதாப நிலையே நிலவுகிறது.

சமீபத்தில் என் அலுவலகத்தில், போக்குவரத்து செலவுகளை திரும்பப் பெரும் சலுகை வழங்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட தொகை வரை பற்றுச்சீட்டு இல்லாமலே பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. பயணமே செய்யாதவரெல்லாம் பயணம் செய்ததாகக் கூறி ஆயிரக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டனர். நாங்கள் சிலர் மட்டும் உள்ளதை உள்ளபடி பெற்றுக் கொண்டோம். எதிர்பார்க்காத வகையில் அனைவரின் முன்னர் நாங்கள் காட்சிப் பொருளாய் தென்பட்டோம். ‘பிழைக்கத் தெரியாதவர்கள்’ என்ற பட்டத்தையும் பெற்று, அனைவருக்கும் எள்ளிநகையாட கைப்பொருளாய் சிக்கிக் கொண்டோம். குற்றவாளி கூண்டில் நிற்பதைப் போன்றே உணர முடிந்தது. கேள்வி மேல் கேள்வி, “நிறைய பணம் வச்சுருக்கியோ?” என்ற கேள்வி சற்று வதைக்கவே செய்தது. “அது என் பணம் இல்லையே. அதை எப்படி பெறுவது?” என்று மனம் கேட்க துடித்தாலும், கேட்டாலும் ஒரு பயனும் இல்லை என்று எண்ணி புன்னகைத்து விட்டு முடித்தேன்.

குறுந்தொழில் முதல் பெருந்தொழில் வரை வரி ஏய்ப்பு செய்வது, தவறான கணக்கு காண்பிப்பது, பற்றுச்சீட்டு இல்லாமல் விற்பனை செய்வது, தள்ளுபடி கிடைக்கும் என்பதால் பற்றுச்சீட்டு இல்லாமல் பொருள் வாங்குவது, சாலையோர கடைகளில் சாப்பிட்டுவிட்டு கணக்கு சொல்லும் போது 2 இட்லி குறைவாக சொல்வது, மொழி தெரியாத ஆட்களிடம் ஆட்டோக்காரர்கள் அதிக பணம் கேட்பது, வேலை நேரத்தில் கஸ்டமர்களை பார்க்கப் போவதாக சொல்லி மார்க்கெட்டிங் எக்சிக்யூடிவ்கள் வீட்டில் ஓய்வு எடுப்பது, விலை தெரியாத மக்களிடம் பொருட்களை அதிக விலைக்கு வியாபாரிகள் விற்பது… இது போன்ற சிறிய அளவில் செய்வதெல்லாம் தவறில்லை என்று நாம் எண்ணும் வரையில், பெரிய வணிகர்கள் கோடி கோடியாய் ஏய்த்து சம்பாதிப்பதையும், அரசியல்வாதிகள் கத்தை கத்தையாய் ஊழல் செய்வதையும் தட்டி கேட்க நமக்கு அருகதை இல்லை என்றும், அவர்கள் திருந்துதல் நடக்காத காரியம் என்றுமே எண்ணத் தோன்றுகிறது.

கேள்வி கேட்க வேண்டிய ‘நேர்மை’, கேலிப் பொருளாய் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்படுவதும், கேள்விக் கணைகளால் துளைக்கப்படுவதும், இந்தியாவுக்கு மட்டும் இல்லை, மானுடத்துக்கே இழி நிலை என்றே கொள்ள முடிகிறது. எப்போதும் போல, என்றாவது ஒரு நாள் நேர்மை அர்ச்சிக்கப்படவோ, வஞ்சிக்கப்படவோ இல்லாமல், இயல்பாக அனுசரிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.

ARUN KRISHNAN   in THE HINDU… TAMIL

natarajan

 

 

 

” உங்கள் உடல் ஒரு கார் அல்ல- …” !!!

 

ஒரு நகைச்சுவைக் காட்சியில் வயிற்று வலி வந்த நோயாளியைச் சுற்றிப் பல மருத்துவர்கள் நிற்பார்கள். ஒருவர் குடல் நோய் மருத்துவர், அவர் உடனடியாகக் குடல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பார். சிறுநீரக மருத்துவர் கிட்னியில் இருக்கும் கல்லை உடைக்க வேண்டும் என்றும், எலும்பு மருத்துவர் எலும்பில் உடனே பிளேட் மாட்ட வேண்டும் என்றும் சொல்வார்கள்.

இப்படி ஒவ்வொரு சிறப்பு மருத்துவரும் ஒவ்வொன்றைக் கூற நோயாளி மயங்கிவிடுவார். தற்போது இந்த நகைச்சுவை மருத்துவ உலகில், மருத்துவமனைகளில் அன்றாடம் நடக்கும் சம்பவமாக மாறிவிட்டது. குடும்ப மருத்துவர் யார், அவருடைய தேவை என்ன என்பது பற்றி மனநல மருத்துவர் ஆ.காட்சன் கவனப்படுத்தும் விஷயங்கள்:

ஒரு டாக்டரை, இவர் எங்களுடைய பேமிலி டாக்டர் என்றும், இவர்கிட்டதான் எங்க குடும்பமே மருத்துவம் பார்த்துக் கொள்வோம் என்று சொல்லக் கேள்விபட்டிருப்போம். ஆனால், ஃபேமிலி டாக்டர் என்று அழைக்கப்படும் குடும்ப மருத்துவர் யார் என்று தெரிந்துகொள்வது அவசியம்.

முன்பெல்லாம் குடும்பத்தில் உள்ளவர்களுக்குச் சிறு வயதிலிருந்தே எந்த நோயாக இருந்தாலும் நன்கு பரிச்சயமான ஒரு மருத்துவரிடம் மட்டுமே, பெற்றோர் அழைத்துச் செல்வது வழக்கம். அந்த நபரின் உடல்நிலை, அடிக்கடி ஏற்படும் பிரச்சினைகள், குடும்பம், பொருளாதாரச் சூழ்நிலை, எந்த மருந்து ஒத்துக்கொள்ளும், எது ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பது போன்ற விவரங்கள் எல்லாம் அவருக்கு அத்துப்படியாகி இருக்கும்.

ஒருவேளை அவர் தனது மருத்துவ வரம்பை மீறிய நோயாக இருந்தால், எந்தச் சிறப்பு மருத்துவரிடம் அல்லது உயர் சிகிச்சைக்குச் செல்ல வேண்டும் என்பதை உங்களுக்கு வழிகாட்டும் அல்லது முடிவுஎடுக்கும் முக்கிய நபர்களில் ஒருவராக இருந்து சொல்வார் சரி, நோய்க்கும் குடும்ப மருத்துவருக்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் கேட்கலாம்.

நம்பிக்கையே அடிப்படை காரணம்

ஒரு நோயாளியின் நோயைக் கண்டறிவது மற்றும் குணப்படுத்துவதில் அந்த நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடையே ஏற்படும் நம்பிக்கை மற்றும் புரிந்துகொள்ளலை அடிப்படையாகக் கொண்ட ஒரு உறவு தான் அடித்தளம் எனக் கூறுகிறார் எக்கிஹார்டு ஒத்மர் என்ற மருத்துவ அறிஞர். ஒரு நோயாளி மருத்துவரிடம் கொண்டுள்ள நம்பிக்கை, எதிர்பார்ப்பு, உணர்ச்சிகள்தான், மருத்துவர் – நோயாளி என்ற உறவை மேம்படுத்துவதுடன் நோய் குணமடைய ஒரு காரணியாகவும் அமையும்.

இதை உளப்பகுப்பாய்வின் தந்தை என்றழைக்கப்படும் 19-ம் நூற்றாண்டின் மனநல மருத்துவர் சிக்மண்ட் ஃபிராய்டு (Sigmund freud) தெளிவாக விளக்கியுள்ளார். தாய் – குழந்தை உறவு வளர்ச்சிக்கும், கணவன் – மனைவி உறவு |வாழ்க்கைக்கும் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு இந்த மருத்துவர் – நோயாளி உறவு என்பது மனரீதியாக மட்டுமல்ல, உடல் நோய்கள் குணமடைதலில் மருந்துகளுக்கு நிகரான முக்கியப் பங்கையும் வகிக்கிறது.

இன்றைய மருத்துவ உலகம்

இத்தகைய மதிப்பு வாய்ந்த உறவு, இன்றைக்கு வெறும் சேவை அளிப்பவர் – வாடிக்கையாளர் என்ற நிலைக்கு மாறியதற்கு இரு தரப்பினருமே பொறுப்பு தான். பெரிய மால்களில் பலரும் விண்டோ ஷாப்பிங் செய்வதைப் பார்க்கலாம்.

அது போலத்தான் பல நோயாளிகள் அவர்களாகவே ஒரு முடிவுக்கு வந்து, ஒவ்வொரு நோய் அறிகுறிக்கும் ஒவ்வொரு சிறப்பு நிபுணரைத் தேடி மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறங்கும் நிலை உள்ளது. திருப்திக்காக ஒரே பிரச்சினைக்குப் பல மருத்துவர்களின் ஆலோசனையை நாடும் நிலை உள்ளது. இதை ‘டாக்டர் ஷாப்பிங்’ என்று சொல்லலாம்.

பின்விளைவுகள்

சுருக்கமாகச் சொன்னால் பல மெக்கானிக்குகளின் கையில் சிக்கிய காரின் கதைதான் இது. மொத்தத்தில், பரஸ்பரப் புரிந்துகொள்ளல் மற்றும் மருத்துவர் – நோயாளி இடையிலான உறவு ஏற்பட இரு பக்கத்தில் உள்ளவர்களும் வாய்ப்புகள் கொடுக்கவில்லை என்பதே உண்மை.

குடும்ப மருத்துவர் முறை மாறிவருவதால் நோய் கண்டறிவதில் காலதாமதம், வீண் அலைச்சல், பண விரயம் ஏற்படுவதுடன் மருத்துவத்தின் மீதான நம்பிக்கையும் குறைகிறது. மேலும் முன் காலங்களைக் காட்டிலும் நோயாளியின் உறவினருக்கும் மருத்துவ ஊழியருக்கும் இடையே ஏற்படும் பிரச்சினைகள் அதிகரிப்பதற்கு மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையேயான கருத்துப் பரிமாற்றத்தில் இடைவெளி அதிகரித்துள்ளதே காரணம்.

இதனால் சிறப்பு மருத்துவர்களைப் பார்ப்பதே தேவை இல்லை என்று அர்த்தமல்ல. தேவைப்படும் நேரத்தில், அது அவசியமான ஒன்றுதான். ஆனால், குடும்ப மருத்துவர் முறை என்பது, அதைக் காட்டிலும் அதிக நன்மைகள் நிறைந்த விஷயம். நவீனமயமாக்கத்தை பின்பற்றிச் சென்று, பாரம்பரியப் பழக்கங்களை நாம் மறந்து போயிருந்தாலும், நலம் பயக்கும் இந்த மருத்துவர் – நோயாளி உறவைப் பேணி காத்தால் நமது எதிர்காலச் சந்ததிகளுக்கு நல்வாழ்வு நிச்சயம்.

மனநல மருத்துவர் ஆ.காட்சன், தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

 

Message For the Day…” Honour Your Elders and Serve Them With Smile “….

 

Students and youngsters must have challenging attitude towards things and honour physical labour. You must be eager to be of service to those who need it on account of their disabilities. Honour your elders and do not miss any chance of serving or pleasing them. Whatever gives you health and joy, welcome it – but do not lower yourself by indulging in vulgar pastimes. Do not wander aimlessly in the streets or frequent cinema halls and mix with undesirable company, or cultivate bad habits for fun. Remember that you must raise your motherland to great heights through your hard work and effort. When you develop such virtues, the nation will prosper.

 

Sathya Sai Baba

Message For This Day… Sri Rama Navami…Significance of the Name RAMA…

Rama’s name is a life-giving essence with esoteric significance. It consists of three syllables: Ra + Aa + Ma. The combination of the three letters constitute the name ‘Rama’. Ra representing Agni (the Fire God), burns away all sins; Aa representing Surya (the Sun God), dispels the darkness of ignorance; and Ma representing Chandra (the Moon God), cools one’s temper and produces tranquility. The name Rama has the triple power of washing away one’s sins, removing one’s ignorance, and tranquilizing one’s mind. How can this profound meaning of the name Rama be imparted to mankind? This can be done only by the Divine coming in human form and demonstrating to mankind the power of the Divine. Rama was one who, while appearing to lead the life of an ordinary man, led the Life Divine. He demonstrated the ideal life of a spiritually realised person.

 

 

Sathya Sai Baba

” யாகம் நடந்த தீவின் பெயர் என்ன தெரியுமா ” ?

 

மகாபெரியவாள் சிவாஸ்தானத்தில் தங்கியிருந்தார்கள். அங்கிருந்த ஸ்ரீ பிரம்மபுரீஸ்வர்ர் ஆலயத்துக்கு அப்போதுதான் பெருமை வந்த்து. பிரும்ம ஸ்வரூபியான் பெரியவாளைத் தரிசிக்க வந்த அடியார்கள் எல்லாரும் பிரும்மபுரீஸ்வர்ரையும் நிச்சயமாகத் தரிசனம் செய்தார்கள்.

நாங்கள் பெரியவாளைத் தரிசனம் செய்யச் சென்றிருந்தோம். அன்றைக்குப் பெரியவா, மௌனம் ! ஆனால். அவர்களுடைய அருட்பாரிவையே பக்தர்களுக்குப் போதுமானதாக இருந்த்து.

அந்த்ச் சமயம் பார்த்து, இந்தோனேஷியாவிலிருந்து ஒரு சரித்திர ஆராய்ச்சியாளர் தரிசனத்துக்கும், சில சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்கவும் வந்தார்.

நல்லகாலமாக, அன்றைக்குக் காஷ்ட மௌனம் இல்லை; கைகளால் ஜாடைகள் காட்டினார். அதை விவரித்துச் சொன்னார், அணுக்கத் தொண்டர்.

அவருக்குச் சரித்திர ஞானம் – அதுவும், இந்தோனேஷிய சரித்திரம் ! – இல்லவேயில்லை.

நான் மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியராதலால், தொண்டர் கூறியதை மேலும் தெளிவாக ஆங்கிலத்தில் கூறி வந்தேன்.

இந்தோனேஷியா என்பது அநேகம் தீவுகளின் தொகுதி. அவற்றில், ஒரு தீவில், ஒரு இந்து மன்னர் நட்த்திய யாகத்தைப் பற்றி மிகவும் ஆர்வத்துடன் கூறினார், அந்த ஆராய்ச்சியாளர்.

“யாகம் நடந்த தீவின் பெயர் என்ன?” என்று ஜாடை மூலமாகவே பெரியவா கேட்டார்கள்.

ஆராய்ச்சியாளருக்குத் தெரியவில்லை, நூற்றுக்கணக்கான தீவுகளின் பெயரை நினைவில் வைத்துக் கொள்வது சாத்தியமில்லை என்றாலும், சில முக்கியமான் தீவுகளின் பெயர்களைக் கூறத் தொடங்கினார். அவர் ஒன்றொன்றாகத் தீவின் பெர்யரைச் சொன்னதும், ‘அது இல்லை’ என்ற பாவனையில் பெரியவா தலையை அசைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆராய்ச்சியாளருக்கே அலுப்பு வந்துவிட்ட்து. “நூற்றுக்கணக்கான தீவுகள் இருக்கும்போது, அவைகளின் பெயர்கள் பெரியவாளுக்கு மட்டும் தெரிந்திருக்கப் போகிறதா என்ன?” என்ற எண்ணமும் தோன்றியிருக்க்க் கூடும்.

பெரியவா, பக்தர்களின் கூட்ட்த்தில் பார்வையைச் செலுத்தினார். பின், தன் செவியின் கீழே, கைவிரல்களை வட்டமாக வைத்து, ‘என்ன பெயர்?’ என்று கேட்பது போல ஜாடை காட்டினார்கள்.

ஒருவர், “குண்டலம்” என்று மெல்லிய குரலில் கூறினார்.

பெரியவா, ‘அதுதான்! .. அவனிடம் சொல்லு …’ என்று ஜாடை காட்டினார்கள்.

அங்கு நடப்பதையெல்லாம் விந்தையுடன் பார்த்துக் கொண்டிருந்த இந்தோனேஷிய ஆராய்ச்சியாளரிடம், ‘குண்டலம்..” என்ற சொல் இரைந்து கூறப்பட்ட்து.

ஒரு துள்ளு துள்ளினார், அவர்.

“ஆமாம்! அந்த யாகம் நடந்த தீவின் முதற்சொல் குண்டலம் தான்!” என்று பக்தர்களிடம் கூறிவிட்டு, பெரியவாளிடம் முழுப் பெயரையும் தெரிவித்தார்.

பெரியவா புன்னகைத்தார். ஆராய்ச்சியாளருக்கு மகா ஆச்சரியம் ! தன்னுடன் வந்திருந்தவர்களிடம், அவர்கள் மொழியில் தன் வியப்பை வெளிப்படுத்திப் பேசி, பெரியவாளின் பூகோள ஞானத்தைப் பெரிதும் போற்றினார்.

ஆனால் பக்தர்களுக்கெல்லாம் உண்மை தெரியும். பெரியவா, ஞானக் களஞ்சியம்; ஞான ஊற்று; அனைத்து ஞான்ங்களையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ரத்தினப் பெட்டகம்.

ஆசிரியனான எனக்கு நன்றாகவே புரிந்த்து – ‘இது, வெறும் படிப்பு அறிவு அல்ல !”

இந்த அதிசய நிகழ்ச்சி நடந்தபோது நாங்களும் அதைக் காணக் கிடைத்த்து, எங்கள் பாக்கியம்.

 

http://www.periva.proboards.com   Source: Maha Periyavaal Darisana Anubhavangal – Part 4
As narrated by Sri V.Sundaram, Cuddalore

Contributed by Forum Member Shri Sankara Narayanan

natarajan

Message For The Day…Be Like Rama in Your Individual Conduct…”

 

 

The profound message the divine epic Ramayana gives is: One must lead the life of a human being, and one must seek oneness with the Divine. In every human being, all the three natures – human, divine, and demonic – are present. But most people today ignore their humanness and Divinity, and foster only their demonic nature. In fact, one should strive to manifest the Divinity, and not display one’s weakness or unpleasant qualities. In every act, Rama set the example, be it in individual conduct, in the discharge of duties to the family, or in fulfilling the obligations to society. Rama demonstrated the ideals to be followed. All should begin with fulfilling their individual obligations. The duty of the individual is to manifest the Divinity within. As an individual, Rama revealed the Divinity in Him through His ideal conduct.   

Sathya Sai Baba

” What is That … ? ”

A Tale of Father and Son
In a few minutes, this Greek film shows us why, when it is our turn to take care of those that gave us their all, we should have as much patience for them as they did for us.

 

 

source:::: youtube

natarajan

 

 

” காலையில் ரெண்டு நிமிஷம் ‘ ராமா ராமா ‘ சொல்லுங்கோ “…..

 

பெரியவாள் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துகொண்டிருந்தார்கள்.

எதிரே, ஒரு பெரிய மரம். தடினமான குரங்கு ஒன்று வந்து மரத்தில் ஏறியது. பின், இருபது – முப்பது குரங்குகள் அந்த லீடர் குரங்கை தொடர்ந்து மரத்தில் ஏறின.

பெரியவாள், ஒரு கூடை மாம்பழத்தை மரத்தடியில் போட சொன்னார்கள்.

லீடர் குரங்கு என்ன உத்தரவு எப்படி போட்டதோ தெரியவில்லை! ஆனால், மற்ற குரங்குகள் ஒவ்வொன்றாக வந்து பழத்தை எடுத்துகொண்டு மேலே சென்றன. லீடர் குரங்கு மட்டும் ஒரு பழத்தை கூட தொடவில்லை!

பெரியவாள் சொன்னார்கள்:

“குரங்குகள் போன்ற மிருகங்களுக்கு கூட ஒரு discipline இருக்கு! லீடர் குரங்கு சொல்கிறபடி நடக்கின்றன.

“காட்டில், யானைகளுக்கு ஒரு தலைமை யானை இருக்கும். அந்த லீடர் யானையை follow பண்ணித்தான் மற்ற யானைகள் செல்லும்.

“ஒரு கட்டெறும்பு செத்துபோனால், மற்ற கட்டெறும்புகள் அதை இழுத்துச் செல்லும்.

“ஒரு காக்கை இறந்து போனால், மற்ற காக்கைகள் மரத்தில் உட்கார்ந்துகொண்டு துக்கமாய் கதறும்.

“ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள் தான் குரு சொல்கிறபடி நடப்பதில்லை. என்னை பார்த்து, நீங்களெல்லாம் ஆசார்யாள். பெரியவாள் என்றெல்லாம் சொல்கிறீர்கள். ஆனால், நான் சொல்வதை உங்களால் செய்ய முடிகிறதில்லை!”

கவனமாக கேட்டுகொண்டிருந்த பக்தர்கள், ஒரே குரலாக, “பெரியவா என்ன உத்தரவு போட்டாலும் செய்கிறோம்” என்று பக்தியோடு பதிலளித்தார்கள்.

“சரி, காலையில் இரண்டு நிமிஷம், சாயங்காலம் இரண்டு நிமிஷம், எனக்காக ஒதுக்குங்கள். இருபத்திநான்கு மணி நேரத்தில், நாலு நிமிஷம் தான் கேட்கிறேன்.

“காலையில், இரண்டு நிமிஷம் “ராம, ராம” என்று சொலுங்கோ; சாயங்காலம் இரண்டு நிமிஷம் “சிவ, சிவ” ன்னு சொலுங்கோ…”

“அப்படியே செய்கிறோம்” என்று சுமார் நூறு பேர்கள் தெரிவித்து கொண்டார்கள்.

அமளி அடங்கியதும், பெரியவாள் அருகிலிருந்த தொண்டர்களிடம், “பத்து பன்னிரண்டு பேர்களாவது , சொன்ன சொல்லை காப்பாத்துவா” என்றார்கள்.

அந்த, யாரோ பத்து பன்னிரண்டு புண்ணியாத்மாக்களை உருவாக்குவதற்காகத்தான்., ஆழமான கருத்துடன், அரைமணி lecture!

குரங்கு, காட்டு யானை, கட்டெறும்பு, காக்கை – நமக்கு நல்ல வழிகாட்டிகள்; “ஆச்சார்யர்கள்”.

அவர்களை (அவைகளை) யாவது follow பண்ணலாம் தானே?

 

source::::www.periva.proboards.com

natarajan

Message For the Day…” Think Before Act…Discriminate Between Good and Bad…”

 

 

Every action carries with it an equal reaction. Every action is a seed, and these seeds grow into trees, so always undertake only sacred actions. Sometimes, we undertake actions with full enthusiasm and joy. When we end up suffering from the action’s consequences, we shed tears and lament. Hence, before you start doing anything, you must first think; discriminate between good and bad action, and conduct yourselves accordingly. You must also give importance to the appropriateness of the speech that flows through the action. Never do anything that will cause others trouble. It may appear impossible to go on with your duties without the feeling of body consciousness and attachment. But by constantly thinking of God, you must reduce these feelings. Then there will be no misery; pain and pleasure will not bother you.

 

Sathya Sai Baba