அட்சய திரிதியை அன்று தானம் செய்வது நமது பிரதான கடமை …

 

27ஏப்

2014
00:00

மே 2 – அட்சய திரிதியை

அட்சய திரிதியை அன்று, ஏதாவது மதிப்புள்ள பொருள் வாங்க வேண்டும் என்று சொல்வர்; இது, வெறும் வார்த்தைக்காக சொல்லப்பட்ட விஷயம் அல்ல!
தங்கம் வாங்க வேண்டுமானால், பெரும் தொகை வேண்டும்; பெரும் தொகை கையில் இருக்க வேண்டுமானால், கடும் உழைப்பு இருக்க வேண்டும். ஆக, இது உழைப்பின் பெருமையை வெளிப்படுத்தும் விழா.
கீதையில் கண்ணன் கூறுகிறான்…
‘முயற்சியுடையவன், வேலையை விருப்பத்துடன் செய்கிறவன், எப்போதும் உழைத்துக் கொண்டிருக்கிறவன்… இவர்களைத் தேடி, மகாலட்சுமி வந்தடைகிறாள்…’ என்கிறார் பகவான்.
உழைப்பை அலட்சியம் செய்து, தெய்வம் கொடுக்கும் என்று காத்திருப்பவனைத் தேடி, செல்வம் வருவதில்லை. அட்சய திரிதியை அன்று, ஒருவர் பத்து சவரன் நகை வாங்குகிறார் என்றால், அதை வாங்குவதற்காக, கடந்த காலத்தில், அவர் பட்டபாடுகளை, அதற்காக அவர் கொடுத்த உழைப்பை எண்ணிப் பார்க்க வேண்டும்.
உழைப்பின் பெருமையை விளக்க இதோ ஒரு புராணக்கதை…
அம்பரீஷன் என்று ஒரு மன்னர் இருந்தார்; சிறந்த விஷ்ணு பக்தர்; ஏகாதசி விரதத்தை தவறாமல் கடைபிடிப்பவர். அறம், நீதி நெறி தவறாமல், தர்மம் குலையாமல், குடிமக்கள் மனம் மகிழும்படி ஆட்சி நடத்தி வந்தார். ஒரு அஸ்வமேத யாகம் செய்வதே குதிரைக் கொம்பான விஷயமாக இருக்கும் போது, இவர், நூறு அஸ்வமேத யாகம் செய்தவர். ஆனாலும், இத்தனை யாகங்கள் செய்து விட்டோம் என்ற கர்வம் அவருக்கு ஏற்பட்டதில்லை. மேலும், அந்த யாகங்களை, அவர் தனக்காகவோ, தன் குடும்பத்துக்காகவோ, நாட்டு மக்களுக்காகவோ செய்யவில்லை. எல்லா பலனும் இறைவனுக்கே என்ற ரீதியில், யாகத்தின் பலனை, விஷ்ணுவிடமே அர்ப்பணித்து விட்டார்.
இதனால், மனம் மகிழ்ந்த விஷ்ணு பகவான், அம்பரீஷனுக்கு தரிசனம் தந்து, சுயநலமில்லாத அவரின் உழைப்பை பாராட்டும் விதமாக, தன் சக்கரத்தையே பரிசாகக் கொடுத்தார். அந்த சக்கரத்தைத் தெய்வமாகக் கருதி, வழிபட்டு வந்தார் அம்பரீஷன். அந்த வழிபாடு தான், இன்றும் சக்கரத்தாழ்வார் வழிபாடாக தொடர்கிறது. அந்த சக்கரமே, பிற்காலத்தில், துர்வாச முனிவர் தந்த கஷ்டத்திலிருந்தும், அம்பரீஷனைப் பாதுகாத்தது.
சரி…எவ்வளவு தான் உழைத்தாலும், கஷ்டப்படுபவர்கள் என்று, ஒரு ரகம் எப்போதுமே இருக்கத்தான் செய்கின்றனர். இவர்களுக்கு அட்சய திரிதியை நன்னாளில், தானம் செய்வது பிரதான கடமை. ஒரு காலத்தில், அட்சய திருநாள் கொண்டாடப்படும் சித்திரை மாத வெயிலில், தயிர்சாதம் தானம் செய்வது மிக உயர்ந்ததாகக் கருதப்பட்டது. இப்போது, கால மாற்றத்திற்கேற்ப கல்வி உதவித்தொகை, உடைகள், மருத்துவ உதவி போன்ற தானங்களைச் செய்யலாம். இவ்வாறு செய்தால், தானம் செய்பவருக்கு புண்ணியம் கிடைக்கும். குடும்பத்தில் செல்வம் தழைத்தோங்கும் என்பது ஐதீகம்.
நன்றாக உழைக்க வேண்டும். உழைப்பால் வரும் செல்வத்தில், நமக்கு தேவையானது போக, மற்றதை தகுதியானவர்களுக்கு தானம் செய்ய வேண்டும். அப்படி செய்தால், அது கடவுளுக்கே செய்தது போல! அவ்வாறு செய்தால், கடவுளின் அருள் கிடைக்கும். அப்போது, எல்லா நாட்களும் நமக்கு அட்சய திருநாள் தான்!

தி.செல்லப்பா  in Dinamalar …vara malar 

natarajan

சுவை தேடி: கும்பகோணம் டிகிரி காபி !!!

 

 

குடகு மலையில் தோன்றித் தஞ்சைக்கு ஓடிவந்த காவிரி கூடவே காபி மீதான காதலையும் கொண்டுவந்து சேர்த்துவிட்டது என்றே நினைக்கத் தோன்றுகிறது. தஞ்சை நகரின் எந்தவொரு ஹோட்டலிலும் காபியின் சுவைக்குக் குறைந்தபட்ச உத்திரவாதம் உண்டு. வீட்டுக்கு வந்த விருந்தினரை வரவேற்று உபசரிக்கையில் காபியா, டீயா என்று கேட்பது வழக்கமில்லை. காபி ஸ்ட்ராங்கா வேணுமா லைட்டா வேணுமா என்பதுதான் பொதுவான கேள்வியாக இருக்கும். பால் இல்லாத வேளைகளில் வரக் காப்பியைத் (பால் கலக்காத காபி) துணையாகக் கொள்வதும் உண்டு.

காபி பொடியைப் பொறுத்தவரை கம்பெனி தயாரிப்புகளைவிடவும் தேவையான அளவுகளில் சிக்கரி கலந்து அரைத்துக்கொடுக்கும் உள்ளூர்க் கடைகளுக்கே முன்னுரிமை. சுருக்கமாகச் சொன்னால், தஞ்சைப் பகுதியே ஆனந்தக் கசப்புக்கு அடிமையான பிரதேசம். தமிழ்நாட்டின் மற்ற நகரங்களிலும்கூட காபிக்கென்று புகழ்பெற்ற உணவகங்கள் இருக்கின்றன. இருந்தாலும் தஞ்சாவூருக்கும் காபிக்கும்தான் அதிக நெருக்கம். மாவட்டம் முழுவதற்குமான காபி பெருமையைத் தற்போது கும்பகோணமே தட்டிப் பறித்துக்கொண்டு போய்விட்டது. கோயில் நகரம், அங்கு கூடுகின்ற சுற்றுலாப் பயணிகள் என்ற காரணங்களையெல்லாம் தாண்டி கும்பகோணத்திற்கு அந்தப் பெருமை கிடைத்தது பஞ்சாபிகேச அய்யர் நடத்திய லெட்சுமி விலாஸ் என்ற காபிக் கடையால்தான். காபிக்குத் தேவைப்படும் பாலுக்காக அவர் பதினைந்து பசு மாடுகளைப் பராமரித்து வந்தார். அதனால் அந்தக் கடைக்குப் பசும்பால் காபிக்கடை என்ற பெயரும்கூட உண்டு.

முதல் தலைமுறைத் தமிழ் எழுத்தாளர்கள் பலரும் தஞ்சையைச் சேர்ந்தவர்கள் என்பதால் காபி அருந்துவது தமிழகக் கலை இலக்கிய ரசனையின் ஒரு பகுதியாகவும் ஆகிவிட்டது. தி. ஜானகிராமன் தனது கதாபாத்திரங்களை நுரைத்து மணத்த “கும்மாணம்” காபியை உள்ளம் குளிரக் குடிக்க வைத்து மனநிறைவை அடைந்திருக்கிறார். தஞ்சை ப்ரகாஷ் தனது வடிகால் வாரியம் என்ற கதையில் காபி போடும் செய்முறையை வாசகர்களுக்கு விளக்கி உதவியிருக்கிறார். கறந்த பசும்பாலில் தண்ணீர் கலக்காமல் ஆடை படராமல் தயாரிக்கிற காபிக்குத்தான் டிகிரி காபி என்ற முதல் மரியாதை. பாலுக்கு இணையான முக்கியத்துவம் காபி டிக்காஷனைத் தயாரிப்பதற்கும் உண்டு.

நூறு கிராம் அளவுள்ள காபிக் கொட்டைகளைப் பதமான சூட்டில் வறுத்து அரைத்தெடுக்கையில் அது எண்பது கிராம் வர வேண்டும். அந்தக் காபிப்பொடியிலிருந்து டிக்காஷன் வடித்தெடுக்க இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டும். காபிப் பொடியிலிருந்து இரண்டாவது தடவை டிக்காஷன் வடிக்கக் கூடாது. டிக்காஷனைப் பாய்லரில் வைத்து சூடு காக்க வேண்டும். காபி கலக்கும்போது முதலில் சர்க்கரையை இட்டு அதன்மீது டிக்காஷனை ஊற்றி அதற்கும் மேலாகத் தேவையான அளவில் பாலைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். எங்கேயும் எப்போதும் பாக்கெட் பால் என்றாகிவிட்ட பிறகு டிகிரி காபி என்று பெயர் சொல்வதில் இப்போது எந்தப் பொருத்தமும் இல்லை.

கடையில் பாய்லரும் பித்தளை டவராக்களும் இருந்தால் மட்டும் டிகிரி காபி ஆகிவிடாது. ஆனாலும் தேசிய நெடுஞ்சாலையின் வழியெல்லாம் கும்பகோணம் டிகிரி காபி என்ற பெயர்ப் பலகைகளைப் பார்க்காமல் பயணிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

source:::: The Hindu….Tamil

natarajan

 

 

Message For the Day…” Divine Love is Free From Self Interest…”

 

There can be no joy in a dry, barren heart. Divine Love alone can make a dry heart fit for the sprouting of the sapling of joy. Divine Love is free from self-interest. That love alone is sacred and divine which is based on complete obliviousness to one’s self and is solely concerned with the yearning for God. Only when such a precious diamond of love is shining in your heart, you will have sacred and divine thoughts. In ancient days, sages lived in the forests amidst wild animals and performed penance. How were they able to live in peace amongst these animals? Because they were filled with divine love, they extended that love to the wild beasts also. They had no lethal weapons with them, only the weapon of love, which transformed even the nature of the wild animals. Therefore fill your hearts with love.  

 

Sathya Sai Baba

How Krishnans Brought Wimbledon Home …!!!

 

 

Ramanathan Krishnan and Lalitha Krishnan at their natural grass court patterned on those at Wimbledon. Photo : R Ravindran.

 

 

The English championship is two months away and fans are making plans to be there. But the first family of Indian tennis has other ideas

No sprightly girls and boys to chase the yellow balls. No linesmen to yell out calls. No electronic board to flash the scores. But superlative matches are played every day at this grass court, where tall trees fill in for spectators.

These ‘matches’ defy the humdrum order of time, space and sequence. One moment, an iceberg-cool Borg and a fiery McEnroe are locked in a nail-biting tie-breaker. In the next, Ashe gets the better of Connors with a clever mix of slice and spin. Then come Nadal and Federer fighting a war of attrition, which is followed by an emotion-soaked final where a kind Duchess of Kent offers her shoulder to a teary-eyed Jana Novotna, disconsolate after her loss to Steffi Graf.

Welcome to the private grass court at Oliver Road in Mylapore, maintained by Indian tennis’ first family, the Krishnans, as a tribute to Wimbledon. For the Krishnans, this natural grass court, which borrows features from the hallowed courts of Wimbledon, serves as a mind screen to replay and relive the timeless matches from the prestigious English championship. (Also significant is that this court is one of the very few natural grass courts in the country.)

 “Wimbledon is dear to every member of our family. We have followed the championship closely for decades,” says Ramanathan Krishnan, 77 now.

 The Krishnans not only tracked Wimbledon, they also excelled in it — a fact that largely shaped their deep attachment to the championship and also the decision to design a natural grass court patterned on those at Wimbledon. Ramanathan Krishnan is a two-time semi-finalist (1960 and 1961) at Wimbledon and his son Ramesh Krishnan, the winner of the 1979 Wimbledon juniors title and a quarter-finalist in the men’s section in 1986.

 “It was our son Ramesh’s idea to design a Wimbledon-type grass court at our house on Oliver Road. Around four years ago, he came up with this plan and everyone was excited about it. Ramesh got all the necessary information from Wimbledon. My wife Lalitha assisted in executing the project. And when it was done, we knew we had brought Wimbledon home,” declares Ramanathan, who spends the evening hours with Lalitha at this private grass court, both of them merrily parked in broad, deliciously comfortable bamboo chairs.  “When Wimbledon is on, we bring out the television set and watch the matches sitting here,” says Lalitha, 70.

The Krishnans are going to a lot of trouble to make Wimbledon more immediate for themselves: they have put two men, A. Shanmugam and M. Manickam, on the job of maintaining the court. Natural grass court maintenance is costly and cumbersome, the reason we don’t have many of them around.

Notably, this grass court is not used regularly — for ‘real’ matches, that is. “Once in two months, Ramesh, who lives in R.A. Puram, brings some of his friends along for a game,” says Ramanathan.

Besides the love of Wimbledon, there are other sentiments that spur the desire to keep the court in shape and working order. Beneath the grass, lie clayey memories of long practice hours and family bonding. “This was a clay court for well over three decades, before it was turned into a grass court four years ago. We set up the clay court in 1975. It was a training ground for Ramesh,” says Ramanathan.

 “Father would train Ramesh from 10 a.m. to 5 p.m. at this court,” recalls Gowri Krishnan-Tirumurti, Ramanathan’s daughter, who also trained at the court and is the 1982 Indian national juniors champion.

In its clayey days, the court saw five south Indian champions play and practise the sport — T.K. Ramanathan, Ramanathan Krishnan, Ramesh Krishnan, Gowri Krishnan and Shankar Krishnan (a cousin of Ramesh and Gowri). “Just like my dad and brother, Shankar went on to play Davis Cup,” says Gowri.

This private tennis court may have created champions, but its charm lies in the sense of togetherness it has fostered among the Krishnans. “I remember when we would be practising, our mother would sit on the sidelines and peel oranges for us,” says Gowri.

The bonding has extended to the youngest generation. Ramanathan’s grandchildren — Gayathri, Nandita, Bhavani and Vishwajit — are in their twenties and studies have taken some of them away from home; yet, when they visit their grandparents, they love to sit around this clay-turned-grass court. Says Gowri, “Successive generations have learnt many things around this court. Discipline is one of them.”

 And, surely, also what it takes to be a winner.

Keywords: KrishnansWimbledon

 

source:::: The Hindu…

natarajan

 

ஒரு “மை”…. அது உனக்கு பெரு “மை “…!!!

ஒரு “மை” … உன் விரலில் ஒரு கரு “மை”

வேண்டும் உனக்கு பொறு “மை” … ” மை ”

அதன் அரு “மை” தெரிய !!! பெரு “மை ”

உனக்குதான்… அந்த “மை” யின் வலி “மை”

புரியும் நேரம் !!!

நடராஜன்

இரண்டாம் வாய்ப்பு !!!….

 


மின்சார பல்பைக் கண்டுபிடித்தது யார் என்று கேட்டால், தாமஸ் ஆல்வா எடிசன் எனப் பட்டெனக் கூறிவிடுவீர்கள். அவர் மின்சார பல்பைக் கண்டுபிடிப்பதற்கு முன்னர் ஆயிரம் முறையாவது சோதித்துப் பார்த்திருப்பார்.

ஒரு நாள் எடிசனின் சோதனை வெற்றிபெற்றது. அவரது உதவியாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். அப்போது எடிசன், அலுவலகப் பையனை அழைத்தார்.

‘‘இந்த பல்பைச் சோதனை செய்’’ என்றார் எடிசன்.

எடிசன் சொன்னவுடன் அவனுக்கு ஒரே பதற்றம். பல்பை வாங்கும்போதே தவறுதலாகக் கீழே போட்டுவிட்டான். எடிசனுக்குக் கோபம் வந்தது. ஆனால், ஒன்றும் சொல்லவில்லை. எடிசன் தன்னை வேலையை விட்டு அனுப்பிவிடுவார் என்று அந்தப் பையன் பயந்தான்.

எடிசன் மீண்டும் ஒரு புதிய பல்பை உருவாக்கினார். மறுபடியும் அதே அலுவலகப் பையனை அழைத்தார்.

‘‘இந்தப் பல்பையாவது சரியாக வாங்கிச் சோதனை செய்’’ என்று சொன்னார் எடிசன்.

எடிசனின் இந்தச் செயல் அவரது உதவியாளர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. அவர்களுள் ஒருவர், ‘‘ஏற்கெனவே ஒருமுறை பல்பை உடைத்துவிட்டான், மீண்டும் அவனுக்கு எதற்கு வாய்ப்பு தர வேண்டும்?’’ என்று கேட்டார்.

இன்னொரு உதவியாளரோ, “மீண்டும் அவன் பல்பை உடைத்துவிட்டால் உங்கள் உழைப்பு வீணாகிவிடாதா’’ என எடிசனிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு எடிசன் பொறுமையாகப் பதில் கூறினார். “இந்தப் புதிய பல்பை உருவாக்குவதற்கு எனக்கு ஒரு நாள்தான் ஆனது. மீண்டும் அது கீழே விழுந்து உடைந்துவிட்டால், ஒரே நாளில் என்னால் புதிதாக இன்னொரு பல்பை உருவாக்கிவிட முடியும். ஆனால், இந்த வேலையை மறுபடி அவனிடம் ஒப்படைக்காவிட்டால், அவன் தன்னுடைய தன்னம்பிக்கையை இழந்துவிடுவான். அதை மீண்டும் அவ்வளவு எளிதாக அவனிடம் உருவாக்க முடியாது. அப்படி நடப்பதை நான் விரும்பவில்லை” என்று சொன்னார்.

source:::::The Hindu… Tamil…
natarajan

” நல்லதாப் போச்சு … நீ என்ன பண்றே ? !….”


இப்போதெல்லாம், சமையல் வகுப்புகளை
தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி வருகின்றன.
சின்னத்திரையில் காட்டுகிறபடி செய்து பார்த்தால்,
கடைசியாக உருவாகும் பண்டத்தை வாயில் வைக்க
முடியுமா.? என்பதே சந்தேகம்.
இல்லாவிட்டால், முருங்கைக்காய் சாம்பார்,
வெண்டைக்காய் பொறியல் என்று, காலம் காலமாக
வருகிற குழம்பு – பொறியல்களையே ஆங்கில வார்த்தைகள்
மிலி அளவுகள் சொல்லி நிகழ்ச்சியை ஒப்பேற்றிவிடுவார்கள்.
பெரியவா, பூர்வாசிரமத்தில் சமையற்கட்டுப் பக்கம்
போனதில்லை; சந்நியாசம் ஏற்றபிறகு அதற்கு அவசியமும்
இல்லாமல் போய்விட்டது. ஆனால் பெரியவாளுடைய
சமையல் பக்குவம் செய்யும் புதுமை முறைகள்
எப்படியோ அத்துபடியாகியிருந்தது.!.
பண்டரிபுரத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தோம்.
சின்னஞ்சிறு கிராமம். நாலைந்து குடிசைகள் மட்டுமே..
ஒரு பெரிய மரத்தடியில் முகாம்.
பெரியவாளுக்குப் பிட்சை தயார் செய்தபின்,
மிகுதியாக இருந்த சில பொருள்களைக் கொண்டு
ஒருவழியாக எங்கள் மதிய உணவை முடித்துக்கொண்டோம்.
சற்று ஓய்வெடுக்கும் வேளை.
அமர்க்களமாக வந்து இறங்கினார்கள்,இருபது பேர்கள்.
எல்லோரும் சென்னைப் பகுதியிலிருந்து வந்தவர்கள்.
ஸ்ரீமடம் முகாமில், ஸ்ரீசந்த்ரமௌளீஸ்வர பிரசாதமாக
அருமையான உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்
வந்தவர்கள்.
ஆனால் ஸ்ரீமடம் ஒரு பெரிய மரத்தின் அடியில்
அல்லவா முகாமிட்டிருக்கிறது.
சமைப்பதற்குத் தேவையான பாத்திரங்கள்,
சாமான்கள் கிடையாதே.?.
பரமாசாரியாளுக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை!
பசியுடன் வந்திருக்கும் அன்பர்களுக்குச் சாப்பாடு
போட வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோள்.
பிரும்மசாரி ராமகிருஷ்ணன் என்று ஓர் அணுக்கத் தொண்டர்
அவரிடம், “எல்லோருக்கும் சமையல் செய்”
என்று உத்திரவும் இட்டார்கள்.
ராமகிருஷ்ணன் கைகளைப் பிசைந்துகொண்டு பரிதாபமாக
நின்றான்.”அடுத்த ஊர் போனதும் சமைத்துப் போடுகிறேனே.?
என்றான்.
ஏதோ பிரச்சினை இருக்கிறது என்பது பெரியவாளுக்குப்
புரிந்துவிட்டது.
“அரிசி இருக்கோன்னோ.?”
“இருக்கு.கொஞ்சம் பயத்தம்பருப்பும் இருக்கு.”
(மோர்)..”நல்லதாப் போச்சு.! நீ என்ன பண்றே.? அரிசியைக்
…………..களைஞ்சு, அந்த ஜலத்தைத் தனியா ஒரு பாத்திரத்திலே
………….வெச்சுக்கோ.அந்த ஜலத்தில் கொஞ்சம் உப்புப் போட்டு
………….எலுமிச்சம் பழம் பிழிஞ்சு, நாரத்தை இலையைக்
………….கிள்ளிப் போடு. இதுதான் மோர்.
(ரசம்)..”பயத்தம்பருப்பை வேகவைச்சு-நிறைய ஜலம் விட்டு
…………- அந்தக் கொதிநீரிலே எலுமிச்சம்பழ ரசம் (சாறு)
………….சேர்த்துட்டேன்னா, அதுதான் ரசம்.
(கறி)….”வேகவெச்ச பயத்தம்பருப்பு இருக்கே.? உப்பு போடு
…………..ரெண்டு பச்சைமிளகா கிள்ளிப் போடு.
…………..இதுதான் கறி.!”
எல்லாம் அரைமணியில் ரெடி.அதற்குள், எல்லோருக்கும்
இலை, தண்ணீர் சேகரித்து வைத்தோம்.
சாதம்,பயத்தம்பருப்புக் கறி, ரசம், மோர் -என்று
அறுசுவை டின்னர்.!.”
“சாப்பாடு ஏ ஒன்.!” என்றார் ஒருவர்.
“தேவாமிர்தம்.!” என்றார் இன்னொருவர்.
“இவ்வளவு ருசியான சாப்பாட்டைச் சாப்பிட்டதே இல்லை.!”
என்றார். மற்றொருவர்.
தொண்டர்களாகிய நாங்கள் எங்களுக்குள் சிரித்துக்
கொண்டோம். எல்லாம் பெரியவாள் வாக்கின் ருசி
என்பது எங்களுக்குத் தெரிந்ததுதான்.
விருந்தோம்பல் பற்றி, பெரியவாளிடம் பாடம் கற்க வேண்டும்.
அது அட்சய பாத்திரம்.!.

-The inner Light illuminates our minds–  source:::::  input from a friend of mine
  natarajan

 

Message For The Day…” Speak Less and Speak Sweet … “

Do not indulge in arguments and disputations; one who clamours aloud has not grasped the Truth, believe Me! Silence is the only language of the realised. Practice moderation in speech; that will help you in many ways. It will develop Prema, for most misunderstandings and factions arise out of carelessly spoken words. When the foot slips, the wound can be healed; but when the tongue slips, the wound it causes in the heart of another will fester for life. The tongue is liable to four big errors: uttering falsehood, scandalising, finding fault with others and excessive talk. These must be avoided if there must be peace for the individual and society. The bond of brotherhood will be tightened if people speak less and speak sweet. That is why silence (mounam) was prescribed as a vow for spiritual aspirants by scriptures. As spiritual aspirants in various stages of the road, this discipline will be very valuable for you.

 

Sathya Sai Baba

Message For the Day…” I am Truth… and Truth Has No Need to Hesitate or Fear … “

 

There are many who observe My actions and start declaring that My nature is such and such. They are unable to gauge the sanctity, the majesty and the eternal reality that is Me. The power of Sai is limitless; it manifests forever. All forms of ‘power’ are resident in this Sai palm. But, those who profess to have understood Me, the wise, the Yogis (spiritually advanced persons), the Pandits (scholars), and the Jnanis (liberated persons) – all of them are aware only of the least important, the casual, external manifestation of an infinitesimal part of that power, namely, the ‘miracles’! My power is immeasurable; My truth is inexplicable, unfathomable. What I will, must take place; what I plan must succeed. I am Truth; and Truth has no need to hesitate, or fear, or bend. I am announcing this about Me, for, the need has arisen.

– Divine Discourse, Jun 19, 1968  

 

Sathya Sai Baba