ரமணர் வாழ்வில் …. சுவையான நிகழ்ச்சிகள்…Part 4

சிலந்திப் பூச்சி,எப்படி தன் வாயிலிருந்து வெளியில் நூலை நூற்று, மறுபடியும் தன்னுள் இழுத்துக் கொள்கிறதோ அப்படியே மனமும் தன்னிடத்திலிருந்து உலகத்தைத் தோற்றுவித்து, மறுபடியும் தன்னிடமே ஒடுக்கிக் கொள்கிறது.
–பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
திருவண்ணாமலையின் தென்கிழக்குச் சரிவில் அமைந்திருக்கும் விரூபாட்ஷி குகையில் பகவான் பல வருடங்கள் இருந்தார்.அப்போது குகைக்கு வெளியே, மலைச் சரிவு அருகில் ஒரு பாறை இருந்தது. அதன் மேல் பகவான் தினமும் அரை மணி நேரம் அமர்ந்திருப்பார்.அங்கே உட்கார்ந்துதான் தினமும் பல் துலக்குவார்.
கடும் பனியாக இருந்தாலும் சரி, கொட்டும் மழையாக இருந்தாலும் சரி, பகவான் அந்தப் பாறையில் அமர்வதை தவறவிட்டதே இல்லை..
பக்தர்களுக்கு இது வியப்பாக இருந்தது. “பகவானே, மழை, பனியில் கூட ஏன் பாறையில் போய் அமர்கிறீர்கள்.உடம்பு சுகம் இல்லாமல் போய்விடாதா? குகைக்குள் இருந்தபடியே பல் தேய்த்தால் என்ன?’’ என்று துணிந்து ஒருவர் கேட்டுவிட்டார்.
பகவான் கேள்வி கேட்டவரைப் பார்த்துப் புன்னகைத்தார்.”கீழே மலையடிவாரத்தில் சௌபாக்கியத்தம்மாள் என்று வயதான பெண்மணி ஒருத்தி குடியிருக்கிறாள். அவள் தினமும் இங்கே வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போய்தான் உணவருந்துவாள்.ஒரு நாள் அவள் வரவில்லை. ஏன் வரவில்லை என்று மறுநாள் கேட்டேன். “வயசாச்சு சாமி. மலையேறி வர முடியல. உடம்பு முடியல. ஆனா உங்களைத் தரிசனம் செய்யாம எப்படி இருக்கறதுன்னு தவிச்சபடியே மலை மேலே பார்த்தேன். அந்தக் காலை நேரத்துலதான் நீங்க வெளியில இருக்கற பாறை மேல உட்கார்ந்து இருந்தீங்க. கீழே இருந்தபடியே உங்களைவிழுந்து கும்பிட்டேன் சாமி’’ன்னு கண் கலங்கினா.
பாவம், வயசான காலத்துல அவளால எப்படி மலையேறி வரமுடியும்? அதனாலதான் அவளுக்காக தினமும் காலையில் இந்தப் பாறையில் உட்கார்ந்துக்கறேன். மழை, பனி எதுவா இருந்தாலும் அந்த வயசான அம்மா ஏமாந்துடக் கூடாதே? பாவம், அவ அண்ணாந்து பாத்துக்கிட்டிருப்பாளே. அதான்’’ என்றார் பகவான்.
நீங்களே சொல்லுங்கள். யாரோ ஒரு ஏழை பக்தைக்காக பல வருடங்கள் தினமும் அரை மணி நேரம் ஓர் பாறையில் அமர்ந்திருந்த ஓர் அளவற்ற கருணை கொண்டவரை, ரமணரைத் தவிர உலகம் எங்காவது கண்டிருக்கிறதா?
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!
Natarajan

பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி ….சில சுவையான தகவல்கள் …

1947-ம் ஆண்டு ஆகஸ்ட்  15ம் நாள்.
திருவண்ணாமலை ஆசிரமத்தில் சுதந்திரதினக் கொண்டாட்டம் நடைபெற்றது.
அன்று பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள், பகவானை தரிசனம் செய்தார்கள்.
ரமண மகரிஷி ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அப்போது ஜன்னல் வழியே ஒரு குரங்கு எட்டிப் பார்த்தது.  அன்றுதான் பிறந்தது போல் இருந்த ஒரு குட்டியையும் அது வைத்திருந்தது. குட்டி, தாயை இறுகப் பற்றிக் கொண்டு, அச்சத்துடன் இருந்தது.
தாய்க்குரங்கு,  உள்ளே வரவேண்டும் என்று முயற்சித்தது. உள்ளே இருந்த பக்தர்கள்,அந்தக் குரங்கை விரட்டினார்கள்.குரங்கு பயந்து ஓடி அங்குமிங்கும் அலை பாய்ந்தது.
பகவான், குரங்கை விரட்டியவர்களைப் பார்த்தார். “அதை ஏன் துரத்துகிறீர்கள்? அது இங்கே என்னிடம் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறது. தன் இளம் குழந்தையை எனக்குக் காட்டுவதற்காக வருகிறது. அது தவறா என்ன? உங்களுக்குக் குழந்தை பிறந்தால் என்னிடம் காட்டுவது இல்லையா? அப்படிக் கொண்டு வரும்போது யாராவது உங்களைத் தடுத்தால் எப்படி இருக்கும்? நீங்கள் குழந்தையைக் கொண்டு வரலாம். குரங்கு கொண்டு வரக்கூடாதா? இது என்ன நியாயம்?’’ என்றார்.
பக்தர்கள் குரங்குக்கு வழிவிட, அது குஷியாக உள்ளே வந்து, தன் குட்டியை பகவானிடம் பெருமையாக, சந்தோஷமாகக் காட்டிற்று. பகவான் அதன் முதுகை ஆதுரமாகத் தடவிக் கொடுத்தார்.
அது மட்டும் அல்ல, ஆசிரம நிர்வாகிகளிடம், “சுதந்திர தினம் என்பதால் எல்லோருக்கும் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்.நம்முடைய தோழர்களாகிய குரங்குகளுக்கு விருந்து ஒன்றும் இல்லையா? அவர்களை மறந்து விடாதீர்கள். ஏனென்றால் நீங்கள் எல்லாம் இப்போது வந்தீர்கள். அந்தக் காலத்தில் இந்தக் குரங்குகள்தான் எனக்கு நண்பர்கள். அப்போது இவர்களைப் பார்த்திருக்க வேண்டும். எல்லாம் இவர்கள் ராஜ்ஜியம்தான்!’’ என்றார்.
அப்புறம் என்ன? மளமளவென குரங்குகளுக்கும் தடபுடலாக விருந்து தயார் ஆயிற்று.
நீங்களே சொல்லுங்கள்.உலகத்திலேயே சுதந்திர தினத்தன்று குரங்குகளுக்கும் விருந்து வைத்த மகான்கள் யாராவது உண்டா? பகவான் ரமண மகரிஷியைத் தவிர!
ஒருவர் முக்தியடைய விரும்பினால் முதலில் நல்ல ஒரு குருவை நாட வேண்டும். மனதில் யார் உனக்கு அமைதியை ஏற்படுத்துகிறாரோ, அவரையே உன் குருவாக ஏற்றுக் கொள்!
–பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
ஒரு நாள், ரமணாஸ்ரமத்தில் நல்ல கூட்டம். ஹால் நிரம்பி வழிந்தது.
அப்போது ஒருவர், அந்த ஊரில் உள்ள மோசமான ரௌடி ஒருவன் இறந்துவிட்ட தகவலை நண்பர்களிடம் தெரிவித்தார்.

இறந்தவன் மிகவும் கெட்டவன். பெரிய திருடன். மது அருந்திவிட்டு எதிர்ப்பட்டவர்களையெல்லாம் தாக்கும் குணம் உள்ளவன். அவனைப் பற்றி அனைவருக்குமே தெரியும் என்பதால் ஹாலில் சலசலப்பு ஏற்பட்டது.

“நல்ல வேளை போய்த் தொலைந்தான். எவ்வளவு பெரிய பாவி அவன்’’ என்றார் ஒருவர்.
‘‘கொடுங்கோலன். அப்பாவிகளை அடித்து மிரட்டுவான் அந்தக் கயவன்’’ என்றார் மற்றொருவர்.
‘‘அவன் குணக்கேடன். அடிக்கடி சிறைக்குச் செல்பவன்’’ என்று வெறுப்புடன் ஒருவர் சொன்னார்.
‘‘பக்தர்களிடம் கூட அவன் வழிப்பறி செய்வான்’’ என்றார் ஒரு பெண்மணி.
இப்படியாக ஹால் முழுக்க அவனை எல்லோரும் திட்டிக்கொண்டும், சபித்துக் கொண்டும் இருந்தார்கள்.
அத்தனை பேரும் ஒரு வழியாகப் பேசி முடிக்கும் வரை காத்திருந்தார் பகவான். அவருக்கும் அந்தத் திருடனைப் பற்றித் தெரியும் என்பதால் அவர் ஏதாவது  சொல்வாரா என்று பக்தர்கள் எதிர்பார்த்தார்கள்.
பகவான் ரமணர் வாய் திறந்து முதல் முறையாக அவனைப் பற்றிச் சில வார்த்தைகள் பேசினார்.
அவர் பேசியது என்ன?
‘‘அவன் ரொம்ப துப்புரவான மனிதன். ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தடவை குளிப்பானே!’’
இவ்வளவுதான் அவர் சொன்னது. எத்தனை பெரிய வாழ்க்கைத் தத்துவத்தை பகவான் இரண்டே வரிகளில் சொல்லியிருக்கிறார் பாருங்கள்.
மற்றவர்களிடம் உள்ள குறைகளைப் பொருட்படுத்தாதீர்கள். அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களை மட்டுமே கவனியுங்கள். அப்போதுதான் நீங்கள்  சந்தோஷமாக இருப்பீர்கள் என்று 100 பக்கம் எழுத வேண்டிய ஒரு விஷயத்தை பத்தே வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார் பாருங்கள். அதுதான் பகவான்.
எல்லோரிடமும் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் நாம் பார்க்கக் கற்றுக் கொண்டால் சண்டையோ, சச்சரவோ, பொறாமையோ, எரிச்சலோ நம்மை நெருங்குமா என்ன?
மெரிக்காவிலிருந்து சில வெள்ளைக்காரர்கள், பகவானை தரிசிப்பதற்காக திருவண்ணாமலை ஆசிரமத்துக்கு வந்தார்கள்.
ரமணரிடம் பல ஆன்மிக சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றார்கள். அவர்களில் துடுக்குத்தனம் கொண்ட ஒருவரும் இருந்தார்.
அந்த வெள்ளைக்காரர், பகவானைப் பார்த்து, “இஷ்ட தெய்வம் என்று சொல்கிறார்களே, அப்படி ஒருவர் உண்டா?’’ என்று கேட்டார்.
அதற்கு பகவான், “ஆம். ஈஸ்வரன் இருக்கிறானே’’ என்றார்.
அந்த அமெரிக்கர் சற்றுக் கிண்டலாக, “என்ன? கண், மூக்கு, காது, கை, கால் இவற்றோடா?’’ என்று கேட்டார்.
”ஆம். அதில் என்ன தவறு? உங்களுக்கு அந்த அங்கங்களெல்லாம் இருக்கும் போது, கடவுளுக்கு இருக்கக் கூடாதா?’’ என்று பகவான் பதில் சொன்னார்.
உடனே அந்த வெள்ளைக்காரர் சிரித்தார்.“இந்துக்களின் நூல்களில் கடவுளுக்கு இப்படி கை, கால் என்று அவயவங்கள் இருக்கின்றன என்று எழுதியிருப்பதைப் படிக்கும்போது எனக்குச் சிரிப்புதான் வருகிறது!’’
பகவான் அந்த அமெரிக்கரையே உற்றுப் பார்த்தார்.“அப்படியா? அப்படியானால் உங்களுக்கும் கை, கால் போன்ற அங்கங்கள் எல்லாம் இருக்கின்றனவே,அவற்றைப் பார்த்தால் உங்களுக்கு ஏன் சிரிப்பு வரவில்லை?’’ என்று கேட்டார்.
உடனே அருகில் உள்ளவர்கள் எல்லாம் சிரித்தார்கள்.
அந்த அமெரிக்கர் தலை குனிந்தார். அவமானத்தால் அல்ல. சரியான பதில் தனக்குக் கிடைத்ததே என்ற நன்றிப் பெருக்கால்.
SOURCE::::: input from a friend of mine
 Natarajan

Message For the Day… ” Take Everything that happens to You as Gift of God…”

For every being, life is a series of acceptances and rejections, of joy and grief, benefits and losses. Take everything that happens to you as gifts of grace. Of course, you must act with all the skill and devotion you are capable of. And you must do your duties with as much sincerity as you worship God. Then, leave the result to the all-powerful, all-knowing, all-merciful Lord. Why do you hold yourself responsible for the results? He prompted it, He got it done through you; He will give whatever result He feels He must! Can you store gold in a gold box? No! You store it in a steel or iron safe almirah, isn’t it? So too, understand that the gift of joy comes packed in the rind of grief. Do not pray to God to give you only joy; that will be foolish. Pray for the fortitude to realise that grief and joy are but two sides of the same coin.   

Sathya Sai Baba

 

Message For the Day….” Pray to God for God …Not For Your Needs …”

People resort to vows and rites, hoping to ward off the evil that stars may bring about! But no effort is made to win the grace of God. Let the pomp and the paraphernalia of worship not be merely superficial, if they are, they will not confer lasting benefits; at best, they prevent you from using that much of time and money in harmful ways! It is the ‘why’ of these rites that matters, not so much the ‘how’. The ‘why’ has to be the realisation of the reality of the individual, which is also the reality of the Universal! So be devoted to the Universal; be eager to become ‘That’. When you pray to God for a job, or a son, or a prize, you are devoted, not to God, but to the job, to the son or to the prize. Pray to God for God; love, because it is your nature to love. Expand your Self, take in all! Grow in Love.

Sathya Sai Baba

Message For the Day… ” Avoid contact with vices and develop attachment to Virtues …”

It is creditable if a human behaves as a human being. It is laudable if they behave as God, that they really are! But to behave as a demon or as a beast is despicable indeed! For, people were long born a mineral, died a mineral; then they promoted themselves to be born as a tree and died as a tree. Subsequently they got promoted as an animal, and finally rose to the status of a human being. This rise from one scale to another has been acknowledged by science and spiritual experience. Now alas, they are born as human and die as human. It is a greater shame if they slide into a beast or a beastly ogre. Praise is due, only if they rise to the divine status. That is real fulfilment of one’s destiny. Therefore resolve today to avoid contact with vices, develop attachment to virtues, and transmute your heart into an altar for your beloved Lord.

Sathya Sai Baba

மார்கழியின் மஹிமை …மஹாபெரியவா சொன்னது …

மார்கழி மாதத்தின் சிறப்புகள் பற்றி காஞ்சி மகாபெரியவர் சொல்வதைக் கேட்போமா!

மிருகசீரிடம் என்ற ஒரு நட்சத்திரம் இருக்கிறது. அதற்கு அடுத்த நட்சத்திரம் ஆருத்ரா எனப்படும் திருவாதிரை. “ஆருத்ரா’ என்றால் “நனைந்து’ என்று பொருள். மிருகசீரிஷத்திற்கும், திருவாதிரைக்கும் இடையில் பவுர்ணமி சந்திரன் இம்மாதத்தில் வருகிறார். ஆதலால் தான், இந்த மாதத்தை சமஸ்கிருதத்தில் “மார்க்கசீர்ஷம்’ என்று அழைக்கிறார்கள். மார்க்கசீர்ஷி என்றும் சொல்வர்.

இம்மாதத்தில் திருவாதிரை அன்று பவுர்ணமி சந்திரன் சேரும் போது, பனியுடன் கூடிய மதியின் கிரணங்களால் பூமி குளிர்கிறது. இம்மாதத்தில் தான் மேகங்கள் கருவுறுகின்றன. கோடைகாலத்தில் காய்ந்த உலகம், மார்கழியில் தாபத்தை எல்லாம் போக்கிக் கொள்கிறது.

இந்த மாதத்தில் சிவபெருமான், அம்பாள், திருமால் என்ற மூன்று ஜோதிகளாய் பிரிந்த பரம்பொருளை வழிபட வேண்டும். அதிகாலையில் இவர்களுக்கு பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் மனசுத்தம் ஏற்படும்.

கேரளாவில், இளம்பெண்கள் தினமும் காலை 3 மணிக்குள் எழுந்து, கையில் குருத்துகளை ஏந்தி கூட்டம் கூட்டமாக குளிரில் நடுங்கியபடியே, ஆறு குளங்களை அடைந்து நீராடி, கண்ணனின் திருஅவதாரப் பாடல்களை உயர்ந்த குரலில் பாடுவார்கள்.

இந்த மாதத்திற்கு “ஆக்ரஹாயணீயம்’ என்று நிகண்டு ஒன்றில் சொல்லப்பட்டுள்ளது.

அப்படி பார்த்தால், இதுவே வருடத்தின் முதல்மாதம் என்று ஆகிறது.

“ஹாயணீயம்’ என்றால் “வருடம்’. அக்ரம் என்றால் என்றால் “முதல்’ என்று பொருள். ஆங்கிலப் புத்தாண்டின் முதல் மாதமான ஜனவரியும், இந்த மார்கழியிலேயே பிறக்கிறது.
தேவர்களுக்கு ஆறுமாதம் பகல், ஆறுமாதம் இரவு. பகல்பொழுதின் முதல் மாதமே மார்கழி. அதுவே அவர்களுக்கு விடியற்காலை. தை மாதம் அவர்களுக்கு சூரிய உதயம். இதனால் தான் நம்முடைய மார்கழி மாதத்தின் ஒவ்வொரு நாளும், தேவர்களுக்குரிய மார்கழி மாதமும் மிகுந்த சிறப்பு பெறுகிறது.

இதன் அடிப்படையிலேயே, “”மாஸானாம் மார்க சீர்ஷோஸ்மி’ என்று பகவான் கண்ணனும் கீதையில் கூறுகிறான். அதாவது மாதங்களில் நான் மார்கழி என்றும், அதுவே சிறந்த மாதம் என்றும் பொருள்படுகிறது. இதனால் தான் தோழியருடன் ஆண்டாள் திருப்பாவை பாடி, இந்த மாதத்தில் நோன்பிருந்தாள். மாணிக்கவாசகரின் திருவெம்பாவை இந்த மாதத்தில் பாடப்படுகிறது.

இந்த மாதத்தின் புனித நாட்கள் திருவாதிரையும், மகாவியதிபாதமும் ஆகும். இந்நாட்களில் சிவாலயங்களில் அபிஷேக ஆராதனை நடக்கும். அன்று தீர்த்தக்கரைகளுக்குச் சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த அனுஷ்டானத்தால், நமது பித்ருக்களுக்கு (முன்னோர்) விசேஷ திருப்தி ஏற்படுகிறது. மேலும், அகம்பாவ தோஷம் அழிவதுடன், பேராசையால் ஏற்பட்ட தோஷமும் போய்விடுகிறது.

Read more: http://periva.proboards.com/thread/8404/#ixzz3NGs3c36i

SOURCE:::: http://www.periva proboards.com

Natarajan

Message For the Day…” When Your Heart becomes Home for God…”

A cleansed and pure heart is the most appropriate altar or tabernacle for the Lord. In that fragrant bower, the Lord will establish Himself. When the Lord establishes Himself, at that very moment, another incident too will happen. The group of six vices that had infested the place will quit instantly, without any farewell or fanfare. When these vices quit, the wicked retinue of evil tendencies and vulgar attitudes which live on them will break camp and disappear without leaving even their addresses! Then one will shine in one’s native splendour of Truth and Love (Sathya and Prema). That person will endeavour without hindrance to realize the Self, and finally succeed in merging with the Universal and Eternal. Liberated from the tangle of ignorance or maya, the mind will fade away. The long-hidden secret will be revealed.   

Sathya Sai Baba

“பாலனாக வந்தார்; நல்ல பாதை நடத்த வந்தார்”: இன்று கிறிஸ்துமஸ்…

கிறிஸ்துமஸ் நாளன்று பாடப்பட்ட முதல் பாடலில், “இப்புவி மாந்தரில் பிரியம்’ என்ற ஒரு வரி வருகிறது. இப்போது, பிரியம் என்றால், கிறிஸ்துமஸ் அன்று கேக் வாங்கிக் கொடுப்பது, பிரியாணியை பகிர்ந்து கொள்வது என்ற அளவில் நின்று விட்டது. இத்துடன், வீடுகளில் நட்சத்திரங்கள் தொங்க விடுவதும், கிறிஸ்துமஸ் தாத்தா பரிசளிப்பதும் மட்டும் கிறிஸ்துமஸ் ஆகாது. அப்படியானால், பைபிளில், “”பசியுள்ளவனாயிருந்தேன், எனக்கு உணவு கொடுத்தீர்கள். அன்னியனாய் இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள், ஆடையில்லாது இருந்தேன், எனக்கு ஆடை கொடுத்தீர்கள்,” என்று சொல்லி இருக்கிறதே! அதைத் தானே நாம் செய்கிறோம் என்ற கேள்வி எழும். இதையெல்லாம் விட, “மனுஷன் எவ்வளவு விசேஷமானவன்’ (மத்.12:12) என்ற வசனமே மனதில் நிற்க வேண்டும். அதாவது, மனித இனத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பது மிக மிக முக்கியம். இதற்கு தானம் தருவதை விட, எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற சமத்துவத்தை உருவாக்கப் பாடுபட வேண்டும். அதாவது, ஏழ்மை அகன்று விட்டால் அங்கே தானத்திற்கு இடமில்லை. வன்முறைகளால் மனித இனம் அழியக்கூடாது. காற்றின் பரிசுத்தத்தைப் பாதுகாக்க ஏற்பாடு செய்ய @வண்டும். ஆண்டவர் நமக்கு கற்றுத்தந்த வன்முறையற்ற, அன்பான சமுதாயம் என்று உருவாகிறதோ, அன்று தான் நமக்கு நிஜமான கிறிஸ்துமஸ்.

இரண்டு வித நம்பிக்கை:

இங்கிலாந்தில் குழந்தைகளுக்கு சுகமில்லாமல் போனால், கிறிஸ்துமஸ் அன்று நள்ளிரவில் குழந்தையை எடுத்துக் கொண்டு வெளியே வருகிறார்கள். அன்று மேரிமாதா குழந்தை இயேசுவுடன் செல்வதாகவும், இயேசு தங்கள் குழந்தையைத் தொட்டு ஆசிர்வதித்து நோயைக் குணமாக்குவார் என்றும் நம்புகிறார்கள். ஒருவேளை, குழந்தை இறந்து போனால், குழந்தை இயேசு தன்னோடு விளையாட தங்கள் குழந்தையையும் அழைத்துச் சென்று விட்டதாக ஆறுதலடைகிறார்கள்.

காலமெல்லாம் நம்மைக்காக்கும் கர்த்தராக வந்தவர்

இயேசுபாலன் வந்தார்-நம்மை

இரட்சித்து இன்பம் தந்தார்

தாசரான நம்மை-என்றும்

தாங்கி நடத்தி நன்மை

வாசமளிக்க வந்தார்-மோட்ச

வாசல் திறந்து தந்தார்!

குழந்தையாக வந்தார்-நமது

குறையைத் தீர்க்க வந்தார்

அழுந்தும் பாவஉலகை மீட்டு

ஆதரிக்க வந்தார்!

பாலனாக வந்தார்-நமது

பாவம் தீர்க்க வந்தார்

காலமெல்லாம் நம்மைக்காக்கும்

கர்த்தராக வந்தார்.

பிள்ளையாக வந்தார்-கன்னிப்

பெண்ணின் மகனாய் வந்தார்

தள்ளப்பட்டு நொந்தார்-நம்மை

தழுவிக் கொள்ள வந்தார்!

குமாரனாக வந்தார்-நம்மைக்

கூட்டிச் செல்ல வந்தார்

சமாதானம் தந்தே-என்றும்

சார்ந்திருக்க வந்தார்.

கிறிஸ்துமஸ் தாத்தா:

Photo Gallery

கிறிஸ்துமஸ் காலத்தில், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு வீடு. வீடாகச் சென்று இனிப்பு, பொம்மை உள்ளிட்ட பரிசுகள் தரும் வழக்கம் எப்படி வந்தது தெரியுமா? கி.பி.4ம் நூற்றாண்டில், ஒரு ஏழைக் குடும்பத்தில் மூன்று பெண் குழந்தைகள் திருமண வயதில் இருந்தார்கள். அவர்களைக் கட்டிக் கொடுக்க பணவசதியில்லை. அந்தத் தந்தை திகைத்துக் கொண்டிருந்தார். ஒருநாள், காலை வாசல் கதவை திறந்த மூத்த மகள் திடீரெனக் கத்தினாள். “”அப்பா! இங்கே வாங்க! ஒரு பை நிறைய தங்கக் கட்டிகள் கிடக்குது” என்றாள். அந்தத் தந்தையும், மற்ற சகோதரிகளும் அரக்க பரக்க ஓடிவந்தனர். அவர்களுக்கு சந்தோஷம். அதைக் கொண்டு அந்தத் தந்தை முதல் மகளுக்கு சிறப்பாக திருமணத்தை நடத்தி வைத்தார். அந்தக் காலத்தில், மாப்பிள்ளைகள் ஏராளமாக தங்கம் கேட்பார்கள். அதனால், கண்டெடுத்த தங்கம் முதல் மகளுக்கே சரியாகி விட்டது. அடுத்து, இரண்டாவது மகள் பற்றிய கவலை தந்தைக்கு ஏற்பட்டது. என்ன அதிசயம்! இதே போல இன்னொரு பை நிறைய வாசலில் தங்கக்கட்டிகள் கிடந்தன. அது அவளுக்கு போதுமென்றாகி விட்டது. அடுத்து, மூன்றாவது மகளுக்கும் இதே போல வழி பிறக்குமென காத்திருந்த தந்தை, இதைத் தங்களுக்கு யார் தருகிறார்கள் என்று அறிவதிலும் விழிப்புடன் இருந்தார். ஒருநாள் அதிகாலை, விடிந்தும் விடியாததுமாக இருந்த பொழுதில், ஒரு முதியவர் குதிரையில் வந்து வாசலில் தங்கப்பையை போட்டு விட்டு நிற்காமல் சென்று விட்டார். ஆனாலும், ஏழை விடவில்லை. இன்னொரு குதிரையில் ஏறி முதியவரை விரட்டிப் பிடித்து விட்டார். அருகில் சென்ற பிறகு தான், அவர் தங்கள் பகுதி பிஷப் புனித நிக்கோலஸ் என்பதைத் தெரிந்து கொண்டார். (செயின்ட் நிக்கோலஸ் என்ற பெயர் மருவி தான் சாண்டாகிளாஸ் என்று ஆகி விட்டது) “வலதுகை கொடுப்பது இடதுகைக்கு தெரியக்கூடாது’ என்ற வேத வசனத்தின்படி அவர் நடந்து கொண்டதைக் கண்ட ஏழை, அதுபற்றி விசாரித்தார். “”ஒவ்வொரு வீட்டின் கஷ்டத்தையும் தெரிந்து கொண்டு, அவர்களுக்கு அதன்படி உதவும் விஷயம் தெரிந்தது. அவர் மறைந்தது டிச.6ல். இந்தநாளில், இவர் பற்றி அறிந்தவர்கள் தாத்தா வேடமிட்டு வந்து, குழந்தைகள் தூங்கும் போது, அவர்களே அறியாமல் பரிசுப் பொருட்களை தலையணை அருகில் வைத்து விட்டு சென்று விடுவார்கள். குழந்தைகள் எழுந்ததும் அதைப் பார்த்து சந்தோஷப்படுவார்கள். இந்த வழக்கம் பிற்காலத்தில் கிறிஸ்துமஸ் தினத்துக்கு மாறி விட்டது.

டிச.,25 அன்று பிறந்த குழந்தையா?

உங்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் அன்று குழந்தை பிறந்திருக்கிறதா? பிரான்ஸ் மக்கள், கிறிஸ்துமஸ் அன்று குழந்தை பிறக்க வேண்டுமென்று பிரார்த்திக்காத நாளே இருக்காது. காரணம் அன்று பிறக்கும் குழந்தைகள் அறிவாளிகளாகவும், எதிர்காலத்தை அறிபவர்களாகவும் இருப்பர் என்பது அவர்களின் நம்பிக்கை. அதிலும், பெண் குழந்தை பிறந்தால், அவள் நல்ல குணமுள்ளவளாக விளங்குவாள் என்பதும் ஒரு நம்பிக்கை. ஸ்காட்லாந்து மக்களோ, கிறிஸ்துமஸ் அன்று பிறக்கும் குழந்தைகள் ஆவிகளைப் பார்க்கும் சக்தி உடையவை என்றும், அவர்களால் ஆவிகளுக்கு கட்டளையிட்டு அடக்கி வைக்க முடியும் என்றும் நம்புகிறார்கள்.

சாண்டா கிளாஸ் வாழ்ந்த காலம் எது தெரியுமா?

கி.பி.300.கிறிஸ்துமஸ் தாத்தா வடதுருவத்தில் வசித்ததாக வடஅமெரிக்க குழந்தைகள் நம்பினர். நியூயார்க்கில் அவர் வாழ்ந்ததாகவும் ஒரு தகவல் உண்டு. 1822ல், கிறிஸ்துமஸ் தாத்தா பற்றி நியூயார்க் குருமார்கள் ஒரு புத்தகம் வெளியிட்டனர். கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் சங்கம் ஒன்றும் அமைக்கப்பட்டு, ஒரு சர்ச் கட்டவும், கிறிஸ்துமஸ் கலைக்கூடம் கட்டவும் நிதி திரட்டப்பட்டது.

முதல் கிறிஸ்துமஸ் கேரல்:

கிறிஸ்துமஸ் துவங்கிய காலத்தில் முதன் முதலாக பாடப்பட்ட கேரல் (குழுப்பாடல்) என்ன தெரியுமா!

இறைவனுக்கு மகிமை

இப்புவிக்கு சமாதானம்

இப்புவி மாந்தரில் பிரியம் என்பது தான். கிறிஸ்துமஸ் நாளின் முதல் நற்செய்தியும் இதுதான்.

 

SOURCE:::::இளங்கோவன் in http://www.dinamalar.com

Natarajan

Message For the Day…” Love is GOD… Live in Love … “

Two thousand years ago, when narrow pride and thick ignorance defiled mankind, Jesus came as the Embodiment of Love and Compassion and lived among people, holding forth the highest ideals of life. You must pay attention to the lessons He elaborated in the various stages of His life. His first declaration was, “I am the messenger of God”. Yes, each individual has to accept that role and live as examples of divine love and charity. Jesus knew that God wills all. So even when He was on the cross, though He suffered agony, He bore no ill-will towards anyone and infact exhorted those with Him to treat all as instruments of His Will. “All are one; be alike to everyone” – Practise this attitude in your daily lives. Moon can be seen only through the moonlight. So too God, who is love, can be seen and realised only through love. Love is God, Live in Love. This is the Message I give you  

Sathya Sai Baba

Message For the Day…” Maintain Your Body as Temple Where God Resides…”

Jesus sacrificed His life and poured out His blood to instill Love and Compassion in the heart of man, so that you are happy when others are happy and sad when others are sad. Let Me call upon you today, to give up, in honour of this holy occasion, two evils from your mind: self praise and talking scandal! Give them up! Instead adopt one habit: the habit of loving service to the distressed. If you spend all your time and energy in worldly comfort and sensual delight, you are disgracing this human existence. Do not spend your life in just enjoying food; eat as much as is necessary for living. Maintain your body as temple where God resides. Keep it clean, fresh and fragrant by developing compassion and love; Let holy thoughts, words and deeds emerge from you. Do not demean it by using it for low, trivial and unholy tasks. Wherever you are, make this resolution today! 

Sathya Sai Baba