Message For the Day…” Do Appreciate the Value of Air You Breathe…”

Co-operation among individuals grouped as a society guarantees security and stability. It is called, Shri Rama Raksha (protection), the mark of Divine Grace. The surest sign of awareness of one’s Divine Nature is the recognition of the bond of kinship with other beings. This bond has now snapped, and as a result, life has been rendered meaningless. The evil spirits of greed and pride, of envy and hatred, are executing their demonic dance in the hearts of man. People are not able to appreciate the value of the air they breathe, of the Sun’s rays that illumine the world, the drops of rain that sustain life, and the subtle power that underlies every object in Nature. They have become low-minded people, dedicating their lives to meaningless pursuits. What needs to be done today is to foster people who are determined to stand and even suffer to realise the holy goals of peace and prosperity for the entire world.

Sathya Sai Baba

Message For the Day…” Repeat the Name of God and Gain Control Over your Mind… “

What manifests externally is called ‘Manas’ (Mind). That which is internal is ‘Nama’ (The Name of the Lord). Repeating the Name of the Lord, you can gain control over your mind and attain the state where there is no Mind (Amanaska). As long as you are under the influence of your mind, you will tread the worldly path and get lost. You can clearly hear the voice of the Lord, only when you attain the ‘No Mind’ State. To attain that state, you must listen to the inner voice, the voice of the Lord within you. To hear Him, you must practice Devotion and Surrender. The easiest way to understand and experience God is to Love Him. You can easily grow in love for God, by worshipping Him in a specific form. A true devotee does all duties with total surrender only to please God, and dedicates every action to please Him.

Sathya Sai Baba

Message For the Day…” Happiness is Beyond Comfort and Sorrow… “

Understand the Nature of the Divine Soul (Atma), which gives sustenance to all the senses. The five senses originate from Ether, which emerges from the Atma. Hence, if you understand the Atma, it is highly likely that your senses will be under your control. Then you will always be happy. Know that happiness is beyond comfort and sorrow. Comfort and sorrow are just the manifestations of the human mind. The state which is beyond this pleasure and grief is truly happiness. You can realize this state when you listen to the voice within you. God is present within you and He truly speaks to you from within. To experience that inner voice, you must silence your mind. You must control the activity of the external senses. When the inner and outer organs are completely controlled, you will clearly hear the Lord, speaking to you, from within.

Sathya Sai Baba

” Hello God …I Thank you …”

GOD’S “PHONE NUMBER”

 

e0a8f-day_before_samadhi_002

Hello God, I called tonight
To talk a little while
I need a friend who’ll listen
To my anxiety and trial.

dove

You see, I can’t quite make it
Through a day just on my own…
I need your love to guide me
So I’ll never feel alone.

rose

I want to ask you please to keep
My family safe and sound.
Come and fill their lives with confidence
For whatever fate they’re bound.

Give me faith, dear God, to face
Each hour throughout the day,
And not to worry over things
I can’t change in any way.

rose butterfly

I thank you God for being home
And listening to my call,
For giving me such good advice
When I stumble and fall.

rose

Your number, God, is the only one
That answers every time.
I never get a busy signal,
Never had to pay a dime.

hearts

So thank you, God, for listening
To my troubles and my sorrow.
Good night, God, I love You, too,
And I’ll call again tomorrow!

dove
P.S. Please bless all my friends and family too.

Natarajan

 

“நீங்கள் ஆணையிட்டால் ….” ” நடக்கட்டும் …நடக்கட்டும் …” !!!

 

1956 – ஜனவரி

இரண்டு இளைஞர்கள் – ஆங்கிலக் கல்வியுடன் நாட்டியக் கலையையும், கர்நாடக இசையையும் கசடறக் கற்றவர்கள். ஒருவர் பரத நாட்டியத்திலும், மற்றவர் கர்நாடக இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தனர். பல்கலைக்கழக மேற்படிப்பு படித்து முடித்ததும், படிப்புக்கேற்ற வேலை கிடைக்கும் வரை, சென்னையிலிருக்கும் தங்கள் நாட்டியக் கலா நிலையத்தில் தங்கி இருந்தனர். அங்கு பாடங்கள் நடத்துவதில் உதவியாக இருந்துகொண்டு, எதிர்காலத்தைக் குறித்த கவலையுடன், நாட்களை நடனமும் கர்நாடக இசையும் பயில்வதிலும், கற்றுக் கொடுப்பதிலும் கழித்துக் கொண்டிருந்தனர்.

இவ்விருவரில் ஒரு இளைஞர் வேதவித்தகரின் மகன். சிறுவயதிலிருந்தே மஹாபெரியவர் மீது மரியாதையும் பக்தியும் நிறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்.

ஒரு நாள் காலை, “புறப்படு; நாம் இருவரும் காஞ்சிபுரம் சென்று மஹாபெரியவரைத் தரிசித்து வருவோம். அவருக்குப் பாடலில் உள்ள அளவுக்கு ஆடலில் அவ்வளவு விருப்பம் உண்டா என்று எனக்குத் தெரியாது. இருந்தாலும், நீ நடனமாடுவதற்கேற்ற வேஷ்டியும் மேலாடையும் எடுத்து வா…. அவர் அருளிருந்தால், அவர் முன் நீ ஆடும் பாக்யம் உனக்குக் கிடைக்கும். நீ ஆடுவதற்கு நான் பாடும் பாக்யமும் எனக்குக் கிடைக்கும்” என்றார்.

இருவரும் பேருந்தில் காஞ்சியை அடைந்தனர். மஹாபெரியவர் அப்போது ஓரிக்கையில் இருப்பதாகத் தெரிந்து, ஓரிக்கை அடைந்தனர். அங்கு மஹாபெரியவர் ஒரு சிறு சிவன் கோவில் திண்ணையில் அமர்ந்திருந்தார். அந்தச் சிறிய இடத்தில் அவரைக் காண, அருள் பெற பக்தர்கள் கூடியிருந்தனர்.

நம் இளைஞர்கள் இருவரும் மஹாபெரியவரை நெருங்கி, வணங்கி எழுந்தனர். மஹாபெரியவர் அன்று மெளனம் கடைப்பிடிக்கிறார் என்று அறிந்தனர். வெகு சில சைகைகள் மூலமாக மிக முக்யமானவைகளை மட்டும் மற்றவருக்குத் தெரிவிக்கும் விதமான மெளனத்தில் இருந்தார்.

கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்ற நம் இளைஞர், மஹா பெரியவரிடம் நெருங்கி, “என் நண்பன் பரதநாட்டியம் கற்றிருக்கிறார். தங்கள் முன்னிலையில் ஆட வேண்டுமென்று விருப்பம்… நீங்கள் ஆணையிட்டால்….” என்று சொல்லி முடிக்கு முன்னாக, பெரியவர், “நடக்கட்டும்” என்பதற்கான சைகையைச் செய்ய, நம் இளைஞருக்கு ஒரே மகிழ்ச்சி. தன் நண்பனிடம் வந்து, “சீக்கிரம் நடனமாடுவதற்கேற்ப உடைமாற்றி வா… பெரியவர் ஆக்ஞை தந்துள்ளார்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். நாட்டியத்தில் தேர்ச்சி பெற்ற இரண்டாவது இளைஞர், அப்பொழுது தயாராகவே இருந்தார்.

ஒருவர் பாட, மற்றவர், “நடனம் ஆடினார்” என்ற பாடலுக்கு ஆடத் தொடங்கினார்.

அந்தச் சிறிய இடத்தில், பெரியவர் உட்கார்ந்திருந்த இடம் போக, மற்ற பக்தர்கள் அமர்ந்திருந்த இடமும் போக, மீதமுள்ள மிகச் சிறிய இடத்தில், நடராஜரின் மேல் அமைந்திருந்த அந்தப் பாடலுக்கு, “குதித்த மெட்டு” என்றழைக்கப்படும் ஜதியுடன் ஆடல் ஆரம்பித்தது. இந்த ஜதியுடன் காலைத் தூக்கி நடராஜர் அபிநயம் பிடிக்கவும், அவரது, கால்விரல்கள் மஹாபெரியவருக்கு மிக அருகில் வரவேண்டியதாயிற்று.

அருகிலிருந்த மற்ற பக்தர்கள், “நிறுத்து, நிறுத்து, அபசாரம், அபசாரம்” என்று கூவ, மஹா பெரியவரோ, தன் திருக்கைகளில் ஒன்றால், மற்ற பக்தர்களை நோக்கி “நிறுத்துங்கள்” என்பதாகவும், நம் இளைஞரைப் பார்த்து, “ஆடுவதைத் தொடரலாம்” என்பதாகவும் ஒரே நேரத்தில் அபிநயம் செய்தார்.

இளைஞர் ஆட, மற்றவர் பாட, அற்புதமான நடனம் பெரியவர் முன் அரங்கேறியது.

இருவரும் மஹாபெரியவரிடம் ஆசிபெற்று சென்னை வந்து சேர்ந்தனர்.

நடனமாடிய இளைஞர், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் மற்றும் பரோடா எம்.எஸ்.பல்கலைக்கழகத்திலும் பணிபுரிந்து, 1992 ஆம் வருடம் பணி நிறைவு Head of the Faculty of Performing Arts of M.S. University, Baroda பெற்றார்.

அவருக்கு 1993 வருடம் சங்கீத நாடக அகாடமி விருதும், 2008 ஆம் வருடம் காளிதாஸ் ஸம்மான் எனப்படும் விருதும், 2011 ஆம் வருடம் பத்ம பூஷன் விருதும் கிடைத்தன..

கடந்த 60 ஆண்டுகளாகப் பல உலக மேடைகளிலும் தான் ஆடியதும், விருதுகள் பெற்றதும், தனது 80ஆவது வயதிலும், பரதநாட்யம் ஆடுவதும், அந்த ஒரு மதியம் மஹாபெரியவர் “தொடர்ந்து ஆடு” என்று உத்தரவு அளித்ததின் விளைவே என்று மிக அடக்கத்துடன் கூறும் அந்த இளைஞர் பத்மபூஷன் ஸி.வி.சந்த்ரசேகர் அவர்களே.

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!!

Read more: http://periva.proboards.com/

Natarajan

Message For the Day…” Peace and Love are Intimately Related…”

If you are established in peace, you will find that Love arises from it. Peace and love are intimately related. Many pretend as if they love all. Their actions represent how dramatic one can get in the field of love. This is not true love. True love finds fulfilment only when it is with peace. Once you develop true love, Non-violence will naturally manifest from within and you will not hurt or harm anyone. Love is present everywhere, in every being in this world. Love is beyond a specific name, form or action. Love is God, Live in Love. This is taught to you by Educare. The process of education inculcates desire, hatred, jealousy, lust, greed and avarice, which are worldly traits or behavioural tendencies. Educare on the other hand, consists of adherence to Truth, Non-Violence, Love, Peace and Righteousness – qualities that are present within you.

 

Sathya Sai Baba

” காலத்தின் தூண்கள் கோவில் தேர்கள்…”

 

பொங்கியெழும் ஜனத்திரள் சமுத்திரத்தின் நடுவே, மனிதத் தலைகளைத் தாண்டி பிரம்மாண்டமான கலைப்பொருளாக அசைந்தாடி வரும் தேரைக் கண்டு ரசிக்கும் கண்கள் பாக்கியம் செய்தவை. கலாச்சாரம், பக்தி ஆகியவற்றுடன் பிரமிப்பூட்டும் கலைநுட்பங்களைக் கொண்டவை கோயில் தேர்கள்.

தமிழகமெங்கும் உள்ள கோயில்களில் ஆயிரக் கணக்கான தேர்கள் உள்ளன. மாசிமகம், ஆடிப்பூரம், பங்குனி மாதம், தைப் பூசம், சித்திரை மாதம், மார்கழி உற்சவம் போன்ற பல நிகழ்ச்சிகளில் நான்கு வீதிகளிலும் தேரோட்டங்கள் நடைபெறுவது பல ஊர்களில் இன்றும் வழக்கமாக உள்ளது. பிரம்மாண்டமான திருவாரூர் ஆழித்தேர், கும்பகோணம் சாரங்க பாணி கோயில் தேர், வில்லிபுத்தூர் பெருமாள் கோயில் தேர் போன்ற பல தேர்களை வடகயிற்றால் இழுத்துச் செல்பவர்களின் முகத்தில்தான் எத்தனைப் பிரகாசம்!

பெருமாள், சிவன் கோயிலுக்கு ஏற்ப பத்து தாளம் எனும் தசதாள அளவிலான தேர்கள், நவதாளம் எனப்படும் ஒன்பது தாளத்தில் செய்யப்பட்ட அம்மன் கோயில் தேர்கள், பஞ்ச தாளம் எனப்படும் ஐந்து தாளத்தில் குறுகிய வடிவில் செய்யப்படும் விநாயகர் கோயில் தேர்கள் என்று விதவிதமான தேர்களைப் பவனிவரச் செய்து இன்றும் அழகுபார்ப்பவர்கள் தமிழர்கள். கோயில் தேர்களுக்கென்றே படிகளுடன் கூடிய தேரேற்றுக் கூடங்களும் நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ளன.

அலங்கரிக்கும் அதிசயங்கள்

தேரைச் சுற்றி நான்கு புறமும் ஆடும் அசைந்தாடிகள், நான்கு முகப்பிலும் வாச மாலைகள், சுவாமிக்கு மேல் விதான ஓவியங்கள், தேர்களின் எட்டுப் புறமும் பட்டங்கள், சிவ வைஷ்ணவக் கொடிகள், எல்லாவற்றுக்கும் மேலாகக் கூம்பிய வடிவில் கலசம் போன்ற துணிகளால் ஆன கலங்கரி ஓவியத் துணிகள், தேரை இழுத்துச் செல்வது போன்ற வடிவில் மூங்கிலால் உருவாக்கப்பட்ட குதிரைகள் என்று தேருக்குத் தெய்வீகக் களை சேர்க்கும் விஷயங்கள் பார்க்கத் திகட்டாதவை.

தேர்களின் நான்கு வெளிப்புறத்திலும் சித்திர வேலைப்பாடுகள் அழகு சேர்க்கும். வைணவத் தேராக இருந்தால் பெருமாளின் தசாவதாரங்களைக் காட்டும் மரச் சிற்பங்களும், சிவன் கோயில் தேர்களாக இருந்தால் சிவபுராணக் கதைகள், சிவத்தொண்டர்களான 63 நாயன்மார்களின் கதைகளைச் சித்தரிக்கும் அழகிய மரச் சிற்பங்கள் வடிவமைக்கப் பட்டிருக்கும். அவற்றைக் காணும் வெளிநாட்டுப் பயணிகளின் கண்கள் ஆச்சரியத்தில் விரிவதைப் பார்ப்பதே தனி அழகு.

பிரான்ஸைப் பின்பற்றலாமே!

தேரோட்டம் முடிந்த பிறகு, தேரின் அத்தனை அலங்காரங்களையும் பிரித்து, இரும்புத் தகடுகளால் தேரை முழுவதுமாக மறைத்துப் பயணிகள் பார்க்க இயலாமல் கோயில் அதிகாரிகள் மூடிவிடுகின்றனர். இதனால் தோ்த் திருவிழா முடிந்த மற்ற நாட்களில், இதனைப் பார்க்க வரும் பயணிகளால் அவற்றின் கலை அழகைக் காண இயலாமல் போய்விடுகிறது.

100 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த கலைப் பொருட்கள், கட்டிடங்கள் போன்றவற்றை பிரான்ஸ் நாட்டினர் திறந்தவெளி அருங் காட்சியகம் எனும் முறையில் இன்றும் பாதுகாத்துவருகின்றனர்.

தமிழகத்திலோ 350 ஆண்டுகளுக்கும் மேல் பழமைவாய்ந்த 100-க்கும் மேற்பட்ட தேர்கள் சிதிலம் அடைந்தும், கேட்பாரற்றுக் கிடப்பதும் வேதனை யளிக்கிறது. இவற்றைப் புத்தாக்கம் செய்வதோடு மட்டுமல்லாமல், அழகிய நிலையில் உள்ள தேர்களை, தேரோட்டத்துக்குப் பிறகு மக்கள் அவற்றின் கலை அழகைக் கண்டுகளிக்கும்படியாகத் திறந்தவெளி அருங்காட்சியமாக வைக்கலாம். ஏனெனில், தேர் ஓடினால் மட்டுமல்ல, நின்றாலும் அழகுதான்!

– தேனுகா, கலை விமர்சகர், தொடர்புக்கு: dhenuga.srinivasan@gmail.com

Message For the Day…” Know That YOU are the Spark of the Divine…”

Lord Krishna said, “Don’t conduct yourself like a beast, not even like a human being. Know that you are the spark of the Divine. You are ancient, eternal and essentially Divine. Mamaivamsho Jeeva Loke Jeeva Bhoota Sanatanaha.” Being the sparks of Divine, you must have the sacred qualities of Truth, Righteousness, Peace, Love and Nonviolence. Instead of behaving in accordance with these noble virtues, people submit themselves to evil qualities like lust, greed, anger, jealousy, hatred and avarice which does not befit a human being. These changes are due to one’s food habits and behavior. The food you take and the water you drink must be pure, and timely. Lead a well regulated human life and realise the Divine within you.

Sathya Sai Baba

” இதை மாற்றினால் போதும் …”

இதை மாற்றினால் போதும்!

ஒரு பக்கம் சாஸ்திர நம்பிக்கையுள்ள கட்டுப் பெட்டிகள், மறுபக்கம் நவீனக் கல்வி படித்தவர்கள் என்று பிரிந்திருப்பதே தவறு. சாஸ்திரத்தில் நம்பிக்கை மட்டுமில்லாமல், நாமே எல்லா சாஸ்திரங்களையும், வித்யைகளையும் படித்தால் கட்டுப்பெட்டிகளாக இருக்க வேண்டியதேயில்லை. அதனால் அவற்றையும் படித்து, மாடர்ன் ஸயன்ஸ்களையும் படித்து, இந்த ஸயன்ஸிலும் நிறைய அம்சங்கள் நம் சாஸ்திரங்களில் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதே மாதிரி ஸயன்ஸ்காரர்களும் சாஸ்திரங்களைப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது என் ஆசை. இதற்காக பகவானைப் பிரார்த்தனை பண்ணுகிறேன். ஒன்றுக்கொன்று ‘காம்ப்ளிமென்டரி’யாக பழசும் புதிசும் இட்டு நிரப்பிக் கொள்ள வேண்டும்.

நானும் சரி, மற்றவர்களும் சரி எவ்வளவு பேசினாலும் லெக்சரால் கல்சர் (கலாசாரம்) வளராது. படிப்பதாலும் வளராது. நமக்கென்று காரியத்தில் பின்னி வைத்திருக்கிற அநுஷ்டானங்களைப் பண்ணினால்தான் சித்த சுத்தி ஏற்பட்டு, நாம் படிப்பதில் ஸாரம் எது என்று புரிந்துகொண்டு அதைக் கிரஹித்துக் கொண்டு கல்சரை வளர்க்க முடியும். பிற தேச விஷயங்களில் எதை எடுத்துக் கொள்வது என்று பரிசீலித்து முடிவு செய்வதற்கு அஸ்திவாரமாக முதலில் நம் சாஸ்திரப்படி வாழ முயற்சி பண்ண வேண்டும்.

இக்காலத்தில் ஆஹாரம், விஹாரம், வாஹனம் எல்லாமே மாறித்தான் விட்டது. அத்தனையும் நம் பண்பாட்டுப்படி மாற்ற முடியுமா என்று மலைப்பாயிருந்தாலும், கொஞ்சம் strain பண்ணிக் கொண்டாவது (சிரமப்படுத்திக் கொண்டாவது) சிலதையாவது மாற்ற ஆரம்பிக்கத்தான் வேண்டும். நம் மதத்துக்கு ஆதாரமான ஆசாரங்கள், ஆஹார சுத்தி முதலியவை, பழக்கத்தில் இருந்தால்தான் போஷிக்கும். முதலில் லெக்சராகவும் அப்புறம் லைப்ரரியில் புஸ்தகமாகவும் மட்டும் இருந்தால் வெறும் வறட்டுப் பெருமை தவிர பிரயோஜனமில்லை.

நான் சொல்கிறபடி மாறுவது ஒன்றும் பெரிய கஷ்டமில்லை. ஒரே ஒரு அம்சத்தை மட்டும் நாம் பிடிவாதமாக மாற்றிக் கொண்டு விட்டால் இது ஸாத்யம்தான். ‘பணம்தான் பிரதானம்’ என்பதே அந்த அம்சம். பணமே குறி என்று நாம் இறங்கின பிற்பாடுதான் ஆசாரங்கள், வித்யா ஞானம் எல்லாமே போய்விட்டன. நம் தேசத்தில் பணம் முக்யமாய் இருந்ததேயில்லை. லௌகிக வாழ்க்கையை ஆத்ம அபிவிருத்திக்கு உபாயமாக மட்டும் வைத்துக் கொள்வதுதான் நம்முடைய தேசாசாரம்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Source::::Input from a friend of mine

Natarajan