Message For the Day…” Eliminate Bad Qualities Within &Implant Divine Virtues…”

 

In the present, people disregard moral values and have no gratitude to those who helped them in times of need. In fact many youth lead miserable lives; they have no consideration for their kith and kin and do not hesitate to inflict harm on them. Educated young men and women do not behave like cultured human beings. What is the value of an education which does not enable you to do your duty to your spouse and children? The first requisite to fix these evils is the elimination of the bad qualities within. You must return to the path of morality and right conduct, fear sin and love God. People appearing to be pious and god-loving without genuine good qualities, and exhibiting hypocritical behaviour is vitiating the atmosphere everywhere; its promoting disorder and confusion. Everyone should therefore embark upon getting rid of bad traits and implanting Divine qualities. With love as your path realize the Divine within.

 

Sathya Sai Baba

” ஒன்று உனக்கு , இன்னொன்று உன் குழந்தைக்கு …” !!!

 



1971-ஆம் வருடம். மகா பெரியவாள் தஞ்சையில் முகாம். நாள்தோறும் கல்யாணம் வைபோகம் தான்!.

சாரி சாரியாக (ஆமாம், புடவை புடவையாக தான்) பெண்கள்.

சுவாசினீ பூஜை என்ற திருநாள் அன்றைக்கு.

சுமங்கலிகளுக்கு காமாட்சி அம்மன் திருவுருவம் பொறித்த பொற்காசு ஒன்றை, ஒவ்வொருவருக்கும் அருளுகிறார் பெரியவாள். புடவை தலைப்பை நீட்டி, இரு நுனிகளையும் இரு கைகளால் பிடித்துகொண்டு, அந்த அம்மன் காசை அருளாளரிடமிருந்து பெற்று கொண்டு நகர்ந்து செல்கிறார்கள் மாதரிசிகள்.

அந்த பெண்மணியின் புடவை தலைப்பிலும் பொற்காசு வந்து விழுகிறது. நகர்ந்து சென்று கையில் எடுக்கிறார் – பார்கிறார் – வியக்கிறார்.

இரண்டு காசுகள்…!

என்ன அதிர்ஷ்டம்! இரண்டு பொற்காசுகள்…!

தாமாகவே வந்தவை. திருடினேனா என்ன…? வேறு யாருக்கும் தெரியும்…?

மங்கையர் திலகத்துக்கு மாசுபடியாத மனம்.

பெரியவாளிடம் வந்து, அடக்க ஒடுக்கமாக நின்றார்.

“என்ன?” என்று ஒரு பார்வை, பெரியவாளிடமிருந்து.

“என் புடைவையில் இரண்டு காசு வந்திருக்கு.. எல்லோருக்கும் ஒண்ணுதானே ..? அதான்.. இன்னொண்ணை…” 

பெரியவாள் திருவதனத்தில் மந்தகாசம் மலர்ந்தது.

“ஒண்ணு உனக்கு.. இன்னொண்ணு உன் வயிற்றில் இருக்கிற குழந்தைக்கு..!

அட, அப்படியா?

நான் கருவுற்றிருப்பதை பெரியவாளிடம் யாரும் சொல்லவில்லையே… பெரியவாள் எதிரில் அரைவிநாடி நேரம்தானே நின்றிருப்பேன்…

அப்புறம் என்ன?

ஏழு மாதங்களுக்கு பின் இரட்டை குழந்தைகள்.

அம்மணியின் பேறு காலம் பெரும் பேறு காலம்!

குழந்தைகளுக்கு கர்ப்பவாசம், சொர்கவாசம்!

கணேச – சுப்பராமன்களான இரட்டையர்க்கு, பெரியவாள் தான் உலகம்.

பால சந்யாசி ஆதிசங்கரர், சுவர்ண நெல்லிகனிகளை வரவழைத்து கொடுத்தார். மகா பெரியவாள் தம் கையாலேயே பொற்காசுகளை வழங்கினார்கள்.

சோடை போவார்களா, மக்கள்?

சொக்க தங்கமாக, ஞான ஞாயிற்றின் புகழ் பரப்புனர்கலாக பணி செய்து கொண்டிருகிறார்கள், இன்றைக்கும்.

source:::: http://www.periva.proboards.com

natarajan

Message For the Day…” Why Our Ancestors Built Huge Temple Towers …” ?

 

It was to remind people in the villages to think of God that the ancients built temples which towered above all other buildings. The temple tower was the first thing the villagers saw when they woke up in the morning. The sight of the temple spire immediately aroused in them spontaneous feelings of adoration. It must be recognised that it was not a crazy feeling which inspired the ancients to build huge temples at great expense. These multi-storeyed temple towers were built so that they might constantly evoke sacred thoughts about God in the minds of the people. It has been said: “The body (deha) is like a temple for theDehi (indwelling eternal Spirit).” Just as a doctor reminds you of illness, and a lawyer makes you think of litigation, in the same manner when you look at your body you must remember God.   

Sathya Sai Baba

Message For The Day…” A DivinePower is Always In You …”

Fire emerges when one wooden stick is rubbed against another. Can two sticks placed next to each other produce the fire? No. Fire though latent in them, emerges only through the act of rubbing of the sticks. What do these sticks symbolize? The sticks represent the human body. The fire of wisdom (jnana) is present in subtle form within us since our birth and is inert. Spiritual effort (Sadhana) is the process of rubbing the sticks. Where is the butter present in the milk? Butter has always been present in the milk and could be obtained only after the milk had been converted to curd and the curd was churned. Once butter is obtained from the buttermilk, it remains as butter without becoming milk. Likewise, in the human body, a divine power pervades every part of the body, which, after the experience of a Sakshatkar (vision of the Divine) will not be attached to the body.

 

 

Sathya Sai Baba

முள்ளும் குறடும் ….முருகன் கருணை …!!!

இதிகாசம் மற்றும் புராணங்களில், தெய்வமே மனிதர்களுக்கு உதவி செய்து, துயரத்தில் இருந்து காப்பாற்றியதாக படித்திருப்போம் அல்லது கேட்டிருப்போம்.
‘அதெல்லாம் அந்தக் காலம்; இப்ப அதெல்லாம் நடக்காது; இது கலிகாலம்’ என்ற எதிர்மறையான புலம்பலும் உண்டு.
தெய்வத்திற்கு, காலக் கணக்கோ எல்லையோ கிடையாது. தெய்வம் என்றும் நின்று அருள் புரியும்.
கலியுகத்தில், அதுவும், இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான் ஒருவருக்காக, முருகப் பெருமான் நடத்திய அருளாடல் இது.
இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் பாம்பன் ஸ்வாமிகள். இவர், கனவிலும், நனவிலும் முருகனைத் தரிசித்தவர்.
ஒரு நாள் அவர், தென்னந்தோப்பிற்குள் நடந்து கொண்டிருந்தார். கடும் வெயில், தலைக்கு மேலே சூரியன் சுட்டது. தரையோ, கீழிருந்து கால்களைத் தாக்கியது.
கடும் வெயிலில் நடந்து கொண்டிருந்த பாம்பன் சுவாமிகளின் காலில், முள் தைத்து விட்டது. சுவாமிகள் அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டார். உடனே, தரையில் இருந்த கொதிப்பும் அவரைத் துன்புறுத்தியது.
முள் குத்திய காலைத் தூக்கி, தொடையின் மீது மல்லாத்தி வைத்து, முள்ளைப் பிடுங்க முயற்சித்தார். ஆழமாகவும், முழுமையாகவும் பதிந்திருந்த முள்ளை, பிடுங்க முடியவில்லை.
கையால் அசைக்க அசைக்க, ரத்தம் வந்து, வலி தான் அதிகமாயிற்றே தவிர, முள்ளை எடுக்க முடியவில்லை.
‘முருகா இந்த முள்ளைப் பிடுங்கும் போதே, இவ்வளவு வலிக்கிறதே… உடம்பில் இருந்து, உயிரைப் பிடுங்கும் போது, எவ்வளவு வலி இருக்கும்…’ என்று, கண்ணீர் சிந்தினார் பாம்பன் சுவாமிகள். கண்ணீர் முள்ளின் மீது விழுந்தது.
அதன் காரணமாக, முள், சற்று நெகிழ்ந்து கொடுத்தது. முள்ளைப் பிடுங்கி எறிந்து விட்டு, சுவாமிகள் திரும்பி விட்டார்.
இந்த விஷயத்தை சுவாமிகள், யாரிடமும் சொல்லவில்லை. ஆனால், அடியார் மனம் வருந்த, ஆறுமுகன் பொறுப்பாரா!
அன்றிரவே, தச்சு வேலை செய்யும் ஒருவர் கனவில், கந்தக் கடவுள் தோன்றி, ‘என் அடிமையான அந்த இளைஞனுக்கு, நீ ஒரு பாதக்குறடு (மரத்தாலான பாதுகைகள்)செய்து கொடு…’ என்று, கட்டளையிட்டார்.
மறுநாள், தச்சு வேலை செய்பவர், முருகப் பெருமானின் உத்தரவுப்படியே பாதக்குறடுகள் செய்து வந்து, பாம்பன் சுவாமிகளிடம் தந்து, முருகப் பெருமானின் உத்தரவையும் கூறினார்.
பாம்பன் சுவாமிகளுக்கு மெய் சிலிர்த்தது; அவர், முருகனின் கருணையை எண்ணி உருகினார்.
அடியார்கள் மனம் வருந்த, ஆண்டவன் பொறுக்க மாட்டார் என்பதை, விளக்கும் நிகழ்ச்சி இது. 


பி.என்.பரசுராமன்   IN dINAMALAR….Vara malar…

natarajan

 

 

அட்சய திரிதியை அன்று தானம் செய்வது நமது பிரதான கடமை …

 

27ஏப்

2014
00:00

மே 2 – அட்சய திரிதியை

அட்சய திரிதியை அன்று, ஏதாவது மதிப்புள்ள பொருள் வாங்க வேண்டும் என்று சொல்வர்; இது, வெறும் வார்த்தைக்காக சொல்லப்பட்ட விஷயம் அல்ல!
தங்கம் வாங்க வேண்டுமானால், பெரும் தொகை வேண்டும்; பெரும் தொகை கையில் இருக்க வேண்டுமானால், கடும் உழைப்பு இருக்க வேண்டும். ஆக, இது உழைப்பின் பெருமையை வெளிப்படுத்தும் விழா.
கீதையில் கண்ணன் கூறுகிறான்…
‘முயற்சியுடையவன், வேலையை விருப்பத்துடன் செய்கிறவன், எப்போதும் உழைத்துக் கொண்டிருக்கிறவன்… இவர்களைத் தேடி, மகாலட்சுமி வந்தடைகிறாள்…’ என்கிறார் பகவான்.
உழைப்பை அலட்சியம் செய்து, தெய்வம் கொடுக்கும் என்று காத்திருப்பவனைத் தேடி, செல்வம் வருவதில்லை. அட்சய திரிதியை அன்று, ஒருவர் பத்து சவரன் நகை வாங்குகிறார் என்றால், அதை வாங்குவதற்காக, கடந்த காலத்தில், அவர் பட்டபாடுகளை, அதற்காக அவர் கொடுத்த உழைப்பை எண்ணிப் பார்க்க வேண்டும்.
உழைப்பின் பெருமையை விளக்க இதோ ஒரு புராணக்கதை…
அம்பரீஷன் என்று ஒரு மன்னர் இருந்தார்; சிறந்த விஷ்ணு பக்தர்; ஏகாதசி விரதத்தை தவறாமல் கடைபிடிப்பவர். அறம், நீதி நெறி தவறாமல், தர்மம் குலையாமல், குடிமக்கள் மனம் மகிழும்படி ஆட்சி நடத்தி வந்தார். ஒரு அஸ்வமேத யாகம் செய்வதே குதிரைக் கொம்பான விஷயமாக இருக்கும் போது, இவர், நூறு அஸ்வமேத யாகம் செய்தவர். ஆனாலும், இத்தனை யாகங்கள் செய்து விட்டோம் என்ற கர்வம் அவருக்கு ஏற்பட்டதில்லை. மேலும், அந்த யாகங்களை, அவர் தனக்காகவோ, தன் குடும்பத்துக்காகவோ, நாட்டு மக்களுக்காகவோ செய்யவில்லை. எல்லா பலனும் இறைவனுக்கே என்ற ரீதியில், யாகத்தின் பலனை, விஷ்ணுவிடமே அர்ப்பணித்து விட்டார்.
இதனால், மனம் மகிழ்ந்த விஷ்ணு பகவான், அம்பரீஷனுக்கு தரிசனம் தந்து, சுயநலமில்லாத அவரின் உழைப்பை பாராட்டும் விதமாக, தன் சக்கரத்தையே பரிசாகக் கொடுத்தார். அந்த சக்கரத்தைத் தெய்வமாகக் கருதி, வழிபட்டு வந்தார் அம்பரீஷன். அந்த வழிபாடு தான், இன்றும் சக்கரத்தாழ்வார் வழிபாடாக தொடர்கிறது. அந்த சக்கரமே, பிற்காலத்தில், துர்வாச முனிவர் தந்த கஷ்டத்திலிருந்தும், அம்பரீஷனைப் பாதுகாத்தது.
சரி…எவ்வளவு தான் உழைத்தாலும், கஷ்டப்படுபவர்கள் என்று, ஒரு ரகம் எப்போதுமே இருக்கத்தான் செய்கின்றனர். இவர்களுக்கு அட்சய திரிதியை நன்னாளில், தானம் செய்வது பிரதான கடமை. ஒரு காலத்தில், அட்சய திருநாள் கொண்டாடப்படும் சித்திரை மாத வெயிலில், தயிர்சாதம் தானம் செய்வது மிக உயர்ந்ததாகக் கருதப்பட்டது. இப்போது, கால மாற்றத்திற்கேற்ப கல்வி உதவித்தொகை, உடைகள், மருத்துவ உதவி போன்ற தானங்களைச் செய்யலாம். இவ்வாறு செய்தால், தானம் செய்பவருக்கு புண்ணியம் கிடைக்கும். குடும்பத்தில் செல்வம் தழைத்தோங்கும் என்பது ஐதீகம்.
நன்றாக உழைக்க வேண்டும். உழைப்பால் வரும் செல்வத்தில், நமக்கு தேவையானது போக, மற்றதை தகுதியானவர்களுக்கு தானம் செய்ய வேண்டும். அப்படி செய்தால், அது கடவுளுக்கே செய்தது போல! அவ்வாறு செய்தால், கடவுளின் அருள் கிடைக்கும். அப்போது, எல்லா நாட்களும் நமக்கு அட்சய திருநாள் தான்!

தி.செல்லப்பா  in Dinamalar …vara malar 

natarajan

Message For the Day…” Divine Love is Free From Self Interest…”

 

There can be no joy in a dry, barren heart. Divine Love alone can make a dry heart fit for the sprouting of the sapling of joy. Divine Love is free from self-interest. That love alone is sacred and divine which is based on complete obliviousness to one’s self and is solely concerned with the yearning for God. Only when such a precious diamond of love is shining in your heart, you will have sacred and divine thoughts. In ancient days, sages lived in the forests amidst wild animals and performed penance. How were they able to live in peace amongst these animals? Because they were filled with divine love, they extended that love to the wild beasts also. They had no lethal weapons with them, only the weapon of love, which transformed even the nature of the wild animals. Therefore fill your hearts with love.  

 

Sathya Sai Baba

” சனீச்வரன் சிலை மட்டும் கொஞ்சம் உயரமா இருக்கே … ”

 

 



நகரத்தார்கள் அதிகம் வசிக்கும் ஊர ராயவரம் . அங்கே செல்வந்தர்களும் இருந்தார்கள், நடுத்தர மக்களும் இருந்தார்கள். ஆலமரத்தை போன்று பரந்து விரிந்து கிடந்த குடும்பம். அவ்வளவு வசதி என்று சொல்ல முடியாவிட்டாலும், சுமாராக வாழ்ந்து கொண்டிருந்தனர்.

எதையும் பெரிதாக செய்து முன்னுக்கு வர முடியவில்லையே என்று அவர்கள் கவலைப்பட்டது நியாயமே! தங்கள் நம்பிக்கையை கடவுள் மீது வைத்தனர். ஒரு சிவன் கோயிலை கட்டுவது என்று தீர்மானித்து, அதற்காக நிதி திரட்டி, கோயிலையும் நல்ல விதமாக கட்டி முடித்துவிட்டார்கள்.

கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து, அதற்கான பத்திரிகையை அடித்து எடுத்துக்கொண்டு முதல் அழைப்பை காஞ்சி மகானுக்கு கொடுக்க வேண்டும் என்று வந்தார்கள்.

சகல மரியாதைகளுடன் மகானிடம் அழைப்பிதழை கொடுத்தனர். அதை வாங்கி பார்த்தார் மகான்.

“கும்பாபிஷேகத்தை நடத்தணும்னா, அதுக்குள்ளே நீங்க ஒரு வேலை செஞ்சாகணும்”.

வந்திருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

மகான் அந்த ஊர பக்கம் வந்து வெகு நாட்கள் ஆயிற்று. மேலும் இப்பொது கட்டியுள்ள சிவன் கோயிலை அவர் பார்த்ததில்லை. என்ன வேலை செய்ய சொல்கிறார் ?

“நீங்க நவகிரக சந்நிதியில் எல்லா சிலைகளையும் வெச்சிருக்கீங்க, இல்லையா?

“ஆமா”

“அதுலே இருக்கிற சனீஸ்வர சிலை மட்டும் கொஞ்சம் உயரமா இருக்கு இல்லையா?

அதிர்ச்சியோடு “ஆமாம் ” என்றார்கள்.

“மகான் பார்காமலேயே இதை சொல்கிறாரே?!”, என்று அவர்களுக்கு வியப்பு.

“நவகிரங்கல்ல ஒரு கிரகம் மட்டும் உயரமாக இருக்க கூடாது. அதை அங்கிருந்து எடுத்து வேறு பக்கமா தனியா வெச்சிட்டு, மற்ற கிரகங்கள் உயரத்திலேயே ஒரு சனிபகவானை அங்கே ஸ்தாபிதம் பண்ணிடுங்கோ”, என்றார்.

கோயிலை பார்க்காமல், அதில் உள்ள குறையை மட்டும் சுட்டி காட்டிய மகானை மனதார வணங்கிவிட்டு, அவர் சொன்ன மாறுதலை செய்தனர்.

“சனீஸ்வரன் சிலை தனியாக கிடைப்பது கஷ்டம்”, என்று வேறு சொன்னார்கள் . செய்தால், ஒன்பது கிரகங்கள் தான் செய்ய வேண்டும்.

மகானின் அருளாசி இருக்க, இவர்களுக்கு என்ன குறை?

சனீஸ்வரன் சிலை கிடைத்தது. ஸ்தாபிதமானது. அந்த உயரமான சிலையை தனியே ஒரு இடத்தில வைத்தார்கள்.

பலரும் திருப்தியடையும்படி அங்கே கும்பாபிஷேகம் நடந்தது.

முன்பே குறுப்பிட்ட அந்த குடும்பம் அன்றிலிருந்து நன்றாக செழித்து பெருக தொடங்கியது.  

source:::: http://www.periva.proboards.com

natarajan