” இயற்கையை பேணி காக்க வேண்டிய கட்டாயம் நமக்கு இன்று…”

1

தூக்கம் களைந்து, திடுக்கிட்டு எழுந்தேன். மணி அதிகாலை 4:30. என்னடா இப்படி ஒரு கனவு? 2042 ஆம் ஆண்டில் இப்படியா இருக்கும்? காற்றை விலைக் கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலையா? நினைத்து பார்க்கவே பயமாக உள்ளதே.. புரண்டு புரண்டு படுத்து பார்த்தேன், தூக்கம் வரவில்லை. மொட்டை மாடியில் கொஞ்சம் நேரம் உலாவி விட்டு வரலாம் என்று தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டிலில் எடுத்து கொண்டு மாடிக்கு சென்றேன்.

தண்ணீரை சிறிது பருகிவிட்டு, தண்ணீர் இருந்த பிளாஸ்டிக் பாட்டிலை பார்த்தேன். கனவில் வந்தது சரிதான், 10-20 வருடங்களுக்கு முன், சுழற்சி முறையில் (REVERSE OSMOSIS) சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரையோ, பிளாஸ்டிக் பாட்டிலையோ பயண்படுத்தியது கிடையாது. ஆனாலும் இப்போது நோய்க்கிருமிகளும், வைரஸ்களும் அதிகமாகி கொண்டிருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. வாயில் நுழையாத பல நோய்களின் பேரையும் மாத்திரைகளையும் திணித்து கொண்டே இருக்கிறது மருத்துவ உலகம். எங்கும் இரசாயன மயம்.

வீடு அமைந்திருந்த தெருவில் வெட்டபடாமல் எஞ்சி இருந்த மரங்கள் வழக்கம் போல், மனிதர்களுக்கு சேவை செய்துக்கொண்டிருந்தன. மனிதன்  விழிக்கும்முன் எழுந்து விடும் உயிரினங்கள், தங்களுக்குள் மனம் விட்டு பேசிக்கொண்டு, சிறகடித்துக்கு கொண்டிருந்தன. அவைகளை கூர்ந்து கவனித்தேன். கனவின் பாதிப்பு சற்றும் குறையாது இருக்கவே, மீண்டும் சில சிந்தனை ஓட்டங்கள்..

சில வருடங்களில் பெரும்பாலான பறவை இனங்கள் அழிந்து போய்விடுமோ? கைப்பேசிகள் கிராமத்தில் கூட நம்மை கூவி எழுப்பும் நிரந்தர சேவல்கள் ஆகிவிடுமோ? விளை நிலங்கள் எல்லாம், விலைக்கு விற்கப்படும் நிலங்களாக மாறி வருகிறது. சைவர்களும், அசைவர்களும் ஓரிரு  தலைமுறைகளுக்கு பின் ஒன்றாகி விடுவார்களோ? வருங்காலத்தில் அனைவருக்கும் உணவு, மாத்திரையாக தான் இருக்கக்கூடுமோ? அறுசுவை விருந்து என்பது மறைந்து, அறுசுவை மருந்து என்று ஆகக் கூடிய சூழ்நிலை வருமோ? உணவே மருந்து என்ற நேற்றைய கூற்று பொய்யாகி, மருந்தே உணவு என்று நாளைய கூற்று ஆகிவிடுமோ?

2

 

சிறுவயதில் நாம் அனுபவித்த பல நல்ல விஷயங்களையும், கள  விளையாட்டுகளையும், ஆத்மார்த்தமான உணர்வுகளையும், உறவுகளையும் இந்த தலைமுறையினர் நம் கண்ணெதிரே இழந்து வருகின்றனர். எலேக்ட்ரானிக் உலகம், இந்த தலைமுறையினரை கபளீகரம் செய்து கொண்டிருக்கையில், அடுத்த தலைமுறைகள் மனிதர்களின் அத்தியாவசிய தேவைகளான உணவு உறக்கம் போன்றவற்றைக் கூட இழந்து விடுவார்களோ?

அடுக்கடுக்காய் பல கேள்விகள். என்ன தான் பூவுலகில் நடக்கிறது? ஒரு சிறிய உதாரணம். இப்போது கூட நாம் வசிக்கும் நகரத்தை விட்டு, ஒரு மணி நேரம்  நகரத்திற்கு வெளியில் உள்ள இடங்களுக்கு சென்று பார்த்து வந்தால் அப்படி ஒரு புத்துணர்ச்சி, மனநிம்மதி!! இதற்கு முக்கிய காரணங்கள் பெருகி வரும் வாகனங்களும், அவை கக்கும் கார்பன்-மோனாக்ஸைடும், போக்குவரத்து நெரிசலும் என்பது அனைவரும் அறிந்ததே. இன்று பெருநகரங்களில் வசிக்கும் பலருக்கு ஆஸ்த்மா, தோல் ஒவ்வாமை (அலர்ஜி), நுரையீரல் நோய், கண்கள் பாதிப்பு என்று அடுக்கி கொண்டே போகுமளவிற்கு நோய்கள். அத்தனை உடல் ரீதியான கோலாருகளுக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாக இந்த கார்பன்-மோனாக்ஸைடு திகழ்கின்றது.

“சொந்த கிராமத்தில் போய் இரண்டு நாள் தங்கி வந்தேன், உடலும் மனமும் எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தது தெரியுமா?” என்று நம்மிடம் நிறைய நண்பர்கள் கூற கேள்வி பட்டிருப்போம், நாமும் அதை உணர்ந்திருப்போம். ஆனாலும் என்ன செய்வது? பிழைப்பிற்காக பெருநகரங்களை தேடி ஓடி வந்து விட்டோம், நமது  அடுத்த தலைமுறைகளுக்கு தேவைப்படும் என்று நகரங்களில் வீட்டை கடனில் (LOAN) வாங்கி, ஆயுள் முழுதும் வேலைப்பார்த்து வீட்டுக்கடன் (EMI) கட்டி கொண்டு இருக்கிறோம்.

முக்கியமான தகவல். யேல் நிறுவனம், கொலம்பியா பல்கலைக்கழகத்தில்  ஒவ்வொரு வருடமும், பல நாடுகளில், சுற்றுச்சூழல் செயல்திறன் (ENVIRONMENTAL PERFORMANCE INDEX)  எவ்வாறு உள்ளது என்று பட்டியலிட்டு வெளியிடுகிறது. மொத்தம் 178 நாடுகளில் கணக்கெடுத்ததில், நமது நாட்டிற்கு 155ஆவது இடமே கிடைத்துள்ளது வேதனையான உண்மை.

3

 

சற்று ஆழமாக யோசித்து பார்த்தால், ஒரு விஷயம் நன்றாகப் புலப்படும். அடுத்த தலைமுறைக்கு உண்மையான சொத்து எனும் ஒன்றை நாம் விட்டு செல்வதென்றால், கண்டிப்பாக அவை ஆரோக்கியமும், மனநிறைவும், சந்தோஷம் தரக்கூடிய சுற்றுப்புற சூழலும், நல் வாழ்க்கை முறையும் தான். சிலர் இருக்கும் வாழ்கையை தொலைத்து, அடுத்த தலைமுறைகளுக்கு என்று சொத்துகளை வாங்கி குவிப்பர், ஆனால், சில வருடங்கள் கழித்து, அந்த நகரங்களில் வாழக் கூடிய சூழ்நிலையே கிடையாது எனும் நிலை வரும்போது, அந்த சொத்துக்களுக்கு  எல்லாம் என்ன மதிப்பு இருக்கும்?

4

 

சரி என்னதான் செய்யலாம், காற்று மாசுப்படிருந்தாலோ, வசிப்பிடத்தைச் சுற்றி  குப்பையாக இருந்தாலோ, சாதாரன மக்களாகிய நாம் என்ன செய்ய முடியும்? அதெல்லாம் அரசாங்கம் தானே பார்க்கவேண்டும் என நினைத்தால், நாம் பெரிய தவறை செய்து கொண்டிருக்கிறோம். கண்டிப்பாக நாம் சில அடிப்படை விஷயங்களை கடைப்பிடித்து, குழந்தைகளுக்கும் கற்றுத் தர ஆரம்பிக்கவேண்டும். சிறு துளி தான் பெரும் வெள்ளம், சின்னஞ்சிறு நல்ல சேமிப்புகள் தான், நாளைய பேராபத்தை தவிர்க்கும் கேடயங்கள். அதை உணர்ந்து, நாம் உடனடியாக ஆரம்பிக்க வேண்டிய, தினமும் கடைபிடிக்க வேண்டிய, நம்மளால் செய்ய இயன்ற செயல்கள்..

1. ஒவ்வொருவரும் தான் வாழ்ந்து முடிக்கும் முன், 10 மரங்களாவது   பின்வரும் தலைமுறைக்கு விட்டுச் செல்லலாம்.

2. புகை பிடிப்பவர்கள், புகை பிடிப்பதை விட்டுவிடலாம் அல்லது முடிந்தளவு குறைத்துவிடலாம்.

3. மாடியிலும் வீட்டுத்தோட்டங்களிலும், சின்னஞ்சிறு செடிதொட்டிகளும், பூத்தொட்டிகளும் வளர்க்கலாம். உதாரணத்திற்கு, சோற்றுக்கற்றாழை (ALOE VERA).. இதனை கண்டிப்பாக வீட்டில் வளர்க்கலாம். காற்றிலிருந்து பல மாசுகளை குறைக்கும் வல்லமைகொண்ட கற்றாழையில் மருத்துவ குணங்களும் ஏராளம் உள்ளது. நம் நாட்டிலிருந்து பல கற்றாழைகள், அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

4. சிலந்தி ஆளை (SPIDER PLANT), பாக்கு பனை, ஸ்நேக் பிளாண்ட் (SNAKE PLANT), மணிப் பிளாண்ட் (MONEY PLANT), மார்கினாட்டா போன்ற பல செடிகள் காற்றில் உள்ள நச்சித்தன்மையும், விஷத்தன்மையும் அகற்றுகின்றன. வீட்டில் அவைகளை வைத்தும் அழகுப் பார்க்கலாம்.

5. வீட்டிலிருந்து ஒன்று அல்லது இரண்டு கிலோமீட்டர் தொலைவில் எங்காவது போக வேண்டுமென்றால், வாகனங்களை தவிர்த்து, நடந்தே செல்லலாம்.

6. ரயில், பஸ் போன்ற போக்குவரத்துகளை, அதிக அளவில் உபயோக படுத்த ஆரம்பிக்கலாம். அதுவும் தனியாக போகும் போது கண்டிப்பாக பொது போக்குவரத்துகளை பயன்படுத்தலாம்.

7. வாகனங்களில் தனியாக செல்வதை விட்டுவிட்டு, நண்பர்களுடனோ, அலுவலகம் செல்லும் போது கூட வேலை செய்பவர்களோடும் (CAR POOLING) செல்லலாம்.

8. பிரிட்ஜ் (FRIDGE) தண்ணீரை பயன் படுத்துவதற்கு பதில், பழையமுறையான, பானை தண்ணீரை பருகுவதும், உடலுக்கும் சுற்றுப்புறத்திற்கும் நன்று.

9. தேவை இல்லாதபோது, வீட்டில் உள்ள எலக்ட்ரானிக் பொருள்களை அணைத்து வைத்துவிட வேண்டும். ஏஸியை (AC) முடிந்த அளவு குறைப்பது  உடலுக்கும் சுற்றுப்புறத்திற்கும் நன்று.

10. காகிதங்கள உபயோகத்தை முடிந்த வரை குறைத்து கொள்ளலாம்.

11. குழைந்தகளுக்கு குப்பையை குப்பைத்தொட்டியில் போட சொல்லியும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துகொள்ளவும் கற்றுத் தர வேண்டும். மக்கும் குப்பை, மக்கா குப்பை எனத் தனியாக பிரித்து அதை சுழற்சி முறையில் பயன்படுத்துவோரிடம் தந்து பயன்பெறலாம்.

12. சூரிய ஒளியில் இயங்கும் விளக்குகளை பயன்படுத்த தொடங்கலாம். தண்ணீர் மற்றும் பல இயற்கை வளங்களை விரயமாக்காமல் பாதுகாக்கவேண்டும்.

நண்பர்களே, இது தவிர வேறு ஏதேனும் கருத்துக்கள் காற்று மாசுப்படுதலை தவிர்க்க உங்கள் மனதில் தோன்றினாலும், எங்களுடனும், உங்கள் நட்பு வட்டாரங்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அடுத்த தலைமுறைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தால், சுற்றுப்புரத்தை சுத்தமாக வைத்துகொள்வோம். நம்மால் இயன்ற அளவு மேலே சொன்ன விஷயங்களைக் கடைப்பிடிப்போம்.

இயற்கையை பேணிக் காப்போம், இயன்ற வரை சுற்று சூழலை மாசுபடுதலில்  இருந்து காப்போம். பசுமையான ஒரு சமுதாயத்தையும், ஆரோக்கியமான வாழ்வையும் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்வோம்.

நம்பிக்கையுடன்,

விமல் தியாகராஜன் & B+ Team.  in  BEPOSITIVETAMIL.COM

Natarajan

” வீட்டுக்குளேயே ஒரு சுகாதார குறைபாடு … என்ன அது ? …”

மக்கள் முன்னெப்போதையும் விடச்சுத்தம், சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கின்ற காலம் இது.

 

கை கழுவ, பல் துலக்க, வாய் கொப்பளிக்க, அலுப்புப் போகக் குளிக்க, அழுக்குப் போகத் துணி துவைக்க என்று விதவிதமான வாசனை திரவங்களையும், வண்ண வண்ணமான குழம்பு(லோஷன்)களையும் வாங்குவதற்கென்று ஒவ்வொரு குடும்பமும் ஆயிரக்கணக்கில் செலவழிப்பதைக் கண்கூடாகப் பார்க்கின்றோம்.

சோப்பு, பற்பசை, பினாயில், டெட்டால் இவற்றை மட்டுமே மக்கள் பயன்படுத்திய காலம் போய், நூற்றுக்கணக்கான அழுக்குப் போக்கிகளும், கிருமிநாசினிகளும் நமது கடைத்தெரு அங்காடிகளை ஆக்கிரமித்துப் பிறகு நமது வீடுகளின் எல்லா அறைகளையிலும் குடிபுகுந்துவிடுகின்றன. இவற்றைப் பயன்படுத்தாத அல்லது பயன்படுத்தத் தெரியாத முந்திய தலைமுறையினரை, ‘நாட்டுப்புறம்’ என்று இன்றைய தலைமுறையினர் கேலி செய்வதையும் பார்க்கிறோம்.

ஆனால் வாழ்வின் ஒவ்வொரு துணுக்கையும் சுத்தம் என்ற பூதக் கண்ணாடியையும், சுகாதாரம் என்ற நுண்ணோக்கியையும் வைத்து நோக்குகின்ற இன்றைய தலைமுறையினர், தாங்கள் தத்தமது வீட்டுக்குள்ளேயே இடமளித்துக் காப்பாற்றி வருகின்ற ஒரு சுகாதாரக் குறைப்பாட்டைப் பற்றிக் கொஞ்சமேனும் விழிப்புணர்வு பெற்றுள்ளதாகத் தெரியவில்லை. என்ன அது என்கிறீர்களா?

அதுதான், ‘டாய்லெட்’ எனப்படுகின்ற குளியலறையுடன் கூடிய ‘நவீன’ கழிப்பறை அல்லது கழிப்பறையுடன் கூடிய ‘சுகாதாரமான’ குளியலறை.

அதாவது, வீட்டுக்குள்ளேயே அமைக்கப்படுகின்ற குளியலறையுடன் கூடிய கழிவறை.

தனித்தனி வீடுகளின் அளவு குறையத் தொடங்கியதாலும், அடுக்குமாடி வீடுகள் (ஃபிளாட்டுகள்) பெருகியதாலும், இடவசதி கருதி கழிவறைகளைக் குடியிருப்புக்குள்ளேயே கட்டிக் கொள்வது வழக்கமாகிப் போனது. இப்படி இருந்த போதிலும், நமக்குத் தெரிந்து 1980-களின் தொடக்கம் வரை, வீட்டிற்குள்ளேயேகூட குளியலறையும், கழிவறையும் தனித்தனியாகத்தான் அமைக்கப்பட்டன.

அதன் பின்புதான் குளியலறை கழிவறை இரண்டினையும் இணைத்து, ஒரே அறையாக வடிவமைக்கும் போக்கு மெதுவாக வளரத் தொடங்கியது. தமது கடைசிக் காலத்தில், பிள்ளையின் சொந்த வீட்டில் நகர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு வந்த முந்தைய தலைமுறையைச் சேர்ந்த தாய் தந்தையர்கள் பலர், இந்த அதிசய ‘டாய்லெட்டு’களைக் கண்டு அதிர்ந்து, தங்களது பழைய வீடுகளுக்கே சென்றுவிட்டதும் நடந்தது. ஆதரிக்க வேறு யாரும் இல்லாத பெரியவர்கள் சிலர் இந்தப் புதிய அலர்ஜி கலாசாரத்தைச் சகித்துக்கொள்ளப் பழகிக்கொண்டதும் நடந்தது.

‘மனிதன், பழக்கத்தின் அடிமை’ என்பதை நிரூபிப்பது போன்று, இப்போது ஜீவித்திருக்கும் பழைய தலைமுறையினரும் இதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்வதாகத் தெரியவில்லை.

என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவர் வீட்டில், இத்தகைய நவீன ‘டாய்லெட்டில்’ அமைந்துள்ள ‘மேற்கத்திய கழிவறைப் பீங்கானை’ மூடிவிட்டுக் குளிக்கின்ற வழக்கமிருக்கிறது. ஆனாலும், அந்த மூடி மேலேயே குளியல் சோப்பு, ஷாம்பு போன்றவற்றை வைத்து, அவற்றைப் பயன்படுத்திக் குளிக்கின்றனர்.

கேட்டால் இட வசதிக் குறைவு என்று பதில் வந்தது. நண்பர் ஒருவர் வீட்டில் டிபன் சாப்பிட்டுவிட்டு, அவர்கள் வீட்டின் ‘டாய்லெட்டில்’ உள்ள வாஷ் பேஸினில் கைகழுவச் சென்றபோது நான் கண்டது இதைவிடக் கொடுமை. கழுவுவதற்கான சமையல் பாத்திரங்கள், அங்குள்ள ‘மேற்கத்திய பாணிக் கழிவறைப் பீங்கானின்’ பக்கத்தில் குவிக்கப் பட்டிருந்தன.

விசாரித்ததில், அவர்கள் வீட்டின் சிறிய சமையலறையில் பாத்திரங்களைக் கழுவப் போதிய இடமில்லை என்று பதில் வந்தது.

புனிதம், சுகாதாரம் என்ற புளித்துப் போன வாதங்களைக்கூட விட்டுத் தள்ளுங்கள். இது அவசர யுகம். அதுவும் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி, அலுவலகம், கோயில் அல்லது கடைத்தெரு என்று செல்வதற்கு ஒரு வீட்டில் உள்ள எல்லோருமே பரபரக்கின்ற காலை நேரத்தில், இப்படிக் குளியல் அறையும், கழிவறையும் ஒரே கதவுக்குப் பின் இல்லாமல், தனித்தனி அறைகளாக இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்?

புதிதாகக் கட்டப்படும் ஃபிளாட்டுகள் மற்றும் தனி வீடுகளில், அனேகமாக இருபத்தைந்து அல்லது முப்பது சதுர அடிகளை இத்தகைய ‘டாய்லெட்டு’களுக்கு ஒதுக்குவார்கள். அதையே கொஞ்சம் பெரிய மனசு பண்ணி, இருபது-இருபது சதுர அடிகளில் தனித்தனியாகக் குளியலறை மற்றும் கழிவறையைக் கட்டித்தான் பார்ப்போமே! அவசரத்திற்குக் கைகொடுக்கும்; டென்ஷனையும் குறைக்கும்; சுத்தத்துக்குச் சுத்தம்; பெரிசுகளுக்கும் மனத்திருப்தி.

யோசித்துப் பார்த்தால் இளைய தலைமுறைக்கும்கூட இந்த ஏற்பாட்டில் முழுத் திருப்தி கிடைக்கும். என்ன, கட்டிட வரைபடம் தயாரிப்பவருக்குத்தான் கொஞ்சம் வேலை அதிகம். அதனாலென்ன முயன்றுதான் பார்ப்போமே!

– எஸ். ஸ்ரீதுரை, வேலூர்.

தொடர்புக்கு: sriduraiwriter@gmail.com

Keywords: வீடுகள், டாய்லெட், ரெஸ்ட் ரூம், சுகாதாரம், வீடு கட்டுமானம்
Topics: சமூகம்| பொது|

Source:::: The Hindu…. Tamil

Natarajan

Here is India”s Answer to ” Ice Bucket Challenge “…It is ‘Rice Bucket Challenge ‘ !!!

Hyderabad-based Manju Latha Kalanidhi devises local version of ‘rice bucket challenge’ on Facebook to assist donors who want to help poor

Manju Latha handing over a bucket of rice to a beneficiary in Hyderabad. Photo: Special Arrangement

Manju Latha handing over a bucket of rice to a beneficiary in Hyderabad. Photo: Special Arrangement.The Hindu

 

 

Here is India’s answer to the ALS ‘Ice Bucket Challenge’.

An Indian woman has come up with the ‘rice bucket challenge’ on Facebook to show a way to potential donors who want to help the poor. The message has now gone viral on social media.

The ice-bucket challenge is designed to raise awareness about ALS, a progressive neuro-degenerative disease that affects the nerve cells in the brain and the spinal cord. Facebook users can nominate friends to take up the challenge of pouring a bucketful of ice water on the head, film it, and upload the same on the web or donate MONEY to the ALS Association within 24 hours.

How it started
The ‘rice bucket challenge’ was the innovative idea of Hyderabad-based Manju Latha Kalanidhi who posted the challenge, seeking friends to cook or buy one bucketful of rice and feed the poor in the locality. One can also donate medicines worth Rs. 100 to the nearest government hospital.

“It’s local, desi and a practical solution to issues in the vicinity. Instead of wasting water on ice bucket challenge, save water and feed the hungry,” Manju Latha wrote on her Facebook page.

Her post has got over 150 responses within 24 hours, and people have started making voluntary donations in their respective localities.

Facebook user Devunifrom Vijeye took the challenge and helped a poor daily labourer, Sathibabu, with a bucketful of rice. Sattibabu earns his livelihood by selling idli and dosa on a bicycle.

Keywords: Rice bucket challenge, social media, challenge goes viral

Source::::Appaji Reddem in The Hindu

Natarajan

Message For the Day…” Dont Ever Argue ‘this is mine…that is yours’…”

All five elements are present in the human form. From the Element of Space, emotions, prejudices, apprehensions, shyness and the like are born. The Element of Air within the body causes the reflexes and movements like walking, respiration, etc. Hunger, thirst, sleep and fear are aspects of Fire. Blood, mucus and saliva emanates from the Element of Water. Finally skin, muscles, veins, bones and nails are the aspects representing the Earth Element. When you internalise this truth, who can argue, “This is mine, that is yours”, “I am greater, you are inferior” and so on. Anyone who speaks thus is dull-headed, unable to appreciate and see the reality. If only they have a deeper understanding, they can comprehend the truth in creation. Never be bogged down by the prevailing times or circumstances. That will amount to leading a narrow life. Develop an expansive way of life and carefully tread the path, that is ever new, holy and eternal.

Sathya Sai Baba

Message For the Day…” Seek the Divine Soul Within You …”

A scabbard is a sheath for the sword. Rice is sheathed in a husk. A tamarind seed is sheathed by tamarind pulp, which in turn is sheathed by the outer shell. Thus when one thing hides another thing and its identity, it is called as a Sheath. Every human body is made up of five sheaths – The Annamaya (food) Kosha sheath covers the Pranamaya (life) Kosha. Pranamaya sheath covers Manomaya (mind) Kosha, which in turn covers Vijnanamaya (intellect) Kosha. The Anandamaya (bliss) Kosha is the kernel hidden in Vijnanamaya Kosha, wherein the soul resides. Thus the Divine Soul is safely secured within each being without exception. Hence, everyone has the equal right and opportunity to seek the soul within them. But then one has to feel an urge to attain it and direct their activities towards it. By birth, the urge to attain and experience the Atmic status has been gifted to everyone, automatically

Sathya Sai Baba

 

டிகிரி இளைஞர்களின் டிகிரி காஃபி…!!!

நல்ல வேலை, கை நிறைய சம்பளம் உள்ள இளைஞர்கள் ரெஃப்ரஷ்மன்டுக்காக எப்போதாவது டிகிரி காஃபி குடிப்பார்கள். ஆனால், இந்த டிகிரி படித்த இளைஞர்கள் ‘டிகிரி காஃபி’ தயாரிப்பையே தங்கள் தொழிலாக்கி அதில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

ஜெயராமன் (27), குருநாதன்(27), வெற்றிச்செல்வன்(28) ஆகிய மூவரும் இன்ஜினீயரிங் முடித்துவிட்டுத் தங்கள் துறை சார்ந்த வேலையிலும் சேர்ந்தார்கள். ஆனால், ஒரு காலகட்டத்தில் வேலையை உதறிவிட்டு மூவரும் இணைந்து ‘கான்செப்டோ டெலிகசிஸ்’ என்று ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார்கள். இதன் இரண்டு அங்கங்கள் காப்பி குடில், எக்ஸ்குளூசிவ்.

சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும், அதுவும் உணவு சார்ந்த தொழில் தொடங்க வேண்டும் என எது உந்து சக்தியாக அமைந்தது. சொந்த தொழில் புரிவதில் உள்ள சவால்களும், சந்தோஷங்களும் என்ன? உங்களை இணைத்த மையப்புள்ளி எது? எதிர்கால திட்டம் பற்றிக் கூறவும் என அவர்களிடம் கேட்டபோது சுறுசுறுப்பாக சுடச்சுட தகவல்கள் பல அளித்தனர்.

‘‘நாங்கள் மூவருமே பள்ளிக்கூட சினேகிதர்கள். எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் ஒன்றாக சேர்ந்து விதவிதமான உணவுகளைச் சாப்பிடுவோம். எங்கள் மூவருக்கும் பிடித்த பொதுவான விஷயம் காபி. நல்ல காபியைத் தேடி பலமுறை அலைந்திருக்கிறோம்.

ஆனால், பின்னாளில் வேலைக்குச் சென்ற பிறகு, எங்கள் பணியிடத்திற்கு அருகில் உள்ள காபி பாரிலேயே தான் காபி குடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

அந்தக் கடையில் சுத்தம் பார்க்க முடியாது, சிகரெட் புகை இருக்கிறதே என சுகாதாரம் பேண முடியாது. இதுபற்றி நாங்கள் அடிக்கடி பேசுவோம். அப்போதுதான் நாம் மூவரும் இணைந்து ஏன் காஃபி ஷாப் ஆரம்பிக்கக் கூடாது என்ற எண்ணம் உதித்தது.

‘ரெஃப்ரஷ்மன்ட்’

இந்தத் தொழிலைத் தொடங்குவதற்கு முன்னர் நிறைய மெனக்கிடுதல் இருந்தது. ஒரு சர்வே செய்தோம், நீங்கள் ரெஃப்ரஷ்மன்ட்டுக்காக என்ன குடிக்க விரும்புவீர்கள் எனக் கேட்டபோது 95% பேர் நல்ல காபி எனப் பதிலளித்தனர்.

சரியான பாதையிலேயே செல்கிறோம் எனக் களத்தில் இறங்கினோம். முதல் அவுட்லெட்டைத் தஞ்சையில் சாஸ்திரா பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கினோம். இப்போது சென்னை, ஈரோடு, கொல்கத்தா என மொத்தம் 7 கிளைகள் இருக்கின்றன.

உடல்நலன் முக்கியம்

நாங்கள் காபி ஷாப் ஆரம்பிக்கும் போதே அது மேற்கத்திய காபி ஷாப் போல இருக்கக் கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்தோம். அதற்கேற்பவே, சுக்கு காப்பி, பனங்கற்கண்டு பால், கிரீன் டீ என உடல்நலத்திற்குச் சிறந்த பானங்களைத் தேர்வு செய்தோம்.

எங்களது அவுட்லெட்டுகள் கல்லூரிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், ஐ.டி. கம்பெனிகளில் இருக்கின்றன. இளைஞர்கள் இந்த ஹெல்த் டிரிங்கை மிகவும் ரசிக்கின்றனர். இன்னொரு முக்கிய விஷயம், மற்ற டீ ஸ்டால்களைப் போல் எங்கள் காபி குடிலில் நாங்கள் புகையிலைப் பொருட்களை அனுமதிப்பதில்லை என்றார் ‘கான்செப்டோ டெலிகசிஸ்’ இயக்குநர் ஜெயராமன்.

இதேபோல், குறைந்த விலையில் சத்தான உணவு என்ன வழங்கலாம் என்று யோசித்தபோது விளைந்ததே ‘எக்ஸ்குளூசிவ்’ கான்செப்ட். முட்டையை வைத்துக்கொண்டு 30-க்கும் மேலான வெரைட்டி தருகிறோம்.

ஒவ்வொரு சின்ன ரெஃப்ரஷ்மன்ட்டும் ரியல் ரெஃப்ரஷ்மன்ட்டாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். வாழ்க்கையில் இப்படிப்பட்ட சின்ன சின்ன சுவாரஸ்யங்கள் வேண்டும். அதை நாங்கள் எங்களுக்குச் சாதகமான தொழிலாக மாற்றிக்கொண்டோம்.

காபி குடில் நல்ல வரவேற்பு பெற்று 100 கிளைகளாவது தொடங்க வேண்டும். நிறைய தொழில் முனைவோர் உருவாக வேண்டும். இதுவே எங்கள் இலக்கு’’, என்கிறார்கள். அவர்கள் பேச்சில் டிகிரி காபிக்கு இணையான திடமும், சுவையும் இருந்தன.

Message For the Day…”Welcome Fame and Blame with same Mind Frame …”

You must welcome both summer and winter, for they are both essential for the process of living. The alternation of seasons toughens and sweetens us. Birth and death are both natural events. We cannot discover the reason for either birth or death. They simply happen. Hence we must learn to welcome the field of natural ups and downs (Prakrithika). The second is the field of social equanimity: We often try to blame some person or some incident for the injury or loss we suffer but the real reason is our own karma (action). When the background of the event is known, the impact can be lessened or even negated. Hence you must welcome with equal-mindedness fame and blame, respect and ridicule, profit and loss, and such other responses and reactions from the society in which one has to grow and struggle.

Sathya Sai Baba

 

” குறை ஒன்றும் இல்லை , கண்ணா ..”

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, வீட்டில் விளக்கேற்றி இதைப் படிப்போருக்கு எல்லா நன்மையும் கிடைக்கும்.
* வசுதேவர், தேவகி தம்பதியின் தவப்புதல்வனே! தாமரை மலர் போன்ற சிவந்த திருவடி கொண்டவனே! கருட வாகனனே! கோவர்த்தன கிரியைக் குடையாகப்
பிடித்தவனே! யசோதை இளஞ்சிங்கமே! நந்தகோபன் குமாரனே! கருணைக் கடலே! எங்களுக்கு செல்வ வளத்தை தந்தருள வேண்டும்.
* மதுரா மன்னனே! துவாரகையை ஆட்சி புரியும் கண்ணனே! ராதையின் நாயகனே! கோதை சூடிய மாலையை ஏற்பவனே! கோவிந்தனே! காளிங்க
நர்த்தனனே! யானையின் கொம்பினை ஒடித்தவனே! கோபியர் உள்ளம் கவர் கள்வனே! நாங்கள் ஆரோக்கியமாய் வாழ அருள்புரிய வேண்டும்.
* ஆழ்வார்கள் போற்றும் அமுதனே! ஆதி நாராயணனே! கேசவனே! மாதவனே! பசுக்களை மேய்த்தவனே! ஆல இலையில் துயில்பவனே! பாற்கடல் வாசனே! பக்தவத்சலனே! அச்சுதனே! பாம்பணையில் துயில் கொள்பவனே! பரந்தாமனே! உன்னருளால், மனதில் எப்போதும் மகிழ்ச்சி நிலைத்திருக்க வேண்டும்.
* திவ்ய தேசங்களில் வீற்றிருக்கும் திருமாலே! கார்மேக வண்ணனே! துளசிமாலையில் மனம் மகிழ்பவனே! கீதையை உபதேசித்த கண்ணனே! மாயம்
செய்வதில் வல்லவனே! பக்தர்களின் தலைவனே! எல்ேலாரும் என்றென்றும் நலமுடன் வாழ இந்த நன்னாளில் அருள்புரிவாயாக.

Source::::Dinamalar.com

Natarajan

வாட்ஸ் ஆப் வசீகரிப்பால் தூக்கம் தொலைக்கும் இளம் தலைமுறையினர்

செல்போனில் ‘வாட்ஸ் ஆப்’ செயலியைப் பயன்படுத்தி தகவல்களை பரிமாறிக்கொள்ளும் போக்கு அண்மைக்காலங்களில் பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் இளம் வயதினர் வாட்ஸ்-ஆப்-ஐ பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனால், நூல்களைப் படிக்கும் வழக்கம் அவர்களிடையே குறைந்து வருகிறது.

காலை நேரங்களில் படிப்பு, வேலை என்று இருக்கும் இளைஞர்கள் இரவு நேரங்களில்தான் தங்களது நண்பர்களுடன் தொடர்பு கொள் கின்றனர்.

இன்டர்நெட் வசதி கொண்ட ஸ்மார்ட் போன் இருந்தால், வாட்ஸ் ஆப், வைபர், ஹைக் போன்ற குறுஞ்செய்தி ஆப்-களை (செயலி) சுலபமாக பயன்படுத்த முடியும்.

இந்த ஆப்-களை கைபேசிகளில் பதிவிறக்கம் செய்து கொண்டால், அதன் மூலம் உலகின் எந்த மூலையில் இருப்பவரோடும் இலவசமாக தகவல்களைப் பரிமாறலாம், பேசவும் செய்யலாம். குறுஞ்செய்திகளைத் தவிர புகைப்படங்கள், ஆடியோ, வீடியோ அனுப்பிக் கொள்ளலாம்.

இதனால் செல்போன்களில் எஸ்எம்எஸ் அனுப்பும் வழக்கம் கூட தற்போது பெரிதும் குறைந்துவிட்டது.

பொறியியலில் முதுகலை படிக்கும் கண்ணன் வாட்ஸ் ஆப் குறித்து கூறும்போது, “நாங்கள் வகுப்புகளை முடித்து, நண்பர்களோடு பேசிக்கொள்ள இரவில்தான் நேரம் கிடைக்கிறது.

விடுதியில் பெரும்பாலானோர் வாட்ஸ் ஆப் பயன்படுத்து வதால், அதைப் பயன்படுத்த பெரிதும் எதிர்ப்பு இருப்பதில்லை” என்றார்.

தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் ப்ரவீணா, “நான் திருச்சியில் படித்து தற்போது பெங்களூரில் வேலை செய்கிறேன். எனது பள்ளி கல்லூரி நண்பர்களுக்காக வாட்ஸ் ஆப் குரூப் வைத்துள்ளோம். அந்த குரூப் ஆரம்பித்த பிறகுதான் நான் அவர்களுடன் தொடர்பில் இருக்க முடிகிறது.

சில நண்பர்கள் வெளி நாடுகளில் இருக்கிறார்கள். எனவே, அனைவரும் ஒன்றாக சேட்டிங் செய்யக் கூடிய நேரம் இரவுதான். ஆனால், என்னால் வாட்ஸ் ஆப் இல்லாமலும் இருக்க முடியும்” என்றார்.

ஆங்கிலத்தில் இளங்கலை படிக்கும் மரியா கூறுகையில், “வாட்ஸ் ஆப் குரூப்-ல் நடந்த விவாதங்களைப் பற்றி, சுவாரஸ்யமான ஸ்டேடஸ் பற்றி தினமும் வகுப்பில் பேசிக் கொள்வோம். எனது கைபேசியை பார்க்கும்போது அதில் குறுஞ்செய்தி எதுவும் வரவில்லை என்றால் சற்று கவலையாக இருக்கும்” என்றார்.

இழப்புகள் அதிகம்: மருத்துவர் கருத்து

இது குறித்து மன நல மருத்துவர் ராமானுஜம் கூறியதாவது:

ஒருவர் தமது முக்கிய பணிகளுக்கும் உறவுகளுக்கும் நேரம் ஒதுக்காமல், ஒரு செயல் அல்லது பொருளுக்கு நேரம் ஒதுக்கினால் அவர் அதற்கு அடிமையாகியுள்ளார் என்று பொருள். அதற்கு செலவழிக்கும் நேரம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வரும். அந்த பழக்கத்தால் தமக்கு, இழப்புகள் ஏற்படுகின்றன என்று தெரிந்தும் அது தொடரும். இந்திய இளைஞர்களுள் 5 முதல் 10 சதவீதம் பேர் இன்டர்நெட் பயன்பாட்டுக்கு அடிமையாகி உள்ளனர். தங்கள் பிள்ளைகள் பேஸ்புக்கிலும், இன்டர்நெட்டிலுமே அதிக கவனம் செலுத்துகின்றனர் என பல பெற்றோர் புகார் கூறுகின்றனர். வாட்ஸ் ஆப்-ஐ ஒரு தொடர்பு சாதனமாக மட்டுமே கருத வேண்டும். நண்பர்களோடு நேரில் பேசுவது, நல்ல புத்தகங்களை படிப்பது, உடற்பயிற்சி செய்வது ஆகியவற்றை இளைஞர்கள் வழக்கமாக கொள்ள வேண்டும் என்றார்.

Keywords: வாட்ஸ் ஆப், தூக்கம் தொலைக்கும், இளம் தலைமுறையினர், மருத்துவர் கருத்து
Topics: தமிழகம்|

Source::::வி.சாரதா in The Hindu…Tamil
Natarajan