“ஒங்களோட மேல் துண்டை கீழே போடுங்கோடா …”

கர்நாடகா மகாராஷ்டிரா எல்லைப் பகுதியில் பெரியவா யாத்ரை பண்ணிக் கொண்டிருந்தார். ராமதுர்க என்ற கிராமத்தில் உள்ள ஒரு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. எல்லோரும் ஆனந்தமாக நதியில் ஸ்நானம் பண்ணினார்கள். பெரியவா கரையில் அமர்ந்து ஜபம், அனுஷ்டானங்களை பண்ண தொடங்கினார்.

எல்லாம் முடிந்ததும் அருகில் இருந்த ரெண்டு சிஷ்யர்களை கூப்பிட்டு, ” ரெண்டு பேரும் ஒங்களோட மேல் துண்டை கீழ போடுங்கோடா !” என்றார். யாருக்கும் ஏன்? என்று புரியவில்லை. மிக மிக புதுமையான உத்தரவு! போட்டார்கள். பெரியவா சுற்றி அங்கே இங்கே பார்த்தார்……….மக்கள் நடமாட்டமே இல்லாத அந்தப் பகுதியில் ஒரே ஒரு குட்டிப்பையன் நின்று கொண்டு பெரியவாளை பார்த்துக் கொண்டிருந்தான்.

“இந்தாடா……….கொழந்தே! இங்க வா” சைகை பண்ணி அழைத்தார். வந்தான். நதி மேற்கிலிருந்து கிழக்காக இரு கரைகளையும் ஒட்டி அசாத்தியமாக சுழித்து சுழித்து ஓடிக் கொண்டிருந்தது. பெரியவா அந்த குட்டிப்பையனிடம் கன்னடத்தில் ” இ இரடு பட்டகளை ஹத்ர நதி ஓரதல்லி இதாளே…….அந்த யங்குஸ்தர்கடே கொடப்பா! ” [இந்த ரெண்டு வஸ்த்ரங்களையும் அதோ ஆத்தோரம் தெரியற பொண்ணுகிட்ட குடு] என்று சொன்னார்.> > அந்த பையனும் எதிர் கரைக்கு நீந்தி போய், நீருக்குள் மூழ்கி, தலையை மட்டும் வெளியில் வைத்துக் கொண்டிருந்த அந்த பெண்ணிடம் ரெண்டு வஸ்த்ரங்களையும் குடுத்தான். கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அந்த பெண் அதே நிலையில் அமர்ந்திருந்திருக்கிறாள். பாவம்!

ஆற்றின் சுழிக்கும் வேகத்தில், அவளுடைய வஸ்த்ரங்கள் போயே போய்விட்டன ! எப்படி வெளியே வருவாள் ? வீட்டுக்கு எப்படிப் போவாள்? படிப்பறிவு சற்றும் இல்லையானாலும், பண்பாடு போகவில்லையே அந்த கிராமத்துப் பெண்களுக்கு!

“இந்த சனங்கல்லாம் எப்பத்தான் இந்த எடத்தை விட்டு எழுந்து போவாங்களோ!” என்று மடத்தினரைப் பார்த்து அவள் நொந்து போயிருக்கக்கூடும். யாத்ரையில் வந்தவர்கள் பார்வை நூறடிக்கப்பால் போகவில்லை. அவசியமும் ஏற்படவில்லை. அவளுடைய இக்கட்டான சூழ்நிலை பெரியவாளுக்கு தெரியாமல் யாருக்கு தெரியும்? அந்தர்யாமியில்லையா? த்ரௌபதி “கோவிந்தா” என்று அலறியதும், எங்கோ த்வாரகையில் இருந்தாலும், அவளுடைய அந்தர்யாமியாகவும் இருப்பவன் அவன்தானே! ஓடி வந்து அவள் மானத்தை காப்பாத்தவில்லையா? இந்த பெண் மனஸில் போட்ட ஓலம் கேட்டு, தானே முன்வந்து, அவள் மானத்தை காத்தார். அவள் மேல் துண்டுகளை சுற்றிக் கொண்டு, வெளிய வந்து அங்கிருந்தபடியே ஒரு கும்பிடு போட்டுவிட்டு, வீட்டை நோக்கி போனாள்.

source::::www.periva.proboards.com

natarajan

Message For the Day…” God is With You…”

Do not think that God is at some distant place. He is with you, nearer than your most beloved family. Develop good qualities. Be a part of the society by undertaking noble activities. God (Bhagawan) does not expect anything from you nor does He need anything. All He cares for is your good reputation. The body is bound to perish. No one can escape death, even if they hide themselves in a forest. Do not worry about it. Continuously develop virtues as they will remain with you and protect you always. Use your discrimination, but this should not be individual discrimination, but be discrimination at the societal and universal level. Only then truth and right conduct will prevail. This should be the barometer for your conduct.

Sathya Sai Baba

 

 

” மஹா பெரியவர் சொன்ன மணியான வார்த்தைகள் …”

Goddess Kamakshi and Maha Periyava Maniyam ....jpg
நாம் வெள்ளைக்காரர்கள் அல்ல. ஜனவரி முதல் நாள் எந்த விதத்திலும் நமது புத்தாண்டு அல்ல. ஆனால் பல நூறு ஆண்டுகள் வெள்ளையர் ஆண்ட நாடு இது. அவர்கள் அறிமுகப்படுத்திய பழக்க வழக்கங்கள் இன்றும் நம்மை விட்டு போகவில்லையே. ஆங்கிலத்தில் வீட்டிலேயே பேசும் தமிழ்க்குடும்பங்கள் அதை நாகரிகமாக கருதுகிறோமா? தாய்மொழி தள்ளி வைக்கப்படுவது ஏன்? அதன் சிறப்பு ஏன் புரியவில்லை? கொஞ்சம் கொஞ்சமாக நாம் மேற்கு நோக்கி ஏன் நகர்கிறோம்? நாம் என்ன காட்டு மிராண்டிகளா இன்னும்? எனக்கு இதற்கெல்லாம் விடை தெரியாது. ஏனெனில் நானும் கும்பலில் ஒருத்தன் தானே.

 ஒரு உருப்படியான விஷயமும் தருகிறேனே. நான் தரவில்லை இந்த விஷயம். மகா பெரியவா உங்களுக்கு தந்தது.  

 

 

1. உடம்பினால் நல்ல காரியம் செய்யவேண்டும். கோயிலுக்குப் போய் பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும். தண்டம்சமர்ப்பித்தல் என்று சமஸ்காரத்தைச் சொல்லுவார்கள். தடியைப்போல் விழுவது தான் அது. இந்த உடம்பு நமதன்று, அவருடையது என்று நினைத்து அவர் சந்நிதியில் போட்டு விட வேண்டும்.

2. இந்த ஜென்மத்திற்குப் பின்பும் உபயோகப்படக் கூடிய சில காரியங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம். விபூதி இட்டுக் கொள்ளுதல், ருத்ராக்ஷம் அணிதல், ச்ராத்தம் செய்தல் முதலிய காரியங்கள் நாம் எப்பொழுதும் சௌக்யமாக இருப்பதற்கு உதவுங்காரியங்கள்.

3. நாமாவும் ரூபமும் இல்லாத மதம் நமது மதம். பேர் ஏன் இல்லை? அடையாளம் ஏன் இல்லை? மற்ற மதங்களுக்கெல்லாம் இருக்கிறதேஎன்று ஒரு சமயம் யோசித்துப் பார்த்தேன். அப்புறம் எனக்கு நிரம்ப சந்தோஷமாக இருந்தது. பேரில்லாமல் இருப்பது ஒரு கௌரவம் என்பது ஏற்பட்டது.

4. நம்முடைய மதம் எவ்வளவோ யுகங்களாக நீடித்து வாழ்ந்து வருகிறது. நமக்குத் தெரியாமல் ஏதோ ஒன்று இதைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. எவ்வளவோ வித்யாசங்கள் இருந்தாலும் இந்த மதம் அழியாமல் நிற்கிறது. லோகம் புரண்டு போனாலும் நம்முடைய கடமைகளைச் செய்து கொண்டு பயமின்றி அன்புடன் சாமாண்ய தர்மங்களை நன்றாக ரக்ஷித்து விசேஷதர்மத்தைக் கூடியவரை ரக்ஷிக்க வேண்டும். அதற்குரிய சக்தியைப் பகவான் அளிப்பாராக.

5. மூன்று மூர்த்திகளுக்கும் மேலே அதீதராகப் பரமசிவன் இருக்கிறார். அவர் ப்ரம்மாவுக்கு அனுக்ரஹம் பண்ணுகிறார். காமேச்வரனாக அருள் புரிகிறார். பராசக்தி காமேச்வரியாக அனுக்ரஹிப்பாள். பரமேச்வரனுடைய அனுக்ரஹத்தால் ப்ரம்மா வேதங்களை அறிந்து கொள்கிறார். நான்கு வேதங்களையும் நான்கு முகத்தில் சொல்லிக் கொண்டு சிருஷ்டியைச் செய்து கொண்டிருக்கிறார்.

6. வேதத்திலிருப்பதை எல்லோருக்கும் நன்றாக விளங்க வைப்பது பதினெட்டு புராணங்கள். பதினெட்டு உப புராணங்கள் வேறேஇருக்கின்றன. பதினெட்டு புராணங்களும் சேர்ந்து நான்கு லட்சம் கிரந்தம். ஒரு கிரந்தம் என்பது 32 எழுத்துக்ள் கொண்டது. பதினெழு புராணங்கள் மூன்று லட்சம் கொண்டவை. மிகுதியுள்ள ஒரு லட்ச கிரந்தம் ஸ்காந்த புராணம். பரமசிவனைப் பற்றிச் சொல்பவை பத்து புராணங்கள், அவைகளுள் ஒன்றே லட்சம் கிரந்தம் உடையது.

7. பாபத்தை ஒரேக்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு வஸ்து உண்டு. இரண்டு எழுத்துக்களாலான பெயர் அது. வேதங்களின் ஜீவரத்னம் அதுவே. கோயிலில் மஹாலிங்கம் போலவும் தேகத்தில் உயிர் போலவும் அது வேதங்களின் மத்தியில் இருக்கிறது. (”சிவ” என்ற இரண்டு எழுத்துக்களே அது) அதை ஒருதரம் சொன்னால் போதும். வேறு ஒரு காரியத்துக்கு நடுவிலும் சொல்லலாம். சொன்னால் அந்த க்ஷணத்திலேயே பாபத்தைப் போக்கிவிடும்.

8. வேதங்களுள் யஜுர் வேதம் முக்கியமானது. அதற்குள் அதன் மத்திய பாகமாகிய நாலாவது காண்டம் முக்கியமானது. அதற்குள்ளும் மத்திய பாகமான நாலாவது ப்ரச்னம் முக்கிய மானது. அதுதான் ஸ்ரீருத்ரம். அதற்குள்ளும் ‘நம: சிவாய’ என்ற பஞ்சாக்ஷர வாக்கியம் மத்தியில் இருக்கிறது. அதன் மத்தியில் ‘சிவ’ என்ற இரண்டு அக்ஷரங்கள் அடங்கியுள்ளன. இதையே ஜீவரத்னம் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இந்த அபிப்பிராயத்தை அப்பய்ய தீக்ஷிதர் ப்ரம்மதர்க்க ஸ்தவத்தில் சொல்லியிருக்கிறார்கள். அந்த ப்ரம்மம் சிவஸ்வரூபம் என்று தெரிகிறது.

9. அப்படிப்பட்ட ஸ்வரூபத்தை ஆராதிப்பதற்கு அடையாளமாகச் சிவபக்தர்கள் எல்லோரும் ஐந்து வித காரியங்களைச் செய்து கொண்டிருக்க வேண்டும். அவைகளாவன: (1) விபூதி தரித்தல், (2) ருத்ராக்ஷம் அணிதல், (3) பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜபம் செய்தல், பஞ்சாக்ஷர மந்திரம் உபதேசமாகாதவர்கள் ‘சிவ’ என்ற பதத்தை ஜபம் செய்தல், (4) வில்வ தளத்தால் பரமேச்வரனைப் பூசித்தல், (5) இருதயத்தில் சதா சிவத்யானம் செய்தல் இவைகள் ஒவ்வொன்றும் ஈச்வரனுக்கு விசேஷப்ரீதியைக் கொடுக்கக் கூடியது.

(குறிப்பு: பஞ்சாக்ஷர மந்திரத்தை உபதேச பெற்று ஜபம் செய்தல் சிறப்பு. எனினும் உபதேசம் பெறாதவரும் இம்மந்திரத்தைத் தாராளம் சொல்லலாம். ”கொல்வாரேனும், குணம் பல நன்மைகள் இல்லாரேனும் இயம்புவராயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயவே” – சம்பந்தர்.)

10. பரமேச்வரனுடைய கீர்த்தியை நாம் வாக்கினால் சொல்லுவதனாலும் கேட்பதனாலும் பவித்திரர்களாக ஆகிறோம். அவருடைய ஆக்ஞையை யாரும் மீறமுடியாது. அகம்பாவமாக இருக்கும்போது அவர் சிக்ஷிக்கிறார். குழந்தைகள் ஏதாவது தப்பு செய்தால் நாம்அடிக்கிறோம். அதுபோல பரமேச்வரன் தேவதைகளை சிக்ஷித்தார். ஹாலஹால விஷம் பாற்கடலில் உண்டானபொழுது அதைச் சாப்பிட்டு ரக்ஷித்தார். சகல தேவதைகளும் பரமேச்வரனுடைய குழந்தைகள்.

11. பரமேச்வரன் ஓங்காரம், ஸ்வரூப ப்ரம்மமும் ஓங்காரந்தான். அதனுடைய அர்த்தத்தை விசாரிக்கும் ஓர் உபநிஷத்தே தனியாக இருக்கிறது. அதற்கு மாண்டூக்யோபநிஷத் என்று பெயர். அதில் ‘சாந்தம் சிவம் அத்வைதம் சதுர்த்தம் மன்யந்தே’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. சிவஸ்வரூபம் தான் பரப்பிரம்மம். ப்ரதோஷ காலத்தில் ஈச்வர தரிசனம் செய்ய வேண்டும். ஈச்வரன் கோயிலில் ப்ரதோஷ காலத்தில் எல்லாத் தேவர்களும் வந்து ஈச்வர தரிசனம் செய்கிறார்கள்.

12. சாங்க்ய சூத்திரத்தில் மூன்று கண் உள்ளவன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அமரமும் அப்படியே சொல்லுகிறது. லோகத்தில் ஈச்வரன் என்ற சப்தம் சிவனுக்கே வழங்கப்படுகிறது. அவன் மஹாபுருஷன், ப்ரம்ம சூத்திரத்தில் ‘சப்தாதேவப்ரமித’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஈசானன் என்னும் சப்தத்திற்கு எது அர்த்தமோ அதுதான் பரமேச்வர ஸ்வரூபம்.

13. நம்முடைய ஆசார்ய ஸ்வாமிகள் ப்ரச்நோத்தர ரத்ன மாலிகா என்ற க்ரந்தத்தில் ஒரு கேள்வி கேட்கிறார். ‘கோ ப்ராம்மணை ருபாஸ்ய:?’ ‘காயத்ரி அர்க்காக்னி கோசர: சம்பு:’ எந்த வஸ்து காயத்ரி, அக்னி, அர்க்கன் (சூரியன்) என்னும் மூன்றிலும் ப்ரகாசிக்கிறது? சிவன் தான். காயத்ரியின் பரமதாத்பர்யமாயிருப்பவர் அவரே. சூரியனிடத்தில் பிரகாசிப்பவரும் அவர் தான். ஸ்ரீருத்ரத்தில் பரமேச்வரன் அக்னி ஸ்வரூபியாக இருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எனவே இந்த மூன்றிலும் பரமேச்வரனை ஆராதிக்க வேண்டும்.

14. விவாஹ காலத்தில் அம்பாளை அவசியம் ஆராதிக்க வேண்டும். ருக்மணி ஸ்ரீகிருஷ்ணன் பர்த்தாவாக வரவேண்டுமென்று அம்பிகையை ஆராதித்தாள். அம்பிகையின் ஆராதனத்தால் பதிபக்தியும் குருபக்தியும் உண்டாகிறது. அதற்காகத்தான் ருக்மணி பூஜை செய்தாள்.

15. ஜகத்துக்குத் தாயாகவும் கருணையுடையவளாகவும் இருக்கும் பரதேவதையிடம் பக்தி இருக்க வேண்டும். எப்படி குழந்தைக்கு வேண்டியதைத் தாய் தருவாளோ அப்படி அம்பிகை லோகத்தில் வித்தை, செல்வம் முதலியவைகளை அடையச் செய்து பின்பு தானாகப் பழுத்துப் பரமானந்தத்தைப் பெறும்படி அனுக்ரஹம் செய்வாள் 

 ​.

source::::input from a friend of mine…

natarajan

 

 

Jokes for The Day…

An Israeli doctor says: “Medicine in my country is so advanced that we can take a kidney out of one man, put it in another, and have him looking for work in 6 weeks.” A British doctor says: “That is nothing; we can take a lung out of one person, put it in another, and have him looking for work in 4 weeks.” A Canadian doctor says: “In my country, medicine is so advanced that we can take half a heart out of one person, put it in another, and have them both looking for work in 2 weeks.” A Nigerian doctor, not to be outdone, says: “You guys are way behind…… We just took a man with NO brain, made him President, and now the whole country is looking for work.

…………………………….

Q: How many politicians does it take to change a light bulb?
A: Two. One to assure the public that everything possible is being done while the other screws it into a water faucet.

…………………………..

It seems there was an agreement between two of the top power nations at the height of the arms race which grew out of their concern of global annihilation. Both sides agreed on a final end-all battle which would be one gigantic mean dogfight. Each would get five years to prepare their top animals. The first one, the Ugonauts, took the biggest, meanest Rottweiler and Doberman females and bred them with the biggest, meanest Siberian Wolves money could buy. Then they selected only the biggest, meanest pups of the litter to rebreed, year after year. It finally came to the big day. The Hugonauts had to drag their entry in with huge heavy ropes, and no one could get near the cage. The Argonauts toted in the craziest crate — it was low to the ground and eight feet long. When they opened it, people gasped! Out waddled the funniest looking eight feet long wiener dog anyone had ever seen. People felt sorry for the Argonauts, and the Hugos snickered in disbelief. The heavy door to the Hugo’s terror was slowly pulled open and out jumped the most hideous monster of a dog there’d ever been, snarling and growling. Just as the monster pounced at the neck of the wiener dog to take him out, the wiener dog opened its mouth and swallowed the Hugo’s dog whole! Everyone was in total disbelief! The Hugos said they just couldn’t understand it! They’d spent years and years perfecting this animal, how could this be? The Argo’s glibly replied, “That’s nothing. We spent hundreds of thousands of dollars for the top plastic surgeons in the world to come here and make this alligator look like a wiener dog!” (Just goes to show ya, things aren’t always what they look like!)
source::::joke a day.com
natarajan

 

 

Message For the Day…”Keep Your Heart Sacred and Pure…”

Who is a bad person? Anyone who sees evil in good is bad; stay away from them. If you join bad company, knowingly or unknowingly, you will lose good qualities. Many have reaped poor fate due to bad company. Who is a good person? Anyone who sees good, even in a bad person, is good. You must develop friendship with the good. There may be some evil qualities in you; do not worry or become weak because of this. Develop good qualities increasingly. God will always be in you, with you, around you and will take care of you. Whatever task you undertake, discriminate carefully, follow the noble path and always do good acts. Keep your heart sacred and pure. Never fill it with bad thoughts and feelings. You must start early, drive slowly and reach safely. When you develop good qualities, your journey to the future will be smooth

 

Sathya Sai Baba

Jokes For the Day…

Computers are like air conditioners. They work fine until you start opening windows….

…………………

Tech Support: “I need you to right-click on the Open Desktop.”
Customer: “Ok.”
Tech Support: “Did you get a pop-up menu?”Customer: “No.”
Tech Support: “Ok. Right click again. Do you see a pop-up menu?”
Customer: “No.”
Tech Support: “Ok, sir. Can you tell me what you have done up until this point?”
Customer: “Sure, you told me to write ‘click’ and I wrote click’.”
………………………..
Computer Problem Report Form

1. Describe your problem:
__________________________________________

2. Now, describe the problem accurately:
__________________________________________

3. Speculate wildly about the cause of the problem:
__________________________________________
__________________________________________

4. Problem Severity:
A. Minor__
B. Minor__
C. Minor__
D. Trivial__

5. Nature of the problem:
A. Locked Up__
B. Frozen__
C. Hung__
D. Shot__

6. Is your computer plugged in?
Yes__ No__

7. Is it turned on?
Yes__ No__

8. Have you tried to fix it yourself?
Yes__ No__

9. Have you made it worse?
Yes__

10. Have you read the manual?
Yes__ No__

11. Are you sure you’ve read the manual?
Yes__ No__

12. Are you absolutely certain you’ve read the manual?
No__

13. Do you think you understood it?
Yes__ No__

14. If `Yes’ then why can’t you fix the problem yourself? __________________________________________

15. How tall are you? Are you above this line?
__________________________________________

16. What were you doing with your computer at the time the problem occurred?
__________________________________________

17. If “nothing” explain why you were logged in.
__________________________________________

18. Are you sure you aren’t imagining the problem?
Yes__ No__

19. How does this problem make you feel?
__________________________________________

20. Tell me about your childhood.
__________________________________________

21. Do you have any independent witnesses of the problem?
Yes__ No__

22. Can’t you do something else, instead of bothering me?
Yes__

Thank you for taking the time to fill out our Computer Problems Form. Please allow 1-week response time so that the problem will resolve its self or you will reboot your computer, most likely resolving the issue.

source::::joke a day.com

natarajan

 

” சந்தர்ப்பங்களை நாம்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும் …”

சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. ஒரு பிரபல வாரப்பத்திரிகை ஆசிரியர் மஹானிடம் தனிமையில் பேசி தமக்கு ஏற்பட்டுள்ள சில சந்தேகங்களைப் போக்கிக் கொள்ள நினைத்தார், சந்தித்தார்.”நீ இப்போது என்னிடம் பேசலாம்” என்றார் மஹான் தமிழில்.

“சில விஷயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளவே நான் தங்களை சந்திக்க விரும்பினேன்” என்றார் ஆசிரியர் சுத்தமான தமிழில்.

“உன் தாய்மொழி என்ன?” முகத்தில் லேசாகப் புன்னகை தவழ மஹான் கேட்கிறார்; பின் அவரே தொடருகிறார். “உன் தாய் மொழி நிச்சயம் தமிழ்மொழியாக இருக்காது என்று எனக்குத் தெரியும்” என்கிறார். இதற்குக் காரணம் ஆசிரியர் சிரமப்பட்டுப் பேசிய தமிழ்தான்.

“தெலுங்கு” என்கிறார் ஆசிரியர்.

“நீ பிறந்த ஊர் எது?” என்று சுந்தரமான தெலுங்கில் கேட்டுவிட்டு, ஆசிரியரின் இளமைக்காலம், பெற்றோர், வாழ்க்கை, கல்வி, திருமணம், உத்தியோகம் – வேறு பல விஷயங்களில் இருந்த ஈடுபாடு போன்றவை பற்றி தெலுங்கிலேயே பேசி, ஆசிரியரையும் பேசவைத்தார்.

ஆசிரியர் இவற்றிற்கெல்லாம் பதில் சொன்னதால் அவர்களுக்கிடையே இருந்த இறுக்கம் சுத்தமாக மறைந்து போனது.

இந்த நேரத்தில் அங்கே வந்த ஒரு பக்தர் கன்னடத்தில் உரத்துப் பேசி ஆரம்பிக்கிறார். ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டே அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சுத்தமான கன்னடத்தில் பதில் சொல்கிறார்.

ஆசிரியருக்கு இதனால் ஏற்பட்ட வியப்பு மறைவதற்குள் இன்னொரு பக்தர் அங்கே வந்து மஹானை தனது தாய்மொழியான மலையாளத்தில் போற்றிப் புகழ்கிறார். இதனால் அவரது பேச்சுக்கு மஹான் ஒரு சிறு பிரசங்கமே செய்ய வேண்டியிருக்கிறது. அப்போது அவர் பேசிய மொழி மலையாளம்.

வருபவர்கள் எந்த மொழியில் பேசினாலும் அதே மொழியில் பதில் சொல்லும் மஹான் எந்தப் பள்ளியில் இந்த மொழிகளை படித்திருப்பார் என்று பத்திரிகை ஆசிரியர் வியந்து கொண்டிருக்கும்போதே, ஒரு பெரிய குழு அங்கே வருகிறது. அவர்கள் யாத்ரீகர்கள். அவர்களை அழைத்து வந்தவர் உள்ளூர் சம்ஸ்கிருத பண்டிதர். அவர் மஹானின் பேரில் சம்ஸ்கிருத பாஷையில் அழகான ஒரு கவிதையை வாசித்தார். மலையருவியின் நீர் வீழ்ச்சியைப் போன்ற சம்ஸ்கிருத பாஷையில் சொன்ன பாராட்டுரையைக் கேட்டு மகிழ்ந்த மஹானும், அவர்களுக்குப் பிடித்தமான சம்ஸ்கிருத பாஷையிலேயே பேசி அவர்களை ஆசீர்வதித்து பிரசாதம் கொடுத்து அனுப்பினார்.

அடுத்ததாக, அரசாங்கத்தின் கடிதங்களுக்கு ஆங்கிலத்திலேயே பதில் சொல்லி, எழுத வைத்து அதை சிப்பந்தியிடம் அப்போது அனுப்பி வைத்தார்.

ஆக, இந்தியாவின் புழக்கத்தில் உள்ள அவ்வளவு மொழிகளையும் மஹான் அறிந்து வைத்திருக்கிறார்.

ஆசிரியரும் இவரும் தொடர்ந்து பேச ஆரம்பிக்கும்போது இன்னொரு இடையூறு-வடநாட்டு யாத்ரீகர்கள் பலர், தங்களது உள்ளக்கிடக்கையை ஹிந்தியில் சொல்ல மஹான், அவர்களது சொந்த மொழியிலேயே ஹிந்தியிலேயே அவர்களுடன் பேசுகிறார். அவர்கள் போகும்போது அவர்கள் முகத்தில் காணப்பட்ட மகிழ்ச்சி ஆசிரியரைப் புல்லரிக்க வைக்கிறது.

அவர்கள் போனவுடன் மஹான் மெளனியாகிவிட்டார். பேச ஆரம்பிக்கலாம் என்று நினைத்த ஆசிரியருக்கோ இது அதிர்ச்சியைத் தந்தது. அப்போது திடீரென மஹான் சொல்கிறார்:

“இப்போது இந்துமத தர்மத்தில் பல குறைகள் இருக்கின்றன. அவைகளை அடுக்கிச் சொல்லிவிடலாம். ஆனால் அதன் நன்மைகளை ஆராய்ந்தால், வானத்து நட்சத்திரங்களைப் போல் அவை கணக்கிலடங்கா” என்றார்.

தொடர்ந்து மேலும் ஒரு இடையூறு –

ஆசிரியர் சொல்கிறார்:

“இன்று எனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று நினைக்கிறேன்”

மஹான் புன்னகை புரிந்தவாறு சொல்கிறார்:

“சந்தர்ப்பங்களை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். நாங்கள் நாளை மறுதினம் மதுரை செல்கிறோம். நீ அங்கே வரலாம். உனக்குத் தங்க வசதி செய்து கொடுக்கச் சொல்கிறேன்”.

“அவசியம் அங்கே வருகிறேன் ஸ்வாமிகளே” என்று ஆசிரியர் உத்தரவு பெற்றுக் கொள்கிறார். இந்த சம்பவத்தை சொல்வதற்குக் காரணம், ரட்சகரான மஹா பெரியவருக்கு எல்லா மொழிகளிலும் புலமையும் இருந்தது என்பதைச் சுட்டிக் காட்டத்தான். அந்த பத்திரிகை ஆசிரியரின் பெயர் ஏ.எஸ்.ராமன். அவர் அப்போது “இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆஃப் இண்டியா” என்னும் பிரபல ஆங்கில வார இதழின் ஆசிரியர்.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source::::www.periva.proboards.com
natarajan

Read more: http://www.periva.proboards.com/thread/6486/multilinguist-mahaperiyavaa-book-venkatasaam#ixzz2tAhXvmEu

Message For the Day…”Moderation is Very Essential For Happy Living …”

If the number of passengers in a bus is within the permissible limits, travel is safe. On the other hand if it is overloaded with people or luggage, its owner has to pay the fine imposed by the Road Transport Officer (RTO). Similarly, if you overload yourself with food or desires, the Officer of Virtues, will impose the fine of grief and ill-health on you; you might even be penalized by the Break Inspector, for lacking sense control and speeding up. Hence moderation is very essential for happy living – be it in food or desires. An overloaded truck driver will find it difficult to drive it up a steep-hill and at times, the consequences can be disastrous. If you want to progress and maintain good health consistently, it is imperative that you must not over indulge yourself. You will not be able to attain the elevated stage of bliss, if you eat more than what your body needs.

 

Sathya Sai Baba