கந்த சஷ்டி தோன்றிய கதை !!!

Temple images

படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தட்சன், சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று சிவபிரானுக்கே மாமனாராகியும் அகந்தை காரணமாக இறுதியில் சிவனால் உருவாக்கப்பட்ட வீரபத்திரரால் கொல்லப்பட்டான். (தட்சனே அடுத்த பிறவியில் சூரபத்மனாக பிறந்தான். தட்சனின் மகள் பார்வதி. பார்வதியின் மகன் முருகன். இதன் படி பார்த்தால் முருகனுக்கு சூரபத்மன் தாத்தா உறவு வருகிறது என்ற கருத்தும் உள்ளது.)

அடுத்து காசிபனும் கடும் தவம் புரிந்து சிவனிடம் பல வரங்களைப் பெற்றான். ஒரு நாள் அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை எனும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமையை இழந்தான். இதைத் தொடர்ந்து காசிபனும் மாயை எனும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனிதத் தலையுடைய சூரபத்மனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்கமுகமுடைய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகமுடைய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டுருவத்தில் இணைந்து ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் அசுரப் பெண்ணும் பிறந்தனர். மாயை காரணமாகத் தோன்றிய இந்த நான்கு பேரும் ஆணவ மிகுதியால் மிதந்தனர்.

காஷ்யபர் தன் பிள்ளைகளிடம், குழந்தைகளே! வடதிசைநோக்கிச் சென்று சிவபெருமானை நோக்கித் தவம் செய்யுங்கள். வேண்டிய வரங்களைப் பெற்று வாழுங்கள்! என்று உபதேசம் செய்தார். இவர்கள் கடும் தவமிருந்து சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்றனர்.
இவர்களுள் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான். மேலும் தனக்கு சாகாவரம் வேண்டும் என சூரபத்மன்  சிவனிடம் கேட்டான். பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்ற சிவன், எந்த வகையில் அவனுக்கு அழிவு வர வேண்டும் எனக் கேட்டார். சூரபத்மன் புத்திசாலித்தனமாக, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும், எனக் கேட்டான். பெண்ணையன்றி வேறு யாரால் ஜீவர்களை உற்பத்தி செய்ய முடியும் என்பது அவனது கணக்கு. இந்த வரத்தைப் பெற்ற சூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும் தன் குலகுருவான சுக்ராச்சாரியரிடம் ஆசி பெற்று தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்டசராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர். இந்திரன் சூரபத்மனுக்கு பயந்து பூலோகம் வந்து ஒளிந்து கொண்டான்.

அசுரர்களின் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவபெருமானிடம் சூரபத்மனிடம் இருந்து தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். சிவனும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் பார்வதியின் தொடர்பின்றி, தனது ஆறு நெற்றிக் கண்களைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஞானிகளுக்கு மட்டும் தெரியக்கூடிய அதோ முகம் (மனம்) என்று ஆறுமுகங்கள் உண்டு) அவற்றிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்த்தான். அந்த தீப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளாகத் தோன்றின! அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களைக் குறிக்கிறது. பிரணவ சொரூபியான முருகனிடம் காக்கும் கடவுள் முகுந்தன், அழிக்கும் கடவுள் ருத்ரன், படைக்கும் கடவுள் கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடங்குவர். மேலும் முருகப் பெருமான் சிவாக்னியில் தோன்றியவராதலால் ஆறுமுகமே சிவம்-சிவமே ஆறுமுகம் என்பதுண்டு. அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி கட்டி அணைக்க… அவர்கள் ஒரு மேனியாக வடிவம் கொண்டு ஆறு முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப் பெருமானாகத் தோன்றினர். இத் திருவுருவைப் பெற்றதால் ஆறுமுகசுவாமி என்ற பெயர் முருகப் பெருமானுக்கு ஏற்பட்டது. அத்துடன் இந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி ஒரே குழந்தையாக ஸ்கந்தம் (சேர்த்தல்) செய்ததால் முருகன் ஸ்கந்தப்பெருமான் ஆனார்.  முருகன் என்றால் அழகன். கோடி மன்மதர்களை விட அழகாக இருந்தான் அவன்.முருகப்பெருமான் தேவகுரு பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றினை அறிந்தார். திருக்கரத்தில் வேலேந்திக் கொண்டு முருகப்பெருமான், இந்திராதி தேவர்களே! நீங்கள் அசுரர்களுக்குச் சிறிதும் அஞ்சத்தேவையில்லை. அஞ்சும் முகம் தோன்றும் போது இந்த ஆறுமுகத்தை எண்ணுங்கள். உங்கள் குறைகளை சீக்கிரமே போக்கி அருள்செய்வது என் வேலை, என்றார். அசுரர்களை அழிக்க நினைத்த முருகன் முதலில்  சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவன் சூரபத்மன்தான்.

தனது சேனைத்தலைவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரித்தார். ஆனால், சூரபத்மன், பாலகன் முருகனா எனக்கு எதிரி! யார் வந்தாலும் இந்திராதி தேவர்களைக் காக்க யாராலும் முடியாது, என்று வீராவேசமாகக் கூறினான். உடனே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் முருகப் பெருமானை சூரனுடன் போர் புரிய அனுப்பினர். சூரனோ, கடலின் நடுவில் வீரமகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி அங்கே வசித்து வந்தான். அங்கே செல்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால், உலகாள வந்த முருகனுக்கு இது சாதாரண விஷயம். அவர் அந்த நகரை அடைந்தார். சூரன் அவரைப் பார்த்து ஏளனம் செய்தான். ஏ சிறுவனே! நீயா என்னைக் கொல்ல வந்தாய். பச்சை பிள்ளையப்பா நீ! உன்னைப் பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது. பாலகா! இங்கே நிற்காதே, ஓடி விடு, என்று பரிகாசம் செய்தான். முருகன் அசரவில்லை. தன் உருவத்தைப் பெரிதாக்கி அவரைப் பயமுறுத்தினான். அதன் மீது சக்தி வாய்ந்த ஏழு பாணங்களை எய்தார் முருகன். உடனே அவன் மகாசமுத்திரமாக உருமாறினான். மிகப்பெரிய அலைகளுடன் முருகனைப் பயமுறுத்திப் பார்த்தான். உடனே நூறு அக்னி அம்புகளை கடல் மீது ஏவினார் முருகன். கடல் பயந்து பின் வாங்கியது. இருப்பினும், முருகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் சூரனுக்கு வரவில்லை. காரணம், ஒரு சிறுவனைக் கொல்வது தன் வீரத்துக்கு இழுக்கு என்றும், அது பாவமென்றும் அவன் கருதினான். அந்தக் கல்லுக்குள்ளும் இருந்த ஈரத்தைக் கண்டு தான், கருணாமூர்த்தியான முருகனும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்தார். தன் விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டினார். அதைப் பார்த்தவுடனேயே சூரனின் ஆணவம் மறைந்து ஞானம் பிறந்தது. முருகா! என் ஆணவம் மறைந்தது. தெய்வமான உன் கையால் மடிவதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். உன்னை பயமுறுத்த கடலாய் மாறினேன். அந்தக் கடலின் வடிவாகவே நான் இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே, ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி என சரணமடையும் புத்தியைப் பெற வேண்டும், என்றான். முருகனும் அந்த வரத்தை அவனுக்கு அளித்தார். அதன் பிறகு, தன் ரூபத்தை சுருக்கி, சூரனுக்கு ஞாபகமறதியை உண்டாக்கினார். சூரனுக்கு ஆணவம் தலை தூக்கவே அவன் மாமரமாக மாறி அவரிடமிருந்து தப்ப முயன்றான்.

முருகப்பெருமான் தன் தாய் உமாதேவியிடம் ஆசிபெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார். (நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் தலத்தில்தான் முருகப் பெருமான் தன் தாயிடம் வேலைப் பெற்றார். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்பர்.  சஷ்டியின் ஐந்தாம் நாள் விழாவன்று, வேல் வாங்கும் உற்சவ முருகனுக்கு முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பும் அதிசயத்தை ஆண்டுதோறும் காணலாம்.)வேல் பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்தது. அதன் ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றிய முருகன் தனது வாகனமாகவும், கொடிச்சின்னமாகவும் ஆக்கினார். சூரன் மாமரமான இடம் மாம்பாடு எனப்படுகிறது. இன்றும் இங்கு மாமரம் தழைப்பதில்லை. பகைவனுக்கும் அருளும்பரமகாருண்ய மூர்த்தி யான அவர், சூரனை வதம் செய்யாமல் அவனை ஆட்கொண்டார். இச்செயலால்வைதாரையும் வாழவைப்பவன் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவபூஜை செய்ய விரும்பினான். அதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்ட கோவில்தான் திருச் செந்தூர் கோவில். இங்கு மூல ஸ்தானத்தின் பின்பகுதியில் முருகன் பூஜை செய்த சிவலிங்கத்தைக் காணலாம். சூரசம்ஹாரத்தோடு விழா முடிவதில்லை. தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு கைம் மாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தான். எனவே மறுநாள் முருகன்- தெய்வானை திருமண வைபவத்தோடுதான் விழா நிறைவு பெறுகிறது.

கிருத்திகை என்றால் திருத்தணி. (இங்கு மட்டும் சூரசம்ஹார விழா நடைபெறாது). தைப்பூசம் என்றால் பழனி. கந்தசஷ்டி என்றால் திருச்செந்தூர். வேல் என்றால் கொல்லும் ஆயுதமல்ல. அது ஆணவத்தை அழித்து நற்கதி தரும் பரமானந்தமான வழிபாட்டுப் பொருள். அதனால் தான், வேல் வேல் வெற்றி வேல் என்று முழங்குகிறார்கள் பக்தர்கள். அந்த வேல் பிறவித்துன்பத்தை அழித்து, முருகனின் திருவடியில் நிரந்தரமாக வசிக்கும் முக்தி இன்பத்தைத் தரக்கூடியது. சூரசம்ஹாரம் கந்தனால் ஐப்பசி சஷ்டி திதியில் நிகழ்த்தப்பட்டதால் இது கந்தசஷ்டி ஆயிற்று. முருகப் பெருமான் அசுரர்களான சூரபத்மன் மற்றும் அவனது தம்பியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடி மகிழ்கிறோம். கந்தசஷ்டி திருநாளில் சக்திவேலுடன் கூடிய முருகப்பெருமானை வணங்கி நற்கதி பெறுவோம்.

source:::::dinamalar..tamil daily

natarajan

Divine Images Of Shirdi Sai….with HIS Message ….

One day Gautam Buddha was walking through a village. A very angry and rude young man came up and began insulting him. “You have no right teaching others,”
he shouted. “You are as stupid as everyone else. You are nothing but a fake.” Buddha was not upset by these insults. Instead he asked the young man
“Tell me, if you buy a gift for someone, and that person does not take it, to whom
does the gift belong?”
The man was surprised to be asked such a strange question and answered,
“It would belong to me, because I bought the gift.”
The Buddha smiled and said, “That is correct. And it is exactly the same with your anger. If you become angry with me and I do not get insulted, then the anger
falls back on you. You are then the only one who becomes unhappy, not me. All you have done is hurt yourself.”
If you are right then there is no need to get angry
And if you are wrong then you don’t have any right to get angry.

Patience with family is love,
Patience with others is respect,
Patience with self is confidence, and Patience with GOD is faith.
Never Think Hard about PAST, It brings Tears…
Don’t Think more about FUTURE, It brings Fears…
Live this Moment with a Smile, It brings Cheers….(smile)

 

 

The body is the chariot and the Self is its Master, Intellect is the Charioteer and the mind is the reins, the sense are the horses and sense objects their paths. He who has no understanding and whose mind is unrestrained, his senses unmanageable like the vicious horse of the charioteer, does not reach his destination (get realisation) but goes through the round of births and deaths; but he who has understanding and whose mind is restrained, his senses being under control like the good horse of a charioteer reaches that place, (i.e.) the state of self-realization.

 

source:::::H.Deepa in http://debu7370.blogspot.com/

natarajan

படித்து ரசித்தது ….வாரியார் சுவாமிகளின் அருளுரைகள் !!!

திருமுருக கிருபானந்த வாரியாரின் “குமுதம் வினா விடை” தொகுப்பில் இருந்து ரசித்தவை)

தெய்வங்கள் மக்களை காப்பாற்றும் என்று கூறுகிறார்கள். ஆனால் தெய்வங்களின் சிலைகளைத் திருடிக் கொண்டு சென்று விடுகின்றனர். அவ்வாறு தங்களையே காத்துக் கொள்ள முடியாத தெய்வங்கள் மக்களை எப்படி காப்பாற்றும் ?

சிலைகளே கடவுள் அல்ல. மூர்த்தி வேறு. மூர்த்திமான் வேறு. மூர்த்தி என்பது சிலை. மூர்த்திமான் அந்தச் சிலையில் நாம் ஆவாகனம் செய்கின்ற தெய்வம்..மின்சாரம் வேறு. மின்சார பல்புகள் வேறு. பல்பில் ஷாக் அடிப்பதில்லை. ஆகவே பல்புகளை திருடும் போது ஏன் ஷாக் அடிப்பதில்லை என்று கேட்பதை போலிருக்கிறது இந்த வினா. சிலைகளைத் திருடுகின்றபோது, ஆண்டவன் ஏன் அவனுக்கு தண்டனை கொடுக்கவில்லை என்ற வினா எழக்கூடும்.

கடவுள் கருணைக்கடல். தாய், திருடுகின்ற மகனிடத்தும் அன்பு பாராட்டுவது போல், கடவுள் கள்ளனுக்கும் கருணை காட்டுவார். “நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நின்ற நடு” என்கின்றார் இராமலிங்க வள்ளலார்.

Photo: (திருமுருக கிருபானந்த வாரியாரின் "குமுதம் வினா விடை" தொகுப்பில் இருந்து ரசித்தவை)தெய்வங்கள் மக்களை காப்பாற்றும் என்று கூறுகிறார்கள். ஆனால் தெய்வங்களின் சிலைகளைத் திருடிக் கொண்டு சென்று விடுகின்றனர். அவ்வாறு தங்களையே காத்துக் கொள்ள முடியாத தெய்வங்கள் மக்களை எப்படி காப்பாற்றும் ?சிலைகளே கடவுள் அல்ல. மூர்த்தி வேறு. மூர்த்திமான் வேறு. மூர்த்தி என்பது சிலை. மூர்த்திமான் அந்தச் சிலையில் நாம் ஆவாகனம் செய்கின்ற தெய்வம்..மின்சாரம் வேறு. மின்சார பல்புகள் வேறு. பல்பில் ஷாக் அடிப்பதில்லை. ஆகவே பல்புகளை திருடும் போது ஏன் ஷாக் அடிப்பதில்லை என்று கேட்பதை போலிருக்கிறது இந்த வினா. சிலைகளைத் திருடுகின்றபோது, ஆண்டவன் ஏன் அவனுக்கு தண்டனை கொடுக்கவில்லை என்ற வினா எழக்கூடும். கடவுள் கருணைக்கடல். தாய், திருடுகின்ற மகனிடத்தும் அன்பு பாராட்டுவது போல், கடவுள் கள்ளனுக்கும் கருணை காட்டுவார். "நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நின்ற நடு" என்கின்றார் இராமலிங்க வள்ளலார்.
‘கொன்றார் பாவம் தின்றாரோடு’ என்று கசாப்பு கடைக்காரர் சொல்லுகின்றார். ‘தின்றார் பாவம் கொன்றாரோடு’ என்று புலால் உண்பவர் கூறுகின்றார். இதில் எது சரி? இதன் மூலம் இரு சாரார்களுமே பாவத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்களா?

‘கொன்றால் பாவம் தின்றால் தீரும்’ என்ற பழமொழிக்கு மற்றவர்கள் சொல்கின்ற பொருள் பிழையானது. கொல்லுகின்றவன், விலை கொடுத்து வாங்கித் தின்பவனுக்காகவே செய்கின்றான். ஆகவே அப்பாவம் முழுதும் அவனையே சேராது.

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன் தருவார் இல்
– திருவள்ளுவர் (அதிகாரம்: புலால் மறுத்தல்).

ஆகவே, உயிர்களைக் கொன்ற பாவம், தின்பதனால் போகும் என்பது ஒரு சிறிதும் பொருந்தாது. ஒரு சிலர், ‘நான் கொல்வதில்லை, கடையில் இருந்து வாங்கித் தின்கின்றேன்” என்பார்கள்’ இதுவும் பிழையான கருத்தாகும். வாங்குவார் பொருட்டே விற்பவன் கொல்கின்றான். திருவள்ளுவர் ‘கொல்லாமை’ என்று ஒரு அதிகாரமும் ‘புலால் மறுத்தல்’ என்று ஒரு அதிகாரமும் தனித்தனியே கூறியிருக்கின்றார்.

கொல்லாமல் கொன்றதை தின்னாமல் சூத்திரம் கோள்களவு
கல்லாமல் கைதவரோடு இனங்காமல் கனவிலும் பொய்
சொல்லாமல் …………………தோகையர் மாயையிலே
செல்லாமல் செல்வம் தருவாய் சிதம்பர தேசிகனே
— பட்டினத்தார்.

இவ்வாறு எத்தனை பிரகாரங்களாகப் பார்த்தாலும் ஊன் உண்பது பெரிய பாவமாகும்.

கங்கையில் படிந்திட்டாலும் கடவுளைப் பூசித்தாலும்
சங்கையில்லாத ஞான சாத்திரம் உணர்ந்திட்டாலும்
மங்கு போல் கோடி தானம் வள்ளலாய் வழங்கிட்டாலும்
பொங்குறு புலால் புசிப்போன் போய் நரகு அடைவன் அன்றே!!!
–இராமலிங்க வள்ளலாளர்

இனி, கொன்றால் பாவம் தின்றால் போகும் என்பதற்கு சரியான உரை கீழ்வருமாறு.

புலால் உண்டவர்களை இறந்த பின் இருள் உலகத்தில் (நரகத்தில்) நிறுத்தி அவர்கள் உடல் தசையை அறுத்து அறுத்து அவர்கள் வாயில் வைத்து ஊட்டுவார்கள். அதை உண்டால் தான் அவர்கள் கொன்ற பாவம் போகும். இந்தக் கருத்தை அருணகிரிநாதர், ‘புவனத்தொரு’ என்று தொடங்குகின்ற திருசிராப்பள்ளி திருப்புகழில், ‘இறைச்சி அறுத்து அயில்வித்து’ என்று குறிப்பிட்டு இருக்கின்றார். எனவே, கொன்ற பாவமும் தின்ற பாவமும் தன் உடம்பைத் தானே தின்றால் தான் போகும்.

(திருமுருக கிருபானந்த வாரியாரின் “அது போல” தொகுப்பில் இருந்து)
மாடி மேல் ஏறுவதற்கு ஒரு கருவி ஏணி. மாடி மீது ஏறுவதற்கு என அமைந்த ஏணி மீதே பல மணி நேரம் நின்று கொண்டு இருக்க ஒருவன் விரும்புவானா ?. விரும்ப மாட்டான்.

—அது போல—

பிறவாமயைப் பெற நமக்கு அளிக்கப்பட்ட ஏணி போன்ற இவ்வுடம்பிலேயே (பிறந்தும் இறந்தும்) நின்று கொண்டிருப்பது அறிவுடமை ஆகாது. மதி நலமுடையோர் விரைவாக ஏணி மீது ஏறி மாடிக்கு செல்வது போல், இந்த உடம்பைக் கொண்டு பிறவாமயைப் பெற முயல்வார்கள்

இது கதையல்ல நிஜம்.கிருபானந்த வாரியார் திருமணம் ஒன்றிற்குத் தலைமை தாங்கச் சென்றிருந்தார். அங்கே நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் வந்திருந்தார்.இருவரும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்க திருமண பேச்சுக்கு இடையே நடிகவேள் தனது வழக்கமான கிண்டலுடன், “சாமி. முருகனுக்கு ஆறு தலைன்றானுங்கோ, ராத்திரி தூங்கும் போது எப்படி ஒரு பக்கமா படுப்பாரு.?

கூடி இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க.. வாரியாருடன் வந்தவர்கள் தர்மசங்கடத்துடன் நெளிந்தார்கள்.

வாரியார் புன்சிரிப்புடன், திருமண ஏற்பாடுகளை பார்த்துக் கொண்டு இருந்த மணமக்களின் தந்தையரை அழைத்து அவர்களிடம் கேட்டார், “நேத்து தூங்கினீங்களா?”

அவர்கள் இருவரும் “இன்னைக்குக் கல்யாணத்தை வச்சுக்கிட்டு எங்க சாமி தூங்கறது” என்றார்கள்.

வாரியார், நடிகவேளைப் பார்த்துச் சொன்னார்.

ஒரு குழந்தையின் வாழ்க்கையை நடத்தி வைக்க நினைச்ச இவங்களுக்கேத் தூக்கம் வரவில்லை… உலக மக்கள் அனைவரும் எம்பெருமானோட குழந்தைகள். அவருக்கு எப்படி தூக்கம் வரும்? அவருக்குத் தூங்கறதுக்கு நேரம் ஏது?” என்றார்.

source:::: Thirumuruga Kripanandavariar  Swamigal page in facebook
NATARAJAN
Today 7 th Nov.. is His 20th ARADHANA DAY…

Laughter The Best Medicine ….” Double-up Your Cashew Intake ” !!!

Good folks Mike and Yvonne were 85 years old and had been married for sixty years. Though they were far from rich, they managed to get by because they carefully watched their pennies.
Though not young, they were both in very good health, largely due to Yvonne’s insistence on healthy foods and exercise for the last decade.
One day they went on a vacation and their plane crashed, sending them off to Heaven.

They reached the pearly gates, and St. Peter escorted them inside. He took them to a beautiful mansion, furnished in gold and fine silks, with a fully stocked kitchen and a waterfall in the master bath. A maid could be seen hanging their favorite clothes in the closet. They gasped in astonishment when he said, ‘Welcome to Heaven. This will be your home now.’ Mike asked Peter how much all this was going to cost. ‘Why, nothing,’ Peter replied, ‘remember, this is your reward in Heaven.’
Mike looked out the window and right there he saw a championship golf course, finer and more beautiful than any ever built on Earth..
‘What are the greens fees?,’ grumbled Mike..
‘This is heaven,’ St. Peter replied. ‘You can play for free, every day.’

Next they went to the clubhouse and saw the lavish buffet lunch.
‘Don’t even ask,’ said St. Peter to Mike. This is Heaven, it is all free for you to enjoy.’
Mike looked around and nervously asked Yvonne ‘Well, where are the low fat and low cholesterol foods and the decaffeinated tea?’
‘That’s the best part,’ St. Peter replied. ‘You can eat and drink as much as you like and you will never get fat or sick. This is Heaven!’
‘No gym to work out at?’ said Mike
‘Not unless you want to,’ was the answer.
‘No testing my sugar or blood pressure or…’
‘Never again’

Mike glared at Yvonne and said, ‘You and your  Bran Flakes. We could have been here ten years ago!’

Moral: Folks destined for Heaven should double-up their cashew intake!    

source:::: input from a friend of mine
 natarajan

“ஒரு வரட்டி ஒரு கோடி பெறுமோ ” !!!

ஏழையான கிழவி. அவளுக்கு மகேஸ்வரனைத் தெரியாது. மஹாபெரியவாளைத் தான் தெரியும்.
தினமும் வந்து வந்தனம் செய்வாள்.

பல செல்வந்தர்கள், பெரியவாளுக்குக் காணிக்கையாக, விலையுயர்ந்த பொருட்களைக் கொண்டுவந்து சமர்ப்பணம் செய்வதைப் பார்த்து, ‘தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே’ என்று ஏங்கினாள். ஒருநாள் மனமுருகி பெரிய்வாளிடம் சொல்லி விட்டாள்.

பெரியவாள் சொன்னார்கள் :
“அவர்கள் கொண்டுவந்து கொடுக்கிற எந்தப் பொருளையும் நான் தொடுவதுகூட இல்லை; நான் ஆசைப்பட்டுக் கேட்டதும் இல்லை; என் மனசுக்குப் பிடிக்குமான்னும் அவா நினைச்சுப் பார்த்ததில்லே! எனக்குப் பிடிச்ச ஒரு வேலை சொல்றேன், செய்கிறாயா?”

பாட்டி தவிப்போடு காத்து நின்றாள்.

“மாட்டுக் கொட்டிலில் இருந்து பசுஞ்சாணி எடுத்து, வரட்டி தட்டு. காய வைத்துக் கொண்டுவந்து கொடு. மடத்திலே தினமும் ஹோமம் நடக்கிறது. சுத்தமான பசுஞ்சாணி வரட்டி உபயோகப்படுத்தணும். அந்த நல்ல கார்யத்தை நீ செய்யேன்…”

பாட்டியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்!

கோடிகளைப் புறக்கணிக்கும் பெரியவாள், வரட்டிகளைக் கேட்டு வாங்கிக் கொள்கிறார் – ஒரு பாட்டியிடமிருந்து.

ஒரு வரட்டி ஒரு கோடி பெறுமோ?

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source::::periva.proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/5555/experience-mahaperiyavaa#ixzz2jBptfOCt

Message For The Day…Why We Honour and Worship Rama and avoid Reference Of Ravana?

Always remember that only those with ideals are respected and remembered with gratitude for posterity. We honour Rama and worship him, while avoiding the reference of Ravana on auspicious occasions. Why? Because of the character they displayed. So you must be determined and advance step by step in building a strong character. Be aware of the danger of slipping down two steps while ascending one – you can resist the slide downwards! If you have the determination to climb and the yearning to rise, progress and conquer your lower impulses and instincts, then the hidden spring of power will surge up within you. The Grace of the Lord will smoothen your path. Keep the ideal before you and march onward!

 Sathya Sai Baba

” Let us all Masters of Our Words “….

 

Short Stories with Great Morals
Once an old man spread rumors that his neighbor was a thief. As a result, the young man was arrested. Days later the young man was proven innocent. After being released he sued the old man for wrongly accusing him.
In the court the old man told the Judge: “They were just comments, didn’t harm anyone.” The judge told the old man: “Write all the things you said about him on a piece of paper. Cut them up and on the way home, throw the pieces of paper out. Tomorrow, come back to hear the sentence.”
Next day, the judge told the old man: “Before receiving the sentence, you will have to go out and gather all the pieces of paper that you threw out yesterday.”
The old man said: “I can’t do that! The wind spread them and I won’t know where to find them.”
The judge then replied: “The same way, simple comments may destroy the honor of a man to such an extent that one is not able to fix it. If you can’t speak well of someone, rather don’t say anything.”
Moral: Let’s all be masters of our mouths, so that we won’t be slaves of our words..   
Today is 15th october Baba’s Mahasamadhi day and incidentally happens to be a Tuesday like it was in the year 1918. Lets all meditate between 2.30 -2.45 pm on the Divine form of Shri Sai and seek His Blessings..
May Shri Shirdi Sai baba’s blessings and grace be with all of us and our loved ones..
Sai Bhakt, 
source::::: H.Deepa  in sri shirdi sai speaks site
natarajan

Devimahatmya Recitation During Navrathri and Durgapooja ….

The story associated with Goddess Durga and Mahishasura
The story associated with Navratri and Durga Puja is found in the Markandeya Purana. The chapters 81 to 93 in the Markandeya Purana talks about the slaying of demon Mahishasura or Mahisha by Durga and it is referred as Devimahatmya and is recited during the Navaratri and Durga Puja. It symbolized the victory of good over evil. The most famous episode is of Durga killing Mahishasura
Birth of Mahishasura
Legend has it that two sons of Danu called Rambha and Karambha performed penances to gain more powers. Rambha performed the austerities by standing amidst five ritual fires called Panchagni and Karambha by standing in neck-deep in water.
 Indra, the lord of the gods, felt threatened by such intense austerities and took the form of a crocodile and killed Karambha. Rambha, who came to know about his brother’s death, increased the intensity of his austerities and won several boons from gods like great brilliance, beauty, invincibility in war. Most importantly, the boon that he will not be killed by humans or Gods or Asuras (demons).
 After receiving the boon, he was roaming in the garden of Yaksha and there he fell in love with a female-buffalo. To express his love Rambha took the form of a male-buffalo and copulated with the she-buffalo. But soon a real male buffalo discovered Rambha in the garden and killed him.
Rambha’s inflated ego made him not to ask the boon of invincibility from animals. And an animal happened to be the reason for his death.
The female-buffalo, who was pregnant, decided to kill herself in the funeral pyre of Rambha. She jumped into the pyre and from the pyre sprang up a mighty asura (demon) with the head of a buffalo and human body. This was Mahishasura.
Mahishasura Defeats Gods
Mahishasura defeated the gods and the demons. He attacked the heaven and captured it and made ‘devas’ his slaves. He proclaimed that he is now Indra – the lord of the gods. The gods led by Brahma approached Vishnu and Shiva and appraised them of the situation.
Birth of Goddess Durga
The actions of Mahishasura caused intense anger in the Trimurtis. The anger emerging out of Brahma, Vishnu and Shiva combined to the take the shape of a terrible form and this was Durga.
It is said that the flames of fire that gushed out of the eyes of the Trimurtis – Brahma, Vishnu and Shiva – formed a mountain, brilliant like a million suns. Out of this mountain, Durga took shape as the goddess more powerful than all the gods. Samasta devanam tejo rasi samudbhavam’ Durga is the brilliance of all the gods.

Captivated by the awe-inspiring Durga, the gods bestowed on her their own characteristic weapons. Shiva – the trident, Vishnu – the discus, Varuna – the conch, Agni – the spear, Yama – the cudgel, Vayu – the bow, Surya – the arrows, Indra – the vajra, Kubera – the mace, Brahma – the water pot, Kala – the sword and Vishwakarma – the axe. Himavan gifted a mountain lion as her vehicle.

Goddess Durga kills Mahishasura
When the goddess was seen by Mahishasura, he fell in love with her and sought to marry her. The goddess promised to marry him, if he defeated her in the battle. A terrible combat ensued and continued for nine days. Finally, Durga assumed the terrifying form of Chandika and pinned Mahishasura down with her foot and pierced his neck with her spear and she cut his head off with her sword.
The legend about the killing of Mahisha is found in many Puranas and therefore there are slight variations in the story. The story is also found in Vamana Purana, Varaha Purana, Shiva Purana, Skanda Purana, Devi Bhagavatam and Kalika Purana.
 
Quote of BABA:

 Do not borrow money for celebrating a feast or festival, for a pilgrimage or other journey.

October 13 – Vijayadasami, Dasara
October 13 – Shirdi Saibaba Punyatithi
Wishing you and your loved ones a very Blessed Navratri !!   
source::::: H.Deepa in Srishirdi sai speaks
natarajan

படிக்க ….சிந்திக்க ……”நான் விற்பனைக்கு இல்லை ” !!!

 

தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி நடத்திய சிறுகதைப் போட்டிக்கு வந்த கதைகளில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை

டிராக்டரின் இரும்புக் கலப்பைகள் என் நிலத்தாயை ஆழ உழுதபோது எனக்கு ஏற்பட்ட வலி, இதுவரை நான் உணராத வலி.  அப்படி வலித்தது.  இரும்புக் கலப்பைகளுக்குள் தக்காளிப் பழங்களோடு தக்காளிச் செடிகளும் குற்றுயிரும் குலை உயிருமாக மண்ணுக்குள் புதைகின்றபோதே மனசும் புதைந்து கொண்டிருந்தது.

மண்டையைப் பிளக்கும் வெயில் உடம்பைப் பிழிந்து வியர்வையை அருவியாக்கிக் கொட்டிக் கொண்டிருந்தது.  அந்தப் புழுக்கம் என் உடம்புக்கு பழகிப் போன ஒன்றாக இருந்தது.  ஆனால் திரண்டு நிற்கும் கண்ணீருக்குள் கண்கள் மூழ்கி அந்தக் காட்சியை என்னைக் காணவிடாமல் கலங்கடித்துக் கொண்டிருந்தன.

என்ன செய்ய…. உழுதவன் பார்த்த கணக்கு உருப்படியாகவில்லை.  மூன்று மாதங்கள் உழைப்பு கருகி விட்டது. ஆயிரம் அடிக்கு கீழே உள்ள நிலத்தடி நீரை இரண்டு நீர் மூழ்கி மோட்டார் வைத்து நிலத்திற்கு மேலே ஒரு மோட்டார் வைத்து எடுத்து செய்கிற விவசாயம் என்னுடையது.  கடவுள் புண்ணியத்தில் கரண்ட் மட்டும் அரசின் தயவால் இலவசம்.  அதற்கும் பணம் கொடுக்க வேணடிய நிலை இருந்தால், அய்யோ… என்று தலையில் கையை வைத்துக் கொண்டு போய் விடலாம்.

இரண்டு ஏக்கர் நிலம். இரண்டு தடவை உழவேண்டும்.  அதற்கு டிராக்டர் கூலி நான்கு மணி நேரத்திற்கு மூவாயிரம்… தொழு உரம் எட்டு டன்.  அதற்கு பத்தாயிரம்… அப்புறம் பாத்தி பிடிக்க இரண்டாயிரம்…. விதை இருநூறு கிராம்.  வீரிய ஒட்டு ரகம் ஐயாயிரம்… அந்த விதையை பாவி நாற்றங்காலாக உருவெடுக்க இருபத்தைந்து நாள்… அப்புறம், அதை நடவு செய்ய கூலி இரண்டாயிரம்… களை எடுக்க, மருந்தடிக்க, இப்படி தொட்டதுக்கெல்லாம் செலவு செஞ்சாத்தான் இரண்டு மாதம் கழித்து தக்காளி விளைச்சல் பார்க்க முடியும்… விதை பாவியதிலிருந்து விளைச்சல் பார்க்கிற வரைக்கும் ஒவ்வொன்றும் விவசாயிக்கு, பிரசவம் தான்.

இரண்டு மாதங்கள் பதினைந்து நாளைக்கு ஒருநாள் விட்டு ஒரு நாள் தக்காளி பறிக்கலாம்.  அதற்கும் கூலி ஆள் விட வேண்டும்.  ஏக்கருக்கு மூன்று பேர் வேண்டும்.  எல்லாம் முடிஞ்சு இரண்டாயிரம் கிலோ முதல் விளைச்சலாக வந்து காரைக்குடி சந்தைக்குக் கொண்டு போனேன். கிலோ அஞ்சு ரூபாய்க்கு மேலே போகலை…. முதல் வருமானம் பத்தாயிரம் ரூபாயோடு வந்தேன்.  அப்புறம் நூறு கிலோ, இருநூறு கிலோன்னு பறிக்க முடிஞ்சது…. நேற்று வரைக்கும் அஞ்சு ரூபாய்க்கு போன தக்காளி இன்று கிலோ இரண்டு ரூபாய்க்கு எடுக்கிறேன்னு சொன்னான்.  பறிக்கிற ஆள் கூலிக்குக் கூட தக்காளி விலை போகலை… அதனால் தான் அப்படியே டிராக்டரை விட்டு உழுது போடுவோம்… கோடை மழை பெய்தால் அடுத்த உழவுக்கு சரியாக இருக்குமேன்னு நினைத்து உழச் சொன்னேன்.

நூறுநாள் வேலைத் திட்டம் வந்தாலும் வந்துச்சு…. ஆரம்பத்தில் இருநூறு ரூபாய் வாங்கினவங்க இப்போது இருநூற்று ஐம்பது ரூபாய் கொடுத்தாத்தான் தக்காளி பறிக்க வர்றேன்னு சொல்றாங்க… இருநூறு கிலோ தக்காளி பறிக்க கூலி எழுநூற்று ஐம்பது ரூபாய்….  அந்த தக்காளிக்கு மார்க்கெட்டுல விலை நானூறு ரூபாய்தான். கமிஷன் ஏஜெண்ட் கிட்டக் கேட்டால்….. “”தக்காளி விளைச்சல் அதிகம்…. மார்க்கெட்டுக்கு அதிகமாக வர்றதாலே விலை போகலை”ன்னு சொல்றான்….

எப்படியிருக்கு… நினைச்சுப் பாருங்க… இப்படி விவசாயம் பண்ற நான் கேனப்பயலாத் தானே உங்க பார்வைக்குத் தெரிவேன்… உங்களுக்கு மட்டுமா… என் மகனுக்கும்தான்….

“”நிலப் பத்திரத்தையும், வீட்டுப் பத்திரத்தையும் எடுத்து வையுங்க… சனி, ஞாயிறு நான் மட்டும் ஊருக்கு வர்றேன்… நான் திரும்பும் போது என்னோடு நீங்களும், அம்மாவும் வீட்டைப் பூட்டிட்டு சென்னைக்கு வர்றீங்க… அவ்வளவுதான்…” போனை பேசிவிட்டு வைத்து விட்டான்..  “நான் என்ன நினைக்கிறேன்… என்ன விரும்புறேன்…’ என்று பதில் தெரிந்து கொள்ளும் நிலையில் அவன் இல்லை.

விவசாயத்திற்கு இயந்திரங்கள் வந்தவுடன் மனிதர்கள் இயந்திரங்களாக மாறிப் போனார்கள்.  அறுபது வருடங்களுக்கு முன்னால் திரும்பிப் பார்க்கிறேன்.  அப்போது எனக்கு பத்து, பன்னிரெண்டு வயது இருக்கும்.  அப்பவே காலை ஆறு மணிக்கே தோட்ட வேலைக்கு அப்பா என்னைக் கூட்டிக் கொண்டு போய் விடுவார்.  இரண்டு ஏக்கர் நிலத்தை உழவு செய்ய மூணு ஏர்கள் விடுவார்கள்.  எப்போதும் அப்பாதான் முதல் ஏராக உழுவார்.  அதற்குப் பின்னால்தான் கூலிக்காக வெளியிலிருந்து வந்த இரண்டு ஏர்களும் செல்வார்கள்.  நான் போகும் அன்று அப்பா கடைசி ஏராகவும், கூலி ஆட்கள் அடுத்து நானும், எனக்குப் பின்னால் அப்பாவுமாக நான்கு ஏர்கள் உழுவோம். எனக்கு கற்றுக் கொடுக்கத்தான் இந்த ஏற்பாடு.

விதை பாவுவது, பாத்தி கட்டுவது, நாற்று நடுவது, களை எடுப்பது எல்லா வேலையும் எனக்குத் தெரியும்.  இருபத்தைந்து வயதில் நான் முழு விவசாயி ஆகிப் போனேனே தவிர, நான் படித்தது அந்தக் காலத்து பத்தாம் கிளாஸ் அவ்வளவுதான்.  அதனால் தான் என் மகனை விவசாயத்தின் பக்கமே தலைவைத்துப் படுக்க விடாமல் பட்டணத்திலேயே பணம் கட்டி படிக்க வைத்து முன்னேற்றி விட்டேன்.  நான் எந்தப் பட்டணத்தைப் பார்த்திருக்கிறேன்?  எல்லாமே அவனுடைய தன் முயற்சி.  செலவுக்குப் பணம் கேட்டு வருவான்.  கொடுப்பதோடு சரி.  புத்தியுள்ள பிள்ளை.  நல்லா வந்துட்டான்.  இப்போது அவன் கம்ப்யூட்டர் இன்ஜினியராக இருக்கிறான்.  அவன் மனைவியும் அதே வேலைதான்.

அவனாக லீவு நேரத்தில் குடும்பத்தோடு வந்து நான்கைந்து நாட்கள் இந்த கிராமத்தில் தங்கி விட்டுப் போவான்.  அதற்கே என்னுடைய பேரப் பிள்ளைகள் இரண்டும் வசதியில்லாத கிராமத்தைக் கண்டு நெளிவாங்க…

“”அப்பா… எப்பப்பா ஊருக்கு…?” என்று நச்சரித்து விடுவார்கள்.  ஆனால் அந்தப் பிள்ளைகளுக்கு ஒரே மகிழ்ச்சி…. தக்காளி எப்படி செடியில் விளையுது… கரும்புத் தோட்டம்…. புடலை பந்தல்… இப்படி பார்க்கும் போது, “”ஐ…” என்ற சத்தத்தோடு தொட்டு மகிழ்வார்கள்.  எனக்கு அது மகிழ்ச்சியாகத் தெரியும்.  பேரப் பிள்ளைகள் வந்தால் வீட்டில் தங்க மாட்டார்கள்… தோட்டத்தில்தான் பொழுதைக் கழிக்க நினைப்பார்கள்.

வயலில் நடுகிற நாற்றுக்கு காட்டுகிற அக்கறையை எந்த விவசாயியும் தான் பெற்ற பிள்ளைகளுக்கு காட்டமாட்டான்.  ஆனால் நான் அக்கறை காட்டினேன்.  அதுதான் இந்த வயசான காலத்திலே விழுதுகள் வேரைத் தாங்க நினைக்குது…

சரி… இந்த ஞாயிற்றுக் கிழமை சென்னை பட்டணம்… அதுவும் எப்படி இருக்குதுன்னுதான் பார்ப்போமோ….

கோடை காலமாக வேற இருக்கு…. இந்த வருஷம் மழை வேற பெய்யலை… நிலத்தடி நீர் மட்டம் குறைஞ்சு மோட்டார் இழுவை பத்தலை… ஒரு மாதம் கழிச்சு விவசாயத்தை ஆரம்பிக்கலாம்னு அதுவரை போறேன்…

“நிலமழகிய மங்கலம்’ – பெயருக்கு ஏற்றாற்போல் அழகான சோலையுள்ள இந்தக் கிராமத்தை விட்டு முதன் முறையாக வெளியேறப் போகிறேன்.  இன்று வெள்ளிக் கிழமை.  நாளை காலை வெங்கடேசன்  வந்து விடுவான்.  சென்னை சென்று விட்டு வரும் போது இந்த நிலம், இந்த வீடு எனக்குச் சொந்தமாக இருக்குமா? என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.  அழுகை எனக்கு முட்டிக் கொண்டு நின்றது.

பச்சை பசேலென இருந்த தோட்டத்தை சமப்படுத்தி கட்டாந்தரையாக்கி விட்டு பணம் கேட்டு என் எதிரே வந்து நின்றான் டிராக்டர் டிரைவர்.  பதினைந்து நூறு ரூபாய் தாள்களை எண்ணிக் கொடுத்தேன்.  தோளில் கிடந்த துண்டை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு அப்படியே நிலத்தில் குத்துக் காலிட்டு உட்கார்ந்தேன்.  உலர்ந்து கிடந்த செம்மண்ணை இரண்டு கைகளாலும் அள்ளினேன்.  கைவிரல்களின் இடுக்குகள் வழியே மெதுவாகச் சிதற விட்டேன்.

“உனக்கும் எனக்குமான சொந்தம் இன்னும் எத்தனை நாளைக்கு… ஒரு மாசமோ… இரண்டு மாதமோ தான்… உன்னை இழந்து விலகப் போகிறேன்… எனக்குப் பின்னால் நீ நித்தம் நித்தம் செத்து பிழைக்கும் விவசாயமா… இல்லை நிரந்தரமாக செத்துப் போகும் பிளாட்டாகவா…  கட்டிடமாகவா.. எனக்குத் தெரியாது… உனக்குச் சொந்தமில்லாத வியர்வையை உன்மீது தெளித்து வாழ்ந்திருக்கிறேன்… இப்போதும் உனக்குச் சொந்தமில்லாத உன்மீது ஒருமுறை கூட தெரித்து விழாத என் கண்ணீரை தெளித்து விடை பெறப் போகிறேன்… மன்னித்து விடு…’ விம்மிக் கொண்டு வந்த அழுகையை அடக்கிக் கொண்ட போது வாய் மட்டும் விரிந்து எச்சிலை வெளிக்காட்டியது…  கண்ணீர் நிலத்தில் விழுந்து காய்ந்தது.

மடியிலிருந்த துண்டை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தேன்..  மதியம் சாப்பிட முடியவில்லை… வீட்டுத் திண்ணையில் படுத்த போது உறக்கம் வராத தவிப்பு..  பீரோவில் எப்போதோ வைத்த பத்திரங்களை சாயங்காலம் தேடி எடுத்து அரை மனதோடு பத்திரப்படுத்தி வைத்தேன்.  விடியும் பொழுது நல்ல பொழுதாக வெங்கடேசனின் மனமாற்றச் செய்தியோடு விடிய வேண்டும் என்ற நம்பிக்கையோடு அன்று இரவு படுக்கைக்குப் போனேன்.

வயல்காட்டிற்கு போய் விட்டு வந்து படுக்கும் ஒவ்வொரு நாளும் அடித்துப் போட்டதைப் போல் அசத்தும் உறக்கம் அன்று புரண்டு புரண்டு படுத்தாலும் வரவில்லை.

விடியற்காலையில் வீடு வந்து சேர்ந்த வெங்கடேசனின் பிடிவாதம் நிலப் பத்திரப் பையோடு என்னைச் சென்னைக்கு கொண்டு வந்து சேர்த்து, இரண்டு நாட்களை வழியனுப்பி வைத்திருந்தது.

அடுக்குமாடி வீடு… குளு குளு அறை, எதற்கும் வீட்டை விட்டு வெளியே வராத அளவிற்கு வசதிகளோடு உள்பக்கமாக வீட்டை பூட்டிக் கொண்ட வாழ்க்கை… மகனும் மருமகளும் வேலைக்குப் போன பின்பு பேரப்பிள்ளைகளும், டி.வி.யும்தான் உலகமாக இருந்தது. இரண்டு நாட்கள் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.  மூன்றாவது நாள் என்னால் இருக்க முடியவில்லை.

“”வெங்கி…”

“”என்னப்பா…?”

“”வய வரப்புன்னு சுத்திகிட்டே இருந்த உடம்பு… வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்க முடியலை… அது என்னப்பா… வெளிக்காற்றே வராமல் குளுகுளுன்னு அது நமக்கு சரியா வரலை… எங்கேயாவது காலாற நடந்துட்டு வர்றேன்”

நான் புறப்படத் தயாரானேன்.

“”அப்ப ஒண்ணு செய்யுங்க அப்பா…”

“”நீங்க…. தனியா போக வேண்டாம்… உங்க பேரன் முகிலனை கூட்டிட்டு போங்க..

கடைக்கு சாமான்கள் வாங்க போறான்.  அவனோட நீங்களும் போயிட்டு வாங்க.. அதற்குள் நிலம் சம்பந்தமாக ஆள் வந்திருவாங்க.. நம்ம ஊருக்கு பக்கத்து ஊர்காரங்கதான்… வெள்ளையபுரம்… சீக்கிரம் வந்து விடுங்க…”

பெரிய கடை வீதி… நடந்து போகும் போதே ஒவ்வொன்றாக காட்டிக் கொண்டு போனான் பத்தாம் வகுப்பு படிக்கும் பேரன் முகிலன்.

தெருவோரத்தில் சோபாக்களும், சேர்களும், அலங்கார பொம்மைகளுமாக இருந்தன.

நான்கைந்து நைந்து போன வடமாநில மனிதர்கள் அதை விற்கும் வியாபாரிகளாகத் தெரிந்தனர்.

“”முகிலா….” என்று தான் சொன்னேன்.

“”இதெல்லாம் பணக்கார வீடுகளில் வைக்கிற அலங்கார பொருட்கள் தாத்தா…”

அதை சிறிது நேரம் நின்று பார்த்தேன்.  அழகழகாக இருந்தன.

ஒரு இடத்தில் சாலையின் இரண்டு புறங்களிலும் தள்ளுவண்டிகளில் காய்கறி கடைகள், அடர்த்தியான மரங்களோ, விவசாய நிலங்களோ இல்லாத அந்த நகரத்தில் பச்சை பசேலென காய்கறிகள் அடுக்கி வைத்திருந்தார்கள் வியாபாரிகள்.

முகிலன் ஒரு தள்ளுவண்டி அருகில் போனான்.

தக்காளிகளைப் பொறுக்கி எடுத்து இரண்டு கிலோ போடச் சொன்னான்.  அந்தக் கடைக்காரன் என் மகன் குடும்பத்திற்குப் பழக்கப்பட்டவன் போலத் தெரிந்தது.

“”எப்பவும் அப்பா வருவாரு… இன்னைக்கு நீங்களா….?” என்று கேட்டான்.

தக்காளிகளை வாங்கிக் கொண்டு, “”எவ்வளவு?” என்று கேட்டான்.

“”கிலோ நாற்பது… எண்பது ரூபாய் கொடுங்க..”

“”கிலோ நாற்பதா…” எனக்கு நெஞ்சடைத்தது.

“”என்னப்பா… நாற்பது சொல்றே…?” நான் கேட்டேன்.

“”என்ன செய்யுறது… மழை இல்லை… விவசாயம் இல்லை… தக்காளி விளைச்சல் குறைஞ்சு போச்சு…  வரத்து குறைவு…”

கடைக்காரன் எனக்கு விவசாயம் பாடம் எடுத்துக் கொண்டிருந்தான்.

நான் பேசாமல் நகர்ந்தேன்.

“”ஏம்பா… பத்து ரூபாய் குறைச்சு வாங்கலாமில்லே…?”

“”தாத்தா… இது கிராமமில்லே… டவுன்… அவன் சொல்றது தான் விலை.  விலை குறைச்சுக் கேட்டா நம்மை ஏற இறங்கப் பார்ப்பான்”

அடுத்தது ஒரு உயரமான கட்டிடத்திற்கு அழைத்துப் போனான்.

“”தாத்தா… இது ஷாப்பிங் மால்…”

“”அப்படின்னா?”

“”இங்கே சினிமா தியேட்டர், ஹோட்டல், மளிகை கடை, காய்கறி கடை எல்லாமே இருக்கு…”

உள்ளே நுழைந்தபோது, குளு குளு காற்று வரவேற்றது. எதிரே இருந்த கடைக்குள் போனோம்.

ஒரு பெரியகடை முழுவதும் எல்லாவிதமான பழங்களும், காய்கறிகளும் அழகாக அடுக்கி வைத்திருந்தனர்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  தோட்டத்தில் பறிக்கிறபோது கூட இவ்வளவு அழகாக இருந்ததில்லை காய்கள்… அவ்வளவு அழகாக இருந்தன.

தள்ளுவண்டியை எடுத்துக் கொண்டு முகிலன் செல்ல பின்னால் சென்றேன்.

நான்கைந்து மாம்பழங்களும், ஆப்பிள்களும் வண்டியில் எடுத்துப் போட்டான்.  ஓரிடத்தில் எடை போட்டு பணத்தை கொடுத்து வாங்கிக்  கொண்டு வெளியில் வந்தோம்.

“”என்ன தாத்தா…. ஆச்சரியமாக இருக்கா?”

“”ஆமாம்… பணக்காரங்க வீட்டிலே இருக்க வேண்டிய பொருட்களை வீதியிலே விற்கிறாங்க… சாதாரண ஏழை மக்களும் வாங்குற சாப்பிடும் பொருட்களை குளு குளு அறையில் வைச்சிருக்காங்க… ஆச்சரியம் தானே?”

இரண்டு மணி நேரம் சுற்றி விட்டு வீடு வந்தபோது வீட்டிற்குள் இரண்டு பேர் உட்கார்ந்து என் மகனுடன் பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தான்.

“”அப்பா பேர்ல தான் இருக்கு…” அவர்களிடம் என் மகன் சொன்ன போது எனக்குப் புரிந்தது.  நான் எதுவும் பேசவில்லை.

“”ஒரு நல்ல நாளாகப் பார்ப்போம்.. போயிட்டு பேசுகிறேன்”

அவர்கள் விடை பெற்றார்கள்.

“”வீடு மட்டும் இருக்கட்டும்… தோட்டத்தை பத்து லட்சத்துக்குப் பேசியிருக்கிறேன்.  நீங்க சரின்னு சொன்னா… விற்று விடுவோம்.  எனக்குச் சரி…” என்றான் வெங்கடேசன்.

“”நான் உயிரோடு இருக்கும்வரை தோட்டத்தை விற்க வேண்டாம்பா…”

“”என்னப்பா… சொல்றீங்க…?”

“”இன்னும் பத்து  இன்னும் பத்து வருஷம் கழித்து

 

உங்க எல்லோருடைய கைகளிலும், நீங்க மடியிலும், கைகளிலும் வைச்சு படம் காட்டுறீங்களே… அதுதான்.. அதுக்குப் பேரென்ன…?” பெயர் தெரியாமல் நான் இழுத்தேன்.

“”கம்ப்யூட்டரா…” மகன் கேட்டான்.

“”ஆமா… அது தான்..   அதுவும் உங்க கைநிறைய பணமும் இருக்கும்… ஆனால் கத்திரிக்காயும், தக்காளியும் இருக்காது… அது என்னை மாதிரி ஆட்களால் தான் தர முடியும்.. உங்களால் முடியாது… என் வழியிலேயே நான் போறேன்.. என்னை விட்டு விடு… என்னை விற்று விடாதே….”

நிலப் பத்திரத்தை வாங்கிக் கொண்டேன்.  அன்று இரவே கிராமத்திற்கு திரும்ப பஸ்ஸில் ஏற்றி விடச் சொன்னேன் நான்.

 

source ::::குன்றக்குடி கி.சிங்காரவடிவேல்  in   Dinamani….Tamil Daily

natarajan

Do you know ?… Alfred Nobel Was once Nicknamed “Merchant of Death ” !!!

Today I found out Alfred Nobel, who left most of his fortune to start the Nobel Prizes, was once nicknamed “The Merchant of Death”.

The “Merchant of Death” title was given to him due to Nobel inventing, and making most of his vast fortune off of, dynamite and other types of explosives, such as “ballistite”, which was the precursor to quite a lot of military grade explosive devices.

Nobel came up with the idea of using his money for these annual prizes after his brother, Ludvig, died in 1888 and a French newspaper mistakenly thought it had been Alfred Nobel himself who died.  The newspaper published the obituary under the title: “The Merchant of Death is Dead”, going on to state: “Dr. Alfred Nobel, who became rich by finding ways to kill more people faster than ever before, died yesterday.”

When Nobel read this, he began thinking of how to improve his public image after his death and decided on leaving his enormous fortune to fund a set of prizes named after himself. The Nobel Prizes were created as awards for people who made the greatest contributions to mankind in subjects that interested Nobel, namely Physics, Chemistry, Medicine, Literature and Peace.

Nobel did a lot of his own work in Physics and Chemistry and was an enthusiast of various literature of the day.  He also saw the benefit to advancements in medicine. The “peace” prize was thought to have been suggested and promoted by his former lover and secretary Bertha Kinsky, who later won the award in 1905, just a few years after the Nobel Prizes were established.  The idea of a peace award appealed to him because of his reputation as a war monger, and the fact that a huge point to the Nobel Prizes, as stated, was to fix his reputation as a “Merchant of Death”.

Bonus Facts:

  • Alfred Nobel invented around 355 things, most notable was his invention of dynamite, in 1867, which he was originally going to call “Nobel’s Safety Powder”, as it was basically a safer version of nitroglycerin and he was attempting to improve his image as a maker of dangerous explosives. He ultimately went with “dynamite”, which was derived from the Greek for “power”.
  • All total, Nobel left 94% of his fortune to be used towards the Nobel Prizes. His total fortune, adjusted for inflation, would be worth about $250 million today.
  • Along with the group setup to select the winners of the Nobel Prizes, a separate group, The Nobel Foundation, was founded to manage Nobel’s money.  To date, along with annually bequeathing money to award winners, The Nobel Foundation has grown Nobel’s assets up to around half a billion dollars.

source:::::todayifoundout.com

natarajan