Reblogged from Ba-ba mail site
natarajan

A giraffe at Rotterdam’s Diergaarde Blijdorp zoo says goodbye to Mario. Photo: Stitching Ambulance Wens Netherlands.Source: Supplied
A DYING cancer patient who worked at a Dutch zoo his whole life has said a final goodbye to the animal.
The 54-year-old man, identified only as Mario, was approaching by a loving giraffe as he lay in his hospital bed wheeled into Rotterdam’s Diergaarde Blijdorp zoo.
“You could see him totally light up,” Kees Veldboer, founder and director of Ambulance Wish Foundation, told a Dutch newspaper, Algemeen Dagblad.
“It’s very special to see that those animals recognise him, and sense that he isn’t doing well,” he said.
Mario has a mental disability and has worked as a maintenance man at the zoo for most of his life.
He later bid farewell to his colleagues, the paper reported
source:::: News.com.au
natarajan
தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்கள் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் மாணவராகப் பயின்ற காலத்தில் ஆங்கில மொழிப் பேராசிரியரும், கல்லூரித் தலைவருமான மில்லர், ஆங்கிலக் கவிஞர் டென்னிசனின் ‘ஆர்தரின் இறுதி’ கவிதை நூலைப் பாடம் நடத்திக்கொண்டிருந்த போது, அதில் வரும் கவிதை வரிகளைக் குறிப்பிட்டார்
“So said he, and the barge with oar and sail,
Moved from the brink, like some full- breasted swan”
ஆர்தர் அரசன் இறக்கும் தருவாயில் இருக்கிறான். அவன் மனைவியரோடு அவனை ஒரு அழகிய படகில் வைத்து நதியில் செலுத்திவிடுகிறார்கள். இந்தக் கட்டத்தில் படகு, நதியில் அழகாக செல்லுகின்ற காட்சியையே மேலே காட்டிய இரண்டடிகளும் வருணிக்கின்றன. அந்தப் படகு தனது துடுப்புகளை ஆட்டி அசைத்துக்கொண்டு நதியில் மிதந்து செல்வது ஒரு அழகிய அன்னப்பறவை தனது சிறகுகளை விசிறிக்கொண்டு நீரில் நீந்துவது போல் தோன்றுகிறது புலவனது அகக் கண்களுக்கு.
இதுமாதிரியான கற்பனை தமிழில் எங்கேயாவது உண்டா என்று அறிந்துகொள்ள விரும்பிய மில்லர், பரிதிமாற் கலைஞரைப் பார்த்து, “தமிழ் பற்றி எப்பொழுதும் பெருமையாகப் பேசுகிறோயே, டென்னிசனின் மேற்கண்ட கற்பனை போல் தமிழில் உண்டா?” என்று கேட்டார்.
பரிதிமாற் கலைஞர், தமிழ் இலக்கியத்தில் இருக்கிறது என்று உடனடியாகப் பதில் சொன்னார். எட்டு, ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட கம்பராமாயணத்தில் இந்த உவமை எடுத்தாளப்பட்டிருக்கிறது என்றார். அயோத்தியா காண்டம் குகப்படலத்தில் இராமன், சீதை, இலக்குவன், குகன் ஆகியோர் கங்கை நதியைக் கடக்கும் காட்சி இப்படி விவரிக்கப்படுகிறது.
முடுகினன் நெடுநாவாய், முரிதிரை நெடு நீர் வாய்
கடிதினின் மட அன்னக்கதி அது செல…
பரிதிமாற் கலைஞர் மேற்கண்ட கம்பன் வரிகளைக் கூறியவுடன் புதையல் கண்டவரைப் போல மில்லர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். அன்னப் பறவை நீரில் செல்வது போல படகு சென்றது என்ற கம்பனின் கற்பனை அப்படியே பல நூற்றாண்டுகளுக்குப் பின் ஆங்கிலக் கவிஞர் டென்னிசன் வரிகளில்.
என்ன அபூர்வ ஒற்றுமை.
ஆதாரம்: பரிதிமாற் கலைஞர் வாழ்க்கை வரலாறு
இலக்கியம்| source::::The Hindu….Tamil
பாரதி அன்பர்கள் மத்தியில் பரவலாக எழும் ஐயப்பாடுகளில் ஒன்று, “வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்’ என்கிற பாடலில் வரும் “பள்ளித் தலமனைத்துங் கோயில் செய்குவோம்’ என்கிற வரி பற்றியது.
தமிழகத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, “கல்வியிற் சிறந்த தமிழ்நாடு’ என்று குறிப்பிடுபவர் பாரதி. கலைவாணியைத் துதித்துப் பாடும் “வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள்’ பாடலில் கூட,
“”வீதிதோறும் இரண்டொரு பள்ளி;
நாடு முற்றிலும் உள்ள வூர்கள்
நகர்களெங்கும் பலபல பள்ளி;
தேடு கல்வியிலாத தொரூரைத்
தீயி னுக்கிரையாக மடுத்தல்”
என்றும்,
“”அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதி னாயிரம் நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியங் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்”-
என்றும் பாடிய மகாகவி பாரதி, எப்படி, எதற்காகப் பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்’ என்று பாடினார்? இந்தக் கேள்விக்கு விடை தெரிந்தவர்கள் விட்டு விடுங்கள். தெரியாத பெருவாரியானவர்கள் மட்டும் மேலே படியுங்கள்.
இது குறித்து கவிஞர் வாலி கூறுகையில், தமிழ்ப்பா’வை மணந்த தமிழ்ப் பாவை என்று மகாகவி பாரதியின் மனைவி செல்லம்மா பாரதிக்குப் புகழாரம் சூட்டியிருக்கிறார் கவிஞர் வாலி.
“”ஒருத்தி, ஒரு, செருக்கனோடு வாழலாம்; தருக்கனோடு வாழலாம்; சினப் பெருக்கனோடு வாழலாம், கெட்டவருக்கனோடு வாழலாம்! ஆனால், எப்போதும் எதையேனும் கிறுக்கு கிறுக்கென்று கிறுக்கும் கிறுக்கனோடு வாழ்தலென்பது தலையைக் கிறுகிறுக்க வைக்கும் விஷயம்!” என்று தனக்கே உரித்தான வார்த்தை வித்தகத்தால் செல்லம்மா பாரதியின் சித்திரத்தை எழுத்தில் வடித்திருக்கும், கவிஞர் வாலியின் கரம் பிடித்துக்கை வலிக்க வலிக்கக் குலுக்க வேண்டும் போலிருக்கிறது!
நான் முதலில் எழுப்பியிருந்த கேள்விக்கு பதிலும் தந்திருக்கிறார் அந்த நடைச் சித்திரத்தில். “”அடியேன் அறிந்தவரை
அதற்கான அர்த்தம் யாதென்றுரைப்பேன். பாரதி – பள்ளித் தலமென்று பள்ளிக்கூடத்தைக் குறிப்பிட்டிருக்க மாட்டான். அது, ஏற்கெனவே கலைமகள் கொலுவிருக்கும் கோயில்தானே!
அவன் குறிப்பிட்டது யாதெனில், பள்ளரும் அவர்தம் பத்தினிமார்களான பள்ளிகளும் இருக்கும் சேரியைத்தான்!” என்று விளக்குகிறார் கவிஞர் வாலி.
“”அசிங்கமும் அருவருப்பும் பாராமல், ஊர்ப்பணி ஆற்றும் உத்தமர்தம் உறைவிடத்தை ஆலயமாக்க விரைந்த முதல் ஆசாமி – அந்த முண்டாசுக்காரன்தான்!”
பாரதி என்றாலே பிரமிப்பு!!!
source::::Vanishree Sivakumar in Dinamani blogspot.com
natarajan
Old terminology dies hard. Though technology changes swiftly from day to day, there are still old-fashioned terms we cling to, using them frequently even though they no longer have a relevant meaning. We “tune in” to the “tube,” all with the aid of the trusty “clicker.”
SEE ALSO: 7 Ways You’re Killing Your Tech
Unless you’re a Luddite exclusively using obsolete technology, you’ll recognize these nine ancient tech terms as relics of a bygone era.

Plenty of people still say they’re “dialing” a phone number. The term goes back to the beginning of the telephone era, when phones had a rotary dial — a switchboard users needed to swing each number. Rotary phones haven’t been used for decades, but people still say they’re dialing away.
Unless you’re using a pay phone (which isn’t likely), you aren’t “hanging up” anything. That phrase refers to ending a phone call by placing a corded phone back into its holder, which, most often, literally hung on a wall. Ending a call today usually just requires the click of a button or the tap of a smartphone screen.
In ye olden days, cars had a handle that you needed to rotate in order to pull the window up or down. Modern cars aren’t made with a crank anymore — they just have a button or switch that you can click upward or downward to maneuver the window direction.

This term originally referred to the days before Xeroxing, when, in order to make copies, you would need to place a sheet of carbon paper behind the original sheet so the ink transferred over.
Now, the term lives on in email (when you CC someone, you send them a “carbon copy” of your email). It’s also popular in everyday conversation, calling two similar items carbon copies of each other.
Even if you don’t say this, you know someone who does. Plenty of people comfortably refer to a TV’s remote control as a clicker, because in the early days of television, the control used to make a very loud clicking sound.

Referring to a TV as “the tube” is a sign you aren’t ready for the HD age. TVs as we know them now are flat-panel LCD wonders, whereas their predecessors were made with cathode ray tubes (hence the nickname). Tube television sets have essentially been phased out, but the name persists (and we fondly remember the nickname every time we click over to YouTube).
The phrase was popular with TV announcers when viewers had to adjust frequencies on their sets. Users literally had to ‘tune in’ to enjoy their shows. In the ultra digital age, that’s yesteryear’s problem.

There are several ways people still use the word “tape,” but many use it when talking about recording. Using it interchangeably with the term (or “DVR-ing” or “TiVo-ing”) is a relic leftover from the glory days of actual tapes and VHS.
This is essentially the universal term for reversing something to watch it again, whether it’s a YouTube video, a movie streaming on Netflix or even a DVD. However, there’s nothing to wind anymore — to rewind something requires physical tape.
Have something to add to this story? Share it in the comments.
ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் வாணியம்பாடி செல்லும் சாலையோரத்தில் இருக்கிறது ஏலகிரி ஓட்டல். அங்குச் சாப்பிட்டுவிட்டுச் சிலர் பணம் கொடுக்காமல் வணக்கம் மட்டும் தெரிவித்து விட்டுச் செல்கின்றனர். கல்லாவில் இருந்தவரும் காசு கேட்பதில்லை. பணத்துக்குப் பதில் வணக்கம் செலுத்தினால் போதுமா? விசாரித்தபோதுதான் மேலே தொங்கிக்கொண்டிருந்த சிலேட்டுப் பலகைகளைக் காட்டினார். விஷயம் புரிந்தது.
‘முதியோர், ஊனமுற்றோர்களுக்கு காலை 8 முதல் 11 மணி வரை இலவச உணவு’ (100 பேர் வரை), ‘பால் வாங்கப் பணமில்லையென்றால் குழந்தைகளுக்கு இலவசமாகப் பால்’, ‘வாரம் 100 மாணவர்களுக்கு இலவசமாக பேனா அல்லது பென்சில்’, ‘1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை முதல் மாலை வரை பாதி விலையில் உணவு’ இந்த அறிவுப்புகள் சிலேட்டுப் பலகைகளில் சாக்பீஸால் எழுதப்பட்டிருந்தன.
ஆச்சரியத்துடன் கேட்டால், “பணத்துக்காக வாழ்றதில்லிங்க; வாழ்றதுக்குதாங்க பணம்” பெரிய தத்துவத்தை எளிதாகச் சொல்கிறார் இந்த ஓட்டலின் உரிமையாளர் நாகராஜ். அவர் இந்தச் சேவையை 25 ஆண்டுக்கும் மேலாகச் செய்துவருகிறார். ஒரு நாளைக்கு ஏறக்குறைய 100 பேர் வரை இந்த ஓட்டலை நம்பியே காலம் தள்ளுகின்றனர்.
ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வட மற்றும் தென் தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திரத்தை இணைக்கும் முக்கியச் சந்திப்பு. இந்த நிலையத்தைக் கடந்ததுதான் அனைத்து ரயில்களும் பயணிக்கின்றன.
பயணத்தின்போது காலி தண்ணீர் பாட்டிலை ஜன்னல் வழியே வீசுவதைப்போல குடும்பத்தில் பாரமென கருதப்படும் மனிதர்களை ரயிலில் அழைத்து வந்து இங்கே இறக்கிவிட்டுச் சென்று விடுகின்றனர். அவர்கள் பெரும்பாலும் முதியவர்கள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். மாதந்தோறும் குறைந்தபட்சம் 15 பேராவது இப்படி அனாதைகளாகத் தனித்து விடப்படுகின்றனர்.
திக்குத் தெரியாமல் தவிக்கும் அவர்கள் ஜோலார்பேட்டையிலேயே சுற்றித்திரிகின்றனர். இவர்களுக்கு இந்த ஓட்டல் ஒரு அன்னச் சத்திரமாக இருக்கிறது. “பசி என்ற உணர்வு மட்டும்தான் சுயநினைவு இல்லாத வருக்குக்கூட உணவு நமக்கு தேவை என்பதை உணர்த்து கிறது” என்கிறார் நாகராஜ்.
இவர்கள் தவிர சுற்றுவட்டாரங்களில் வீடுகளில் கவனிக்க முடியாத நிலையில் இருக்கும் முதியவர்களுக்குத் தேவையான உணவை அவர்களது குடும்பத்தினர் வந்து இலவசமாக பார்சல் வாங்கிச் செல்லலாம். நாகராஜின் மனைவி சுஜாதாவும் தன் கணவரின் இந்தத் தொண்டுக்குப் பக்கபலமாக இருக்கிறார்.
மிகச் சின்ன வருமானத்தில் இதையெல்லா எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “இவர்களுக் கென்று தனியாக உலை வைக்கப்போதில்லை. வழக்க மாக சமைக்கும் அளவோடு கொஞ்சம் கூடுதலாக சமைக்கிறேன். 5 கிலோ மாவு புரோட்டோ போட்டாலும் 10 கிலோ மாவு போட்டாலும் மாஸ்டருக்கு ஒரே கூலிதான். எரிபொருளும் ஏறக்குறைய ஒரே அளவில்தான் செலவா கிறது.
சில ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்புதான் என்றாலும் எனக்கு குடும்பம் நடத்தத் தேவையான லாபம் கிடைக்கிறது. மனதுக்கும் சந்தோஷமாக இருக்கிறது” என்கிறார் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் ‘வாடி நிற்கும்’ நாகராஜ்.