Message For the Day…” God is, as Butter in Milk, …”

There are people who go about declaring that there is no God because they are unable to see Him. They say that they have searched in space, on the way to the moon, and even on the moon there was no sign of the Almighty. But they themselves are the mansions in which He resides, all the time! Like the blind bamboozling the blind into a fall, others too repeat like parrots this ‘fashionable slogan’. No one sees the roots, but the roots are indeed there, deep in the soil, away from all eyes. Can you assert that there are no roots for trees, that nothing feeds them or upholds them from below? God feeds, sustains, holds firm – though unseen, He can be seen by those who make the effort, along the lines laid down for the purpose by those who have succeeded in experiencing Him. God is, as butter in milk, visible when concretized by spiritual striving (Sadhana).

Sathya Sai Baba

Message for the Day…” Be Like the Lotus on Water..on it , not in it …”

A young college student can roam free on his two legs; when he marries, he becomes four-footed! A child makes him six-footed; now the range of his movements is restricted. The more the feet, the less the speed, the stronger their grip on the ground; a centipede can only crawl. More hurdles, more handicaps. Accumulation of sofas, chairs, cots, tables and shelves clutter the hall and render movements slow and risky. Attachment brings sorrow in its wake; at last, when death demands that everything be left behind and everybody be deserted, you are overpowered with grief! Be like the lotus on water; on it, not in it. Water is necessary for the lotus to grow; but it will not allow even a drop to wet it. The objective world is the arena of virtue and the gymnasium for the spirit. But use it only for that purpose; do not raise it to a higher status and adore it as all-important.

Sathya Sai Baba

” என் தாய் மீனாக்ஷி …”

 

Writer Indira SoundarRajan Shared his experience in tamil monthly Mangaiyar Malar …

 

1956 இது நான் மண்ணுக்கு வந்த வருடம் 1980 இது நான் மதுரைக்கு வந்த வருடம்!

அதற்குமுன்பு சேலத்தில் பிறந்து அங்கேயே வளர்ந்த ஒரு சேலத்துக்காரன் நான். என் பின் வாழ்க்கை மதுரைக்கு இடம் மாறும் என்று நான் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை. டி.வி.எஸ். சுந்தரம் பாசனர்சில் வேலை கிடைக்கப்போய் மதுரைக்குப் புறப்பட்டு வர நேர்ந்தது.

நான் பிறந்த வளர்ந்ததெல்லாம் ஆசாரமான வைணவக் குடும்பத்தில். ஆனாலும் என்னை மதுரைக்கு அனுப்பியபோது என் அப்பா சொன்னது ஒன்றைத்தான்… இன்டர்வியூ அட்டெண்ட் பண்றதுக்கு முந்தி மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போ… அப்புறம் மற்ற வேலைகளை கவனி” என்றார். நானும் மதுரை வந்து இறங்கவும் பஸ் ஸ்டாண்டை ஒட்டிய ஹோட்டலில் ரூம் போட்டு குளித்து விட்டு முதலில் சென்றது மீனாட்சியம்மன் கோயிலுக்கு தான். அன்று ஆரம்பித்த தொடர்பு இந்த 2014-ல் என் பெண்ணுக்குக் கல்யாணம் செய்யப் போகிறேன்… அதற்கான பத்திரிகையை முதலில் மீனாட்சிக்கே வைக்கும் அளவிற்குத் தொடர்ந்தபடி உள்ளது.

 

குடும்ப வழக்கப்படி தாந்தோணி மலை பெருமாளுக்கு தான் முதல் பத்திரிகை வைக்க வேண்டும். அவர் தான் குலதெய்வம். இருந்தும் மீனாட்சி சன்னிதிக்கே கால்கள் முதலில் சென்றன. அடுத்து பெருமாளிடம் சென்ற போது ‘சாரிப்பா… அம்மாவை அப்புறமான்னு நினைக்க முடியல’ என்று மனதுக்குள் சொன்ன போது பெருமாளும் ‘அதனாலொன்றுமில்லை’ அவள் என் தங்கை தானே?’ என்று சொல்வது போல் தான் இருந்தது.

 

மதுரைக்கு நான் வந்த போது ஒரு தொடக்க எழுத்தாளன் தான். ஒரு சிறுகதை எழுதி அது பிரசுரம் ஆவதற்குள் தாய்வு தீர்ந்து விடும். ஆனால் என் எழுத்தாள கனவுக்கோ வானமே எல்லை.

 

ஒரு சமயம் எனக்கு அதிர்ஷ்டமேயில்லை என்று கருதிக் கொண்டேன். மீனாட்சியைக் கூட்டு சேர்த்துக் கொண்டால் அவள் தயவால் உருப்பட்டு விடலாம் என்று எப்படித் தோன்றியதோ தெரியாது. அதன்பின் அவளோடு கூட்டணி… எழுதி நூறு ரூபாய்சம்பாதித்தால் இருபது ரூபாய் அவளுக்கு என்று!

இந்த கூட்டணிப் பிரார்த்தனை ஓரளவு வேலை செய்தது. தினமும் ஆபீசில் எந்திரங்களுக்கு நடுவில் 10 மணி நேரம் அல்லாடி விட்டு வந்து பேனாவும் பேப்பருமாக உட்கார்ந்து விடுவேன்.

நான் எழுதத் தொடங்கிய நாளில் நல்ல போட்டி இருந்தது. எல்லாவிதமான கதைகளும் வந்தன. நான் பரிசுகளைக் குறி வைத்து எழுதினேன். ‘கலைமகள்’ குறுநாவல் போட்டியில் இருமுறை முதல் பரிசு. ‘அமுத சுரபி’யில் ஒரு முறை, ‘இலக்கியச் சிந்தனை’ விருது ஒரு புறம்… ஆனாலும் சொன்னால் பிறர் உடன் தெரிந்து கொள்ளும் அளவு ஒரு பிரபலத் தன்மை ஏற்படவில்லை. அதை சுஜாதா, ரா.கி.ரங்கராஜன், சாண்டியல்யன், சிவசங்கரி போன்றோர் தங்கள் வசம் வைத்திருந்தனர்.

தமிழ்வாணன் மறையவும் ‘குமுதம்’ ராஜேஷ்குமாரை அவர் இடத்துக்கு வர அனுமதித்தது. பட்டுக்கோட்டையில் இருந்து பிரபாகரும் வலை வீசினர். இவர்களுக்கு நல்ல மீன்களும் சிக்கின. நானும் சில மீன்களைப் பிடித்தேன். எல்லாமே குஞ்சுகள் என்பதால் ஒரு திருப்தி ஏற்படவில்லை. பாரதியார் காளி தேவியிடம் மானசிகமாய்ச் சண்டை போடுவார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். நானும் அதுபோல் போய் சண்டை போட்டேன் மீனாட்சியிடம்!

‘குமரகுருபரனுக்கு ஒரு பெயர் வாங்கித் தந்ததோடு நின்றுவிட்டாயே… என்னைக் கொஞ்சம் கவனிக்க மாட்டாயா? நானெல்லாம் ஜெயித்தால் எது தான் குறைந்து போகும்? நீ பார்த்தாலே போது மாமே… தினம் வருகிறேனே. பார்க்கமாட்டேன் என்றால் எப்படிம்மா’ என்று… எழுத்தாளனாக உயர வேண்டும் என்று என்னைப் போல தவித்தவர்கள் இருக்கவே முடியாது. உழைத்தவர்களும் இருக்க முடியாது. எதுவும் வீண் போகவில்லை என்றே கூறுவேன். 1980ல் மதுரை வாசியான எனக்கு 1988ல் இருந்து கதவுகள் திறக்க தொடங்கின. ஒரு வாய்ப்பைக் கூட நான் வீணாக்கவில்லை.1990-ல் விகடனில் தொடர் எழுதும் வாய்ப்பு அமைந்தது. அதன் வெற்றியே அடுத்தத் தொடரை சில மாதங்களிலேயே பெற்றத் தந்தது. அது மர்ம தேசமாய் தொலைக்காட்சியில் என்னை உயர்த்தியது. இன்று புகுந்த வீடு வரை தொடர்ந்த படியே உள்ளது.

இந்த 2014-ல் திரும்பிப் பார்க்கிறேன். இந்த கட்டுரை எழுதும் இந்த நாளில் 12பத்திரிகைத்தொடர்களுடன் ஒரு தொலைக்காட்சி தொடர், ஒரு திரைப்படம், இது போக மாதம் குறைந்தது நான்கைந்து சொற்பொழிவு, பொதிகையிலும் தொடர் சொற்பொழிவு என்று என் குதிரை ஓடிக் கொண்டிருப்பது தெரிகிறது.

மதுரையில் நான் கால் வைத்த போது நான் ஒரு சரியான அரைவேக்காடு, இன்று என்னை பன்முகங்களில் உயர்த்தி பக்குவப்படுத்தியிருக்கிறாள் மீனாட்சி. வீடு வாசல் தந்து மனைவி குழந்தைகள் தந்து மாப்பிள்ளையும் வர இருக்கிறார்.

எதை எப்போது தர வேண்டும் என்று எனக்கு தெரியும் என்பது போல் அதை எல்லாம் அவ்வப்போது தந்து ஆதர்ச சக்தியாக விளங்கி வருகிறாள். நிறைய திருவிளையாடல்களும் நிகழ்த்தியிருக்கிறாள். அந்த தெய்விக அனுபவங்களைச் சொன்னால் சிலிர்க்கும்.

நான் மிகுந்த விஞ்ஞான பாதிப்புடைய ஒருவன். என் அனுமானுஷ்ய படைப்புகளின் ஊடே விஞ்ஞானக் கேள்விகளும் நாத்திக வாதமும் நிறையவே இருக்கும். அந்த வகையில் ஒரு பெரும் அலசல் எல்லா விஷயத்திலும் என்னிடம் உண்டு. அந்த அனுபவத்தின் அடித்தளத்தில் இருந்து நான் பக்தியைப் புரிந்து கொண்ட விதம் அதைக் கொண்டு மீனாட்சி என்றும் சக்தியைப் புரிந்து கொண்ட விதத்தை எல்லாம் ஒரு அத்தியாயக் கட்டுரைக்குள் அடைக்க முடியாது.

இறை பக்தி சிலர் வரையில் பயம் சார்ந்தது. சிலர் வரையில் அது ஒரு சுய நலம், இன்னும் சிலர் வரையில் அது மூடத்தனம் அறிவு சார்ந்ததாக அது மாறும் போது நிறைய கேள்விகள் எழும்; அதற்கான விடைகள் நெருடலைத் தரும்.

நானும் பயத்தோடு சில காலம், சுய நலத்தோடு சில காலம், மூடமாய் சில காலம் என இதில் லயித்திருக்கிறேன். இப்போது தான் எனக்கு சூட்சமம் மபிடிபட்டுள்ளது. இன்று கோயிலுக்குப் போய் தான் பக்தி புரிய வேண்டும் என்கிற நெருக்கடியில் இருந்து நான் விடுபட்டேன். மானசிகமாய் பக்தி புரிகிறேன்.

அந்த பக்தியோடு முன்போல மீனாட்சியைப் போனோம் தரிசித்தோம் என்று தரிசனமும் செய்ய முடியவில்லை. எங்கோ சிலர் செய்த தவறால் ஒரு தீவிரம் கொழுந்துவிட்டதில் இன்று உடம்பைத் தடவிப் பரிசோதித்த பிறகே உள்ளே விடுகிறார்கள். அதை ஏற்கவும் முடியவில்லை – மறுக்கவும் முடியவில்லை. உள்ளேயும் சொல்லொணாத் தலைகள்… நீண்ண்ண்டவரிசை! அதனால் மானசிகமாய் கோபுரத்தைப் பார்த்து அந்த நாள் நினைப்பில் விழுந்து பூசலார் நாயனார் போல ஆன்ம தரிசனமே செய்கிறேன். எல்லாவற்றுக்குப் பின்னாலும் ஒரு சரியான காரண காரியம் இருக்கிறது. அதைப் புரிந்து கொள்வதில் தான் நம் சிறப்பும் உள்ளது.

ஒரு விஷயத்தை நான் அழுத்தமாய் சொல்வேன் படைப்பாளிகளுக்கு ஒரு பெண் தெய்வம், இஷ்ட தெய்வமாய் அமைவது மிகச் சிறந்தது.

ஆறுதல், அமைதி, ஆனந்தம், ஆராதிப்பு என்று எல்லாமே அவளால் கிடைத்து விடும்.

காளமேகம், காளிதாசன், கம்பன், பாரதி என்று நீளும் பட்டியலே சாட்சி!மங்கையர் மலர்

Writer Indira Soundar Rajan in Mangaiyar Malar

Source::::bahanuman@wordpress.com

Natarajan

Message For the Day…” Get rid of your Ego and Give up Greed …”

No one will like the one who is conceited and egotistic. Even your spouse and your own children, though they may appear to respect you externally, will not be happy with you, when you are an arrogant person. Not just that, as long as you are filled with ego, it is highly unlikely that you will really be happy. Therefore at the very outset, you should get rid of your ego (ahamkara). So too, when you are filled with anger, you cannot experience joy; you are bound to be miserable. Only when you subdue anger you will be able to experience happiness. Similarly, when you are filled with insatiable desires, you will not really feel wealthy. The moment you give up desires, all riches will come to you. If you stay greedy, you will be a stranger to happiness. Give up greed, and you will feel endowed with all riches.

Sathya Sai Baba

 

அமெரிக்காவில் அனாதையாக இருக்கும் விநாயகர்…

‘உங்களுக்கு மிகவும் பிடித்த கடவுள் யார்?’ என, ஒரு போட்டி நடத்தினால், கண்டிப்பாக பெரும்பான்மை ஓட்டு வித்தியாசத்தில் விநாயகர் தான் வெற்றி பெறுவார்.முட்டு சந்து முதல் அரச மரத்தடி வரை, ஆரம்ப பள்ளி முதல் ஐ.ஐ.டி., வரை, சண்முகன் வள்ளியை மணக்க உதவியது முதல் நவீன காதல் கதைகள் வரை, எந்த வேலை என்றாலும், அனைவரும் முதலில் வணங்கி, விண்ணப்பம் செய்வது, பிள்ளையாரிடம் தான்.இன்று ஒவ்வொரு வீட்டிலும் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, வணங்கப்படும் இவர், ஓரிடத்தில் மட்டும் அனாதையாக நிற்கிறார்.
-எங்கே தெரியுமா?அமெரிக்காவில்…
ஓகியோ மாகாணத்தில் உள்ள டாலிடோ நகரில் உள்ள அருங்காட்சியகத்தில்.தமிழகத்தின் அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த, ஸ்ரீபுரந்தான் ஊரில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான, பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது.
அந்த கோவிலில் இருந்து, 2005ம் ஆண்டு, சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் கும்பலால் திருடப்பட்ட அந்த விநாயகர் சிலை, 1.5 கோடி ரூபாய்க்கு வேறொருவருக்கு விற்கப்பட்டது.அதிர்ஷ்டவசமாக, புதுச்சேரி பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் நிறுவனம், 1994 நவம்பர் மாதத்தில், பிரகதீஸ்வரர் கோவிலில் இருந்த செப்புத் திருமேனிகளை, புகைப்படங்களாக ஆவணப்படுத்தி வைத்திருந்தது.
அயல்நாடுகளில் அருங்காட்சியகங்களில் உள்ள தமிழர் கலைச்செல்வங்கள் பற்றிய தகவல்கள், வரலாறுகளை திரட்டி வரும் இணைய ஆர்வலர்களான நாங்கள், உடனே, புதுச்சேரி, பிரெஞ்சு இன்ஸ்டிடியூட்டிற்கு சென்று, இதுதொடர்பான புகைப்படங்களை முறையாகப் பெற்றுக் கொண்டோம்.பொதுவாக, அந்த கலை பொருட்கள், எந்த ஆண்டு வாங்கப்பட்டன என்ற விவரம் மட்டுமே, சம்பந்தப்பட்ட அருங்காட்சியகங்களில் இருந்து கிடைக்கும்.
ஸ்ரீபுரந்தான் விநாயகர் கதையிலும் அதுதான் நடந்தது.எனினும் பல தேடல்களுக்கு பின், டாலிடோ அருங்காட்சியகத்தில் உள்ள விநாயகர் சிலை, பார்ப்பதற்கு திருடு போன சிலை போலவே இருப்பது தெரிந்தது.அமெரிக்காவில் வசிக்கும், முகநூல் நண்பர் ஒருவரிடம், ”ஒருமுறை அங்கே நேரில் சென்று படம் எடுத்து தர இயலுமா?” என்று கேட்டேன். அவரும் மெனக்கெட்டு அங்கு சென்று, நல்ல படங்களை எடுத்து அனுப்பினார்.
இரண்டு படங்களையும் ஒப்பிட்டபோது, ஒரு முக்கிய துப்பு கிடைத்தது. பிள்ளையாரின் தும்பிக்கையில், ஒரு சிறிய மரு, இருப்பது, இரண்டு படங்கள் மூலம் உறுதியானது. இந்த சான்று, சிலை திருட்டை உறுதிசெய்தது. கடந்த ஆண்டு, ஜூலை 17ம் தேதி, ‘சிலை திருட்டு பொருளாக இருக்கலாம்; மேலும் விவரங்கள் அனுப்பி உதவ வேண்டுகிறோம்’ என, அஞ்சல் அனுப்பினோம்.
அஞ்சலில், சென்னை காவல் துறையின், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இணையதளத்தில், 2009ம் ஆண்டில் வெளியிடப்பட்ட படங்கள், பிரெஞ்சு இன்ஸ்டிடியூட்டின் படங்கள், சிலைகளின் ஒப்பீடு என்று அனைத்து ஆதாரங்களையும் இணைத்து இருந்தோம். அதன் நகலை, காவல்துறைக்கும் அனுப்பி வைத்தோம். ‘இனிமேல், விநாயகர், வீடு திரும்பி விடுவார்’ என, நம்பிக்கையுடன் இருந்தோம்.
ஆனால், அதன்பின்,அருங்காட்சியகத்திடம் இருந்த எந்த பதிலும் இல்லை.காவல்துறையும் ஒன்றும் செய்ய வில்லை. தொடர்ந்து ஏழு மாதங்கள் அவர்களை விடாமல் ‘தொந்தரவு’ செய்தவுடன்,- அருங்காட்சியகம், அதன் இணையதளத்தில், இந்த ஆண்டு பிப்., மாதத்தில், இரு கடிதங்களை வெளியிட்டது.
நாங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தவுடனே, அருங்காட்சியகம், இதுகுறித்து இந்திய துாதரகத்திற்கு கடிதம் அனுப்பியது. ஆனால் அங்கிருந்து பதில் எதுவும் வரவில்லை.அதனால், அருங்காட்சியகம் தான் அனுப்பிய கடித பிரதி, இந்திய துாதருக்கு அனுப்பிய கடித பிரதி இரண்டையும், பகிரங்கமாக இணையதளத்தில் வெளியிட்டு விட்டது.
அதாவது, ‘நாங்கள் முயற்சி செய்தோம். உங்கள் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் இல்லை’ என்பதுதான் அதற்கு அர்த்தம்.இந்த சிலை கடத்தில் வழக்கில், போதுமான ஆவணங்கள் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். ஆனாலும், இந்திய அரசு இதில், தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றே நினைக்கிறோம்.
இது மட்டும் ஒரு சம்பவம் இல்லை. இதுபோன்று, இந்திய கலைப்பொருட்கள், இந்திய மண்ணில் இருந்து திருடப்பட்டு, உலகெங்கிலும், பல கோடி ரூபாய்களுக்கு ஏலம் விடப்படுகின்றன.
சிலை கடத்தல் சம்பவங்களும், கடத்தப்பட்டவற்றை மீட்காமல் இருப்பதும், நமது கலைக்கும், ஆன்மிக உணர்வுகளுக்கும், நாமும் நமது அரசும் அளிக்கும் அலட்சிய பார்வையை, புறக்கணிப்பைத் தான், சர்வதேச அளவில், எடுத்துக்காட்டுகிறது.
எங்களை போன்ற ஒரு சில ஆர்வலர்களின் பணியை, அயல்நாட்டவர் எள்ளிநகையாடுகின்றனர். நாங்கள் அதற்காக வருத்தப்படவில்லை.கலைப்பொருட்கள் அவை சிலையாகவோ, மர சிற்பமாகவோ, ஓவியமாகவே, வேலைப்பாடு மிக்க பொருளாகவோ இருக்கலாம் நம் குலதனம்.
டாலிடோ அருங்காட்சியகத்தில் உள்ள, ஸ்ரீபுரந்தான் விநாயகர், அடுத்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்குள், நாடு திரும்ப வேண்டும் என்றால், தமிழக மக்கள் ஒருங்கிணைந்து, இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.இனியவாது அவரவர் பகுதிகளில் உள்ள கோவில்களை, பாதுகாக்க முன்வர வேண்டும். அதைப் பார்த்து அரசு, தானாகவே தனது பணியை செய்ய முன்வரும்.இதற்கிடையில்…எங்கள் பணியும் தொடரும்!
– எஸ்.விஜய்குமார் -(கட்டுரையாளர், தொல்லியல் ஆர்வலர்; சிங்கப்பூரில், தனியார் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.)

Source::::dinamalar.com

Natarajan

Message For the Day…”To Turn your Life towards Divinity, Associate yourself with Truth …”

The stream of life is marked by different stages – in each stage you fall a prey to vices like egoism, jealousy and falsehood instead of cultivating truth, righteousness and humility. During your childhood, you lead an innocent life without being aware of the distinction between the worldly and sacred paths (Preyo and Sreyo Marga). But as age advances, you take to the worldly path, rather than to the sublime path. Plunging into the river of desire, tossed by the waves of delusion, getting immersed in the waters of family life, and submerged by peacelessness and strife, you are swallowed by the whale of discontentment. To turn human life from this mundane existence towards the Divine it is essential to have association with Truth, Sath sangam. Sath refers to that which remains the same regardless of time, place or circumstance. One should associate oneself with this Truth. Merging the consciousness with this Truth you should experience the bliss of such association.

Sathya Sai Baba

” பிள்ளையார் போற்றுவோம் ….”

 

அனைவருக்கும் இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

பிள்ளையார் போற்றுவோம்
(அறுசீர் விருத்தம்: காய் மா விளம் காய் காய் காய்)

ஆனைமுகம் பார்த்தால் தடையெலாம் .. காலடியில் மூஞ்சூறாய் ஓடிவிடும்
பானைவயின் பார்த்தால் பகையெலாம் .. ஆதவன்முன் பனியெனவே ஓடிவிடும்
கானமதைக் கேட்டால் பிள்ளையார் .. காதுகளில் தேனருவி வந்துவிழும்
நானவனை இன்றே போற்றுவேன் .. பானகமும் மோதகமும் முன்வைத்தே.

மாணவரின் கல்வி யோங்குமே .. காணவரின் பிள்ளையாரின் உருவினையே
கோணலெலாம் மாறிச் சீர்ப்படும் .. கோலவிழிக் கோமகனை வழிபடவே
சாணேறில் மீண்டும் சறுக்கிடும் .. சாதனைகள் கொடிமரமாய் உயர்ந்திடுமே
நாணமுறும் மாதர் வாழ்வினில் .. நாலுவகைப் பேறுகளும் கூடிடுமே.

கணபதியை நாளும் போற்றுவோம் .. காலமெலாம் கவலையின்றி வாழ்வோமே
குணநலன்கள் யாவும் சேருமே .. கூப்பிட்டுத் துதிசெய்து பாடிடவே
கணப்பொழுதில் நீங்கும் தடையெலாம் .. கணபதியே சுற்றமெனக் கொண்டாலே
வணங்கிடுவோம் சென்னி நிலம்பட .. மணமெல்லாம் வாழ்வினிலே பெற்றிடவே.

–ரமணி, in http://www.periva.proboards.com

Read more: http://periva.proboards.com/thread/5111/#ixzz3Bb3wxY98

Natarajan

Message For The Day…”The Intent with which You use Money Should be for Good …”

The pride of wealth, manpower and youth seems to be predominant presently. Money is inert, it is lifeless. How can it be strong? Its strength or weakness is the reflection of the mindset of the individual. Wealth and education are like pure water. When water is poured in a bottle of a particular colour, the water appears to be of that colour. In the same way, when wealth is in the hands of a wicked person, it will be used only for evil deeds. Money, if it is in the hands of pure hearted people, will be used for noble deeds. Hence the usage of wealth or knowledge is dependent on the character of the person in whose hands it is. Money is not bad. The intent with which you use money should be for good. Use spirituality to streamline the focus of your mind towards good.

Sathya Sai Baba