” நல்லதாப் போச்சு … நீ என்ன பண்றே ? !….”


இப்போதெல்லாம், சமையல் வகுப்புகளை
தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி வருகின்றன.
சின்னத்திரையில் காட்டுகிறபடி செய்து பார்த்தால்,
கடைசியாக உருவாகும் பண்டத்தை வாயில் வைக்க
முடியுமா.? என்பதே சந்தேகம்.
இல்லாவிட்டால், முருங்கைக்காய் சாம்பார்,
வெண்டைக்காய் பொறியல் என்று, காலம் காலமாக
வருகிற குழம்பு – பொறியல்களையே ஆங்கில வார்த்தைகள்
மிலி அளவுகள் சொல்லி நிகழ்ச்சியை ஒப்பேற்றிவிடுவார்கள்.
பெரியவா, பூர்வாசிரமத்தில் சமையற்கட்டுப் பக்கம்
போனதில்லை; சந்நியாசம் ஏற்றபிறகு அதற்கு அவசியமும்
இல்லாமல் போய்விட்டது. ஆனால் பெரியவாளுடைய
சமையல் பக்குவம் செய்யும் புதுமை முறைகள்
எப்படியோ அத்துபடியாகியிருந்தது.!.
பண்டரிபுரத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தோம்.
சின்னஞ்சிறு கிராமம். நாலைந்து குடிசைகள் மட்டுமே..
ஒரு பெரிய மரத்தடியில் முகாம்.
பெரியவாளுக்குப் பிட்சை தயார் செய்தபின்,
மிகுதியாக இருந்த சில பொருள்களைக் கொண்டு
ஒருவழியாக எங்கள் மதிய உணவை முடித்துக்கொண்டோம்.
சற்று ஓய்வெடுக்கும் வேளை.
அமர்க்களமாக வந்து இறங்கினார்கள்,இருபது பேர்கள்.
எல்லோரும் சென்னைப் பகுதியிலிருந்து வந்தவர்கள்.
ஸ்ரீமடம் முகாமில், ஸ்ரீசந்த்ரமௌளீஸ்வர பிரசாதமாக
அருமையான உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்
வந்தவர்கள்.
ஆனால் ஸ்ரீமடம் ஒரு பெரிய மரத்தின் அடியில்
அல்லவா முகாமிட்டிருக்கிறது.
சமைப்பதற்குத் தேவையான பாத்திரங்கள்,
சாமான்கள் கிடையாதே.?.
பரமாசாரியாளுக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை!
பசியுடன் வந்திருக்கும் அன்பர்களுக்குச் சாப்பாடு
போட வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோள்.
பிரும்மசாரி ராமகிருஷ்ணன் என்று ஓர் அணுக்கத் தொண்டர்
அவரிடம், “எல்லோருக்கும் சமையல் செய்”
என்று உத்திரவும் இட்டார்கள்.
ராமகிருஷ்ணன் கைகளைப் பிசைந்துகொண்டு பரிதாபமாக
நின்றான்.”அடுத்த ஊர் போனதும் சமைத்துப் போடுகிறேனே.?
என்றான்.
ஏதோ பிரச்சினை இருக்கிறது என்பது பெரியவாளுக்குப்
புரிந்துவிட்டது.
“அரிசி இருக்கோன்னோ.?”
“இருக்கு.கொஞ்சம் பயத்தம்பருப்பும் இருக்கு.”
(மோர்)..”நல்லதாப் போச்சு.! நீ என்ன பண்றே.? அரிசியைக்
…………..களைஞ்சு, அந்த ஜலத்தைத் தனியா ஒரு பாத்திரத்திலே
………….வெச்சுக்கோ.அந்த ஜலத்தில் கொஞ்சம் உப்புப் போட்டு
………….எலுமிச்சம் பழம் பிழிஞ்சு, நாரத்தை இலையைக்
………….கிள்ளிப் போடு. இதுதான் மோர்.
(ரசம்)..”பயத்தம்பருப்பை வேகவைச்சு-நிறைய ஜலம் விட்டு
…………- அந்தக் கொதிநீரிலே எலுமிச்சம்பழ ரசம் (சாறு)
………….சேர்த்துட்டேன்னா, அதுதான் ரசம்.
(கறி)….”வேகவெச்ச பயத்தம்பருப்பு இருக்கே.? உப்பு போடு
…………..ரெண்டு பச்சைமிளகா கிள்ளிப் போடு.
…………..இதுதான் கறி.!”
எல்லாம் அரைமணியில் ரெடி.அதற்குள், எல்லோருக்கும்
இலை, தண்ணீர் சேகரித்து வைத்தோம்.
சாதம்,பயத்தம்பருப்புக் கறி, ரசம், மோர் -என்று
அறுசுவை டின்னர்.!.”
“சாப்பாடு ஏ ஒன்.!” என்றார் ஒருவர்.
“தேவாமிர்தம்.!” என்றார் இன்னொருவர்.
“இவ்வளவு ருசியான சாப்பாட்டைச் சாப்பிட்டதே இல்லை.!”
என்றார். மற்றொருவர்.
தொண்டர்களாகிய நாங்கள் எங்களுக்குள் சிரித்துக்
கொண்டோம். எல்லாம் பெரியவாள் வாக்கின் ருசி
என்பது எங்களுக்குத் தெரிந்ததுதான்.
விருந்தோம்பல் பற்றி, பெரியவாளிடம் பாடம் கற்க வேண்டும்.
அது அட்சய பாத்திரம்.!.

-The inner Light illuminates our minds–  source:::::  input from a friend of mine
  natarajan

 

” சனீச்வரன் சிலை மட்டும் கொஞ்சம் உயரமா இருக்கே … ”

 

 



நகரத்தார்கள் அதிகம் வசிக்கும் ஊர ராயவரம் . அங்கே செல்வந்தர்களும் இருந்தார்கள், நடுத்தர மக்களும் இருந்தார்கள். ஆலமரத்தை போன்று பரந்து விரிந்து கிடந்த குடும்பம். அவ்வளவு வசதி என்று சொல்ல முடியாவிட்டாலும், சுமாராக வாழ்ந்து கொண்டிருந்தனர்.

எதையும் பெரிதாக செய்து முன்னுக்கு வர முடியவில்லையே என்று அவர்கள் கவலைப்பட்டது நியாயமே! தங்கள் நம்பிக்கையை கடவுள் மீது வைத்தனர். ஒரு சிவன் கோயிலை கட்டுவது என்று தீர்மானித்து, அதற்காக நிதி திரட்டி, கோயிலையும் நல்ல விதமாக கட்டி முடித்துவிட்டார்கள்.

கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து, அதற்கான பத்திரிகையை அடித்து எடுத்துக்கொண்டு முதல் அழைப்பை காஞ்சி மகானுக்கு கொடுக்க வேண்டும் என்று வந்தார்கள்.

சகல மரியாதைகளுடன் மகானிடம் அழைப்பிதழை கொடுத்தனர். அதை வாங்கி பார்த்தார் மகான்.

“கும்பாபிஷேகத்தை நடத்தணும்னா, அதுக்குள்ளே நீங்க ஒரு வேலை செஞ்சாகணும்”.

வந்திருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

மகான் அந்த ஊர பக்கம் வந்து வெகு நாட்கள் ஆயிற்று. மேலும் இப்பொது கட்டியுள்ள சிவன் கோயிலை அவர் பார்த்ததில்லை. என்ன வேலை செய்ய சொல்கிறார் ?

“நீங்க நவகிரக சந்நிதியில் எல்லா சிலைகளையும் வெச்சிருக்கீங்க, இல்லையா?

“ஆமா”

“அதுலே இருக்கிற சனீஸ்வர சிலை மட்டும் கொஞ்சம் உயரமா இருக்கு இல்லையா?

அதிர்ச்சியோடு “ஆமாம் ” என்றார்கள்.

“மகான் பார்காமலேயே இதை சொல்கிறாரே?!”, என்று அவர்களுக்கு வியப்பு.

“நவகிரங்கல்ல ஒரு கிரகம் மட்டும் உயரமாக இருக்க கூடாது. அதை அங்கிருந்து எடுத்து வேறு பக்கமா தனியா வெச்சிட்டு, மற்ற கிரகங்கள் உயரத்திலேயே ஒரு சனிபகவானை அங்கே ஸ்தாபிதம் பண்ணிடுங்கோ”, என்றார்.

கோயிலை பார்க்காமல், அதில் உள்ள குறையை மட்டும் சுட்டி காட்டிய மகானை மனதார வணங்கிவிட்டு, அவர் சொன்ன மாறுதலை செய்தனர்.

“சனீஸ்வரன் சிலை தனியாக கிடைப்பது கஷ்டம்”, என்று வேறு சொன்னார்கள் . செய்தால், ஒன்பது கிரகங்கள் தான் செய்ய வேண்டும்.

மகானின் அருளாசி இருக்க, இவர்களுக்கு என்ன குறை?

சனீஸ்வரன் சிலை கிடைத்தது. ஸ்தாபிதமானது. அந்த உயரமான சிலையை தனியே ஒரு இடத்தில வைத்தார்கள்.

பலரும் திருப்தியடையும்படி அங்கே கும்பாபிஷேகம் நடந்தது.

முன்பே குறுப்பிட்ட அந்த குடும்பம் அன்றிலிருந்து நன்றாக செழித்து பெருக தொடங்கியது.  

source:::: http://www.periva.proboards.com

natarajan

” குழந்தைக்கு அனுஷா என்று பெயர் வை … “

மகான்கள் நம் கனவில் வருவதுற்கு மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் . அந்த கனவு நனவாகும் போது கிடைக்கும் மகிழ்சிக்கு அளவே கிடையாது .

இந்த கணவன் மனைவிக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்த நேரத்தில், ஒரு நாள் அந்த மனைவியின் கனவில் பரமாச்சார்யார் வருகிறார். அவர்கள் வீட்டிற்குள் வந்து எல்ல இடத்தையும் பார்த்து விட்டு, பூஜை அறையும் பார்த்து விட்டு வெளியே செல்கிறார்.

அச்சமயம் , அந்த பெண் ஆசார்யரிடம், என் குழந்தையை பார்த்து ஆசீர்வாதம் பண்ணுங்கோ என்கிறார். அதற்கு, மகான், நீ குழந்தையை அங்கே கொண்டு வா என்கிறார் . அத்துடன் கனவு கலைகிறது..

அது முதல் , அந்த பெண்மணிக்கு காஞ்சிபுரம் சென்று ஆசார்யாராய் தரிசனம் செய்ய வேண்டும் என்று தவிப்பு.

தன கணவனுடன், குழந்தையை எடுத்து கொண்டு, காஞ்சிபுரம் சங்கர மடம் செல்கிறார். அங்கு ஆச்சர்யாளை பார்க்க காலையில் பெருங் கூட்டம். . கையிலோ மூன்று மாத குழந்தை. இருப்பினும் அந்த பெண்மணி மனம் தளரவில்லை . எவ்வளவு நேரமானாலும் பெரியவாளை தரிசனம் செய்யாமல் செல்வதில்லை என்ற முடிவோடு குழந்தையுடன் அங்கேயே அமர்கிறார். மாலை வருகிறது .. ஆசார்யாள் தரிசனம் ஆரம்பம்.

அப்பொழுது, ஒரு அணுக்க தொண்டர் ஒருவர், அந்த பெண்மணியிடம், குழந்தையை பெரியவாளிடம் கொடுக்க சொல்கிறார். பெரியவா அந்த மூன்று மாத குழந்தையை தன் மடியில் வைத்து கொண்டு வைத்து கொண்டு, கொழந்தைக்கு பெயர் வைச்சாச்சா என்று கேட்கிறார். இல்லை என்கிறார் அந்த தாய். அப்படி என்றால் இவளுக்கு காமாக்ஷி என்று பெயர் வை என்கிறார். அதற்கு அந்த பெண்மணி, என்னுடைய பெயர் காமாக்ஷி என்கிறார். பிறகு மகான், அப்படினா இவளுக்கு ” அனுஷா ” என்று பெயர் வை என்கிறார் . மகான் திரு வாயால் பெயர் பெற்ற குழந்தை . தன்னிடம் 20 -30 நிமிடங்கள் வைத்து கொண்டு பிறகு குழந்தையை தாயிடம் திரும்ப கொடுக்கிறார்.

மகான் தன மடியில் குழந்தையை வைத்து கொண்டு இருப்பதை பார்த்ததில் அங்கு கூடி இருந்தவர்களுக்கு மிகவும் ஆச்சர்யம். அப்பொழுது , அந்த பெண்மணிக்கு, மகான் கனவில் வந்து, ” கொழந்தையை அங்கே கொண்டு வா ” என்று சொன்னதின் அர்த்தம் விளங்கியது.

மஹா பெரியவரை தரிசனம் செய்வதற்கே ஒரு கொடுப்பினை வேண்டும். அவரிடம் ஆசி பெறுவதற்கு மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

எங்கும் நிறைந்த அந்த பரப்ருமம் மடியில் இருக்க அந்த குழந்தை செய்த தவம் யாரறிவார் !! அந்த பரப்ருமமே அறியும் !!

]பிள்ளையார் , முருகன் இருவருமே தமிழ் தெய்வங்கள்தான் …!!!

தமிழ்நாட்டின் தனிப்பட்ட சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோயில்கள் இருப்பதேயாகும். “கோயில்’ என்று பெயர் வைத்து விமானமும் கூரையும் போட்டுக் கட்டடம் எழுப்ப வேண்டும் என்பது கூட இல்லாமல், அரச மரத்தடிகளிலே கூட வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஸ்வாமி நமது பிள்ளையார்.
தெருவுக்குத் தெரு ஒரு பிள்ளையார் கோயில், நதிக் கரைகளிலெல்லாம் பிள்ளையார், மரத்தடிகளில் பிள்ளையார் என்றிப்படி இந்தத் தமிழ் தேசம் முழுவதும் அவர் வேறெந்த ஸ்வாமிக்கும் இல்லாத அளவுக்கு இடம் கொண்டு அருள்பாலித்து வருகிறாரர். அவரைப் “பிள்ளையார்’ என்றே அன்போது கூறுவது நம் தமிழ்நாட்டுக்கே உரிய வழக்கம். சர்வலோக மாதா பிதாக்களாகிய பார்வதி பரமேசுவரர்களின் ஜேஷ்ட புத்திரர் அவர். “பிள்ளை’ என்றால் அவரைத்தான் முதலில் சொல்ல வேண்டும். வெறும் “பிள்ளையார்’ என்று சொல்லக்கூடாது என்பதால் மரியாதையாகப் “பிள்ளையார்’ என்று சொல்வது தமிழ்நாட்டுச் சிறப்பு.
தெய்வம் என்று ஒன்று இருந்தால் அது லோகம் பூராவுக்குந்தான். ஆனாலும் அதை “நம்முது’ (நம்முடையது) என்று விசேஷமாகப் பிரித்து வைத்த ப்ரியம் காட்டி உறவு கொண்டாடணும் என்று பக்த மனஸுக்குத் தோன்றுகிறதுண்டு.
ஒவ்வொரு தெய்வத்திடம் இப்படி ஒவ்வொரு ஜனÙமுஹத்திற்கு ஒரு அலாதி பந்துத்வம் இருப்பதுண்டு. தமிழ் மக்களுக்கு ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி என்றால் தனியான ஒரு ப்ரியம். முருகன், முருகன் என்று சொல்லி, தமிழ்த் தெய்வம் என்று அவரை இந்த நாட்டுக்கே, பாஷைக்கே உரித்தானவராக முத்ரை குத்தி வைத்துக் கொண்டாடுகிறோம்.
எனக்கென்னவோ அவரை மட்டும் அப்படிச் சொல்லாமல் அவருடைய அண்ணாக்காரரையும் தமிழ்த் தெய்வம் என்று சொல்லணும் என்று (இருக்கிறது)! இளையவரைத் தமிழ்த் தெய்வம் என்று குறிப்பாகச் சொல்ல எவ்வளவு காரணமுண்டோ அவ்வளவு – ஒரு வேளை, அதைவிடக்கூட ஜாஸ்தியாகவே – அண்ணாக்காரரையும் சொல்வதற்கு இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அதனால் – அந்த அண்ணா – தம்பிகளைப் பிரிக்கவேபடாது. சேர்த்துச் சேர்த்தே சொல்லணும், நினைக்கணும், பூஜை பண்ணணும் என்பதாலேயும் – பிள்ளையார், ஸுப்ரஹ்மண்யர் இரண்டு பேரையுமே தமிழ்த் தெய்வங்கள் என்று வைத்தவிட வேண்டுமென்று தோன்றுகிறது. அப்படி ஒரு ரெஸொல்யூஷன் கொண்டு வரப் போகிறேன்! (அது) “பாஸ்’ ஆகணுமே! அதனால் புஷ்டியான காரணம் நிறைய காட்டுகிறேன். யுனானிமஸாகவே பாஸ் பண்ணிவிடுவீர்கள்!

– ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

source:::: KALKI…Tamil Weekly
natarajan

” இந்த பிரசாதம் சுந்துவுக்கு …”

தன்னிடம் அளவு கடந்த பக்தி கொண்டவர்களுக்கு மஹான் தேவையான போது ஆசிகளையும் பிரசாதங்களையும் வழங்குவது வழக்கம்.

நான் சொல்லும் இந்த நிகழ்ச்சி திருச்சி சுந்தரேசனைப் பற்றியது. அவருக்கு மஹானிடம் இருந்த ஈடுபாடு கொஞ்ச நஞ்சமல்ல. எல்லாமே தமக்கு மஹான் தான் என்று மனதார நம்பிய பக்தர்களில் அவரும் ஒருவர். சுந்தரேசன் தனது ரயில்வே பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னை நங்கநல்லூரில் தன் மகன் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு உடல்நிலை முற்றிலும் கெட்டுவிட படுத்த படுக்கையாக இருந்தார். இந்த நிலையில் காஞ்சி மஹானைப் பார்க்கப் போகவில்லையே என்கிற கவலை அவரை ஒரு பக்கம் வாட்டி எடுத்தது.

அந்த சமயம் மஹான் பிறந்த அனுஷ நட்சத்திரத்திற்கு மறுநாள் பெரியவா கிரஹ ராஜகோபாலும், பிரதோஷம் மாமாவின் நெருங்கிய சீடரான ஆடிட்டர் ரவியின் தந்தையும் அனுஷ பூஜை பிரசாதங்களை எடுத்துக் கொண்டு மஹானைப் பார்க்கப் போயிருந்தார்கள். மஹானிடம் பிரசாதத்தை சமர்ப்பித்த பிறகு, அங்கே வரும் பக்தர்களுக்கு வழி விட்டு ராஜகோபால் ஒரு பக்கமாகப் போய் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்துவிட்டார்.

அந்த சமயத்தில் மஹான் அவரை அழைத்து, “இந்த பிரசாதத்தை கொண்டு போய் சுந்துவிடம் கொடு” என்று சொல்வது போன்ற நினைவு அவர் மனதில் ஓடியது.

திடீரென்று விழித்துப் பார்த்த அவர், தன் அருகில் யாரும் இல்லாததைக் கண்டு வியந்தார். தனக்கு மஹான் இட்ட உத்தரவு பிரமையா, மஹான் இட்ட கட்டளையா என்று தடுமாறிக் கொண்டு இருந்தபோது மஹான் அழைப்பதாக மடத்து ஊழியர் ராஜகோபாலை அழைத்தார்.

மஹானின் முன் பவ்யமாக அவர் நின்றபோது, மஹான் அவரிடம் பிரசாதத்தைக் கொடுத்து, “இதைக் கொண்டு போய் அவனண்டே உடனே கொடு” என்று மட்டும் சொன்னார். பொறிதட்டியது போல் ராஜகோபாலுக்கு உடனே அந்த சுந்து யார் என்று புரிந்து விட்டது. வேறு யார்? அவருடைய பெரியப்பாவும் மஹானின் தீவிர பக்தருமான சுந்தரேசன் தான்.

அவன் யார்? என்று சொல்லாமல், பிரசாதத்தைக் கொண்டு போய் கொடு என்றால் தியானத்தில் இருந்தபோது மஹான் சொன்னதும் உண்மையான கட்டளை தான்.
தன் மனதில் தோன்றியதற்கும் இப்போது மஹான் கட்டளை இடுவதற்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரிந்தது.

ராஜகோபாலும் “யாரண்டை” என்கிற கேள்வியை எழுப்பிக் கொண்டு நிற்கவில்லை.

பிரசாதத்தை எடுத்துக் கொண்டு போய், நங்கநல்லூரில் இருந்த தன் பெரியப்பாவிடம் சமர்ப்பித்தார் ராஜகோபால்.

“நான் பார்க்கவரலேயேன்னு நீயே எனக்குப் பிரசாதத்தை அனுப்பினியா மஹானே?” என்று கண்களில் நீர் வழிய கேட்டபின் அந்த முடியாத நிலையிலும் பிரசாதத்தை பயபக்தியோடு உட்கொண்டார். உடல்நிலை மோசமாகத்தான் இருந்தது.

இருந்தாலும் மஹானின் பிரசாதத்தை உட்கொண்ட பின்னர், மேலும் சில தினங்கள் அவர் உயிரோடு இருந்து பிறகு இறைவனடி சேர்ந்தார். மஹான், தன் பக்தர்களை எப்படி எல்லாம் ஆட்கொண்டார் என்பதற்கு இது இன்னொரு உதாரணம்.

 

source::::www.periva.proboards.com

natarajan

Message For the Day…” Every Human Being is an ‘ Amsavatar’…”

Oblivious to the presence of the Divine within, people embark on the quest for God. They behave like a person who goes to borrow milk from their neighbour, forgetting the wish-fulfilling cow (Kamadhenu) in their backyard. Avatars are of two kinds: Amsavatar and Purnavatar. Every human being is an Amsavatar (partial incarnation of the Divine); in the Gita, Lord Krishna says, ‘a part of the Divine Soul has become the individual soul in the world of living beings (Mamaivaamso jeevaloke jeevabhutah-sanaatanah)’. Many partial incarnations get caught up in Maya (worldly illusion), develop egoism and possessiveness, and lead worldly lives. Purnaavatar (full incarnation of the Divine) may behave, according to the circumstances, as if they were subject to Maya, but they are free from Maya at all times. They subdue and transcend Maya, and manifest their full Divinity to the world throughout their lives.

 

Sathya Sai Baba

Sri Mahapriava Sri Pada Darsnam …On Anusham Day …

 

Anusham Special – 18 APRIL 2014…

Here is a beautiful compilation of Guru Paduka Stotram, interwoven with Periva’s rare photos – carefully chosen sets where you can get to have his Padam/Paduka darshan in almost every photo.

 

 

 

source::::www.periva.proboards.com

natarajan