” சக்கரையம்மா என்னும் பெண் சித்தர் ” …

நமது சுதந்திரப் போராட்ட காலத்தில், சக்கரையம்மா என்ற பெண்சித்தர், வானில் பறவைபோல பறப்பதைப் பலரும் பார்த்து வியந்திருக்கிறார்கள். தமிழறிஞரான திரு.வி.க. தாம் எழுதிய “உள்ளொளி’ என்ற புத்தகத்தில் இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.
“சென்னையில் கோமளீஸ்வரன் பேட்டையில் ஒரு மாது இருந்தார்கள். அவர் காலஞ்சென்ற டாக்டர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும். அவ்வம்மையார் பறவையைப் போல் வானத்தில் பறப்பார். ஒருமுறை நான் வசித்த கல்லூரியின் (ராயப்பேட்டை வெஸ்லி கல்லூரி விடுதி) மாடியில் அவர் பறந்துவந்து நின்றார். மானுடம் பறக்கிறது என்றால் விந்தையல்லவா?’
விண்ணில் பறக்கும் சக்தியுடன் திகழ்ந்தாரே, யார் இந்த சக்கரையம்மா…?
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த தேவிகாபுரம் என்ற சிற்றூரில் 1854 இல் பிறந்தாள் ஆனந்தாம்பா என்ற தெய்வீக பெண்.
அந்த ஊரில் புகழ்பெற்ற பெரியநாயகி ஆலயம் உண்டு. அந்த ஆலயத்தின் மேற்கு மூலையில், தேவியின் மூல விக்கிரகத்தை தரிசித்தவாறு, மணிக்கணக்கில் தியானத்தில் ஆழ்ந்திருப்பாள் சிறுமி ஆனந்தாம்பா.
ஆனந்தாம்பாவாகப் பிறந்திருப்பது யார்? அவள் இந்த உலகத்தப் பெண்ணா, இல்லை வானுலகத்துக்கு உரிமையானவளா? தேவியின் வடிவம் தானா அவள்? அந்த மூல விக்கிரகத்தில் அவள் எதை பார்க்கிறாள்? தன்னைத்தானே தரிசித்துக் கொள்கிறாளா? யார் அறிவார்?
அவளது வீடே கோயிலின் அருகில் தான் இருந்தது! அவள் தந்தை சேஷ குருக்கள் கோயில் அர்ச்சகர்களில் ஒருவர். குருக்களின் புதல்வி என்பதால் ஆலயத்திற்கு அவளால் எப்போது வேண்டுமானாலும் போக முடிந்தது. தியானத்தில் மணிக்கணக்கில் தோய்ந்திருக்கவும் முடிந்தது.
அவள் வயதுடைய சிறுமிகள் பல்லாங்குழியிலும், பாண்டியிலும் பொழுது போக்கிய காலங்களில் அவள் மட்டும் தன் நேரம் முழுவதையும் தியானத்திற்கே அர்ப்பணித்தாள்.
அக்கால வழக்கப்படி, அவளுக்கு ஒன்பது வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. கணவன் சாம்பசிவம் 24 வயதுப் பையன். சென்னை கோமளீஸ்வரன் பேட்டையில் சட்டநாத மடம் என்றொரு மடம் இருந்தது. (கோமளீஸ்வரன் பேட்டை இப்போது புதுப்பேட்டை எனப்படுகிறது). சட்டநாத மடத்தின் உரிமையாளன் அவன்தான். ஏற்கெனவே திருமணமாகி மனைவியை இழந்த அவனுக்கு இரண்டாம் தாரமாய் வாழ்க்கை பட்டாள் ஆனந்தாம்பா.
ஆனந்தாம்பாவை அவன் ஒரு வேலைக்காரிபோல் நடத்தினான்.
சட்டநாத மடத்தின் அருகில் கோமளீஸ்வரர் கோயில் என்ற சிவன் கோயில் இருந்தது. தற்போதும் கோயில் இருக்கிறது. வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் அங்கே போய் சிவன் சன்னதியில் அமர்ந்துகொள்வாள் ஆனந்தாம்பா. பிறந்த வீட்டில் அவளுக்கு அடைக்கலம் தந்தவள் தேவி கோயில் பராசக்தி என்றால் புகுந்த வீட்டில் அடைக்கலம் தந்தவர் சிவபெருமான்!
பெண்பித்துப் பிடித்து பல்வேறிடங்களில் அலைந்த சட்டநாதன் பெருவியாதி பிடிக்கப்பட்டு முப்பத்தைந்தே வயதில் காலமானான். ஆனந்தாம்பாவுக்கு அப்போது வயது இருபது.
அக்கால வழக்கப்படி, அவளுக்கு முடி மழித்து முக்காடு போட்டார்கள். அழகுக் கோலம் அலங்கோலமாக மாற்றப்பட்டதை ஆனந்தாம்பா பொருட்படுத்தவில்லை. அவளுக்கு தன் உடல்பற்றிய பிரக்ஞையே இருந்ததில்லை. கணவன் காலமானது அவளைப் பொறுத்தவரை அவளின் ஆன்மிக வாழ்வுக்கு ஒரு வாய்ப்பே ஆயிற்று.
தேவிகாபுரத்தில் சிறிதுகாலம் இருந்த அவள், அதன்பின் திருவண்ணாமலை அருகே போளூரில் அண்ணன் வீட்டுக்கு வந்துசேர்ந்தாள். ஆனந்தாம்பா சக்கரையம்மாவாக மாறிய பரிணாம வளர்ச்சி நடந்தது அங்குதான். எண்ணற்ற ஆன்மிக அனுபவங்களை அவளுக்கு வாரி வழஙகியது அவ்வூர்.
அங்கே அருகிலிருந்த நட்சத்திரக் குன்றில் நட்சத்திர குணாம்பா என்ற உயர்நிலைத் துறவினி ஒருவர் வாழ்ந்து வந்தார். நட்சத்திர குணாம்பாவைச் சந்தித்தபின் ஆனந்தாம்பாவின் வாழ்க்கையே மாறிப் போயிற்று. அவளை சிஷ்யையாக ஏற்றார். இறைச்சக்தியைத் தேவி வடிவில் மந்திர ரூபமாக வழிபடும் ஸ்ரீ சக்ர உபாசனையைக் கற்றுத் தந்தார்.
அந்த உபாசனையை மேற்கொண்டதால் தான் பின்னால் ஆனந்தாம்பா ஸ்ரீ சக்ர அம்மா என அழைக்கப்பட்டார். அதுவே பொது மக்களின் வாய்மொழியில் மருவி சக்கரையம்மா ஆயிற்று.
“நான் மீண்டும் சென்னைக்கு, என் புகுந்த வீட்டிற்குச் செல்ல வேண்டுமே? என குருவான உங்களை இனி அடிக்கடிச் சந்திப்பது எவ்விதம்?’ என்று சக்கரையம்மா உருகிக் கரைந்தபோது குணாம்பா கனிவோடு அவரைப் பார்த்தார்.
“அதுபற்றிக் கவலைப்படாதே’ என்று லகிமா என்ற ஓர் ஆன்மிக ஸித்தி அவருக்கு ஏற்படுமாறு செய்தார். லகிமா என்பது உடலை மிக லேசாக மாற்றிக் கொள்வது. அந்த ஸித்தி அடைந்தவர்களால் விண்ணில் பறக்க முடியும். “இனி எப்போது வேண்டுமானாலும் நீ பறந்துவந்து என்னைப் பார்க்கலாம்’ என அருள்புரிந்தார் குணாம்பா.
மீண்டும் சென்னை கோமளீஸ்வரன் பேட்டையில் இருந்த தன் புகுந்த வீட்டுக்கு வந்தாள் ஆனந்தாம்பா. மொட்டை மாடி திண்ணையும் அதன் அருகே இருந்த சிறிய அறையும் அவளின் வாசஸ்தங்களாயின.
ஒருநாள் ஸ்ரீசக்ர உபாசனையில் அவள் பேரொளியால் சூழப்பட்டாள். தானே பரம் பொருளாய் ஒளிவீசுவதுபோல் தோன்றியது அவளுக்கு. அளவற்ற ஆனந்தத்தில் கடகடவென்று சிரிக்கலானாள்.
அவளது ஆன்மிக வளர்ச்சியை அறியாத புகுந்த வீட்டார், கணவன் இறந்ததால் அவளுக்குப் பித்துப் பிடித்துவிட்டதென்று கருதினர்.
அக்காலத்தில் டாக்டர் எம்.சி. நஞ்சுண்டராவ் என்ற புகழ்பெற்ற ஒரு மருத்துவர் இருந்தார். ஏழைகளுக்கு இலவசமாகவே மருத்துவம் பார்த்தவர். உன்னதமான ஆன்மிகவாதி அவர்.
ஒரு சமயம் ஆனந்தாம்பாவின் சகோதரருக்கு உடல்நலம் குன்றியது. மருத்துவம் பார்க்க டாக்டர் நஞ்சுண்டராவை அழைத்தார்கள்.
அவர் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த போது மொட்டை மாடியிலிருந்து வித்தியாசமான அந்தச் சிரிப்பின் முழக்கம் கடகடவெனக் கேட்டது. ஆன்மிகவாதியான நஞ்சுண்டராவ் அந்தச் சிரிப்பால் கவரப்பட்டார்.
யார் உரத்துச் சிரிக்கிறார்கள் என்று விசாரித்தார். கணவனை இழந்ததால் மனநிலை பாதிக்கப்பட்ட ஆனந்தாம்பா என்ற பைத்தியத்தின் சிரிப்பு அது என்று அலட்சியமாகக் கூறினார்கள் உறவினர்கள்.
ஆனால், அந்த சிரிப்பு அவரை அழைத்ததுபோல் தோன்றியது. மாடியேறிச் சென்றார். முதுகுப் புறத்தைக் காட்டிக் கொண்ட அமர்ந்திருந்த ஆனந்தாம்பா “மகனே வா!’ என அழைத்தாள்.
தூக்கிவாரிப்போட்டது நஞ்சுண்டராவுக்கு! மனிதர்களுக்கு முதுகில் கண் உண்டா என்ன! மேற்கொண்டு எதுவும் பேசாத ஆனந்தாம்பாளிடம், தானும் எதுவும் பேசாமல் விழுந்த வணங்கிவிட்டு வந்துவிட்டார்.
பின்னொருநாள் கோமளீஸ்வரன் கோயிலுக்குச் சென்றார். ஆலய வாயிலில் அமரந்து கடகடவென்று சிரித்துக் கொண்டிருந்த ஆனந்தாம்பாவை மறுபடி தரிசித்தார். ஒளிவீசும் கண்கள். ஆனந்தாம்பாவின் மேனியிலிருந்து ஓர் அமைதி கலந்த பிரகாசம் பொங்கி வழிவதுபோல் தோன்றியது. நிச்சயம் இவர் பித்துப் பிடித்த பெண்மணி அல்ல என்பதை அவரது அவரது மருத்துவ மனம் உணர்ந்தது.
“ஏன் சிரிக்கிறீர்கள் தாயே?’ என்று பக்தி கலந்த பணிவோடு விசாரித்தார். ஆனந்தாம்பா சிரிப்பை நிறுத்திவிட்டு நஞ்சுண்டராவைப் பார்த்தார்.
“மகனே மனித உடலின் உள்ளே உறைந்திருக்கும் ஆன்மா எப்போதும் ஆனந்தம் நிறைந்தது. இன்ப துன்பங்கள் உடலுக்குத் தானே அன்றி ஆன்மாவுக்கில்லை. நீ உடல் அல்ல. நீ உடலில் உள்ளாய். அவ்வளவுதான். உனது தற்காலிகக் கூடாரமான இந்த உடலைப் பாராமல், கூடாரத்தின் உள்ளே நிரந்தர வஸ்துவாய் வசிக்கும் உன் ஆன்மாவைப் பார்! அப்படிப் பார்க்கத் தொடங்கினால் நிலையான பேரின்பத்தை நீ அடைய முடியும்.’
இந்த வார்த்தைகள் நஞ்சுண்டராவின் உள்ளத்தில் மின்னல் போல் பாய்ந்தன. சொன்ன வார்த்தைகளில் உள்ள பேருண்மை, சொன்னவர் அந்த வார்த்தைகளின் கருத்தை வாழ்வில் அனுசரித்து வாழ்கிறார் என்பதால் அந்த வார்த்தைகளுக்கு ஏற்பட்டிருந்த மந்திர சக்தி.
தன் குரு அவரே என உணர்ந்து ஆனந்தாம்பா என்கிற சக்கரையம்மாவைப் பணிந்தார் நஞ்சுண்டராவ்.
பின்னர் சக்கரையம்மா பற்றி வெளியுலகம் அறிய நஞ்சுண்டராவே காரணமானார். அடிக்கடி சக்கரையம்மாவைச் சந்தித்து உரையாடிப் பயன்பெற்று அவர் சக்கரையம்மாவின் சீடராகவே ஆனார். தம் குருவைப் பல திருத்தலங்களுக்கு நஞ்சுண்ட ராவ் அழைத்துச் சென்றார். திருவண்ணாமலையில் வாழ்ந்த சேஷாத்ரி பரப்பிரும்மத்தையும் ஸ்ரீரமணரையும் சக்கரையம்மா சந்தித்தார். தன்னை ஆசிர்வதிக்குமாறு சக்கரையம்மா ரமணரிடம் கேட்டபோது ரமணர் மலர்ச்சியோடு அவர் ஏற்கெனவே கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர் என்று குறிப்பிட்டார்.
1901இல் சக்கரையம்மா திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்திற்குச் செல்ல விரும்பினார். நஞ்சுண்டராவ் அழைத்துச் சென்றார். அப்போது நஞ்சுண்டராவைத் தவிர இன்னும் சிலரும் அவரது சிஷ்யர்களாகியிருந்தார்கள்.
திரும்பி வரும்போது சக்கரையம்மா அந்தப் பகுதியில் அமைந்த ஓர் இடத்தை நஞ்சுண்டராவிடம் குறிப்பிட்டுக் காட்டினார். அந்த நிலத்தை வாங்கி விடுமாறும் தன் உடலை அங்கேயே அடக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் சொன்னபோது வருத்தத்துடன் தலையாட்டினார் நஞ்சுண்டராவ். தம் குரு தம்மை விட்டு சென்றுவிடுவார் என்பதை அந்த சிஷ்யரால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. “வருந்தாதே மகனே! நான் சமாதியில் என்றென்றும் இருந்து அனைவருக்கும் அரும்புரிந்து வருவேன். என் சமாதி இருக்குமிடம் அமைதியின் கோயிலாகத் திகழும்!’ என்று சொல்லிச் சீடரை ஆறுதல் படுத்தினார் குரு.
சொன்னபடியே 1901 பிப்ரவரி 28 ஆம் நாள் சக்கரையம்மா உடல் சட்டையை உதறினார். அவரது பொன்னுடல் அவர் குறிப்பிட்ட இடத்திலேயே சமாதி செய்விக்கப்பட்டது. நஞ்சுண்டராவ், சக்கரையம்மா முன்னர் சொன்ன போதே அந்த நிலத்தை வாங்கியிருந்தாரே?
இப்போதும் சென்னையில் திருவான்மியூரில் உறவுகளைத் துறந்து துறவியான பெண் சித்தர் சக்கரையம்மா, தன் சமாதியில் நிரந்தரமாய் வாழ்ந்துவருகிறார். இறந்தது அவர் குடியிருந்த உடல்தானே? அவர் ஆன்மா தன்னை நாடிவரும் அடியவர்களுக்கெல்லாம் அருளை வாரி வழங்கி வருகிறது.

– திருப்பூர் கிருஷ்ணன்  in Kumudam Bhakti  

Recently a friend of mine took me and my wife Bhavani to the  Samadhi  Mandir of Sakkarai Amma in Thiruvanmiyur. Such a wonderful Koil  with a serene environment that you will like to visit the place  again and again ….One has to see it to believe it ..

natarajan

 

வில்லேஜ் விஞ்ஞானி ஜெயசீலன் …

பிறந்ததுமே இறந்த போன தாய்; பிறந்தது முதலே இதய நோயால் அவதிப்பட்ட ஏதோ பெயரளவில் விவசாயத்தை கவனித்துக் கொள்ளும் ஒரு தந்தை; கரை சேர்க்க வேண்டிய பொறுப்பில் மூன்று அக்காக்கள்; இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு சாதாரண அரசுப் பள்ளியில் தன் படிப்பை ஆரம்பித்து இன்று இங்கிலாந்து பாராளுமன்றத்தையே தன் ஆராய்ச்சிக் கட்டுரையால் அதிரவைத்திருக்கிறார் திருச்சி அருகே உள்ள தத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயசீலன்.
பன்னிரண்டாவது முடித்து திருச்சி பாரதிதாசன் ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங்கில் பி.டெக். படிக்கச் சேர்ந்த போது பார்மசூட்டிக்கல் இன்ஜினீயரில் படிப்பை எடுத்தார்.
பொதுவாக நான்காம் ஆண்டில்தான் புராஜெக்ட் செய்வது வழக்கம். ஆனால் இவரது ஆர்வத்தைக் கண்ட பேராசிரியர் புரட்சிக்கொடி, முதலாம் ஆண்டில் இருந்தே இவருக்க புராஜெக்ட் செய்ய உதவினார். “கடல்பாசியிலிருந்து கேன்சர் எதிர்ப்பு மருந்துகள் தயாரித்தல்’ என்பதுதான் இவரது புராஜெக்ட். இவரது ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அரசே பதினாறு லட்ச ரூபாயை ஒதுக்கியுள்ளது.
பிடெக் முடித்ததும் லண்டனில் உள்ள லப்ரோ யுனிவர்சிட்டியில் மாஸ்டர்ஸ் டிகிரி படிக்கச் சேர்ந்தார் ஜெயசீலன். அங்கே பாதி ஃபீஸ் ஸ்காலர்ஷிப் மூலமாகவும் மீதிதான் பார்த்த பார்ட் டைம் வேலையின் மூலமாகவும் என தனது படிப்புத் தேவைகளை நிறைவு செய்து கொண்டார்.
“நான் படித்த பல்கலைக்கழக வளாகத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் படித்தனர். அங்கே மாதத்துக்கு சுமார் 56டன் உணவு வீணானது. அதனைக் கொண்டு போய் ஊருக்கு வெளியே உள்ள இடங்களில் குழி தோண்டிப் புதைக்கணும். இதற்கு ஆகும் செலவும் பல்கலைக்கழக நிர்வாகத்தை அழுத்தியது.
படிப்பு தொடர்பான ப்ராஜெக்ட்டாக அல்லாமல் நானே முயற்சி எடுத்து அதனை பல்கலைக்கழக வளாகத்திலேயே ஒர இடத்தில் சேமித்து அதில் வேகமாக மக்கச் செய்யும் பாக்டீரியாக்களை சேர்த்து அதை மக்கச் செய்து அதிலிருந்து மீத்தேன் வாயு தயாரித்து பல்கலைக்கழகத்தில் பயன்படுத்தப்படும் பாய்லர்களைச் சூடாக்கவும் மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுத்த திட்ட ஒன்றை வகுத்தேன். இதற்க என் படிப்பு தொடர்பான ப்ராஜெக்டுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அந்த ப்ராஜெக்டுக்கு அந்த வருடத்துக்கான பெஸ்ட் இனிஷியேடிவ் அவார்ட் கிடைத்தது.
சீனா, அமெரிக்கா, ஸ்பெயின், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பல அறிவியல் மேடைகளில் எனது முப்பது ஆய்வுக்கட்டுரைகள் அரங்கேறியிருக்கின்றன. இப்போது முனைவர் பட்ட ஆராய்ச்சிக்காக இல்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்துவருகிறேன். விபத்துக்களில் சிக்கி உடல்பகுதிகள் குறிப்பாக எலும்புகள் சேதமடையும்போது அதற்கு மாற்றாக வைக்கப்படும் ப்ளேட்டுகள் தனிமனிதத் தேவைகளின் அடிப்படையில் தயாரிக்கப்படுவதில்லை. (ஸ்டாண்டர்ட் சைஸ்களில் உள்ள ப்ளேட்டுகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன) அதனை ஆளுக்கேற்ற மாதிரி 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் தயாரிப்பதுடன் அது மனித உடலில் அலர்ஜி ஏற்படாவண்ணம் நானோ டெக்னாலஜியைப் பயன்படுத்தி அதன் மீது பூச்சுப் பூசுவது என்பதே எனது இப்போதைய ஆராய்ச்சி. இதே போல் இருதயத்தில் பொருத்தப்படும் ஸ்டண்ட்டிலும் மனித உடலுக்குப் பொருந்தச் செய்யும் வகையில் கோட்டிங் கொடுப்பது என்பம் எனது ஆராய்ச்சியில் உள்ள விஷயங்கள்தான். இதற்க இங்கிலாந்து அரசே நிதியுதவி செய்து வருகிறது’ என்று பேசிக் கொண்டே போகிறார் ஜெயசீலன்.
இவர் செய்து வரும் ஆராய்ச்சி குறித்து இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பேச அழைக்கப்பட்டதை பெருமையாக கருதுகிறார் இவர். அப்படி வாய்ப்புக் கிடைத்த முதல் இந்தியரும் இவர் என்பதும் தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் விஷயம்.
“எனது நண்பர்களுடன் சேர்ந்து “லேர்ன்’ (எல்.இ.ஏ.ஆர்.என்) என்ற ட்ரஸ்ட்டை தத்தமங்கலத்தில் நிறுவி அதன்மூலம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவுகிறோம். அவர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டவேண்டும் என்பதும் என் ஆசை’ என்கிறார் இந்த இளம் விஞ்ஞானி.

source:::: kumudam …tamil weekly

natarajan

படித்ததில் ரசித்தது …” ஒரு பிஸ்கட் நிஜாமுக்கு” !!!

திவான் ஜர்மன் தாஸ் என்பவர், இந்திய சமஸ்தான மன்னர்கள் பலருடன் நெருங்கிப் பழகியவர். தன் அனுபவங்களை, அவர், ‘மகாராஜா’ என்ற, ஆங்கில நுாலில் எழுதியுள்ளார். அதில், அவர் கூறியுள்ள சில சம்பவங்கள் :


ஐதராபாத் நிஜாமின், கருமித்தனம் மிகப் பிரசித்தம். அவர், யாரையாவது, தேனீருக்கு அழைத்தால், தேனீருடன், இரண்டு பிஸ்கட்டுகள் வரும். ஒரு பிஸ்கட் நிஜாமுக்கு; மற்றொன்று விருந்தாளிக்கு.
நிஜாமிடம், 282 காரட் வைரக்கல் ஒன்று இருந்தது. அதை, எப்போதும் மேஜை மீது, வைத்திருப்பார். அவரது உதவியாளராக இருந்த, சுல்தான் அகமது மீது, நிஜாமுக்கு ரொம்ப பிரியம். அவருக்கு ஏதேனும் வெகுமானம் செய்ய வேண்டுமென்று நினைத்தார். அதனால், அகமதை கூப்பிட்டு, கையை நீட்டச் சொல்லி, வைரக் கல்லை கொடுத்து, ‘சில நிமிடங்கள் வைத்துக் கொண்டிரு…’ என்று சொல்லி, பின், திரும்ப வாங்கிக் கொண்டார்.
தாட்டியா என்ற சமஸ்தானம், உயர்ரக வெண் ணெய்க்கு பெயர் பெற்றது. தமக்கு, வெண்ணெய் அனுப்பும்படி, அந்த சமஸ்தானாதிபதி யிடம் நிஜாம் கேட்கவே, அவரும், பன்னிரண்டு டின் வெண்ணெய் அனுப்பினார். ஸ்டோர் ரூமில் வைக்கும்படி கூறி, யாரும், அதை தொடக் கூடாது என்றும், கட்டளையிட்டார் நிஜாம்.
இரண்டு வருடம், அந்த டின்கள் அப்படியே கிடந்தன. வெண்ணெயிலிருந்து, சகிக்க முடியாத துர்நாற்றம் வீசவே, பயத்தோடு நிஜாமிடம் போய் கூறினர். ‘அப்படியானால், கடைத் தெருவுக்கு கொண்டு போய் விற்று விடுங்கள்…’ என்றார் நிஜாம்.
யாரும் வாங்கிக் கொள்ளவில்லை. ரெட்டி என்ற போலீஸ் அதிகாரியை கூப்பிட்டனுப்பிய நிஜாம், ‘இந்துக்களின் கோவில்களில், விளக்கேற்றுவதற்கு உபயோகப்படும். அவர்களிடம் விற்று விடு…’ என்றார்.
கோவில்களிலும் வாங்கவில்லை. அதை, நிஜாமிடம் சொல்ல அஞ்சி, வெண்ணெயை, சாக்கடையில் வீசி விட்டு, வெண்ணெய் விற்ற பணம் என்று, 201 ரூபாயை, நிஜாமிடம் தந்தார். மகா சந்தோஷத்துடன், பணத்தை பெற்றுக் கொண்டார் நிஜாம்.
திருமணத்துக்கு அழைப்பு வந்தால், தட்டாமல் செல்வார் நிஜாம். சீர் வரிசைகளில், விலை உயர்ந்ததாக என்ன இருக்கிறதோ, அதை, தனக்கென்று எடுத்துக் கொள்வார். நிஜாம், அந்த திருமணத்திற்கு வருகை தந்தது, அவர்களுக்கு, பெரிய கவுரவம் என்றும், அதற்கு கட்டணமாகத் தான் அந்தப் பொருள் என்றும் கூறுவார். இப்படி, ஏராளமான அணி வகைகள் சேர்ந்தன, நிஜாமின் கஜானாவில்!
– ‘சமஸ்தானத்து மன்னர்’ நூலிலிருந்து…  
தாமஸ் ஆல்வா எடிசனிடம், அவர் மனைவி, ‘நீங்கள் ஓய்வு இல்லாமல், வேலை பார்த்து விட்டீர்கள். எங்கேயாவது போய், கொஞ்ச நாள் களைப்பாற வேண்டும்…’ என்றாள்.
‘எங்கே போவது?’
‘எந்த இடத்திலிருந்தால், இந்த உலகத்தையே மறந்து விட முடியுமோ… அங்கே போகலாம்…’
‘சரி. நாளை போகலாம்…’ என்றார் எடிசன்.
மறுநாள் காலை, அவர் தன் ஆய்வுக் கூடத்திற்கே திரும்பி விட்டார்.

source::::  Dinamalar … Varamalar…

natarajan

நூறு வயது ‘ தபால் தாத்தா ‘ …!!!

ஆர்.பாலசுப்பிரமணியம்

ஆர்.பாலசுப்பிரமணியம்

தனது 100-வது வயதிலும், பார்வைக் குறைபாடு இல்லாமல் நாளிதழை, முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை படிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் கோவையைச் சேர்ந்த தபால் தாத்தா. இந்த வயதிலும், அசாதாரண விஷயங்களையும் சாதாரணமாகச் செய்து வருகிறார்.

கோவை கவுண்டம்பாளையம் பேங்கோதெருவைச் சேர்ந்தவர் ஆர்.பாலசுப்ரமணியம். தபால் அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றதால், தபால் தாத்தா என்றுதான் செல்லமாக அழைக்கப்படுகிறார்.

துருதுரு பார்வை

கடந்த 1914-ஆம் ஆண்டு, நவம்பர் 29-ஆம் தேதி பிறந்த இவர் இன்று 100-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். 100-வயது என்றால், படுத்தப் படுக்கை, வீட்டில் உள்ளவர்களை எடுத்ததெற்கெல்லாம் உதவிக்கு அழைத்து அன்பு தொல்லை கொடுப்பார் என நினைக்க வேண்டாம். வீட்டில் உள்ளவர்களைச் சிரமப்படுத்தாமல், உற்சாகத்தோடு இளைஞரைப் போல வீட்டில் வலம் வருகிறார்.

இந்து நாளிதழ் மோகம்

சென்னை அண்ணா சாலையில் உள்ள தபால் நிலையத்தில், தபால்காரராகச் சேர்ந்து கோவை ஆர்.எஸ்.புரம் தபால் நிலையத்தில் தபால் அலுவலராக, கடந்த 1973-ம் ஆண்டு 38 ஆண்டு தபால் பணி வாழ்க்கைக்கு விடைகொடுத்தவர். 10-ஆம் வயது முடிவதற்குள் கண்ணாடியுடன் வலம் வரும் சிறுவர்கள் மத்தியில், 100 வயதிலும் தபால் தாத்தா, கண்ணாடி அணியவில்லை. ஆனால், தினமும் வீட்டிற்கு வரும், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழை முதல் பக்கத்தில் இருந்து, கடைசி பக்கம் வரை உள்ள செய்திகளை முழுவதுமாகப் படிப்பதுதான் இவரது தினசரிப் பொழுதுபோக்கு..

கவலை இல்லாத மனிதர்

100 வயதில் இளமை ததும்பும் ரகசியத்தை, அவரது மூத்த மகன் ஜனார்த்தனனிடம் கேட்டபோது, ’’எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார். சாப்பாட்டு விஷயத்தில் அனைத்தையும் விரும்பி சாப்பிடுவார். தற்போதுகூட, வாரம் இருமுறை சிக்கன் சாப்பிடுகிறார். முட்டை, இனிப்பு என்றால் இப்போது கூடக் கொள்ளை பிரியம். நேரத்துக்குச் சாப்பிட்டு, நேரத்துக்குத் தூங்குவார். பிரத்தியேகமாக உடற்பயிற்சி எதுவும் செய்வதில்லை. 85 வயது வரையிலும் எங்குச் சென்றாலும் சைக்கிளில்தான் செல்வார்’’ என்றார்.

தபால் தாத்தாவிற்கு 3 மகன்கள். கொள்ளுப் பேரன் பேத்தி என்று சுற்றிலும் பலர் இருந்தாலும் அவர் விரும்புவது தனிமையைத்தான். முதுமையின் நண்பன் தனிமை என்பதை உணர்த்தும் விதமாக, நாம் கிளம்புவதற்கு விடை கொடுத்துவிட்டு, எதையோ சிந்திக்கத் தொடங்கிவிட்டார். அவருக்கு நூறாவது பிறந்த நாள் வாழ்த்து கூறிவிட்டுப் புறப்பட்டோம்.

source:::::The Hindu…Tamil

natarajan

படித்ததில் பிடித்தது …”நான் சும்மா பேசி விட்டு போகிறேன் ” !!!

இலக்கிய கூட்டமொன்றிற்கு தலைமை தாங்கும்படி, கி.வா.ஜ.,வை அழைத்தார், ஒரு அன்பர்.
‘நான் சும்மா வந்து பேசிவிட்டுப் போகிறேன்…’
‘ஏன் அப்படி சொல்கிறீர்கள்?’
‘தலைமை தாங்குவதும், கேட் கீப்பர் வேலையும் ஒன்று தான்…’
‘என்ன அப்படி சொல்லி விட்டீர்கள்!’
‘வாயிற்காவலன் எல்லாருக்கும் முன் வந்து, வாயிலை திறந்து, உட்கார்ந்து கொள்ள வேண்டும். எல்லாரும் வந்து, செய்ய வேண்டியதை யெல்லாம் செய்யும் வரையில், பொறுமையாக காத்துக் கொண்டிருக்க வேண்டும். அனைவரும் புறப்பட்டு போன பின், வாயிலை மூட வேண்டும். தலைவன் வேலையும் இது தான். எல்லாருக்கும் முன்பாக, முதன் முதலில் வாயைத் திறந்து பேச வேண்டும். பேசுகிறவர்கள் ஒவ்வொருவராக வருவர்; பேசுவர். எல்லாவற்றையும், பொறுமையாக கேட்க வேண்டும். எல்லோரும் பேசிய பின், சபையினரும் எழுந்து விடுவர். அப்போது கடைசியாக வாய் திறந்து, பின்னுரை பேச வேண்டும்…’ என்றார்.

 

அண்ணாதுரை பார்லிமென்டின் மேல்சபை உறுப்பினராக இருந்தபோது, தமிழகத்தில் விலைவாசி உயர்வை எதிர்த்து நடந்த போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தி, கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அண்ணாதுரை கைதான வழக்கு, நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. வழக்கில், அண்ணாதுரை, தன் சார்பாக, தானே வாதாடினார். அண்ணாதுரையின் வாதத்தைக் கேட்க, நீதிமன்ற வளாகத்தில், ஆயிரக்கணக்கானோர் கூடி விட்டனர். நீதிபதியிடம் பல மேற்கோள்களையும், இதுபோன்ற முந்தைய போராட்டங்களில் அளிக்கப்பட்ட தீர்ப்புகளையும், சுட்டிக் காட்டினார்.
‘அண்ணாதுரை மேற்கோள் காட்டிய வழக்குகள் பற்றிய தீர்ப்புகள் அடங்கிய நூல் வேண்டும்…’ என்று, நீதிபதியே கேட்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
ஆனாலும், அண்ணாதுரை விடுதலை செய்யப்படவில்லை. அவருக்கு, பத்து வாரச் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


ஒரு கல்யாண வரவேற்பு நிகழ்ச்சியின் போது, கே.பி.சுந்தராம்பாளின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மேடையை சுற்றியிருந்தவர்கள், பூம்புகார் படப் பாடல்களை பாட வேண்டும் என்று, கூக்குரலிட்ட வண்ணமும், எழுதிக் கொடுத்த வண்ணமும் இருந்தனர்.
உடனே, கே.பி.எஸ்., ‘நீங்கள் பூம்புகார் கதையை அறிந்திருப்பீர்கள். கோவலனுடைய முடிவும் உங்களுக்கு தெரியும். ஆதலால், இக்குழந்தைகளை (மணமக்களை) ஆசிர்வதிக்கிற இந்நேரத்தில், அம்மாதிரியான பாடல்களை பாடக் கூடாது என்பது, என் எண்ணம். இவர்கள், நிறையக் குழந்தை குட்டிகளை பெற்று, சுகமாக வாழ வேண்டும் என்று, முருகனை வேண்டிக் கொள்கிறேன். ஆகவே, இன்று மட்டும் என்னை விட்டு விடுங்கள்…’ என்று சொல்லி, ‘பழம் நீயப்பா…’ என்று, முருகனின் பாடல்களை பாட ஆரம்பித்தார். சபையில் ஏற்பட்ட கரவொலி ஆரவாரம் அடங்க வெகு நேரமாகியது.

 

தபால் ஆபீசுக்கு ஒரு கடிதம்… ‘கடவுள், சொர்க்கம்’ என்று, விலாசமிட்டு வந்திருந்தது. அனுப்பியவரின் முகவரி இல்லை. கடவுளுக்கு எப்படிக் கொண்டு போய் சேர்ப்பது… அனுப்பியவருக்கே எப்படி திருப்பி அனுப்புவது… கடிதத்தின் உள்ளே, அனுப்பியவரின் முகவரி இருக்கிறதா என்று பார்க்க. கடிதத்தை உடைத்தனர் தபால் அலுவலக ஊழியர்கள். உள்ளே முகவரியும் இருந்தது. அதை எழுதியவர், தன் கஷ்டத்தை எல்லாம் எழுதி, தனக்கு, 75 ரூபாய் பணம் அனுப்பும்படி, கடவுளிடம், உதவி கேட்டிருந்தார். படித்த, தபால் ஊழியர்கள் மனம் நெகிழ்ந்து, ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு, அவருக்கு, 60 ரூபாய் பணம் அனுப்பினர். இரண்டு நாளில், அவரிடமிருந்து மற்றொரு கடிதம். கடவுளுக்கு நன்றி தெரிவித்து எழுதப்பட்டிருந்தது. அதில், ‘கடவுளே…தாங்கள் அனுப்பிய பணத்தில், 15 ரூபாயை, தபால் ஊழியர்கள் திருடிக் கொண்டனர்…’ என்று குறிப்பிட்டிருந்தார்.

source::::Dinamalar …Varamalar

natarajan

” தீராத கோபம் …யாருக்கு லாபம் ” ?

தீராத கோபம் யாருக்கு லாபம்!
எனக்கு தெரிந்த தனியார் பள்ளி ஒன்றில் நடந்த சம்பவம் இது: அன்று வகுப்பறையில், ஆசிரியை மாணவர்களிடம், ‘மறக்க முடியாத கோபமோ அல்லது மன்னிக்க முடியாத கோபமோ, யார் மீதேனும் உங்களுக்கு இருக்கிறதா, சந்தர்ப்பம் கிடைத்தால், யாரையேனும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா?’ என்று கேட்டார்.
எல்லா மாணவர்களும், ஒரே குரலில், ‘ஆமாம்…’ என்றனர். ஒவ்வொருவரையும் தனித் தனியே அருகில் அழைத்த ஆசிரியை, ‘மன்னிக்கவும், மறக்கவும் முடியாத அளவுக்கு, எத்தனை கோபங்கள் உள்ளன…’ என்று கேட்டார். ஒவ்வொருவரும் பத்து, பதினைந்து என்று அடுக்கிக் கொண்டே போயினர்.
இதையெல்லாம் அமைதியாக கேட்ட ஆசிரியை, அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு சிறு பையைக் கொடுத்து, வகுப்பறையின் மூலையில் இருந்த தக்காளி கூடையைச் சுட்டிக்காட்டி, ‘நீங்கள் சொன்ன எண்ணிக்கைப்படி, கூடையில் உள்ள தக்காளிகளை எடுத்து, உங்களுக்குக் கொடுத்த பையில் போட்டுக் கட்டுங்கள்…’ என்றார். மாணவர்களும், தங்களது பையில் தக்காளிகளைப் போட்டு மூட்டையாகக் கட்டிக் கொண்டனர்.
பின், அவர்களிடம், ‘இந்த மூட்டையை எப்போதும் உங்களுடன் வைத்திருக்க வேண்டும்; துாங்கும் போதும் அருகிலேயே வைத்துக் கொள்ள வேண்டும்…’ என்று
உத்தரவிட்டார். புரிந்தும், புரியாமலும் மாணவர்கள் தலையாட்டினர்.
ஓரிரு நாட்கள் சென்றன; ஒரு குறையும் இல்லை. ஆனால், அதற்கு அடுத்து வந்த நாட்களில், தக்காளிகள் அழுகி, நாறத்துவங்கின. நாற்றம் அடிக்கும் மூட்டையுடன், வெளியே செல்ல கூச்சப்பட்ட மாணவர்கள், ஆசிரியையிடம் சென்று, மூட்டைகளைத் துாக்கி எறிய அனுமதி கேட்டனர்.
மெல்லப் புன்னகைத்த ஆசிரியை, ‘இந்த தக்காளியைப் போன்று தான், உங்கள் மனதுக்குள் இருக்கும் பகைமை உணர்வும், பழி வாங்கும் குணமும் அழுகி, நாறி கொண்டிருக்கிறது. எனவே, பகை – பழியை மறந்து, மன்னித்து விடுவதாக இருந்தால், தக்காளியையும் தூக்கி எறியுங்கள்…’ என்றார். மாணவர்களுக்கு தெளிவு பிறந்தது.
அப்போதே, தக்காளி மூட்டைகளை குப்பைத் தொட்டியில் வீசிய மாணவர்கள், தங்களுக்குள் இருந்த பகை, பொறாமையை மறந்து, ஒருவரையொருவர் ஆரத் தழுவிக் கொண்டனர்.
இந்த தக்காளி கதை மாணவர்களுக்கு மட்டுமல்ல, பெரியவர்களான நமக்கும் தான்!
— எம்.பூபதி, மதுரை.  in Dinamalar…varamalar

natarajan

படித்து ரசித்தது …வத்த குழம்பும் , கீரை மசியலும் !!!

 ஸாதம் – வத்தல் குழம்பும்கீரை மசியலும்!

​ நம்ம உடம்புல பஞ்ச கோசங்கள்ள “அன்னமய கோசம்”ன்னு ஒண்ணு இருக்கு. என்ன கவனிக்கணும்ன்னா,நம்ம பெரியவாள்ளாம் அன்னமய கோசம்ன்னுதான் சொல்லியிருக்காளே  தவிர, கோதுமைமய கோசம்,ராகிமய கோசம்ன்னு சொல்லலை. ஏன்னா…அன்னம்தான்

 ஜீவாதாரம். மஹாகவி காளிதாஸ் கதைல கூட, ப்ரக்ஞை இல்லாம விழுந்து கெடக்கறவாளுக்கு இந்தக் காலத்ல ட்ரிப்ஸ் ஏத்தற மாதிரி, அப்போ ஸாதத்ல கொஞ்சம்  ஜலத்தை விட்டு அதை அப்பிடியே அவா வயத்துல தடவினா, கொஞ்சம் சக்தி வரும்ன்னு படிச்ச ஞாபகம்.  “ராத்ரிக்கு சாதத்தை யார் சாப்பிடுவா?ரொம்ப ஹெவியா போய்டும்.
இப்போல்லாம் ராத்ரி லைட்டா ரெண்டே ரெண்டு சப்பாத்திதான் சாப்பிடறோம். ஒரு தால் பண்ணினா ஆச்சு! இல்லாட்ட வேகவெச்ச காய்கறி ஒரு கப், கொஞ்சம் sprouts ” ன்னு அலட்டறது ரொம்ப ஜாஸ்தியா போய்டுத்து. வெள்ளைக்காரன், வடக்கத்திக்காரன் இவாளைப் பாத்து ஈயடிச்சான் காப்பி அடிக்கறதில் நமக்குத்தான் gold medal கெடைக்கும்.அதுலயும் நம்ம பக்கத்து சாப்பாட்டை ஏதோ “வேஸ்ட்” மாதிரியும், “மட்டமான சாப்பாடு” மாதிரியும் போஸ் பண்ணிண்டு திரியறவாளும் உண்டு.

ராத்ரி ரொம்ப சிம்பிளா ரெண்டு உருண்டை [சாப்பிட ஆரம்பிச்சதும் இருவது உருண்டையாவும் ஆகும்] தயிர் or மோர் சாதம். தொட்டுக்க கார்த்தால மிச்சம் இருக்கற ஸாம்பார், ரசத்து வண்டல்,வத்தல் குழம்பு. அதுவும் யாராவது பிசைஞ்சு கையில் போடப் போட, நடுவுல குழிச்சிண்டு குழம்பை ஊத்திண்டு சாப்பிடறஅம்ருதத்துக்கு நிகரா, சப்பாத்தி,குப்பாத்தியெல்லாம் துண்டைக் காணோம்,துணியைக்
காணோம்ன்னு ஓடிப்போயிடும். ஸாதம் சீக்கிரமா ஜீரணம் ஆகும்.சப்பாத்தி ஜீரணம் ஆகறதுக்கு லேட் ஆகும். northல கூட, வெயில் காலத்ல ராத்ரிக்கு ஸாதம் சாப்பிடுவா. காரணம்? ஈஸியா digest ஆகும்.

வத்தல் குழம்புன்னு படிச்சதும், அழகா அம்சமா ஒரு கச்சட்டில தாமரை இலைத் தண்ணி மாதிரி நல்லெண்ணெய் அங்கங்க ஓவல் ஷேப்புல மொதக்கும் . ஒண்ணு ரெண்டு கறிவேப்பிலை,மிளகா வத்தல்,மணத்தக்காளி வத்தல்,கடுகு அதோட குழம்புப் பொடியோட
ஒரு ரெட் கலர்தான் எல்லாருக்கும் மனசுல காக்ஷி குடுக்கும். குடுக்கறதா?
கசப்புச் சுண்டைக்கான்னு ஒண்ணு இருக்கு. அதை வாங்கி அலம்பி, கொதிக்கவெச்சு ஆறின ஜலத்துல கல்லுப்பு போட்டு ஒரு ஜாடியில ஊறப் போடுவா. இந்த வத்தகுழம்புக்கு இந்த ஊறவெச்ச சுண்டக்காயை தாளிச்சுக் கொட்டினா,அந்த flavourரே தனி!
[காதுக்கும்,கடவாய்க்கும் நடுவுல சின்னதா ஒரு வலி இருக்கா? அப்போ சரிதான். உங்க taste buds நன்னா வேலை  செய்யறது; நீங்க ஹெல்தியா இருக்கேள்; நல்ல பசி
இருக்குன்னு அர்த்தம். Good. Keep it up!]

கொஞ்சம் வென்னீரைக் கொதிக்க வெச்சு அதுல ஒரு உருண்டை புளியைத் தூக்கிப் போட்டு “ஒரு பக்கமா அக்கடான்னு இரு”ன்னுட்டு வெக்கணும். ஆறினதும் கரைச்சுக்கணும்.
நன்னாப் பழகின கச்சட்டியா இருந்தாலும் அதுலேயே எண்ணை விட்டு தாளிக்கற ரிஸ்க் வேணாம். இலுப்பச்சட்டின்னா அதுல நன்னா மனஸார நல்லெண்ணெய் விட்டு [ஒரு மாசத்துக்கு நம்ம உடம்புக்குத் தேவையான மொத்த எண்ணையையும் ஒரு வத்தக் குழம்புலேயே விட்டு சாப்பிட்டா என்ன ஆறது?..]இப்பிடி யாராவது கேட்டால், அவாளை அலக்ஷியமாப் பாக்கக் கத்துக்கணும். மிளகா  வத்தல், கடுகு,வெந்தயம் or வெந்தயப்பொடி, மணத்தக்காளி வத்தல்/சுண்டக்கா வத்தல் ஏதாவது ஒரு வத்தல், கட்டிப் பெருங்காயம் [இதை மட்டும் கண்ணைத் திறந்து பாக்காம போடணும்.வத்தக்குழம்புக்கு பெருங்காயம் மாமா முறை!] கறிவேப்பிலை, கடைசியா வத்தக்குழம்புப் பொடி[உரைப்பு ஆகாதுன்னு சிலபேர், பேருக்கு குழம்புப் பொடி போடுவா..அது பச்சை துரோகம்] எதையெதை எப்பிடிப் பண்ணிச் சாப்பிடணுமோ,அதையதை
அப்பிடிப் பண்ணிச் சாப்பிடணும். இப்போ அதுல கரைச்சு வெச்சிருக்கற புளிஜலத்தை விட்டு விளாவி, கல் உப்பை அப்டி கையால எடுத்துப் போடணும். அவ்வளவுதான்.கடைசில கொஞ்சம் கெட்டியா ஆகணும்ன்னா,இருக்கவே இருக்கு அரிசி மாவு!

குழம்புக்கு சரியான combination கீரை மசியல், சுட்ட அப்பளாம், மாவடு, டாங்கர் பச்சடி. கீரையைப் பண்ணும்போது ரொம்ப ரொம்ப முக்கியம்…அதோட பச்சைக் கலர் மாறாம பண்ணணும். சில வீடுகள்ள அது கீரை மசியல்ன்னு சத்தியம் பண்ணினாக் கூட நம்ப முடியாது. காய்ஞ்சு போன மருதாணி கலர்ல இருக்கும்.
முளைக்கீரை,அரைக்கீரை,டெல்லி பாலக் [பசலைக்கீரையை பாலக்..ன்னு சொல்லித் தலைலகட்டுவான்]சிறுகீரை இதெல்லாம் மசியலுக்கு ரொம்ப நன்னா இருக்கும். கீரையை நன்னா
மண்ணு போக நெறைய வாட்டி அலம்பிட்டு, பொடியா நறுக்கி, மண் சட்டில போட்டு, நெறைய ஜீரகம்,பச்சை மிளகா, பெருங்காயம் போட்டு,கொஞ்சமா ஜலத்தை விட்டு, மூடாம அப்பப்போ கிளறி, தண்டை நசுக்கி வெந்துடுத்தான்னு பாத்துட்டு, கல் உப்பைப் போட்டு, மத்தால மசிக்கலாம் இல்லாட்டா, மிக்ஸில ஒரு திருப்பு திருப்பினா, அப்டி
டார்க் பச்சைக் கலர்ல மசியல் ரெடி. தேங்காய் எண்ணையில கடுகு, உளுந்து,மிளகா வத்தல் தாளிச்சு இந்த பச்சைமலை மேல “சர்”..ன்னு கொட்டணும். இன்னும் கொஞ்சம் நகாசு வேலை பண்ணனும்ன்னா,[இது அவாவா வீட்டுல, சமைக்கறவா மூடை யாரும் கெடுக்காம
பாத்துண்டா..நகாசு வேலை பண்ணலாம்]  தாளிச்சதும், இன்னும் கொஞ்சம் தேங்கா எண்ணெய் விட்டு,இந்த “கருவடாம் கருவடாம்”ன்னு ஒரு “antique” வஸ்து இருக்கு. அதை அப்டியே ரெண்டு மூணு கைப்பிடி அள்ளிப் போட்டு [வறுத்ததை வெறுமனே தின்னது
போக கீரைக்குப் போடறதுக்கு கொஞ்சம் இருக்கணும் இல்லியா?] exact ஆ golden brown
கலர்ல வறுத்து கீரை மேல கூரை மாதிரிப் போடணும். உடனேயே சாப்பிடறதா இல்லைன்னா, தனியா வெச்சுண்டு, சாப்பிடறச்சே மிக்ஸ் பண்ணிக்கலாம். அப்போதான் மசியலோட “கறுக்முறுக்”ன்னு கருவடாமும்,”கடுக்கடுக்”ன்னு வறுபட்ட உளுந்தும் வாய்ல ஆனந்த
நர்த்தனமே ஆடும்.ஆஹாஹா!

“டாங்கர்”பச்சடிங்கறது இப்போல்லாம் நெறையப் பேருக்குத் தெரியுமான்னே சந்தேஹம்!
ரொம்ப சிம்பிள்! உளுந்தை லேஸா எண்ணை இல்லாம வெறுமன வறுத்து, மிக்ஸில பொடிச்சுவெச்சுக்கணும். அந்தப் பொடிலேர்ந்து ரெண்டு,மூணு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ப்ளர் கெட்டியாக் கடைஞ்ச தயிர்ல நன்னா மிக்ஸ் பண்ணி, உப்பு,பச்சை மிளகா,
பெருங்காயம்,கறிவேப்பிலை,கொத்தமல்லி போட்டு, கடுகு மட்டும் தாளிக்கணும். வறுக்காத உளுத்தமாவுன்னா,ஜீரகம் பச்சையா சேத்துக்கோங்கோ.[முறுக்குமாவை சாப்பிடற மாதிரி இருக்கும்].

இப்போ பாதியா கட் பண்ணின வாழை இலைல, ஒரு மூலைல டாங்கர் பச்சடி. லைட்டா மங்கினவெள்ளைக் கலர் தயிர்ல,பச்சை,ப்ரௌன்,பிளாக் கலர்கள் ஒரு கலக்கலா இருக்கும்.
கொஞ்சம் தள்ளி டார்க் க்ரீன் கலர் கீரை மசியல், அப்புறம் இந்த ஓரமா மொத்தையா வீங்கின மண்டை மாதிரி இல்லாம, 112 வயசு சைனாக்கார பாட்டியோட முகத்துல எத்தனை கோடுகள் இருக்குமோ,[now you can visualise] அது  மாதிரி கன்னப்பின்னான்னு
கோடுகளாப் போட்ட மாதிரி நன்னா சுருங்கின நம்ம பக்கம் போடற மாவடு, ஒரேயடியாக் கருகாம அம்சமாச் சுட்ட, அப்பளாம்! இதோ….கொதிக்கக்கொதிக்க ஸாதம் இலைல போட்டாச்சு! வத்தக்குழம்புக்கு நல்லெண்ணெய்தான்! ரெண்டு ஸ்பூன் எதேஷ்டம்!
இப்போ சாதத்தை நன்னா மசியப் பிசைஞ்சுண்டு, கொஞ்சங்கொஞ்சமா குழம்பை விட்டுப் பிசையணும். ஏன்னா…..வத்தக்குழம்பு ஸாதம், ஸாம்பார்,ரஸம் மாதிரி ரொம்ப தளர இருக்கக்கூடாது. சிலபேர் ரஸம் சாதத்தையே கெட்டியா, கொஞ்சூண்டு ரசத்தை  விட்டுண்டு, ஏதோ மாரடைச்சான் உருண்டையாட்டம் சாப்பிடுவா.

இப்போ turn போட்டுண்டு பச்சடி,கீரை,அப்பளாம்,மாவடு எல்லாத்தையும் தொட்டுண்டு  மணக்க மணக்க வத்தக்குழம்புஞ்சாதத்தை ஒரு வெட்டு வெட்டுங்கோ!! வத்தக்குழம்பு சாதத்தோட ஒரு special advantageஎன்னன்னா….சில சமயம் லீவு நாள்ள, காலைல குளிக்க முடியாம ஏதோ ஒழிச்சல் வேலை,சோம்பேறித்தனம்ன்னு இருந்தா, முந்தினநாள்
பண்ணின வத்தக்குழம்பு இருந்தா [ரொம்ப நன்னா இருக்கும்] ஒரு பாத்திரத்ல சாதத்தைப் போட்டு, அது தலைல நல்லெண்ணெய் விட்டு,பழேத்துக் குழம்பை விட்டு மொத்தமா உருட்டிப் பிசைஞ்சு, நம்ம உள்ளங்கை ஸைசுக்கு ஒரு உருண்டையா [திருப்பதி
லட்டு சைஸ்] உருட்டி எடுத்துண்டுபோய், பின்னால தோய்க்கறகல் மேலேயோ[இப்போ washing machine],தோட்டத்துலேயோ, பால்கனிலேயோ உக்காந்து சாப்பிட்டா….புல்லரிக்கும்!! அனுபவியுங்கோ!

source::::input from a friend of mine….

natarajan

Why Should We Visit Temples More Often ….

 

Temple Truth….Why Should We visit Temples?

India is undoubtedly a country which is most popular for worshiping Gods throughout the year by almost all citizens. But how many of us know the scientific truth of temple vibes, why should we visit temples more often and how it heals our personal life?
 
There are thousands of temples all over India in different size, shape and locations but not all of them are considered to be built Vedic way. Generally a temple should be located at a place where earth’s magnetic wave path passes through densely. It can be in the outskirts of a town/village or city, or in middle of the dwelling place, or on a hilltop. The essence of visiting a temple is discussed here.

Now, these temples are located strategically a place where the positive energy is abundantly available from the magnetic and electric wave distributions of North /South pole thrust. The main idol is placed in the core center of the temple, known as “Garbhagriha” or “Moolasthanam”. In fact, the temple structure is built after the idol has been placed. This “Moolasthanam” is where earth’s magnetic waves are found to be maximum.

We know that there are some copper plates, inscribed with Vedic Scripts, buried beneath the Main Idol. What are they really?
No, they are not GOD’s / Priest’s flash cards when they forget the “Shlokas”. The copper plate absorbs earth’s magnetic waves and radiates it to the surroundings. Thus a person regularly visiting a temple waves and his body absorbs it. This is a very slow process and a regular visit will let him absorb more of this positive energy. Scientifically, it is the positive energy that we all require to have a healthy life.

Further, the Sanctum is closed on three sides. This increases the effect of all energies. Th elamp that is lit radiates heat energy and also provides light inside the sanctum to the priests or poojaris performing the pooja. The ringing of the bells and the chanting of prayers takes a worshiper into trance, thus not letting his mind waver. When done in groups, this helps people forget personal problems for a while and relieve their stress. The fragrance from the flowers, the burning of camphor give out the chemical energy further aiding in a different good aura.
The effect of all these energies is supplimented by the positive energy from the idol, the copper plates and utensils in the “Moolasthanam” / Garbhagraham”. “Theertham”, the holy water used during the pooja to wash the idol is not plain water cleaning the dust off an idol. It is a concoction of Cardamom, Karpura (Benzoin), Zaffron (Saffron), Tulasi (Holi Basil), Clove, etc. washing the idol is to charge the water with the magnetic radiations thus increasing its medicinial values. Three spoons of this holy water is distributed to devotees, Again, this water is mainly a source of magneto-therapy. Besides, the clove essence protects one from tooth decay, the saffron and tulasi leafs protect one from common cold and cough, cardamom and Pachha Karpuram act as mouth fresheners.
It is proved that “Theertham” is a very good blood purifier, as it is highly energized. Hence it is given as “Prasadam” to the devotees. This way, one can claim to remain healthy by regularly visiting the temples. This is why our elders used to suggest us to offer prayers at the temple so that you will be cured of many ailments. They were not always superstitious. Yes, in a few cases they did go overboard when due to ignorance they hoped many serious diseases could be cured at temples by deities.

When people go to a temple for the “Deepaaraadhana” and when the doors open up, the positive energy gushes out onto the persons who are there. The water that is sprinkled onto the assemblages passes on the energy to all. This also explains why men are not allowed to wear shirts at a few temples and women are requested to wear more ornaments during temple visits. It is through these jewels (metal) that positive energy is absorbed by the women.

Also, it is a practice to leave newly purchased jewels at an idols’s feet and then wear them with the idol’s blessings. This act is now justified after reading this article. This act of seeking diving blessings before using any new article, like books or pens or automobiles may have stemmed from this through mere observation.

Energy lost in a day’s work is regained through a temple visit and one is refreshed slightly. The positive energy that is spread out in the entire temple and especially around where the main idol is placed, are simply absorbed by one’s body and mind.

Did you know, every Vaishnava (Vishnu Devotees), must visit a Vishnu temple twice everyday in their location. Our practices are NOT some hard and fast rules framed by one man and his followers or God’s words in somebody’s dreams. All the rituals, all the practices are, in reality, studied and scientifically backed thesis which form the ways of nature to lead a good healthy life.

The scientific and research part of the practices are well camouflaged as“Elder’s instructions” or “Granny’s teachings” which should be obeyed as a mark of respect so as to once again, avoid stress to the mediocre brains.

source::::sourishbj.blogspot.com.

natarajan

படித்ததில் பிடித்தது …” பரிமளம் , மகனா ? மகளா ? ” !!!

1968-ஆம் ஆண்டு. முதலமைச்சராக அவையில் வீற்றிருக்கிறார் அறிஞர் அண்ணா. அப்போது நான் பொதுப்பணித்துறை அமைச்சர். மொழிப் பிரச்னை பற்றி வாக்குவாதம் நடக்கிறது. அவை உறுப்பினர் ம.பொ.சி. மீது எதிர்க்கட்சித் தலைவர் கருத்திருமன் ஒரு குற்றச்சாட்டு கூறினார். அதைத் தொடர்ந்து நடந்த விவாதத்தையும் அதை அண்ணா எவ்வாறு முடித்து வைத்தார்
என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
கருத்திருமன்: “”தமிழ்தான் என் உயிர். தமிழை ஆட்சி மொழி ஆக்கியதற்காக இந்த ஆட்சியைப் பாராட்டுகிறேன்” என்று ம.பொ.சி. சொன்னார். ஆனால் விவேகானந்தா கல்லூரியில் தன் மகனுக்கு ஆங்கிலப் படிப்பு வேண்டும் என்று கேட்டவர் அவர்.
ம.பொ.சி: எதிர்க்கட்சித் தலைவர், நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். என் பிள்ளை, உயர்நிலைப் பள்ளிப் படிப்புகூட முடித்ததில்லை. குற்றச்சாட்டை வாபஸ் பெற வேண்டும்.
கருத்திருமன்: எனக்கு வந்த தகவலைத்தான் சொன்னேன்.
அண்ணாதுரை: யார் மகனைப் பற்றி குறிப்பிடுகிறீர்களோ, அந்த தந்தையே தகவல் தவறு என்று கூறிவிட்ட பிறகு, தாங்கள் ஏற்றுக்கொள்ள என்ன தயக்கம்?
கருத்திருமன்: அவர் சிபாரிசு செய்த பிள்ளை என்றுதான் சொல்கிறேன். சொன்னது தவறென்றால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுப்பணித்துறை அமைச்சர் (நான்): எதிர்க்கட்சித் தலைவர் முதலில் ம.பொ.சி.யின் மகன் என்று குறிப்பிட்டார். இப்போது மகனில்லை; அவர் சிபாரிசு செய்த பிள்ளை என்கிறார்.
அண்ணாதுரை: தவறான தகவலை நம்பினால் என்ன ஆகும் என்பதற்கு ஒரு சம்பவம் சொல்கிறேன். என் மகன் பெயர் பரிமளம். நமது நண்பர் விநாயகம் ஒரு கூட்டத்தில் பேசும்போது, “அண்ணாதுரைக்கு பரிமளம் என்று ஒரு பெண் இருக்கிறாள்’ என்று குறிப்பிட்டு, அது பத்திரிகையிலும் வந்துவிட்டது. பிறகு ஒருநாள், விநாயகம் என் வீட்டுக்கு போன் செய்த போது, பரிமளம் பேசினான். “நீ யார்?’ என்று விநாயகம் கேட்க, “அண்ணாவின் மகன்’ என்று அவன் கூறினான். “அடடே! நீ ஆண் பிள்ளையா? பரிமளம் என்ற பெயரைப் பார்த்து பெண் என்று நினைத்துவிட்டேன்’ என்றார்.
முதலமைச்சர் அண்ணா இந்த நிகழ்ச்சியை விவரித்ததும் கருத்திருமன் எழுந்திருந்து, ம.பொ.சி. பற்றி தவறான தகவல் சொன்னதற்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டார். அண்ணா எடுத்துரைத்த சம்பவம், அவையை சிரிப்பில் ஆழ்த்தியதுடன் சூடாகத் தொடங்கிய வாக்கு வாதத்தை சுவையாகவும் மாற்றியது.
– “மலரும் நினைவுகள்’ புத்தகத்தில்  கலைஞர் கருணாநிதி .

source:::: Dinamani .Tamil Daily

natarajan

Spreading Smiles thro Food !!!

Sathyanarayana G, Yourstory.in

Vijay Abhimanyu Rajendran who founded Billion Smiles Hospitality Pvt Ltd in 2007 at age 19 talks about his inspiration behind launching the south Indian chain of restaurants and how he intends to spread smiles through his venture, both nationally and internationally.

Vijay Abhimanyu Rajendran, a 25-year-old second generation entrepreneur is the force behind Billion Smiles Hospitality Pvt Ltd.

Started about six years ago with a single casual dining restaurant, there are currently three business verticals operating under Billion Smiles which include casual dining, catering business and quick service restaurants.

Of these, two of their casual dining brands — South Indies and Bonsouth — have already become popular, meanwhile another brand called Upsouth, which operates as a fast food chain is equally gaining momentum.

Billion Smiles is driven with a vision to build a strong brand which is highly scalable in India and eventually aspire to take it internationally with south Indian cuisine.

We caught up with young Vijay Abhimanyu, 19, who started Billion Smiles in 2007.

For the launch of their first restaurant, South Indies, the initial investment came from Billionways, which is a holding company of Billion Smiles and is founded by his father Venkat Rajendran.

With 14 outlets already operating in Bangalore and Pune, in the next five years, Vijay Abhimanyu says the company has plans to go pan-India, expanding massively to open more than 250 outlets and establish their presence abroad.

In the candid conversation that follows, the young entrepreneur talks about his inspiration to start a south Indian chain of restaurants, challenges he confronted when he started up and his illustrious vision for the company

Vijay Abhimanyu Rajendra

 

What motivated you to start at such a young age?

Everyone was entrepreneurial in my family, that’s what pushed me to start something on my own. And my father always used to tell that this economy will be built and driven by entrepreneurs and we will build India in to one of the top three nations, in spite of governance. But entrepreneurs will drive growth and this is evident in the last 15 years in our country. So that is something which excited me.

One thing which came as revelation was the fact that there was consumer retail consumption driven business had reached a significant scale.

We see KFCs and McDs with thousands of outlets doing extremely well, building nation-wide brand, moving to international markets, this was the trend which was clearly visible. And during that time, it had only about seven per cent of penetration through organised operators. This was a huge opportunity and there were lots of data points that indicated at targeting markets from the West, Europe, China etc for expansion.

These markets had chain restaurant penetration to an extent of 40 to 50 per cent. This was a major driving factor and we knew that it was going to happen some day, and now it’s finally happening.

As a business the space seemed right, the opportunity seemed fantastic, the timing, perfect, so the idea really appealed to me.

At that point, my dad decided to back this venture and the initial seed money came from the group holding company Billionways and that’s how we started Billion Smiles Hospitality in 2007.

 

What were your initial challenges when you decided to start up?

Both my father and I belong to IT backgrounds and had no former experience of running a restaurant before. So we made it a professionally-run business from Day one. But core competence and capability in south Indian food was a challenge. So we got Mr Ventatesh Bhat who is a former employee of the Taj and Leela group who bought along with him the core competence of south Indian cuisine.

We’d always wanted to specialise in this and convert south Indian food into a casual dining brand and occupy the up-market south Indian dining space which was vacant.

What were your early advantages when you started out?

South Indian is probably is the only cuisine which is apt for a fast food all day dining format particularly in the Indian cuisine. You can have idly and dosa any time of the day.

The product is friendly for an 8 am to 11 pm offering. At the same time you have north Indian food which is generally a meal-centric offering. It’s more lunch- and dinner-centric offering; not necessarily an all-day diner. This gives south Indian cuisine an edge to build a highly scalable fast food experience.

Secondly, the south Indian cuisine is the most sought after cuisines in terms of popularity across the country. Traditional cuisine like idly, vada, dosa etc, is liked by people across demographics and have indicated to be the popular cuisine in the country today.

If you look at Bangalore alone, it has more than 2500 Darshinis in the home market segment. In the north and western market, it’s more of an exotic and unique market which has not been penetrated.

source:::::rediff.com

natarajan