வாரம் ஒரு கவிதை ….

 

என்ன தவம் செய்தேன்…
———————-
அம்மா என்னும் பதவி கிட்டியது எனக்கு
உன்னால்தானே என் செல்லமே ! என்ன
தவம் நான் செய்தேன் செல்லமே நீ வந்து
என் கையில் தவழ !
உன் ஒருவன் வரவில்  எத்தனை பேருக்கு
பதவி உயர்வு ஒரு குடும்பத்தில் !
உன் அப்பாவுக்கு தந்தை என்னும் உயர்வு…
பாட்டி தாத்தாவுக்கும் பதவி உயர்வு …
அம்மா அப்பா என்னும் நிலையிலிருந்து !!!
தம்பி பாப்பா நீ வந்ததால் இந்த வீட்டுக் குட்டி
பாப்பாவுக்கும்  அக்கா என்னும் ப்ரோமோஷன் !
இத்தனை பேருக்கும் பதவி உயர்வு ஒரே நாளில்
உன் வரவால் !…
என்ன தவம் செய்தேன் நான் இத்தனை “சக்தி “
பெற்ற உன்னை நான் பெற்றெடுக்க !
Natarajan ….in http://www.dinamani.com dated 20th August 2017

வாரம் ஒரு கவிதை ….” மழை நீர் போல …”

 

மழை நீர் போல …
——————–
வறண்டு கிடக்கும் பூமி …வானம் திறக்குமா கண் ?
மேலும் கீழும் பார்ப்பது உழவன் மட்டுமல்ல இன்று !
அடுக்கு மாடி கட்டிடக் குவியல் கூட்டில் குடி இருக்கும்
நகரத்துப் “பறவைகளும்” மழை தேடி வானிலை
அறிக்கையை காலையும் மாலையும் அலசும் அவலம் இன்று !
மழை நீரை முத்தமிட துடிக்கும்  வறண்ட பூமி நனையுது
மழை நீர் போல பெருகி வரும் உழவன் அவன் கண்ணீரில் !
குடிக்க நீர் இன்றி தவிக்கும் அடுக்கு மாடி “பறவைகள்”
வழி மேல் விழி வைத்து காத்திருக்குது  தினமும் ஒரு
லாரி தண்ணீருக்கு !
தண்ணீரும் பணமாக மாறும் காலம் இது ..மழை
நீர் சேமிப்பின் மதிப்பு உணராத மனிதன் கொடுக்கிறான்
நீருக்கு ஒரு விலை இன்று !
மழை வெள்ளம் வரும் நேரம் “இது என்ன பேய் மழை”
என்று அலறிய மனிதன் குரல் கேட்டு வானமும்
மனம் உடைந்து “கண்ணீர் ” விடவும் மறந்து போனதோ ?
தினம் தினம் தண்ணீர் தண்ணீர்  என்று மனிதன்
கண்ணீர் விட்டு என்ன பயன் இன்று ?
மாற வேண்டும்  மனிதன்… மாற்றி யோசிக்கவும்
வேண்டும் …வானமும் மகிழ்ந்து  தன் ஆனந்தக்
கண்ணீரால்  நனைக்க வேண்டும் இந்த பூமியை !
மனிதனுக்கும் புரிய வேண்டும்  எந்த நீர்
ஆனாலும்  மழை நீர் போல ஆகுமா  என்று !
Natarajan….
in http://www.dinamani.com dated  13th August 2017

வாரம் ஒரு கவிதை …” கடல் பயணம் “

 

கடல் பயணம்
————-
தினம் தினம் கடல் பயணம் …திரவியம்
தேட  அல்ல … அலை கடலில் அவன்
அலைவது  அவன் வீட்டு  அடுப்பு எரிய !
மீனவன் அவனுக்கு தேவை கடல் மீன் !
விண்மீனை பிடிக்க பறக்கவில்லை  அவன் !
கடல் மீனை அவன் தேடி பிடிக்கையில்
அவனை துரத்தி மிரட்டி விரட்டுதே  ஒரு கூட்டம் !
இல்லை  இது உன் எல்லையில் என்று
தினம் தினம் அவனுக்கு தொல்லை !
பிழைப்பு தேடி கடல் நாடி ஓடும் அவன்
தினம் தினம் செத்துப் பிழைக்கிறானே !
என்று தீரும் அவன் அவலம் ?
கடல் பயணம் அவனுக்கு ஒரு சொகுசு
சுற்றுலா அல்ல … அவன் வாழ்க்கையின்
பயணமே  அந்த கடல் அலையோடுதான் !
மண்ணை நம்பும் விவசாயி ….கடலை
நம்பும் மீனவன் … இந்த இருவருக்கும்
பிறக்குமா ஒரு விடிவு  காலம் விரைவில் ?
Natarajan in http://www.dinamani.com dated 7th August 2017

வாரம் ஒரு கவிதை…” ஒரு புள்ளியில் தொடங்கிய பயணம் “

 

ஒரு புள்ளியில் தொடங்கிய பயணம் …
———————————
புள்ளியில் தொடங்குது ஒரு மனித வாழ்வு
அந்த சிறு புள்ளி பெரும் புள்ளி ஆகுமா ..
இல்லை அதன் குடும்பத்துக்கும் இந்த உலகுக்கும்
ஒரு கரும்புள்ளியா? …அது ஒரு கேள்விக்குறியே !
புள்ளியில் தொடங்கும் வாழ்க்கை பயணம்
அழகு புள்ளி கோலமாய் மிளிர்வது அந்த
பிள்ளையின் கையில்… கோலம்
அலங்கோலம் ஆவதும் அந்த பிள்ளையின் செயலில்!
புள்ளியில் துவங்கிய வாழ்க்கை பயணம்
ஒரு கேள்விக்குறியாய் இருக்கலாம் …ஆனால்
கேலிக்குரியதாய்  இருக்கலாமா ?
வாழ்வுக்கு  முற்றுப்புள்ளி  வரும் நேரம்
யாருக்கு தெரியும் ?  பெரும்புள்ளிக்கும் தெரியாது
கரும்புள்ளிக்கும் தெரியாது ! முற்றுப்புள்ளிக்குப்
பின் என்ன நடக்கும் ? …
எந்த “டாட் காம் ”  இணைய தளத்திலாவது
இந்த கேள்விக்கு விடை கிடைக்குமா !
Natarajan…My Tamil kavithai as published in http://www.dinamani.com dated 31st july 2017

வாரம் ஒரு கவிதை ….” தூரத்தில் கேட்குது ….”

 

தூரத்தில்  கேட்குது ..
———————-
அம்மா உன் குரல் முதன் முதல் கேட்டேன்   தூரத்தில்…
உன் கருவில்  நான்  மலர்ந்து வளர்ந்த  போது !
இப்போதும்  உன் குரல் நான் கேட்கிறேன்
தினமும் …தூரத்திலிருந்தே !
அயல் நாட்டு மண்ணில் நான் இன்று  இருந்தாலும்
நம் நாட்டு  மண் வாசம் மறக்கவில்லையே அம்மா  நான் !
தூரத்திலிருந்து உன்  குரல்  நான் கேட்டாலும்
அம்மா..பாசமுடன் மண் வாசம் கலந்து ஒலிக்கும்
உன் குரல் நான்  அன்று  கருவில் கேட்ட
அதே குரலாக இன்றும் ஒலிக்கும் மாயம் என்ன அம்மா ?
தூரத்தில் கேட்குது உன் குரல் என்று என்னிடம்
இது வரை நீ சொன்னதில்லையே அம்மா !
எங்கே நீ இருந்தாலும் நீ இருக்குமிடம் என்
இதயத்தில்தான் என்று எனக்கு சொல்லாமல்
சொல்லுகிறாயா  அம்மா ?
Natarajan …..in http://www.dinamani.com dated 24th July 2017

வாரம் ஒரு கவிதை ….” இன்றைய தாலாட்டு “

 

இன்றைய தாலாட்டு
———————————–
தொட்டில் கட்டி  தாய் பாடும் தாலாட்டு
கேட்டது ஒரு தலைமுறை !
தொட்டில் என்றால் என்ன என்று
கேட்குது இன்றைய தலை முறை !
தொலைகாட்சி பாட்டுக்கு தலை
ஆட்டும் இந்த தலைமுறைக்கு அன்னையின்
தாலாட்டு ஒரு புதிர் விளையாட்டு !
வேலை வேலை என்று ஆலாய்
பறக்கும் பெண்ணுக்கு  தாலாட்டு
பாட எங்கே நேரம் ?
மடிக்கணினி இசைக்கும் இசையே ஒரு
குழந்தை கேட்கும் இன்றைய தாலாட்டு !
அம்மா அப்பாவின் கைபேசி
மணிஓசைதான்  தாள வாத்திய கச்சேரி
மடியில் தவழும் குழந்தைக்கு !
இன்றைய குழந்தை  கேட்கும்
ஒரே தாலாட்டு  அதன் அம்மா அப்பா
பாடும் ஒரே பாட்டு …”எடுக்க வேண்டும்
எல்லா அடையாள அட்டையும் நம்ம  குழந்தைக்கு “
Natarajan
in http://www.dinamani.com dated 17th July 2017

வாரம் ஒரு கவிதை ….” நிழலாடும் நினைவு “

 

நிழலாடும்  நினைவு…
——————-
கடல் அலை போல்  நினைவலைகள்…
ஓயாத  கடல் அலை போல்
நினைவலையும்  ஒரு தொடர்கதையே !
மெல்லிசையாய் ஒலிக்கும் வாழ்வின்
இனிய நினைவலைகள் இடைவிடாமல்
தொடரும் ஒரு நிழலாய் நம் வாழ்வின் நிஜத்தில் !
இளமை  கால நினைவின் நாட்டியம் நல்ல
கட்டியம் கூறும் எதிர் வரும் கால நிஜங்களுக்கு !
மனதில் நிழலாடும் நினைவே எதிர் வரும் காலத்துக்கு
ஒரு நம்பிக்கை நட்சத்திரம் !
இனிய பழைய நினைவின் ஓட்டம் இருக்க  வேண்டும்
என்றும் நம்  மனதில் ஒரு நிழலாக ! நினைவுகள் நிழலாடும்
வரைதான் நம் வாழ்வின் ஆட்டமும் ஓட்டமும் !
மனதின் நிழலே நம் வாழ்வின் நிஜம் !
நிஜம் இல்லாமல் நிழல் இல்லை !
நிழல் இல்லாத நிஜமும் இல்லை !
Natarajan
My Tamil kavithai in http://www.dinamani.com dated 10th July 2017

வாரம் ஒரு கவிதை …” மறு ஜென்மம்”

 

மறு ஜென்மம்
————–
நெரு நெல் உளனொருவன் இன்று இல்லை
என்னும் பெருமை படைத்த இந்த உலகில்
இரவில் கண்ணுறங்கி மீண்டும் கண் விழிக்கும்
அந்த இனிய காலை நேரமே நம் யாவருக்கும் ஒரு
மறு ஜென்மம் !  மறுக்க முடியுமா இந்த உண்மையை ?
கிடைத்தது ஒரு  அரிய மனிதப் பிறவி …தெரியும் இந்த
உண்மை நமக்கு ! தினமும்  காலையில் நாம்
எடுப்பது ஒரு மறு  ஜென்மம் ! இதுவும் தெரியும் நமக்கு !
இருக்கும் அந்த ஒரே ஒரு  நாளில் மறக்கலாமா
நாம் மனித நேயம் ?
தினம் காணும் மறு ஜென்ம விடியல் மறந்து
வேறு ஒரு புது  ஜென்ம மாய வலையில்
சிக்கி, கிடைத்த மனிதப்   பிறவியின்  மதிப்பைக்
குறைக்க வேண்டாமே நாம் !
மனிதராய் பிறந்தோம் …மனிதராகவே
வாழ்ந்து காட்டுவோம் ! அது ஒன்றே நமக்கு
கிடைத்த மனிதப் பிறவியின் பயன் !
Natarajan  in http://www.dinamani.com dated 26th june 2017

வாரம் ஒரு கவிதை …” கல்லறைப் பூவின் கண்ணீர் துளி “

 

சில்லறை இல்லையென்றால் இல்லை
உனக்கு  மரியாதை !  உண்மையும்
நேர்மையும் போடுமா உனக்கு சோறு ?

“பிழைக்கத் தெரியாத மனிதன் நீ ”
இந்த ஒரு பட்டம் மட்டுமே அந்த
மனிதனுக்கு  கிட்டிய சொத்து நேற்றுவரை !

இன்று கல்லறையில் அவன் அடங்கும் வரை
அவன் அருமை அவனுக்கே தெரியாது !

அவன் உறங்கும்  கல்லறை மேல்
எத்தனை எத்தனை மலர் வளையம் இன்று   !
அவன் இறப்பிலும் அவரவர்  ஆதாயம்

தேடி அவனுக்கு சூட்டும் பட்டம்  எத்தனை
எத்தனை இன்று !

“பிழைக்கத்” தெரியாத அந்த ஒரு மனிதன்
பெயர்  சொல்லி  தங்கள் “பிழைப்பை”
நடத்த துடிக்கும் ஒரு பெரிய கூட்டத்தின்

நாடகத்தின் நடுவில்  கல்லறைப் பூக்கள்
மட்டும் வடிக்குது கண்ணீர், மறைந்த
அந்த மனிதனை நினைத்து !

நடராஜன்   in http://www.dinamani.com dated 19th june 2017

வாரம் ஒரு கவிதை …” கவிக்கோவுக்கு ஒரு கவிதாஞ்சலி “

 

கவிக்கோவுக்கு கவிதாஞ்சலி
————————-
கவிஞன் என்று சொன்னாலே  அது கவிக்கோ !
கதையிலும்  கவிதை விதை விதைத்து  கவி
சொன்ன கவிஞன் அவன் ….இந்த புவி கேட்ட
கவிதை தானும் கேட்க விழைந்தானோ அந்த
இறைவன் ?  இறை அழைப்பு ஏற்று இப்புவி
துறந்து எமை  மறந்து பறந்து சென்றாயோ கவிஞனே ?
நீ பறந்து சென்ற வேகம் பார்த்து நான் வாய் மூடி
மௌனியானேன் …உன் பால் வீதி கவிதைப் பயணம்
முடித்து  உன் வீட்டு  வீதிக்கு நீ மீண்டும் திரும்பும் நாள்
வரை காத்திருப்பேன் நான் மெளனமாக !
உன் பால் வீதி பயணத்தில் என் மௌனத்தின் குரல்
உனக்கு கேட்காமல் இருக்குமா என்ன ?
Natarajan
12th June 2017