Message For the Day…” Always Keep Ready Stock of Truth, Right Conduct…”

When fire rages and gets destructive, you immediately try to put it out by throwing sand and water, is it not? In most buildings, people keep a stock of these in readiness. Are you aware that you have six flames burning inside you? They are lust, anger, greed, attachment, pride and hatred. They can emerge any time. What do you have in store to put them out? Always keep a ready stock of Truth, Right Conduct, Peace, Love and Non-Violence in plenty. These five will help you scotch the flames of your six enemies, whenever they are lit; these values are very effective extinguishers.

 

sathya sai baba

Message For the Day… ” Health is Wealth ”

 

 

The way you live your life is your gift to those who come after.
Make it a fantastic one.

 

“It is health that is real wealth

And not pieces of gold or silver.”

~Author, Unknown

 

source:::: open my eyes Lord.net website

natarajan

 

 

 

 

 

Message For the Day…” Reflections May be many But The Reality is One…”

When you offer salutations to someone, understand that you are saluting your own self. That ‘someone’ is none other than your own reflection. See others just as you see your own reflection in the mirror. When you are surrounded by many mirrors, you see a number of reflections. Reflections are many but the person is one. Reactions, reflections, and resounds are many but the reality is one. Names and forms may be different, but all beings are part and parcel of the same Divine Principle. Divinity is the underlying principle in the apparent multiplicity of this world. When I am speaking here, My voice is heard through each and every loudspeaker in this hall. In the same manner there exists the principle of unity in our hearts which we have to recognise.

 

Sathya Sai Baba

படித்ததில் பிடித்தது …” உனக்கு என்ன படிக்க ஆசை … ” ?

பிளஸ் 2 மாணவர்களின் பெற்றோர்களுக்கு,

வணக்கம். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன.

என் பிள்ளைக்கு இந்த கோர்ஸ் செட் ஆகுமா?, எதுக்கு வேலைவாய்ப்பு அதிகம்?, கேம்பஸ் இன்டர்வியூக்கள் எந்தக் கல்லூரியில் அதிகம் நடக்கிறது?, இந்த கோர்ஸுக்கு எந்தக் கல்லூரியில் படிப்பது நல்லது? இப்படி பல கேள்விகள் பெற்றோரின் மன ஓட்டத்தில் பாய்ந்துகொண்டே இருக்கின்றன.

மேலே கூறிய எல்லா கேள்விகளும் கேட்கப்பட வேண்டியவையே, ஆனால் இவை எல்லாவற்றையும் விட முக்கியமான கேள்வி ஒன்று நம் நாட்டில் பல பெற்றோர்களால் பிள்ளைகளிடம் கேட்கப்படுவதே இல்லை.

“உனக்கு என்ன படிக்கணும்னு ஆசை?” – வாழ்வை அமைக்கும் கேள்வி அது.

உடை பிடிக்கிறதா, உணவு பிடிக்கிறதா என்ற கேள்விகளை தன் பிள்ளைகளிடம் கேட்கின்ற பெற்றோர்கள் ஏன் ‘நீ என்னவாக விரும்புற, உன் ஆசை என்ன?’ என்று கேட்பதில்லை.

பிள்ளைகளின் ஆசை என்னவென்றே அறியாமல் முடிவெடுப்பது ஒரு பிழை என்றால், ‘தம் பிள்ளைக்கு இது படிக்கத் தான் ஆசை, தம் பிள்ளைக்கு இப்பிரிவில் நிறைய திறமைகள் இருக்கிறது, இவனுக்கு இதை படிக்க வேண்டும் என்று விருப்பம்’ இப்படி பிள்ளைகளின் கனவை உணர்ந்தும் பெற்றோர் முரண்பட்ட முடிவை எடுப்பதினை பேதமை என்றே உரைக்கலாம்.

பிடிக்காத ஒரு படிப்பினை நாம் படிக்கும்போது மனதினில் வெறுப்பு தான் ஆட்கொள்கிறது. அப்போது கல்வியும் வெறும் மதிப்பெண்ணை பெற்று வேலையைப் பெறுவதற்கான ஒரு மாற்றுப் பண்டமாகவே பார்க்கப்படுகிறது. அப்படி பிடிக்காத படிப்பினை எடுத்து அப்பிரிவிலே வேலைப் பார்க்கப் போகும்பொழுது பார்க்கின்ற வேலையில் பற்றற்று போகின்றது. கடைசி வரை பல பேரின் வாழ்க்கை ‘அட்ஜஸ்ட்மென்ட்’ என்ற முறையினாலேயே நகர்த்தப்படுகிறது.

யோசித்துப் பார்த்தால் இப்படி வாழ்க்கையை புளிக்கச் செய்யும் பல நிகழ்வுகள் நடப்பதற்கு காரணமாக இருப்பது பனிரெண்டாம் வகுப்பிற்குப் பிறகு நாம் எடுத்த அந்த ஒரு முடிவு தான்.

குழந்தை எடுத்து வைக்கின்ற முதல் அடி போல் ஒரு கல்லூரி, மற்றும் எடுக்கப்படுகின்ற பிரிவு ஆகியவை பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

ஒரு மீனவனின் மகன் எரோனாடிகல் படிக்க வேண்டுமா? அப்படிப் படித்தால் என்ன வேலை வாய்ப்பு இருக்கிறது? அதற்கு மாறாக கம்ப்யூட்டர் சைன்ஸ் படித்திருந்தால் நிறைய சம்பாதித்திருக்கலாமே என்று எண்ணினால் நமக்கு அப்துல் கலாம் எப்படிக் கிடைத்திருப்பார்?

கல்வியின் அடிப்படைத் தேவையை பொருளாதாரத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பது பிதற்றலானது. இன்று நாம் அனைவரும் வாழக் காரணமாக இருப்பது விவசாயம். ஆனால் விவசாயத்தை பற்றி படிப்பதாக ஒரு மாணவன் கூறினால் சிரிக்கிறார்கள். நம் தேசத்தின் அடையாளமே விவசாயம்தான் என்பதை அறியாதவரின் அறியாமைச் சிரிப்பு இது.

ஒரு பெண் மெக்கானிக்கல், சிவில் படிக்க ஆசைப்படுகிறேன் என்றால் ஏளனமாக சிரிக்கின்றார்கள். கல்பனா சாவ்லாக்களை அறியாதவர்களின் அறியாமைச் சிரிப்பு அது.

மேலும், மீடியா தொடர்பாகப் படிக்கப் போகிறேன், கலைப் பிரிவில் படிக்கவிருக்கிறேன், நர்சிங் படிக்க விழைகிறேன், தமிழ் படிக்க விரும்புகிறேன் என ஒரு மாணவர் கூறினால் அவர் மனக்கோட்டையை சிதைப்பதில் இச்சமுதாயத்திற்கு பெறும் பங்கு இருக்கிறது.

‘என் மகன் இந்த காலேஜ்’ல இந்த கோர்ஸ் படிச்சு இப்ப சந்தோஷமாக இருக்கிறான் சின்ன பசங்களுக்கு என்ன தெரியும்? உங்க மகனையும் அதுவே எடுத்து படிக்கச் சொல்லுங்க’ இப்படி எதாவது கூறி பெற்றோரின் மனக் குட்டையில் கல்லை எறியும் கூட்டத்தின் தவறான அறிவுரையால் இன்று பல பிள்ளைகளின் வாழ்வியல் பாதிப்படைகிறது, இன்னும் அடைந்து கொண்டே இருக்கிறது.

கல்வியின் அவசியத்தை பாராமல் ஆதாயத்தை மட்டும் பார்க்கும் இதைப் போன்ற கமர்ஷியல் கணவான்களின் பேச்சை காதில் போட்டுக் கொள்ள கூடாது.

உண்மையில் எனக்கு என்ன படிக்க வேண்டும் என்று தெரியவில்லை. எனக்கு வருங்காலத்தை பற்றிய தெளிவான எண்ண ஓட்டம் இல்லை என்று கூறுபவர்கள் கண்டிப்பாக பெற்றோர்களின் அறிவுரையை எடுத்துக் கொள்ளலாம், தவறே இல்லை. அப்படி எடுத்துக் கொண்ட பாதையில் தன் திறமையை உணர்ந்து சாதித்தவர்கள் பலர்.

எனக்கு இது தான் ஆசை, இது தான் விருப்பம், இதில் நான் கண்டிப்பாக சாதிப்பேன் என்ற மன உறுதி கொண்டவர்கள் கண்டிப்பாக தன் வேட்கையை பெற்றோர்களிடம் உரைத்து அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். உங்களின் நிலைப்பாட்டை உங்கள் பெற்றோர்களிடம் உங்களால் விளக்க முடியவில்லை என்றால் எப்படி வெளியுலகிற்கு புரியவைப்பீர்கள்?

விருப்பமில்லாத படிப்பை படித்து நீங்கள் உங்கள் வாழ்வை மட்டும் சிதைத்துக் கொள்ளவில்லை, அப்படிப்பு படிக்க தீவிரமாக முயற்சித்த மற்றொரு மாணவனின் கனவையும் சேர்த்து சிதைக்கின்றீர்கள். நான் இது தான் படிக்கப் போகிறேன் என் ஆசை இது என்பதை கேட்பவர்களிடம் ஆணித்தரமாக சொல்லுங்கள் அப்படிச் சொல்கையில் உங்களுள்ளே தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுத்துக் கொண்ட பாதையில் வெற்றி பெறுவதற்கான வேட்கை கூடும்.

நான்கு வருடம் முடித்துவிட்டு நான் இன்ஜினியரிங் படித்திருக்கக் கூடாது என்றுணரும் பொறியியலாளர்களும், ஆறரை வருடம் கழித்து மருத்துவம் படித்திருக்கக் கூடாது என்றுணரும் மருத்தவர்களும் நம் ஊரில் ஏராளம். படிக்கையில் இனிமேல் எனக்கு இது ஒத்துவராது என்று பாதி வழியிலே விலகிக் கொண்டவர்களும் ஏராளம்.

தன் காதலை இழந்துவிட்டோம் என்று மேசையில் தலை சாய்த்து அழுபவர்கள், பேருந்தில் ஜன்னலிலே சாய்ந்து கொண்டு விழி நீர் இறைப்பவர், மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு தன் கையாலாகத் தனத்தை உணர்ந்து தனிமையில் அழுபவர்கள் நம் நாட்டில் பலர் உள்ளனர்.

தன் பிள்ளை விழுந்துவிடக் கூடாது என்ற பாதுகாப்பு உணர்ச்சி அனைத்து பெற்றோர்களிடமும் இருக்கிறது. ஆனால் இவ்வுணர்ச்சியே அவர் பிள்ளைகளின் வாழ்விற்கு முட்டுக்கட்டையாக மாறிவிடக் கூடாது. யாரோ மூன்றாவது நபர் கூறும் பேச்சிற்கு மதிப்பளிக்கும் நீங்கள், உங்கள் பிள்ளைகளின் ஆசைக்கும் கொஞ்சம் மதிப்பளியுங்கள். அப்படியே அவர்கள் எடுத்துக் கொண்ட பாதையில் விழுந்தால் கூட வீழமாட்டார்கள் எழுந்து கொள்வர் ஏனென்றால் இது அவர்கள் எடுத்த முடிவு என்ற அச்சமும், கடமையும் அவர்களுக்கு எப்போதும் இருக்கும்.

பசி இழந்து, உறக்கம் இழந்து, சுகவாசத்தை இழந்து, பொழுது போக்கினை இழந்து நாளும் பிள்ளைக்காகவே வாழ்ந்து தேயும் பெற்றோர்களே… உங்களின் ஆசை எல்லாம் உங்கள் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பது தானே! அப்படி இருக்கையில் ஒரு முறை உங்கள் பிள்ளைகளின் ஆசையை கேளுங்கள். கண்டிப்பாக எந்த பிரிவு எடுத்தாலும் அதில் காதல் இருந்தால் சாதிக்கலாம்; சாதித்தவர்களும் பலர். உங்கள் பிள்ளைகள் படிக்க விரும்பும் பிரிவில் சாதித்தவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். எல்லா படிப்பிற்கும் அவசியம் உண்டு, எல்லோர் வாழவும் வழியுண்டு. என்ன, கொஞ்சம் தேட வேண்டும் அவ்வளவே.

ஆயிரத்து நூற்றிக்கு மேல் மதிப்பெண் எடுத்தால் ஆர்ட்ஸ் படிக்கக் கூடாதா என்ன? ஆயிரத்து நூறு மதிப்பெண் மேல் எடுத்து பிடிக்காத பிரிவில் படித்து சரிந்தவர்களும் இருக்கின்றனர், அறுநூறு மதிப்பெண் எடுத்து வாழ்வில் சாதித்தவர்களும் பலர் உள்ளனர். பெயர் பெற்ற கல்லூரியில் பிடிக்காத பிரிவை எடுத்துப் படிப்பதை விட சுமாரான கல்லூரியில் பிடித்த படிப்பை படிப்பதே மேலானது.

ஒரு சிறிய விண்ணப்பம்.. மதிப்பெண் வெளிவந்துவிட்ட நிலையில், “அய்யய்யோ.. இயற்பியல்ல பத்து மார்க் குறைஞ்சிடுச்சி, வேதியல்ல இரண்டு மார்க் போச்சு…”

இந்தக் கவலையை எல்லாம் விடுங்கள். உங்கள் பிள்ளை என்ன மதிப்பெண் எடுத்திருந்தாலும், அது அவரின் உழைப்பு. அந்த உழைப்பிற்கு மதிப்பளித்து தேர்வு முடிவு வரும் வரை காத்திருங்கள். நன்கொடை கொடுத்து படிக்கப்படும் படிப்பு அறிவை வளர்ப்பதை விட அச்சத்தைத்தான் வளர்க்கும்.

பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்ற உங்கள் அன்பு புரிகிறது. அப்படியே உங்கள் பிள்ளைகளின் மனதையும் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எடுக்கும் முடிவு, அவர்களின் எதிர்காலத்திற்கு ‘முடிவாக’ இல்லாமல் நல்ல ஆரம்பமாக இருக்கட்டும்.

இந்தப் புலம்பல்கள், பெற்றோர்கள் பலருக்கும் ‘மொக்கை’ கடிதமாகத் தெரியலாம். ஆனால், சில பல ஆண்டுகளுக்கு முன்பு கிரியேட்டிவ் ஃபீல்டில் நுழைவதற்காக ஒரு குறிப்பிட்ட படிப்பை தேர்வு செய்த ஒரு பிளஸ் 2 மாணவன், நிர்பந்தத்தின் காரணமாக வேறு படிப்பு படித்து, இப்போது ஓர் ஐ.டி. நிறுவனத்தில் போதுமான ஊதியத்துடன் வெறுமையான வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கிறான். வெளியுலகுக்கு பந்தாவானவனாகவும், தனிப்பட்ட வாழ்க்கையில் நொந்தவனாகவும் இருக்கும் இந்த நிலை உங்கள் செல்லக் குழந்தைகளுக்கும் வேண்டுமா?

ஹரி – தொடர்புக்கு nanaprabhu5591@gmail.com ….. in The Hindu … Tamil

natarajan

Keywords: பிளஸ் 2 தேர்வுகள், எதிர்கால கனவுகள், மேற்படிப்புகள், பிளஸ் 2-விற்கு பிறகு, உயர்கல்வி
Topics: உயர் கல்வி| வழிகாட்டுதல்| கல்வி| உயர் கல்வி|

Message For the Day…” Why Ego in The Mind …?”

In the Solar System the Earth is a miniscule entity. Asia is small in comparison to the Earth. Within Asia, India is just one country and within India, the district of Anantapur is still smaller; and Prasanthi Nilayam within Anantapur is tinier in comparison. Within Prasanthi Nilayam, you perhaps stay in one room. Then, why should you have an ego that is bigger than the Universe in its totality? This is totally an act of delusion, arising from ignorance. In fact, a great scholar, devotee and role model on the path of spirituality from ancient yore, Bhartruhari stated, “Out of ignorance I behaved like an elephant in rut thinking that there is no one superior to me. Because of the Divine Vision of sages and their teachings, I learnt the truth. Just as a disease can be cured by taking appropriate medicine, the fickle mind can be subdued by the Darshan and the teachings of sages and scholars.”

 

Sathya Sai Baba

Message For the Day…” Man Should Use his ‘Buddhi’ to Understand the Priniciple of Unity … “

Buddha experienced the unity of all creation. There was total transformation in Him once He attained the vision of ekatma (oneness of the atma). He realised that all worldly relations were false. He transcended body consciousness. That is why he earned the appellation Buddha (the enlightened one). Man should use his buddhi (intellect) to understand this principle of unity. Buddhi is of two types: the buddhi that sees diversity in unity is worldly intelligence. You should develop adhyatmic buddhi (spiritual intelligence) in order to realise the underlying unity of all creation. It gives you the experience of the atmic principle which is the same in the entire creation. Buddha attained the vision of the atma. Truly speaking, Buddha is not just one individual. All of you are Buddhas. You will see unity everywhere once you understand this truth.

 

Sathya Sai Baba

Tipu Sultan “s Golden Ring With Inscription ‘ RAMA’ in Devanagari Script …

It is through the private commerce of the auction house that many a precious relic of India’s history has come to light.

 

On May 22, a remarkable artifact that illuminates a watershed moment in India’s history will be auctioned by the leading London auction house Christie’s — and presumably thereafter vanish forever from the public eye.

A heavy gold ring worn by 18th century ruler Tipu Sultan during his last campaign against the British in 1799 will be sold as part of the ‘Raglan Collection: Wellington, Waterloo & The Crimea.’

Unusually, the 41.2 gm oval ring has the name of the Hindu God Rama in raised Devanagari inscribed on it.

It was taken off the finger of the dead ruler by the Duke of Wellington, Arthur Wellesley, as his personal spoil of war after the Battle of Seringapatam in 1799.

The ring then found its way into the hands of another military family, that of FitzRoy Somerset, the 1st Baron Raglan. A famous soldier of the early 19th century, he joined Duke Wellington’s service in 1808 and rose to become his right-hand man for the next 40 years. He fought in major campaigns under Duke Wellington, including Waterloo and in the Crimea.

FitzRoy Somerset married the Duke’s favourite niece Emily Wellesley-Pole who was in possession of the ring, a gift from her uncle.

The ring has been valued at £10,000 to £15,000 and is part of the private collection of Fitzroy John Somerset, the great great grandson of the 1st Baron Raglan. The collection contains items that have been the possession of the family from 1858, including historical medals, arms and armour, militaria, pictures, furniture, silver, books, Indian weapons and works of art, as well as a selection of art.

Though a small object of personal use, the ring with its inscription awakens the spirit of the unusual 18th ruler who was its owner.

The historical record shows Tipu as Catholic in his religious outlook and forward-looking in his world-view. He sought out what was modern and transformatory for the time, putting it to use in his paramount objective of defeating the British.

Keywords: Christie’s, Tipu Sultan

 

source::::: The Hindu. …. English Daily

natarajan

South Korea… No 1 in Global Education System !!!

South Korea is in top place in this global education league table

Korean students

 

The UK is in second place among European countries and sixth overall in a global education league table.

South Korea is top, with three other Asian countries and Finland making up the top five, in rankings from education and publishing firm, Pearson.

The rankings include higher education as well as international school tests – which boosted the UK’s position.

Pearson chief executive John Fallon highlighted the economic importance of improving education and skills.

These latest international comparisons, compiled for Pearson by the Economist Intelligence Unit, emphasise the success of Asian education systems, with South Korea, Japan, Singapore and Hong Kong in China rated as the highest performing.

But it shows a strong performance from the UK, which is ranked sixth, behind only Finland in Europe and ahead of countries such as Germany, France and the United States.

Finns no longer flying
Finland, which was previously in first place, has slumped to fifth, and there has been a wider downward trend for a number of Scandinavian countries.

It also records the rise of Poland, which has been hailed for reforming its post-Communist education system and sits in the top 10.
TOP 20 EDUCATION SYSTEMS
1. South Korea
2. Japan
3. Singapore
4. Hong Kong
5. Finland
6. UK
7. Canada
8. Netherlands
9. Ireland
10. Poland
11. Denmark
12. Germany
13. Russia
14. United States
15. Australia
16. New Zealand
17. Israel
18. Belgium
19. Czech Republic
20. Switzerland
Source: Pearson/ Economist Intelligence Unit

These rankings are based upon an amalgamation of international tests and education data – including the OECD’s Pisa tests, and two major US-based studies, Trends in International Mathematics and Science Study (Timss) and Progress in International Reading Literacy Study (Pirls).

They also include higher-education graduation rates, which helped the UK to a much higher position than in Pisa tests, which saw the UK failing to make the top 20.

The UK’s Business Secretary Vince Cable said: “The UK has a global reputation for excellence in higher education, attracting overseas students who make huge economic and cultural contribution to Britain.

“To maintain our position, we must continue to attract international students and promote the UK as a knowledge economy.”

A Learning Curve report accompanying the ranking says that the success of top-performing Asian countries reflects a culture in which teachers and schools are highly respected and “teachers, students and parents all take responsibility for education”.

Students in South Korea, with the strongest test results, will have had to memorise 60 to 100 pages of facts, says the report, raising questions about the long-term value of such rote learning.

The report also notes that highly-prized skills such as being creative and problem solving are much harder to measure and put into such rankings.

The lowest-ranked European country is Greece, with a group of emerging economies at the bottom of the table, including Indonesia, Mexico and Brazil.

 

natarajan

” நாம் அவன் கைகள் ஆட்டி வைக்கும் பொம்மைதான் … ” !!!

“என்ன செய்ய நானோ தோல் பாவைதான்
உந்தன் கைகள் ஆட்டிவைக்கும்
நூல் பாவைதான்’
– வாலி

 

நமக்கு நடப்பவைகளுக்கு நாம் காரணங்களை தெரிந்து கொள்ள முடியாமல் பிரமித்து நிற்கிறோம்.
அறத்தோடு வாழும் எனக்கு ஏன் இப்படி நடக்க வேண்டும்? நான் இதைச் செய்தேனே, அதை செய்தேனே, எனக்கு வெகுமதி கிடைக்காமல் வேதனை அல்லவா வாய்த்திருக்கிறது.
அறத்தை ஒதுக்கி வாழும் அடுத்தவனுக்குப் பரிசா? பலவாறு எண்ணி வேதனையுறுகிறது மனம்.
நானும் பலமுறை இக்கேள்விகளை அனுபவமின்மையால் எழுப்பியதுண்டு. இவற்றிற்கும் இன்னும் பல நூறு கேள்விகளுக்கும் அமரர் வாலியின் மேற்காணும் இரண்டு வரிகளே பதில்.
திரை இசைப் பாடலின் இரண்டு வரிகட்குள் இரண்டாயிரம் கேள்விகளின் பதிலை அடக்கிய அமரர் வாலியின் புலமைக்குப் பல வணக்கங்கள்.
புட்டப்பர்த்தியில் பகவானைக் காணக் காத்திருக்கும் அறையை ஒட்டி இருக்கின்ற திண்ணைக்கு வரண்டா என்ற பெயர். அங்கே மிக மிக முக்கியமானவர்களும், வேண்டப்பட்டவர்களுமே உட்காருவதற்கு அனுமதியுண்டு. வழமையான அங்கு தொடர்ந்து அமர்ந்திருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திலே அமர்வார்கள். ஒருமுறை அப்படிப்பட்ட ஒருவர் பக்கத்திலே நான் அமர்ந்தேன்.
அன்று பகவானின் தரிசனத்திற்காக இரண்டு மணிநேரத்திற்கு மேலாகக் காத்திருந்தோம். அப்பொழுது என் பக்கத்திலிருந்தவரிடம் “மிகுந்த நேரமாகிவிட்டதே இதற்கு மேலும் பாபா வருவார்களா?’ என்று கேட்டேன்.
“பகவானுடைய எந்த நடவடிக்கையையும் நாம் நிர்ணயம் செய்ய முடியாது. அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையுமு” ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் இருக்கும். அதை ரசிக்கும் உரிமை மாத்திரம் தான் உண்டு. ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன் கேட்டுக்கொள்’ என்றார்.
“அறுபது எழுபதுகளில் நான் பகவானுக்கு ஒரு முகமையாளர் போலப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். எனக்குக் கீழே ஒரு குமாஸ்தா ஒருவன் பணிபுரிந்து வந்தான். காசோலை எழுதிப் பகவானிடம் கையொப்பம் வாங்கி, அந்தக் காசோலையை மாற்றிச் செலவுக்குக் கொடுப்பது அவனது பணிகளுள் ஒன்று.
செலவு ஐந்நூறாக இருந்தால் எண்ணூராகப் பணமெடுப்பதும், இரண்டாயிரமாக இருந்தால் மூவாயிரமாக பணமெடுப்பதுமாக இருந்த செயலை நான் கண்டுபிடித்தேன்.
எனக்குக் கோபம் ஆத்திரமுமாக வந்தது. அவனை கண்டிக்கவோ வேலையிலிருந்து நீக்கவோ எனக்கு உரிமை இருக்கவில்லை. அவன் தினமும் ஐந்நூறு ஆயிரம் எனப் பணம் கையாடல் செய்ய முற்பட்டான். இதை உடனே பகவானுக்குச் சொல்ல வேண்டுமென்று துடித்தேன். இதைப்ப ற்றிப் பகவானிடம் பேச எத்தனித்த போதெல்லாம் அவர் தள்ளிப்போட்டார். பேசவும் விடவில்லை. எனது நிலை தர்ம சங்கடமாயிற்று. விரக்தியடைந்தேன்.
ஒரு நாள் பொறுக்க முடியாமல் இன்று கட்டாயம் பேசியே ஆக வேண்டும் என்று பகவானிடம் முரண்டு பிடித்தேன். “நாளைக் காலை வா’ என்று பகவான் சொன்னார்கள்.
பகவான் கடவுளாயிருந்தும் கூட, தன் அருகிலேயிருந்து திருடுகிறவனை ஒன்றும் செய்யாமலிருக்கிறாரே என்று நினைத்து எனது பணியிலிருந்து விலகவும் நினைத்தேன். அன்று பகவான் “நாளைக் காலை என்னுடன் உணவருந்த வா’ என்றழைத்தார்கள்.
மறுநாள் காலை அறையினுள் சென்ற பொழுது “கையாடல் பற்றி எனக்குத் தெரியும்’ என்றார்கள். நான் அசந்து போனேன். இருந்தாலும் “நீ சொல்’ என்றார்கள். எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்தேன்.
பகவான் சிரித்துக் கொண்டே, “உனக்கொன்று சொல்கிறேன் கேள். அவன் வீட்டில் என்னை வைத்து உணவளித்தவன். அவனுடைய நேரம் வந்தவுடன் சில நாள்களில் அவனாகப் போய்விடுவான் அதற்காக நீ துன்பப்படாதே” என்றார்.
“பகவான் எதையும் ஏன்? எதற்காக? அப்படிச் செய்கிறார்கள் என்று நம்மால் நிர்ணயிக்கவே முடியாது. அதனாலே அமைதி காத்து, நீ தரிசனம் பெற்றுச் செல்’ என்றார் முதியவர்.
நமக்கு நுனிப் புல் மேயத்தான் தெரியும் எல்லா விடயங்களையும் ஆழமாகப் பார்த்து அறியும் சக்தி கிடையாது.
நான் பகவானுடைய அன்புக்கு அடிமைப்பட்ட தினத்திலிருந்து பல்வேறு வகையான தொண்டுகளில் ஈடுபட்டேன். பணம் ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை. ஆனாலும் பெங்களூரிலே வைட் பீல்டிலே முன் வரிசையில் இடம் பிடிக்க படாத பாடுபட்டேன்.
சாதாரண பக்தனாக மட்டும் இருந்த காலம். அப்படியே போய் முன் வரிசையில் அமர்ந்தாலும் சேவா தொண்டர்கள் “நீ யார்?’ என்று கேட்டு என்னைப் பின் வரிசைக்கு அனுப்பி விடுவார்கள்.
ஒருமுறை பாபா நடந்து போகிற பாதையிலே எனக்கு இடம் கிடைத்தது. பாபா விபூதி வரவழைத்து என் கையில் கொடுத்தார்கள். நான் என்னையே மறந்தேன். அந்த விபூதி பெறுவதற்கு நான் ஏழு வருடங்கள் காத்திருந்தேன். அப்பொழுது தெரிந்தது, எதற்காகப் பகவான் எனக்கு முன் வரிசையில் இடம் தராமல் காத்திருக்க வைத்தார் என்று.
அவர் மீது நாம் வைத்திருக்கும் அன்பு கனிய வேண்டும். கனிந்துவிட்டால் அருள் கிட்டிவிடும். பக்திக் கனி கனியும் காலம் அவருக்குத்தான் தெரியும். நான் அவசரப்பட்டு, பாபா உன்னை அருகில் பார்க்க வாய்ப்பு ஏன் கிடைக்கவில்லைஎன்று வீணாக வருந்தினேன்.
பாபாவை இன்னும் அதிகமாக நேசித்தேன். சாயி சேவா என் இரத்தத்தோடு கலந்தது. பகவான் முன் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. பகவான் எனக்கு மோதிரமும் அணிவித்தார்.
அநாவசியமாகப் பக்தி பழுக்கும் முன் எனக்கும் உன் அருகில் வரும் வாய்ப்புக் கிடைக்க வேண்டுமென்று அழுவது சாமான்ய பக்தர்களின் முதிர்ச்சியற்ற ஒருகுறை. எதற்கும் திருவருள் கூட்டவேண்டும். வள்ளுவர் இதை அழகாகச் சொன்னார்.
வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது. (குறள் 377)
பிரித்தானியாவின் சிறிய மீன்பிடித் துறைமுகம் ஹல். மீன் பிடிக்க விசைப் படகிலே ஒரு குடும்பம் அங்கிருந்து சென்றது. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏழு.
துறைமுகத்தின் அணையை தாண்டிக் கடலுக்குள் சென்றபோது அப்படகு சுழியினுள் சிக்கித் தடுமாறியது. துறைமுகத்தின் அவசர உயிர்காக்கும் படையினருக்குச் செய்திஅனுப்பினர்.
உயிர்க்காக்கும் படையினரும் அவசர அவசரமாகப் புறப்பட்டனர். சாதாரணமாக அந்தப் படையினரின் எண்ணிக்கை ஓட்டுனருடன் சேர்ந்து அறுவர். ஆறாவது நபர் தன்னுடைய கவசங்களை அணிந்து ஏறத் தாமதம் ஏற்பட்டதால் ஐந்து பேருடன் அந்தப் படகு புறப்பட்டது.
தத்தளித்துக் கொண்டிருக்கும் படகை உயிர்க்காக்கும் படையினர் அணுகிய நேரம் அந்தப் படகு கவிழ்ந்து விட்டது.
கடுமையாகப் போராடினர். அந்த மீன்பிடிப் படகிலிருந்த பதினொரு வயதுடைய பையன் ஒருவன் உட்பட நால்வரைக் காப்பாற்றினர் மூவரைக் காப்பாற்ற முடியவில்லை.
உயிர்க் காக்கும் படையினரில் இருவர் அந்தச் சுழியினால் இழுத்துச் செல்லப்பட்டனர். எவ்வளவோ முயற்சிகள் செய்தும் உயிர்காக்கும் படையிலுள்ள இருவரையும் மீன் பிடிக்கச் சென்றவர்களில் மூவரையும் காப்பாற்ற முடியவில்லை.
உயிர்காக்கும் படை எஞ்சியவர்களோடு துறைமுகம் திரும்பியது.
பல ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த நிகழ்ச்சியை கருவாக்கித் தலையங்கமாக எழுதிய “சைக்காலாஜிஸ்ட்’ என்ற ஆங்கில மாதப் பத்திரிகையின் ஆசிரியர், “மீன் பிடிக்கச் சென்ற குடும்பத்தில் நான்கு பேர் மாத்திரம் ஏன் உயிர் பிழைக்க வேண்டும்? உயிர் காக்கும் படையில் ஒருவர் மட்டும் ஏற முடியாமல் போனதேன்? உயிர்காக்கும் படையில் ஒருவரை மட்டும் கரையில் விட்டு விட்டு அந்தப் படகு ஏன் செல்ல வேண்டும்? தங்கள் உயிரைச் ச்சமாக மதித்த உயிர்காக்கும் படையினரைச் சேர்ந்த இருவர் ஏன் உயிர் துறக்க வேண்டும்?’ எனக் கேட்டிருந்தார்.
ஆசிரியர் ஏன்? ஏன்? எனப் பல கேள்விகளுடன் தலையங்கத்தை முடித்துவிட்டார். அவரால் விடை சொல்ல முடியவில்லை.
இம்மாதிரியாக நமது வாழ்க்கையில் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நாமும் விடை காணமுடியாமல் ஏன்? ஏன்? எனற கேள்விகளை எழுப்புகிறோம். போட்டவன் தான் முடிச்சை அவிழ்க்க வேண்டும். நாம் அவன் கைகள் ஆட்டி வைக்கும் பொம்மைதான்.

– தெ. ஈஸ்வரன் in KALAIMAGAL….Tamil Monthly..

Natarajan

” அம்பாளுக்கு உரிய ஆராதனையை நீ முழுமையா கத்துண்டு இருக்கே …”

எத்தனை எத்தனையோ மகான்கள் இந்த பாரதத்துல பிறந்திருக்காங்க. அவங்களை தெய்வத்துக்கு சமமா வணக்கவும் செய்யறாங்க.
ஆனா, வாழும் காலத்துலயே நடமாடும் தெய்வம்னு சொல்லப்பட்ட, போற்றப்பட்ட, கடவுளுக்கு சமமாகவே கருதப்பட்டவர், மகா பெரியவாதான்.

 

அவர் சந்திரமௌலீஸ்வரருக்கும் காமாட்சிக்கும் பூஜை செய்யறது, தெய்வமே தெய்வத்துக்கு பூஜை செய்யற மாதிரி இருக்கும். பக்தி மணம் கமழ பரமாசார்யா செய்யற ஆராதனையைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் விடாதவங்க இல்லைன்னே சொல்லிடலாம்.
அந்த மகான், தான் ஆராதனைகள் செய்யறப்ப மட்டுமல்லாமல், தெய்வத்துக்கு யாரெல்லாம் பூஜை, புனஸ்காரங்கள் செய்யறாங்களோ அவங்க எல்லாருமே சிரத்தையாகம், பழமையான வழிபாட்டு முறைகளை கொஞ்சமும் மாற்றாமலும் செய்யணும்கறதுல உறுதியா இருந்தார். அதுவும் புராணப் பெருமை உடைய புராதனக் கோயில்கள்ல உரிய ஆகம முறையில் கொஞ்சம்கூட மாற்றம் செய்யக்கூடாதுங்கறதுதான் மகா பெரியவாளோட கட்டளை!
காஞ்சி மடத்தோட ரொம்ப நெருக்கின தொடர்பு உடையவர் ஸ்தானிகம் காமகோடி சாஸ்திரிகள். அவர் மகன் ஸ்தானிகம் சுரேஷ் சாஸ்திரிகள் சொன்ன அற்புதமான சம்பவம் ஒண்ணு, பூஜையை எப்படிப் பண்ணணும்னு மகாபெரியவா சொல்லியிருக்காங்கறதை எல்லாரும் தெரிஞ்சுக்க உதவக் கூடியது.
ஸ்தானிகம் காமகோடி சாஸ்திரிகளோட அப்பா, ஸ்தானிகம் வெங்கடராம சாஸ்திரிகள். அவர் தன்னோட மகன், ஸ்ரீவித்யா ஆராதனையை முழுமையா கத்துக்கணும்னு ஆசைப்பட்டார். அதனால, நெடிமுடி சுப்ரமணிய சாஸ்திரிகள் கிட்டே சேர்ந்து கத்துக்கச் சொன்னார். குஹானந்த மண்டலியை ஸ்தாபிதம் செய்தவர் சுப்ரமணிய சாஸ்திரிகள். அவரை சுருக்கமா “சார்’னு தான் கூப்பிடுவாங்க. இன்றைக்கும் அவர் எழுதிய ஸ்ரீவித்யா பாஷ்யம்தான், ஸ்ரீவித்யா பூஜைக்கான முழுமையான வழிகாட்டி நூலாக இருக்கு.
காமகோடி சாஸ்திரிகள், தன்கிட்டே ஸ்ரீவித்யா பூஜை முறைகளை முழுமையா கத்துக் கொண்ட பிறகு சுப்ரமண்ய சாஸ்திரிகள் ஒரு கடிதம் எழுதிக்குடுத்து, இதை மகாபெரியவா கிட்டே காட்டுன்னு சொன்னார். அந்தக் கடிதத்தை எடுத்துக்கிட்டு, காமகோடி சாஸ்திரிகளை பரமாசார்யாள்கிட்டே கூட்டிக் கொண்டுபோனார் அவர் அப்பா.
அந்த சமயம், ராமநாதபுரத்துல இளையாத்தங்குடியில் தங்கியிருந்தார், மகா பெரியவா. கடிதத்தை படிச்சுட்டு காமகோடி சாஸ்திரிகளை ஒரு நிமிஷம் உற்றுப்பார்த்த பெரியவா, “ஒரு நல்ல நாள்ல காமாட்சி அம்மனுக்கு பூஜை பண்ண ஆரம்பிச்சுடு’ அப்படின்னு சொல்லி ஆசிர்வதிச்சார்.
அப்படியே தொடங்கி, காமாட்சியம்மனுக்கு தினமும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்ய ஆரம்பிச்சார், காமகோடி சாஸ்திரிகள். பெரியவா காஞ்சிபுரத்துல இருக்கற நாட்கள்ல அம்பாளோட பூஜை பிரசாதத்தை எடுத்துக் கொண்டு போய் அவருக்குத் தருவாங்க.
காஞ்சி காமாட்சி அம்மன் கோயில்ல பௌர்ணமி தினங்கள்ல விசேஷ பூஜை நடக்கும் இரவு ஒன்பதரை மணிக்குத் தொடங்கப்படற அந்த பூஜை, நள்ளிரவு வரை நடக்கும். அதுல முக்கியமான விஷயம் என்னன்னா, அந்த ஆராதனையை யாரும் பார்க்க முடியாதுங்கறதுதான்.
சுமார் ஒன்பது மணி வாக்குல அந்த வழிபாட்டுல பங்கெடுத்துக்கற பக்தர்கள்கிட்ட சங்கல்பம் செய்துடுவாங்க. அதன்பிறகு கர்ப்பகிருஹத்தை சாத்திட்டு அர்ச்சகர்கள் மட்டும் உள்ளே இருந்து அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வாங்க.
காமகோடி சாஸ்திரிகள் அம்மனை ஆராதிக்க ஆரம்பிச்ச பிறகு ஒரு பௌர்ணமி பூஜைக்கு வந்தார், ஆசார்யார். பக்தர்கிட்டே சங்கல்பம் எல்லாம் முடிஞ்சதும், பூஜை பண்றதுக்காக கருவறையை சாத்தினாங்க. பரமாச்சார்யார், மூலஸ்தானத்துக்கு உள்ளேயே ஒரு மணையில அமர்ந்து எல்லா ஆராதனைகளையும் முழுமையா பார்த்தார். பூஜைகள் முடிஞ்சதும் பிரசாதம் வாங்கிக் கொண்டு புறப்பட்ட பெரியவா காமகோடி சாஸ்திரிகள்கிட்டே, “நாளைக்கு கொஞ்சம் மட்த்துக்கு வந்துட்டுப் போ’ன்னு சொல்லிட்டுபோனார்.
மறுநாள் மடத்துக்குப் போனார், சாஸ்திரி. அவர்கிட்டே பெரியவா “இந்த பௌர்ணமி பூஜையை ஏன் இப்படி நடுராத்திரியில யாரும் பார்க்காதபடி பண்ணணும்? பகல்லயே செய்யலாமே?’ அப்படின்னு கேட்டார்.
அதுக்கு காமகோடி சாஸ்திரிகள், “பெரியவா, உங்களுக்குத் தெரியாததில்லை. வேத, புராண முறைப்படி நடக்கற நவாவரணபூஜை இது. காலம்காலமா காமாட்சியம்மன் கோயில்ல இந்த நேரத்துலதான் பூஜை நடத்தறது வழக்கமா இருக்கு. இதை மாத்தி பகல்ல பண்ணணும்னா, பெரியவா நீங்கதான் உத்தரவு போடணும்’னு சொன்னார்.
புன்னகை செஞ்ச பெரியவா, “அப்படியெல்லாம் செய்யக்கூடாது. பூஜை முறைகள்ல சாஸ்திர சம்பிரதாயத்தை எதுக்காகவும் மாத்தக்கூடாது’ன்னு சொல்லிட்டு, இன்னொரு கேள்வியைக் கேட்டார்.
“ராத்திரியில செய்ய வேண்டிய பூஜை இதுன்னு சொல்றியே, ஆனா இதையே வசந்த நவராத்ரி, சாரதா நவராத்ரி சமயங்கள்ல மட்டும் பகல்ல செய்யறது ஏன்?’
பரமா சார்யா இப்படிக் கேட்டதும் எல்லாருக்கும் ஆச்சர்யம். ஏன் இப்படிக் கேட்கறார்? அவருக்குத் தெரியாத என்ன விவரத்தை சாஸ்திரிகள் சொல்லப் போறார்?னு எல்லாரும் கவனமா பார்த்தாங்க.
சாஸ்திரி விளக்கங்களை ஸ்ரீவித்யா உபாசனைல உள்ள பூஜா விதிகளைச் சொன்ன சாஸ்திரிகள், அந்த முறைப்படிதான் நவாவரண பூஜை செய்யப்படுதுன்னு சொல்ல, சில ஸ்லோகங்களையும் அதுக்க விளக்கமா சொன்னார்.
எல்லாத்தையும் பொறுமையா கேட்ட ஆசார்யாள், “உன்னை நான் கேட்ட கேள்விகள் எல்லாம், ஸ்ரீ வித்யா உபாசனையை நீ பூரணமா தெரிஞ்சுண்டு இருக்கியா?ன்னு பரிசோதிக்கவும், பழமையான பூஜை முறைகளை யாரும் எதுக்காகவும் மாத்தக்கூடாதுங்கறதை மற்றவங்க தெரிஞ்சுக்கணும்கறதுக்காகவும்தான். அதோட நீ என்னைப் பார்க்க வந்தப்ப ஒரு கடிதம் எடுத்துண்டு வந்தியே, அதுல உனக்கு பரீட்சை வைச்சு பார்க்கும்படி எழுதியிருந்தார், உன் குருநாதர். அதுக்காகத்தான் இப்படிக் கேள்வி கேட்டேன். அம்பாளுக்கு உரிய ஆராதனையை நீ முழுமை கத்துண்டு இருக்கே. உன் குருநாதர்கிட்டேயும் சொல்லிடு!’ன்னு சொல்லி காமகோடி சாஸ்திரிகளை ஆசிர்வதிச்சார்.
அதோட, “ஒரு விக்ரகம் பூஜா விக்ரகமா பிரதிஷ்டை செய்யப்பட்டபிறகு அதுக்கு பூஜை செய்யறவர் எந்தக் காரணத்தாலும் வழிபாட்டு முறைகளையோ, பூஜை நேரத்தையோ மாற்றவே கூடாது. மாற்றம் இல்லாம தொடர்ந்து செய்யறபோது, அந்த விக்ரகத்துல தெய்வ சான்னித்யம் நிறைஞ்சுடும். அதுக்கப்புறம் அந்த விக்ரகத்தை பூஜிக்கறவர், வணங்கற பக்தர்கள்னு எல்லாருக்குமே அந்த தெய்வீக சக்தி பலன்தர ஆரம்பிச்சுடும். அந்த விக்ரகம் இருக்கற தலம் சுபிட்சம் நிறைஞ்சதா மாறிடும்!’ அப்படிங்கற முக்கியமான விஷயத்தையும் எல்லாருக்கும் சொன்னார் ஆசார்யார்.

பி. ராமகிருஷ்ணன் in Kumudam Bakthi Tamil

natarajan