” சனீச்வரன் சிலை மட்டும் கொஞ்சம் உயரமா இருக்கே … ”

 

 



நகரத்தார்கள் அதிகம் வசிக்கும் ஊர ராயவரம் . அங்கே செல்வந்தர்களும் இருந்தார்கள், நடுத்தர மக்களும் இருந்தார்கள். ஆலமரத்தை போன்று பரந்து விரிந்து கிடந்த குடும்பம். அவ்வளவு வசதி என்று சொல்ல முடியாவிட்டாலும், சுமாராக வாழ்ந்து கொண்டிருந்தனர்.

எதையும் பெரிதாக செய்து முன்னுக்கு வர முடியவில்லையே என்று அவர்கள் கவலைப்பட்டது நியாயமே! தங்கள் நம்பிக்கையை கடவுள் மீது வைத்தனர். ஒரு சிவன் கோயிலை கட்டுவது என்று தீர்மானித்து, அதற்காக நிதி திரட்டி, கோயிலையும் நல்ல விதமாக கட்டி முடித்துவிட்டார்கள்.

கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து, அதற்கான பத்திரிகையை அடித்து எடுத்துக்கொண்டு முதல் அழைப்பை காஞ்சி மகானுக்கு கொடுக்க வேண்டும் என்று வந்தார்கள்.

சகல மரியாதைகளுடன் மகானிடம் அழைப்பிதழை கொடுத்தனர். அதை வாங்கி பார்த்தார் மகான்.

“கும்பாபிஷேகத்தை நடத்தணும்னா, அதுக்குள்ளே நீங்க ஒரு வேலை செஞ்சாகணும்”.

வந்திருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

மகான் அந்த ஊர பக்கம் வந்து வெகு நாட்கள் ஆயிற்று. மேலும் இப்பொது கட்டியுள்ள சிவன் கோயிலை அவர் பார்த்ததில்லை. என்ன வேலை செய்ய சொல்கிறார் ?

“நீங்க நவகிரக சந்நிதியில் எல்லா சிலைகளையும் வெச்சிருக்கீங்க, இல்லையா?

“ஆமா”

“அதுலே இருக்கிற சனீஸ்வர சிலை மட்டும் கொஞ்சம் உயரமா இருக்கு இல்லையா?

அதிர்ச்சியோடு “ஆமாம் ” என்றார்கள்.

“மகான் பார்காமலேயே இதை சொல்கிறாரே?!”, என்று அவர்களுக்கு வியப்பு.

“நவகிரங்கல்ல ஒரு கிரகம் மட்டும் உயரமாக இருக்க கூடாது. அதை அங்கிருந்து எடுத்து வேறு பக்கமா தனியா வெச்சிட்டு, மற்ற கிரகங்கள் உயரத்திலேயே ஒரு சனிபகவானை அங்கே ஸ்தாபிதம் பண்ணிடுங்கோ”, என்றார்.

கோயிலை பார்க்காமல், அதில் உள்ள குறையை மட்டும் சுட்டி காட்டிய மகானை மனதார வணங்கிவிட்டு, அவர் சொன்ன மாறுதலை செய்தனர்.

“சனீஸ்வரன் சிலை தனியாக கிடைப்பது கஷ்டம்”, என்று வேறு சொன்னார்கள் . செய்தால், ஒன்பது கிரகங்கள் தான் செய்ய வேண்டும்.

மகானின் அருளாசி இருக்க, இவர்களுக்கு என்ன குறை?

சனீஸ்வரன் சிலை கிடைத்தது. ஸ்தாபிதமானது. அந்த உயரமான சிலையை தனியே ஒரு இடத்தில வைத்தார்கள்.

பலரும் திருப்தியடையும்படி அங்கே கும்பாபிஷேகம் நடந்தது.

முன்பே குறுப்பிட்ட அந்த குடும்பம் அன்றிலிருந்து நன்றாக செழித்து பெருக தொடங்கியது.  

source:::: http://www.periva.proboards.com

natarajan

” குழந்தைக்கு அனுஷா என்று பெயர் வை … “

மகான்கள் நம் கனவில் வருவதுற்கு மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் . அந்த கனவு நனவாகும் போது கிடைக்கும் மகிழ்சிக்கு அளவே கிடையாது .

இந்த கணவன் மனைவிக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்த நேரத்தில், ஒரு நாள் அந்த மனைவியின் கனவில் பரமாச்சார்யார் வருகிறார். அவர்கள் வீட்டிற்குள் வந்து எல்ல இடத்தையும் பார்த்து விட்டு, பூஜை அறையும் பார்த்து விட்டு வெளியே செல்கிறார்.

அச்சமயம் , அந்த பெண் ஆசார்யரிடம், என் குழந்தையை பார்த்து ஆசீர்வாதம் பண்ணுங்கோ என்கிறார். அதற்கு, மகான், நீ குழந்தையை அங்கே கொண்டு வா என்கிறார் . அத்துடன் கனவு கலைகிறது..

அது முதல் , அந்த பெண்மணிக்கு காஞ்சிபுரம் சென்று ஆசார்யாராய் தரிசனம் செய்ய வேண்டும் என்று தவிப்பு.

தன கணவனுடன், குழந்தையை எடுத்து கொண்டு, காஞ்சிபுரம் சங்கர மடம் செல்கிறார். அங்கு ஆச்சர்யாளை பார்க்க காலையில் பெருங் கூட்டம். . கையிலோ மூன்று மாத குழந்தை. இருப்பினும் அந்த பெண்மணி மனம் தளரவில்லை . எவ்வளவு நேரமானாலும் பெரியவாளை தரிசனம் செய்யாமல் செல்வதில்லை என்ற முடிவோடு குழந்தையுடன் அங்கேயே அமர்கிறார். மாலை வருகிறது .. ஆசார்யாள் தரிசனம் ஆரம்பம்.

அப்பொழுது, ஒரு அணுக்க தொண்டர் ஒருவர், அந்த பெண்மணியிடம், குழந்தையை பெரியவாளிடம் கொடுக்க சொல்கிறார். பெரியவா அந்த மூன்று மாத குழந்தையை தன் மடியில் வைத்து கொண்டு வைத்து கொண்டு, கொழந்தைக்கு பெயர் வைச்சாச்சா என்று கேட்கிறார். இல்லை என்கிறார் அந்த தாய். அப்படி என்றால் இவளுக்கு காமாக்ஷி என்று பெயர் வை என்கிறார். அதற்கு அந்த பெண்மணி, என்னுடைய பெயர் காமாக்ஷி என்கிறார். பிறகு மகான், அப்படினா இவளுக்கு ” அனுஷா ” என்று பெயர் வை என்கிறார் . மகான் திரு வாயால் பெயர் பெற்ற குழந்தை . தன்னிடம் 20 -30 நிமிடங்கள் வைத்து கொண்டு பிறகு குழந்தையை தாயிடம் திரும்ப கொடுக்கிறார்.

மகான் தன மடியில் குழந்தையை வைத்து கொண்டு இருப்பதை பார்த்ததில் அங்கு கூடி இருந்தவர்களுக்கு மிகவும் ஆச்சர்யம். அப்பொழுது , அந்த பெண்மணிக்கு, மகான் கனவில் வந்து, ” கொழந்தையை அங்கே கொண்டு வா ” என்று சொன்னதின் அர்த்தம் விளங்கியது.

மஹா பெரியவரை தரிசனம் செய்வதற்கே ஒரு கொடுப்பினை வேண்டும். அவரிடம் ஆசி பெறுவதற்கு மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

எங்கும் நிறைந்த அந்த பரப்ருமம் மடியில் இருக்க அந்த குழந்தை செய்த தவம் யாரறிவார் !! அந்த பரப்ருமமே அறியும் !!

” இலங்கை அழிந்ததேன் ?… இரவி மறைந்ததேன்? …” !!!

தமிழ்ச் சொற்சுவை உள்ளத்தே புகுந்து உணர்விலே ஒன்றி, கண்களில் நீர் கசியும் போதில்…
அடடா! அனுபவித்தவர்களுக்கே அதன் தரமும் சுவையும் புரியும். அற்றை நாளிலும் இற்றை நாளிலும் அடியேன் நாடுவது நல்ல நண்பர்களின் துணையை!
கவிஞர் நந்தலாலா – நெருங்கிய நண்பர்களில் ஒருவர். அவருடன் பேசிக் கொண்டிருந்தாலே போதும்… கவிச்சுவையும் தமிழ்ச் சுவையும் பண்டை இலக்கிய வாழ்வின் சுவையும் ஒருங்கே உளத்தில் புகும்.
ஆறேழு வருடங்களுக்கு முன்னர் பொதிகை-தொலைக்காட்சியில் ஒன்றாக நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கின்றோம். அப்போதும் அச்சுவை பருகி மகிழ்வேன் யான்.
ஒரு நாள் காலை… பொதிகையில் நண்பர் நந்தலாலா சொல்லின் சுவையை தனிமையிலே எடுத்துச் சொன்ன வண்ணம் இருந்தார். கேட்டுக் கொண்டிருந்தேன் சுற்றுப் புறச் சூழல் மறந்து!
அற்புதமான நினைவாற்றல் அவருக்கு. காளமேகத்தின் சிலேடையை தொய்வின்றித் தொகுத்தளித்தார்.
சிறுவயதில் சொல் விளையாட்டு எங்களுக்கும் அத்துபடிதான். எல்லாம் நம் கிராமங்களில் பிறந்து, வளர்ந்து, நல்லோரிடம் தமிழ் படித்துப் பழகியிருக்க வேண்டும்… அந்த வாய்ப்பு கிடைத்தது நான் செய்த புண்ணியம்.
கவிஞர் நந்தலாலா சொன்ன ஓரிரு சொற்சுவையைக் கோடிட்டுக் காட்டாமல் இருந்தால் எப்படி?
அவருடைய சிறுவயதில் பெரியவர்கள் கேட்பார்களாம்… அந்தக் கேள்விகளுக்கு ஒற்றைச் சொல்லால் பதில் தரவேண்டும். இதுவும் ஒரு விளையாட்டு!
பெரியவர் கேட்பாராம்… “இலங்கை அழிந்ததேன்? இரவி மறைந்ததேன்?”
இதற்கான ஒற்றைச் சொல் பதில் – “இராமன் தாரத்தால்”!
அதெப்படி…? இலங்கை அழிந்தது – இராமன் தாரத்தால்! இரவி மறைந்தது – இரா மந்தாரத்தால்!
இன்னொன்று..
அக்ரஹாரம் கெட்டதேன்? விவசாயம் அழிந்ததேன்?
இதற்கான பதில்… “பார்ப்பான் இல்லாமையால்!”
பார்ப்பு எனும் வேதமோதும் வேதியன் இல்லாமல் அக்ரஹாரங்கள் கெட்டன. விவசாயத்தைப் பார்ப்பவன் இல்லாமல் அதுவும் அழிந்து வருகிறது!
தனிமையைப் பற்றிச் சொன்ன நந்தலாலா, ஒரு கவிதை நயத்தைச் சொல்லி விடைபெற்றார்…
இக்பால் சாகும்வரை உன் பிணத்தை நீதான் சுமக்க வேண்டும்!
– உள்ளத்தில் உழன்று கொண்டிருக்கிறது இந்த வாசகம்!

செங்கோட்டை ஸ்ரீராம் – in Dinamani…blog.dinamani.com

natarajan

பேர் ஆசை ….பேராசை !!!

பத்திரிகைத் துறைக்கு வந்த புதிது… இளம் வயது. நம் பெயரை அச்சில் ஏதேனும் ஒரு படைப்பிலேனும் பார்க்கும் போது ஒரு மகிழ்ச்சி மனதில் நிறையும். உணர்ந்து பார்த்தவர்களுக்கு அதன் அருமையும் பெருமிதமும் புரியும்.
வயது 23. அதுவரை பெரிதாக எதுவும் எழுதி அச்சில் வந்துவிடவில்லைதான். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி வருடாந்திர தொகுப்புகளில் கவிதைகளும், வானியல், கணிதம் குறித்த கட்டுரைகளும் வந்திருந்தன. ஆனால் இதழ்களில் அப்படி ஏதும் நான் அதுவரை முயற்சி செய்யவில்லை.
அப்படியாக இதழியல் துறைக்கு வந்த புதிது என்பதால், எனக்குள்ளும் நம் எழுத்தை அச்சில் பார்க்க மாட்டோமா என்று இருந்தது. வழக்கம்போல் சிறு கவிதைகள் எழுதினேன். இரு வரிகளில் அமைந்த புதுக் குறள் எனும் கவிதை எழுதினேன். அவற்றில் தளை தட்டாமல் குறள் வெண்பாவெல்லாம் அப்படி ஒன்றும் சரியாக அமைந்திருக்கவில்லை என்பது பின்னாளில் புரிந்தது. இருந்தாலும் கருத்தொடு நின்றது.
அப்படி ஒரு புதுக்குறள் கவிதையை கணினி அச்சுக் கோர்ப்பவர் அடித்து, மெய்ப்பு திருத்த (புரூஃப் பார்க்க) வைத்திருந்தார்.
அப்படியாக அச்சில் வந்த அந்தப் புதுக்குறள்..

kural
பொய்யர்தாம் என்றேனும் மெய்கூறின் அம்மெய்யும்
பொய்யெனக் கருதப் படும்.

 

 
நாகலிங்கம் என்று ஒரு பெரியவர். சினிமாத் துறை பழக்கமுள்ளவர். திரைக்கதைகளை செப்பனிட்டுத் தரும் பணியில் இருந்திருக்கிறார். அவரிடம் பேசியதில் அவர் பழுத்த அனுபவம் உள்ளவர் என்று எனக்குத் தெரிந்திருந்தது. அப்போதே அவருக்கு வயது 75ஐத் தொட்டிருந்தது.
இந்த மெய்ப்பைப் பார்த்தவர் வெடுக்கெனச் சிரித்தார். எனக்கோ, ஏதோ தவறு நேர்ந்துவிட்டதோ என்று உள்ளம் பதறியது. கலவரத்துடன் அவர் முகம் பார்த்தேன்….
சிரித்தபடியே என்னிடம் கேட்டார்…
“1330 குறள்களை எழுதின அவரோட பேர் என்ன தெரியுமா?” கேட்டார் சலனமில்லாமல்.
“திருவள்ளுவர்” என்றேன்.
“அது நாமாக வைத்த பெயர்… அவரோட பேர் என்ன தெரியுமா?”
“தெரியாது.”
“1330 குறள் எழுதின அவரே தன் பேரை எங்கயுமே சொல்லிக்கலை… நீ ஏதோ குறள்னு ஒண்ணு எழுதிட்டு…. அந்தக் கவிதை அச்சாகியிருக்கற 10 பாயிண்ட் லெட்டர் சைஸை விட பெரிதாக உன் பேரை 14 பாயிண்டில் போட்டிருக்கே….”
எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. வேதம்புதிது படத்தில் சத்யராஜ் கன்னத்தில் சிறுவன் அங்கயும் இங்கயும் அடித்து திருப்பும் சத்தமும் காட்சியும்தான் மனதில் ஓடியது.
எழுத வந்த துவக்கத்திலேயே பேர் ஆசையை விட்டுவிட்டேன். பேராசையையும்தான்! எழுத்தாளன் என்ற கர்வத்தை மூட்டை கட்டி பரண் மேல் போட்டு விட்டு, பத்திரிகையாளன் என்ற ஏணிப்படியாய் என்னை மாற்றிக் கொண்டேன். அந்தத் துவக்கம்… எனக்குள் பெரும் மாற்றத்தைத் தந்தது. அதற்குக் காரணமாய் அமைந்தவர் நாகலிங்கம் தாத்தா… அவரை நன்றியுடன் இப்போதும் நினைவு கூர்கிறேன்..!

செங்கோட்டை ஸ்ரீராம் in Dinamani ….Blog.dinamani.com

natarajan

” இந்த பிரசாதம் சுந்துவுக்கு …”

தன்னிடம் அளவு கடந்த பக்தி கொண்டவர்களுக்கு மஹான் தேவையான போது ஆசிகளையும் பிரசாதங்களையும் வழங்குவது வழக்கம்.

நான் சொல்லும் இந்த நிகழ்ச்சி திருச்சி சுந்தரேசனைப் பற்றியது. அவருக்கு மஹானிடம் இருந்த ஈடுபாடு கொஞ்ச நஞ்சமல்ல. எல்லாமே தமக்கு மஹான் தான் என்று மனதார நம்பிய பக்தர்களில் அவரும் ஒருவர். சுந்தரேசன் தனது ரயில்வே பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னை நங்கநல்லூரில் தன் மகன் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு உடல்நிலை முற்றிலும் கெட்டுவிட படுத்த படுக்கையாக இருந்தார். இந்த நிலையில் காஞ்சி மஹானைப் பார்க்கப் போகவில்லையே என்கிற கவலை அவரை ஒரு பக்கம் வாட்டி எடுத்தது.

அந்த சமயம் மஹான் பிறந்த அனுஷ நட்சத்திரத்திற்கு மறுநாள் பெரியவா கிரஹ ராஜகோபாலும், பிரதோஷம் மாமாவின் நெருங்கிய சீடரான ஆடிட்டர் ரவியின் தந்தையும் அனுஷ பூஜை பிரசாதங்களை எடுத்துக் கொண்டு மஹானைப் பார்க்கப் போயிருந்தார்கள். மஹானிடம் பிரசாதத்தை சமர்ப்பித்த பிறகு, அங்கே வரும் பக்தர்களுக்கு வழி விட்டு ராஜகோபால் ஒரு பக்கமாகப் போய் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்துவிட்டார்.

அந்த சமயத்தில் மஹான் அவரை அழைத்து, “இந்த பிரசாதத்தை கொண்டு போய் சுந்துவிடம் கொடு” என்று சொல்வது போன்ற நினைவு அவர் மனதில் ஓடியது.

திடீரென்று விழித்துப் பார்த்த அவர், தன் அருகில் யாரும் இல்லாததைக் கண்டு வியந்தார். தனக்கு மஹான் இட்ட உத்தரவு பிரமையா, மஹான் இட்ட கட்டளையா என்று தடுமாறிக் கொண்டு இருந்தபோது மஹான் அழைப்பதாக மடத்து ஊழியர் ராஜகோபாலை அழைத்தார்.

மஹானின் முன் பவ்யமாக அவர் நின்றபோது, மஹான் அவரிடம் பிரசாதத்தைக் கொடுத்து, “இதைக் கொண்டு போய் அவனண்டே உடனே கொடு” என்று மட்டும் சொன்னார். பொறிதட்டியது போல் ராஜகோபாலுக்கு உடனே அந்த சுந்து யார் என்று புரிந்து விட்டது. வேறு யார்? அவருடைய பெரியப்பாவும் மஹானின் தீவிர பக்தருமான சுந்தரேசன் தான்.

அவன் யார்? என்று சொல்லாமல், பிரசாதத்தைக் கொண்டு போய் கொடு என்றால் தியானத்தில் இருந்தபோது மஹான் சொன்னதும் உண்மையான கட்டளை தான்.
தன் மனதில் தோன்றியதற்கும் இப்போது மஹான் கட்டளை இடுவதற்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரிந்தது.

ராஜகோபாலும் “யாரண்டை” என்கிற கேள்வியை எழுப்பிக் கொண்டு நிற்கவில்லை.

பிரசாதத்தை எடுத்துக் கொண்டு போய், நங்கநல்லூரில் இருந்த தன் பெரியப்பாவிடம் சமர்ப்பித்தார் ராஜகோபால்.

“நான் பார்க்கவரலேயேன்னு நீயே எனக்குப் பிரசாதத்தை அனுப்பினியா மஹானே?” என்று கண்களில் நீர் வழிய கேட்டபின் அந்த முடியாத நிலையிலும் பிரசாதத்தை பயபக்தியோடு உட்கொண்டார். உடல்நிலை மோசமாகத்தான் இருந்தது.

இருந்தாலும் மஹானின் பிரசாதத்தை உட்கொண்ட பின்னர், மேலும் சில தினங்கள் அவர் உயிரோடு இருந்து பிறகு இறைவனடி சேர்ந்தார். மஹான், தன் பக்தர்களை எப்படி எல்லாம் ஆட்கொண்டார் என்பதற்கு இது இன்னொரு உதாரணம்.

 

source::::www.periva.proboards.com

natarajan

” Woh Din “….A Video That Will Make you nostalgic…

 

 

 

 

If you’ve gone through the 90s as a kid, then this video will make you nostalgic. A trip down the memory lane when things used to be simpler and fun; from textbook cricket to Nagraj comics, from Duck Tales to Surabhi, from F.L.A.M.E.S to approaching a girl through a wingman, from familiar postmen to a single landline in a Mohalla, this film has covered it all.

“Woh Din” is a tribute to the glorious decade of 90′s by the creative ‘emotional fools’ at EmotionalFulls.

Thank you for such a wonderful film.

Credit: EmotionalFulls  AND STORY PICK & YOU TUBE

natarajan

” God’s Own Child From God’s Own Country “….

Edmund Thomas Clint was a child prodigy from Kochi, Kerela. Sadly, he lived only for 7 years and passed away due to kidney failure.

But what he did in those 7 years is a work of sheer genius. At such a tender age, he had the creative bent of an artistic legend: he created some fine 25,000 artwork in just 2522 days!

Clint Road in Kochi is named after him. There are books and films on his unbelievable journey, yet this is an untold story. The video rightly attributes,

“Gods Own Child from God’s Own Country”

 

 

 

source::: You Tube and Story Pick

natarajan

Sri Mahapriava Sri Pada Darsnam …On Anusham Day …

 

Anusham Special – 18 APRIL 2014…

Here is a beautiful compilation of Guru Paduka Stotram, interwoven with Periva’s rare photos – carefully chosen sets where you can get to have his Padam/Paduka darshan in almost every photo.

 

 

 

source::::www.periva.proboards.com

natarajan

 

 

 

” என்ன காப்பி சாப்பிட்டாச்சா …. !!!!”

 

மஹான் கொடுத்த காப்பி



காஞ்சிமாமுனிவர் கேரள மாநிலம் கொல்லங்கோடு என்ற ஊரில் முகாமிட்டிருந்த சமயம். அப்போது அங்கே வேதத்திற்கான ஆய்வு சபையை அவர் கூட்டி இருந்தார். விஷ்ணுபுரம் வேதபண்டிதர் ஒருவரும் அந்த சபைக்காக அங்கே அழைக்கப்பட்டு இருந்தார்.

மடத்தில் அன்புக்கட்டளையின்படி, காப்பி என்பது தவிர்க்கப்பட்ட பானமாக இருந்தது. உடலின் நன்மைக்காகவும் மற்றும் ஏதோ ஒரு தெய்வ சூட்சுமத்தை அறிந்ததாலோ என்னவோ மடத்து சிப்பந்திகளும் காப்பி தயாரிப்பதையோ, அருந்துவதையோ தடை செய்து, மிகவும் கடுமையான நியமமாக மஹான் ஸ்ரீமடத்தில் கடைப்பிடிக்கச் செய்திருக்கிறார்.

இருந்தாலும் காப்பி பழக்கம் தவிர்க்க முடியாத ஒன்றல்லவா? தொடர்ந்து பல வருடங்களாக அந்தப் பானத்தை அருந்துபவர்களுக்கு, குறித்த நேரத்தில் அது கிடைக்காமல் போனால் தாங்க முடியாத தாபம் ஏற்படுவதுண்டு. இதே நிலையில் தான், விஷ்ணுபுரம் பண்டிதரும் அந்த அதிகாலை காப்பிக்காக ஸ்ரீமடத்தில் தவித்துக்கொண்டிருந்தார்.

அப்போது யாரோ ஒரு அன்பர், அவரை மட்டும் தனியாக வெளியே அழைத்துச் சென்று, இவர் கேட்காமலேயே சூடாகக் காப்பியைக் கொண்டுவந்து கொடுத்தார். பண்டிதருக்கு ஒரே ஆனந்தம். போன உயிர் வந்தது போல் மகிழ்ச்சி. சிறிது நேரத்தில் வேத சபை கூடியது. மஹான் சபைக்கு வந்ததும் அவரை நமஸ்கரித்துவிட்டு இந்த பண்டிதர் அவர் அருகில் சென்றார்.

“என்ன காப்பி சாப்பிட்டாச்சா?” பெரியவா தனக்கே உரிய தெய்வீகப் புன்சிரிப்போடு கேட்டதும், ஆடிப்போய் விட்டார் பெரியவர். யாருக்குமே தெரியாதென்று தான் செய்த காரியத்தை, மஹான் தன் தவறை சுட்டிக்காட்டுவது போல் கேட்டதும், அவருக்கு மனதில் பயம் தோன்றிவிட்டது.

“வந்து வந்து ஏதோ கொடுத்தான்” என்று பட்டும்படாமலும் , பளிச்சென்று சொல்லாமலும் குற்ற உணர்வோடு இருந்தார்.

“நான் தான் உங்களுக்குக் கொடுக்கச் சொன்னேன்” என்று சிரித்துக்கொண்டே மஹான் சொன்னபோது, தன் மீதுள்ள கரிசனத்தை அறிந்த அந்த முதிய பண்டிதர் ஆடித்தான் போய்விட்டார். மடத்தில் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. வெளியே இருந்து இங்கே வருபவர்கள் ஏன் தங்களின் பழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்? இதை நன்றாக அறிந்த மஹான் தான் விஷ்ணுபுரம் வேதபண்டிதருக்கு, விதிவிலக்கு அளித்திருந்தார். 

இப்படி வேண்டியதை வேண்டியவாறு எல்லோருக்கும் அருளும் மாபெரும் தெய்வமான காஞ்சி மஹானை நாம் சரணடைய வேண்டாமா?  

 

source:::: http://www.periva.proboards.com

natarajan

” உங்கள் உடல் ஒரு கார் அல்ல- …” !!!

 

ஒரு நகைச்சுவைக் காட்சியில் வயிற்று வலி வந்த நோயாளியைச் சுற்றிப் பல மருத்துவர்கள் நிற்பார்கள். ஒருவர் குடல் நோய் மருத்துவர், அவர் உடனடியாகக் குடல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பார். சிறுநீரக மருத்துவர் கிட்னியில் இருக்கும் கல்லை உடைக்க வேண்டும் என்றும், எலும்பு மருத்துவர் எலும்பில் உடனே பிளேட் மாட்ட வேண்டும் என்றும் சொல்வார்கள்.

இப்படி ஒவ்வொரு சிறப்பு மருத்துவரும் ஒவ்வொன்றைக் கூற நோயாளி மயங்கிவிடுவார். தற்போது இந்த நகைச்சுவை மருத்துவ உலகில், மருத்துவமனைகளில் அன்றாடம் நடக்கும் சம்பவமாக மாறிவிட்டது. குடும்ப மருத்துவர் யார், அவருடைய தேவை என்ன என்பது பற்றி மனநல மருத்துவர் ஆ.காட்சன் கவனப்படுத்தும் விஷயங்கள்:

ஒரு டாக்டரை, இவர் எங்களுடைய பேமிலி டாக்டர் என்றும், இவர்கிட்டதான் எங்க குடும்பமே மருத்துவம் பார்த்துக் கொள்வோம் என்று சொல்லக் கேள்விபட்டிருப்போம். ஆனால், ஃபேமிலி டாக்டர் என்று அழைக்கப்படும் குடும்ப மருத்துவர் யார் என்று தெரிந்துகொள்வது அவசியம்.

முன்பெல்லாம் குடும்பத்தில் உள்ளவர்களுக்குச் சிறு வயதிலிருந்தே எந்த நோயாக இருந்தாலும் நன்கு பரிச்சயமான ஒரு மருத்துவரிடம் மட்டுமே, பெற்றோர் அழைத்துச் செல்வது வழக்கம். அந்த நபரின் உடல்நிலை, அடிக்கடி ஏற்படும் பிரச்சினைகள், குடும்பம், பொருளாதாரச் சூழ்நிலை, எந்த மருந்து ஒத்துக்கொள்ளும், எது ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பது போன்ற விவரங்கள் எல்லாம் அவருக்கு அத்துப்படியாகி இருக்கும்.

ஒருவேளை அவர் தனது மருத்துவ வரம்பை மீறிய நோயாக இருந்தால், எந்தச் சிறப்பு மருத்துவரிடம் அல்லது உயர் சிகிச்சைக்குச் செல்ல வேண்டும் என்பதை உங்களுக்கு வழிகாட்டும் அல்லது முடிவுஎடுக்கும் முக்கிய நபர்களில் ஒருவராக இருந்து சொல்வார் சரி, நோய்க்கும் குடும்ப மருத்துவருக்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் கேட்கலாம்.

நம்பிக்கையே அடிப்படை காரணம்

ஒரு நோயாளியின் நோயைக் கண்டறிவது மற்றும் குணப்படுத்துவதில் அந்த நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடையே ஏற்படும் நம்பிக்கை மற்றும் புரிந்துகொள்ளலை அடிப்படையாகக் கொண்ட ஒரு உறவு தான் அடித்தளம் எனக் கூறுகிறார் எக்கிஹார்டு ஒத்மர் என்ற மருத்துவ அறிஞர். ஒரு நோயாளி மருத்துவரிடம் கொண்டுள்ள நம்பிக்கை, எதிர்பார்ப்பு, உணர்ச்சிகள்தான், மருத்துவர் – நோயாளி என்ற உறவை மேம்படுத்துவதுடன் நோய் குணமடைய ஒரு காரணியாகவும் அமையும்.

இதை உளப்பகுப்பாய்வின் தந்தை என்றழைக்கப்படும் 19-ம் நூற்றாண்டின் மனநல மருத்துவர் சிக்மண்ட் ஃபிராய்டு (Sigmund freud) தெளிவாக விளக்கியுள்ளார். தாய் – குழந்தை உறவு வளர்ச்சிக்கும், கணவன் – மனைவி உறவு |வாழ்க்கைக்கும் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு இந்த மருத்துவர் – நோயாளி உறவு என்பது மனரீதியாக மட்டுமல்ல, உடல் நோய்கள் குணமடைதலில் மருந்துகளுக்கு நிகரான முக்கியப் பங்கையும் வகிக்கிறது.

இன்றைய மருத்துவ உலகம்

இத்தகைய மதிப்பு வாய்ந்த உறவு, இன்றைக்கு வெறும் சேவை அளிப்பவர் – வாடிக்கையாளர் என்ற நிலைக்கு மாறியதற்கு இரு தரப்பினருமே பொறுப்பு தான். பெரிய மால்களில் பலரும் விண்டோ ஷாப்பிங் செய்வதைப் பார்க்கலாம்.

அது போலத்தான் பல நோயாளிகள் அவர்களாகவே ஒரு முடிவுக்கு வந்து, ஒவ்வொரு நோய் அறிகுறிக்கும் ஒவ்வொரு சிறப்பு நிபுணரைத் தேடி மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறங்கும் நிலை உள்ளது. திருப்திக்காக ஒரே பிரச்சினைக்குப் பல மருத்துவர்களின் ஆலோசனையை நாடும் நிலை உள்ளது. இதை ‘டாக்டர் ஷாப்பிங்’ என்று சொல்லலாம்.

பின்விளைவுகள்

சுருக்கமாகச் சொன்னால் பல மெக்கானிக்குகளின் கையில் சிக்கிய காரின் கதைதான் இது. மொத்தத்தில், பரஸ்பரப் புரிந்துகொள்ளல் மற்றும் மருத்துவர் – நோயாளி இடையிலான உறவு ஏற்பட இரு பக்கத்தில் உள்ளவர்களும் வாய்ப்புகள் கொடுக்கவில்லை என்பதே உண்மை.

குடும்ப மருத்துவர் முறை மாறிவருவதால் நோய் கண்டறிவதில் காலதாமதம், வீண் அலைச்சல், பண விரயம் ஏற்படுவதுடன் மருத்துவத்தின் மீதான நம்பிக்கையும் குறைகிறது. மேலும் முன் காலங்களைக் காட்டிலும் நோயாளியின் உறவினருக்கும் மருத்துவ ஊழியருக்கும் இடையே ஏற்படும் பிரச்சினைகள் அதிகரிப்பதற்கு மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையேயான கருத்துப் பரிமாற்றத்தில் இடைவெளி அதிகரித்துள்ளதே காரணம்.

இதனால் சிறப்பு மருத்துவர்களைப் பார்ப்பதே தேவை இல்லை என்று அர்த்தமல்ல. தேவைப்படும் நேரத்தில், அது அவசியமான ஒன்றுதான். ஆனால், குடும்ப மருத்துவர் முறை என்பது, அதைக் காட்டிலும் அதிக நன்மைகள் நிறைந்த விஷயம். நவீனமயமாக்கத்தை பின்பற்றிச் சென்று, பாரம்பரியப் பழக்கங்களை நாம் மறந்து போயிருந்தாலும், நலம் பயக்கும் இந்த மருத்துவர் – நோயாளி உறவைப் பேணி காத்தால் நமது எதிர்காலச் சந்ததிகளுக்கு நல்வாழ்வு நிச்சயம்.

மனநல மருத்துவர் ஆ.காட்சன், தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com