தில்லி உத்தரசுவாமி மலை கோயில் உருவான பின்னணி …

தில்லி உத்தர சுவாமிமலை

இந்தியா சுதந்தரம் அடையும் தருணத்துக்கு முந்தைய டெல்லி. டெல்லியில் குடிபுகுந்திருந்த தமிழர்கள்,ரமணமகரிஷி அளித்திருந்த சுவாமிநாத சுவாமியின் ஒரு சிறு மரச்சிலையை வைத்து பூஜித்து வந்தார்கள்.1944-ஆம் ஆண்டு முதல் கந்த ஷஷ்டி விழாவைப் பெரிய அளவில் சிறப்பாகவும் நட்த்தினார்கள்.இருப்பினும் தென்னிந்தியக் கலையுடன் கூடிய முருகன் கோயில் ஒன்றில்லையே என்ற ஏக்கம் மட்டும் அவர்களுக்குப் பெரிய மனக்குறையாகவே இருந்தது.

எல்லாவற்றுக்கும் ஒரு தருணம் வரவேண்டும் அல்லவா! பிற்காலத்தில் ஒரு குட்டித்தமிழ் நாடாக விளங்கிய ராமகிருஷ்ணாபுரம் அச்சமயம் பெருங்காடாக விளங்கியது. அதன் நடுவே ஒரு சிறு குன்றும் காணப்பட்டது. குன்று தோறாடும் குமரனுக்கு இது ஏற்ற இடமாக இருக்குமே என்று பக்தர்கள் எண்ணினர்.

கனவில் வந்த கந்தன்
1961-ஆம் வருடம். டெல்லி சரோஜினி நகரிலிருந்த விநாயகர் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.அந்த கும்பாபிஷேக தினத்தன்று பக்தர் ஒருவருக்குக் கனவு ஒன்று வந்தது. அந்தக் கனவில் வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர்,கனவு காணும் நபரின் கையைப் பிடித்துக் கொண்டு அவரை அவரின் இருப்பிடத்துக்குக் கொண்டு விடுமாறு கேட்டுக் கொள்கிறார். இவரும் அழைத்துச் செல்கிறார். ஒரு கட்டத்தில் இதுதான் தன் இருப்பிடம் என்று சற்றுத் தொலைவில் தெரியும் குன்றைக் காட்டி நன்றி கூறிவிட்டு, விறுவிறுவென நடந்து மாயமாய் மறைந்து விடுகிறார். அந்த பக்தர் கனவில் கண்ட இடம்,பக்தர்கள் இங்கு குமரனுக்குக் கோயில் கட்டலாமே என்று தீர்மானித்த குன்று இருக்கும் இடம்!

இதன்பின் டெல்லியில் தனி முருகன் கோயில் கட்டுவதற்கான விண்ணப்பத்தை காஞ்சி மகா பெரியவர் முன் வைத்தனர். அவரும் தன் பரிபூரண ஆசிகளை அருளினார். அடுத்து, அரசாங்கத்தின் அனுமதியைப் பெறவேண்டும். எனவே, அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டனர் பக்தர்கள்.இதற்கு முன் சூரஜ்மல் எனும் அரசன் இந்தக் குன்றின்மீது ஓய்வு விடுதி அமைக்க எண்ணியபோது அவன் தந்தையின் கனவில் முன்பொரு சமயம் அந்த இடத்தில் சிவன் கோயில் ஒன்று இருந்ததாகத் தெரிந்ததால், மகனை ஓய்வு விடுதி கட்டாமல் தடுத்து விட்டார் என்றொரு செய்திக் குறிப்பு அந்தக் குன்று இருக்கும் இடத்தைப் பற்றி இருந்தது. இதனால் அரசாங்கத்தின் ஒப்புதலை வாங்குவது எளிதாக இருந்தது. இந்நிகழ்வு பற்றி திருப்பனந்தாள் மடத்தலைவர் முத்துக்குமாரசுவாமி தம்பிரான், “ஆளுபவர்கள் யாராக இருந்தாலும்,தன்னுடைய இடத்தை மாற்ற முடியாதபடியாகவே முருகப்பெருமான் பத்திரப்படுத்திக் கொண்டிருந்தான் என்றில்லாமல் வேறென்னவென்று குறிப்பிடமுடியும்?” என்று குறிப்பிட்டார்.

காஞ்சி மாமுனிவரின் அருளாசி
1961-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில் பக்தர்கள் ஒன்று சேர்ந்து ஸ்ரீ சுவாமிநாத சுவாமி சமாஜம் என்ற அமைப்பைத் தோற்றுவித்து கோயில் கட்டும் நிலத்தை அரசாங்க அனுமதியுடன் விலைக்கு வாங்கினார்கள். கோயில் கட்டுமானப் பணி தொடங்கியபோது, வாலாஜாபாத் அருகிலிருந்த பட்டுமலைக் குப்பத்திலிருந்து கல் எடுக்கப்பட்டு வந்து மகாபலிபுரத்தில் விக்கிரகங்கள் வடிக்கப்பட்டன. இச்சமயம் “உத்தர சுவாமிநாதனின் மூலவிக்கிரகத்துக்கான கல்லை, சுமார் அறுபதாண்டுகளுக்கு முன்பு செந்திலாண்டவன் சிலை வடிப்பதற்காக, தாமிரவருணி நதிப் படுகையிலிருந்து குறுக்குத்துறை எனுமிடத்தில் எடுக்கப்பட்ட கல்லின் எஞ்சிய பாகம் புதையுண்டு உள்ளது. அதனை எடுத்துப் பயன்படுத்துங்கள்.” என மகா பெரியவா ஆசியருளினார். அன்பர்களும் மகிழ்ச்சியுற்றார்கள்.

பெரியவா குறிப்பிட்ட அந்த குறுக்குத்துறை அகலத்திலும் நீளத்திலும் ஒரு மைலுக்கும் மேலாகப் பரந்து கிடந்தது. இந்த அறுபதாண்டு காலத்தில் அந்த இடத்தின் பல பகுதிகள் மணல்மேடுகளாக மாறியிருந்தன.அவ்வளவு பெரிய இடத்தையும் தோண்டிப் பார்த்து குறிப்பிட்ட கல்லைக் கண்டுபிடிப்பது என்பது சாதாரண விஷயமல்லவே! நெல்லையப்பர் கோயில் சிவாச்சாரியார்,”ஒரு வேளை தெற்கு ரத வீதியிலிருக்கும் 85 வயது முதியவரான சுந்தர தீக்ஷிதர் இந்தக் காரியத்துக்கு உதவலாம். அவர், செந்திலாண்டவன் சிலைக்காகக் கல் எடுத்த காலத்தில், அத்தலத்தில் தொண்டு புரிந்தவர்” என்று வழி காட்டினார்.

சுந்தர தீக்ஷிதரைச் சந்தித்து விவரம் கூற, “பாதி வேலையை முடித்திருந்தேன். எஞ்சிய வேலையை முடிப்பதற்காகத்தானோ என்னவோ, என்னை இறைவன் இன்னும் உயிரோடு வைத்திருக்கிறான்” என்று கூறி நெகிழ்ந்தவர், சரியான இடத்தையும் காட்டிக் கொடுத்தார். முப்பது தொழிலாளிகள் நாள் முழுதும் மணலைத் தோண்டியபின், 10 அடி ஆழத்தில் மகா பெரியவா குறிப்பிட்ட முக்கோண வடிவக் கல் கிடைத்தது. ஜூன் 2, 1965-ஆம் ஆண்டு, குறிப்பிட்ட முகூர்த்த நேரத்தில் நதிப்படுகையிலிருந்து கல் எடுத்து, மகாபலிபுரத்துக்கு அனுப்பினர். பரமாச்சார்யரின் உருவில் வந்து அனுக்கிரகித்த கந்தனின் கருணையே கருணை!

கல் கிடைத்து விட்டது. விக்கிரகம் தயாராகிவிட்டதா என்றால், அங்கும் உடனே தயாராகவில்லை.ஆண் விக்கிரகம் வடிப்பதற்கான சரியான ஒலி கல்லில் இருந்து கேட்காததால், பணியில் ஈடுபட்டிருந்த கணபதி ஸ்தபதி செய்வதறியாது திகைத்தார். எனவே மகா பெரியவாளைச் சந்திக்கச் சென்றார். பக்தர்கள் வரிசையில் மகா பெரியவாளைச் சந்திக்க நின்றபோது பெரியவரே அவரை அழைத்து, சிலையைச் செதுக்க ஆரம்பி! போகப் போகத் தானே சரியாகி விடும்’ என்றார். அவர் கூறியவாறே நடந்தது. மூலவர் சிலை உருவானதும், அச்சிலையை மகா பெரியவாளின் பார்வைக்கு அனுப்பினார்கள்.

இறைவனின் சோதனை
நொடியில் சிலையை ஆராய்ந்த பெரியவர், தக்ஷிண சுவாமிநாதனிடமிருந்து சற்று வேறுபடுத்திக் காட்டத்தானோ, இவரது கழுத்தில் ருத்ராக்ஷ மாலையும் கல்லிலேயே செதுக்கிவிட்டாய்? என்று கேட்க, கணபதி ஸ்தபதி ஆச்சரியத்தில் பிரமித்து நின்றார்.தெற்கிலுள்ள சுவாமிநாதனுக்குத் தனியாக வெள்ளி மாலயில் கோர்த்த ருத்ராக்ஷத்தை அணிவிப்பதுதான் வழக்கம். இந்த நுணுக்கத்தை உன்னிப்பாகக் கவனித்துத் தான் பெரியவா அப்படிக் கேட்டார். பெரியவாளின் பார்வையிலிருந்து எதுவும் தப்பாது. இதன் பின் விக்கிரகத்தை ஒரு இரவும் பகலும் தன் அருகிலேயே வைத்து, தடவிப் பார்த்து மகிழ்ந்தார். சிலைக்கு, தன் கையாலேயே விபூதி அபிஷேகமும் செய்து மகிழ்ந்தார்.கும்பாபிஷேகத்தின்போது கூடியிருந்த பக்தர்களிடம் கணபதி ஸ்தபதி மேற்படி விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

மூல விக்கிரகம் தயாரானதோடு இறைவனின் சோதனை நின்று விடவில்லை கோயிலுக்கான மற்ற விக்கிரகங்களும் உருவாகிவிட்ட நிலையில், கோயில் கட்டும் அடிக்கல் நாட்டு விழாவை 8. 9. 1965 அன்று காலை 6.30 மணி முதல் 8.30 மணிக்குள் நல்ல நேரம் என்று குறித்திருந்தார் மஹா பெரியவா.நாள் குறிப்பிட்டாகிவிட்டது. ஆனால் அதற்கு முந்தைய இரவில் வந்த வானொலி அறிவிப்பு அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியது.பாகிஸ்தான் விமானப்படை இந்தியா மீது போர் தொடுக்க ஆயத்தமாகியுள்ளது என்பதுதான் அந்தச் செய்தி. எனவே பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, விழாவில் பங்கேற்பதற்கில்லை என விடியற்காலை 3 மணிக்குத் தெரிவித்து விட்டார். ஆனால் காலை 4.30-க்கு தில்லியிலுள்ள ஷாதரா எனுமிடத்தில் தென்பட்ட பாகிஸ்தானிய விமானத்தை இந்திய விமானப்படை வெற்றிகரமாக வீழ்த்திவிட்டது என்று வெளியான வானொலிச் செய்தியைத் தொடர்ந்து ஒலித்த சங்கு, அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக உறுதிப்படுத்தியது. எனவே ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த முகூர்த்த நேரத்துக்குள் தமிழக முதலமைச்சர் எம். பக்தவத்சலம், அருட்கவி சாதுராம் சுவாமிகள் இருவராலும் அடிக்கல் நாட்டுவிழா வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

சிவனும் அவனே, சிவகுமரனும் அவனே!
அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சிக்குச் சில நிமிடங்கள் முன்பு, பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அனுப்பியிருந்த செய்தியின் சாரத்தை இங்கு பார்ப்போம். ’ஸ்வாமிநாத தேவசேனாபதியான முருகப்பெருமான், முப்படைக்கும் தலைமை ஏற்று, பாகிஸ்தானுடனான போர் துவங்கியதுமே அதை முடித்து விட்டார் அடிக்கல் நாட்டு விழாவின் வெற்றிக்கான எனது ஆசிகள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

கந்தனை வணங்கும் கதிரவன்
மூலவர் விக்கிரகம் வைக்கப்படும் பீடத்தினுள் ஆகமங்களில் குறிப்பிடப்பட்டுள்ள 25 பொருட்களுடன் யந்த்ரம் ஒன்றும் வைப்பது வழக்கம். ‘சுப்ரமண்ய சர்வ வசீகரண யந்த்ரம்’ உத்தர சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் வைக்கப்பட்டது. இந்த யந்த்ர விஷயத்திலும் சுவாரஸ்யமான ஒரு நிகழ்வு உண்டு. பரமாச்சார்யாளின் ஆக்ஞைப்படி தருமபுரம் ஆகம பாடசாலையின் தலைவரான சிவஸ்ரீ சுவாமிநாத சிவாச்சார்யார் வெள்ளித்தகட்டில் யந்த்ரத்தை அமைத்து வைத்திருந்தார். இதற்கு முன்பாக கணபதி ஸ்தபதியும் காகிதத்தில் யந்த்ரத்தின் அமைப்பை வரைந்து மகா பெரியவாளிடம் ஆசி வாங்கியிருந்தார். இரண்டில் எதை வைப்பது என்ற குழப்பம்! கூர்மையாக ஆராய்ந்து பார்த்தபோது –ஒன்று சிவத்தொடர்புடையதாகவும் மற்றொன்று கந்தப்பெருமானின் ஷண்முக யந்த்ரமாகவும் இருந்தது. பின்னர் இரவோடிரவாக வெள்ளித்தகட்டின் பின்புறம் இந்த ஷண்முக யந்திரத்தையும் பொறித்து இரண்டுமே பீடத்தினுள் வைக்கப்பட்டன. இவ்வாறாக சிவனும், சிவகுமாரனுமாக, ஒரு வடிவாகி சிவ்ஸ்கந்தமூர்த்தியாக டெல்லியில் அருள்பாலிக்கிறார்கள்.

இன்னொரு சுவாரஸ்யமான நிகழ்வும் உண்டு.வருடத்தில் குறிப்பிட்ட சில நாட்கள் சூரியனின் கிரணங்கள் மூலவர்மீது விழும் வண்ணமாக ஆலய விமானத்தில் இடைவெளி விட்டுக் கட்டுவார்கள். அக்காலங்களில் சூரிய பூஜை நடத்துவார்கள். இதற்கென டெல்லி வானிலை ஆராய்ச்சி மையத்தை அணுகியபோது, இதற்கு ஒரு வருடம் தொடர்ந்து கவனிக்க வேண்டியிருக்குமே எனக் கூறிவிட்டனர். கும்பாபிஷேகத்துக்கான நாள் நெருங்கிவிட்டிருந்ததால், இடைவெளி வைக்காமலே விமானமும் கட்டி முடிக்கப்பட்டது. 7. 6. 1973 அன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தேறியது.

கும்பாபிஷேகத்தை அடுத்துவந்த மார்ச் மாதத்தில் ஒருநாள், வழக்கத்துக்கு மாறாக சற்று முன்னதாகவே கர்ப்பக்கிரகத்துக்குள் நுழைந்த குருக்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. சூரியனின் காலை கிரணங்கள் முருகனின் இடப்பாகத்தில் பட்டு ஜொலித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். மேலும் சில நாட்கள் தொடர்ந்து கவனிக்க, மார்ச் 20 முதல் 24 வரை முருகனது திருவுருவத்தின் மீது முழுவதுமாகக் காலைக் கிரணங்கள் பட்டுக்கொண்டிருப்பதைக் கண்டார். அன்றுமுதல் வருடந்தோறும் இந்நாட்களில் சூரிய பூஜை வெகு சிறப்பாக நடக்கிறது. இந்நிகழ்விலும் மகா பெரியவாளின் தீர்க்க தரிசனம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை அறியும்போது ஆனந்தத்துக்கு எல்லையே இல்லை.

மூலவர் கிழக்குத் திசையை நோக்கி இருப்பதால், அத்திசையில் வைக்கப்படும் வாசல் கதவுகளை சிற்பிகள் குறிப்பிட்ட இடத்திலிருந்து மேலும் சில அடிகள் தள்ளி வைக்குமாறு மகா பெரியவா கூறி இருக்கிறார்.அவ்வாறே அமைத்தார்கள்.பெரியவா குறிப்பிட்ட அதே வாசல் வழியாகத்தான் சூரியக்கிரணங்கள் குறிப்பிட்ட நாட்களில் முருகன் மீது படுகின்றன. தமிழகத்தில் காவிரிக்கருகில் குடிகொண்டிருக்கும் சுவாமிநாதன், தில்லியில் தன் மாமன் விளையாடிய யமுனை நதியை நோக்கியவண்ணம் குன்றின் மீது நின்று புரியும் அதிசயத்துக்கு அளவே இல்லை.

தொடர்ந்த வருடங்களில் மீனாக்ஷி, சுந்தரேசர், விநாயகர், நவக்கிரகங்களுக்கும் தனித்தனி சந்நிதிகள் அமைத்ததுடன், சிற்ப கலா மண்டபம், ஆதிசங்கரர் பிரார்த்தனைக் கூடம் போன்ற பலவும் அமைத்தார்கள் குன்றின் மேலுள்ள விஷ்ணு துர்கை சந்நிதியில் செவ்வாய்-வெள்ளி தினங்களில் நடக்கும் ராகு கால பூஜையில், வட இந்தியர்களும் திரளாக வந்து கலந்துகொள்கிறார்கள். அமிர்தசரஸ் போன்ற தொலைதூர நகரங்களிலிருந்து சீக்கியர்களும் வந்து வழிபாடு நடத்திப் பயன்பெறுகிறார்கள்.

2001-ஆம் ஆண்டு முதல், சிறப்பு தினங்களில் சுவாமியை மலை மேல் ஊர்வலமாகத் தூக்கிச் செல்வது முதல் பிரசாத விநியோகம் வரை எல்லாக் காரியங்களிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவர் ஒரு சீக்கியர் என்று அறியும்போது வியப்பின் எல்லைக்கே செல்கிறோம்.

மூலவரைத் தரிசிக்க படியேறிச் செல்லும் வழியில் நாகர் சந்நிதி அமைந்துள்ளது.கோயில் கட்டுவதற்கு முன்பாக ஒரு நாள் குன்றின்மேல்தோன்றி பக்தர்கள் காண விளையாடிவிட்டு, குன்றினுள் சென்று மறைந்துவிட்ட நாகத்தின் நினைவாக இந்த நாகராஜா சந்நிதி அமைக்கப்பட்டதாம். குன்று கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் சிறியதாக இருந்த அரசமரம், கிளைபரப்பி இன்றளவும் கம்பீரமாக நிற்பதை இடும்பன் சந்நிதிக்கருகில் காணலாம்.

மூலவரின் சாந்நித்யம் கோயிலில் நிறைந்துள்ளது என்பதற்குச் சான்றாக, கோயில் வளாகத்தில் இரு மயில்களும் ஒரு சேவலும் உல்லாசமாக உலவுவதைக் காணலாம். விநாயகர் சந்நிதிக்குப் பின்புறம் ஒன்பதரை அடி உயரத்தில் அமைந்துள்ள மீனாக்ஷி-சுந்தரேசர், வள்ளி-முருகன் ஆகியோரின் திருமணக் கோலங்கள் மிக அழகிய சிற்பங்களாக வடிக்கப்பட்டு பக்தர்களைக் கவர்கிறது.

உத்தர சுவாமிமலையில் நடக்கும் மிகப் பெரிய விழா – கந்த சஷ்டி விழாவாகும். தில்லி வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்றுகூடி நடத்தும் இப்பெரிய விழா தவிர தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், மகா சிவராத்திரி, நவராத்திரி, திருக்கார்த்திகை போன்ற விழாக்களும் வெகு சிறப்பாக நடக்கின்றன.கார்த்திகை மாதத்தில் நுழைவாயிலில் இருந்து மலை உச்சிவரை ஏற்றப்படும் தீபங்களின் அழகைக் காணும்போது, ‘ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே’ என்று நாமும் நிச்சயம் பாடுவோம். திருப்புகழ்ச் சக்கரவர்த்தி குருஜி ஏ.எஸ். ராகவன் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்ட திருப்புகழ்த் திருப்படித் திருவிழாவும், அருணகிரிநாதர் நினைவு விழாவும் முறையே வருட முதல் ஞாயிறன்றும், அக்டோபர் இரண்டாம் தேதியும் தொடர்ந்து சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

குன்று கண்டுபிடிக்கப்பட்ட காலந்தொட்டு இன்றுவரை உத்தர சுவாமிநாதனின் சேவையிலேயே காலம் கழித்து வரும் மிக மூத்த அன்பர் எஸ். பட்டாபிராமன் (தொண்ணூறை நெருங்கிவிட்டவர்) அவர்களுடன் பேசும்போது நாமும் அந்தக் காலத்துக்கே சென்றுவிடுகிறோம். கோயில் அமைப்பு, நிர்வாக விஷயங்களுக்காக காஞ்சி பரமாச்சார்யாருடன் பழகிய நாட்களை மிகுந்த நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார். ‘பணத்தட்டுப்பாடு ஏற்பட்ட ஒருநேரத்தில் பெரியவாளைத் தஞ்சமடைந்தோம். பணத்துக்கு ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு, ‘ஆறு வற்றிக் கிடக்கிறது.விரைவில் ஒரு பிரவாகம் வரப்போகிறது. அப்போது யாராலும் அதைத் தடுத்து நிறுத்த முடியாது.’ என்று ஆசி அருளினார்.

‘மலாய் மந்திர்’
அவரின் அருள்வாக்கு அப்படியே பலித்துவிட்டது. அன்று முதல் இன்று வரை கோயிலில் பணப் பற்றாக்குறை ஒருபோதும் ஏற்பட்டதில்லை என்று கூறி உணர்ச்சிவசப் படுகிறார்.
தில்லி தமிழர்கள் தமிழ்-இந்தி இரு மொழிகளையும் இணைத்து ‘மலை மந்திர்’ என்று கூறுவதைக் கேட்ட தமிழர் அல்லாதவர்கள் இதை ‘மலாய்-மந்திர்’ என்று உச்சரிக்க ஆரம்பித்து, அதுவே நிலைத்துவிட்டது பாலேடு என்பதன் இந்தி வார்த்தைதான் ‘மலாய்’..பாலேடு போன்ற சிறப்பும் சுவையும் மென்மையும் உடையவன்தானே நம் சுவாமிநாதன்! அந்தப் பெயர் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே!

சித்ரா மூர்த்தி, சென்னை

திரிசக்தி பொங்கல் மலரில் திருமதி சித்ரா மூர்த்தி அவர்கள் எழுதிய ‘தில்லி உத்தர சுவாமிமலை’ என்ற அருமையான கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மாலதி ஜெயராமன்.

இந்தக் கட்டுரையை எழுதிய திருமதி சித்ரா மூர்த்தி சிறந்த எழுத்தாளரோடு சிறந்த சொற்பொழிவாளருமாவார். அவர் பல பத்திரிகைகளில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

நன்றி: திரிசக்தி, பொங்கல் மலர்

source:::: muruganbhakthi.org

natarajan

படித்ததில் பிடித்தது …நிலவில் கால் வைத்த முதல் மனிதர் யார் !!!

இந்தக் கேள்விக்கு யாராயிருந்தாலும்
உடனே பதில் சொல்லிவிடுவீர்க
ள்.நீல்ஆம்ஸ்ட்ராங் என்று. நிலவில் முதன்
முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர்
யார் தெரியுமா? பல
பேருக்கு தெரியாது அவர் எட்வின்
சி ஆல்ட்ரின்.
அவர்தான் நிலவுக்கு சென்ற
அப்பல்லோ விண்கலத்தின் பைலட்
அதாவது விமானி. ஆல்ட்ரின்
அமெரிக்காவின் விமானப் படையில்
பணிபுரிந்தவர். மேலும் விண்
நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர்
விமானியாக நியமிக்கப்பட்டார்.

நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல்
படையில் வேலை பார்த்தவர். மிகுந்த
தைரியசாலி என்பதால்தான் இந்த
பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி.
இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம்
நிலவை அடைந்ததும்
நாசாவிலிருந்து பைலட் பர்ஸ்ட்
என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன
தயக்கம்.
இடது காலை எடுத்து வைப்பதா?
வலது காலை எடுத்து வைப்பதா? என்றல்ல.
‘நிலவில் முதன் முதலில் கால்
எடுத்து வைக்கிறோம்.
புவியீர்ப்பு விசையற்ற இடத்தில்
இருக்கிறோம்.
கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும்
என்று தெரியாது. புதை மணலாக
இருந்து உள்ளே இழுத்துவிட்டால்
எரி மணலாக
இருந்து காலை சுட்டுவிட்டால்
தயக்கத்தில் மணிக்கணக்காக
தாமதிக்கவில்லை. சில நொடிகள்தான்
தாமதித்திருப்பார்.
அதற்குள் நாசாவில்
இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்க
டது. கோ பைலட் நெக்ஸ்ட்.
நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த
நொடி காலடி எடுத்து வைத்தார்.
உலக வரலாறு ஒரு நொடி தயக்கத்தில்
மாற்றி எழுதப்பட்டது. திறமையும்
தகுதியும் இருந்தும் கூட தயக்கத்தின்
காரணமாக தாமதித்ததால்
இன்று ஆல்ட்ரினை யாருக்கும்
தெரியவில்லை.
முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம்
நினைவில் வைத்திருக்கும்
என்பது மட்டுமல்ல, தயக்கம், பயம்
இவை எந்த அளவுக்கு நம்
வெற்றியை பாதிக்கும்
என்பதற்கு இதுவே உதாரணம்.
இனி நிலவை பார்க்கும் போதெல்லாம்
இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக்
கொள்ளுங்கள்.
ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப்
பெரிய வெற்றிகளைத்
தடுத்து விடுகிறது. நாம்
எல்லோருமே மிகப்பெரும்
சாதனைகளை படைக்கிற
வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய
தயக்கம். பயம், கூச்சம் இவைதான் நம் முதல்
எதிரி.
source::::: input from face book
natarajan

” The First Man To Walk In Space Almost Got Stuck out There “!!!

This one’s a bit longer than normal, but I thought it was a very interesting read so hopefully you do too!

That lucky individual was Alexei Leonov, who was born in the Soviet Union on May 30, 1934. He was one of the twenty Soviet Air Force Pilots to be chosen for the first cosmonaut group. Originally, his historic walk was supposed to have happened on the Vostok 11 mission, but as that was cancelled; it was later performed on the Voskhod 2 mission instead. After eighteen long months of training for the event, Leonov was ready to become the first person to walk in space.

The Voskhod 2 launched on March 18, 1965. In addition to Leonov, Pavel Belyayev was on board to man the ship while Leonov attempted the space walk. It was the first trip into space for both of the crew members.

Once in orbit, Leonov strapped on an EVA (extra-vehicular activity) backpack to his spacesuit. It provided him with just 45 minutes of oxygen, which would allow him to breathe and keep cool; meanwhile, heat, moisture, and carbon dioxide would be vented into space via a relief valve.

VoskhodBelyayev pressurized the inflatable airlock, which took seven minutes to fully inflate. Everything went smoothly at first and Leonov spent a total of 12 minutes and 9 seconds out on his space walk. He described the experience by saying he felt “like a seagull with its wings outstretched, soaring high above the Earth.”

Unfortunately, all good things must come to an end, and he needed to get back inside the spacecraft before he ran out of air. But getting back inside proved to be a problem.

He maneuvered himself back to the airlock, but then realized that his suit had become incredibly stiff. Due to the lack of atmospheric pressure, it had bloated with oxygen. His feet and hands had pulled away from his boots and gloves, and he knew it was going to be incredibly difficult to get himself back into the ship safely.

There was only one way to do it: wriggle in head-first while bleeding off the oxygen in his suit.

“I knew I might be risking oxygen starvation, but I had no choice. If I did not reenter the craft, within the next 40 minutes my life support would be spent anyway.”

Leonov thought about contacting mission control about his predicament and let them know about the risky thing he was about to do, but decided not to. He knew that he was the only one who could do anything about the situation and he didn’t want to worry the people on the ground.

As he released oxygen and exerted himself, his suit began to heat up dangerously with his core body temperature rising 3.2 degrees Fahrenheit (1.8 degrees Celsius), as he slowly clambered into the airlock inch by inch.

Once he was finally in, he had to let even more air out so he could curl his body around to close the hatch, which he eventually accomplished. At last with the hatch sealed, Belyayev was able to pressurize the airlock again and Leonov made it back inside the spacecraft after the heart-stopping few minutes of struggle.

On the ground, people had watched the very first spacewalk, though Leonov’s struggle to get back inside the spacecraft wasn’t televised. At the first sign of trouble, the transmissions shown on televisions on Earth “randomly” stopped with no explanation, with most assuming technical difficulties with the broadcast feed.

Leonov was thankful they didn’t show his re-enty, “My family was therefore spared the anxiety they would have had to endure had they known how close I came to being stranded in space.”

Unfortunately, this was only the start of the problems. Just five minutes before they were scheduled to begin re-entry, the crewmen discovered that the automatic guidance system wasn’t functioning. They would have to land the spacecraft manually and were also dangerously low on fuel to maneuver to boot.

To do the necessary maneuvers, Leonov stated:

“Pasha began orienting the craft for reentry. This was no easy task—in order to use the optical device necessary for orientation, he had to lean horizontally across both seats in the spacecraft, while I held him steady in front of the orientation porthole. We then had to maneuver ourselves back into the correct positions in our seats very rapidly so that the spacecraft’s center of gravity was correct during the reentry burn.”

The difficulty of the landing was compounded by politics. They had to land on Soviet soil; if they overshot and landed in China, which had very poor relations with Soviet Russia at the time, a potential international incident could have ensued. They also had to choose somewhere without many people. Thus, Leonov chose Perm, a sparsely populated area far from China. It seemed like a safe bet.

However, additional problems started as they entered the Earth’s atmosphere. The craft began spinning uncontrollably.  Why?  The orbital module was still attached to the landing module.  The modules hadn’t fully detached when they were supposed to, due to a thick communication cable connecting the two.

Not only did it throw the landing location off significantly, but the two craft spun around one another, subjecting the cosmonauts to as high as 10 G’s of force.  So much, that Lenov said that the “small blood vessels in our eyes burst”.

At around 62 miles high (100 km), the cable burned up and they were able to stabilize and land successfully… in two meters of snow in Solikamsk on the outskirts of frigid Siberia.

Upon attempting to open the hatch, they further had difficulty after the explosive bolts blew.  Rather than the hatch opening, it was stuck shut:

“Looking out of the window, we could see the hatch was jammed against a big birch tree. We had no alternative but to start rocking the hatch violently back and forth, trying to shift it clear of the tree. Then, using all his strength, Pasha managed to push the hatch away from the remains of the bolts, and it slid back and disappeared into the snow.”

At this point, Leonov and Belyayev’s families were told that the two had landed safely and were resting before returning to Moscow. However, Soviet officials hadn’t picked up on the rescue signal, and had little idea where they’d landed or even if they were still alive.

Lucky for the cosmonauts, a cargo plane did pick up on the signal and the word of their location spread around.  Initial attempts at rescue were made by civilian aircraft, with helicopter pilots and others throwing the two down supplies, including wolf skin boots and cognac. (Note: contrary to popular belief, drinking alcohol in such a situation would make hypothermia significantly more likely, rather than it heating your body.)

In the end, they ultimately had to spend the night in a place packed with wolves and bears during mating season- when they’re most aggressive- and where the temperature dropped to -22 degrees Fahrenheit (-30 C) according to Leonov. They also had no way to re-seal the landing module, so simply had to hunker down and endure the night.

The temperature problem was compounded by the fact that their suits had sweat sloshing around up to their ankles, along with being soaked through the inner layers.

“We had to strip naked, take off our underwear, and wring the moisture out of it. We then had to pour out what liquid had accumulated in our spacesuits. We went on to separate the rigid part of the suit from its softer lining—nine layers of aluminum foil and a synthetic material called dederone—and then put the softer part of the suits back on over our underwear and pull our boots and gloves back on.”

The next day, a rescue crew arrived traveling via skis, while another came a day later and chopped down trees, making a log cabin and a huge fire to keep the team and cosmonauts warm.  They then all traveled nine kilometers by ski to a clearing where a helicopter was waiting for them.

Upon arriving in the town of Leninsk, they had one last duty: to report on their mission. Leonov said simply,

“Provided with a special suit, man can survive and work in open space. Thank you for your attention.”

He didn’t go into detail about his brush with death. It’s possible that he was told not to; details of the harrowing mission weren’t released until much later.

Bonus Facts:

  • You are simultaneously hurtling around the Sun at 66,600 mph while sitting on a “rock” that is spinning at about 1,070 mph. On top of that, our whole solar system is rocketing through space around the center of the Milky Way at about 559,234 mph.  On top of that, our galaxy is hurtling through space at about 671,080 mph, with respect to our local group of galaxies.  On top of that, for all we know, our entire universe is hurtling through some medium at some other ridiculous speed. Either way, you’re moving really, really fast right now while reading this. Slow down you crazy kids with your rap music. 😉
  • Leonov said that had he been unable to get back inside the space craft, he had a suicide pill to make his death swifter and more pleasant than dying of asphyxia.

source:::: todayifoundout.com

natarajan

” இந்தியாவின் மறு பக்கம் …. நாம் மறக்கவும் மறுக்கவும் முடியாது ” !!!

படம்: நாகாரா கோபால்

படம்: நாகாரா கோபால்

என்னைச் சந்திக்க வரும் இளைஞர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது பெரும்பான்மையோர் இந்தியா மீது கடும் சலிப்பும் கோபமும் கொண்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

ஓர் இளைஞர் “இந்தியாவை சீனாவின் கையில் ஒப்படைத்துவிட வேண்டும், அப்போதுதான் இந்தியா உருப்படும்” என்றார்.

இன்னொருவர் “பிரிட்டிஷ்காரர்களிடமே திரும்ப ஒப்படைத்துவிட வேண்டும், அவர்கள்தான் இன்றுள்ள எல்லா முன்னேற்றங்களுக்கும் காரணம். நம்மால் ஆட்சி செய்ய முடியவில்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும்” என்று ஆவேசப்பட்டார். இவர்களைப் போல இந்தியாவைப் பிரிக்க வேண்டும், உடைக்க வேண்டும், இந்தியாவுக்கு எதிர்காலமே கிடையாது, இந்தியா ஓர் இருண்ட தேசம் என எதிர்மறையான எண்ணங்கள் கொண்ட இளைஞர்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள்.

படித்த, மத்தியதர, உயர்தர இளைஞர்களே இந்தியாவை வெறுப்பதில் முன்னணியில் இருக்கிறார்கள். அவர்கள் இந்தியாவை வெறுக்கக் காரணம், அதன் குழப்பமான அன்றாட வாழ்க்கை. வாகன நெருக்கடி துவங்கி குடிநீர், வீடு, போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, கேளிக்கை என அவர்கள் விரும்பும் வசதிகள் இந்தியாவில் கிடைப்பதில்லை.

இளைஞர்கள் பலருக்கும் இந்தியா பிடிக்காமல் போனதற்கு முக்கியக் காரணம், ஊழல் மலிந்துபோன அரசியல் மற்றும் பொருளாதார மோசடிகள். இவற்றிலிருந்து இந்தியாவைக் காப்பாற்றக்கூடிய உண்மையான வழிகாட்டிகள், தேர்ந்த தலைவர்கள், நம்பிக்கையூட்டும் முன்மாதிரிகள் இந்தியாவில் இல்லை என்பதே அவர்களின் பெருங்குறை.

இளைஞர்களின் கோபத்தை நாம் ஒதுக்கிவிட முடியாது. இவர்கள்குறித்து நாம் கவனம்கொள்ளவும் இந்தப் பிரச்சினைகளின் ஆணிவேர்குறித்து ஆராயவும் வேண்டியிருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு தேசத் தலைவர்களின் பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்டினார்கள். இன்று அப்படிப் பெயர் சூட்டும் தகுதியுள்ள தலைவர்கள் பொதுவாழ்க்கையில் அருகிவிட்டார்கள் என்பதே உண்மை. இந்தியாவின் இன்றைய அரசியல் ஏமாற்றம் தருகிறது. அதிகாரப் போட்டி அருவருக்க வைக்கிறது. மதவாதம் நம்மைத் துண்டாட நினைக்கிறது. ஆனால், இந்தக் காரணங்களுக்காகவெல்லாம் இந்தியா மீண்டும் அடிமைப்பட வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனம் என்றே நான் நினைக்கிறேன்.

இந்தியா பற்றிய எனது மதிப்பீடு அனுபவங்களிலிருந்து உருவானது. இந்தியாவின் எல்லையோர மாநிலங்கள் வரை சுற்றிவந்தவன் என்ற முறையில், நான் அதன் இன்றைய சமூக, அரசியல் நெருக்கடிகளை நன்றாகவே அறிவேன். அவை தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளே. ஆனால், இந்த நெருக்கடிகள் அத்தனையும் மீறி ‘இந்தியா ஒன்றிணைந்து இருக்க வேண்டும், ஒருமித்து வளர வேண்டும்’ என்ற குரல் இந்தியாவின் ஏழை, எளிய மக்களிடம் தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டேயிருக்கிறது.

இந்தியா குறித்த எதிர்மறை எண்ணங்கள் உருவாவதற்கு நிறைய காரணிகள் இருக்கின்றன. அவை ஒருநாளில் உருவானதில்லை, காலனிய ஆட்சிதொட்டுப் பரவிவருபவை. இந்த எண்ணங்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்படுகின்றன, செயல்படுத்தப்படுகின்றன. கடலில் மிதக்கும் பனிப்பாளம்போல பிரச்சினைகளின் மேல் நுனி மட்டும்தான் நம் கண்களுக்குத் தெரிகின்றது.

இன்று இந்திய அரசியல் என்பது தேசியம் சார்ந்த ஒன்றில்லை, பிராந்தியக் கட்சிகளின் அரசியல் சார்ந்தது. ஈழப் பிரச்சினையின் குரல் வடக்கே ஒலிக்கவேயில்லை. காஷ்மீர் பிரச்சினை நமக்கு வெறும் செய்தி. இதுதான் இன்றைய இந்தியாவின் நிலை. இப்படி உள்ள இந்தியா எப்படி ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்ற கேள்வி எழக்கூடும். இந்தியாவை மதிப்பிட அதன் இன்றைய அரசியல், பொருளாதாரச் சீர்கேடுகள், அகம், புறம் சார்ந்த பிரச்சினைகள் மட்டும் போதாது. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் இந்தியா வளர்ந்துள்ள விதம், இதன் பல்வேறு பண்பாட்டுக் கூறுகள், உயரிய ஜனநாயகம், மக்களின் நம்பிக்கைகள், இந்த நிலையை அடைவதற்குத் தந்த உயிரிழப்புகள், போராட்டங்கள் இத்தனையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

இந்தியாவைப் பற்றிக் கடுமையாகப் பேசுபவர்களில் பலர் ஒருமுறைகூட இந்தியாவைக் குறுக்கும் நெடுக்கும் பயணம் செய்ததில்லை. அவர்களுக்கு இந்தியா என்பது ஒரு சொல், ஒரு வரைபடம், ஊடகம் உருவாக்கிவைத்த ஒரு பிம்பம், அவ்வளவே. இந்திய சுதந்திரம் என்பது இன்றுள்ள இளைஞனுக்கு வெறும் கறுப்பு வெள்ளை நினைவு. சுதந்திர தினம் என்பது விடுமுறை நாள். தேசம் என்பது ஓர் அடையாளம், அவ்வளவே. வரலாற்றை, சமூக நீதிக்கான போராட்டத்தின் கள அனுபவங்களை இன்றுள்ள தலைமுறைக்குக் கற்றுத்தர மறந்துவிட்டோம் என்பதே உண்மை.

இந்தியாவை வெறுக்கும் ஓர் இளைஞனிடம் நான் சொன்னேன், “ஒரேயொரு முறை மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு கன்னியாகுமரி தொடங்கி இமயம் வரை இலக்கில்லாமல் போய் வா, அதன் பிறகு இந்தியா பற்றிய உனது எண்ணங்கள் தானே மாறிவிடும்.”

அவன் என்னிடம் கேட்டான்: “வறுமையும் ஊழலும் மதச் சண்டைகளும் பொருளாதார மோசடிகளும் நிரம்பிய இந்தியாவில் காண என்ன இருக்கிறது?”

“நீ சொல்வது உண்மைதான் நண்பனே, ஆனால் இவை மட்டுமே இந்தியா இல்லை. கண்ணுக்குத் தெரிகிற இந்தியாவுக்குள், முனைந்து காண வேண்டிய இன்னொரு இந்தியா ஒளிந்திருக்கிறது” என்றேன்.

இந்தியாவை ஒன்று சேர்த்து வைத்திருப்பது நிலப்பரப்பு மட்டுமில்லை. இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக நீளும் அதன் அழியாத நினைவுகள், அந்த நினைவுகளின் வழியாக வலியுறுத்தப்படும் அறம், தர்மம், நம்பிக்கை.

வரலாற்றில் இந்தியா எத்தனையோ நெருக்கடிகளை, சவால்களைச் சந்தித்துக் கடந்து வந்திருக்கிறது. அந்த அனுபவக் குரல் இந்தியப் பெருநிலத்தின் ஊடே கதைகளாக, கவிதைகளாக, வாய்மொழி மரபாக, வரலாறாகத் திரும்பத் திரும்ப நினைவூட்டப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. அதிகாரத்துக்கு இந்தக் குரல் கேட்காமல் இருக்கலாம். ஆனால், எழுதுபவர்களுக்கு இந்தக் குரல் நன்றாகக் கேட்கவே செய்கிறது. மனசாட்சியுள்ள மனிதர்களுக்கு இக்குரல் கேட்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

எஸ். ராமகிருஷ்ணன், எழுத்தாளர், தொடர்புக்கு: writerramki@gmail.com

source::::::The Hindu …Tamil
natarajaindia

Fantastic View From The Cockpit !!!

The images were taken by the third pilot at 38,000 feet while the other two pilots flew the planes. In this image the sun casts amazing shadows over the terrain of Greenland

The images were taken by the third pilot at 38,000 feet while the other two pilots flew the planes. In this image the sun casts amazing shadows over the terrain of Greenland

Lake Mead just to the East of Las Vegas

Lake Mead just to the East of Las Vegas

A magnificent view of London

A magnificent view of London

 

The southern tip of Greenland at sunrise

The southern tip of Greenland at sunrise

 

London with the River Thames bending around Docklands and the Millenium Dome

London with the River Thames bending around Docklands and the Millenium Dome

 

San Francisco with the Golden Gate Bridge and Alcatraz prison clearly visible

San Francisco with the Golden Gate Bridge and Alcatraz prison clearly visible

 

A huge glacier in Greenland

A huge glacier in Greenland

 

Sunrise along the Thames estuary

Sunrise along the Thames estuary

 

Downtown Seattle, USA

Downtown Seattle, USA

 

Downtown Los Angeles

Downtown Los Angeles

 

Moon rising over Canada. The shadow on the horizon is the shadow of the earth

Moon rising over Canada. The shadow on the horizon is the shadow of the earth

 

The mountains of Northern Canada

The mountains of Northern Canada

 

Chicago on Lake Michigan at night

 

Chicago on Lake Michigan at night

 

The Las Vegas Strip at night

The Las Vegas Strip at night

 

The streets and houses of south London

The streets and houses of south London

 

Amazing scenery outside of Las Vegas Nevada during a sunset

Amazing scenery outside of Las Vegas Nevada during a sunset

 

Los Angeles international airport looking south in the middle of the frame

Los Angeles international airport looking south in the middle of the frame

 

A cloud formation that looks like a rabbit

A cloud formation that looks like a rabbit

 

source:::::The Telegraph Uk

natarajan

Do you know ?… Alfred Nobel Was once Nicknamed “Merchant of Death ” !!!

Today I found out Alfred Nobel, who left most of his fortune to start the Nobel Prizes, was once nicknamed “The Merchant of Death”.

The “Merchant of Death” title was given to him due to Nobel inventing, and making most of his vast fortune off of, dynamite and other types of explosives, such as “ballistite”, which was the precursor to quite a lot of military grade explosive devices.

Nobel came up with the idea of using his money for these annual prizes after his brother, Ludvig, died in 1888 and a French newspaper mistakenly thought it had been Alfred Nobel himself who died.  The newspaper published the obituary under the title: “The Merchant of Death is Dead”, going on to state: “Dr. Alfred Nobel, who became rich by finding ways to kill more people faster than ever before, died yesterday.”

When Nobel read this, he began thinking of how to improve his public image after his death and decided on leaving his enormous fortune to fund a set of prizes named after himself. The Nobel Prizes were created as awards for people who made the greatest contributions to mankind in subjects that interested Nobel, namely Physics, Chemistry, Medicine, Literature and Peace.

Nobel did a lot of his own work in Physics and Chemistry and was an enthusiast of various literature of the day.  He also saw the benefit to advancements in medicine. The “peace” prize was thought to have been suggested and promoted by his former lover and secretary Bertha Kinsky, who later won the award in 1905, just a few years after the Nobel Prizes were established.  The idea of a peace award appealed to him because of his reputation as a war monger, and the fact that a huge point to the Nobel Prizes, as stated, was to fix his reputation as a “Merchant of Death”.

Bonus Facts:

  • Alfred Nobel invented around 355 things, most notable was his invention of dynamite, in 1867, which he was originally going to call “Nobel’s Safety Powder”, as it was basically a safer version of nitroglycerin and he was attempting to improve his image as a maker of dangerous explosives. He ultimately went with “dynamite”, which was derived from the Greek for “power”.
  • All total, Nobel left 94% of his fortune to be used towards the Nobel Prizes. His total fortune, adjusted for inflation, would be worth about $250 million today.
  • Along with the group setup to select the winners of the Nobel Prizes, a separate group, The Nobel Foundation, was founded to manage Nobel’s money.  To date, along with annually bequeathing money to award winners, The Nobel Foundation has grown Nobel’s assets up to around half a billion dollars.

source:::::todayifoundout.com

natarajan

A Simple Memorial To The Legendary Thespian ….Sivaji Ganesan …

October 1 this year marks the 85 birthday of acting legend Sivaji Ganesan. There are at least three memorials to him in the city, of which my personal favourite stands inside AVM Studios. I was able to see it a couple of years ago, thanks to a heritage tour organised by actor Mohan V. Raman.

A simple block of elegantly-fashioned black granite, it stands on the spot where Sivaji first faced the camera for his debut film – Parasakthi. The granite slab has a brass medallion on top that bears a close-up of Sivaji uttering his famous opening word – “Success!”. Below it is a rectangular plaque that gives details of the memorial’s inauguration by Kamal Hassan in the presence of Sivaji’s sons Ramkumar and Prabhu, on October 17, 2002, the 50 anniversary of Parasakthi’s release.

The memorial to Sivaji Ganesan, inside AVM studios, was inaugurated on the 50th anniversary of Parasakthi’s release

The memorial to Sivaji Ganesan, inside AVM studios, was inaugurated on the 50th anniversary of Parasakthi’s release

At the base are two plaques shaped like pages from an open book. These bear the names of all the other people involved in the making of the film – directors, writers, lyricists, music director, singers and technicians.

This last was the idea of Mohan Raman, while the monument itself owes its existence to M. Saravanan and M. Balasubramanian, sons of A.V. Meyyappan, founder of AVM Studios.

I don’t remember now but I am fairly sure that the name of P.A. Perumal, owner of National Pictures, who produced the film, is included in the memorial. What I am not sure of is whether the name of Rajeswari Meyyappan, wife of the studio owner is included.

Legend has it that sometime after work on the film began Meyyappan and the directing duo of Krishnan-Panju began wondering if the gangly youth with prominent eyes and powerful voice really had it in him to carry the film on his shoulders. Perumal and Mrs. Meyyappan were however convinced that he was the right choice and ultimately prevailed over everyone else. The film, when released, ran into immediate controversy, the fiery dialogues of M. Karunanidhi that questioned the hypocrisies of religion and the priestly class being the principal reasons. It was however a runaway success and there was no looking back for Sivaji.

Interestingly, at the time of its inauguration, the monument was located 15 to 20 feet away from where it stands now.

Old studio hands felt that it was somewhat removed from the spot where Sivaji delivered his first shot but nothing could be done about it. Some years later, a road had to be laid in the studio and the memorial had to be shifted a few feet, bringing it to its original intended location!

This is perhaps the most aesthetic memorial in a city which otherwise puts up rather drab statues devoid of any artistic merit. It is also perhaps the only monument commemorating an actor’s debut. Sivaji has two other memorials – a full wall in the Shanthi Theatre complex that lists all the films he acted in with a host of other details, and a statue on the Marina.

source ::::V .Sriram in The Hindu

natarajan

” ஏன் இன்று அந்த தெலுங்கர் வரலையா ” ?

காஞ்சி மஹானின் கருணை உள்ளத்திற்கு இது தான் அளவென்று சொல்ல முடியாது. பக்தர்களை இனம் பிரித்துப் பார்ப்பது அவருக்குப் பிடிக்காத காரியம். நல்லவன் யார் கெட்டவன் யார் என்பதையெல்லாம் அவரவர்களின் செயல்பாடுகளின் மூலம் அறியக்கூடியவர் அவர்.

1980ஆம் வருட வாக்கில் பெரியவா வடக்கே பாத யாத்திரை செய்யக் கிளம்பிய சமயம், ஆந்திராவில் ஒரு பெளர்ணமி நாளில் அந்த மஹானுக்கு ஷவரம் செய்து முடிகளை அகற்ற தெலுங்கரான ஒரு நாவிதர் அழைத்து வரப்பட்டார். அடுத்தடுத்த பெளர்ணமி நாட்களிலும் அதே நாவிதர் ஸ்ரீமடத்திற்கு அழைத்துவரப்பட்டு பெரியவா சேவைக்கு அமர்த்தப்பட்டார்.

மஹானை ஸ்பர்ஸித்து தொண்டு செய்யும் பாக்கியம் பெற்ற அந்த நாவிதர் சிரத்தையோடு தன் தொழிலைச் செய்தார். மஹானுக்கு பணி செய்யும் மகத்துவத்தை முதலில் புரியாமல் இருந்தவருக்கு மாதந்தோறும் இந்தத் திருப்பணி கிட்டியதில் மஹான் சிலரை ஈர்த்து ஆட்கொண்டுவிட்டதில் வியப்பே இல்லை எனலாம்.

அதனால் பணிவிடைகள் செய்ய வருவது போல் அல்லாமல் இந்த நாவிதர் பூர்வ பக்தியோடு வரும் நிலை தானாக அவருக்கு ஏற்படலாயிற்று. அப்படி வரும்போது மஹாபெரியவாளுக்கு ஏழ்மையான இந்த பக்தர் எதைக் கொண்டு வர முடியும்?

ஒரு மூட்டை நிறைய புற்று மண் மாங்குச்சி என மஹான் உபயோகிக்கும் வஸ்துக்களைக் கொண்டுவந்து சமர்ப்பித்தபின் முடி இறக்கும் பணியைச் செய்துவிட்டு விடைபெறுவது தொடர்ந்தது.

மஹாபெரியவா வடக்கே இருந்து திரும்பவும் காஞ்சி ஷேத்திரம் வந்தாயிற்று. தெலுங்கு தேசத்திலிருந்து நாவிதர் காஞ்சி வருவதும் தொடர்ந்தது.
இப்படித் தொடர்ச்சியாக வந்து கொண்டு இருந்த அந்த நாவித பக்தரின் மனதில் தாழ்வு மனப்பான்மை பக்தியினால் எழுந்தது. புற்று மண்ணை ஒரு அழுக்கான துணியில் கட்டி அதோடு மாங்குச்சியை தட்டில் வைத்து ஒரு ஓரமாக வைத்துவிடுவார்.

அதேசமயம் பெரியவா முன் அவர் விரும்பாமலேயே பக்தர்கள் சமர்ப்பிக்கும் உயரிய பழவகைகள் முந்திரி, பிஸ்தா பருப்பு, விலை உயர்ந்த சால்வைகள், தங்க நாணயங்கள் என பல தட்டுகளில் அணிவரிசைகளுக்கிடையே மஹாபெரியவா என்னும் ஏழை பங்காளனுக்கு நாவிதர் சமர்ப்பித்துச் செல்லும் அழுக்கு மூட்டையே உயர்வாகத் தெரியும்.

மஹானின் முன்னால் சமர்ப்பிக்கப்படும் பொருள்களைப் பார்த்தபோதுதான் அந்த நாவிதனுக்கு மனதில் ஆதங்கம் ஏற்பட்டது. தானும் இப்படி தரிசனத்திற்கு அடுத்த தடவை வரவேண்டும் என்று தீர்மானித்த அந்த பக்தர் தான் புற்று மண் வைத்த தட்டில் விலை உயர்ந்த பழங்கள், தேங்காய் திராட்சை என பல வஸ்துக்கள் நிறைந்திருக்க அத்துடன் சில ரூபாய் நோட்டுக்களும் காணப்பட்டன.

மற்றவர்களுக்கு இணையாகத் தானும் மஹானுக்கு இதைப்போன்ற வஸ்துக்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த நாவிதர் நினைத்ததன் விளைவு இது.
இருந்தாலும் மஹானின் முன்னிலையில் இவைகள் சமர்ப்பிக்கப்பட்டபோது அவரிடமிருந்து ஒரு சந்தேகம் எழுந்தது.

“ஏன் இன்னிக்கு அந்தத் தெலுங்கர் வரலையோ” என்று கேட்க, மடத்து சிப்பந்திகள் தெலுங்கர் சமர்ப்பித்த தட்டைக் காண்பித்தனர்.

“என்ன இது, அவர் எப்போதும் கொண்டு வந்து வைக்கிற மாதிரி தெரியலையே” என்று அந்த பக்தரைப் பிரத்தியேகமாக அங்கீகரிக்கவே கேட்பது போல மஹான் வினவ, அப்போதுதான் அந்த உண்மை வெளிப்பட்டது. நாவிதர் மஹானின் முன்னால் சற்று தூரத்தில் நிற்க, “உனக்கேது இவ்வளவு பணம்” என்கிற கேள்வியை கேட்டு அவரது உண்மையான பக்தியை வெளிக்கொணர்ந்தார்.

எல்லோரையும் போல் மஹானுக்கு தன்னால் ஏதும் கொண்டு போக முடியவில்லையே என்று வருந்திய அந்த நாவிதர் தெரு ஓரத்தில் தன் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்த குடிசையை விற்றுவிட்டார்.

மனைவியும் குழந்தைகளும் தெருவில் நிற்க இவர் குடிசை விற்ற பணத்தில் மஹானுக்குத் தேவை என நினைத்து வாங்கிய பொருட்களோடு மீதம் இருந்த பணத்தையும் தட்டிலேயே வைத்து மஹான் முன் சமர்ப்பித்துவிட்டார். அப்போதுதான் அங்கிருந்த மற்ற பக்தர்களுக்கு இவரைப் பற்றித் தெரியலாயிற்று.
குடும்பத்தையே தெருவில் நிறுத்திவிட்டு இப்படித் தன் உடைமைகள் யாவையும் மஹானின் மீது கொண்ட பக்திக்காக சமர்ப்பித்து நிற்கும் நாவிதரின் பக்தி மேன்மையை அனைவரும் அறியச் செய்தார் மஹான்.

அவருக்காக ஒரு நிரந்தரமான வீட்டைக் கட்டித் தரும்படி உத்தரவிட்டார் மஹான். அவருக்கு மேலும் பேரின்பம் அருளினார் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

source:::::www.periva.proboards.com

natarajan
Read more: http://periva.proboards.com/thread/5278/barbers-devotion-mahaperiyavaa/#ixzz2gMUA2eU4

” அம்மாவின் அன்புக்கரங்கள் ” ….

அம்மாவின் கைகள்.

கண்ணீரை அடக்க முடியவிலலை தெய்வத்தின் மறு பெயர்தான் தாய்.தியாகத்தின் சிகரம் தாய்

சில வருடங்களுக்கு முன்பு, வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டுக்குச் சென்று இருந்தேன். அவரது வரவேற்பறையில் இரண்டு கைகளின் புகைப்படம். யாரோ ஒரு புனிதரின் கைகளாக இருக்கக்கூடும் என்று நினைத்து, அதைப்பற்றிக் கேட்கவே இல்லை. அவரோடு காரில் பயணம் செய்யும்போது, அதேபோன்ற கைகளின் புகைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். ஆவலில் அது யாருடைய கைகள் என்று கேட்டேன்.

அவர் புகைப்படத்தைக் கையில் எடுத்துப் பார்க்கும்படியாகச் சொன்னார். புகைப்படத்தை அருகில் தொட்டுப் பார்த்தபோது, அது வயதான ஒரு பெண்ணின் கைகள் என்பதைக் கண்டுகொண்டேன். முதுமையின் ரேகை படிந்த நீண்ட விரல்கள். நகங்கள் சுத்தமாக வெட்டப்பட்டு இருக்கின்றன. நரம்புகள் புடைத்துத் தெரிகின்றன. யாராக இருக்கும் என்று மனது ஏதேதோ துறவிகளை, ஞானிகளை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது.

அவர் அந்தக் கைகளைப் பெருமூச்சுடன் பார்த்து ஆதங்கமான குரலில் அது என் அம்மாவின் கைகள் என்று சொன்னார். ஆச்சர்யமாக இருந்தது. “எதற்காக அம்மாவின் கைகளை மட்டும் புகைப்படமாக வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டேன்.

“அந்தக் கைகள்தான் என்னை வளர்த்தன. என் நினைவில் எப்போதுமே அம்மாவின் கைகள்தான் இருக்கின்றன. அம்மாவின் முகத்தைவிட, அந்தக் கைகளைக் காணும்போதுதான் நான் அதிகம் நெகிழ்ந்துபோகிறேன்.

அம்மா இறப்பதற்குச் சில மணி நேரம் முன்பாக இந்தப் புகைப்படத்தை எடுத்தேன். இந்தக் கைகள் இப்போது உலகில் இல்லை. ஆனால், இதே கை களால் வளர்க்கப்பட்டவன் உங்கள் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். என் அம்மா எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஓய்வு எடுத்ததே இல்லை.

அப்பா பொறுப்பற்ற முறையில், குடித்து, குடும்ப வருமானத்தை அழித்து 32 வயதில் செத்துப் போனார்.அம்மாதான் எங்களை வளர்த்தார். நாங்கள் மூன்று பிள்ளைகள். அம்மா படிக்காதவர். ஒரு டாக்டரின் வீட்டில் பணிப் பெண்ணாக வேலைக்குச் சேர்ந்தார். பகல் முழுவதும் அவர்கள் வீட்டினைச் சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, நாய்களைப் பராமரிப்பதுபோன்ற வேலைகள். மாலையில் இன்னும் இரண்டு வீடுகள். அங்கும் அதேபோல் சுத்தம் செய்யும் வேலைதான். எத்தனை ஆயிரம் பாத்திரங்களை அம்மாவின் கைகள் விளக்கிச் சுத்தம் செய்து இருக்கும் என்று நினைத்துப்பார்க்கவே மனது கஷ்டமாக இருக்கிறது.

இரவு வீடு திரும்பிய பிறகு, சமைத்து எங்களைச் சாப்பிடவைத்து உறங்கச்செய்துவிட்டு அதன் பின்னும் அம்மா இருட்டிலேயே கிணற்றில் தண்ணீர் இறைத்துக்கொண்டு இருப்பார்கள். சமையல் அறையில்தான் உறக்கம். அப்போதும் கைகள் அசைந்தபடியேதான் இருக்கும். எங்கள் மூவரையும் பள்ளிக் கூடம் அழைத்துப் போகையில் யார் அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு நடப்பது என்பதில் போட்டியே இருக்கும்.

அந்தக் கைகளைப் பிடித்துக்கொள்வதில் அப்படி ஒரு நெருக்கம், நம்பிக்கை கிடைக்கும். அதுபோலவே உடல் நலம் இல்லாத நாட்களில் அம்மாவின் கைகள் மாறி மாறி நெற்றியைத் தடவியபடியே இருக்கும். அம்மா நிதானமாகச் சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை. தனது சகலச் சிரமங்களையும் அம்மா தன் கைகளின் வழியே முறியடித்து எங்களை வளர்த்தபடியே இருந்தார். மருத்துவரின் வீட்டில் அம்மா ஒருநாள் ஊறுகாய் ஜாடியை உடைத்துவிட்டார் என்று அடி வாங்குவதைப் பார்த்தேன். அம்மாவின் கன்னத்தில் மருத்துவரின் மனைவி மாறி மாறி அறைந்துகொண்டு இருந்தார். அம்மா அழவே இல்லை.

ஆனால், நாங்கள் பார்த்துக்கொண்டு இருப்பதைத் தாங்க முடியாமல், விடுவிடுவென எங்களை இழுத்துக்கொண்டு அந்த வீட்டில் இருந்து வெளியேறினாள். வழியில் பேசவே இல்லை. அம்மாவை எந்தக் கைகளும் ஆறுதல்படுத்தவோ, அணைத்துக்கொள்ளவோ இல்லை. அவள் கடவுள் மீதுகூட அதிக நம்பிக்கைகொண்டு இருந்தாள் என்று தோன்றவில்லை. வீட்டில் சாமி கும்பிடவோ, கோயிலுக்குப் போய் வழிபடவோ, அதிக ஈடுபாடு காட்டியதே இல்லை. வேலை… வேலை… அது மட்டுமே தன் பிள்ளைகளை முன்னேற்றும் என்று அலுப்பின்றி இயங்கிக்கொண்டு இருந்தார்.

சிறு வயதில் அந்தக் கைகளின் முக்கியத்துவத்தை நான் புரிந்துகொள்ளவே இல்லை. ஆசையாகச் சமைத்துத் தந்த உணவைப் பிடிக்கவில்லை என்று தூக்கி வீசி இருக்கிறேன். கஷ்டப்பட்டுப் பள்ளியில் இடம் வாங்கித் தந்தபோது படிக்கப் பிடிக்கவில்லை என்று போகாமல் இருந்திருக்கிறேன். கைச் செலவுக்குத் தந்த காசு போதவில்லை என்று அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டில் திருடி இருக்கிறேன். மற்ற சிறுவர்களைப்போல சைக்கிள் வாங்கித் தர மாட்டேன் என்கிறாள் என்று கடுமையான வசைகளால் திட்டிஇருக்கிறேன். அம்மா எதற்கும் கோபித்துக்கொண்டதே இல்லை.அம்மா கஷ்டப்படுகிறாள் என்று தெரிந்தபோதும் யார் அவளை இப்படிக் கஷ்டப்படச் சொன்னது என்றுதான் அந்த நாளில் தோன்றியது. கல்லூரி வயதில் நண்பர்களோடு சேர்ந்து சுற்றவும், புதுப் புது ஆடைகள் வாங்கவும் குடிக்கவும் எத்தனையோ பொய்கள் சொல்லி இருக்கிறேன். என் அண்ணனும் தங்கையும்கூட இப்படித்தான் செய்திருக்கிறார்கள். ஆனால், அம்மா அதற்காக எவரையும் கோபித்துக்கொள்ளவே இல்லை.

கல்லூரி இறுதி ஆண்டில் மஞ்சள் காமாலை வந்து, நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் அம்மா. அப்போதுதான் அவர் எங்களை எவ்வளவு அக்கறையோடு, ஆதரவோடு காப்பாற்றி வந்திருக்கிறார் என்று புரிந்தது. அதன் பிறகு, என்னைத் திருத்திக்கொண்டு தீவிரமாகப் படிக்கத் துவங்கி, ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்து கடுமையாக உழைத்துப் பதவி உயர்வுபெற்றேன். அம்மாவை என்னுடனே வைத்துக்கொண்டேன். நான் சம்பாதிக்கத் துவங்கியபோதும், அம்மா ஒருபோதும் எதையும் என்னிடம் கேட்டதே இல்லை. நானாக அவருக்கு எதையாவது வாங்கித் தர வேண்டும் என்று நினைத்து, தங்க வளையல் வாங்கித் தருகிறேன் என்று அழைத்துப் போனேன்.

முதிய வயதில் அம்மா மிகுந்த கூச்சத்துடன், ‘எனக்கு ஒரே ஒரு வாட்ச் வேண்டும். சின்ன வயதில் வாட்ச் கட்டிக்கொண்டு வேலைக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அது நடக்கவே இல்லை. அதன் பிறகு, எனக்குள் இருந்த கடிகாரம் ஓடு… ஓடு… என்று என்னை விரட்டத் துவங்கியது. அலாரம் இல்லாமலே எழுந்துகொள்ளப் பழகிவிட்டேன். இப்போது வயதாகிவிட்டது. சில நாட்கள் என்னை அறியாமல் ஆறு மணி வரை உறங்கிவிடுகிறேன். இரவு உணவை ஏழு மணிக்குச் சாப்பிட்டுவிடுகிறேன். ஒரு வாட்ச் வாங்கித் தருவாயா?’ என்று கேட்டார்.

அம்மா விரும்பியபடி ஒரு வாட்ச் வாங்கித் தந்தேன். ஒரு பள்ளிச் சிறுமியைப்போல அதை ஆசையாக அம்மா எல்லோரிடமும் காட்டினாள். அதை அணிந்துகொள்வதில் அம்மா காட்டிய ஆர்வம் என்னை நெகிழ்வூட்டியது. அதன் பிறகு அம்மா, நான் திருமணம் செய்து டெல்லி, பெங்களூரு என்று வேலையாக அலைந்தபோது கூடவே இருந்தார். டெல்லியில் எதிர்பாராத நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நான் கூடவே இருந்தேன்.

‘நாங்கள் ஏமாற்றியபோது எல்லாம் ஏன் அம்மா எங்களை ஒரு வார்த்தைகூடத் திட்டவே இல்லை?’ என்று கேட்டேன். அம்மா, ‘அதற்காக நான் எவ்வளவு அழுதிருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியாது. ஆனால், அன்று நான் கோபப்பட்டு இருந்தால், என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போயிருப்பார்கள்’ என்று சொல்லி, தன் கையை என்னுடன் சேர்த்துவைத்துக்கொண்டார்.

அப்போதுதான் அந்த முதிய கைகளைப் பார்த் தேன். அது எவ்வளவு உழைத்திருக்கிறது. எவ்வளவு தூய்மைப்படுத்தி இருக்கிறது. எவ்வளவு அன்பைப் பகிர்ந்து தந்திருக்கிறது. அதை ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. பிறகு ஒருநாள், எனது கேமராவை எடுத்து வந்து, புகைப்படம் எடுத்துக்கொண்டேன். இன்று அம்மா என்னோடு இல்லை. ஆனால், இந்தக் கைகள் என்னை வழி நடத்துகின்றன. ஒவ்வொரு நாளும் நான் எப்படி வளர்க்கப்பட்டேன் என்பதை இந்தக் கைகள் நினைவுபடுத்துகின்றன. இதை வணங்குவதைத் தவிர, வேறு நான் என்ன செய்துவிட முடியும்?” என்றார்.

ராணுவ அதிகாரியினுடைய முகம் தெரியாத அந்தத் தாயின் கைகளை நானும் தொட்டு வணங்கினேன். அந்தக் கைகள் யாரோ ஒருவரின் தாயின் கைகள் மட்டும் இல்லை. உலகெங்கும் உழைத்து ஓய்ந்துபோன தாயின் கைகள் யாவும் ஒன்றுபோலத்தான் இருக்கின்றன. அவை எதையும் யாசிக்கவில்லை. அணைத்துக்கொள்ளவும், ஆதரவு தரவும், அன்பு காட்டவுமே நீளுகின்றன. அதை நாம் புறந்தள்ளிப் போயிருக்கிறோம். அலட்சியமாகத் தவிர்த்து இருக்கிறோம்.

இலக்கு இல்லாத எனது பயணத்தில் யார் யார் வீடுகளிலோ தங்கியிருக்கிறேன். சாப்பிட்டு இருக்கி றேன். எனது உடைகளைத் துவைத்து வாங்கி அணிந்து இருக்கிறேன். அந்தக் கைகளுக்கு நான் என்ன நன்றி செய்து இருக்கிறேன். ஒரு நிமிடம் என் மனம் அத்தனை கைகளையும் வணங்கி, தீராத நன்றி சொன்னது.

‘கை விரல்களுக்கு இடையில் இடைவெளி இருப்பது இன்னொரு கைகள் நம்மோடு சேர்ந்துகொள்ளத்தான்’ என்று எங்கோ படித்தேன். அதை நிறைய நேரங்களில் நாம் உணர்வதே இல்லை. நம் மீது அன்பு காட்டும் கைகளுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்?

source::::: input from a friend of mine

natarajan